Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வவுனியாவில் வழமைக்கு மாறாக படையினர் குவிப்பு. வவுனியா நகர்ப்பகுதியில் வழமைக்கு மாறாக அதிகளவான சிறிலங்காப்படையினர் குவிக்கப்பட்டு சோதனைக் கெடுபிடிகளும் அதிகரித்துள்ளன இதே வேளை மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கெண்டு வருகின்றனர். குறிப்பாக வவுனியா மன்னார் வீதி மற்றும் இதர வீதிகள் என்பவற்றில் 50மீற்றர் இடைவெளிக்கு ஒரு காவலரண் என்ற விகிதத்தில் புதிய காவலரண்கள் அமைக்கப்பட்டு வீதி ரோந்து நடவடிக்கைகளிலும் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் திடீரென பயணிக்கும் வாகனங்களை மறித்து சோதனை இடுவதுடன் மக்களையும் விசாரணைக்குட்படுத்தி வருகின்றனர். மன்னாரில் இருந்து வவுனியா நோக்கி நோயளர்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த நோயாளர் காவு வண்டி கூட சோதனைக்கு உட்படுத்தப்ப…

  2. மகிந்தவுடன் படமெடுக்க மறுத்த மன்மோகன். சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இந்தியா சென்றிருந்தபோது, அவருடன் படமெடுக்க இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மறுத்துள்ளார். அரச மாளிகையில் மகிந்தவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது நிழற்படங்களோ, ஒளிப்படங்களோ எடுக்க அனுமதிக்க வேண்டாம் என மன்மோகன் சிங் அதிகாரிகளுக்கு கட்டளை பிறப்பித்திருந்ததாக அறியப்படுகிறது. சிறிலங்காவின் போக்கிலும் அதன் தற்போதைய நிலைமையிலும் இந்தியா அதிருப்தி கொண்டுள்ளதையே இது காட்டுவதாக அவதானிகள் கூறுகின்றனர். வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்து இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக முதல்வர் மு.கருணாநிதி மத்திய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து வ…

  3. (ஞாயிற்றுக்கிழமை, 3 டிசெம்பர் 2006, 06:43 ஈழம்) (கொழும்பு நிருபர்) சிறிலங்கா அரசாங்கம் போர் மூலமே தீர்வென்று கூறினால் அதற்கு நாங்களும் தயாராகவே உள்ளோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை வெளிவந்த வீரகேசரி வார வெளியீட்டுக்கு அவர் வழங்கிய பேட்டி: கேள்வி: சர்வதேச அனுசரணையுடன் சர்வதேசமும் சிறிலங்கா அரசும் விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்தால் பேச்சிற்கு செல்வீர்களா? பதில்: எமது தலைவர் சிறிலங்கா அரசின் முழுமையான பக்கங்களையும் பார்த்து அவர்களினால் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படாது என்பதன் பின்பு நாங்கள் தனியரசை நிறுவுவதை தவிர வேறு வழியில்லை என்பதை தெர…

  4. தீர்வுத்திட்ட நகல் வரைபு புதன்கிழமை சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவிடம் கையளிப்பு! தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக நிபுணர்கள் குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள நகல் திட்டம் எதிர்வரும் புதன்கிழமை சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவிடம் கையளிக்கப்படவுள்ளன. நிபுணர்கள் குழுவினரால் தயாரிக்கப்பட்டுள்ள தீர்வு நகலை சர்வகட்சி பிரதிநிதிகள் குழு ஆராய்ந்து மேலதிக விடயங்களை சேர்ப்பது குறித்து இறுதி முடிவினை மேற்கொள்ளும். உலக வர்த்தக மையத்தில் புதன்கிழமை இந்நகல் திட்டத்தை நிபுணர்கள் குழு சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவிடம் சமர்ப்பித்த பின்னர் இரு குழுக்களுக்குமிடையே மற்றுமொரு சுற்றுப் பேச்சுவார்த்தையும் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அண்மையில் இந்திய…

  5. சிறிலங்கா அரசால் அண்மைக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உக்ரெயினில் இருந்தான பாரிய வான்கலங்கள் கொள்வனவில் பல மில்லியன் டொலர் பெறுமதியான ஊழல் இடம்பெற்றிருக்கிறது என கொழும்பில் இருந்து வெளியாகும் சண்டே ரைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த யூலை 26 ல் கைச்சாத்திடப்பட்ட சிறீலங்கா வான்படைக்கான வான்கலக் கொள்வனவில் பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் ஊடாக 4மிக் விமானங்களுக்கான கொள்வனவு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. 2000 ஆண்டு காலப்பகுதியில் கொள்வனவு செய்யப்பட்ட அதே வான்கலங்கள் பலமடங்குவிலையில் இப்போது கொள்வனவு செய்யப்படுகிறது. ஆனால் இவ்விமானங்கள் ஒரே காலப்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டவையாகும். கடந்த பல ஆண்டுகளாக தரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்ட இவ்விமானங்களுக்கு ம…

  6. சிறிலங்கா அரசின் ஆயுதக்கொள்வனவில் மில்லியன் கணக்கான டொலர் ஊழல் [ஞாயிற்றுக்கிழமை, 3 டிசெம்பர் 2006, 13:36 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா அரசின் அண்மைய மிகப்பெரிய ஆயுதக்கொள்வனவில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டிருக்கிறது. தற்போது அரச வான்படைக்கு பல மில்லியன் ரூபாய் அல்லது டொலரில் நான்கு மிக்-27 ரக விமானங்கள், வேறு ஏழு விமானங்கள் வாங்கியது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. சிறிலங்கா வான்படை சார்பில் சிறிலங்கா அரசுக்கும் உக்ரெய்ன் நாட்டுக்கும் சொந்தமான உக்ரின்மார்ஷ் என்ற நிறுவனத்துக்கும் இடையில் நடைபெற்ற கொள்வனவு அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தமாக நடைபெறும். வழக்கமாக இத்தகைய பெரும் கொள்வனவுகளைச் செய்வதற்கு முன்னதாக பல த…

  7. http://head-line.blogspot.com/ * How Gotabhaya Rajapakse escaped death - D.B.S. Jeyaraj * வெள்ளவத்தையில் எட்டுத்தமிழர் கைது - உதயன் * காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைக்க இந்திய அரசு சுமார் 230 கோடி ரூபாவை இலங்கை அரசுக்கு வழங்கவுள்ளது. - TamilWin * அம்பாறை திருக்கோவில் பகுதியில் மூவர் சுட்டுக்கொலை. - சங்கதி * 4 suspects held in suicide attack on Lanka Defence Secy. - Hindu, India * தீவகத்தில் கடற்படையினர் ஒத்திகை. - சங்கதி * Sri Lankan Kfirs bomb Mullaithivu civilian settlements - LTTE Peace Secretariat * Widen focus beyond child soldiers to humanitarian issues, Rock tells UN - TamilNet * விடுதலைப் புலிகளின் படைபலத்தை பலவீனப்படுத்த வேண்டும்: சரத் …

  8. ULFA forging ties with LTTE, say police By ANI Saturday December 2, 03:11 PM Agartala (Tripura), Dec. 2 (ANI): Police officials in Tripura have claimed that connections exist between the banned United Liberation Front of Asom (ULFA) and the Liberation Tigers of Tamil Eelam (LTTE). "You are correct when you say that ULFA has links with LTTE. We have very definite evidence in Lakhipathar camp of ULFA. There were three LTTE men who had come and stayed for more than a month to organise certain camps, to advise them," Ghansyam Murari Srivastava, Director General of Police, Tripura, told reporters here. Prasad said ULFA's interest in maintaining contact with the L…

  9. மட்டக்களப்பு- கிரான் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கருணாகுழுவினரால் கடத்தப்பட்டுள்ளார். சிவபாதம் சிவரூபன் (வயது18) என்பவரே கருணாகுழுவினரால் கடந்த 28ம் திகதி கடத்தப்பட்டவராவார். கடந்த 28ஆம் திகதி மாலை ரியூசன் வகுப்புக்குச் சென்றுவிட்டு கிரானிலுள்ள தனது வீட்டுக்குச் சென்றுகொண்டிருக்கும் போது 2மோட்டார் சைக்கிளில் வந்த கருணாகுழு உறுப்பினர்கள் இவரை அடித்து பலவந்தமாக ஏற்றிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக இவரின் பெற்றோர் ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரியவருகிறது. வியாபார நிமித்தமாக கடைக்குச் சென்றபோது தனது சகோதரன் கருணாகுழுவினரால் கடத்திச்செல்லப்பட்டதை நேரில் கண்டதாகவும் சகொதரனைக் கடத்திச்சென்ற நால்வரில் ஒருவரைத் தவிர ஏனைய மூவருக்கும் சுமார் 15தொடக்க…

    • 0 replies
    • 827 views
  10. விசேட அதிரடிப்படையினரும் உடந்தை! அம்பாறை- விநாயகபுரத்திலுள்ள சக்தி வித்தியாலயத்தின் வாசலில் வைத்து குடும்பஸ்தர்கள் மூவர் கருணாகுழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை இரவு 9மணியளவில் இரவு உணவை அருந்திவிட்டு இவர்கள் படுக்கைக்குத் தயாரானபோது – அம்பாறை விசேட அதிரடிப்படை முகாமின் முக்கிய அதிகாரியான ஜெயதிலக என்பவரும் அவருடன் மோட்டார்சைக்கிளில் வந்த நான்கு அதிரடிப்படை சிப்பாய்களும் இம்மூவரது வீடுகளுக்கும் சென்று இவர்களை விநாயகபுரம் வித்தியாலய பகுதிக்கு அழைத்துக்கொண்டு சென்றுள்ளனர். வித்தியாலய வாசலில் சுமார் ஒரு மணித்தியாலம் வரை இக்குடும்பஸ்தர்கள் மூவரையும் வைத்து விசாரித்து அவர்கள் மீது கொட்டன்களாலும் பைப்களாலும் தாக்குதலைமேற்கொண்டு விட்டுச் செ…

    • 0 replies
    • 718 views
  11. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருந்து விலக நேரிடும் - ஐக்கிய தேசியக் கட்சி. ஐக்கிய தேசிய கட்சி, அரசாங்கம் தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளவிட்டால் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருந்து விலகி நேரிடும் என தெரிவித்துள்ளது. வடக்கு கிழக்கு பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை தெளிவில்லாது இருப்பதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, இரத்தினபுரியில் நேற்று இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே தெரிவித்தார். அரசாங்கம் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளதாகவும், அரசாங்கத்துடன் தேசிய செயற்திட்டம் ஒன்றுக்கு ஒத்துழைப்பு வழங்கிய போதும் தாம் அரசாங்கத்தின் பங்காளிகள் அல்ல என்றும் திஸ்ஸ அத்தநாய…

  12. Started by Tamil News,

    Army Commander Lt Gen Sarath Fonseka has admitted in the United States last week that the military had had to sacrifice about 300 soldiers within a week-and-a-half of battle in Muhamalai. It was a larger figure than had ever been cited by the military in Sri Lanka following the Muhamalai battles. `However, engaging in such battles was necessary in order to deny the LTTE strategic advantage into security forces controlled areas, as they were seeking to do recently by trying to retake the Jaffna peninsula,` Fonseka is reported as telling US Under-Secretary of State Nicholas Burns on Tuesday. Fonseka was on a three-day official visit to the US. He met Burns…

  13. மகிந்தரின் சிந்தனையை மறந்தது இலங்கை [02 - December - 2006] [Font Size - A - A - A] மனிதப்பண்புகள், நாகரிகம் என்றால் என்னவென்று புரியாத நிலையில் கீழ்மட்ட நோக்கங்களும், சிந்தனைகளும், செயற்பாடுகளும் மிகுந்து விட்ட நமது நாடு, நமது இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் வரலாறு கொண்டதாகப் பெருமை பேசும் இலங்கைத் திருநாடு. இதை எண்ணும் போது வேதனையும், வெறுப்பும், விரக்தியுமே மேலோங்குகின்றன. அசோக சக்கரவர்த்தியின் மகனான மகிந்தனால் இலங்கைக்கு கி.மு. 237 ஆம் ஆண்டில் புதிய பண்பட்ட சிந்தனை புகுத்தப்பட்டது. அது பேணிக்காக்கப்படுகின்றது என்று கூறுகின்றார்கள். நாட்டில் தற்போது நடப்பவற்றையும் மகிந்தவின் சிந்தனையையும் ஒப்பிட்டுப்பார்த்தால் உண்மை புரியும். கலிங்கப் போரில் வெற்றி …

  14. சிறிலங்கா அரசின் தாக்குதல்களுக்கு இணைத்தலைமை நாடுகளின் கூட்டம் பச்சைக்கொடி. அமெரிக்க, வாசிங்ரனில் கடந்த மாதம் 21, 22 ஆம் நாட்களில் நடைபெற்ற இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளின் கூட்டம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையை முடுக்கி விட சிறிலங்கா அரசுக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளது. இது தொடர்பாக "வேர்ல்ட் சோசலிஸ்ட் வெப்" இணையத்தளத்துக்கு நந்தா விக்கிரமசிங்க எழுதிய கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே ஆகிய நாடுகள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள கொழும்புக்கு ஊக்கமளித்துள்ளது. சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் …

  15. அரசாங்கம் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் விதத்தில் ஏ 9 பாதையை திறக்கவேண்டும்.- பெ.சந்திரசேகரன் சமாதானத்திற்கான தனது முயற்சியை தென்னிலங்கை சக்திகள் புரிந்துகொள்ள வில்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கருத்துத் தெரிவித்ததிலிருந்து தமிழீழ விடுதலைப்புலிகள் இன்னும் சமாதான முயற்சிகளில் நம்பிக்கை கொண்டிருப்பது புரிகின்றது. இதனை தென்னிலங்கை பயன்படுத்திக்கொண்டால் சமாதானம் ஏற்படுவது மிகவும் இலகுவானது என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.பிரபாகரனின் மாவீரர் தின உரையில் சமாதானத்திற்கான நடவடிக்கைகள் தோல்வியடைந்திரு…

  16. விடுதலைப் புலிகளின் படைபலத்தை பலவீனப்படுத்த வேண்டும்: சரத் பொன்சேகா தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபகாரனது இராணுவ பலம் பலவீனப்படுத்தப்பட்டாலே அன்றி நாட்டில் அமைதி பிறக்காது என சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினைக்கு முடிவு காண அரசியல் தீர்வு காணப்பட வேண்டும், சமாதானப் பேச்சுக்கள் தொடர வேண்டும் என்னும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திப் பேசிய சரத் பொன்சேகா "அமைதிக்கு வழி காண வேண்டுமெனில், விடுதலைப் புலிகள் தங்களது இராணுவத்தைப் பலப்படுத்த அனுமதிக்கக்கூடாது. இது சிறிலங்காவின் படையைப் பலவீனப்படுத்துகிறது" என்று கூறினார். அமெரிக்காவுக்கு மூன்று நாள் உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள சரத் பொன்சேகா, அ…

  17. விடுதலைப் புலிகளுக்கு தகவல்கள் விற்றதாக 7 இராணுவத்தினர் தடுத்து வைப்பு [சனிக்கிழமை, 2 டிசெம்பர் 2006, 17:20 ஈழம்] [பா.பார்த்தீபன்] தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தகவல்களை விற்றதாக இராணுவ மேஜர் உட்பட 7 பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு முக்கியமான இரகசியத் தகவல்களை மில்லியன் கணக்கான ரூபாய்க்கு விற்ற குற்றச்சாட்டில் இராணுவத்தில் உயர் பதவி வகிக்கும் அதிகாரியுடன் மேலும் ஆறு பேரை கொழும்பு நீதிமன்றம் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. இவர்கள் ஏறக்குறைய 70 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ரொக்கத்தையும் சொத்துக்களையும் வைத்திருப்பதாகவும் பல கொள்ளைகளை நடத்தியதாகவும் செல்வந்தர்களிடம் இருந்து பெருந்தொகையைப் பெற்றிருப்பதாகவும் விசாரணைக…

    • 0 replies
    • 885 views
  18. சிறிலங்கா விமான நிலையத்தில் இருவருக்கு மட்டுமே அனுமதி [சனிக்கிழமை, 2 டிசெம்பர் 2006, 15:04 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச விமான நிலையத்தில் இனிமேல் பயணிகளை வரவேற்கவோ, வழியனுப்பவோ உடன்செல்ல இருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இந்த புதிய சட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது. பாதுகாப்பை முன்னிட்டு இந்தப் புதியை நடைமுறை அறிமுகப்படுத்தப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். http://www.eelampage.com/?cn=30006

    • 0 replies
    • 902 views
  19. மகா ஓயா வாவியில் படகு கவிழ்ந்து இரு படையினர் பலி - பண்டார வன்னியன்- அம்பாறை மாவட்டத்தின் எல்லைப் பிரதேசமான மகா ஓயா பிரதேச வாவி ஒன்றில் மூழ்கி இரு சிறிலங்கா படையினர் பலியாகியுள்ளதாக அம்பாறைப் பொலிஸார் தெரிவித்தனர். இந்த இருவரில் ஒருவர் விசேட அதிரடிப் படையைச்சேர்ந்தவர் என்றும் மற்றையவர் ஊர்காவல்படையினைச்சேர்ந்தவர

    • 4 replies
    • 1.4k views
  20. நிதர்சனத்தில் தலையங்கம் வந்துள்ளது இது உண்மையா நோர்வே சமாதான தூதுவாருக்கு வன்னி செல்ல சிங்களம் தடை. - கொழும்பில் இருந்து நடந்துபோகுமாறு உத்தரவு. http://nitharsanam.com/?art=21642

  21. நான்கு வருட போர் நிறுத்தம் புலிகளை பலமுள்ள போர்ப்படையாக்கிவிட்டது! அமெரிக்காவில் இலங்கை இராணுவத் தளபதி தெரிவிப்பு. வாஷிங்டன் வந்திருந்த இலங்கையின் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா, கடந்த செவ்வாய்க்கிழமை, அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தில் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் நிக்கலஸ் பேர்ன்ஸ் உட்பட சிரேஷ்ட அமெரிக்க அரசியல் மற்றும் இராணுவ அதிகாரிகள் பலரைச் சந்தித்துப் பேசி, இலங்கையின் நிலைவரங்களை, குறிப்பாக பாகாப்பு மற்றும் அரசியல் நிலைவரங்களை எடுத்துக்கூறினார். தனிநாடு கேட்டுப் போராடும் தமிழீழ விடுதலைப் புலிகள்மீது சமீப சில காலமாக கடும்போக்கை வெளிப்படையாகவே தெரிவித்துவரும் நிக்கலஸ் பேர்ன்ஸுடன் இராணுவத் தளபதி நடத்திய பேச்சுகள் மிக ஆக்கபூர்வமாக இருந…

    • 4 replies
    • 1.4k views
  22. சிறார்களை உடனடியாக விடுவிக்குமாறு ஐரோப்பிய ஓன்றியம் வேண்டுகோள். சிறார்களைப் படையில் சேர்ப்பதை அனைத்துத் தரப்பினரும் உடனடியாக நிறுத்துவதுடன் முன்னர் இணைத்துள்ள சிறார்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திற்குத் தலைமை வகிக்கும் பின்லாந்து இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. சிறிலங்கா இராணுவத்துடன் இணைந்து இயங்கும் கருணா குழுவினர் சிறிலங்கா படைத்தரப்பினரின் உதவியுடன் சிறார்களை படையில் இணைத்து வருகின்றனர். சர்வதேச சிறார்கள் பாதுகாப்புச் சட்டத்தை மதித்து அனைத்து தரப்பினரும் படையில் உள்ள சிறார்களை உடனடியாக விடுக்க வேண்டும். இலங்கையில் சிறார்களுக்கு பாதுகாப்பற்ற சூழலே நிலவுகிறது என ஐரோப்பிய ஒன…

  23. முல்லைத்தீவில் கிபிர் தாக்குதல் - 1 பொதுமகன் காயம் - 3 வீடுகள் சேதம். இன்று சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட தற்காலிக குடியிருப்புகள் மீது சிறீலங்கா கிபிர் விமானங்கள் மேற்கொண்ட குண்டு தாக்குதலில் 1 பொதுமகன் காயங்களுக்கும் மற்றும் 3 வீடுகள் சேதங்களுக்கும் உள்ளானதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை தேவிபுர பகுதியிலும் 2 சிறீலங்கா கிபிர் விமானங்கள் 8 குண்டுகளை வீசியுள்ளன. இது தொடர்பில் ஏற்பட்ட சேதவிபரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. www.pathivu.com

  24. யாழ்பாணம் வல்வெட்டித்துறையில் கிரனேட்தாக்குதல் படைவீரர் பலி. யாழ்பாணம் வல்வெட்டித்துறையில் இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற கிரனேட் தாக்குதலில் பாதுகப்பு படைவீரர் ஒருவர் பலியானதுடன் மேலுமொருவர் காயமடைந்துள்ளதாக் தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் செய்தி வெளியிட்டுள்ளது. வீதி சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த படையினர் மீதே இக் கிரனேட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இத் தாக்குதலின் போது காயமடைந்த பாதுகாப்பு படை வீரர் பலாலி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. www.tamilwin.com

  25. களுத்துறை சிறைச்சாலையிலிருந்து 5 கைதிகள் தப்பியோட்டம். சிறிலங்காவின் தென்பகுதியில் உள்ள களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்து ஐந்து கைதிகள் தப்பியோடியுள்ளனர். இன்று சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் இந்த கைதிகள் தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகின்றது. தப்பியோடிய கைதிகள் ஐந்து பேரும் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தப்பியோடியவர்களை தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.