ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142604 topics in this forum
-
மேலாதிக்கச் செருக்கோடு மேற்கொள்ளப்படும் செயற்பாடு திருகோணமலை மாவட்டம் மாவிலாறு எல்லைப் புறப் பிரதேசத்தில் இலங்கை அரசுப்படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் தற்போதைய மோதல்கள் முழு அளவிலான யுத்தமாக விரிவடையாது எனத் தாம் நம்புகின்றார் என்று யுத்த நிறுத்தக் கண்காணிப் புக் குழுவின் தலைவர் உல்ப் ஹென்றிக்ஸன் தெரிவித் திருக்கின்றார் யுத்த நிறுத்தம் நடைமுறையில் இருக்க கண்காணிப்பாளர்கள் பார்த்திருக்க விடுதலைப் புலிகளின் கட்டுப் பாட்டில் உள்ள ஒரு பிரதேசத்தைக் கைப்பற்றும் முனைப் புடன் மும்முனை நகர்வுக்கான பெரும் இராணுவ நடவடிக் கையை விரிவான ஏற்பாடுகளோடு அரசுப் படைகள் முன் னெடுக்கின்றன. விடாது வான் வழித் தாக்குதல்கள் நடக் கின்றன. விமானக் குண்டு வீச்சுக…
-
- 0 replies
- 980 views
-
-
ஈச்சிலம்பற்று, வெருகல் பகுதிகளில் விமானக்குண்டு வீச்சு , ஷெல் தாக்குதல் இருவர் காயம் ; இராணுவம் முன்னேறவில்லை என்கின்றனர் புலிகள் வீரகேசரி நாளேடு மாவிலாறு பகுதியை சூழவுள்ள ஈச்சிலம்பற்று, வெருகல் பகுதிகளில் விமானப்படையினரது குண்டு வீச்சு விமானங்கள் நேற்றும் குண் டுத் தாக்குதல்களை மேற்கொண்டன. நேற்றுக் காலை 8.30 மணி முதல் நடைபெற்ற இந்த விமானக் குண்டு வீச்சில் இரு பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். மரங்கள் பலவும் முறிந்து விழுந்துள்ளன. இதனைவிட இப்பகுதிகளை நோக்கி படையினர் கடும் ஷெல் தாக்குதல்களையும் நேற்று மேற்கொண்டுள்ளனர். கல்லாறு இராணுவ முகாமிலிருந்து சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. படையினர் விமானக் குண்டு வீச்சையும் ஷெல் தாக்கு…
-
- 0 replies
- 874 views
-
-
செவ்வாய்க்கிழமை, 1 ஓகஸ்ட் 2006, 23:59 ஈழம்] [தாயக செய்தியாளர்] திருமலை கடற்படைத் தளம் மீதான ஆட்டிலறித் தாக்குதலையடுத்து இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங்கை அவசர அவசரமாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சிறீலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உரையாடியுள்ளார். முன்கூட்டியே நிரல்படுத்தப்படாதவகையில் அவசர அழைப்பை மேற்கொண்ட மகிந்த ராஜபக்ச, லெபனானில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளிற் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை மீட்பதில் இந்தியாவின் உதவிக்கு நன்றி தெரிவித்ததோடு, இன்று விடுதலைப்புலிகளால் திருக்கோணமலை கடற்படைத் தளத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட ஆட்லறித் தாக்குதல் அதனால் எழுந்துள்ள பாதுகாப்பு நிலவரம் குறித்து இந்தியப் பிரதமருக்கு அறியத் தந்ததாகவும் தெரியவருகிறது. …
-
- 1 reply
- 1.2k views
-
-
மாவிலாறை நோக்கிய படையினரின் நகர்வுக்கு எதிராக புலிகள் தாக்குதல் திருகோணமலை மாவிலாறு நோக்கி சிறிலங்காப் படையினர் மேற்கொண்டுள்ள நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடுமையான தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர். கல்லாறிலிருந்து இருமுனைகளில் இன்று திங்கட்கிழமை காலை 8 மணியளவில் பெருமெடுப்பில் படையினர் நகர்வை தொடங்கியுள்ளனர். மங்கிபிரிட்ஜ் தளத்திலிருந்து தரைப்படையினர் ஆட்டிலெறி எறிகணைத் தாக்குதலை நடத்த, விமானப்படையினரின் கிபீர் மற்றும் மிக் ரக விமானங்கள் தாக்குதல்களை நடத்த தரைவழியாக படையினர் தமது வலிந்த தாக்குதல் நகர்வை தொடங்கினர். மாவிலாறு விடுதலைப் புலிகளின் முன்னரங்கப்பகுதி நோக்கிய நகர்வை மேற்கொண்டுள்ள படையினருக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதலை விடுதலைப…
-
- 45 replies
- 6.1k views
-
-
கண்காணிப்புக்குழுவில் இருந்து சுவீடனும் வெளியேறுமென அறிவிப்பு - பண்டார வன்னியன் Tuesday, 01 August 2006 09:31 யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் இருந்து செம்ரெம்பர் முதலாம் நாளிற்கு முன்பாக தமது நாட்டுப் பிரதிநிதிகளை திரும்பப் பெறப்போவதாக சுவிடன் அரசு உத்தியோக பூர்வமாக இன்று அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் மீதான தடை அறிவிப்பை வெளியிட்டதைத் தொடர்ந்து கண்காணிப்புக்குழுவில் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரதிநிதிகளை வெளியேற்றுமாறு விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தனர். http://sankathi.com/content/view/4155/26/
-
- 1 reply
- 1k views
-
-
திருமலைக் கடற்படைத் தளம் மீதான ஆட்லறித் தாக்குதலால் நிலைகுலைந்து போயுள்ள சிறீலங்கா அரசு [செவ்வாய்க்கிழமை, 1 ஓகஸ்ட் 2006, 23:04 ஈழம்] [தாயக செய்தியாளர்] வட-கிழக்குப் போரரங்கிற்கான பிரதான போக்குவரத்து மற்றும் விநியோகத் தளமாகவும் திருமலைப் பிரதேசத்திற்கான பாதுகாப்பிற்கான இதயநாடியாகவும் விளங்கிய திருமலைக் கடற்படைத் தளத்தின் மீதான ஆட்டிலறித் தாக்குதல் சிறீலங்காப் படைத்தரப்பை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள
-
- 0 replies
- 1.1k views
-
-
வவுனியாவில் ஒட்டுப்படையினரால் பெண் சுட்டுக்கொலை. வவுனியா வேப்பங்குளப் பகுதியில் சிறீலங்காப் படையினரை இலக்கு வைத்து தாக்குதலாளிகளால் கிளைமோர் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6.30 மணிக்கு கிளைமோர் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று நகரப் பகுதியில் கைக்குண்டு வீசப்பட்டுள்ளது. வனியா தெற்று இலுப்பைக் குளப் பகுதியில் சிறீலங்கா துணைக் குழுவினர் நடத்திய தாக்குதலில் குடும்பப் பெண் பலியாகியுள்ளார். நள்ளிரவைக் கடந்து இன்று அதிகாலை இலுப்பைக்குளம் கோவிற்குளம் பகுதிகளுக்கு உள்ள வீடுகளுக்கு உட்புகுந்த துணைக்குழுவினர் பெருமளவு சொத்துக்களை களவாடியுள்ளனர். துணைக்குழுவினர் சூறையாடலை தடுத்து நிறுத்த முயன்ற குடும்பப் பெண்ணை கோரமான முறையில் சுட்டுக்கொன்றுள்ளன…
-
- 1 reply
- 1.7k views
-
-
போர் மூண்டால் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு: வைகோ [செவ்வாய்க்கிழமை, 1 ஓகஸ்ட் 2006, 20:25 ஈழம்] [புதினம் நிருபர்] இலங்கையில் போர் மூண்டால் விடுதலைப் புலிகளுக்கு பக்க பலமாக இருப்போம் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் ம.தி.மு.க கட்சி விழா ஒன்றில் நேற்று திங்கட்கிழமை பங்கேற்று அவர் பேசியதாவது: இலங்கையில் தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்காக விடுதலைப் புலிகள் போராடி வருகிற நிலையில், தற்போது அங்கும் மீண்டும் போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது. போர் மூண்டால், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக தாய்த் தமிழகத்தையே திரட்டுவோம் என்றார் வைகோ. http://www.eelampage.com/?cn=27929
-
- 2 replies
- 1.4k views
-
-
மிசன் வோட்டர் செட் நடவடிக்கையில் 7 இராணுவ அதிகாரிகள் பலி! சிறீலங்கா படையினர் நடத்திய ஒப்பிரேசன் மிசன் வோட்டர் செட் நடவடிக்கையில் கொல்லபட்ட 20 இராணுவத்தினரில் 7 பேர் அதிகாரிகள் என சிறீலங்கா படைத் தலைமையகம் உறுதி செய்துள்ளது. ஒரு மேஜர் தர அதிகாரியும் ஒரு கப்டன் தர அதிகாரியும் 5 கோப்பிரல் தர அதிகாரிகளும் ஏனையவர்கள் சாதாரண படையினர் எனவும் படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
-
- 6 replies
- 1.8k views
-
-
சிறுப்பிட்டி சங்கக் கடை கவலரன் தீக்கிரை. கரவெட்டி இமையாணன் பகுதியைச் சோந்த கௌரூபன் படு கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக சிறுப்பிட்டி சங்கக் கடை சந்தியில் இருந்த இராணுவக காவலரன் இனம் தெரியாதவர்களினால் தீயிடப்பட்ட கொழுத்தப் பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. இராணுவத்தினர் குறிப்பிட்ட இளைஞர் படுகொலை செய்யப்பட்டதை பொது மக்கள் கண்டு கொண்டதைத் தொடாந்து இராணுவத்தினர் குறிப்பிட்ட காவலரனுக்கு கடந்த இரண்டு நாட்களாக வருவதில்லை இத்தகைய நிலமையில குறிப்பிட்ட இராணுவ காவலரன் தீயிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தக் கொலையைத் தொடர்ந்து பாரிய அளவில் பொது மக்கள் ஆத்திரமுற்று இருப்பதுடன் பதட்டமான நிலமையும் அப்பகுதியில் காணப்படுகின்றது. http…
-
- 0 replies
- 889 views
-
-
கிளைமோர் வைத்து ஈ.பி.டி.பினர் பொதுமக்களிடம் அகப்பட்டனர். யாழ்ப்பாணம் அரியாலை கனகரெட்னம் வீதியில் கிளைமோர் வைத்த ஈ.பி.டிபி யினர் பொது மகக்ளிடம் கையும் மெய்யுமாக பிடிபட்டுள்ளார்கள். கடந்த வியாழக்கிழமை நண்பகல் நேரம் இராணுவப் பொலிஸ் பாதுகாப்புடன் தினமுரசு பத்திரிகை விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் இருவர் கனகரெட்னம் வீதியில் உள்ள சங்கக் கடை மற்றும் தனியார் கடைக்கு அண்மையாக உள்ள அரச மரத்தில் கிளைமேரைப் பொருத்திவிட்டுச் சென்றுள்ளார்கள். அதனைக் கண்னுற்ற அப்பகுதி மக்கள் திரண்டு சத்தமிட்டதைத் தொடர்ந்து குறிப்பிட்ட பகுதியில் வைத்த கிளைமோரை வைத்த ஈ.பி.டி.பி.யினர் பொது மக்கள் முன்னிலையில் எடுத்துச் சென்றுள்ளார்கள். இன்று யாழ்ப்…
-
- 0 replies
- 1.1k views
-
-
மும்முனைத் தாக்குதல் முறியடிப்பு: 6 படையினர் பலி! 3 போராளிகள் வீரச்சாவு. திருமலை ஈச்சிலம்பற்று மாவிலாறு பகுதியைக் கைப்பற்றும் நோக்கத்துடன், இன்று சிறீலங்கா படைகளால் பெருமெடுப்பில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்த மும்முனை படைநகர்வு முயற்சி, தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றிரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10:30 மணியளவில், கிபிர் மற்றும் மிக் ரக விமானங்கள் குண்டுகளைப் பொழிய, ஆட்லறி - பல்குழல் எறிகணை சூட்டாதரவுடன், கனரக யுத்த தளபாடங்கள் சகிதம் முன்னேற முற்பட்ட சிறீலங்கா படைகள் மீது, தமிழீழ விடுதலைப் புலிகளால் உக்கிர பதிலடி தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. திருமங்கலம் படை முகாமில் இருந்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்திற்கு உட்பட்ட அங்கோடை பகுதியை நோக்கி முன்ன…
-
- 8 replies
- 3k views
-
-
திருகோணமலை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரை ஏற்றிச்சென்ற ஊர்தி குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகியதில் 18 படையினர் கொல்லப்பட்டிருக்காலாமென ஸ்ரீலங்கா இராணுவ அதிகாரிகளை மேற்கோள்காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியூடாகப் பயணித்த படையினரின் ஊர்தியே குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகியதாகவும், வீதியோரக் குண்டோ அல்லது கண்ணிவெடியோ இந்தத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாமெ
-
- 3 replies
- 1.8k views
-
-
களுத்துறையில் ஆயுதக் களஞ்சியம் வெடித்து சிதறி எரிகிறது. தென்னிலங்கை களுத்துறை பகுதியில் உள்ள சிறீலங்கா சிறப்பு அதிரடிப் படையினரின் ஆயுதக் களஞ்சியம் வெடித்துச் சிதறியுள்ளது. இன்று நள்ளிரவு 11:30 மணிக்கு களஞ்சியம் வெடித்து சிதறி எரிகின்றது. இது தொடர்பான மேலதிக விபரங்கள் கிடைக்கப்பெறவில்லை. பதிவு.கொம்
-
- 4 replies
- 2.3k views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 11 ஆம் திகதி அமெரிக்கா விஜயம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்மாதம் 11 ஆம் திகதி வெள் ளிக்கிழமை அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ளார். அமெரிக்கவில் ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக்கூட்டத்தில் கலந்து கொண்டு விசேட உரையொன்றையும் ஆற்றவுள்ளார். சுமார் மூன்று வார காலங்கள் அமெரிக்காவில் தங்கியிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சில உத்தியோகபூர்வமான சந்திப்புக்களையும் மேற்கொள்ளவிருக்கின் றார் . ஜனாதிபதியுடன் அமை ச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கலாக சுமார் 100பேரை இக்குழுவினர் எதிர்வரும் 8 ஆம் திகதி இலங்கையி லிருந்து புறப்படவிருப்பதுடன் ஜனாதிபதி 10 ஆம் திகதி காலை அமெரிக்கா புறப்படவிருப்பத…
-
- 0 replies
- 1.4k views
-
-
MISSION WATER SHED படை நடவடிக்கை முறியடிப்பு: 15 படையினர் பலி! 50 மேற்பட்டோர் படுகாயம். திருமலை ஈச்சிலம்பற்று மாவிலாறு பகுதியைக் கைப்பற்றும் நோக்கத்துடன், இன்று சிறீலங்கா படைகளால் பெருமெடுப்பில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்த மும்முனை படைநகர்வு முயற்சி, தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றிரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8:30 மணியளவில், கிபிர் மற்றும் மிக் ரக விமானங்கள் குண்டுகளைப் பொழிய, ஆட்லறி - பல்குழல் எறிகணை சூட்டாதரவுடன், கனரக யுத்த தளபாடங்கள் சகிதம் முன்னேற முற்பட்ட சிறீலங்கா படைகள் மீது, தமிழீழ விடுதலைப் புலிகளால் உக்கிர பதிலடி தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. திருமங்கலம் படை முகாமில் இருந்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்திற்கு உட்பட்ட அங்கோடை பக…
-
- 0 replies
- 1.8k views
-
-
சிறிலங்கா அரசு போர்நிறுத்தத்தை முறித்துக் கொண்டு போரை தொடங்கி விட்டது- எழிலன். இன்று காலை திருமலையில் சிறிலங்கா படையினர் மேற் கொண்ட படை நடவடிக்கை மூலம் சிறி லங்கா அரசு போர் நிறுத்தத்தை முறித்துக் கொண்டு போரை தொடங்கி விட்டதாக விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி முன்கூட்டி அறிவித்த பின்னரே யுத்த நிறுத்தத்தில் இருந்து விலக முடியும் ஆனால் சிறிலங்கா அரசு எந்த அறிவித்தலும் இல்லாமல் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி படை நகர்வுகளை மேற்கொண்டதன் மூலம் யுத்த நிறுத்தத்தை முறித்துக் கொண்டு விட்டது என்றார். http://www.pathivu.com/in…
-
- 0 replies
- 1.2k views
-
-
மாவிலாறு அணையை திறக்காமல் கொழும்புக்கு திரும்பப் போவதில்லை - ஹெல உறுமய சூளுரை [30 - July - 2006] [Font Size - A - A - A] மாவிலாறு அணைக்கட்டை திறந்து கிராமவாசிகளுக்கு மீண்டும் நீர் விநியோகத்தை மேற்கொள்ளாமல் அப் பகுதிக்குச் சென்றிருக்கும் தமது கட்சி உறுப்பினர்கள் கொழும்புக்கு திரும்பப் போவதில்லையென ஜாதிக ஹெல உறுமய சூளுரைத்துள்ளது. ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரான ஓமல்பே சோபித தேரரினால் இதற்கான அறிவித்தல் நேற்று சனிக்கிழமை விடுக்கப்பட்டுள்ளது. மாவில் ஆற்றுக்கால்வாயை விடுதலைப் புலிகள் வழிமறித்து 9 நாட்கள் கடந்து விட்டது. இதனால் சேருநுவர பிரதேசத்திலுள்ள 30 ஆயிரம் ஏக்கர்களுக்கு அதிகமான விளைச்சல் நிலம் நாசமடைந்துள்ளது. இது தொடர்பாக ஆராய்ந்து பார்க்கவென …
-
- 13 replies
- 3.2k views
-
-
இலங்கையின் வடக்கு - கிழக்கு தமிழர்களுக்கான தாயகம் என்பதற்கு எதுவித ஆதாரமும் இல்லை என்று ஜாதிக ஹெல உறுமயவின் எல்லாவெல மேதானந்த தேரர் கூறியுள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வடக்கு - கிழக்கு வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஒத்திவைப்புத் தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் நேற்று புதன்கிழமை தாக்கல் செய்தார். அரசாங்க அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளின் அறிக்கைகளை தனது உரையின் போது சம்பந்தன் சுட்டிக்காட்டினார். வடக்கு - கிழக்கானது தமிழர்களின் தாயகம் என்றும் தென்னிலங்கையானது வடக்கு - கிழக்கு தமிழர்களை அங்கீகரிப்பதில்லை. தமிழர்களுக்கான அரசியல் தீர்…
-
- 158 replies
- 13.7k views
-
-
மாவிலாறு கால்வாயை 24 மணித்தியா லங்களுக்குள் திறந்து விடுவோமென அரசு நேற்றுமுன்தினம் அப்பகுதி மக்களுக்கு உறுதி யளித்தித்திருந்தது. 24 மணித்தியாலக் கெடு நேற்றுமாலையுடன் முடிவடைந்தது. இது தொடர்பாக கேட்டபோதே அமைச்சர் கெஹே லிய ரம்புக்வெல மேற்கண்டவாறு தெரிவித் தார். இதேவேளை, அப்பகுதியில் காணப்படும் புலிகளின் இலக்குகள் மீது தொடர்ந்தும் விமா னத் தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்படுமெனவும் அவர் தெரிவித்தார். மேலும் வாசிக்க........... http://www.uthayan.com/pages/news/today/01.htm :P :P
-
- 2 replies
- 1.4k views
-
-
எல்லைக் கோட்டைக் கடக்க முடியாத அளவுக்கு புலிகளின் வியூகங்கள் பதில் தாக்குதல்களும். தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னரங்க எல்லைக்கோட்டைக் கடந்து, ஒரு அங்குலம் கூட சிறீலங்கா படைகள் முன்னேற முடியாத அளவிற்கு, போராளிகளின் பாதுகாப்பு வியூகங்களும், பதிலடி தாக்குதல்கள் அமைந்திருப்பதாக திருமலை தகவல்கள் கூறுகின்றன. மாவிலாறு அணைக்கட்டில் இருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்தில் சிறீலங்கா படையினர் நிலையெடுத் திருப்பதாக, கடந்த இரண்டு நாட்களாக அரசாங்கம் அறிவித்து வருகின்ற போதும், தொடர்ந்து பழைய நிலைகளிலேயே சிறீலங்கா படைகள் இருப்பதாக, சுயாதீனமாக கிடைக்கப் பெற்றுள்ள தகவல்கள் கூறுகின்றன. மாவிலாறு அணைக்கட்டிற்கும், சிறீலங்கா படைகள் நிலைகொண்டுள்ள கல்லாறு பகுதிக்கு மத்தியில், ஐந்து கிலோ…
-
- 0 replies
- 969 views
-
-
நாகர்கோவிலிருந்து சிறிலங்காப் படையினர் எறிகணைத் தாக்குதல் [திங்கட்கிழமை, 31 யூலை 2006, 06:50 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழ் மக்கள் மீது சிறிலங்காப் படையினர் போரைத் தொடக்கி விட்டதன் வெளிப்பாடாக இன்று திங்கட்கிழமை நாகர்கோவிலில் இருந்து செறிவான எறிகணைத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ். நாகர்கோவில் படைத்தளப் பகுதியிலிருந்து படையினர் இன்று காலை 4 மணிமுதல் செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். கடந்த நான்கு நாட்களாக திருகோணமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு பகுதிகள் மீது படையினர் விமானத் தாக்குதல் மற்றும் எறிகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஐந்தாம் நாளான இன்று காலை நாகர்கோவிலில் இருந்து படைத்தரப்பு செறிவான எறிகணை மற்றும் ஆட்டிலெற…
-
- 1 reply
- 879 views
-
-
இராணுவ நகர்வு மூலம் மாவிலாறை திறக்க முயன்றால் பெரும் போர் மூழும்: சி.எழிலன் எச்சரிக்கை [திங்கட்கிழமை, 31 யூலை 2006, 07:09 ஈழம்] [திருமலை நிருபர்] மக்களின் உயிர்வாழ்வுக்கான கோரிக்கைகளை நிராகரித்து இராணுவ நகர்வு மூலம் மாவிலாறை திறக்க முயன்றால் பெரும்போர் மூழும் என்று திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார். மாவிலாறை நோக்கி சிறிலங்கா படைத்தரப்பு முன்னேறியிருப்பதாக அரச தரப்பு வெளியிட்டுள்ள செய்திகள் தொடர்பாக "புதினம்" இணையத்தளம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: மாவிலாறுக்கும் சிங்களப்பகுதியான கல்லாறுக்கும் இடையில் ஐந்து கிலோ மீற்றர் தொலைவு இருக்கின்றது. கல்லாறுக்கு தெற்…
-
- 0 replies
- 913 views
-
-
எடை போடுவதில் தவறிழைத்ததால் எதிர்கொண்ட அனுபவங்கள் இலங்கையில் நமது பிராந்திய வல்லாதிக்க நாடான இந்தியாவின் நேரடித் தலையீடு என்ற அத்தியாயம் முடிவுற்று ஒன்றரை தசாப்தங்களுக்கு மேலாகி விட்டது. அந்த நேரடித் தலையீட் டுக்கு வழி செய்த இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தாகி நேற்றுமுன்தினத்துடன் 19 ஆண்டுகள் பூர்த்தியாகி விட்டன. இந்நிலையில், அந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட வரலாற் றுப் புறச்சூழலை ஒரு தடவை சிந்தனையில் மீட்டுப் பார்ப்பது இன்றைய அரசியல் நிலைவரங்களையும் ஓரளவுக்கு எடை போடுவதற்கு உதவக் கூடும். இலங்கை விடயத்தில் இந்திய இராஜதந்திரம் அப்போது அடிசறுக்கித் தோற்றுப் போனமைக்கு இரண்டு தனிநபர் களின் ஆளுமைகளையும், திறமைகளையும், குணவியல்பு களையும் எடைபோடுவதில் இந்தியத் தலைமைக…
-
- 0 replies
- 957 views
-
-
மாவிலாறை கைப்பற்ற நந்தா மல்லவராச்சி தலைமையில் படைகள்: கேகலிய ரம்புக்வெல [திங்கட்கிழமை, 31 யூலை 2006, 05:51 ஈழம்] [காவலூர் கவிதன்] திருகோணமலை சேருநுவர பிரதேசத்திலுள்ள கல்லாறு சிலங்கா இராணுவ முகாமிலிருந்து தரைமார்க்கமாக படைகளை நகர்த்தி, மாவிலாறு பகுதியைக் கைப்பற்றும் நோக்குடன், மேஜர் ஜெனரல் நந்தா மல்லவராச்சி தலைமையில் படைகள் தயார்படுத்தப்படுகின்றன. மாவிலாறு பகுதியிலிருந்து ஒரு கிலோமீற்றர் தொலைவில் தமது படைகள் தற்போது நிலைகொண்டிருப்பதாகத் தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல, திங்கட்கிழமை அதிகாலை, தமது படைகள் தரைமார்க்கமாக நகரத் தீர்மானித்திருப்பதாகவும் கருத்துக் கூறினார். அத்துடன், தற்போது ஈச்சிலம்பற்று பகுதி கிராமங்க…
-
- 0 replies
- 966 views
-