ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142604 topics in this forum
-
மீண்டும் சரத் பொன்சேகா உயிர் தப்பினார். இராணுவ தலைமையகத்திற்குள் சரத் பொன்சேகாவின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்த மிகவும் சக்தி வாய்ந்த குண்டு அவருடைய வருகைக்கு முன்னதாகவே கண்டறியப்பட்டதால் சரத் பொன்சேகா உயிர் தப்பினார். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது. சரத் பொன்சேகாவின் காரியாலயத்திலிருந்த பூச்சாடிக்குள் பாரிய சக்தி வாய்ந்த குண்டு ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தது. எனினும் சரத் பொன்சேகா காரியாலயத்திற்கு வருவதற்கு சில வினாடிகளுக்கு முதல் அந்த குண்டு கண்டு பிடிக்கப்பட்டதால் சரத் பொன்சேகா தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார். எனினும் இந்த தகவலை வெளியே ஊடகங்களுக்கு வெளிவராதபடி இலங்கை அரசு இருட்டடிப்புச் செய்து வருகின்றது. http://www.nitharsanam.com/?…
-
- 0 replies
- 1.5k views
-
-
திருமலையில் டோரா மூழ்கடிப்பு: 12 கடற்படையினர் பலி! திருமலை மூதூர் இறங்குதுறை பகுதியில் சிறீலங்காப் படையினரின் டோரா பீரங்கிப் படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டதில் 12 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இன்று மூதூர் இறங்குதுறைப் பகுதியில் தரையிறக்க முயற்றி ஒன்றை சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட போது கடற்புலிகளால் டோரா படகு மூழ்கடிக்கப் பட்டுள்ளது. pathivu.com
-
- 1 reply
- 1.6k views
-
-
வெருகலையும் திருமலையும் இணைக்கும் பாதை தகர்ப்பு http://www.nitharsanam.com/?art=19886
-
- 1 reply
- 1.6k views
-
-
பேச்சுக்களை நிறுத்தி, தாக்குதல் தொடுக்கும் காலம் வந்துள்ளது: மகிந்த ராஜபக்ஷ [வெள்ளிக்கிழமை, 4 ஓகஸ்ட் 2006, 22:06 ஈழம்] [காவலூர் கவிதன்] இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ காரியாலயத்தில் இடம்பெற்ற வைபத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பேச்சுக்களை நிறுத்தி, செயலில் இறங்கும் காலம் வந்துவிட்டது என்று கூறினார். இவ்வளவு நாளும் நாம் நிறையப் பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டிருந்தோம். இப்போது நாம் செயலில் இறங்கி, எமது இமாலய சக்திகளை வெளிக்காட்டுவதற்கும், நாட்டை கட்டியெழுப்புவதற்கும் காலம் வந்துள்ளது என்றார் மகிந்த. நாட்டில் மறுமலர்ச்சிக்கும் எழுச்சிக்கும், நாட்டு மக்கள் நேரடியாக பங்களிப்பது அவர்களது கடமை என்றும் அவர் குறிப்பிட்டார். புதிதாக …
-
- 16 replies
- 3.2k views
-
-
மாவிலாறு தாக்குதல்: சோமபுரத்திலிருந்து வெளியேறுமாறு சிங்களவர்களுக்கு உத்தரவு திருகோணமலையின் தெற்குப் பகுதியில் உள்ள ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசமான சோமபுர கிராமத்தில், சிங்களக் குடியிருப்பாளர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். தற்போது மாவிலாறுப் பகுதியை நோக்கி படைகளை நகர்த்த முயற்சிக்கும் சிறிலங்காப் படையினர் அதற்கான இன்னுமொரு திட்டமிடலாக சோமபுர கிராமத்தையும் பயன்படுத்தவுள்ளனர். இதற்காக, சோமபுர கிராமத்தில் உள்ள ஆயிரக்கணக்கான சிங்களக் குடியிருப்பாளர்களை, உடனடியாக வெளியேறி, வேறு இடங்களில் தற்காலிகமாகக் குடியேறுமாறு கோரியுள்ளனர். மாவிலாறு அணைக்கால்வாய்ப் பகுதியை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்க, சோமபுர பகுதியூடான படை நகர்வும் தங்கள் திட்டத்தில் அடங்குவதாகக் கூற…
-
- 1 reply
- 1.1k views
-
-
பொலநறுவையில் இராணுவம் - காவல்துறை மோதல்: 5 காவல்துறையினர் காயம் பொலன்னறுவை கதுருவெலயில் சிறிலங்கா அரசின் இராணுவத்தினருக்கும் காவல்துறையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் ஐந்து காவல்துறையினர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் முன்னர் கதுருவெல காவல்துறை சோதனைச் சாவடியில் நடைபெற்ற சோதனை நடவடிக்கையின் போது விடுமுறையில் சென்ற இராணுவத்தினருக்கும் காவல்துறையினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இதனையடுத்து சோதனைச் சாவடியில் இருந்த காவல்துறையினரால் இராணுவத்தினர் தாக்கப்பட்டுள்ளனர். இதற்குப் பழி தீர்க்கும் வகையில் 5 ட்றக் வாகனங்களில் வந்த இராணுவத்தினர் இந்தச் சோதனைச் சாவடியில் இருந்த காவல்துறையினரை தாக்க…
-
- 1 reply
- 1.2k views
-
-
எறிகணை வீச்சில் மேலும் 5 முஸ்லிம் அகதிகள் பலி [வெள்ளிக்கிழமை, 4 ஓகஸ்ட் 2006, 20:28 ஈழம்] [காவலூர் சங்கீதன்] மூதூர் பகுதிகளில் நடந்து வரும் உக்கிரமான சண்டைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள அங்கிருந்து வெளியேறும் அகதிகள் மீது சிறிலங்கா விமானப்படை குண்டுவீச்சுக்களை நடத்துவதுடன் முகாம்களிலிருந்து எறிகணை வீச்சுக்களையும் நடத்தி வருகின்றது. சிறிலங்காப் படைகளால் கண்மூடித்தனமாக நடத்தப்படும் தொடர்ச்சியான எறிகணை வீச்சில், மூதூர்ப் பகுதியிலிருந்து தப்பிக்க முயன்ற 5 முஸ்லிம் அகதிகள் பலியாகினர். பச்சநூர் ஏ-15 தெருவின் 64வது மைல்கல் அருகே இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் முஸ்லிம் அகதிகள் வெள்ளைக் கொடியுடன் செல்லும் போது, எறிகணையொன்று அவர்களுக்கு அருகே வீழ்ந்து வெட…
-
- 0 replies
- 850 views
-
-
மூதூர் முஸ்லீம்களின் பள்ளிவாசல் குண்டு வைத்து தகர்பு http://www.nitharsanam.com/?art=19883
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் முஸ்லிம்களுக்கு முழு அளவில் உதவி [வெள்ளிக்கிழமை, 4 ஓகஸ்ட் 2006, 19:55 ஈழம்] [காவலூர் கவிதன்] திருகோணமலை பகுதிகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான அகதிகளுக்கு 24 மணிநேரமும் தொடர்ச்சியான பாதுகாப்பையும் நிவாரண உதவிகளையும், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் திருகோணமலை கிளை வழங்கி வருகின்றது. பல மடங்காக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த அகதிகளைப் பராமரிக்க, சிறிலங்கா அரசின் பாரபட்சமற்ற உதவியையும், புனர்வாழ்வுக்கழகம் கோரியுள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழு மற்றும் கண்காணிப்புக் குழுவினருக்கும் இதுபோன்ற கோரிக்கைகளை விடுத்துள்ள தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தம்மிடம் உள்ள அனைத்து சேமிப்புக்களையும் பயன்படுத்தி போதிய உதவிகளை வழங்கி …
-
- 0 replies
- 841 views
-
-
யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து உடனடியாக வெளியேறுமாறு விமல் வீரவன்ச அழுத்தம் [வெள்ளிக்கிழமை, 4 ஓகஸ்ட் 2006, 19:05 ஈழம்] [து.சங்கீத்] விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசும் செய்துகொண்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து உத்தியோகபூர்வமாக உடனே வெளியேறுவதாக அறிவிக்குமாறு ஜே.வி.பி. நாடாளுமன்றக் குழுவின் தலைவர் விமல் வீரவன்ச சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு அவசர அழைப்பு விடுத்துள்ளார். மாவிலாறு அணையை விடுதலைப் புலிகள் மூடியபோது எதுவித உணர்ச்சியுமில்லாமல் பார்த்துக்கொண்டிருக்கும் வெள்ளைக்காரர்கள், பேசாலையில் ஒருசில மீனவர்கள் தாக்கப்பட்டபோது மட்டும் தங்கள் உணர்ச்சிக் கொப்பளிப்பை வெளியிட்டார்கள். எனவே வெள்ளைத் தோல் போர்த்திய ஏமாற்றுக்காரர்களை சிறிலங்…
-
- 0 replies
- 895 views
-
-
வெள்ளி 04-08௨006 19:22 மணி தமிழீழம் [நிலவன்] மனிதபிமான பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு புலிகள் இன்று மோதல் தவிர்ப்பு. இடம் பெயர்ந்த மக்களை பாதுகாப்பான இடங்களிற்கு மாற்றும் நடவடிக்கையை மேற்கொள்வதற்காக விடுதலைப் புலிகள் இன்று மோதல் தவிர்பை மேற்கொண்டனர். புலிகள் தாக்குதல்களை நிறுத்தி வைத்த சந்தர்பத்தை பயன்படுத்தி படையினர் புலிகளால் கைப்பற்றப்பட்ட மூதூர் பகுதிகளை நோக்கி தாக்குதலைத் தொடுத்தனர் இத்தாக்குதல் புலிகளால் முறியடிக்கப்பட்டது இதனை அடுத்து கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டனர் இதனை அடுத்து விடுதலைப்புலிகள் படையினரை நோக்கி மட்டுப் படுத்தப்பட்ட அளவில் எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டனர். நன்றி-பதிவு
-
- 2 replies
- 1.4k views
-
-
செஞ்சிலுவைச் சங்க வாகனத்தொடரணி மீது சிங்கள காடையர்கள் தாக்குதல்,நிவாரணங்களை எடுத்துச் செல்வதில் முட்டுக்கட்டை. விடுதலைப்புலிகளினால் கைப்பற்றப்பட்டிருக்கும் மூதூர் பகுதிக்கு உடனடி நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்ல சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கு விடுதலைப்புலிகள் அனுமதியளித்துள்ளதையடுத்து, உணவுப் பொருட்களுடன் மூதூர் நோக்கி பயணித்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்க வாகனத் தொடரணி சிங்களக் காடையர்களின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.மூதூருக்குள
-
- 0 replies
- 832 views
-
-
வெள்ளி 04-08௨006 18:44 மணி தமிழீழம் [சிறீதரன்] வட முனையில் பாரிய தாக்குதல் தொடங்க சிறிலங்கா படையினர் முன் ஏற்பாடு. மூதூரில் நடைபெற்றுவரும் தாக்குதலில் இருந்து விடுதலைப் புலிகளை திசைதிருப்பும் நோக்குடன் யாழ் கிளாலி நாகர் கோவில் படைதளங்களில் இருந்து புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி பாரிய படை எடுப்புகளை மேற் கொள்ளும் நோக்குடன் சிறிலங்கா படையினர் யுத்த ஏற்பாடுகளை மேற்கொண்டுவருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா படையினரின் முன்னரங்க நிலைகள நோக்கி பாரிய யுத்ததளபாடங்கள் நகர்த்தப்படுவதுடன் பெருமளவு படையினரும் முன்னரங்க நிலைகளை நோக்கி நகர்த்தப் படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நன்றி - பதிவு
-
- 0 replies
- 1.1k views
-
-
பனிச்சங்கேணியில் படையினரின் நகர்வு முறியடிப்பு: எறிகணையில் பொதுமக்கள் மூவர் பலி! வாகரை பனிச்சங்கேணி கோயில் குடியிருப்பு நோக்கி இராணுவத்தினர் எறிகணைத் தாக்குதல் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவர் கொல்லப்பட்டும் வேறு நான்கு பேர் காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. அத்துடன் மூன்று பேர் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள். வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் இராணுவத்தினர் பனிச்சங்கேணி நோக்கி முன்னேறி சென்றதாகவும் பின்னர் வாழைச்சேனை மற்றும் புணாணை இராணுவ முகாங்களில் இருந்து கடும் செல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் இராணுவத்தின் முன்னேற்றம் முறியடிக்கப்பட்டதாகவும் இதனையடுத்து சிறீலங்கா இராணுவத்தினர் பின்வாங…
-
- 28 replies
- 4.5k views
-
-
உங்கள் கருத்துகளை இங்கு தெரிவிக்கவும் Send your views on Sri Lanka http://newsforums.bbc.co.uk/nol/thread.jsp...=20060804115217
-
- 1 reply
- 1.3k views
-
-
புத்தரின் உண்மையான `ஒளி' பிள்ளையார் விக்கிரகங்கள் பால் குடித்ததாக ஒரு தசாப்தகாலத்துக்கு முன்னர் வெளியான செய்திகளை மக்கள் மறந்திருக்கமாட்டார்கள். உலகம் பூராவும் அடிபட்ட அச்செய்திகளைக் கேள்விப்பட்டு பின்னர் தங்கள் வீடுகளில் உள்ள பிள்ளையார் விக்கிரகங்களுக்கு பால் வைத்துப் பார்த்தவர்கள் ஏராளம். அன்று பிள்ளையார் பால் குடித்தாரோ இல்லையோ இந்துக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது உண்மைதான். அதைப்போன்றே இப்போது இலங்கையில் புத்தர் சிலைகளில் இருந்து ஒளிக்கதிர்கள் வெளிவந்து கொண்டிருப்பதாகச் செய்தி பரவியிருக்கிறது. தலைநகர் கொழும்பிலும் புறநகர்ப்பகுதிகளிலும் தென்மாகாணத்தின் சில பகுதிகளிலும் புத்தர் சிலைகளை நோக்கி மக்கள் படையெடுத்திருப்பதை மாலை வேளைகளில் காணக்கூட…
-
- 1 reply
- 1.4k views
-
-
நோயின் மூலத்தை விடுத்து குணங்குறிக்கு வைத்தியம் செய்யும் ஆட்சியாளர்கள் நோய்க்கு மருந்து செய்வது குறித்து திருநாப்போதர் வள்ளுவப் பெருந்தகை "நச்"சென்று ஒரு குறளில் அழகாக எடுத்துரைத்திருக்கின்றார். அது உடலைப் பிணித்திருக்கும் நோய்க்கு மட்டுமல்ல, நாட்டைப் பிணித்திருக்கும் நோய்க் கும் நல்ல மருத்துவ உபாயமாக அமைந்திருப்பது கவனிக் கத்தக்கது. ""நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்."" என்கிறது வள்ளுவன் வாய்ச்சொல். நோயை ஆராய்ந்து, நோய் வருவதற்கான காரணத்தை யும் ஆõய்ந்து, அந்நோய் தீர்க்கும் வழியையும் ஆராய்ந்து, அது தீர்க்கும் வழியைத் தப்பாமல் செய்ய வேண்டும் என் பது இக்குறளின் உட்பொருள். நமது இலங்கைத் தீவைப் பீடித்திருக்கும் இனப்ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
நோர்வே தரப்பினர் வெளியேறவேண்டும் மீண்டும் ஜேவிபி. அரசாங்கம் இலங்கையில் இருந்து நோர்வே தரப்பினரை வெளியேற்றவேண்டும் என ஜே வி பி மீண்டும் கோரியுள்ளது. தேசப்பற்றாளர் இயக்கத்தின் ஊடக மாநாடு நேற்று கொழும்பில் நடைபெற்றபோது அதில் உரையாற்றிய ஜே வி பியின் பிரசார செயலர் விமல் வீரவன்ச, நோர்வேயின் சர்வதேச விவகார அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் நேற்று வெளியிட்ட அறிக்கையை அவர் திரும்பப்பெற்றுக்கொள்ளவேண்
-
- 1 reply
- 868 views
-
-
திருமலையில் கதவடைப்பு போராட்டத்திற்கு பொங்கியெழும் மக்கள் படை அழைப்பு. சாவுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் எமது தமிழ் மக்கள் சொல்லொணா துயரங்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவை அனைத்தையும் அறிந்த யதார்த்தவாதியான ஜனாதிபதி அவர்கள் சிறிமாவோ பண்டாரநாயக்க காலம் தொட்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா காலம் வரை அரசியலில் இருந்தவர். வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் நிலைமை அவருக்கு நன்கு தெரியும். இருந்தும் அவரும் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வைக் கொடுத்து இனப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு விரும்பவில்லை. அவர் ஒரு முதுகெலும்பில்லாத ஜனாதிபதி என்பதும் மக்கள் விடுதலை முன்னணி (JVP) . ஜாதிகஹெல உமய என்பன போன்ற இனவாதிகளின் தாளத்திற்கு ஆடுகிறார். இவ…
-
- 0 replies
- 856 views
-
-
பாதிக்கப்பட்ட மக்களுக்காக 15 இலட்சம் அமெரிக்க டொலரை நோர்வே வழங்குகிறது - சொல்ஹெய்ம். தென்தமிழீழத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரகடனப் படுத்தப்படாத யுத்தின் விளைவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவியாக 15 இலட்சம் அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்துள்ளது. இந்திதியை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாகவோ அல்லது தன்னார்வ நிறுவனங்கள் ஊடாகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாகச் சென்றடைய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&
-
- 0 replies
- 905 views
-
-
Claymore blast injures 4 policemen in Vavuniya [TamilNet, August 03, 2006 21:08 GMT] A police reinforcement team that arrived at Poonthoddam following a sentry in the area came under gunfire was hit by claymore blast, around 1.55 a.m., Friday, injuring four, police in Vavuniya town said. Poonthoddam is about 3 k.m., east of Vavuniya, The injured policemen were taken to Vavuniya hospital, the police said. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19056
-
- 0 replies
- 1.6k views
-
-
ஜே.வி.பி., ஹெல உறுமய போன்ற அடிப்படைவாத கட்சிகளின் நடவடிக்கையினால் இக்கட்டானநிலை ஏற்பட்டுள்ளது மாவிலாறு பிரச்சினையை பேசித்தீர்த்திருக்கலாம் என்கிறார் பிரதியமைச்சர் டிலான் பெரேரா வீரகேசரி நாளேடு மாவிலாறு அணைக்கட்டு விவகாரத்தை புலிகளுடன் பேசித் தீர்த்திருக்கலாம். ஆனால் ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய போன்ற அடிப்படைவாத கட்சிகளின் சுய அரசியல் இலாபம் தேடும் நடவடிக்கையால் இன்று இக்கட்டான நிலைமை உருவாகியுள்ளது. சேருவில விகாரையின் தேரர் கூட இதனை உறுதிப்படுத்தியிருந்தார் என்று அரசியல் அமைப்பு விவகார ,தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நீதிமன்ற மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். மாவிலாறு அணைக்கட்டு பிரச்சினை இன்று பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல உ…
-
- 2 replies
- 1.5k views
-
-
நாளை காலை மூதூரை விட்டு 30 ஆயிரம் பொது மக்களும் வெளியேறப்போவதாக முஸ்லீம் காங்கரஸ் அரசுக்கு எச்சரித்துள்ளது. மூதூரில் இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலினாலேயே பொது மக்கள் பலர் பலியாகி பலர் படுகாயமடைந்துள்ளதாக முஸ்லீம் பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மூதூர் உலமாக்கள் சபைப் பிரதிநிதிகளும், பொது மக்களும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுக்கு முறைப்பாடு தெரிவித்துள்ளனர். கல்லாறு இராணுவ முகாமிலிருந்து மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதலினாலேயே முஸ்லீம் பொது மக்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளதையடுத்து இன்று இரவு அவசரமாக கூடிய ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மத்திய குழு, இது குறித்து ஆராய்ந்துள்ளது.இதனையடுத்து எடுக்கப்பட்ட முடிவில்,ஸ்ரீ லங்கா இராணுவத்தி…
-
- 2 replies
- 1.1k views
-
-
காயப்பட்ட பொதுமக்களை வெளியேற்ற, இருதரப்பும் ஒருமணிநேர யுத்தநிறுத்தம்! [வியாழக்கிழமை, 3 ஓகஸ்ட் 2006, 23:59 ஈழம்] [காவலூர் கவிதன்] மூதூர் பகுதிகளில் சிறீலங்கா படைகளின் மிலேச்சத்தனமான தாக்குதல்களில் காயமடைந்த அப்பாவிப் பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்றி, வைத்திய உதவிகளை வழங்குவதற்கு ஏதுவாக, அங்கு பணியாற்றும் மனித உரிமைகள் அமைப்பினரின் கோரிக்கையை ஏற்று, இருதரப்பும் ஒருமணிநேர யுத்தநிறுத்தமொன்றைக் கடைப்பிடித்தனர். மூதூர் அராபிய பாடசாலை மற்றும் தோப்பூர் அல்நூர் மகாவித்தியாலம் போன்றவற்றில் தஞ்சமடைந்திருந்த பொதுமக்கள் மீதும், கோவிலிலும் பொதுஇடங்களிலும் பாதுகாப்புக்காகத் தங்கியிருந்த மக்கள் மீதான தாக்குதல்களிலும் பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்லும் முதல…
-
- 0 replies
- 784 views
-
-
நாளை கொழும்பு வரும் ஹான்சன் பவர், தேசியத் தலைவரையும் சந்திக்க ஆவல்! உ [வெள்ளிக்கிழமை, 4 ஓகஸ்ட் 2006, 00:01 ஈழம்] [காவலூர் கவிதன்] நாளை வெள்ளிக்கிழமை சிறீலங்காவுக்கு வருகைதரும் நோர்வே சிறப்புத் தூதுவர் ஹான்சன் பவர், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனைச் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக சிறீலங்கா அரசதரப்பில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. நேரடியாக தலைவர் பிரபாகரனைச் சந்தித்து, இரு பிரதான விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாக தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவிலாறு அணைக்கட்டைத் திறப்பது மற்றும் தற்போதைய தாக்குதல்களை நிறுத்துவது என்ற இரு முக்கிய பிரச்சனைகள் பற்றி நேரடியாக தலைவருடன் பேசுவதற்கு நோர்வே சிறப்…
-
- 1 reply
- 945 views
-