ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
கணவரிடம் சென்ற மனைவியைக் காணவில்லை. கடந்த ஒகஸ்ட் மாதம் தொண்டமானாறு செலவச்சந்நிதி பகுதியிலிருந்து கணவரின் வீட்டிற்கு செல்வதாக கூறிச்சென்ற மனைவி கடந்த ஐந்து மாதங்களாகிய நிலையிலும் கணவரிடம் செல்லவில்லையென யாழ் மனித உரிமைகள் ஆனைக்குழுவில் உறவினர்களால் முறையிடப்பட்டுள்ளது. உசன் மிருசுவிலில் இருந்து இடம் பெயர்ந்து தற்போது தொண்டமானாற்றில் வசித்து வருபவரான வசந்தன் அனிற்றா (23) என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். இவரின் தாயார் பல இடங்கிளலும் தேடியும இவரைக் காணவில்லையெனவும் தெரிவித்துள்ளார். -Sankathi-
-
- 2 replies
- 1.8k views
-
-
அம்பாறையில் கஞ்சிக்குடிச்சாறை ஆக்கிரமித்துள்ள சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் 'நியத்த ஜய' ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் வழங்கல் செயற்பாட்டு முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 10 சிறப்பு அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 10-க்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளனர். நகர்வை மேற்கொண்டுள்ள படையினருக்கு வழங்கலை மேற்கொள்வதற்காக கஞ்சிகுடிச்சாறு வக்கிமுட்டியா பகுதியில் அதிரடிப்படையினர் அமைத்துள்ள முகாம் மீது இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.45 மணிக்கு விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குகுதலில் 10 சிறப்பு அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 10-க்கும் மேற்பட்ட சிறப்பு அதிரடிப்படையினர் காயமடைந்துள்ளனர். சிறப்பு அதிரடிப்பட…
-
- 0 replies
- 1.2k views
-
-
மன நோயாளியை தாக்கிய துணைஇராணுவக்குழுவினர். - பண்டார வன்னியன் Friday, 19 January 2007 12:31 {சங்கதி} சாவகச்சேரிச் சந்தையில் நின்ற மன நோயாளியை கடத்திச் சென்ற சிறிலங்காப் படையினரின் துணைஇராணுவக்குழுவினர் நான்கு நாட்களின் பின்னர் ஆட்கள் இல்லாத வீட்டில்கடும் சித்திரவதையின் பின்னர் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். கடந்த நான்காம் திகதி சாவகச்சேரி சந்தைப் பகுதியில் நின்ற இவரை ஆயுதங்களுடன் வந்த பத்துக்கும் மேற்பட்ட சிறிலங்காப்படையினரின் துணைஇராணுவக்குழுவினர் பொதுமக்கள் முன்னிலையில் பார்த்து நிற்க்கக் கூடியதாக வாகனத்தில் கடத்தப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக உறவினர்கள் பொலிசில் முறையிட்ட போதிலும் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை கடந்த இரண்டு நாட…
-
- 3 replies
- 1.4k views
-
-
HOT NEWS நாகர்கோவில் மோதலில் இராணுவ வீரர் பலி****இலங்கையில் அக்கிரமத்துக்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம்-அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் அலெக்சாண்டர் டவுணர்****சூடுபட்ட இளைஞன் உதவி கோரி அவலக்குரல் எழுப்பியபோதும் ஒருவரும் உதவ முன்வரவில்லை-வவுனியா மாவட்ட நீதிபதி விசனம்***வவுனியாவில் ஒருவர் சுட்டுக் கொலை****முகத்துவாரம் எலி ஹவுஸ் வீதியில் ஆட்டோ சாரதி சுட்டுக்கொலை* `புதிய அரசியல் கலாசாரம்' வெறும் பசப்பு வார்த்தை [19 - January - 2007] [Font Size - A - A - A] ஆளும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் இன நெருக்கடிக்கு அரசியல் இணக்கத் தீர்வு காண்பதற்கான முயற்சிகள்…
-
- 0 replies
- 921 views
-
-
இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சு இணையத்தில் ஒரு கட்டுரை செஞ்சோலை சிறுமிகள் படுகொலையை நியாயப்படுத்தி வெளிவந்திருகிறது.முகமாலையில
-
- 1 reply
- 1.7k views
-
-
ஈழத்தமிழர் துயர் துடைக்க உதவிப் பொருட்கள் வழங்கும் மாநாடுகள் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : யாழ் தமிழர்களைப் பட்டினி போட்டுப் பணியவைக்க சிங்கள அரசு முயலுகிறது. நமது சகோதரத் தமிழர்களைக் காப்பாற்றுவதற்காக உணவு மற்றும் மருந்துப் பொருட்களைத் திரட்டும் வேலை தமிழகமெங்கும் துரிதமாக நடைபெற்று வருகிறது. பொருட்களை வழங்குவதில் போட்டி போட்டுக்கொண்டு மக்கள் காட்டும் உற்சாகம் நம்மை நெகிழ வைக்கிறது. மக்கள் மனமுவந்து அளிக்கும் இப்பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் விழாக்கள் கீழ்க்கண்ட விவரப்படி நடைபெற உள்ளன. சனவரி - 24 மதுரை சனவரி - 28 விழுப்புரம் சனவரி - 30 ஈரோடு சனவரி - 31 வேலூர் பொருட்களைச் சே…
-
- 3 replies
- 1.6k views
-
-
சிறிலங்காவின் அக்கிரமச் செயற்பாடுகளிற்கு பொறுப்பானவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும்: அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர். சிறிலங்காவின் அக்கிரமச் செயற்பாடுகள் அண்மைக்காலமாக தீவிரமடைந்துவருகின்றது. இதற்குப் பொறுப்பானவர்கள் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென அவுஸ்ரேலிய நாட்டின் வெளிவிவகார அமைச்சர் அலெக்சாண்டர் டவுணர் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசதலைவர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் தீவிரமடைந்துள்ள இராணுவ வாதத்தினால் வடக்குக் கிழக்கில் வாழ்கின்ற தமிழ்மக்கள் நாளாந்தம் படுகொலை செய்யப்படுவதும் குறிப்பாக பாடசாலைகள், மக்கள் குடியிருப்புக்கள், வைத்தியசாலைகள் மீது எறிகணை மற்றும் விமானத்தாக்குதல்களை சிறிலங்காவின் முப்படைகளும் மேற்கொண்டு மனிதப்படுகொலைக…
-
- 9 replies
- 2.7k views
-
-
வாகரை ஆஸ்பத்திரிப் பகுதி மீது தாக்குதல் நடத்தப்படுவதற்குக் கண்டனம் செஞ்சிலுவை சர்வதேசக் குழு தலைமையகம் அறிக்கை வாகரைப் பிரதேசத்தில் ஆயிரக் கணக் கான பொது மக்கள் தங்கியுள்ள ஆஸ்பத்தி ரிப் பகுதி மீது நடத்தப்படும் எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு கண்டனமும் அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளது. ஆஸ்பத்திரி பாதுகாப்புப் பிரதேசம் என்ற அந்தஸ்துக் கொண்டது என்பதையும் அதனை அண்டிய பகுதிகளில் தஞ்சம் அடைந்துள்ள பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட நிய தியையும் மீறக் கூடாது என்று இரண்டு தரப்புகளையும் செஞ்சிலுவைக்குழு கேட்டுள்ளது. * சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் பிரகாரம் ஆஸ்பத்திரியும…
-
- 0 replies
- 731 views
-
-
தரம் 1, தரம் 2 வகுப்புகளில் இத்தவணையில் தமிழும் சிங்களமும் போதிக்கப்படும் பாடசாலைகளில் தரம் 1, தரம் 2 கற்றலுக்கான பாடவிதானம் இந்த வருடத்திலிருந்து மறுசீரமைப்பு செய் யப்பட்டுள்ளது. இவ்வருடத்தின் முதலாம் தவ ணையிலிருந்து புதிய பாட விதானம் நடைமுறைக்கு வரும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மறு சீரமைப்புச் செய்யப்பட்ட பாடவிதானத்தின் பிரகாரம் * இரண்டாவது தேசிய மொழியாக சிங்கள மாணவர்கள் தமிழையும் தமிழ் மாணவர்கள் சிங்களத்தையும் கற்றல். * நாளாந்தம் 20 நிமிடங்கள் உடற் பயிற்சி வேலைத் திட்டத்தை மேற் கொள்ளல். * வாய்மொழி மூல ஆங்கில வேலைத் திட்டத்தை கணித பாடத்து டன் அமுல்படுத்தல். * பகல் உணவு வழங்கும் திட்டத் துக்கு நேரம் ஒதுக்குதல். *ஆசிரியர் வழிகாட்டல் கோவையை அறிம…
-
- 1 reply
- 962 views
-
-
மன்னார் எண்ணெய்ப் படிவுப் படுக்கை அகழ்வு; இந்தியாவுக்கும் சீனாவுக்கும் வழங்கப்பட்டன 105 லட்சம் டொலர்களுக்கு நோர்வேயின் தரவுகள் கொள்முதல் மன்னார் கடல் பிராந்தியத்தில் உள்ள எண்ணெய்ப் படிவுப் படுக்கைகளில் ஒன்றை இலங்கை அரசாங்கம் அகழ்வுப் பணிக்காக இந்தியாவுக்கு வழங்கியுள்ளது. காவேரி நதிப்படுக்கைக்கு அண்மித்த தாக உள்ள படுக்கைகளில் ஒன்றே இந்தியா வின் எண்ணெய் மற்றும் இயற்கைவாயு கூட்டுத்தாபனத்துக்கு (ONஎகு) வழங்கப்பட் டுள்ளது. இதேபோன்ற இரண்டாவது படுக்கை (அதுவும் காவேரி நதிப்படுக்கையை அண் மித்தது) சீனாவுக்கு வழங்கப்பட் டுள்ளது. எஞ்சிய ஆறு எண்ணெய்ப் படிவுப் படுக்கைகளும்எதிர்வரும் மூன்று மாதங் களில் ஏனைய விண்ணப்பதாரிகளுக்கு வழங்கப்படும் என்று இலங்கையின் போக்கு வரத்து …
-
- 6 replies
- 1.7k views
-
-
சங்கதி இணையம் தெரிவித்துள்ளது. http://sankathi.org/news/index.php?option=...97&Itemid=1
-
- 4 replies
- 2k views
-
-
தற்போது இடம்பெற்று வரும் வன்முறைகள், மோதல்களினால் புதிதாக 2 இலட்சத்து 13 ஆயிரம் பேர் அகதிகளாகியிருப்பதாகவும், இவர்களுக்கு அடுத்து வரும் மாதங்களில் உதவுவதற்காக 66 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான அலுவலகம் உதவி வழங்கும் நாடுகள் அமைப்புக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றது. வடக்கு - கிழக்கு மோதல்களினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு 2006 ஏப்ரலின் பின்னர் மீண்டும் வெடித்த வன்செயல்களும், மோதல்களும் மனிதாபிமான ரீதியாக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் சபையின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத
-
- 0 replies
- 587 views
-
-
விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட மாட்டாது: ஜேர்மன் தூதுவர். தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை ஜேர்மனி நீக்காது என்று சிறிலங்காவுக்கான ஜேர்மனிய தூதுவரிடம் ஜேர்கன் வீத் தெரிவித்துள்ளார். தென்னிலங்கையின் பௌத்த துறவிகளைக்கொண்ட அரசியல் கட்சியான ஜாதிக கெல உறுமயவுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே வீத் இவ்வாறு தெரிவித்தார். கெல உறுமயவின் அணிக்கு அதன் நாடாளுமன்றத் தலைவர் அத்துரலிய ரத்ன தேரர் தலைமை தாங்கினார். இந்த கலந்துரையாடலில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஐரோப்பிய ஒன்றிய விதிகளின் பிரகாரம் விடுதலைப் புலிகள் மீதான தடை, ஒன்றியத்தின் பிரதிநிதிகள் சேர்ந்து எடுத்த முடிவாகும். அந்த முடிவை தனி ஒரு நாட்டினால் மாற்ற முடியாது. ஊடகங்கள் தெரிவித்தது போன்று ஜேர…
-
- 2 replies
- 905 views
-
-
கிழக்கில் சூழ்ந்துள்ள போர் மேகங்களும் அரசியல் இராணுவ யதார்த்த நிலைகளும்(சிறப்பு அரசியல் பார்வை) எழுதியவர் நமது செய்தியாளர் Thursday, 18 January 2007 இணைந்திருந்த வடகிழக்கு மாகாணத்தை மூன்றாகப் பிரித்து அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்திய கையோடு கிழக்கில் பாரிய இராணுவ நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா அரசாங்கம் மேற்கொண்டிருக்கிறது. வடகிழக்கு மாகாணத்திலிருந்து மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களை தனியாகவும் திருகோணமலை மாவட்டத்தை தனியாகவும் பிரித்த போது கிழக்கில் இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள தமிழ் மக்களிடமிருந்து எதிர்ப்பலைகள் எழாதவாறு மரண அச்சுறுத்தல்களுக்குள் தள்ளி மௌனிகளாக்கி விட்டு கிழக்கில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களை ஆக்கிரமிப்பதற்காக ஸ்ர…
-
- 4 replies
- 2.2k views
-
-
ரணில் கரு சந்திப்பு திங்களன்று இடம்பெறும் வீரகேசரி நாளேடு ஐக்கிய தேசிய கட்சியின் அதிருப்தியாளர்கள் குழுவின் தலைவர் கரு ஜயசூரிய எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை எதிர்வரும் திங்கட்கிழமை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். கட்சியின்தலைமையகமானஸ்ரீகொத
-
- 0 replies
- 737 views
-
-
டென்மார்க் கத்தோலிக்க திருச்சபையின் அத்துமீறல்! கடந்த 09.01.07 அன்று டென்மார்க்கில் உள்ள கிரின்ஸ்ரட் நகரத்தில் கத்தோலிக்க தமிழர்களால் நடத்தப்படுகின்ற "டென்மார்க் கத்தோலிக்க திருச்சபை" என்கின்ற அமைப்பு ஒரு ஒளிவிழாவை நடத்தியது. அந்த விழாவில் கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்த பலர் கௌரவிக்கப்பட்டார்கள். கௌரவிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு பட்டங்களும் வழங்கப்பட்டன. அவர்கள் கத்தோலிக்க திருச்சபைக்கும் சமூகத்திற்கும் ஆற்றிய சேவைகளுக்காக அவர்களுக்கு அந்தப் பட்டங்கள் வழங்கப்பட்டன. பட்டங்கள் பெற்றவர்கள் மேடைக்கு அழைக்கப்பட்ட பொழுது, அவர்கள் பெற்ற பட்டங்களை அடைமொழியாகக் கொண்டே அழைக்கப்பட்டார்கள். அதன்படி திரு. ராசா மரியா பெர்னாண்டா என்பவர் ஒளிவிளக்கை ஏற்றுவதற்காக மேடைக்கு…
-
- 3 replies
- 2.8k views
-
-
இலங்கை வெளியுறவு அமைச்சர் இந்தியா பயணம் 18 ஜனவரி 2007 இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அரசு முறைப்பயணமாக இந்தியாவுக்கு வியாழனன்று பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது இலங்கை அமைதி முயற்சிகள் குறித்து இந்தியத் தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். இலங்கையின் தற்போதைய நிலவரம், போர் நிறுத்தத்தை கைவிட்டு அமைதி முயற்சிகளை தொடர்வது போன்றவை குறித்து தனது பயணத்தின்போது இந்திய தலைவர்களிடம் சமரவீர விளக்குவார் எனத் தெரிகிறது. டெல்லியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியிலும் இலங்கை அமைச்சர் சமரவீர உரையாட்டுகிறார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, கொழும்புக்குச் சென்ற 2 வாரங்களில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் இந்த…
-
- 0 replies
- 721 views
-
-
வியாழன் 18-01-2007 23:46 மணி தமிழீழம் [சிறீதரன்] வாகரை வைத்தியசாலையை இலக்கு வைத்து எறிகணைத் தாக்குதல் 5 பொதுமக்கள் காயம் மட்டக்களப்பு மாங்கேணி மற்றும் கஐவத்தை இராணுவ முகாம்மில் இருந்து சிறீலங்கா படையினர் தொடர்ச்சியாக கடும் எறிகணைத்தாக்குதல்களை இன்று வியாழக்கிழமை காலை மற்றும் மாலை மேற்கொண்டுள்ளதாகவும் இவ் எறிகணைகள் வாகரை வைத்தியசாலையை அண்டிய பகுதிகளில் வீழ்ந்து வெடித்ததாகவும். இதன்போது 5 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் மேலும் அறியமுடிகிறது. இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில் காலை 6 மணிமுதல் 10 மணிவரையும் மேற்கொண்ட எறிகணைத்தாக்குதலில் 8 எறிகணைகள் வைத்தியசாலையை அண்டியபகுதிகளில் வீழ்ந்து வெடித்ததாகவும் இதன் போது ஒருவர் காயமடைந்ததாகவும் பின் மாலை 5.15 மணியளவில் …
-
- 1 reply
- 820 views
-
-
[17 - January - 2007] [Font Size - A - A - A] அரசாங்க ஊழியர்கள் அனைவருக்கும் இரண்டாவது மொழி தெரிந்திருப்பதை கட்டாயப்படுத்தும் சட்டத்தை இயற்றுவதற்கு அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி சிங்கள அரச ஊழியர்கள் தமிழையும் தமிழ் ஊழியர்கள் சிங்களத்தையும் தெரிந்திருக்கவேண்டியது கட்டாயப்படுத்தப்படவுள்ளது. இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்திருப்பதாகவும் உரிய சுற்று நிருபம் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படவிருப்பதாகவும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் திசாநாயக்கா தெரிவித்திருக்கின்றார். அமைச்சு விடுக்கவிருக்கும் இந்தச் சுற்று நிருபத்தின் பிரகாரம், அரச ஊழியர்களுக்காக இவ்வருடத்தில் நடத்தப்படவிருக்கும் மொழித் திறமைகாண் பரீட்சைக்குத் தோற்ற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டிர…
-
- 0 replies
- 1.1k views
-
-
வியாழன் 18-01-2007 22:32 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] வடக்கு - கிழக்கில் கண்காணிப்புக் குழுவின் பணிகள் இன்றுமுதல் ஆரம்பம் யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழவினர் வடகிழக்கில் தமது பணியை இன்று முதல் ஆரம்பித்துள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக இப்பகுதிகளில் இருந்து பயிற்சிப்பட்டறையைக் காரணம் காட்டி கொழும்பு வந்திருந்த இவர்கள் இன்று முதல் தமது பணியை மீண்டும் ஆரம்பிப்பதாக கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தொபினூர் ஒமர்சன் தெரிவித்துள்ளார். இதற்கென தமது 10 உறுபினர்கள் வடகிழக்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே யாழ்ப்பாணம், கிளிநொச்சிப் பகுதிகளில் தமது பிரதிநிதிகள் இருந்ததாக தெரிவித்துள்ள பேச்சாளர் மட்டக்களப்பு திருகோணமலை, வவுணிய…
-
- 0 replies
- 583 views
-
-
வியாழன் 18-01-2007 22:28 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] அரசாங்கத்தின் உயர்மட்டக்குழு அம்பாறை விஜயம் ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஸ மற்றும் அமைச்சர் நிமால் சிறீபாலடீசில்வா தலைமையிலான அரசின் உயர்மட்டக் குழு ஒன்று இன்று அம்பாறை சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. அம்பாறைக் கச்சேரியில் இடம் பெற்ற மாவட்டத்தின் 167 கிராமசேவகர் பிரிவுகளை அபிவிருத்தி செய்வதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்றில் இவர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர்கள் பேரியல் அஸ்ரவ், அத்தாவுல்லா உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர். நன்றி-பதிவு
-
- 0 replies
- 708 views
-
-
வியாழன் 18-01-2007 22:31 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] அம்பலாங்கொடையில் துப்பாக்கிப் பிரயோகம்: இரு காவல்துறைச் சிய்பாய்கள் பலி! அம்பலாங்கொடையில் இன்று 4 மணிக்கு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு காவற்துறை சிப்பாய்களும் மரணமாகியுள்ளனர். முச்சக்கர வண்டிச் சாரதி ஒருவர்; காயம் அடைந்துள்ளார். அம்பலாங்கொடை நகரப் பகுதியில் உள்ள ஆபரண நிலையம் ஒன்றைக் கொள்ளையிட முனைந்தவர்களை கைது செய்யும் நோக்கில் முச்சக்கர வண்டியில் சென்ற காவற்துறையினர் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். காவற்துறையினர் பதில் தாக்குதல் நடத்திய பொழுதிலும் கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொள்ளையர்களை க…
-
- 0 replies
- 631 views
-
-
எங்கள் மக்களின் பிரச்சினை தீரும் வரை எங்கள் போராட்டம் தொடரும்: இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் கிளிநொச்சியில் விடுதலைப்புலிகள் மிகப்பெரும் தாக்குதலுக்கு தயாராகி வருகின்றனர் என்றும், தென்னிலைங்கையின் நிலமையைப் பொறுத்து அவர்களின் தாக்குதல்கள் ஆரம்பமாகலாம் என இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழு தெரிவித்திருந்தது. இது குறித்து சிங்கப்பூர் 'தமிழ்முரசு' நாளேட்டுக்கு கருத்துத் தெரிவித்த விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் ஐ.இளந்திரையன் இந்தத் தகவலை எந்த ஆதாரத்தில் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழு கூறியது என்று தெரியவில்லை. நாங்கள் அவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளோம். எனினும் எப்போதுமே தயார் நிலையில்தான் நாம் உள்ளோம் எனக் கூறினார். மேலும் அவர் தெரிவ…
-
- 0 replies
- 701 views
-
-
இருவேறு மோதல்களில் ஆறு போராளிகள் வீரச்சாவு. சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற இருவேறு மோதல்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆறு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். மட்டக்களப்பு வாழைச்சேனைப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (09.01.07) சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய பதுங்கித் தாக்குதலில் நான்கு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். திருமலை மாவட்டத்தைச் சேர்ந்த வீரவேங்கை மாதுளன் என்றழைக்கப்படும் சிவானந்தராசா கோபிநாத் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கப்டன் துர்க்காதரன் என்றழைக்கப்படும் விஜயகுமார் சிவாகரன் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கப்டன் ஹேமன் அல்லது கமலன் என்றழைக்கப்படும் திருக்கேதீஸ்வரன் ஹேமநாதன் மட்டக்களப்பு மாவட்டத்தைச்சேர்ந்த வீர…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஐ.நாவின் சிறப்பாலோசகரும் சிறுவர் மற்றும் ஆயுதமோதலுக்கான கண்காணிப்பு அதிகாரியுமான அலன்றொக் பத்துநாள் பயணமாக கடந்த வருடம் நவம்பர் மாதம் சிறிலங்கா வந்தபோது அவரால் அறியப்பட்ட விடயங்கள் தொடர்பான அறிக்கையை சிறிலங்கா அரசிற்கு அனுப்பியிருந்தார். அவ்வறிக்கையில் சிறிலங்கா படையினருடன் சேர்ந்தியங்கும் துணைஇராணுவக்குழுவான கருணாகுழுவினர் தமது படையில் சிறுவர்களை சேர்ப்பதற்கு அரசபடைகள் உதவிவருவதாகவும் அதற்கான ஆதாரங்கள் தம்மிடமுண்டு எனவும் அலன்றொக் தெரிவித்திருந்தார். ஆனால் றொக்கின் அறிக்கையை அரசு நிராகரித்ததுடன் அவர் அதற்குரிய ஆதாரங்களை சமர்ப்பிக்கத் தவறிவிட்டார் எனவும் தெரிவித்திருந்தனர். ஆனால் ஐ.நா பாதுகாப்புசபையின் சிறிலங்கா தொடர்பான அலன்றொக்கின் அறிக்கை உரியவேளையில்…
-
- 1 reply
- 700 views
-