Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. உயிரிழந்த படைவீரரின் சடலத்தை இராணுவம் கையேற்க முன்வந்ததாக புலிகள் தெரிவிப்பு [15 - June - 2006] [Font Size - A - A - A] -பொய்ப் பிரசாரமென கூறுகிறது பாதுகாப்பு அமைச்சு வன்னியில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியினுள் ஆழ ஊடுருவி தாக்குதல் நடத்த முற்பட்ட போது இடம் பெற்ற மோதலில் உயிரிழந்த இராணுவச் சிப்பாயின் சடலத்தை கையேற்க படையினர் முன்வந்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினூடாக இந்தச் சடலத்தை பொறுப்பேற்க படையினர் முன் வந்துள்ளதாகவும், முதலில் சடலத்தை ஏற்க மறுத்த படையினர் பின்னர் அதற்கு இணங்கியதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சடலத்தை ஓமந்தை சோதனை நிலையத்த…

  2. இலங்கை வன்முறைகள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை - எம்.ஆர்.நாராயணன். இலங்கையில் இடம்பெற்று வரும் வன்முறைகள் தொடர்பில் இந்தியா ஆழ்ந்த கவலையை கொண்டுள்ளதாக இந்திய ஊடகவியலாளர் எம் ஆர் நாராயணன் தமது செய்தி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில தற்சமயம் ஒரு சிறிய யுத்தம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்தநிலையில் இலங்கையில் இடம்பெறும் வன்முறைகளினால் அதிகமாக பாதிப்படுவது இந்தியாவே என ஊடகவியலாளர் நாராயணன் தெரிவித்துள்ளார் இந்தியாவை பொறுத்தவரையில் இலங்கையின் இனப்பிரச்சினையின் தீர்வு முனைப்புகள் உரிய முறையில் செல்வதையே அந்த நாடு விரும்புகிறது. தற்போதைய நிலையில் நோர்வேயின் சமாதான முனைப்புகள் தோல்வியடையுமானாhல் அது பாரிய பாதிப்புக்கு உள்ளாகும். எந்த ஒர…

    • 1 reply
    • 1.2k views
  3. இன்று மதியம் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான கிபீர் ஜெற் விமானங்கள். தமிழீழ வான்பரப்புக்குள் அத்து மீறி நுழைந்து தாக்குதல் நடாத்தியதாக வன்னியிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. வன்னியின் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான முல்லைத்தீவிலே இத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இன்று காலை இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் பல சிங்கள மக்கள் கொல்லப்பட்டதினால் இத்தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கலாம் என் அறியப்படுகின்றது. இருப்பினும் இவ்விமானத்தாக்குதலால் பாதிப்புக்கள் ஏற்ப்பட்டதாக இதுவரை கிடைக்கப்பெற்ற செய்திகள் தெரிவிக்கவில்லை.

  4. இன்று அனுராதபுரம் கெப்பிடிகொல்லாவவில் பேருந்தில் ஏற்பட்ட பகுதியில் குண்டுவெடிப்பில் 30 இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. source: www.battieelanaatham.com

    • 41 replies
    • 6.9k views
  5. தேர்தல் மூலம் காய்நகர்த்த முயலும் ஜனாதிபதி மஹிந்தர் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தாயகத்தின் ஒட்டுமொத்தப் புறக் கணிப்புக் காரணமாக, தென்னிலங்கைத் தீவிரவாத பௌத்த, சிங்களப் பேரினவாதிகளின் ஆதரவுபெற்ற மஹிந்த ராஜபக்ஷ, எதிர்பாராத வகையில் ஜனாதிபதியாகி விட்டார். நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவிக்கு வந்து விட்டாலும் கூட, தம்மை அரியணை ஏற்றப் பக்க பலமாக அமைந்த தென்னிலங்கை பௌத்த, சிங்களத் தீவிரவாத சக்திகளின் பிடி யிலிருந்து மீளமுடியாதவராக அச்சக்திகளின் கைப்பொம் மையாக சிக்கித் திண்டாடி வருகின்றார் அவர். நாடாளுமன்றப் பெரும்பான்மை இல்லை என்ற காரணத்தால் எதுவும் செய்ய வக்கற்றவராக அவரது ஆட்சி நிர்வாகம் நகருகின்றது. நாட்களைக் கடத்துகின்றது. பிரதான எதிர்க்கட்சியான ஐ.த…

  6. பலாலியில் 300 படையினருக்கு பரசூட் தரையிறங்கித் தாக்கும் சிறப்புப் பயிற்சிகள். பலாலி படைத்தளத்தில் சிறீலங்காவின் சிறப்புப் படையணிகளுக்கு பரசூட் தரையிறக்கப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. கனரக உலங்குவானூர்த்திகள் மூலம் வழங்கப்படும் பயிற்சிகளை 300 சிறீலங்காப் படையினர் பெற்றுவருகின்றனர். இப்பயிற்சியில் தீடிரென கடலில் தரையிறங்குதல், காட்டுப் புறங்களில் தரையிறங்குதல், அதிரடிப் தாக்குதலுக்கான தரையிறக்கம் போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பதிவு.

    • 8 replies
    • 2.5k views
  7. மட்டக்களப்பில் துணை இராணுவக் குழுவினரால் 125 சிறார் கடத்தல் மட்டக்களப்பு மாங்கேணிப் பிரதேசத்தில் நேற்று காலை சிறிலங்கா இராணுவத்தினரும், மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் கருணா குழுவினரும் சேர்ந்து திடீர் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டனர். இச் சுற்றிவளைப்பின் போது பாம்படி என்னும் கிராமத்தில் 14 வயதுக்குட்பட்ட 15 இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனைப் பொலிசாருக்கு இளைஞர்களின் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். அத்துடன் மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை என்னும் இடத்தில் நேற்று இரவு 30 இளைஞர்கள் கருணா குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். இச் செயற்பாடு தொடர்பாக போர்நிறுத்தக் கண்காணிப்புக் கு…

    • 5 replies
    • 2.3k views
  8. இருதரப்பு சமநிலையை ஏற்காவிட்டால் அந்நிலையை உருவாக்குவோம்: சு.ப.தமிழ்ச்செல்வன் [புதன்கிழமை, 14 யூன் 2006, 16:27 ஈழம்] [ம.சேரமான்] இருதரப்பு சமநிலையை சிறிலங்கா அரசாங்கம் உருவாக்காவிட்டால் அந்நிலையை நாங்கள் உருவாக்குவோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் எச்சரித்துள்ளார். நோர்வேக்கான பயணத்தினை மேற்கொண்டிருந்த தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், தமிழீழ காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், தமிழீழ சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோர் உள்ளடங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் இன்று புதன்கிழமை பிற்பகல் 2.10 மணியளவில் கிளிநொச்சியை வந்தடைந்தனர். தமிழீழ கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ.…

  9. டென்மார்க் ஊடகங்கள் தமிழீழ மக்கள் மீது தொடரும் வன்முறைகள் தொடர்பான செய்திகளை வெளியிடாமல் அரச தரப்பு செய்திகளை மட்டும் வெளியிட்டு வருவதைக் கண்டித்து இலத்திரனியல் கையெழுத்து சேகரிப்பு நடைபெறுகிறது. இந்த ஊடகங்களினது பக்கசார்பான செய்திகள் விடுதலைப்புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்வதை ஊக்கப்படுத்தியதும், ஐரோப்பிய ஒன்றிய தடையால் சமாதான முயற்சிகள் முற்றாக தற்பொழுது தடைபட்டுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. கையொப்பம் இடுவதற்கான இணையத்தளம் : http://www.tamilernessag.underskrifter.dk/ அல்லது http://www.tamilvoice.dk/ ஆகவே இவர்கள் தொடர்ந்து இப்படியான பக்கசார்பான செய்திகளை வெளியிடுவதை டென்மார்க்கில் வாழும் 10.500 க்கு மேற்ப்பட்ட புலம்பெயர்ந்த தமிழீழமக்கள் ஏற்றுக்கொள்ள மாட…

    • 0 replies
    • 846 views
  10. பிரபாகரன் நான்காவது ஈழப்போரை ஆரம்பித்துவிட்டார் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் நான்காவது ஈழப் போரை திட்டமிட்ட முறையில் மெதுவாக ஆரம்பித்துவிட்டார் என்பது இரகசியமல்ல. சர்வதேச சமூகத்தின் காதுக்குள் நுழைந்து போக்குக் காட்டி விட்டு பிரபாகரன் மெல்ல மெல்ல தனது இலக்கை நோக்கி நகர்ந்து வருகிறார். தினமும் ஐந்து முதல் பத்து வரையான பாதுகாப்பு படையினரைக் கொல்லும் நோக்கில் நாள் ஒன்றுக்கு இரண்டு, மூன்று தாக்குதல்கள் திட்டமிட்ட முறையில் புலிகள் இயக்கத்தினரால் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு கடந்த ஆறு மாதங்களில் புலிகள் அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்ட பாதுகாப்பு படையினரதும் பொதுமக்களினதும் எண்ணிக்கை கொஞ்சநஞ்சமல்ல. முல்லைத்தீவு, கிளிநொச்சி,…

    • 4 replies
    • 2.4k views
  11. ஜே.வி.பியை தலையில் தட்டிவைக்கும் நடவடிக்கைக்கு ஜனாதிபதி தயார்! கட்சி முக்கியஸ்தர்களை சந்தித்து கட்டம் கட்டமாக ஆலோசனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதான கூட்டாளிகளான ஜே.வி.பியினரை தலையில் தட்டி அமர்த்தி ஓரமாக ஒதுக்கி வைப்பதற்குத் தீர்மானித்திருக்கிறார் என்று உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தனது கட்சி முக்கியஸ்தர்களுடன் அவர் கட்டம் கட்டமாக ஆலோசனை நடத்த ஆரம்பித்துள்ளார். சிவப்புச் சட்டைக்காரர்களுக்குப் பாடம் புகட்டும் விதத்தில் மிகவிரைவில் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவது பற்றியும் ஜனாதிபதி அவர்களுடன் ஆராய்கிறார் என்று கூறப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற காலம்முதல் சமாதான முயற்சிகளை எதிர்பார்த்த விதத்தில் நகர்த்த முடியவில்லை. புதிய…

  12. யதார்த்த நிலைமைக்கு புறம்பானவற்றைத்தான் மகிந்த சர்வதேச சமூகத்திடம் தெரிவிக்கிறார்: கண்காணிப்புக் குழு குற்றச்சாட்டு இலங்கையின் வடக்கு - கிழக்கில் உள்ள யதார்த்த நிலைமைக்குப் புறம்பானவற்றைத்தான் ஊடகங்களிலும் சர்வதேச சமூகத்திடம் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்து வருவதாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு குற்றம்சாட்டியுள்ளார். போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் இது குறித்து கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியுள்ளதாவது: சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் தமது பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளலாம் என்று முடிவு செய்தால் இந்தத் தீவில் நாங்கள் தொட…

  13. தமிழக உறவுகளின் உணர்வும் ஈடுபாடும் தமிழக மற்றும் இந்திய அரசுகளில் நிலைப்பாடுகளில் மாற்றத்தை உருவாக்கும்: சு.ப.தமிழ்ச்செல்வன் நம்பிக்கை எமது தமிழக உறவுகளின் உணர்வும் ஈடுபாடும் தமிழக மற்றும் இந்திய அரசுகளில் நிலைப்பாடுகளில் மாற்றத்தை உருவாக்கும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய இன்பத் தமிழ் ஒலி வானொலிக்கு கடந்த சனிக்கிழமை (10.06.06) நோர்வேயிலிருந்து அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது: எமது உறவுகளாகிய தமிழ்நாட்டு மக்கள், தமிழீழ மக்கள் தொடர்பாக- தமிழீழ மக்களினது விடுதலைப் போராட்டம் தொடர்பாக முழு அளவிலும் ஆதரவுடன்தான் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள எங்கள் மக்கள் தலை…

  14. யாழில் காணாமல் போன 8 தமிழர்களது நிலை என்ன?: சர்வதேச மன்னிப்புச் சபை கேள்வி யாழ்ப்பாணத்தில் காணாமல் போன 8 தமிழர்களினது நிலை என்ன என்பதை தெரிவிக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்தை சர்வதேச மன்னிப்புச் சபையான அம்னஸ்ரி இன்டர்நசனல் கேட்டுக்கொண்டுள்ளது. யாழில் கடந்த மே 6 ஆம் நாளன்று கோவில் ஒன்றில் உறங்கிக் கொண்டிருந்த இராசநாயகம்பிள்ளை சிவானந்தமூர்த்தி, மார்க்கண்டு புஸ்பகாந்தன், கந்தசாமி பரிமேழலகன், வைகுந்தவாசன் விகுந்தகுமார், இரட்ணம் தயாரூபன், பொன்னம்பலம் பார்த்தீபன், செல்வரட்ணம் சிவானந்தம் மற்றும் இராமச்சந்திரன் இராசகுமார் ஆகியோர் காணாமல் போயினர். இது தொடர்பாக அவர்களின் உறவினர்கள் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணை குழுவிடம் முறைப்பாடு செய்தனர். அம்முறைப்பாட்டில் கூற…

  15. ஜோசப் பரராஜசிங்கம் கொலையாளிகள் யார்?: சிறிலங்காவுக்கு சர்வதேச நாடுகளின் நாடாளுமன்றக் கூட்டமைப்பு கேள்வி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டு பல மாதங்களான நிலையிலும் கொலையாளிகளை ஏன் கண்டுபிடிக்கவில்லை என்று சிறிலங்கா அரசாங்கத்துக்கு சர்வதேச நாடுகளின் நாடாளுமன்றக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. உலகில் உள்ள நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதித்துவத்தை கொண்டு ஜெனீவாவில் இயங்கும் சர்வதேச நாடுகளின் நாடாளுமன்றக் கூட்டமைப்பு பரராஜசிங்கத்தின் படுகொலையை தமது 178 ஆவது கூட்டத் தொடரில் வன்மையாக கண்டித்துள்ளது. இக்கண்டனத் தீர்மானம் பற்றிய அறிக்கையை சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு சர்வதேச…

    • 2 replies
    • 1.4k views
  16. அரசதரப்பு செய்திகளை மட்டும் வெளியிட்டு வருவதைக் கண்டித்து இலத்திரனியல் கையெழுத்து சேகரிப்பு . http://www.tamilernessag.underskrifter.dk/index.php டென்மார்க் ஊடகங்கள் தமிழீழ மக்கள் மீது தொடரும் வன்முறைகள் தொடர்பான செய்திகளை வெளியிடாமல் அரச தரப்பு செய்திகளை மட்டும் வெளியிட்டு வருவதைக் கண்டித்து இலத்திரனியல் கையெழுத்து சேகரிப்பு நடைபெறுகிறது. இந்த ஊடகங்களினது பக்கசார்பான செய்திகள் விடுதலைப்புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்வதை ஊக்கப்படுத்தியதும், ஐரோப்பிய ஒன்றியத் தடையால் சமாதான முயற்சிகள் முற்றாக தற்பொழுது தடைபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆகவே இவர்கள் தொடர்ந்தும் இப்படியான பக்கசார்பான செய்திகளை வெளியிடுவதை டென்மார்க்கில் வாழும் 10.500ற்கும் மேற்ப்பட்ட பு…

    • 0 replies
    • 828 views
  17. இலங்கை விவகாரம்: கைகோர்க்கும் ராமதாஸ், வைகோ.திருமாவளவன் மேலும் வாசிக்க.................................................... http://thatstamil.oneindia.in/news/2006/06...6/13/lanka.html

  18. அடுக்கடுக்கான அதிர்ச்சிகள் எதிரிக்கு காத்திருக்கின்றன: க.வே.பாலகுமாரன் எச்சரிக்கை [செவ்வாய்க்கிழமை, 13 யூன் 2006, 20:54 ஈழம்] [ம.சேரமான்] எமது எதிரிக்கு அடுக்கடுக்கான அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் எச்சரித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ வானொலியான புலிகளின் குரல் அரசியல் அரங்கம் நிகழ்வில் கடந்த சனிக்கிழமை (10.06.06) அவர் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்: ஒஸ்லோவில் பேச்சுவார்த்தைகளுக்கு ஊடாக வருகின்ற செய்திகள் எல்லாம் அதிர்ச்சி, அதிர்ச்சி என்று கூறுகின்றது. சிறிலங்கா அரசுக்கு அதிர்ச்சி, நோர்வேத் தரப்பிற்கு அதிர்ச்சி சர்வேதசத்திற்கு அதிர்ச்சி என்ற…

    • 10 replies
    • 2.3k views
  19. புலிச் சீருடையில் சிறிலங்கா இராணுவத்தினர்: கிளைமோர்த் தாக்குதல் முயற்சி முறியடிப்பு- ஒருவர் பலி [செவ்வாய்க்கிழமை, 13 யூன் 2006, 19:27 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியாவில் கிளைமோர்த் தாக்குதலை நடத்துவதற்குத் விடுதலைப் புலிகளின் சீருடையில் தயாராக இருந்த சிறிலங்கா இராணுவ அணியினர் மீது விடுதலைப் புலிகளின் சிறப்பு அணியினர் நடத்திய தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். வவுனியா புளியங்குளம் நெடுங்கேணி வீதியில் பெரியதொரு தாக்குதலுக்காக சிறிலங்கா இராணுவ அணி ஒன்று 3 கிளைமோர்களைப் பொருத்தி தயாராக இருந்துள்ளனர். அப்பகுதியில் வீதிச் சோதனையை மேற்கொண்டு சென்ற விடுதலைப் புலிகளின் சிறப்பு அணியினர் இன்று முற்பகல் 9.30 மணியளவில் …

  20. ஈழத்தமிழனை ஏறெடுத்துப் பார்ப்பதற்கு தமிழகத்துக்கு நேரமில்லையா? http://www.tamilnaatham.com/pdf_files/vika..._2006_06_10.pdf

  21. சமதரப்பு நிலையில் இருந்து புலிகளை அரசு நிராகரிப்பு! நோர்வேக்கு எழுதும் கடிதங்களில் பிரபாவுக்கு சமதையாக கையெழுத்திடாராம் ஜனாதிபதி அரசுக்குச் சமதையான ஒரு தரப்பாக விடுதலைப் புலிகள் கருதப்படுவதை முற்றாக நிராகரிப்பதற்கு இலங்கை அரசு தீர்மானித்திருக்கிறது. இந்த விடயத்தை அனுசரணைத் தரப்பான நோர்வேக்கு உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கும் அது தயாராகிவிட்டது. இந்த விடயத்தில் இலங்கை அரசின் எதிர்ப்பை உடனடியாகத் தெரிவிக்கும் முகமாக, சமாதான முயற்சிகளின் அனுசரணைத் தரப்பான நோர்வேக்கு எழுதும் கடிதங்களில் இனிமேல் கையெழுத்திடுவதில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முடிவு செய் துள்ளார். ஜனாதிபதி மாளிகைக்கு மிக நெருக்கமான வட்டாரங்கள் இந்தத் தகவலை நேற்றுத் தெரிவித்தன. எனினும், அரசின் இந்த …

  22. ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையில் மூன்றாவது சக்திக்குத் தொடர்பு: திஸ்ஸ விதாரன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையில் மூன்றாவது சக்திகளுக்குத் தொடர்பிருப்பதாக பேராசிரியர் திஸ்ஸ விதாரன குற்றம்சாட்டியுள்ளார். ஜோசப் பரராஜசிங்கம் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சிறிலங்கா நாடாளுமன்றில் அவர் பேசியதாவது: ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையில் ஈடுபட்டோரை அடையாளம் காட்ட அரசாங்கம் தவறிவிட்டதாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றம்சாட்டியிருந்தார். மேலும் ஹிட்லரின் நாசிச ஆட்சிக்காலத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய படுகொலைகளைப் போன்று சிறிலங்காவிலும் அத்தகைய சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்றும…

  23. ஈழத் தமிழர் குறித்த தமிழகத் தமிழரின் இன்றைய நிலை என்ன?: தினமணி நாளேட்டில் வெளியான கடிதங்களின் தொகுப்பு தமிழீழத் தமிழர் பிரச்சனை, ஐரோப்பிய ஒன்றியத் தடை, அகதிகள் பிரச்சனை தொடர்பாக தமிழ்நாட்டு தமிழர்களின் மனநிலையை வெளிப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் தினமணி நாளேட்டில் பொதுமக்களின் கடிதங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் தொகுப்பு: இந்திராவின் அணுகுமுறை "புலம் பெயர்ந்த தமிழர்கள்" தலையங்கம் (31.05.06) படித்தேன். இலங்கைத் தமிழர்கள்பால் சிங்களப் பேரினவாத அடக்குமுறை கட்டவிழ்க்கப்பட்டபோது, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி எடுத்த நிலைப்பாடு தொடர்ந்திருக்குமேயானால் இலங்கைத் தமிழர் சிக்கல் எப்போதோ தீர்வு கண்டிருக்கும். பாகிஸ்தானுக்கு எதிரான கிழக்கு வ…

  24. பாராளுமன்றம் முன்பாக உண்ணாவிரதமிருந்த தயாஇடைக்காட்டாரின் போராட்டத்தை இருட்டடிப்புச்செய்து விட்டு நோர்வேக்கு வந்த அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனிடம் தமிழோசைசெய்தியாளன் சுவாமிநாதன் மைக்கை வாய்க்குள் ஓட்டிக்கொண்டு இருந்தார் ஏதோ அப்படியே எல்லா உண்மையையும் போய் சொல்கிறோம் எங்களுக்கு சொல்லுங்கோ என்று அப்ப இந்த இடைக்காட்டார் விசயத்தில் மட்டும் ஏன் இந்த மைக் செத்துபோனது. அல்லது உண்மை தெரிய வரக்கூடாது என்று சதிசெய்தார்களா?

    • 79 replies
    • 11.7k views
  25. கலைஞரின் அரசு ஈழத் தமிழர்களுக்கு செய்து கொண்டிருக்கும் ஒரு துரோகச் செயல் குறித்து அதிர்சிகரமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கருணா குழுவினர் தமது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆட்களை சேர்ப்பதற்கு கலைஞரின் அரசு அனுமதி அளித்துள்ளது என்பதே அந்த அதிர்ச்சிகரமான தகவல் ஆகும். இந்தத் தகவலை மிகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. கருணா குழு தமிழகத்தில் ஆட்சேர்ப்பதற்கு ஈழத் தமிழரில் அக்கறை கொண்ட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தும், கலைஞரின் அரசு அதை அலட்சியம் செய்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. கருணா குழுவுக்கான ஆட்சேர்ப்பு தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர்களின் அகதி முகாம்களிலேயே நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சேர்ப்பு கருணா குழுவைச் சேர்ந்த பரந்தன்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.