ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143497 topics in this forum
-
அனல்மின் நிலையம் நிறுவப்பட இருப்பதை கண்டித்து நுரைச்சோலை ஆர்ப்பாட்டம் சிறீலங்கா அரசாங்கத்தால் கடந்த செப்ரெம்பர் மாதமளவில் ஆக்கிரமிக்கப்பட்ட மூதூர்கிழக்கு சம்பூர்பகுதியில், அனல்மின் நிலையம் அமைப்பதற்கான உடன்படிக்கையில் இந்தியா கைச்சாத்திடும் எனக் கூறப்படுகிறது. இதேவேளை சீனாவின் உதவியுடன் புத்தளம் நுரைச்சோலையில், அனல்மின் நிலையம் நிறுவப்பட இருப்பதை கண்டித்து, நுரைச்சோலை மான்புரிப்ப குதியில் கண்டனப் பேரணியொன்று இடம்பெற்றுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 883 views
-
-
தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பு – ரெலிக்கொம் நிறுவன தொழிற்சங்க கூட்டமைப்பு ரெலிக்கொம் நிறுவன தொழிற்சங்க கூட்டமைப்பு தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், அதன் தலைவர் அனுரா பெரேரா தெரிவித்துள்ளார். வெளிநிறுவனங்களில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை பணிக்கு அமர்த்துவது ,உரிய முறையில் பதவி உயர்வுகள் வழங்கப்படாமை மற்றும் ஊதியம் அதிகரிக்கப்படாமை என்பவற்றை காரணமாக கூறி தொழிற்சங்கங்கள் இந்த பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளன. இதேவேளை இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் பொருட்டு நாளை தொழில் ஆணையாளருடன் பேச்சுக்கள் இடம்பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;uc…
-
- 0 replies
- 683 views
-
-
இன முரண்பாடுகளை தீர்பதற்கு இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் - சிறி ரவிசங்கர் இலங்கையில் கடந்த இரு தசாப்தங்களாக தொடரும் இன முரண்பாடுகளை தீர்பதற்கு இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியாவின் ஆன்மீக தலைவர்களின் ஒருவரான சிறி ரவிசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று தமிழகத்தில் நடைபெற்ற ஆத்மானந்த உற்சவம் எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஸ்ரீரவிசங்கர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார். இலங்கை அரசாங்கமும் தமிழீழ விடுதலைப்புலிகளும் இலங்கை இனப்பிரச்சினை தீர்வு முயற்ச்சியில் இந்தியா ஈடுபட வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்ற போதிலும் இந்திய அரசாங்கம் இலங்கை இனப்பிரச்சினை தீர்வு முயற்ச்சியில் இருந்து விலகி இருப்பது ஏன் என்று தெரியவில்லை எ…
-
- 9 replies
- 1.8k views
-
-
விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தல் - அமைச்சரவை தீர்மானம் தமிழீழ விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது குறித்த அமைச்ரவை தீர்மானம் ஒன்று எதிர்வரும் புதன் கிழமை வெளியிடப்பட்டவுள்ளது இத் தீர்மானத்தின் மூலம் விடுதலைப்புலிகளை தடை செய்வதற்கு பதிலாக அவர்களுடன் சர்வதேச சமூகம் கொண்டிருக்கும் தொடர்புகளை முற்றாக தடுப்பதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சமாதான செயலக பணிப்பாளர் பாலித கோகன் தெரிவித்துள்ளார் இதன் மூலம் வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் உள் நாட்டு வெளிநாட்டு தொண்டர் அமைப்புகளின் பிரதிநிதிகள் விடுதலைப்புலிகளை சந்திப்பதையும் அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தவதையும் ஸ்ரீலங்கா அரசாங்கம் தடை செய்யவுள்ளது இதன் ஒரு கட்டமாக நோர்வ…
-
- 2 replies
- 1k views
-
-
திருமலையில் குடும்பப் பெண் சுட்டுக்கொலை [திங்கட்கிழமை, 4 டிசெம்பர் 2006, 05:12 ஈழம்] [திருமலை நிருபர்] திருகோணமலை பாலையூற்றில் குடும்பப் பெண் ஒருவர் அடையாளம் தெரியாத நபாகளினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார
-
- 0 replies
- 698 views
-
-
விடுதலைப் புலிகளுக்கு பொருளாதார சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்: ரணில் [திங்கட்கிழமை, 4 டிசெம்பர் 2006, 07:25 ஈழம்] [து.சங்கீத்] இந்தியப் பயணத்தை மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, இலங்கை அமைதி முயற்சிகளின் அடிப்படை, போர்நிறுத்த நிறுத்த ஒப்பந்தமே என்று, இந்திய முகாமைத்துவ கற்கை நிலையத்தில் நடைபெற்ற சமாதான முயற்சிகள் தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும் போது கருத்து வெளியிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளும் அரசாங்கமும் போரை அரம்பிப்பதற்கு தயார் நிலையில் இருக்கிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. இந்த நிலையில் மாற்றம் வேண்டும். இதை மாற்றியமைப்பதற்கு சர்வதேசம் உடனடியாக முன்வரவேண்டும் என்றும் குறிப்பிட்டார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பொருளாதார மற…
-
- 0 replies
- 740 views
-
-
ராமநாதபுரம்: இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு 6 மாதத்தில் தீர்வு காண வேண்டும் என அந்நாட்டு அரசுக்கு இந்தியா கெடு விதிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழர்களின் பிரச்சினை குறித்து சட்டசபையில் விவாதம் நடைபெற வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்தும் பேச வேண்டும். இங்கு விவாதிக்காமல் அப்பிரச்சிøயை வேறு எங்குமே விவாதிக்க முடியாது. சமீபத்தில் கடலூருக்கு வந்த அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டன் கூட, அயர்லாந்து, போஸ்னியா பிரச்சினைகளுக்கு அமைதித் தீர்வு காணப்பட்டது போல இலங்கைப் பிரச்சினைக்கும் அமைதியான, சுமூக தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவித்தார். இதை…
-
- 8 replies
- 1.9k views
-
-
வாகரையில் கர்ப்பிணித்தாய் ஆபத்தான நிலையில். - பண்டார வன்னியன் Sunday, 03 December 2006 16:37 மட்டக்களப்பு வாகரை மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ள நான்கு நோயாளிகளில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என வாகரை மருத்துவ மனை வட்டாரம் தெரிவித்துள்ளன. வாகரை மருத்துவமனையில் படையினரின் எறிகணைத் தாக்குதல்களின் காயமடைந்த மூன்று பேரும் காப்பிணித்தாய் ஒன்றும் அவசர சிகிச்சைக்காக மாங்கேணி படைமுகாம் ஊடாக மட்டக்களப்பு நகருக்கு எடுத்துச் செல்வதற்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச தன்னார்வத்தொண்டு நிறுவனங்களிடம் கோரப்பட்டிருந்தது. இந்த நோயாளிகளை மேலதிக சிகிச்சைக்கு எடுத்துச் செல்வதற்கு சிறிலங்காப் படையினர் தொடர்ந்தும் தடைவிதித்துள்ளனர். இதனால் கர…
-
- 1 reply
- 1k views
-
-
விமானக் குண்டு வீச்சு நடத்திய போது சர்வதேசம் கண்டிக்கவில்லை- ஆகவே விடுதலைப் புலிகளை தடை செய்யலாம்: விமல் வீரவன்ச விமானக் குண்டு வீச்சு நடத்திய போது சர்வதேசம் கண்டிக்கவில்லை- ஆகவே விடுதலைப் புலிகளை தடை செய்யலாம் என்று ஜே.வி.பி. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் நிப்போன் ஹோட்டலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர் மாநாடு நடத்தியது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு விமல் வீரவன்ச தெரிவித்துள்ளதாவது: இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது இராணுவ தலைமையகத்திற்குள் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட போதே அரசாங்கம் விடுதலைப் புலிகளை தடைசெய்து போர்நிறுத்த உடன்படிக்…
-
- 2 replies
- 951 views
-
-
சிறீலங்கா ஐனாதிபதி எதிர்கட்சி தலைவர் ரணில் நாளை சந்திப்பு. சிறீலங்கா ஐனாதிபதி மகிந்த ராஐபக்ஸவும் எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரம சிங்கவும் நாளை சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பிலும், மற்றும் நாட்டின் அபிவிருத்தி தொடர்பில் கலந்து விவாதிப்பதற்காக அலரி மாளிகையில் சந்திக்கவுள்ளார்கள். இச் சந்திப்பு அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுவதற்கு ஒருநாள் முன்னதாக இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. இச் சந்திப்பில் சுதந்திரக்கட்சின் சார்பில் ஐனாதிபதி மகிந்த ராஐபக்ஸ, பிரதம மந்திரி ரட்ணசிறி விக்கிரமநாயக்க, சுகாதார அமைச்சர் நிமால்சிறிபால டி சில்வா, விவசாய அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவ…
-
- 0 replies
- 673 views
-
-
கிளிநொச்சி - கொழும்பு - புதுடில்லிஇடையில் சென்னை -(பீஷ்மர்) சென்ற வாரம் ஈழத் தமிழர் உரிமைப் போராட்ட வளர்ச்சிப் போக்கில் இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன. இவை இரண்டுமே கிளிநொச்சி- கொழும்பு- சம தலைமை நாடுகள் என்ற கோட்டின் ஓட்டத்துக்குள் நின்று விடுமோ என்ற ஐயத்துக்குள்ளாகியிருந்த இப் பிரச்சினையின் பரிமாணத்தை தீர்மானிக்கும் பிரதான சக்தி சமதலைமை நாடுகளிலும் பார்க்க புதுடில்லிக்கே உரியது என்பது இராஜதந்திர முறைமையில் நிலைநாட்டப்பட்டது. இது ஒரு நிலையாக இன்னொரு நிலையில் மாவீரர் தின உரையில் விடுதலைப் புலிகளின் தலைவர் நிர்ணய பலமுள்ள ஒரு வாக்கியத்தை பயன்படுத்தியுள்ளார். " சிங்கள பேரினவாதத்தின் கடுமையான போக்கு, தனியரசு என்ற ஒரேயொரு பாதையைத்தான் இன்று தமிழீழ மக்களுக்கு திற…
-
- 0 replies
- 949 views
-
-
நோர்வே ராஐதந்திரிகளின் வன்னிக்கான பயணங்களை உடன்நிறுத்துக - பாலித கோகன்ன தெரிவிப்பு. அண்மைய நாட்களில் திட்டமிடப்பட்டிருந்த நோர்வே ராஐதந்திரிகளின் வன்னிக்கான பயணங்களை உடன்நிறுத்துமாறு தான் அவர்களை கோரியிருப்பதாக சிறிலங்கா அரசின் சமாதான செயலகத்தின் தலைவர் பாலித கோகன்ன தெரிவித்துள்ளார். ஏற்கனவே அரசபிரதிநிதிகளை சந்தித்து பேச்சு நடத்தியிருந்த சிறப்பு சமாதான தூதுவர் ஹன்சன் போவர் நாளை 4ம் திகதி கிளிநொச்சிக்கு விஜம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் செவ்வாய்க்கிழமை வரவிருப்பதாக கொழும்பு ஊடகங்கள் தெரிவித்திருந்தன. விடுதலைப்புலிகளுடனான உறவை தாம் மீள் பரிசீலனை செய்வதாகவும் தாம் ஒர் முடிவை மேற்கொள்ளப்போவதாகவும் ஆதலினால் அங்கு செல்ல வேண்டாம் என்ற…
-
- 14 replies
- 2.4k views
-
-
வவுனியாவில் வழமைக்கு மாறாக படையினர் குவிப்பு. வவுனியா நகர்ப்பகுதியில் வழமைக்கு மாறாக அதிகளவான சிறிலங்காப்படையினர் குவிக்கப்பட்டு சோதனைக் கெடுபிடிகளும் அதிகரித்துள்ளன இதே வேளை மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கெண்டு வருகின்றனர். குறிப்பாக வவுனியா மன்னார் வீதி மற்றும் இதர வீதிகள் என்பவற்றில் 50மீற்றர் இடைவெளிக்கு ஒரு காவலரண் என்ற விகிதத்தில் புதிய காவலரண்கள் அமைக்கப்பட்டு வீதி ரோந்து நடவடிக்கைகளிலும் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் திடீரென பயணிக்கும் வாகனங்களை மறித்து சோதனை இடுவதுடன் மக்களையும் விசாரணைக்குட்படுத்தி வருகின்றனர். மன்னாரில் இருந்து வவுனியா நோக்கி நோயளர்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த நோயாளர் காவு வண்டி கூட சோதனைக்கு உட்படுத்தப்ப…
-
- 0 replies
- 982 views
-
-
(ஞாயிற்றுக்கிழமை, 3 டிசெம்பர் 2006, 16:29 ஈழம்) (ந.ரகுராம்) இலங்கை விவகாரத்தில் படைகளில் சிறார் சேர்க்கப்படுவதை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் ஏனைய மனிதாபிமான விடயங்கள் குறித்தும் பரவலான பார்வையை ஐக்கிய நாடுகள் சபை கவனம் செலுத்த வேண்டும் என்று அதன் சிறப்புத் தூதுவர் அலென் றொக்ஸ் தெரிவித்துள்ளார். படைகளில் சிறார் சேர்க்கப்படுதுடன்இ சிறார் கொல்லப்படுவது, அவர்களுக்கான மனித உரிமைகள் மறுக்கப்படுவது போன்றவை குறித்து ஐ.நா கவனம் கொள்ள வேண்டும் என்றார் அவர். சிறிலங்காவுக்கு கடந்த நவம்பர் மாதம் வருகை மேற்கொண்ட றொக்ஸ், சிறிலங்கா பாதுகாப்புப் படையின் பாதுகாப்பில் உள்ள பகுதிகளில் குழந்தைகள், சிறார்களின் நிலைமை குறித்து பார்வையிட்டார். சிறிலங்கா துணை இராணுவக் குழு…
-
- 1 reply
- 1.1k views
-
-
தீர்வுத்திட்ட நகல் வரைபு புதன்கிழமை சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவிடம் கையளிப்பு! தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக நிபுணர்கள் குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள நகல் திட்டம் எதிர்வரும் புதன்கிழமை சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவிடம் கையளிக்கப்படவுள்ளன. நிபுணர்கள் குழுவினரால் தயாரிக்கப்பட்டுள்ள தீர்வு நகலை சர்வகட்சி பிரதிநிதிகள் குழு ஆராய்ந்து மேலதிக விடயங்களை சேர்ப்பது குறித்து இறுதி முடிவினை மேற்கொள்ளும். உலக வர்த்தக மையத்தில் புதன்கிழமை இந்நகல் திட்டத்தை நிபுணர்கள் குழு சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவிடம் சமர்ப்பித்த பின்னர் இரு குழுக்களுக்குமிடையே மற்றுமொரு சுற்றுப் பேச்சுவார்த்தையும் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அண்மையில் இந்திய…
-
- 0 replies
- 857 views
-
-
மகிந்தவுடன் படமெடுக்க மறுத்த மன்மோகன். சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இந்தியா சென்றிருந்தபோது, அவருடன் படமெடுக்க இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மறுத்துள்ளார். அரச மாளிகையில் மகிந்தவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது நிழற்படங்களோ, ஒளிப்படங்களோ எடுக்க அனுமதிக்க வேண்டாம் என மன்மோகன் சிங் அதிகாரிகளுக்கு கட்டளை பிறப்பித்திருந்ததாக அறியப்படுகிறது. சிறிலங்காவின் போக்கிலும் அதன் தற்போதைய நிலைமையிலும் இந்தியா அதிருப்தி கொண்டுள்ளதையே இது காட்டுவதாக அவதானிகள் கூறுகின்றனர். வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்து இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக முதல்வர் மு.கருணாநிதி மத்திய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து வ…
-
- 6 replies
- 2.1k views
-
-
சிறிலங்கா அரசின் ஆயுதக்கொள்வனவில் மில்லியன் கணக்கான டொலர் ஊழல் [ஞாயிற்றுக்கிழமை, 3 டிசெம்பர் 2006, 13:36 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா அரசின் அண்மைய மிகப்பெரிய ஆயுதக்கொள்வனவில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டிருக்கிறது. தற்போது அரச வான்படைக்கு பல மில்லியன் ரூபாய் அல்லது டொலரில் நான்கு மிக்-27 ரக விமானங்கள், வேறு ஏழு விமானங்கள் வாங்கியது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. சிறிலங்கா வான்படை சார்பில் சிறிலங்கா அரசுக்கும் உக்ரெய்ன் நாட்டுக்கும் சொந்தமான உக்ரின்மார்ஷ் என்ற நிறுவனத்துக்கும் இடையில் நடைபெற்ற கொள்வனவு அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தமாக நடைபெறும். வழக்கமாக இத்தகைய பெரும் கொள்வனவுகளைச் செய்வதற்கு முன்னதாக பல த…
-
- 0 replies
- 805 views
-
-
டெல்லி: ரோந்துப் பணியில் இலங்கை கடற்படையுடன் ஒருங்கிணைந்து இந்திய கடற்படை செயல்படும் என கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் சுரேஷ் மேத்தா கூறியுள்ளார். இலங்கையும், இந்தியாவும் இணைந்து பாக் ஜலசந்திப் பகுதியில் கூட்டு ரோந்து மேற்கொள்ள இலங்கை அதிபர் ராஜபக்ஷே விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் இக்கோரிக்கையை இந்தியா ஏற்க மறுத்து விட்டது. தமிழக அரசியல் கட்சிகளின் கடும் நெருக்கடி காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் ரோந்துப் பணியில் இலங்கை கடற்படையுன் இந்திய கடற்படை ஒருங்கிணைந்து செயல்படும் என கடற்படை தலைமைத் தளபதி சுரேஷ் மேத்தா அறிவித்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை விவகாரத்தில் தலையிட இந்திய கடற்படைக்கு எந்த அதிகார¬…
-
- 5 replies
- 2.1k views
-
-
http://head-line.blogspot.com/ * How Gotabhaya Rajapakse escaped death - D.B.S. Jeyaraj * வெள்ளவத்தையில் எட்டுத்தமிழர் கைது - உதயன் * காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைக்க இந்திய அரசு சுமார் 230 கோடி ரூபாவை இலங்கை அரசுக்கு வழங்கவுள்ளது. - TamilWin * அம்பாறை திருக்கோவில் பகுதியில் மூவர் சுட்டுக்கொலை. - சங்கதி * 4 suspects held in suicide attack on Lanka Defence Secy. - Hindu, India * தீவகத்தில் கடற்படையினர் ஒத்திகை. - சங்கதி * Sri Lankan Kfirs bomb Mullaithivu civilian settlements - LTTE Peace Secretariat * Widen focus beyond child soldiers to humanitarian issues, Rock tells UN - TamilNet * விடுதலைப் புலிகளின் படைபலத்தை பலவீனப்படுத்த வேண்டும்: சரத் …
-
- 0 replies
- 941 views
-
-
சிறிலங்கா அரசால் அண்மைக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உக்ரெயினில் இருந்தான பாரிய வான்கலங்கள் கொள்வனவில் பல மில்லியன் டொலர் பெறுமதியான ஊழல் இடம்பெற்றிருக்கிறது என கொழும்பில் இருந்து வெளியாகும் சண்டே ரைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த யூலை 26 ல் கைச்சாத்திடப்பட்ட சிறீலங்கா வான்படைக்கான வான்கலக் கொள்வனவில் பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் ஊடாக 4மிக் விமானங்களுக்கான கொள்வனவு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. 2000 ஆண்டு காலப்பகுதியில் கொள்வனவு செய்யப்பட்ட அதே வான்கலங்கள் பலமடங்குவிலையில் இப்போது கொள்வனவு செய்யப்படுகிறது. ஆனால் இவ்விமானங்கள் ஒரே காலப்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டவையாகும். கடந்த பல ஆண்டுகளாக தரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்ட இவ்விமானங்களுக்கு ம…
-
- 2 replies
- 1.4k views
-
-
(ஞாயிற்றுக்கிழமை, 3 டிசெம்பர் 2006, 06:43 ஈழம்) (கொழும்பு நிருபர்) சிறிலங்கா அரசாங்கம் போர் மூலமே தீர்வென்று கூறினால் அதற்கு நாங்களும் தயாராகவே உள்ளோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை வெளிவந்த வீரகேசரி வார வெளியீட்டுக்கு அவர் வழங்கிய பேட்டி: கேள்வி: சர்வதேச அனுசரணையுடன் சர்வதேசமும் சிறிலங்கா அரசும் விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்தால் பேச்சிற்கு செல்வீர்களா? பதில்: எமது தலைவர் சிறிலங்கா அரசின் முழுமையான பக்கங்களையும் பார்த்து அவர்களினால் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படாது என்பதன் பின்பு நாங்கள் தனியரசை நிறுவுவதை தவிர வேறு வழியில்லை என்பதை தெர…
-
- 6 replies
- 1.6k views
-
-
மட்டக்களப்பு- கிரான் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கருணாகுழுவினரால் கடத்தப்பட்டுள்ளார். சிவபாதம் சிவரூபன் (வயது18) என்பவரே கருணாகுழுவினரால் கடந்த 28ம் திகதி கடத்தப்பட்டவராவார். கடந்த 28ஆம் திகதி மாலை ரியூசன் வகுப்புக்குச் சென்றுவிட்டு கிரானிலுள்ள தனது வீட்டுக்குச் சென்றுகொண்டிருக்கும் போது 2மோட்டார் சைக்கிளில் வந்த கருணாகுழு உறுப்பினர்கள் இவரை அடித்து பலவந்தமாக ஏற்றிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக இவரின் பெற்றோர் ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரியவருகிறது. வியாபார நிமித்தமாக கடைக்குச் சென்றபோது தனது சகோதரன் கருணாகுழுவினரால் கடத்திச்செல்லப்பட்டதை நேரில் கண்டதாகவும் சகொதரனைக் கடத்திச்சென்ற நால்வரில் ஒருவரைத் தவிர ஏனைய மூவருக்கும் சுமார் 15தொடக்க…
-
- 0 replies
- 838 views
-
-
விசேட அதிரடிப்படையினரும் உடந்தை! அம்பாறை- விநாயகபுரத்திலுள்ள சக்தி வித்தியாலயத்தின் வாசலில் வைத்து குடும்பஸ்தர்கள் மூவர் கருணாகுழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை இரவு 9மணியளவில் இரவு உணவை அருந்திவிட்டு இவர்கள் படுக்கைக்குத் தயாரானபோது – அம்பாறை விசேட அதிரடிப்படை முகாமின் முக்கிய அதிகாரியான ஜெயதிலக என்பவரும் அவருடன் மோட்டார்சைக்கிளில் வந்த நான்கு அதிரடிப்படை சிப்பாய்களும் இம்மூவரது வீடுகளுக்கும் சென்று இவர்களை விநாயகபுரம் வித்தியாலய பகுதிக்கு அழைத்துக்கொண்டு சென்றுள்ளனர். வித்தியாலய வாசலில் சுமார் ஒரு மணித்தியாலம் வரை இக்குடும்பஸ்தர்கள் மூவரையும் வைத்து விசாரித்து அவர்கள் மீது கொட்டன்களாலும் பைப்களாலும் தாக்குதலைமேற்கொண்டு விட்டுச் செ…
-
- 0 replies
- 726 views
-
-
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருந்து விலக நேரிடும் - ஐக்கிய தேசியக் கட்சி. ஐக்கிய தேசிய கட்சி, அரசாங்கம் தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளவிட்டால் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருந்து விலகி நேரிடும் என தெரிவித்துள்ளது. வடக்கு கிழக்கு பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை தெளிவில்லாது இருப்பதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, இரத்தினபுரியில் நேற்று இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே தெரிவித்தார். அரசாங்கம் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளதாகவும், அரசாங்கத்துடன் தேசிய செயற்திட்டம் ஒன்றுக்கு ஒத்துழைப்பு வழங்கிய போதும் தாம் அரசாங்கத்தின் பங்காளிகள் அல்ல என்றும் திஸ்ஸ அத்தநாய…
-
- 0 replies
- 639 views
-
-
Army Commander Lt Gen Sarath Fonseka has admitted in the United States last week that the military had had to sacrifice about 300 soldiers within a week-and-a-half of battle in Muhamalai. It was a larger figure than had ever been cited by the military in Sri Lanka following the Muhamalai battles. `However, engaging in such battles was necessary in order to deny the LTTE strategic advantage into security forces controlled areas, as they were seeking to do recently by trying to retake the Jaffna peninsula,` Fonseka is reported as telling US Under-Secretary of State Nicholas Burns on Tuesday. Fonseka was on a three-day official visit to the US. He met Burns…
-
- 1 reply
- 1.3k views
-