ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
பருத்தித்துறையில் இருந்து தெய்வேந்திரமுனை நோக்கிய பயணம் ஆரம்பம்! இலங்கையின் 75ஆவது ஆண்டு சுதந்திர தினத்தினை முன்னிட்டு இலங்கை துவிச்சக்கர வண்டி சம்மேளத்தினால் , துவிச்சக்கர வண்டி பயணம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை முனை பகுதியில் இருந்து தெய்வேந்திர முனை பகுதி வரையில் பயணிக்கவுள்ள குறித்த துவிச்சக்கர வண்டி பயணம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை , பருத்தித்துறை சாக்கோட்டை பகுதியில் இருந்து ஆரம்பமானது. எதிர்வரும் நான்கு நாட்களுக்கு குறித்த துவிச்சக்கர வண்டி பயணம் இடம்பெற்று தெய்வேந்திர முனை பகுதியை சென்றடையவுள்ளது. https://athavannews.com/2023/1322510
-
- 0 replies
- 340 views
-
-
வடக்கில் புதிய முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பில் இந்தியாவின் பிரபல வி.ஜி.பி குழுமம் ஆராய்வு By T. SARANYA 31 JAN, 2023 | 11:26 AM வடமாகாணத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பாக இந்தியாவின் பிரபல வி.ஜி.பி குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் முனைவர் கலைமாமணி செவாலியர் விஜி சந்தோஷம் தலைமையிலான உயர்மட்ட குழு யாழ். மாவட்டத்திற்கு விஜயம் செய்து ஆராய்ந்துள்ளது. யாழ். நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சந்திப்பில் வடமாகாணத்தில் எவ்வாறான முதலீடுகளை மேற்கொள்ளலாம்? அதற்கான சாதகங்கள் மற்றும் பாதகங்கள் குறித்து பிரதானமாக ஆராயப்பட்டுள்ளது. ஆளுநரின் செயலாளர் வாகீசன் இது…
-
- 0 replies
- 295 views
- 1 follower
-
-
26,000 பட்டதாரிகளை ஆசிரியர்களாக உள்வாங்குவதற்கு இணையம் மூலம் விண்ணப்பங்கள் கோரல் : விபரம் உள்ளே! By T. SARANYA 31 JAN, 2023 | 11:23 AM அரச சேவையில் உள்ள 26,000 பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சு கோரியுள்ளது. 2018, 2019, 2020 ஆகிய காலப் பகுதிகளில் அரச சேவையில் இணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட 40 வயதுக்கு உட்பட்ட பட்டதாரிகளிடமிருந்து இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கிடைக்கப்பெறும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையை கவனத்தில் கொண்டு எதிர்வரும் மார்ச் மாதம் நாடளாவிய ரீதியில் இந்த ஆட்சேர்ப்பு பரீட்சை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. …
-
- 0 replies
- 273 views
- 1 follower
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : மைத்திரி உள்ளிட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுங்கள் - சட்டமாதிபரை வலியுறுத்தும் எதிர்க்கட்சி By VISHNU 30 JAN, 2023 | 04:38 PM (எம்.மனோசித்ரா) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தகவல்களை அறிந்திருந்தும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு எதிராக விரைவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களாக காவிந்த ஜயவர்தன, ஹெக்டர் அப்புஹாமி மற்றும் சட்டத்தரணிகள் இந்த கோரிக்கையை திங்கட்கிழமை (30) சட்டமா அத…
-
- 0 replies
- 152 views
- 1 follower
-
-
குரைக்கும் நாய் கடிக்காது என எண்ணிக் கொண்டு செயற்படுகிறோம் - இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் By T. SARANYA 31 JAN, 2023 | 09:09 AM (இராஜதுரை ஹஷான்) அரசியல் அழுத்தங்களினால் சுயாதீனமாக செயற்பட முடியாத நிலை காணப்படுகிறது. மின்சாரத்துறை அமைச்சரின் தன்னிச்சையான செயற்பாடுகளினால் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கிடையில் முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன. என்னை பதவி நீக்குவதால் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. அறிவார்ந்த ஒருவரை மின்சாரத்துறை அமைச்சராக நியமித்தால் இணக்கமாக செயற்பட முடியும். குரைக்கும் நாய் கடிக்காது என எண்ணிக் கொண்டு செயற்படுகிறோம் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்…
-
- 0 replies
- 333 views
- 1 follower
-
-
இருபது வருடமாக கூட இருந்தவர்களை நல்வழிப்படுத்த எடுத்த முயற்சியில் நாம் தோல்வி அடைந்து விட்டோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சாவகச்சேரியில் நேற்று (ஜன 29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், 2001 ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது அதற்கு போட்டியாக அரசுக்கு ஆதரவாக இன்னொரு கட்சி உருவாக்கப்பட்டது. அது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பதிவும் செய்யப்பட்டது. அரசு கூலியாக இருந்தவர்கள் தான் அந்த கட்சியை பதிவு செய்தவர்கள். தங்களிடத்தில் எது இல்லையோ அதை தங்களுடைய பெயரிலேயே சேர்த்துக் கொண்டார்கள். ஜனநாயகமாக அவர்கள் செய்யப்படவில்ல…
-
- 5 replies
- 927 views
-
-
நாட்டினுடைய சுதந்திர தின நாள் தமிழர்களின் வாழ்வில் கரிநாள் – சுமந்திரன் ஜனநாயகம் என்ற போர்வையிலே பேரினவாத ஆட்சி காரணமாகவே சுதந்திரம் கிடைத்தும் 75 ஆண்டுகளாக தமிழர்களுக்கு சுந்தந்திரம் கிடைக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சிங்கள மக்களுக்கு அரசியல் சுதந்திரம் இருந்தாலும் இன்றைய சூழ்நிலையை பார்க்கின்ற பொழுது சிங்கள மக்களுக்கும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்பது தெட்டத் தெளிவாககின்றது என்றும் குறிப்பிட்டார். சுதந்திரதினம் என்ற போர்வையில் வெவ்வேறு நிகழ்ச்சி நிரல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளை நாடும் கடனாளியாக இருக்கின்றது நிலையில் 75வது சுதந்திர தினத்தை ஜனாதிபதி கொண்டாட வ…
-
- 13 replies
- 1.2k views
- 1 follower
-
-
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் வந்து தன்னுடைய நிகழ்ச்சி நிரலை முழுமையாக நிறைவேற்றிவிட்டார் என இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும், சட்டத்தரணியுமான கே.வி தவராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு கூறியுள்ளார்.மேலும் தெரிவிக்கையில், சுமந்திரன் வீட்டுக்குள் வந்து தன்னுடைய நிகழ்ச்சி நிரலை முழுமையாக நிறைவேற்றிவிட்டார்.தற்பொழுது ரெலோ, புளொட் ஆகிய இரண்டு கட்சிகளும் வேறு மூன்று கட்சிகளுடன் இணைந்து தனியான ஒரு கூட்டணியினை அமைத்துள்ளனர். தமிழரசு கட்சி தனியாக போட்டி இலங்கை தமிழரசு கட்சி தனியாக தேர்தலில் போட்டியிட உள்ளது. இந்த கூட்டு எல்லாம் ஒரு தேர்தலை மையப்…
-
- 0 replies
- 500 views
-
-
மின்சாரசபை 6 தரப்பினருக்கு 281 பில்லியன் ரூபாவை வழங்க வேண்டியுள்ளது - காஞ்சன By VISHNU 30 JAN, 2023 | 05:11 PM (எம்.மனோசித்ரா) இலங்கை மின்சாரசபை இதுவரையில் 6 தரப்பினருக்கு 281 பில்லியன் ரூபாவினை செலுத்த வேண்டியுள்ளது. இதில் மிக அதிக தொகையான 112 பில்லியன் ரூபாவினை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு வழங்க வேண்டியுள்ளதாக மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்துள்ள பதிவிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த டுவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: கடந்த ஆண்டு ஆரம்பத்தில் துண்டிப்பின்றி மின்சாரத்தை வ…
-
- 0 replies
- 288 views
- 1 follower
-
-
(எம்.நியூட்டன்) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண வருகையை எதிர்த்து நடத்தப்பட்ட அமைதி வழி போராட்டக்காரர்கள் மீது இலங்கை அரச படைகளின் தாக்குதல் மற்று அதன் பின்னான கைது நடவடிக்கையை அடுத்து, தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் அலுவலகத்தில் முறைப்படு செய்யப்பட்டுள்ளது. வேலன் சுசாமிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா உள்ளிட்டோர் இன்று (30) திங்கட்கிழமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வேலன் சுவாமிகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு | Vir…
-
- 1 reply
- 407 views
-
-
(இராஜதுரை ஹஷான்) மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாத அளவிற்கு சட்ட சிக்கலை ஏற்படுத்திய நல்லாட்சி அரசாங்கத்தின் பங்காளிகள் தற்போது வெட்கமில்லாமல் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் கருத்துரைக்கிறார்கள். தேர்தல் வெற்றிக்கு மக்கள் கூட்டத்தை நடத்த வேண்டிய தேவை கிடையாது. மக்கள் மத்தியில் ராஜபக்ஷர்களுக்கு தனி இடம் உண்டு.தேர்தலில் நிச்சயம் வெற்றிப்பெறுவோம் என ஸ்ரீ லங்கா பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போட ஸ்ரீ லங்கா …
-
- 0 replies
- 204 views
-
-
நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் ; வெகு விரைவில் 'திசைக்காட்டி'யின் ஆட்சி வரும் - அநுர குமார By T. SARANYA 29 JAN, 2023 | 09:35 AM (எம்.எம்.சில்வெஸ்டர்) இலங்கையில் வெகுவிரைவில் திசைக்காட்டி ஆட்சி அமைக்கவுள்ளதால் தொழில் வல்லுநர்கள் உள்ளிட் அனைத்து தரப்பினரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்புவோம். உணர்ச்சியற்ற தலைவர்கள் எம்மை ஆளத் தேவையில்லை என நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றின்போது தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில்…
-
- 3 replies
- 748 views
- 1 follower
-
-
”சோற்றுக்காக போராடும் இனம் நாமல்ல என்பதை தமிழ் மக்கள் நிரூபிக்க வேண்டும்” - இரா.சாணக்கியன் வெறுமனே சோற்றுக்காகப் போராடும் இனம் நாமல்ல என்பதை தமிழரசுக் கட்சியின் வெற்றியின் மூலம் உறுதிப்படுத்த வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத் தேர்தல் தொகுதியின் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “வெறுமனே சோற்றுக்காகப் போராடும் இனம் நாமல்ல என்பதை தமிழரசுக் கட்சியின் வெற்றியின் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.…
-
- 3 replies
- 467 views
-
-
கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடலில் மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலை மீட்கும் பணிகள் ஆரம்பம்! By T. SARANYA 30 JAN, 2023 | 01:37 PM கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடலில் தீப்பிடித்து எரிந்த எம்வி எக்ஸ்பிரஸ் பேர்ல் என்ற கப்பலை துண்டாக்கி மீட்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் 2021 ஆம் ஆண்டு மே மாதம் கொழும்பு துறைமுகத்துக்கு அருகிலுள்ள கடலில் சுமார் இரண்டு வாரங்கள் எரிந்து மூழ்கியது. இதனையடுத்து கப்பலின் பாகங்களை மீட்கும் பணிகள் ஆரம்பிபக்கப்பட்டதாக கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி தர்ஷனி லஹதபுர தெரிவித்…
-
- 0 replies
- 254 views
- 1 follower
-
-
யாழ். போதனா வைத்தியசாலையில் 17 வயது மகளுக்கு தாயின் சிறுநீரகம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது By NANTHINI 23 JAN, 2023 | 02:30 PM யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த 18ஆம் திகதி புதன்கிழமை தாயொருவரின் சிறுநீரகம், அவரது 17 வயது மகளுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது. சத்திர சிகிச்சை கற்கைகளுக்கான பேராசிரியரும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வல்லுநருமான பேராசிரியர் தம்பிப்பிள்ளை தவச்சேந்தன் மற்றும் மருத்துவ நிபுணர்கள், மருத்துவத்துறையினரின் பங்களிப்பில் இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறுநீரக தேவைப்பாடுடைய சிறுமி ஒருவருக்கு அவரது தாய் உடனடியாக சிறுநீரக தானம் செய…
-
- 6 replies
- 827 views
- 1 follower
-
-
341 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 80 ஆயிரம் பேர் போட்டி: தேர்தலை நடத்த ஆணைக்குழு தயார் - நிமல் புஞ்சிஹேவா By NANTHINI 29 JAN, 2023 | 10:39 PM (இராஜதுரை ஹஷான்) உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் சகல விடயங்களும் அடங்கிய அதி விசேட வர்த்தமானி இவ்வார காலத்துக்குள் வெளியிடப்படும். இம்முறை 58 அரசியல் கட்சிகள், 133 சுயாதீன குழுக்கள் ஊடாக நாடளாவிய ரீதியில் 80 ஆயிரம் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடவுள்ளார்கள் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார். தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளோம். தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை முழும…
-
- 0 replies
- 304 views
- 1 follower
-
-
கடவுச்சீட்டுகளை வழங்க மேலும் 50 பிராந்திய மையங்கள் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்காக 50 பிராந்திய மையங்களை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார் தற்போது வவுனியா, குருநாகல், மாத்தறை மற்றும் கண்டி ஆகிய 4 பிராந்திய அலுவலகங்களில் கொழும்பில் உள்ள தலைமை அலுவலகம் தவிர கடவுச்சீட்டு வழங்கும் பணியை மேற்கொள்வதாகவும், கடவுச்சீட்டு வழங்கும் பணியை வினைத்திறனாக்க பிரதேச செயலகங்களில் மேலும் 50 புதிய நிலையங்கள் ஸ்தாபிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/236381
-
- 0 replies
- 268 views
- 1 follower
-
-
நீதியமைச்சருக்கு த.தே.கூ கண்டனம் நீதி அமைச்சர் கதை அளப்பதை நிறுத்தி அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து வந்த பிரதிநிதி ஒருவருக்கு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ நன்றாக கதை அளந்து இருக்கிறார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில் மேற்குறிப்பிட்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அதில் மேலும் குறிப்பிடப்பட்டு இருந்ததாவது, நேற்றைய அரச ஊடகப் பத்திரிகையில் இதை கண்ணுற்றது வேடிக்கையாக இருந்தது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தடையாக ஒரு சில தமிழ் அரசியல்வாதிகள் இருப்பதாகவும் அவர்களுடைய ஒத்துழைப்பு இல்லாமையால் அரசியல் க…
-
- 0 replies
- 522 views
-
-
PreviousNext மலையக மக்களின் 200 வருட வாழ்வியலை பிரதிபலித்து ஹட்டனில் பாரிய ஊர்வலம் இந்திய வம்சாவளி மக்களான மலையக தமிழ் மக்கள் இந்தியாவிலிருந்து வருகை தந்து இவ்வருடத்துடன் 200 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இதனை நினைவு கூர்ந்து ஹட்டன் மல்லியப்பூ சந்தியிலிருந்து மக்களின் வாழ்வியலையும் கலை கலாசார அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் 1,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பாரிய ஊர்வலம் ஒன்று இன்று (29) நடைபெற்றது. குறித்த ஊர்வலம் ஹட்டன் மல்லியப்பூ சந்தியில் ஆரம்பித்து ஹட்டன் நகர் ஊடாக டி.கே.டப்ளியு, கலாசார மண்டபத்தினை சென்றடைந்தது. குறித்த ஊர்வலத்தில் மலையகத்தை அபிவிருத்தி செய்ய தயங்குவது ஏன்? மலையக மக்களை சிதைக்காதே? உறுதியளித்த பல்பலைக்கழ…
-
- 0 replies
- 357 views
-
-
75 ஆவது சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாட வேண்டும் : ஜனாதிபதி • தேவையான செலவினங்களை மதிப்பிடும் போது நாட்டின் தற்போதைய நிதி நிலைமை குறித்து கவனம் செலுத்த வேண்டும் குறைந்த செலவில் பிரமாண்டமாகவும் பெருமையாகவும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது தொடர்பான கலந்துரையாடல்ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (26) நடைபெற்றது. அதன்படி, 75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பெப்ரவரி 02 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை பல சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. அதற்கமைய சிறப்பு தலதா பூஜை மற்றும் மஹாபிரித் சொற்பொழிவு, சர்வமத நிகழ்வுகள், சுதந்திர சதுக்கத்தில் கலாசார நிகழ்ச்சி, காலி முகத்திடலில் நடைபெறும் பாரம்பரிய சுதந்திர தின பிரதான நிகழ…
-
- 6 replies
- 441 views
- 1 follower
-
-
அறவிடப்பட எதிர்பார்த்துள்ள வரி வருமானத்தை விட ஊழல் மோசடி மூலம் இழக்கப்பட்ட நிதி அதிகமாகும் - எம். கணேசமூர்த்தி By VISHNU 29 JAN, 2023 | 02:28 PM (எம்.வை.எம்.சியாம்) வரியானது ஒருவருடைய வாழ்க்கை தரத்தை பாதிக்காத வகையிலேயே அற விடப்பட வேண்டும் என்பதே அடிப்படையாகும். வரி நியாயமானதாகவும், சமூக மட்டத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில் இருக்க வேண்டும். எனினும் அறவிட படவிருக்கும் வரியானது வரி ஒன்றுக்கு இருக்க வேண்டிய அனைத்து பண்புகளையும் மீறுவதாக காணப்படுகிறது அறிவிடப்பட எதிர்பார்த்துள்ள வரி வருமானத்தை விட ஊழல் மோசடி மூலம் இழக்கப்பட்ட நிதி அதிகமாகும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி …
-
- 0 replies
- 647 views
- 1 follower
-
-
யாழ். மக்களுக்கு பொலிஸார் விடுக்கும் அறிவித்தல்! யாழ்ப்பாணத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மற்றும் வன்முறையாளர்கள் தொடர்பில் தகவல் வழங்கினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரட்ண அறிவித்துள்ளார். மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கியவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அடித்துத் துன்புறுத்திய கும்பல் தொடர்பில் வெளியாகிய காணொளிகள் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டமையை சுட்டிக்காட்டிய அவர் மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வட மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரட்ண மேலும் தெரிவித்ததாவது; மீற்றர் வட்ட…
-
- 2 replies
- 289 views
- 1 follower
-
-
நாடளாவிய ரீதியில் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்காக பிராந்திய அலுவலகங்கள் திறப்பு! கடவுச்சீட்டுகளை வழங்குவதற்காக நாடளாவிய ரீதியில் 50 பிராந்திய அலுவலகங்களை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவிக்கையில் , தற்போது வவுனியா, குருநாகல், மாத்தறை மற்றும் கண்டி ஆகிய நான்கு பிராந்திய அலுவலகங்கள் மற்றும் கொழும்பில் உள்ள தலைமை அலுவலகம் உள்ளது. இது தவிர ஏனைய இடங்களில் கடவுச்சீட்டு வழங்கும் பணியை மேற்கொள்வதற்காக 50 புதிய அலுவலகங்கள் பிரதேச செயலகங்களில் ஸ்தாபிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அந்த வகையில், எந்தவொரு விண்ணப்பதாரரும் குறித்த பிராந்திய அலுவலகத்த…
-
- 1 reply
- 229 views
-
-
இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகள் குறித்து ஜெனிவாவில் புதனன்று மீளாய்வு - வெளிவிவகார அமைச்சர் தலைமையில் தூதுக்குழு பங்கேற்பு By DIGITAL DESK 5 28 JAN, 2023 | 04:39 PM (ஆர்.ராம்) இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகள் குறித்து, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வரும் எதிர்வரும் புதன்கிழமை மீளாய்வு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமையகத்தில், எதிர்வரும் புதன்கிழமை காலை 9.00 மணி தொடக்கம், 12.30 மணி வரை இலங்கை குறித்த மீளாய்வு இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. பேரவையின் உலகளாவிய பருவகால மீளாய்வின் போதே, இலங்கை மனித உரிமைகள் நிலைமைகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்று ஐ.நா.…
-
- 1 reply
- 139 views
- 1 follower
-
-
8 ஆம் திகதி அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை வெளியிடவுள்ளார் ஜனாதிபதி !! ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்க உள்ளார். அரசமைப்புச் சட்டத்தின் படி அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை முன்வைப்பார். ஜனவரி 27ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோப் குழு மற்றும் கோபா குழு உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட குழுக்களின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன. அத்தகைய…
-
- 0 replies
- 248 views
-