Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. திருமலையைத் தனியாக பிரித்தெடுத்து வடக்கு - கிழக்கு மாகாணங்களை பிளவுபடுத்த அரசு வகுத்துள்ள வியூகம் நாடு முழு அளவிலான யுத்தத்துக்குள் இழுத்துவிடப்பட்டுள்ளது. வடக்கு - கிழக்கைப் பிரித்து கிழக்கிற்கு தனி மாகாணத்தை உருவாக்கி அதற்காகத் தேர்தலொன்றை நடத்துவதற்காக கிழக்கில் பாரிய தாக்குதலொன்றுக்காக படைத்தரப்பு முழு அளவில் தயாராகியுள்ளது. விடுதலைப் புலிகள் வசமுள்ள வாகரையை அடுத்த சில தினங்களுக்குள் அல்லது அடுத்த ஓரிரு வாரங்களுக்குள் கைப்பற்றிவிடுவோமென இராணுவம் மீண்டும் மீண்டும் கூறிவருவதன் மூலம், எவ்வேளையிலும் வாகரையை இலக்கு வைத்து பாரிய படை நடவடிக்கை ஆரம்பமாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பாரிய படை நடவடிக்கை மூலம் திருகோணமலைக்கும் மட்டக்களப்புக்குமிடையிலான பிரத…

  2. கற்பிட்டி கடற்பரப்பில் தென்பட்ட மர்மப் படகு தொடர்பாக பொலிஸார் விசாரணை. சிலாபம் கற்பிட்டிக் கடற்பரப்பில் மர்மமான முறையில் தரித்து நின்ற மீன்பிடிப் படகு தொடர்பான விசாரணை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட பிரதேச மீனவர்கள் நேற்றுமுன் தினம் இரவு இந்த மர்மப் படகை அவதானித்து அதுபற்றிய தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்த மீன் பிடிப்படகில் வருகை தந்தவர்கள் எனக் கூறப்படும் 7 பேர் கற்பிட்டிப் பிரதேச மீனவர்களிடம் தமது படகுக்குத் தேவையான எரிபொருள்களைக் கேட்டனர் என்றும் எரிபொருள் இல்லையெனத் தெரிவித்ததையடுத்து வேறு எங்கு எரிபொருள்களைப் பெறலாம்? என்று விசாரித்தனர் எனவும் மீனவர்கள் கூறுகின்றனர். மர்மப் படகு தொடர்பான விசாரணையைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். நேற…

  3. சிறிலங்காவின் அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவரப்படும்: மகிந்த ராஜபக்ச. சிறிலங்காவின் அமைச்சரவையில் உரிய நேரத்தில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். எதிர்வரும் ஜனவரி மாதம் இரண்டாம் வாரம் இந்த மாற்றம் ஏற்படலாம் என்று ஊடகங்கள் ஊகம் வெளியிட்டள்ளன. அமைச்சர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதுடன் சில அமைச்சர்களுக்கு வேறு பொறுப்புக்களும் வழங்கப்பட உள்ளன. உல்லாசப் பயணத்துறை அமைச்சர் அனுரா பண்டாரநாயக்காவின் அமைச்சுப் பொறுப்பும் மாற்றப்படலாம் என்று தெரியவருகின்றது. www.puthinam.com

  4. நாளை முதல் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் உள்ள சகல அரசாங்க செயலகங்களும், காலை 8:15 மணிக்கு சிங்கள தேசிய கீதத்தை இசைத்து கடமைகளை ஆரம்பிக்க வேண்டும் என, றியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம உத்தரவு பிறப்பித்துள்ளார் இதேவேளை சிறீலங்கா அரசாங்கத்தின் வடக்கு மாகாணத்திற்கான ஆளுநரான, முன்னாள் காவல்துறை தலைமையதிகாரி சந்திரா பெர்னான்டோ பொறுப்பேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரது ஆளுகையின் கீழ், வடக்கு மாகாணத்திற்கான முதன்மை செயலாளராக யு.ரங்கராஜா என்ற தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநரான சந்திரா பெர்னான்டோ பொறுப்பேற்கும் வரை, பதில் ஆளுநராக தற்போதைய கிழக்கு மாகாண ஆளுநர் றியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம கடமையாற்றவுள்ளார். http://www.pathiv…

  5. தன்னம்பிக்கையோடும் மன உறுதியோடும் உலகில் உள்ள அனைத்துத் தமிழரும் ஒற்றுமையாக கை கோத்து எதிர்கொள்ள வேண்டிய ஆண்டு 2007. http://www.eelamist.com/podcast/index.php?d1=NTT&p=49 என்ன விலை கொடுத்தும் விடுதலையை வென்றெடுப்போம் என்பதை சர்வதேசத்திற்கு நிரூபிக்கும் மிக முக்கியமான ஆண்டு.

  6. யாழ் வர்த்க நிலையங்களில் சிங்களத்தில் பெயர்ப்பலகைகளை பொறிக்கச் சொல்லி மிரட்டும் படையினர். வடமராட்சி நெல்லியடிப்பகுதியிலுள்ள வர்த்தகர்களுக்க நெல்லியடி பொலிஸாரும் படையினரும் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். வர்த்தக நிலையங்களில் சிங்களத்தில் பெயர்ப்பலகைகளை பொறிக்கவேண்டும் எனவும் சிங்களத்தில் பெயர்ப்பலகை இல்லாவிட்டால் பெயர்ப்பலகைகளை முற்றாகக் அகற்றுமாறும் எச்சரித்துள்ளனர். அத்துடன் நெல்லியடி வீதிஉடாக போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களை வழிமறிக்கும் பொலிஸார் சிங்களத்தில் பெயர்ப்பலகைகளை இடுமாறும் எச்சரித்துள்ளனர். www.sankathi.com

  7. மண்டூரில் அதிரடிப்படையினரின் முன்னேற்ற முயற்சி முறியடிப்பு: 2 அதிரடிப்படையினர் பலி. மட்டக்களப்பு மாவட்டம் மண்டூர் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் முன்னேற்ற முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. இந்த முறியடிப்புச் சமரில் சிறப்பு அதிரடிப்படையினர் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மண்டூர் 38 ஆம் கிராமப் பகுதியின் உடாக இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் சிறப்பு அதிரடிப்படையினருடன் துணை இராணுவக் குழுவினரும் இணைந்து முன்னேற்ற முயற்சியினை மேற்கொண்டனர். விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த் தாக்குதலை நடத்தி அவர்களது முயற்சியினை முறியடித்துள்ளனர் www.puthinam.com

  8. துணை இராணுவக்குழு விவகாரம்: சிறிலங்கா - நோர்வே முறுகல். சமாதானப் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிக்குமாறு நோர்வே அரசு, சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது. சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் கருணா குழுவினரின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தி பேச்சுவார்த்தையை ஆரம்பிக்குமாறு நோர்வே, சிறிலங்கா அரசிற்கு தெரிவித்துள்ளது. மட்டக்களப்பில் சிறப்பு அதிரடிப் படையினரின் பதுங்கு குழிகளுக்கு அருகில் கருணா குழுவினரின் பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்றும் நோர்வே சுட்டிக்காட்டியுள்ளது. எனினும் இதற்கு சிறிலங்கா அரசு, விடுதலைப் புலிகளின் பேச்சாளர் தயா மாஸ்டரை கொழும்பில் சிகிச்சை செய்வதற்கு போதிய உதவிகளையும் பாதுகாப்பையும் வழங்கியிருந்தோம். அதைப் போல…

  9. மட்டக்களப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளை தாக்குவதற்கு முயற்சித்த சிறிலங்கா இராணுவத்தினரின் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினர் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை பின்னிரவில் மட்டக்களப்பு படுவான்கரையில் விடுதலைப் புலிகளின் பகுதிக்குள் இராணுவத்தினர் எறிகணை சூட்டாதரவை வழங்க, துணை இராணுவக்குழுவான கருணா குழுவினர் ஆழ ஊடுருவி தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதல் முயற்சிக்கு எதிராக விடுதலைப் புலிகள் பலமான பதில் தாக்குதலை தொடுத்தனர். இதனையடுத்து துணை இராணுவக்குழுவினரும் சிறிலங்கா இராணுவத்தினரும் சிதறி ஓடினர். வடமுனை காட்ப்பகுதிக்குள் சிதறி ஓடிய அவர்கள் தற்போது விடுதலைப் புலிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர். விடுதல…

  10. தமிழர் தாயக நிலம் அல்லது கடல் பிரதேசங்களிலிருந்து எண்ணை உட்பட இதர இயற்கை வளங்களைக் கண்டறிந்து பயன்படுத்துவது அல்லது சந்தைப்படுத்துவதற்கு சிறிலங்காஅரசு முயற்சிப்பதாக தெரியவருகிறது. தமிழீழ விடுதலைப்புலிகள் உடனடியாக கவனமெடுத்துச் செயல்படவேண்டியுள்ளதால் சர்வதேச நாடுகளுக்கு தமது இராஜதந்திர வழிகளிலோ அல்லது தமது வெளிநாட்டுக் கிளைகளின் ஊடான பத்திரிகை விளம்பர வாயிலாகவோ இதுவிடயத்தில் தடையுத்தரவு பிறப்பித்தல் வேண்டும். அதாவது தமிழர் பிரச்சினை தீரும் வரை எந்த ஒரு அந்நிய நாடும் தமிழர் தாயகத்திலுள்ள கனிமப்பொருட்களை விடுதலைப் புலிகளின் சம்மதமின்றி ஆராய்வதற்கோ அல்லது விற்பனைசெய்வதற்கோ சிறிலங்கா அரசுடன் ஒப்பந்தங்கள் செய்துகொள்வது தமிழ்மக்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது என்ற உத்தரவை சர்வதேசநாடு…

    • 0 replies
    • 1.2k views
  11. யாழ் குடாநாட்டில் கடத்தப்படுவோர், காணாமல் போவோர் எண்ணிக்கை அதிகரிப்பு. யாழ்ப்பாணத்தில் இருவர் கடத்தப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலை கே.கே.எஸ் வீதி நாச்சிமார் கோவிலடியைச் சேர்ந்த பெருமாள் பிரசாத் (22) என்பவரது வீட்டிற்கு சென்ற 15பேர் கொண்ட ஆயுதக்குழுவினர் இவரைக் கடத்தைச் சென்றுள்ளனர். இதேவேளை நேற்று முன்தினம் பிற்பகல் 4.00மணியளவில் வீட்டில் இருந்து யாழ் நகருக்கு சென்ற சோதிலிங்கம் ஜெனார்த்தனன் (23) கஸ்துரியார் வீதி யாழ்ப்பாணம் என்பவர் கடத்தப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை 1.00மணிக்கு இவரது வீட்டுக்கு சென்ற 20பேர் கொண்ட ஆயுதகுழுவினர் இவரது வீட்டில் சல்லடையிட்டு சோதனையிட்டுள்ளனர். இவர்கள் இருவரையும் படையினரே கடத்தியதாகவும் இவர்களது உறவினர்கள் யாழ் மனிதஉரிம…

  12. வாழும் கலை ரவிசங்கருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு கர்நாடக மாநிலம் பெங்களுரில் உள்ள வாழும் கலை ரவிசங்கரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்து பேசியுள்ளனர். இச்சந்திப்பு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியதாவது: ஈழத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண உதவும்படி ரவிசங்கரை கேட்டுக் கொண்டோம். அமைதி பேச்சுவார்த்தையை சிறிலங்கா அரசு வேண்டும் என்றே தாமதப்படுத்துவதால் அப்பாவி தமிழ் மக்கள் பலியாவது அதிகரித்து வருகிறது என்பதை சுட்டிக் காட்டி, இதை தடுத்து நிறுத்த ஆவன செய்யும்படியும் வேண்டுகோள் விடுத்தோம். எங்கள் கோரிக்கையை கேட்ட ரவிசங்கர், இலங்கை பிரச்…

  13. திருமலையில் வீதியமைப்பு என்ற பெயரில் தமிழர் பிரதேசங்களில் சிங்களவர்களை குடியமர்த்த திட்டம்! திருகோணமலை மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி என்ற பெயரில், வீதி அமைப்பு அதிகாரசபை மூலம் உயர் மட்டத்தினரால் அவசர அவசரமாக திருகோணமலை - புத்தளம் வீதியையும், திருகோணமலை - கண்டி வீதியினையும் இணைக்கும் திட்டம் அமுலாக்கப்பட்டு எட்டு கட்டங்களாக இந்த வேலைகள் துரித கதியில் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ள கொழும்பிலிருந்தே உயர்மட்ட உத்தரவுகளும், அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டுள்ளனர் எனவும், இராணுவத்தினரின் பூரண ஒத்துழைப்பும் இதற்கு முழுமையாக பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் தற்போது இராணுவத்தினர் இந்த வீதி அமைப்புக்க…

  14. திருகோணமலை மாவட்டம் மூதூர் கிழக்கு சம்பூரில் அனல் மின் நிலையம்அமைப்பதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. [sunday December 31 2006 08:34:18 AM GMT] [pathma] தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் அனல் மின் நிலையத்தை திருகோணமலை மாவட்டம் மூதூர் கிழக்கு சம்பூரில் அமைப்பதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த அனல் மின் நிலைய ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னர் இந்திய அரசு, சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு எழுதிய கடிதத்தில், சம்பூரில் அனல் மின் நிலையம் அமைப்பதை விரும்பவில்லை என்று தெரிவித்தள்ளது. இதற்கு பிரதான காரணியாக சம்பூருக்கும் திருகோணமலை துறைமுகத்திற்கும் இடையி…

  15. வடக்கு - கிழக்கு மாகாணத்திற்கு வெவ்வேறான நிதி ஒதுக்கீடு [sunday December 31 2006 08:48:30 AM GMT] [pathma] வடக்கு - கிழக்கை பிரிப்பதற்கு சிறிலங்கா உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு அமைய எதிர்வரும் 2007 ஆம் அண்டிற்கான நிதி ஒதுக்கீடு இரு மாகாணங்களுக்கும் தனித்தனியாகவே இருக்கும் என்று புதிதாக நியமிக்கப்பட்ட கிழக்கு மாகாண ஆளுநர் றியல் அடமிரல் மொகான் விஜயவிக்கிரம தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது: இரு மாகணங்களும் தற்போது தனித்தனியாக சுதந்திரமாக உள்ளன. அதனால் வடக்கு - கிழக்கு ஆளுநர் என்ற பதவி நீக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இரு திறைசேரிகள் தனித்தனியாக இயங்கும். 18 வருடங்கள் ஒன்றாக இயங்கிய இரு மாகாணங்களும் தனித்தனியாக இயங்க…

  16. வடக்கு - கிழக்கு இணைப்பு: ஐ.தே.க. யோசனை சமர்ப்பிக்கிறது. வடக்கு - கிழக்கு இணைப்புக்கு 8-10 வருடங்களுக்கு ஆதரவு வழங்கும் திட்டமொன்றை சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி சமர்ப்பிக்கவுள்ளது. எதிர்வரும் 8 ஆம் நாள் (08.01.07) நடைபெறவுள்ள அனைத்து கட்சி குழுக்கூட்டத்தில் இதனை சமர்ப்பிக்கவுள்ளதாக அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வடக்கு - கிழக்கு இணைப்புக்கு ஆதரவு தருவதுடன், மாகாணங்களின் இணைப்பை உத்தியோகபூர்வமாக்க அரசினால் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் சட்ட ரீதியான தீர்மானங்களுக்கும் எமது கட்சி ஆதரவு வழங்கும். எனினும் இந்த ஆதரவு 8-10 வருடங்கள் மட்டுமே அதாவது நிரந்தர இணைப்புக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு வழங்காது. 8 அல்…

  17. கண்காணிப்பு பணிகளை இடைநிறுத்தியதற்கு இலங்கை அரசு விளக்கம் கோர முடிவு போர்நிறுத்த கண்காணிப்பு குழு தற்போது நிலவும் யுத்த சூழலின் பின்னணியில் தனது கண்காணிப்புப் பணிகளை கடந்த 27ம் திகதி திருமலையில் இருந்தும் மறுநாள் ஏனையபகுதியில் இருந்தும் இடைநிறுத்தியமைக்கான காரணம் குறித்து, கண்காணிப்புக் குழுவிடம் நேரடியாக விளக்கம் கோருவதற்கு சிறீலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இது குறித்து இன்று அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் சிறீலங்கா தகவல் தொடர்புத் திணைக்களம், மாற்று ஏற்பாடுகள் எவற்றையும் மேற்கொள்ளாது, வடக்குக் கிழக்கில் இருந்து கண்காணிப்பாளர்கள் அனைவரையும் கண்காணிப்புக் குழு கொழும்பிற்கு மீளப் பெற்றிருப்பதாக, குற்றம் சுமத்தியுள்ளது. இதேவேளை சிறீலங்கா படைத்துறைப் ப…

  18. யாழ் பல்கலைக்கழக மாணவர்களை மிரட்டிய படைத்தளபதி. பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலைப்புலிகளிற்கு துணைபோகக் கூடாது என யாழ் குடா படைத்தளபதி டி.எ.சந்திரசிறி எச்சரிக்கை விடுத்துள்ளார். பல்கலைக்கழக துணைவேந்தர் உட்பட்ட குழுவினருடன் இரண்டாவது தடவையாக இடம்பெற்ற சந்திப்பிலேயே இவ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இச் சந்திப்பின் போது ஏ-9 நெடுஞ்சாலையை மக்கள் போக்குவரத்திற்கு திறந்துவிடுமாறும் இவ்வாறு திறந்துவிட்டால் பல்கலைக்கழக மாணவர்கள் போக்குவரத்து நெருக்கடிகளை எதிர்நோக்க மாட்டார்கள் எனவும் பல்கலைக்கழக பேராசிரியர்களால் வலியுறுத்தப்பட்டது. இதற்குப் பதிலளித்த டி.ஏ.சந்திரசிறி பாதை விடயம் தொடர்பாக ஜனாதிபதிதான் முடிவு எடுக்கவேண்டும் எனவும் ஆனால் பல்கலைக்கழக மாணவர்கள் விடுதல…

  19. சம்பூர் அனல்மின் நிலையத்துக்கான கூட்டு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்படும். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ முன்னிலையில் திருகோணமலை சம்பூரில் நிர்மாணிக்கப்படவுள்ள இரண்டாவது அனல் மின் நிலையத்திற்கான கூட்டு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்படும். இலங்கை - இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் செய்து கொள்ளப்படவுள்ள இந்த கூட்டு ஒப்பந்தத்தில் இந்திய அரசாங்கத்தின் சார்பில் மின் சக்தி மற்றும் எரிபொருள் துறை அமைச்சின் செயலாளர் ஆர்.வி. சாபி கைச்சாத்திடுவார். இந்தியாவின் தேசிய நிறுவனமான தேசிய அனல் மின்சக்தி நிறுவனத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள இந்த திட்டத்திற்கு 500 மில்லியன் டொலர்கள் முதலீடு செய்யப்படவுள்ளன. இத்திட்டத்திற்கு இந்திய அரசாங்கத்தினால் 350 அமெரிக்க டொலர்கள் கடனுதவியாக வழங்கப…

  20. வாகரையிலிருந்து புலிகளை வெளியேற்றி கிழக்கு மாகாண சபைக்குத் தேர்தல் கருணா கட்சியும் போட்டியிடும். வாகரைப் பிரதேசத்திலிருந்து விடுதலைப் புலிகளை வெளியேற்றுவதே அரசின் இப்போதைய முன்னுரிமைத் திட்டம் என்றும் அதன் பின்னர் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்திருப்பதாக "றொய்ட்டர்' செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. கிழக்கு மாகாண சபைக்குத் தேர்தல் நடைபெறும்போது விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்று இராணுவத்துடன் இணைந்து இயங்கும் கருணா குழுவின் அரசியல் கட்சியும் போட்டியிடும் என்றும் ஆய்வாளர் கருதுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளின் கோட்டையாக விளங்கும் வாகர…

    • 5 replies
    • 2.3k views
  21. மட்டக்களப்பில் தாக்குதல் முயற்சி முறியடிப்பு [சனிக்கிழமை, 30 டிசெம்பர் 2006, 14:14 ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளை தாக்குவதற்கு முயற்சித்த சிறிலங்கா இராணுவத்தினரின் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினர் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை பின்னிரவில் மட்டக்களப்பு படுவான்கரையில் விடுதலைப் புலிகளின் பகுதிக்குள் இராணுவத்தினர் எறிகணை சூட்டாதரவை வழங்க, துணை இராணுவக்குழுவான கருணா குழுவினர் ஆழ ஊடுருவி தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதல் முயற்சிக்கு எதிராக விடுதலைப் புலிகள் பலமான பதில் தாக்குதலை தொடுத்தனர். இதனையடுத்து துணை இராணுவக்குழுவினரும் சிறிலங்கா இராணுவத்தினரும் சிதறி ஓடினர். …

  22. மட்டக்களப்புக்கு இடம்பெயர்ந்தவர்களை மூதூர் தெற்கில் தங்க வைக்க ஆலோசனை வீரகேசரி வாரவெளியீடு திருகோணமலை மாவட்டத்தில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தாக்குதல் அச்சம் காரணமாக இடம்பெயர்ந்து சென்றவர்களை தற்காலிகமாக மூதூர் தெற்கில் உள்ள சில பாடசாலைகள் மற்றும் பொது இடங்களில் தங்க வைக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மூதூர் கிழக்கில் இயல்பு நிலைமை ஏற்பட்டதும் பின்னர் இவர்கள் மூதூர் கிழக்கில் நிரந்தரமாக குடியமர்த்தப்படுவார்கள். நேற்று முன்தினம் ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிறுவனப் பிரதிநிதிகள் சகிதம் நிறுவன மற்றும் அதிகாரிகள் குழுவொன்று குறித்த மூதூர் பிரதேசத்தில் உள்ள கிளிவெட்டி, பட்டித்திடல் போன்ற இடங்களில் உள்ள பாடசாலைகள், பொது இடங்களை …

  23. முல்லைத்தீவில் விமானக்குண்டு வீச்சு ஐந்து பொதுமக்கள் படுகாயம் வீரகேசரி வாரவெளியீடு முல்லைத்தீவில் இலங்கை வான்படையினரின் 2கிபீர் விமானங்கள் நேற்று நடத்திய வான் குண்டு வீச்சுத் தாக்குதலில் 5 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த வான் குண்டு வீச்சுத் தாக்குதல் சிலாவத்தைப் பகுதியில் நேற்று சனிக்கிழமை முற்பகல் 11.45 மணியளவில் நடத்தப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட ஐக்கிய நாடுகள் சபையின் பிரதித்திட்டப் பணிப்பாளரின் வீட்டில் குண்டு வீழ்ந்து வெடித்து அவருடைய வீடும் அருகில் உள்ள கத்தோலிக்க அருட் சகோதரிகளின் பெண்கள் விடுதியும் சேதமடைந்துள்ளன. இந்த தாக்குதல் காரணமாக தியோக நகர் கிராம மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இத் தாக்குதலில் விஜயகுமார் மதிமாறன் (வயது 14)…

  24. இனப்பிரச்சனைக்கான புதிய யோசனை எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் முன்வைக்கப்படும். இனப்பிரச்சனை தீர்வுக்காக இலங்கை அரசாங்கம் முன்வைக்கும் யோசனை தொடர்பாக இந்திய இலங்கை அரசாங்கங்கள் மத்தியில் இணக்கம் ஒன்று ஏற்படுத்திக்கொள்ளப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இனப்பிரச்சினை தீர்வுக்கான இலங்கை அரசாங்கத்தின் யோசனை எதிர்வரும் ஜனவரி மாதம் இறுதிக்கு முன்னர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக இந்திய வெளியுறவு அமைச்சர் பிரனாப் முகர்ஜி எதிர்வரும் 8 ஆம் திகதி இலங்கை வரும் போது இந்த விடயம் குறித்து இந்தியாவின் கருத்துக்களும் முன்வைக்கப்படவுள்ளன. இந்தநிலையில் இலங்கை அரசாங்கம் சமர்பிக்கும் யோசனை தொடர்பில் இந்திய அரசாங்கத்தின் இணக்கமும் பெற்றுக்…

  25. சிறிலங்காப் படையினரால் த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொலை அச்சுறுத்தல். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் வீட்டிற்குச் சென்ற சிறிலங்காப் படையினரும் துணைஇராணுவக்குழுவினரும் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். நேற்று முன்தினம் உவர்மலைக் கீழ் வீதியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரான துரைரட்ணசிங்கம் வீட்டிற்குச் சென்ற துணை இராணுவக்குழுவினர். இவரது வீட்டை தங்களது தொடர்பகமாக பாவிக்கப் போவதாகவும் அவ்வாறு வீட்டைத் தர மறுத்தால் வீட்டை உடைக்கப் போவதாகவும் அத்தோடு அவரை கொலை செய்வோம் எனவும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. www.sankathi.com

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.