ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சி தாவும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உள்வாங்கினால் அரசிற்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்ளப்போவதாக ஜே.வி.பி. அறிவித்துள்ளது. கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஜே.வி.பி. உயர்மட்டத் தலைவர்களின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பேசிய ஜே.வி.பியின் தலைவர் சோமவன்சச அமரசிங்க கூறியதாவது: 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற அரச தலைவர் தேர்தலில் மகிந்த வெற்றியீட்டுவதற்கு எமது ஆதரவையும் உதவிகளையும் வழங்கியிருந்தோம். இது மகிந்த சிந்தனையில் உள்ள கொள்கைகள் மற்றும் தத்துவங்களின் அடிப்படையில் வழங்கப்பட்ட ஆதரவாகும். ஆனால் தற்போது அரச தலைவர் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய…
-
- 2 replies
- 1.1k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தினால் வழங்கப்படும் அமைச்சுப் பதவியை யார் ஏற்றுக்கொள்வது என்ற பிரச்சினையால் ஜாதிக கெல உறுமயவிற்குள் பாரிய விரிசல் வீழ்ந்துள்ளது. அரசிற்கு ஆதரவு வழங்குவதற்கு பதிலாக அரசினால் வழங்கப்படும் அமைச்சுப் பதவி தொடர்பாக கெல உறுமயவின் சோபித தேரர், ரத்தன தேரர், சம்பிக்க ரணவக்க, உதய கமன்பில ஆகியோரைக் கொண்ட குழு, அரச தலைவரின் ஆலோசகரான பசில் ராஜபச்சவுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தனர். இந்த சந்திப்பில் கலாச்சார அமைச்சுப் பொறுப்பை வழங்க அரசு சம்மதித்திருந்தது. அதனை ரத்தன தேரர் ஏற்றுக்கொண்ட வேளை ஏனைய மூன்று உறுப்பினர்களும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். பின்னர் சோபித தேரர், ரணவக்க, கமன்பில ஆகியோர் இயற்கை வளத்துறை அமைச்சுப் பொறுப்பை தரும்படி அரசை கேட்டி…
-
- 0 replies
- 850 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை பெரிய மகாமேரு என நாம் நினைத்தோம் ஆனால் அவர்கள் ஒரு புஸ்வாணம் என்பதை நாம் இப்போது உணர்கின்றோம். ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றிற்கிடையே ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இவ்வாண்டிறுதிக்குள் நாட்டின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்படல் வேண்டும் என்பதே எனது பேரவாவாகும் என கண்டி மல்வத்த பௌத்த பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே சிறீ சுமங்கள தேரர் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்று சனிக்கிழமை தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று காலை கண்டி சிறீ தலதா மாளிகைக்கு அல்லி மலர்களை கொண்டு சென்று வழிபட்டார். ரணில் விக்கிரமசிங்கவுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான ருக்…
-
- 20 replies
- 3.4k views
-
-
[saturday January 20 2007 07:02:20 PM GMT] [virakesari.lk] வாகரையில் இருந்து மாங்கேணியூடாக மட்டக்களப்பு வாளைச்சேனை பகுதிக்கு செல்லும் மக்கள் மீது பெரும் அவதிநிலையடைந்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன நேற்று வாகரை பகுதியை ஆக்கிரமித்த சிறிலங்கா படையினர் தொடர்ந்து அதிரவெளி கோமத்தமடு போன்ற இடங்களை கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கும் நிலையில் அகதிகள் தொடர்ந்தும் இடம் பெயர்ந்து வருகின்றனர் . இவர்களில் 10,000ற்க்கும் அதிகமானோர் மாங்கேனி ஊடாக மட்டகளப்பு இடம் பெயரும் வேளையில் மிகுந்த சோதனை நடவெடிக்கைக்கு முகம் கொடுக்க வேண்டி உள்ளதாக அந்த அகதிகள் தெரிவித்தாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன . மக்களின் சிலர் இராணுவ முகாம் அருகி…
-
- 0 replies
- 853 views
-
-
[ஞாயிற்றுக்கிழமை, 21 சனவரி 2007, 03:22 ஈழம்] [அ.அருணாசலம்] தொண்டர் அமைப்புக்கள் பணியாற்றுவதற்கு மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் சிறிலங்கா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த வாரம் 'கெயார்' சர்வதேச நிறுவனம் தொண்டர் அமைப்புக்களின் பணியாளர்களின் படுகொலைகளின் அடிப்படையில் மேற்கொண்ட 2006 ஆம் ஆண்டிற்கான தரப்படுத்தலில் உலக நாடுகளின் வரிசையில் ஆப்கானிஸ்தான் முதலாவது இடத்தையும், சிறிலங்கா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. 'கெயார்' சர்வதேச நிறுவனம் மேலும் தகவல் தெரிவிக்கையில், தொண்டர் நிறுவனப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறைகள் கடந்த பத்து வருடங்களில் 2006 இல் அதிகளவு அதிகரித்துள்ளது. கடந்த வருடத்தில் 83 பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது 2003 ஆம் ஆண்டிற…
-
- 0 replies
- 740 views
-
-
கடந்த வருடம் ஒக்டோபர் 29ந்திகதி முதல் ஆக குறைந்த 45 படையினரும் 500 புலிகளும் வாகரையை இராணுவம் கைப்பற்றி அடுத்த அடுத்த இராணுவ நடவெடிக்கையில் கொல்லப்பட்டிள்ளனர் என இராணுவ தரப்பில் பேசவல்ல அதிகாரி சமரசிங்க ஏபிக்கு செயதுஇ அளித்துள்ளார். தொடர்ந்து அந்த பகுதிகளில் சண்டை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த மோதல் நிலமைகள் காரணமாக சுமார் 5 இலட்சம் அகதிகள் இலங்கை முழுவதிலும் இருந்த இடம்பெர்ந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது thanks:www.tamilwin.com
-
- 2 replies
- 1.3k views
-
-
ஆளும் தரப்புக்கு தாவும் ஐ.தே.க.வினரை உள்ளடக்கி இந்த வாரம் புதிய அமைச்சரவை [14 - January - 2007] [Font Size - A - A - A] {தினக்குரல்} * வெளிவிவகார அமைச்சு பதவிக்கு கடும் போட்டி * ஜனாதிபதியிடம் ரணில் கேள்வி எழுப்புவார் * முஸ்லிம் காங்கிரஸும் அரசில் இணைய சாதகமான சமிக்ஞை புதிய அமைச்சரவை மாற்றம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறுமென எதிர்பார்க்கப்படும் நிலையில், அமைச்சுப் பொறுப்புகளை ஒதுக்கீடு செய்வதில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு மும்முரமாக ஈடுபட்டிருப்பதாக அறியவருகிறது. ஜனாதிபதியுடன் அவரின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் ஜனாதிபதிக்கு நெருக்கமான பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். ஐ.தே.க.வின் 18 பா…
-
- 0 replies
- 654 views
-
-
மாங்கேணி முகாம் மீது எறிகணை வீச்சு - 4 படையினர் பலி - பாண்டியன் Saturday, 20 January 2007 21:02 (சங்கதி) மட்டக்களப்பு மாவட்டம், மாங்கேணிப் படை முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று பகல் நடத்திய ஆட்டிலறி எறிகணைத் தாக்குதலில் நான்கு படையினர் கொல்லப்பட்டுள்ளதாக பொலநறுவையில் உள்ள படைத்துறை வட்டாரங்களை மேற்கொள் காட்டி தமிழ்நெட் செய்தி வெளியிட்டுள்ளது. இன்று பிற்பகல் நடைபெற்ற இத்தாக்குதலில் மேலும் மூன்று படையினர் காயமடைந்துள்ளனர். நேற்று திருமலையில் மகிந்தபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட மோட்டார் தாக்குதலில் நான்கு படையினர் கொல்லப்பட்ட நிலையில் இன்று இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த சனிக்கிழமையும் இதே முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் …
-
- 0 replies
- 732 views
-
-
முஸ்லீம் காங்கிரசின் கட்சித்தாவலுக்கும் அண்மையில் புத்தளத்தில் கைதான இரு ஈரானியருக்கும் இடையில் தொடர்புகள் ஏதும் இருக்குமோ என பாதுகாப்புத்தரப்பு ஆராய வெளிக்கிட்டுள்ளதாம்.நேற்று புத்தளத்தில் நடந்த தேடுதல் இதன் பின்ணணியில் தானாம்.இவர்களின் விசாரணையில் தீவிரவாத வலைப்பின்னல்களில் சம்பந்தப்பட்டவர்களா?பாகிஸ்தான் அரசுடன் தொடர்புகளைவைத்துள்ளார்களா?ஏன் திருடினார்கள்? என்று குழப்பத்துடன் பொலிஸ் விசாரணை ஒரு புறம்?தலைமைபீடம் மறுத்தாலும் எப்படியாவது அரசில் இணையவேண்டும் என்ரு கங்கணம் கட்டிய புத்தளம் பகுதி முஸ்லீம்காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினருக்கும் ஏதாவது தொடர்பிருக்குமோ?(news from puththalam by phone)
-
- 0 replies
- 884 views
-
-
இலங்கை இராணுவத் தளபதி யாழ் விஜயம் இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் ஈச்சலம்பத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற விடுதலைப்புலிகளின் எறிகணைத் தாக்குதலில் 4 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் இதில் காயமடைந்துள்ளனர். அதேவேளை வாகரையை நேற்று கைப்பற்றிய இலங்கை இராணுவத்தினர், இன்று தாம் கதிரவெளி வரை முன்னேறியுள்ளதாக அறிவித்துள்ளனர். அதேவேளை இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா அவர்கள் இன்று யாழ் குடாநாட்டுக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன. அங்குள்ள பாதுகாப்பு நிலைமைகள் குறித்து அவர் இராணுவத தளபதிகளுடன் உரையாடியதாகக் கூறப்படுகிறது. பிபிசி. தமிழ். ---------------------------------------…
-
- 4 replies
- 2.2k views
-
-
இருவாரத்தில் 57 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர், 27பேர் காணாமற் போயுள்ளனர். 2007ஆம் ஆண்டின் இருவாரங்களுக்குள் தமிழர் தாயகப் பகுதிகளில் சிறிலங்காப் படையினர் மற்றும் துணை இராணுவக் குழுக்களின் தாக்குதல்களில் 57 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 27பேர் கடத்தப்பட்டு காணாமற் போயுள்ளனர். படுகொலை செய்யப்பட்டவர்களில் 14பேர் -மட்டக்களப்பு 17பேர் -மன்னார் 5பேர் -திருகோணமலை 8பேர் -வவுனியா 13பேர் யாழ்ப்பாணத்தையும் சேர்ந்தவர்கள். கடத்தப்பட்டவர்களில் 22பேர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள், (1)பரஞ்சோதி தனஞ்சேயன், (2) முருகானந்தன் பரமநாதன், ஆகிய இருவரும் பாடசாலைய மாணவர்கள். படையினரும் துணை இராணுவக் குழுவினரும் தமிழர் தாயகப் பகுதிகளில் வெளிப்படையாகவும் மறைவாகவும்…
-
- 1 reply
- 953 views
-
-
கிடைத்த ஒரு தகவலின்படி மட்டக்களப்பு கதிரவெளியையும் சிங்கள இராணுவம் ஆக்கிரமித்து விட்டதாம்! ஊர்ஜிதப்படுத்த முடியவில்லை! நாம் யுத்த நிறுத்ததுக்கு முன் 70% நிலப்பரப்பை கட்டுப்பட்டுக்குள் வைத்திருந்தோம். ஆனால் இன்று யுத்த நிறுத்த காலத்தில் .....?????????? ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனைக் கடிக்கத்தான் விளிப்பதைப் போல, நாமும் கடைசியில் வன்னியை சிங்களவன் அடிக்கத்தான் நாம் போராட முற்படப் போகிறோம் போலிருக்குது!!! வன்னியும் ........???????????????????
-
- 25 replies
- 7k views
-
-
சனி 20-01-2007 14:31 மணி தமிழீழம் [மோகன்] பாதிரியார் கொலையையிட்டு சி.எஸ்.டபிள்யு கேள்வி யாழ் குடாநாட்டில் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் சிறீலங்கா இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக இங்கிலாந்தை தளமாக கொண்டுள்ள சி.எஸ.டபிள்யு எனும் அமைப்பு தெரிவித்துள்ளது கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் சப்பல் ஒழுங்கையில் வைத்து இவர் மீது சிறீலங்கா படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எந்த விதமான அரசியல் கட்சிகளுடனும் தொடர்புகளை கொண்டிராதவரான கிறிஸ்தவ பாதிரியாரான நல்லதம்பி ஞானசீலனை சிறீலங்கா படைகள் எதற்காக கொலை செய்தார்கள் என்று தெரியவில்லை என்றும் அந்த அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது யாழ் குடாநாட்டில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சட்டவிரோதமான ம…
-
- 0 replies
- 1k views
-
-
சிறீலங்காவின் புதிய அமைச்சரவை இம்மாதம் 29ம் திகதி சிறீலங்காவின் புதிய அமைச்சரவை இம்மாதம் 29ம் திகதி பதவி ஏற்க்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் 52 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என தெரியவந்துள்ளது. ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒரே ஒரு அமைச்சினை மட்டுமே வழங்குவதற்கு ஸ்ரீலங்கா ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் ஏனைய அரசியல் கட்சிகளில் இருந்து அரசாங்கத்தில் இணையவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் 10 பேர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன. ஐக்கிய தேசிய கட்சியின் மாற்றுக் குழுவினரக்கு 8 அமைச்சு பதவிகளும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் ஜாதிக ஹெல உருமய ஆகிய கட்சிகளுக்கு தலா ஒவ்வொரு அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப…
-
- 0 replies
- 850 views
-
-
வாழைச்சேனை ஓட்டமாவடியில் நான்கு முஸ்லிம்களைக் காணோம்! வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஒமடியாமடு பகுதியில் விறகு வெட்டுவதற்காகச் சென்ற நான்கு பேர் காணாமல் போயுள்ளனர் என வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை பிறைந்துறைச்சேனைப் பகுதியைச் சேர்ந்த எம்.ஐ. தாஜுதீன் (வயது32), என்.எம். சுபைர் (வயது35), ஏ.எல். ஹலால்தீன் (வயது27), யூ.எல். முஹைதீன் (வயது32) ஆகிய நால்வருமே காணாமல் போயுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. கடந்த 15 ஆம் திகதி ஓட்டமாவடியில் இருந்து 11 பேர் விறகு வெட்டுவதற்காக ஒமடியாமடுப் பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதி ஒன்றுக்குச் சென்றுள்ளனர். மூன்று குழுக்களாகப் பிரிந்து சென்ற இவர்களில் இரண்டு குழுவினர் வீடு வந்து சேர்ந்துள்ளனர். ஏனைய குழுவை…
-
- 0 replies
- 846 views
-
-
இரட்டை வேட அணுகுமுறையால் அமைதி முயற்சிகளுக்கு ஆப்பு. "சுகம் வரும் ஆனால் ஆள் தப்பாது'' இப்படி ஒரு பேச்சு மொழி வழக்கு, நம் மத்தியில் உள்ளது. அமைதி முயற்சிகளை அரசு கையா ளும் விடயத்தைப் பார்க்கும்போது இந்த மொழித் தொடர்தான் நினை வுக்கு வருகின்றது. ஒரு புறம் இராணுவப் போர்வெறித் திட்டம். மறு பக்கத்தில் அமைதி முயற்சிகள் குறித்து சர்வதேச மட்டத்தில் ஆரவாரப் பிரசாரம். இந்த இரட்டைவேட அணுகுமுறை, நாட்டை எங்கே கொண்டுபோய் நிறுத் தப் போகின்றது? மட்டக்களப்பு, வாகரையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட் டில் உள்ள பிரதேசங்களைக் கைப்பற்றும் இறுதித் தாக்குதலை இலங்கை அரசின் இராணுவம் முடுக்கி விட்டுள்ளது என்று கொழும் பில் அறிவிக்கப்படுகின்றது. அதாவது, யுத்த நிறுத்தம் நடைமுறையில் இருப்ப…
-
- 0 replies
- 847 views
-
-
ரவீந்திரநாத் விரைவில் விடுதலையாவார்: பல்கலை - மானியங்கள் ஆணைக்குழு. கடந்த ஒரு மாத காலமாக சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான கருணா குழுவினரால் கடத்திச் செல்லப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரவீந்திரநாத்தினால் முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட பதவி விலகல் கடிதத்தை சிறிலங்காவின் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது. அவரது பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொண்டால் கருணா குழுவினர் அவரை விடுதலை செய்யலாம் என பேராசிரியர் ரவீந்திரநாத்தின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே அக் கடிதத்ததை ஏற்றுக்கொண்டதாக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்கா தெரிவித்துள்ளார். அரச தலைவர் மகிந்தவினால் வழங்கப்பட்ட…
-
- 1 reply
- 1.6k views
-
-
யாழில் மாவீரர், போராளி குடும்பங்களின் விபரங்களை திரட்டும் படையினர். யாழ்ப்பாணம் வடமராட்சி கொற்றவத்தை நவிண்டில் பகுதியில் சிறிலங்காப் படையினராலும் அவர்ளுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினராலும் அப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்குச் சென்று சோதனை என்ற பெயரில் கெடுபிடிகளை மேற்கொள்வதுடன் அங்கு உள்ள மாவீரர், போராளி குடும்பங்களின் பெயர் விபரங்களையும் தருமாறு மக்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி வருவதாக அங்கிருந்துகிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. -Sankathi-
-
- 0 replies
- 662 views
-
-
யாரும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியில் இணையலாம் - விலகலாம்: மகிந்த ராஐபக்ஸ. ஒவ்வொருவருக்கும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியில் இணையவும், விலகவும் உரிமையுண்டு. யாரும் கட்சியில் இணைவதையும் விலகுவதையும் நான் எதிர்க்கமாட்டேன் என மகிந்த ராஐபக்ஸ சிறீலங்கா சுதந்திரக்கட்சி உயர் குழு கூட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். தனது அரசு தமிழ் மக்களை விடுதலைப்புலிகளிடம் இருந்து விடுதலையடையச் செய்யும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலராக மைத்திரிபால சிறீசேன மீள தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதேவேளை மங்கள சமரவீர பொருளாளராகவும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அநுரத்தை ரத்வத்தை தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். -Pathi…
-
- 2 replies
- 869 views
-
-
ஈச்சிலம்பற்று பகுதியில் எறிகணை வீச்சில் நான்கு படையினர் பலி. ஈச்சிலம்பற்று பகுதியில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட மோட்டார் தாக்குதலில் நான்கு படையினர் கொல்லப்பட்டு மூவர் படுகாயமடைந்துள்ளதாக சிங்கள அரச தரப்பு அறிவித்துள்ளது. இச்சம்பவம் நேற்று பகல் 1.30 மணியளவில் நடைபெற்றுள்ளது. இதன்போது காயமடைந்த படையினர் அனைவரும் கந்தளாய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். -Sankathi-
-
- 0 replies
- 868 views
-
-
இனப் பதட்டத்தின் மூலம் வவுனியாவில் இருந்து தமிழர்களை வெளியேற்றி இனச் சுத்திகரிப்பு நடத்துவது திட்டமா? வடமாகாணத்தின் தலைநகராமாக மாற்றப்பட்டுள்ள வவுனியாவில் தமிழர் விகிதாசாரம் குறைக்கப்பட்டு ஒரு பொம்மை மாகாணசபை ஆட்சி?
-
- 4 replies
- 2.2k views
-
-
வெள்ளி 19-01-2007 23:46 மணி தமிழீழம் [நிலாமகன்] வடமராச்சியில் நவிண்டில் முகாம்மீது தாக்குதல் 6 படையினர் காயம் யாழ்ப்பாணம் வடமராச்சி நவிண்டில் பகுதயில் இன்று காலை 7 மணியளவில் இனம் தெரியாதவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 6 சிறீலங்கா படையினர் காயமடைந்துள்ளனர். இம் மோதல் சம்பவமானது 15 நிமிட நேரம் நீடித்துள்ளதாக இதனைத் தொடர்ந்து அப்பிரதேச மக்கள் அவ்விடத்தை விட்டு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறீலங்கா இராணுவத்தினர் உடனடியாக தேடுதல் நடவடிக்கை ஒன்றையும் இப்பிரதேச மக்கள் மேற் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை காயமடைந்த இராணுவத்தினரை பலாலி இராணுவ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://www.pathivu.com/
-
- 0 replies
- 892 views
-
-
காட்டுப் பகுதியில் பயிற்சியிலீடுபட்டுக் கொண்டிருந்தபோது காணாமல் போன இரண்டு கொமாண்டோ வீரர்களினதும் சடலங்களை பொலிஸார் அம்பேகமுவ காட்டுப் பகுதியில் வெவ்வேறு இடங்களிலிருந்து மீட்டுள்ளனர். தனமல்வில குடாஓய இராணுவப் பயிற்சி முகாமில் பயிற்சி பெற்று வந்த இவர்கள், கடந்த வெள்ளிக்கிழமை காட்டுப் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது காணாமல் போயுள்ளனர். 57 வீரர்கள் கலந்து கொண்ட இப்பயிற்சியில் இவ்விருவராக பயிற்சிக்காக காட்டுப் பகுதிக்குள் அனுப்பப்பட்டுள்ளதுடன் பயிற்சி முடிவில் கொழும்பு - வெலிவாய வீதிக்கு வந்து நிற்குமாறு பணிக்கப்பட்டிருந்தனர். எனினும், பயிற்சியின் முடிவில் 55 வீரர்களே உரிய இடங்களுக்கு வந்திருந்தனர். இதனையடுத்து, இராணுவமும் பொலிஸாரும் பல தினங்களாக தேடுதல் நடத்…
-
- 0 replies
- 1.1k views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் திகிலிவெட்டைப் பிரதேசத்துக்குள் நுழைய முற்பட்ட சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான கருணா குழுவினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளனர். குடும்பிமலை கோட்டத்திற்கு உட்பட்ட திகிலிவெட்டைப் பிரதேசத்துக்குள் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் திகிலிவெட்டை ஆற்றுப்பகுதியினூடாக இரு படகுகளில் துணை இராணுவக்குழுவைச் சேர்ந்த நால்வர் நுழைய முற்பட்டனர். இவர்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குலின் போதே இருவர் கொல்லப்பட்டும் இருவர் உயிருடனும் பிடிக்கப்பட்டனர். கொல்லப்பட்ட இருவரின் சடலங்கள் ஆற்றில் வீழ்ந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்க…
-
- 0 replies
- 1k views
-
-