ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143287 topics in this forum
-
வாகரைப் பனிச்சங்கேணி பாலத்தில் உக்கிரமோதல் தொடர்கிறது: கண்டலடி பாடசாலையில் 20 பொதுமக்கள் பலி! 17 பொதுமக்கள் காயம். வாகரை நோக்கி சிறீலங்காப் படையினர் மீது பிறிதொரு படைநகர்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இன்று காலை 5.30 மணியளவில் மாங்கேணிப் படைமுகாமிலிருந்து எறிகணைச் சூட்டாதரவுடன் வாகரை நோக்கியே இப்படை நகர்வு நடத்தப்பட்டுள்ளது. இருதரப்பினருக்கும் இடையே மாங்கேணிக்கும் வாகரைக்கும் இடைப்பட்ட முன்னரங்கப் பகுதியான பனிச்சங்கேணிப் பாலத்தில் உக்கிர மோதல்கள் இடம்பெறுவதாக மட்டக்களப்பு மாவட்ட துணை அரசியற்துறைப் பொறுப்பாளர் சீராளன் பதிவு இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார். மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரிடையேயான தேசவிபரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர் மேல…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஞாயிறு 10-12-2006 18:21 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] கண்டலடி, பனிச்சங்கேணிப் பால மோதலில் 12 படையினர் பலி! 51 படையினர் காயம்: 7 போராளிகள் வீரச்சாவு. திருமலை வாகரை நோக்கிய சிறீலங்காப் படையினரின் முன்னேற்ற முயற்சி விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை மாங்கேணி மற்றும் கட்டுமுறிவு படைமுகாமிலிருந்து விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகள் மீது முன்னேறிய சிறீலங்காப் படையினரை வழிமறித்து கிழக்குக் கண்டலடி, பனிச்சங்கேணி பாலத்தில் உக்கிர மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இதன்போது சிறீலங்காப் படைத்தரப்பில் 12 படையினர் கொல்லப்பட்டு மேலும் 51 படையினர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இதனிடையே இன்று கஜுவத்தை, கிரிமிச்சைக்குளம், கட்டுமுறிவுக் குளம் ஆகிய களமுனை…
-
- 0 replies
- 849 views
-
-
யுனிசெஃப்பிடம் மகிந்த சமரசிங்க விளக்கம் கோருகிறார் [ஞாயிற்றுக்கிழமை, 10 டிசெம்பர் 2006, 13:40 ஈழம்] [கொழும்பு நிருபர்] ஜக்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பிரதிநிதி அலன் றொக்கின் அறிக்கை குறித்து தமக்கு விளக்கம் அளிக்குமாறு யுனிசெஃப்பின் தலைவர் அனா வினிமாவை சிறிலங்கா மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க கோரியுள்ளார். ஜ.நாவின் சிறப்புப் பிரதிநிதி, இலங்கைக்குப் பயணம் செய்த பின்னர் சமர்பித்த அறிக்கையில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினர் சிறார்களை படையில் சேர்ப்பதற்கு சிறிலங்கா இராணுவம் உதவி செய்வதாக தெரிவித்திருந்தார். அதேவேளை ஜ.நாவின் சிறுவர்களுக்கும் ஆயுத முரண்பாடுகளுக்குமான சிறப்பு பிரதிநிதி ராதிகா குமாரசுவாம…
-
- 0 replies
- 895 views
-
-
மீண்டும் நாகர்கோவில்-முகமாலை(எழுதுமட்டுவாள்)-கிளாலி'யில் புதியதொரு இராணுவநடவடிக்கையின் அறிகுறி? விடுதலைப்புலிகளின் இராணுவப்பேச்சாளர் இளந்திரியன் தேசியத்தலைவரின் மாவீரர்தின உரைக்கு முன்பு கூறியிருந்தார், இன்னும் இரண்டு வாரத்தில் இராணுவம் தாங்களாகவே ஏ9 வீதியை திறக்காவிட்டால், தாங்கள் அதாவது விடுதலைப்புலிகள் நடவடிக்கை எடுப்பினம் என்று. இந்த கூற்றை உணர்ந்துகொண்டுதான் சிறீலங்கா இராணுவம், விடுதலைப்புலிகள் எதாவது நடவடிக்கை எடுக்க முன், தாங்களாகவே மீண்டும் ஒரு பெரிய இராணுவநகர்வுக்கு தயாராகினம்/தயாராகிவிட்டினம் போல? வாகரை நோக்கிய படைநகர்வு கூட ஒரு திசைதிருப்பும் வேலையாகக்கூட இருக்கலாம்! கிழக்கில் புலிகளுக்கு தொடர்ந்து பல நெருக்கடிகளை கொடுத்து, வடபுலத்திலுருந்து போராளிகளை…
-
- 1 reply
- 1.6k views
-
-
மேலதிக சிகிச்சைக்கு எடுத்துச் செல்ல பாதுகாப்பு அமைச்சு அனுமதி மறுப்பு. வாகரையில் சிறிலங்காப் படையினரின் எறிகணை வீச்சுத் தாக்குதலில் படுகாயமடைந்துள்ள மக்களை மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அனுமதி மறுத்துள்ளது. இது தொடர்பாக வாகரை மருத்துவமனை மருத்துவ அதிகாரியினால் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடமும் போர்நிறுத்தக்கண்காணிப்புக்
-
- 2 replies
- 991 views
-
-
போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் இணையத்தை சிறீலங்கா அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் இணையத்தளத்தில் வெளியிட்டப்பட்டுள்ள தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என சிறீலங்கா அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது இலங்கைக்கு விஜயம் செய்திருந்த நோர்வேயின் விசேட சமாதானத் தூதுவரிடம் இந்த விடயம் குறித்து சிறீலங்கா அரசாங்கம் தமது அதிருப்தியினையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தியுள்ளது போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் இணையத்தளத்தில் யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்கள் குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல்களே உண்மைக்கு புறம்பானவை என்று சிறீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது ஆரசாங்கத் தரப்பால் மேற்கொள்ளப்பட்டுள்ள யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்க…
-
- 4 replies
- 1.2k views
-
-
பலாலி ஊரெழு படைமுகாம்களில் இருந்து அதிகாலை முதல் எறிகணைத் தாக்குதல்கள். இன்று அதிகாலை 4.00 மணி முதல் யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி ஊரெழு மற்றம் வரணிப் படைத்தளங்களில் இருந்து படையினர் தொடாச்சியாக எறிகணைத்தாக்குதல்களை வன்னி பெரு நிலப்பரப்பின் மீது மேற் கொண்டுள்ளார்கள் இத்தகைய எறிகணைத்தாக்குதல்கள் காரணமாக பரீட்சைக்கு படிப்பதற்காக அதிகாலையில் எழுந்த மாணவர்கள் பாடங்களை கற்க்க முடியாது பெரும் சிரமத்திற்க்கு உட்பட்டார்கள் படைத்தரப்பினர் பரீட்சைக்காக பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகக் கூறிவிட்டு தற்போது அதி காலையிலேயே தொடர்ச்சியாக எறிகணைகளை வீசி வருவதினால் பாடங்களை ஒரு மன நிலையில் இருந்து கற்க்க முடியாத நிலை காணப்படுவதுடன் வீடுகளின் அதிர்வுகளும் பெரும் தடையாக இருப்பதாகவு…
-
- 1 reply
- 866 views
-
-
கவலை தெரிவிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் இருதரப்பிற்கும் இந்தியா ஆலோசனை கூறவேண்டும் "தினமணி' ஆசிரியர் தலையங்கத்தில் வலியுறுத்து வீரகேசரி வாரவெளியீடு இலங்கையின் இனப்பிரச்சினை தீர்விற்கு தொலைதூரத்திலுள்ள நோர்வே முயற்சித்து வரும்போது, அண்டை நாடான இந்தியா வன்முறைகள் ஏற்படும்போது வெறும் கவலையை தெரிவிப்பதோடு மட்டும் நின்று விடக்கூடாதென தமிழகத்தில் இருந்து வெளியாகும் தினமணி நாளிதழின் நேற்றைய ஆசிரியர் தலைப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. "இனப்பிரச்சினை தீர' என்று தலைப்பிட்டு எழுதப்பட்டிருக்கும் அந்த ஆசிரியர் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு: இலங்கையில் இன மோதல்கள் தொடர்ந்து வரும் சூழ்நிலையில் அதை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசு முயற்சி மேற்…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழீழம் கிடைக்கும் என்று சொன்னால் இப்போதே நாங்கள் வருவதற்குத் தயாராக இருக்கிறோம். - கலைஞர்.கருணாநிதி. இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காண்பதற்கு உரிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் சட்டப்பேரவையில் நேற்று வியாழக்கிழமை நிறைவேறியது. முதல்வர் கருணாநிதி முன்மொழிந்த இந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. பாமக தலைவர் ஜி.கே. மணி இது தொடர்பாக ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம் என்று கூறி முதல்வர் கருணாநிதி தாமே ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். இத் தீர்மானத்தின் மீது அவர் பேசியதாவது: கடந்த சில நாள்களுக்கு முன்பு டில்லி சென்றிருந்தபோது காங்கிர…
-
- 6 replies
- 2.5k views
-
-
தமிழர்களின் மனங்களை வெல்வது ` வடக்கில் ஏ9 பாதையும் கிழக்கில் ஏ15 பாதையும் இப் போது திறக்கப்படும் சாத்தியம் எதுவும் தென்படவில்லை. அதனால் யாழ்ப்பாணக் குடாநாட்டில் திறந்தவெளிச் சிறைச்சாலையில் வாடும் தமிழ்மக்களும், இராணுவ மோதல் களினால் தங்கள் சொந்த இடங்களை விட்டு பல தடவைகள் அங்கும் இங்குமாக அலைந்து அகதி முகாம்களிலும் உறவினர் கள் , தெரிந்தவர்கள் வீடுகளிலும் தஞ்சமடைந்து வாழும் வாகரைப் பிரதேச தமிழ் மக்களும் அல்லற்பட்டு அவதியுறவேண்டுமா? போதிய உணவுப் பொருள்கள் வாழ்க்கைக்குத் தேவையான ஏனைய பொருள்கள் வைத்திய வசதிகள் மற்றும் மருந்து வகை கள் கிடைக்காமல் தொடர்ந்து பேரவலத்தை அனுபவித்துக் கொண்டு தமிழர்கள் அவலப்படவேண்டியதுதானா? யாழ்ப்பாணத்திலும் வாகரையிலும் உண்டாக்கப்பட்டி…
-
- 1 reply
- 928 views
-
-
வியாழக்கிழமை 7 டிசெம்பர் 2006, 16:14 ஈழம் (புதினம் நிருபர்) இலங்கைப் பிரச்சினையை இந்தியா தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து தமிழ்நாடு சட்டசபையில் இன்று வியாழக்கிழமை சட்டசபை உறுப்பினர்கள் உரையாற்றிய போது மிகவும் ஆழ்ந்த கவலை தெரிவித்து உரையாற்றினர். இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி பதிலளித்து உரையாற்றிய போது தெரிவித்துள்ளதாவது: ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களும் தங்களது உணர்வுப் பூர்வமான கருத்துக்களை இங்கு தெரிவித்தனர். இந்த பிரச்சினை குறித்து நானும் ஏற்கனவே பேசி இருக்கிறேன். அதையே சொல்லி பிரச்சினையை தட்டிக் கழிக்க நான் விரும்பவில்லை. தமிழக மக்களின் உணர்வு …
-
- 13 replies
- 1.7k views
-
-
இலங்கை கடற்படைக்கு நாகபுரியிலிருந்து வெடிபொருள் ஏற்றிவந்த லாரி பிடிபட்டது மகாராஷ்டிர மாநிலம், நாகபுரிலிருந்து இலங்கை கடற்படைக்காக வெடிபொருள்கள் ஏற்றிச்சென்ற லாரி மதுரை மாவட்டம், மேலூரில் வியாழக்கிழமை பிடிபட்டது. நாகபுரியில் உள்ள "சோலார் எக்ஸ்புளோசிவ் லிமிடெட்' நிறுவனத்தினர் இலங்கை கடற்படையினருக்கு 40 பெட்டிகளில் அடைத்து அனுப்பிய வெடிபொருள்களுடன் ஒரு லாரி தூத்துக்குடி துறைமுகத்துக்கு சென்றது. மேலூர் அருகே வியாழக்கிழமை வந்துகொண்டிருந்த அந்த லாரியை நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு போலீஸôர் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். தகவல் அறிந்து மேலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் மாறன், மதுரை கியூ பிரிவு போலீல் ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் லாரியைப் பர…
-
- 35 replies
- 6.1k views
-
-
ஞாயிறு 10-12-2006 06:02 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] பயிற்சியை நிறைவு செய்த போராளிகள் தமது பெற்றோர்களை சந்தித்து உரையாடினர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் புதிதாக இணைந்து பயிற்சியை நிறைவு செய்ய போராளிகள் தமது பெற்றோர்களை கிளிநொச்சியில் சந்தித்து உரையாடியுள்ளனர். இந்நிகழ்வில் தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், லெப்.கேணல் ராஜன் பயிற்சிக் கல்லூரி பொறுப்பாளர் கீதன் அவர்களும் பங்கேற்றுள்ளனர். இந்நிகழ்வில் போராளிகளின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதோடு பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பரிசில்கள் வழங்கி மதிப்பளித்தார். http://www.pathivu.com/files/video/train.wmv -VIDEO-
-
- 1 reply
- 1k views
-
-
மகிந்த ராஜபக்ச ஆட்சியில் சுற்றுலாத்துறைக்கு 120 மில்லியன் டொலர் இழப்பு. சிறிலங்கா ஜனாதிபதி மகிந்தராஜபக்ச பொறுப்பேற்றதன் பின்னர் சுற்றுலாத்துறைக்கு 120 மில்லியன் டொலர் இழப்பினைச் சந்தித்துள்ளது. சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த ஆண்டு இறுதியில் பதவி ஏற்றதன் பின்னர் அதிகரித்துவரும் வன்முறைச்சம்பவங்களை அடுத்தே சுற்றுலாத்துறைக்கு பெரும் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிறிலங்காவில் தற்போது அதிகரித்துள்ள வன்முறைச் சம்பவங்களை அடுத்து சில வெளிநாடுகள் தமது பிரச்சனைகளைச் சிறிலங்காவுக்குச் செல்லவேண்டாமென அறிவுத்தல் விடுத்துள்ளன. இந்நிலையில் பிரித்தானியா தனது அகதிகள் வெள்ளைப்பட்டியலில் இருந்து சிறிலங்காவை நீக்கப்பபோவதாக முடிவெடுத்துள்ளது. …
-
- 1 reply
- 796 views
-
-
[saturday December 09 2006 07:21:38 PM GMT] [virakesari.lk] 60 ஆயிரம் ரூபா சம்பளம் எடுத்தாலும் கஞ்சியைத்தான் குடிக்கவேண்டியுள்ளது யாழ். பல்கலைக்கழக பேராசிரியரின் குமுறல் குடாநாட்டில் 60ஆயிரம் ரூபா சம்பளம் எடுத்தாலும் அங்கு கஞ்சிக்கு கூட வழியில்லாமல்தான் இருக்கிறேன் என்று யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ஒருவர் கூறுகிறார். குடாநாட்டில் இருந்து நேற்று முன்தினம் கொழும்பிற்கு வந்த அவர் அங்குள்ள நிலைமைகள் குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார். "பலநோக்கு கூட்டுறவு சங்கங்களில் மாத்திரமே அரிசி, மா, சீனி போன்றன விநியோகிக்கப்படுகின்றன. அவ்வாறு விநியோகிக்கப்படும் பொருட்கள் அனைவருக்கும் கிடைப்பதில்லை. நீண்டவரிசையில் காத்திருந்தே இவற்றை பெறவேண்டியுள்ள…
-
- 0 replies
- 767 views
-
-
. போர்நிறுத்த உடன்படிக்கையை ஒரு தரப்பினர் மீறும் போது, அதனை மறு தரப்பினர் மட்டும் பேணுவது சாத்தியமற்ற விடயம் என, தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். . தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளருக்கும், நோர்வேயின் சிறப்பு சமாதான தூதுவருக்கும் மத்தியிலான சந்திப்பு, இன்று முற்பகல் 11:00 மணிக்கு, கிளிநொச்சியில் அமைந்திருக்கும் தமிழீழ அரசியல்துறை நடுவப் பணியகத்தில் இடம்பெற்றது. . பயங்கரவாத தடைச் சட்டத்தை சிறீலங்கா அரசாங்கம் மீளவும் நடைமுறைக்கு கொண்டு வந்து, போர்நிறுத்த உடன்படிக்கையை மீறவில்லை என, நோர்வேயின் சிறப்பு சமாதான தூதுவர் ஜோன் ஹன்சன் போவர் தெரிவித்திருப்பதாக, தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். . திருமலை கல…
-
- 0 replies
- 880 views
-
-
லண்டன் குறைடன் பகுதியில் அமைந்துள்ள தமிழ் பாடசாலையின் நத்தார் விழா நடை பெற்றது. பாடசாலை விழாத்தானே என்று போனால் அங்கு எல்லாவிதமான குடிவகைகளும் அளந்து அளந்து விற்கப்பட்டன. முன்னுக்கு பிள்ளைகளின் நிகழ்ச்சிகள் பின்னுக்கு அமோக மதுபான விற்பனை கடைசியாக டிஸ்கோ லயிற் போட்டு இருட்டுக்குள் ஒரே ஆட்டம் தான். சேலைகளும் சேர்ந்து ஆட்டம்தான். நிகழ்ச்சியின் இறுதியில் அறிவிப்பாளர் மேடைக்கு வந்தார். சொன்னார் மட்டக்களப்பு மக்களின் நல்வாழ்வுக்காக ஒரு சேலை ஏலம் போடப்படும் என்று அதில் வரும் பணம் அவர்களின் நல்வாழ்வுக்காக பயன்படுத்தப்படும் என்று. நல்ல மது ஏற்றிவிட்டு நின்ற ஒருவர் 5 பவுனில் ஆரம்பித்த ஏலத்தை 40 பவுன் வரை கொண்டு சென்று தானே வாங்கினார். மற்றவர்கள் பலத்த கைதட்டல் மட்ட…
-
- 3 replies
- 1.6k views
-
-
ஞாயிறு 10-12-2006 05:46 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] கோணாவிலில் 29 மாவீரர்கள் நினைவாக நினைவுத் தூபி திறப்பு. கிளிநொச்சி கோணாவில் வித்தியாலயத்தில் இதுவரை வீரச்சாவடைந்த 29 மாவீரர்களின் நினைவாக நினைவுத் தூபி நேற்று சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/files/video/silai.wmv -VIDEO-
-
- 0 replies
- 832 views
-
-
பயங்கரவாத தடைச்சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் முடிவெடுத்த 24 மணிநேரத்துக்குள் யாழ் குடாநாட்டில் மட்டும் 13 பொதுமக்கள் கடத்தப்பட்டுள்ளனர். வலிகாமம் கிழக்கில் உள்ள கல்வியங்காடு கட்டப்பிராய் டச் வீதி ஆகிய பகுதிகளைச்சேர்ந்த 9பேர் கடத்தப்பட்டுள்ளனர். கடத்திச்சென்றவர்கள் இராணுவத்தினரும் ஈபிடிபியினரும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அதேஇரவில் வலிகாமம் வடக்கிலிருந்து மேலும் நால்வரை படையினர் கடத்திச்சென்றுள்ளனர். இதுகுறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கடத்தப்பட்டவர்களது உறவினர்கள் முறையிட்டுள்ளனர். இதேவேளை தெல்லிப்பளை அம்பனை பகுதியைச்சேர்ந்த தியாகலிங்கம் சுந்தரலிங்கம் (வயது48) என்ற வர்த்தகரை படையினரின் பாதுகாப்பில் வந்த ஈபிடிபியினர் இந்த மாதம் 3ஆம் திகதி இ ர…
-
- 0 replies
- 767 views
-
-
ஜந்து நாட்களுக்குப்பின் அழுகியநிலையில் சடலம் மீட்பு! மட்டக்களப்பு- ஏறாவ+ர், சேனைக்காட்டுப் பிரதேசத்தில் உருக்குலைந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை மீட்கப்பட்ட இந்தச் சடலம் கிரு~;ணபிள்ளை சகாதேவன் (வயது 58) என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த 29ஆம் திகதி மட்டக்களப்பு வைத்தியசாலைக்குச் செல்வதாகக் கூறி; வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற இவர் இதுவரை வீடு திரும்பவில்லை. தற்போது சடலமாகக் மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு பஸ்நிலையத்தில் வந்து இறங்கிய இவர் போதனாவைத்தியசாலையை நோக்கி நடந்தேசென்றார் எனவும் வைத்தியசாலைக்கு செல்லும் வழியிலே கோவிந்தன் வீதியில் கருணாகுழுவினரின் அரசியல்துறை அலுவலகம் இருக்கிறது. அவர்…
-
- 0 replies
- 817 views
-
-
பயங்கரவாதத் தடைச் சட்ட அமுல் குறித்த கண்காணிப்புக் குழுவின் கோரிக்கை நிராகரிப்பு! பயங்கரவாதத் தடைச்சட்டத்தை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவந்திருப்பது குறித்த, தெளிவுபடுத்துமாறு போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு கேட்டிருந்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துவிட்டது. எங்களிடம் விளக்கம் கேட்பதற்கு போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிற்கு எந்தவித உரிமையும் இல்லை. பயங்கரவாதத்தை மறுப்பதற்காக அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. கண்காணிப்புக் குழுவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு விடயங்கள் தொடர்பான அமைச்சர் ஹெக லிய ரம்புக்வெல நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட் டில் தெரிவித்தார். யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் கேள்விகளுக்கும் விசாரணைகளுக்கும் …
-
- 1 reply
- 1.1k views
-
-
சென்னை: இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் இருந்து வெடி மருந்துகள் அனுப்பப்பட்டது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கை கடற்படைக்கு, மகாராஷ்டிர மாநிலம் நாக்பரிலிருந்து வெடிபொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த லாரியை மதுரை அருகே போலீஸார் மடக்கினர். ஆனால் உரிய ஆவணங்களுடன் அந்த வெடிபொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டதால், போலீஸார் அதை அனுமதித்தனர். தூத்துக்குடியிலிருந்து கடல் மார்க்கமாக இந்த வெடிபொருட்கள் இலங்கைக்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் போலீஸாரிடம் தெரிவிக்கப்பட்டது. இலங்கையில் உள்ள ரக்சமாவல்சாரா கடற்படை வெடிபொருள் கிடங்கின் முகவரிக்கு இந்த வெடிபொருட்கள் அனுப்பப்பட்டுள்ள…
-
- 1 reply
- 1.6k views
-
-
வாகரையில் புலிகள் படையினர் மீண்டும் கடும் மோதல் இடம்பெற்றுவருகின்றன [Friday December 08 2006 09:57:55 AM GMT] [யாழ் வாணன்] மட்டக்களப்பு வாகரைப்பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் இடையில் மீண்டும் நேற்றிரவு முதல் கடும் மோதல் இடம்பெற்றுவருகின்றன விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான வாகரையின் தென்மேற்க்கு பகுதியில் உள்ள கட்டு முறிப்பு பகுதியில் 5கிலோமீற்றர் தூரம் முன்னேறியுள்ளதாக புலிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் தாம் பதில் தாக்குதல் நடத்திவருவதாக இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர் . இன்று காலையில் அந்த பகுதியில் ஷெல் தாக்குதல் சத்தங்கள் கேட்டுகொண்டிருப்பதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன
-
- 12 replies
- 4.2k views
-
-
இந்தியாவில் இருந்து யாழ்குடாநாட்டுக்கு அத்தியாவசிய பொருட்கள். யாழ் குடாநாட்டிற்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களை இந்தியாவில் இருந்து தருவிப்பதற்கான ஏற்பாடுகள் பூர்தி அடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது தற்போது தமிழ் நாட்டில் உள்ள துறை முகத்தில் தரித்துள்ள கப்பலில் 10 000 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் ஏற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அடுத்த வாரம் இந்த கப்பல் காங்கேசந்துறை துறைமுகத்தை சென்றடையும் என ஸ்ரீலங்கா அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. www.pathivu.com
-
- 1 reply
- 1.2k views
-
-
கருணா ஒட்டுக் கூலிக்குழுவின் சிறுவர் துஷ்பிரயோகம் அம்பலம். சிறீலங்க அரச படைகளின் ஆதரவுடன் கருணா குழு எனப்படும் துணை ஆயுதக் குழு கிழக்கு மாகாணத்தில் நூற்றுக்கணக்கான சிறுவர்களை படையணியில் சேர்த்த வரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவை தளமாக கொண்டுள்ள சர்வதேச உறவுகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது சர்வதேச உறவுகள் நிலையத்தின் வெளிநாட்டு கொள்கைகள் தொடர்பான ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது கிழக்கு மாகாணத்தில் சிறுவர்களை படையணியில் சேர்க்கும் கருணா குழுவின் செயல்பாடுகளுக்கு ஸ்ரீலங்கா அரச படைகள் துணை புரிவதாகவும் சில சந்தர்ப்பங்களில் நேரடியாக சிறுவர்களை கடத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகமும் அந்த அறிகையில் சுட்…
-
- 0 replies
- 1.2k views
-