ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
மனித உயிர்களுக்கு மதிப்பில்லாத நாடு.....? இலங்கையில் சுமார் கால் நூற்றாண்டு காலமாகத் தொடரும் உள்நாட்டுப் போரில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை சுமார் 65 ஆயிரம் என்று ஒரு கணக்கு பல வருடங்களாகக் கூறப்பட்டு வருகிறது. உண்மையில் அந்த எண்ணிக்கை சரியானதல்ல என்பதே எமது நம்பிக்கை. இதை விடவும் கணிசமானளவுக்கு கூடுதல் எண்ணிக்கையானவர்கள் பலியாகியிருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. உலகில் இன்று இடம்பெறுகின்ற உள்நாட்டுப் போர்களில் அப்பாவிக் குடிமக்களைப் படுமோசமாகப் பாதிக்கின்றவற்றில் ஒன்றாக இலங்கை நெருக்கடியைக் குறிப்பிட முடியும். மனித உயிர்களுக்கு மதிப்பில்லாத ஒரு நாடாக இலங்கை மாறிவிட்ட அவலத்தை காணக்கூடியதாக இருக்கிறது. வடக்கு- கிழக்கு நெருக்கடிக்கு தீர்வொன்று காணப்பட்ட…
-
- 2 replies
- 1.4k views
-
-
பாதை திறப்பு விடயத்தில் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் -தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஏ9 வீதி விவகாரம் பேச்சுக்குரியதல்ல. அது இயல்பாக நடைமுறைப்படுத்தப்படவேண்டிய
-
- 1 reply
- 1.1k views
-
-
வவுனியாவில் நடந்த கிளேமோர் தாக்குதலில் 3 பேர் பலி வவுனியாவில் கிளேமோர் தாக்குதலில் மூவர் பலி இலங்கையின் வடக்கே வவுனியா குட்செட் வீதியில் இன்று காலை 11 மணியளவில் படையினர் மீது நடத்தப்பட்ட கிளேமோர் சைட் சார்ஜர் வெடித்தாக்குதலில்; இராணுவச் சிப்பாய் ஒருவர், ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள், ஊர்காவல் படைச்சிப்பாய் ஒருவர் உட்பட 3 பேர் காயமடைந்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் இருந்த குடும்பப் பெண் ஒருவர் அதிர்ச்சி காரணமாக மரணமாகியதாகவும் பொலிசார் தெரிவித்தனர். வவுனியாவில் இருந்து நாட்டின் தென்பகுதிக்குச் செல்லும் வாகனங்களைச் சோதனையிடும் சோதனை நிலையத்திற்கு அருகாமையில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்தச் சம்பவம் நடைபெற்ற இடத்தில் சென்று…
-
- 4 replies
- 2.7k views
-
-
தென்னிலங்கையின் புதிய தலைநகரமாக அம்பாந்தோட்டை தென்னிலங்கையின் நிறைந்த நீர்வளமும் அனைத்து மூலவளங்களும் கொண்ட சிறந்த நகரமாக அம்பாந்தோட்டை விளங்குவதால் அதை "டீப் செளவுத்" என்றழைக்கப்படும் தென்மேற்கு மற்றும் மத்திய பகுதிகளை உள்ளடக்கிய பிரதேசத்தின் தலைநகரமாக அதை அறிவிக்கவேண்டும் என பிரதியமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஆபிரிக்க-சிறிலங்கா இணை நீர்த்தாங்கி விநியோக திட்டத்திற்கமைய அமைக்கப்பட்ட நீர்விநியோக மையத்தைத் திறந்துவைத்து உரையாற்றிய பிரதியமைச்சர், "மகிந்த சிந்தனை" யின் திட்டத்திற்கமைய, மசிபம்பன நீர்த்திட்டம் தென்னாபிரிக்காவில் முன்னெடுக்கப்படும் அதேவேளை, சிறிலங்காவும் தனது பூரண ஒத்துழைப்பை வழங்கி, அம்பாந்தோட்டையிலும் பரஸ்பரம் நீர்த்தாங்கிகளை அமைக்கும்…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஆபத்தான நிலையில் மகசீன் சிறைச்சாலையில் தமிழ்க் கைதிகள் தமிழீழ விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்படும் 56 தமிழ் இளைஞர்கள், களுத்துறை சிறைச்சாலையிலிருந்து மகசீன் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் மாற்றப்பட்டதையடுத்து, மகசீன் சிறைச்சாலையில் உள்ள சிங்கள கைதிகளும் காடையர்களும், புலிகளை அங்கு அழைத்து வந்துள்ளதாகத் தெரிவித்து, கடும் எதிர்ப்புக் காட்டி வருகின்றனர். நேற்றுக்காலை மகசீன் சிறைச்சாலை சுவர்களில் விடுதலைப் புலிகளையும் தமிழ் மக்களையும் மிகவும் கொச்சைப்படுத்தும் மிரட்டல் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன. இந்த கைதிகள் மற்றும் காடையர்களால், தமிழ் இளைஞர்கள் கொலை செய்யப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. விடுதலைப் புலிகள் என்ற சந்தேகம் மட்டுமே உள்ள இந்…
-
- 0 replies
- 963 views
-
-
கிழக்கு மாகாணத்தில் இனரீதியான மக்கள் தொகை என்ன? கிழக்கு மாகாணத்தின் இன ரீதியான மக்கள் தொகையின் அளவு பற்றிய பல கணக்குகள் காட்டப்படுகின்றன. குடிசனத் தொகை மதிப்பீடு கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக சரியான முறையில் நடத்தப்படாத நிலையில் ஒவ்வொருவரும் தமது அபிப்பிராயத்தைக் கூறிவருகின்றனர். இவ்வாறான நிலையில் 1881 ஆம் ஆண்டில் நடைபெற்ற குடிசனத் தொகை மதீப்பீட்டையும் 1981 ஆம் ஆண்டு நடைபெற்ற குடிசனத்தொகை மதிப்பீட்டையும் ஒப்பிட்டுக் கவனம் செலுத்துவது காலத்தின் தேவையாகும். 1881 ஆம் ஆண்டின் குடிசனத் தொகை மதிப்பீட்டின்படி கிழக்கு மாகாணத்தின் மொத்த சனத்தொகையில் தமிழர்கள் 67 வீதத்தினராகவும் தமிழ், பேசும் பேசும் முஸ்லிம்கள் 30 வீதத்தினராகவும் சிங்கள மக்கள் மூன்று வீதத்தினராகவும் இருந்த…
-
- 0 replies
- 2.8k views
-
-
கிழக்கில் பனிச்சங்கேணியில் ஆரம்பித்த சமர் முகமாலையில் உக்கிரமடைந்து, ஹபரணையில் தாவி நீர்கொழும்பு வாவியில் தற்போது சங்கமமாகியுள்ளது. இந்த சமரில் சிங்கள அரசின் முப்படைகளும் பேரழிவை சந்தித்துள்ளன. சிங்கள அரசின் தரைப்படையின் போரிடும் கூர்முனை என வர்ணிக்கப்படும் 53 ஆவது படைப்பிரிவு முகமாலையில் தனது ஒரு பிரிகேட்டின் முக்கால் பங்கை இழந்ததுடன் ஒரு டசின் கவச வாகனங்களையும் இழந்துள்ளது. கடலிலே நு}று இருநூறு புலிகளை அடிக்கடி கொன்று குவிப்பதாக தம்பட்டம் அடிக்கும் கடற்படை கடந்த திங்கட்கிழமை (16.10.06) ஹபரணையில் நடந்த பாரிய குண்டு வெடிப்பில் சின்னாபின்னமாகியுள்ளது. இந்த கட்டுரை எழுதும் போதும் சடலங்கள் தேடப்படுகின்றன. 116 பேர் இறந்ததாகவும், 150 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக…
-
- 44 replies
- 14.5k views
-
-
அம்பாறை மாவட்டம் வினாயகபுரத்தில் இரு விடுதலை புலிகள் உறுப்பினர் விசேடஅதிரடிப்படையினரால் நேற்று செவ்வாக்கிழமை காலை 9.00 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டள்ளார்க
-
- 0 replies
- 1k views
-
-
திருமலை சேருநுவர பிரதேசசபை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சுட்டுக்கொலை. இன்று திங்கட்கிழமை முற்பகல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் திருகோணமலையில் இராணுவப்புலனாய்வுப்பிரிவனர
-
- 2 replies
- 1.9k views
-
-
ஜெனிவா பேச்சுவார்த்தை குறித்த நிகழ்ச்சி நிரல் அமைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக திட்டமிட்டபடி பேச்சுக்கள் 28ம் திகதி ஆரம்பிக்கும் வாய்ப்புகள் சந்தேகத்துக்குரியது என்கிறது கீழ் உள்ள செய்தி. Geneva talks run into agenda crisis http://www.lankaenews.com/English/news.php?id=3250
-
- 28 replies
- 5.6k views
-
-
] அம்பாறை, திருக்கோவிலின் விநாயகபுரம் பகுதியில் சுற்றிவளைப்புத் தேடுதலை மேற்கொண்ட சிறீலங்கா விசேட அதிரடிப்படையினர், அப்பகுதியில் அரசியல் பணிகளில் ஈடுபட்டுவந்த இரு இளைஞர்களை சுட்டுக் கொன்றுள்ளனர். அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமானவர்கள் என்று கூறி, ஏராளமானவர்களை பொது இடமொன்றுக்கு அழைத்துச் சென்ற அதிரடிப் படையினர், பின்னர் இந்த இரு இளைஞர்களையும் சுட்டுக் கொன்றுள்ளனர். பாவண்ணன் (வயது 23), சதா (வயது 25) என இவர்கள் இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இவர்கள் அப்பகுதியில் அரசியல்பணிகளை மேற்கொண்டு வந்ததாகவும், அம்பாறை மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் எஸ்.தயா தெரிவித்தார். பொத்துவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள இவர்களது உடலங்களை, சர்வதேச செஞ்சிலுவைச் சங…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கையில் போர் மேகம்.!! -------------------------- சுவிட்சர்லாந்தில் இலங்கை அமைதிப்பேச்சு தோல்வி அடைந்துவிட்ட நிலையில் நாட்டின் வடக்கே கடும் பீரங்கித் தாக்குதல் தொடங்கிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் முழு மூசசாக விஸ்வரூபம் எடுக்கக்கூடும் என்றும் அப்படி நிகழுமேயானால் அது யாழ்ப்பாணத்தை குறிவைத்து நடக்கும் போராக இருக்கும் என்றும் கூறப் படுகிறது. ëஜனிவா பேச்சு தோல்வி அடைந்ததை அடுத்து விடுதலைப் புலிகள் குழு தனது பயணத்தைப் பாதியிலேயே முடித்துக்கொண்டு தாயகம் திரும்புகிறது. அமைதிப் பேச்சு தோற்றுவிட்டநிலையில் இலங்கையில் இனி போரா அமைதியா என்பதை இலங்கை அரசாங்கம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று ëஜனிவாவில் இருந்து தமிழ் முரசிடம் பேசிய விட…
-
- 3 replies
- 2.2k views
-
-
யாழில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு யாழ். மாவட்டத்தில் எரிபொருட்களுக்கு மிக மோசமான பற்றாக்குறை நிலை தோன்றியுள்ளது. ஏற்கனவே சேமிப்பிலிருந்த எரிபொருட்கள் முற்றாக முடிவடைந்துள்ள நிலையில், புதிய எரிபொருள் தாங்கிகள் அங்கு கொண்டுவரப்படாவிடின் அனைத்து வர்த்தகம் மற்றும் நாளாந்த போக்குவரத்து உட்பட பாடசாலைகள், பொது இயங்கு நிலைகள் அனைத்தும் முடங்கிப்போகும் நிலைக்கு வந்துள்ளன. யாழ். மாவட்டத்தில் இயங்கிய தனியார் மற்றும் அரச கூட்டுறவு நிலையங்கள், தங்களது டீசல் விநியோகத்தை இன்றுடன் நிறுத்தியுள்ளன. தங்களது சேமிப்பு முற்றாக முடிவடைந்துள்ளதாக காரணம் கூறப்பட்டுள்ளது. வடபிராந்திய போக்குவரத்துச் சபை, போதிய எரிபொருள் இன்மையைக் காரணம் காட்டி, தனது பொதுப் போக்குவரத்தை இரத…
-
- 0 replies
- 859 views
-
-
குடாநாட்டு மனித அவலம் குறித்து ஐரோப்பிய ஆணைக்குழு கவலை -தற்போதைய நிலைமை நீடித்தால் பாரிய மனிதாபிமான நெருக்கடி தோன்றுமென கடும் எச்சரிக்கை யாழ். குடாநாட்டில் தோன்றியுள்ள மோசமான மனித அவலங்கள் குறித்து கடும் கவலை தெரிவித்த ஐரோப்பிய ஆணைக்குழு மற்றும் ஐ.நா. அமைப்புகள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு குறைந்தளவிலேயே உணவு விநியோகம் இடம்பெறுவது குறித்து விசனம் தெரிவித்துள்ளன. யாழ். மாவட்டத்தில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் துயரங்கள் மிகுந்த கவலையளிப்பதாகவுள்ளது என்று ஐரோப்பிய ஆணைக்குழுவின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் தூதுவர் ஜூலியன் வில்சன் தெரிவித்தார். மோதல்களில் சிக்கியுள்ள பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு மனிதாபிமான அமைப்புகளுக்கு அனுமதி மறுக்கப…
-
- 6 replies
- 2.2k views
-
-
இனி, சர்வதேச சமூகத்தின் பதில் நடவடிக்கை என்ன? இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடை யிலான "ஜெனிவா - 2' அமைதிப் பேச்சுகள் பயன் ஏதுமின்றி - தோல்வியில் முடிவடைந்துவிட்டன. இந்தப் பேச்சுகள் மூலம் சமாதான முயற்சிகளில் ஆக்கபூர்வமான முன் நகர்வு கிட்டும் என்று பலரும் கனவு கண்டார்கள். எனினும், இப்படித்தான் இது முடியும் என்பது எதிர்பார்க்கப்பட் டதுதான். ""இலங்கை அரசுடன் நடத்தும் இந்தப் பேச்சுகளில் எமக்கு நம்பிக்கையில்லை. ஆனாலும் சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப் புக்கு இடமளித்து இந்த இறுதிக்கட்ட முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்குடன் ஜெனிவாவுக்குப் புறப்படுகின்றோம்.'' - என்று இந்தப் பேச்சுக்காகத் தாயகத்திலிருந்து புறப்படு முன் னரே புலிகளின் பேச்சுக்குழுத் தலைவர் ச…
-
- 3 replies
- 2k views
-
-
http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2& http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&
-
- 7 replies
- 4.5k views
-
-
பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயப்பகுதியில் 24 மணிநேரம் படையினர் பாரிய ஒத்திகை. யாழ். குடாநாட்டில் வலிகாமம் வடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு முதல் நேற்று இரவு வரை இராணுவத்தினர் போர் ஒத்திகையொன்றில் ஈடுபட்டிருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வலிவடக்கில் பலாலியை அண்டிய தொண்டமனாறு கடல்நீரேரிப்பகுதி மற்றும் வளலாய் கட்டுவன் பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று இரவு வரை சரமாரியமான துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும் குண்டுச் சத்தங்கள் கேட்ட வண்ணமிருந்ததாக இப்பிரதேசங்களையண்டிய பகுதிகளிலுள்ள மக்கள் தெரிவித்தனர். இராணுவத்தினர் மேற்கொண்ட போர் ஒத்திகையின் போது ஏற்பட்ட பாரிய சத்தங்களே இவையெனத் தெரியவந்த…
-
- 2 replies
- 1.7k views
-
-
எங்களை வைத்து அரசியல் பண்ணாதீர்கள் -கொந்தளிக்கும் இலங்கை மக்கள் ஜெனிவா, நார்வே, அமைதிப் பேச்சுவார்த்தை எல்லாம் சரி. ஆனால் மக்கள் மீதான போர் எப்போது முடியும்? வாகரை. இலங்கையில் நிலைமை எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை உணர்ந்துகொள்ள, இந்த ஒரு பகுதி போதும். சுனாமியின் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் இன்னமும் தத்தளித்துக்கொண்டிருக்கிற நகரம் இது. சமீபத்தில், சம்பூரிலிருந்து குவியல் குவியலாக வெளியேறிய அகதிகள், வாகரையில் தஞ்சம் அடைந்தனர். சரி, பாவம் அவர்களும் எங்கேதான் போவார்கள் என்று சொல்லி, தம்மால் முடிந்த அளவுக்கு அவர்களுக்கு ஆதரவு அளித்தனர் வாகரைவாசிகள். தம்மிடம் இருக்கும் உணவு, உடைகளை அவர்களுடன் பகிர்ந்துகொண்டனர். நாட்கள் செல்லச் செல்ல வாகரைக்குக் குடிபெயரும்…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஜெனிவா பேச்சுவார்தைக்கு பிறகு நோர்வே வருவதாக திட்டமிட்டிருந்த புலிகளின் பேச்சுவார்தைகுழு நோர்வே பயணத்தை இரத்து செய்துள்ளதாக நேர்வே தேசியதொலைக்காட்சி செய்திவெளியிட்டுள்ளது. http://www.nrk.no/nyheter/utenriks/1.1234665
-
- 1 reply
- 2.6k views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் வீட்டின் தாக்குதல். தமிழ் தேசிய கூட்டமைப்பின் வவுனியா பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் அவர்களின் வீட்டின் மீது நேற்று ஞாயிற்று கிழமை இரவு 10.00 மணியளவில் கைகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனம் தெரியாத ஆயுததாரிகளினால் ஆறு கைகுண்டுகள் வீசப்பட்டுள்ளதாகவும் இதில் ஐந்து குண்டு வெடித்துள்ளது. இதில் அவரின் பாதுகாப்பு கடமையில் இருந்த காவல்துறை சிப்பாய் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அநுராதபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இப்பகுதியில் தேடுதல் நடாத்திய போது வெடிக்காத கைக்குண்டு ஒன்று மீட்டுள்ளதாகவும் தெரி…
-
- 0 replies
- 882 views
-
-
அத்துமீறும் சர்வதேச தலையீடு இந்தப் பத்தியில் ஏற்கனவே நாம் சுட்டிக்காட்டிய ஒரு விட யத்தை மீண்டும் வெளிப்படுத்திக்காட்ட வேண்டிய அவசரமும் அவசியமும் எழுந்திருக்கின்றது. இலங்கை இனப்பிரச்சினை இரண்டு பிரதான தரப்புகளுக்கு இடைப்பட்டது.ஒருபுறம் சிங்களவர்கள் மறுபுறம் தமிழ்பேசும் மக்கள். இந்த இரண்டு பிரதான தரப்பினரே இந்தப் பிரச்சினைக் குத் தீர்வுகாண வேண்டியவர்கள். அதுவும் இப்பிரச்சினைக்கு அமைதி வழித் தீர்வு ஒன்று காணப்பட வேண்டுமானால் இந்த இரண்டு தரப்புகளுமே தங்களுக்குள் பேசி உடன்பாடு கண்டு ஒரு தீர்வை எட்டவேண்டும். வேறு புற சக்திகள் எவையும் தீர்வு இதுதான் எனத் திணிக்க முயலக்கூடாது. அது அத்துமீறிய நட வடிக்கை என்று இப்பத்தியில் ஏற்கனவே தெளிவாக விளக்கி யிருந்தோம். தீர்வுக்காக…
-
- 2 replies
- 2.1k views
-
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஜே.ஆர்.ஜெயவர்தன 1988ஆம் ஆண்டு வடகிழக்கு மாகாணமாக இணைத்தமையினால் கிழக்கு மாகாணத்தில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற முடியாதுள்ளது. அத்துடன் கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் வடகிழக்கு மாகாணத்தை பிரிக்கவேண்டும் என்று கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலதிக விபரங்கள் விரைவில்... http://www.tamilwin.com/article.php?artiId...&token=dispNews
-
- 39 replies
- 6.8k views
-
-
சிறிலங்கா மீது நம்பிக்கை இல்லை என்ற நிலைப்பாட்டை நிரூபித்திருக்கிறது ஜெனீவா: சு.ப.தமிழ்ச்செல்வன் தமிழ் மக்களின் மனிதாபிமானப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைக்கும் என்று சிறு அளவில்கூட நம்பிக்கையில்லாமல்தான் வந்தோம். ஜெனீவாவில் அது நிரூபணமாகியிருக்கிறது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜெனீவாப் பேச்சுக்கள் - 02 முடிவடைந்த பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு: மனிதாபிமான அவலத்தை வெளிப்படுத்தவே ஜெனீவாப் பேச்சுக்களத்தை பயன்படுத்துவோம் என்று நாம் தெரிவித்திருந்தோம். உலகத்தின் மனித உரிமைகளின் …
-
- 0 replies
- 1.1k views
-
-
வடபோர் முனையில் படைகள் குவிப்பு - தென்மராட்சியில் ஊடரங்கு அமுல் - புலிகளின் நிலைகள் நோக்கி உக்கிர எறிகணை வீச்சு இன்று காலை தென்மராட்சியின் பல்வேறு பகுதிகளில் சிங்களப் படையினால் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை நேற்றிரவு முதல் விடுதலைப் புலிகளின் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளை நோக்கி உக்கிர எறிகணைத் தாக்குதலை படைகள் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரிரு நாட்களாக வடபோர் முனையில் சிங்களப் படைகள் பெருமளவில் குவிக்கப்பட்டு வரும் அதேவேளை ஆயுத தளபாடங்களும் முன்னரங்கப் பகுதிகள் நோக்கி நகர்த்தப்பட்டு வருகின்றன. (படைகளின் குவிப்பு மற்றும் ஆயுத தளபாடங்கள் நகர்த்தப்படுவது தொடர்பில் சங்கதி நேற்றும் செய்தி வெளியிட்டிருந்தது) இந்நிலையில் நே…
-
- 16 replies
- 4.3k views
-
-
ஏ-9 பாதை திறக்கப்படுமாயின் அடுத்த சுற்றுப் பேச்சுக்களுக்கான திகதிகளைத் தீர்மானிப்போம் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். ஜெனீவா பேச்சுவார்த்தை தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்ட அறிக்கை: தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசாங்கமும் றோயல் நோர்வே அரசாங்கத்தின் ஆதரவுடன் ஒக்ரோபர் 28, 29 ஆகிய திகதிகளில் ஜெனீவாவில் சந்தித்து பேச்சுக்களில் ஈடுபட்டனர். இப்பேச்சுக்களுக்கு சுவிற்சர்லாந்து அரசாங்கம் அனுசரணை வழங்கியது. இணைத்தலைமை நாடுகள், 2006 ஓகஸ்டில் வெளியிடப்பட்ட தமது அறிக்கையில், இரண்டு தரப்பும் உடனடியாக வன்முறைகளை நிறுத்தி, இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு அங்கத்தவர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் வழங்கும்படியும், சம…
-
- 0 replies
- 1k views
-