Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நிலைமை மேலும் மோசமடைந்தால் கண்காணிப்புப் பணி கைவிடப்படும் கண்காணிப்புக் குழுத் தலைவர் ஹொக்லன்ட் எச்சரிக்கை நிலைமை மேலும் மோசமடைந் தால் கண்காணிப்பு நடவடிக்கைகளை இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு கைவிட நேரிடும். இவ்வாறு எச்சரித்துள்ளார் கண்காணிப்புக் குழுத் தலைவர் ஹக்ருப் ஹொக்லன்ட். "ரொய்டர்' செய்தி நிறுவனத்துக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்: அதிகரித்துவரும் வன்முறைகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளும் இராணுவமும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் வடக்கிலிருக்கும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதுடன் அவர்களில் அநேகர் தங்களின் இடங்களில் இருந்து வெளியேறி வருகின்ற னர். கடந்த டிசெம்பர் மாதம் முதல் நிலைமை …

  2. மட்டு. சட்டவாளர்கள் - விடுதலைப் புலிகள் சந்திப்பு மட்டக்களப்பு மாவட்ட சட்டவாளர்களிற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் இடையி லான சந்திப்பு கொக்கட்டிச்சோலை சோலையகத்தில் நேற்றுக் காலை 10.00 மணியளவில் நடைபெற்றுள்ளது. இதில் மட்டக்களப்பு மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் திரு. தயாமோகன் மற்றும் மட்டு நகர அரசியற்துறைப் பொறுப்பாளர் திரு. அன்புமாறன் ஆகியோர் விடுதலைப் புலிகள் சார்பில் கலந்து கொண்டனர். அண்மைக் காலமாக படையினரால் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்படுவது, தடுத்து வைத்தல் போன்ற சம்பவங்கள் அதிகரித்துச் செல்லும் நிலையில் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு விடுதலைக்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பாகவும் எதிர்காலத்தில் எவ்வாறான நடவடிக்கைகளைக் கையாள…

  3. குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை: விடுதலைப் புலிகளைத் தடை செய்ய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எதிர்ப்பு! [செவ்வாய்க்கிழமை, 10 சனவரி 2006, 22:09 ஈழம்] [ம.சேரமான்] ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்ய அதன் உறுப்பு நாடுகள் சில எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. விடுதலைப் புலிகள் மீது சுமத்தப்படுகிற குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கு ஆகக் கூடியதான ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையில் தடை செய்வது என்பது சரி அல்ல என்றும் அந்த நாடுகள் வாதிட்டுள்ளன. அமைதிப் பேச்சுகளைக் காரணம் காட்டி ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதப் பட்டியல் தொடர்பான வழிகாட்டுதலை நோர்வே அரசாங்கம் அண்மையில் நிராகரித்திருந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு ந…

  4. புதன் 11-01-2006 21:21 மணி தமிழீழம் [நிருபர் மயூரன்] விடுதலைப் புலிகளும் அரசாங்கமும் சமதன்மையுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவேண்டும் என்ற அச்சமே பேச்சுக்களை தொடங்க முட்டுக்கட்டையாக இருக்கிறது - ஹிந்துஸ்தான் டைம்ஸ். தமிழீழ விடுதலைப் புலிகளும் அரசாங்கமும் சமதன்மையுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவேண்டும் என்ற அம்சமே தற்சமயம் சமாதான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படுவதில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது. தமிழ் தரப்புக்களை ஆதாரம் காட்டி இந்த கருத்தை ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. ஆசிய நாடு ஒன்றிலோ அல்லது தென்னாபிரிக்காவிலோ பேச்சுவார்த்தை நடத்தப்படும் போது அங்கு தமக்கு சம உரிமைத்தன்மை வழங்கப்படாது என தமிழீழ விடுதலைப் புலிகள் எண…

  5. யுத்தம் தொடங்கினால் "விடுதலைப் புலிகளின் இலக்கு யாழ்ப்பாணம்": ரொய்ட்டர்ஸ் [புதன்கிழமை, 11 சனவரி 2006, 16:33 ஈழம்] [ச.விமலராஜா] இலங்கையில் மீண்டும் யுத்தம் தொடங்கினால் யாழ்ப்பாணம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று ரொய்ட்டர்ஸ் செய்தி ஸ்தாபனம் கூறுகிறது. ரொய்ட்டர்ஸ் செய்தி ஸ்தாபனத்தின் ஊடகவியாலாளர் பீற்றர் ஆப்ஸ் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரை: இலங்கையின் இரு தசாப்த கால யுத்தம் மீண்டும் கொழுந்து விட்டெரிந்தால் வடபகுதியான யாழ்ப்பாணத்தின் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் இராணுவ விநியோகப் பாதைகள் மீது கொரில்லாத் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்ற அச்சம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. தமிழர் தாயகத்தின் மையமான பகுதிய…

  6. செவ்வாய் 10-01-2006 13:17 மணி தமிழீழம் [நிருபர் வாவிமகன்] நாலாம் கட்ட ஈழப்போர் திணிக்கப்படுமானால் தமிழீழ விமானப்படை தாக்குதலை நடத்தும்: கேணல் பானு எமது படைக்கட்டமைப்பு வலுவாக இருக்கின்றது. கடற்படை, கரும்புலி என்பதை விட நாலாங்கட்டப் போர் திணிக்கப்படுமானால் நமது விமானப்படையும் தாக்குதலை மேற்கொள்ளும் என மட்டக்களப்பு மாவட்ட கட்டளைத் தளபதி கேணல் பானு குறிப்பிட்டார். ஈரளக்குளம் மக்களுக்கான கிராமியப் படைப்பயிற்சி; தொடர்பான ஆரம்பக் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போது அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து உரைநிகழ்த்துகையில்:- சிறிலங்கா அரசு எம்மீது யுத்தத்தைத் திணிக்குமாக இருந்தால் அந்த யுத்தத்தில் எவரும் பார்வையாளராக இருக்கக் கூடாது அனைவர…

    • 2 replies
    • 1.5k views
  7. திருமலையில் செவ்வாயன்று நடைபெறவுள்ள தமிழ்த் தேசியப்பிரகடன எழுச்சி விழாவுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி Written by Ellalan Monday, 09 January 2006 எதிர்வரும் செவ்வாய்க்கிழமை திருகோணமலை மூதூர் கிழக்கு கடற்கரைச்சேனை பொது விளையாட்டரங்கில் இடம் பெறவிருக்கும் தமிழ்த் தேசிய எழுச்சி விழாவுக்கான எற்பாடுகள் யாவும் புூர்த்தியடைந்துள்ளதாக ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தற்போது இராணுவத்தினரின் தமிழ் மக்கள் மீதான அடாவடித்தனங்கள் அதிகரித்துள்ள இந்த வேளையில் திருகோணமலையில் சர்வதேசத்தின் கவனம் திரும்பியுள்ள நிலையில் இந்த தமிழ்த் தேசியப்பிரகடன எழுச்சி விழா மிக முக்கியத்துவம் வாய்ந்ததொன்று என தமிழ்த் தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் வேறு, தம…

  8. செவ்வாய் 10-01-2006 17:13 மணி தமிழீழம் [கனடா நிருபர்] சர்வதேசமே விழித்துக்கொள்! ஈழத் தமிழ் மாணவர்கள் மீது இலங்கை இராணுவத்தினரால் தொடர்ந்து பிரயோகிக்கப்பட்டு வரும் மனித உரிமை அத்து மீறல் நடவடிக்கைகள் குறித்து கால்ற்றன் பல்கலைக் கழக தமிழ் மாணவர் அமைப்பு பெரும் விசனத்துக்கு உள்ளாகி இருப்பதுடன் தமது கடும் எதிர்ப்பையும் தெரிவிக்கிறது. இந்த ஜனநாயக அத்து மீறல்களை இலங்கை அரச படைகள் உடனடியாக நிறுத்த வேண்டும். இது சார்ந்த அழுத்தத்தினை கனேடிய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று எமது கோரிக்கையினையும் இப்பிரசுரம் வழியாக சர்வதேச சமூகத்திற்கு புலம் பெயர்ந்த தமிழ் மாணவர்களாகிய நாம் முன் வைக்கின்றோம். இலங்கை இராணுவத்தினரின் வன்முறைகளில் இருந்து எமைப் பாதுகாத்து கொள்ளவே …

  9. தனியான சந்திப்பில் மன்மோகன் சிங்கிடம் மகிந்த விடுத்த இரு வேண்டுகோள்கள் இந்தியாவிற்கான தனது அண்மைய பயணத்தின் பொழுது மீண்டும் இலங்கையில் யுத்தம் வெடித்தால் இந்திய `அமைதி காக்கும்' படைகளை அனுப்ப வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கேட்டுக் கொண்டதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று தெரிவித்துள்ளது. மன்மோகன் சிங்குடனான சந்திப்பினைத் தொடர்ந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவருடன் இரகசிய சந்திப்பொன்றை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டதாகவும் அதற்கு முதலில் தயங்கிய இந்தியப் பிரதமர் பின்னர் குறுகிய சந்திப்பிற்கு இணங்கியதாகவும் தெரிவித்துள்ள அப்பத்திரிகை, அச்சந்திப்பின் போதே இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. ஆயினும…

    • 2 replies
    • 1.3k views
  10. புங்குடுதீவு தியாகதீபம் திலீபன் மருத்துவமனை கடற்படையினரால் அடித்துடைப்பு Written by Sankiliyan Tuesday, 10 January 2006 புங்குடுதீவு பொது மக்களின் நன்மை கருதி தமிழீழ விடுதலைப் புலிகளின் சுகாதரா சேவையினரால் அமைக்கப்பட்ட தியாக தீபம் திலீபன்; மருத்துவமனை ஸ்ரீலங்கா கடற்படையினரால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளினால் பொது மக்களின் பயன்பாடுகளுக்கென அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள கட்டடங்கள் மற்றும் விளையாட்டு இடங்களை சேதப்படுத்தும் மிகவும் மோசமான செயல்பாடுகளில் படையினர் ஈடுபட்டுவருவதன் தொடர்ச்சியாகவே தியாக தீபம் திலிபன் மருத்துவமனையும் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. போக்கு வரத்து வசதிகள் கூட இல்லாத நில…

  11. திருமலையில் விடுதலைப் புலிகளால் ஒருவருக்கு சாவு ஒறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலையில் விடுதலைப் புலிகளால் ஒருவருக்கு சாவு ஒறுப்பு வழங்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் பெயரைப் பயன்படுத்தி திகோணமலையில் கொள்ளைகள் மற்றும் நிதி வசூலிப்பது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டவருக்கே விடுதலைப் புலிகளால் சாவு ஒறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு சாவு ஒறுப்பு வழங்கப்பட்டவர் விவேகானந்தன் சந்திரகாசன் என அறிவிக்கப்பட்டுள்ளது. நன்றி: சங்கதி

  12. ஈவிரக்கமற்ற புலிகள் இயக்கம் மீது கடும் நிலைப்பாடு எடுக்கவேண்டும் அமெரிக்காவிடம் மங்கள வேண்டுகோள் விடுதலைப்புலிகளை அல்- ஹைடாவை விட மிகவும் அபாயகரமான, ஈன இரக்கமற்ற கொலைகார இயந்திரம் என்று விபரித்திருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, புலிகள் தொடர்பில் அமெரிக்கா கடும் நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு நிதியளிக்கும் புலம் பெயர்ந்த குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். தற்போது அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் அவர் வாஷிங்டன் ரைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் மேலும் தெரிவித்திருப்பதாவது; புலிகள் விடுதலை இயக்கமொன்றுடன் தொடர்பு கொள்ளவில்லை. அல்- ஹைடாவை விட மிகவும் அபாயகரமான ஈவு …

    • 8 replies
    • 2.2k views
  13. பயங்கரவாத செயற்பாடுகளை குருடன் போல் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன் என்கிறார் ஜனாதிபதி இனப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தைகள் மூலமான அரசியல் தீர்வொன்றைக் காண முடியுமென்ற நம்பிக்கை தனக்கு இன்னுமிருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்திருக்கிறார். இதேவேளை, தான் சமாதானத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், எனினும் தீவிரவாத செயற்பாடுகளைக் கண்டும் குருடனாகவோ அல்லது செவிடனாகவோ செயற்படும் வகையில் அந்த அர்ப்பணிப்பு இருக்குமென விடுதலைப் புலிகளோ அல்லது வேறு எவருமோ புரிந்து கொண்டால் அது மிகத் தவறான எண்ணமெனவும் அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார். ஹொரணை, குடா உடுவ நாலந்த வித்தியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாற…

  14. திருமலை கடலில் பலியான தமது சகாக்களுக்கு அஞ்சலி செலுத்துமாறு மக்களை மிரட்டும் கடற்படை வெள்ளைக் கொடி கட்டாவிட்டால் வீடுகளை உடைப்போமெனவும் எச்சரிக்கை திருகோணமலை கடற்பரப்பில் நேற்று முன்தினம் சனிக்கிழமை டோராப் படகு வெடித்துச் சிதறிய சம்பவத்தையடுத்து, திருமலை நகர்ப் பகுதியில் கடற்படையினரின் கெடுபிடிகள் மேலும் அதிகரித்துள்ளன. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: திருமலையில் அனுஷ்டிக்கப்படும் ஹர்த்தாலினால் நகரமே வெறிச்சோடிக் காணப்படுகிறது. வீதியெங்கும் கடற்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடற்கரையை அண்டிய பகுதியிலுள்ள வீடுகளுக்குச் சென்ற கடற்படையினர் பொது மக்களை பலவந்தமாக வெளியில் அழைத்து டோராப் படகு வெடித்துச் சிதறியபோது இறந்ததாக கருதப்…

    • 0 replies
    • 1.1k views
  15. திரிகோணமலையில் விடுதலைப்புலிகள்- ராணுவம் மோதல்: துப்பாக்கி சண்டையில் 2 பேர் பலி கொழும்பு, ஜன. 9- இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ராணு வத்துக்கும் இடையே 3 ஆண்டுகள் நீடித்து வரும் போர் நிறுத்தம் அதிகார பூர்வமாக வாபஸ் பெறப்பட்டாலும் இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் நடை பெற்று வருகிறது. தமிழர் பகுதியில் ராணுவம் கெடு பிடி செய்து வருவதை தொடர்ந்து தமிழர்கள், குடும் பம் குடும்பமாக வெளியேறி வருகிறார்கள். இந்த நிலையில் திரிகோணமலையில் 5 தமிழ் இளைஞர்களை ராணுவம் சுட்டு கொன்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விடுதலைப்புலிகள் ராணுவத்தினர் மீது அதி ரடி தாக்குதல் நடத்தி வரு கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராணுவ படகு மீது விடுதலைபுலிகளின் தற்கொலை…

  16. இளம்யுவதி பாலியல் வன்புணர்வின் பின் படுகொலை - புங்குடுதீவில் கடற்படையினர் கோரத்தாண்டவம் புங்குடுதீவில் இளம்யுவதி ஒருவர் சிறீலங்கா கடற்படையினரால் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். புங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்து வெளியைச் சேர்ந்த இளையதம்பி தர்மினி(20) என்ற யுவதியே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவராவார். குறித்த யுவதி இரவு படுக்கைக்கு தனது பெரிய தாயார் வீட்டிற்கு செல்வது வழக்கம். வழமை போன்று நேற்று இரவு 7மணியளவில் தனது பெரிய தாயர் வீட்டை நோக்கிச் சென்ற யுவதியை சிறீலங்கா கடற்படையினர், வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கிவிட்டு கொலை செய்து புங்குடுதீவு மடத்துவெளி முருகன் கோயிலுக்கு அருகாமையில் உள்ள பாளும் கி…

  17. தமிழர் தாயகத்தின் இதயமாகவும், கேந்திர நிலையமாகவும், பெருமளவு இயற்கைக் கனியவளங்கள் புதைந்து கிடக்கும் இடமாகவும் கருதப்படும் மன்னார் வளைகுடாவில் உள்ள பெற்றோலிய வளங்களை அகழ்ந்தெடுப்பதற்கான ஏற்பாடுகளை இலங்கை அரசு முனைப்புடன் மேற்கொள்ளத் தொடங்கியிருக்கின்றது. இந்தத் திட்டம் நடவடிக்கை தமிழர் தரப்பில் பெரும் சீற்றத்தையும் விசனத்தையும் ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச சக்திகளுடன் சேர்ந்து தமிழர் தாயகத்தின் மூலவளத்தைச் சுரண்டி, சூறையாடி, கொள்ளையிடும் சதித் திட்டத்தை சிங்கள அரசு செயற்படுத்துவதாகத் தமிழர் தரப்புக் கருதுகின்றது. இலங்கை அரசின் இந்தச் செயற்பாடு குறித்து விடுதலைப் புலிகளின் தலைமையும் கோபமுற்றிருப்பதாகத் தெரிகின்றது. மன்னார் வளைகுடாவில் நிலத…

    • 0 replies
    • 1.1k views
  18. சென்னை: ""இலங்கை விவகாரத்தில் இந்தியா நேரடியாக தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும்,'' என இலங்கை எம்.பி., சந்திரசேகரன் வலியுறுத்தினார். சென்னை வந்த இலங்கை எம்.பி., சந்திரசேகரன் தி.மு.க., தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். பின்னர் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். இதன்பின் நிருபர்களிடம் சந்திரசேகரன் கூறியதாவது: இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்தியா நேரடியாக தலையிட்டு இனப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இலங்கை தமிழர்களுடன் கலாசார ரீதியாகவும், இன ரீதியாகவும் தொடர்பு கொண்டுள்ள இந்தியாவுக்கே இப்பிரச்னையை தீர்ப்பதில் அதிக பொறுப்பு உள்ளது. எனவே இலங்கை தமிழர்களை இனியும் அந்நியராக இந்தியா கருதக் கூடாது. இலங்கை ப…

  19. இராணுவத்தின் உயரதிகாரிகளுக்கோ சம்பந்தப்பட்ட ஏனையோருக்கோ தெரியா மல் திருகோணமலை நகரின் பாதுகாப்புக்கு என்ற பெயரில் விசேடமாக அனுப்பப்பட்ட ஒரு சப் இன்ஸ்பெக்டர் தலைமையிலான 24 பேர் கொண்ட விசேட அதிரடிப்படை யினரின் கைவரிசையே திருகோணமலையில் ஐந்து அப்பாவித் தமிழ் மாணவர்களினதும் படுகொலைகள் என இப்போது தகவல்கள் மெல்ல மெல்லக் கசியத் தொடங்கியிருக் கின்றன. ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ பதவி யேற்றதும் அவரது பாதுகாப்பு ஆலோசகராக, ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த பிரமுகரும், முன்னாள் பிரதிப் பொலீஸ்மா அதிபரு மான எச்.எம். பி. டபிள்யூ. கொட்டகதெனிய நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவும் அவ ரது சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செய லாளருமான கோட்டபாய ராஜபக்ஷவும் இந்திய விஜய…

  20. விடுதலைப்புலிகளிடம் அண்மையில் சரணடைந்த களுவன்கேணியைச்சேர்ந்த ஞானதீபனும், அதே ஊரைச்சேர்ந்த தீபனும் இணைபிரியாத நண்பர்கள். ஞானதீபன் விடுதலைப்புலிகளில் இருந்தபோது இவருக்கு தீபன் பல உதவிகளை விடுதலைப் போராட்டத்திற்காக செய்திருந்தார். இதை பிள்ளையானும் நன்குஅறிந்திருந்தார். இதே காலப்பகுதியில் இவர் பங்குடாவெளியைச்சேர்ந்த ஒருபெண்ணை காதலித்து வந்தார். எனவே இவர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிற்கு தற்போதும் செல்ல வேண்டியிருந்தது. இந்நிலையில் புலனாய்வுத்துறை இவரை விசாரித்தது. பின் இவர் சகல நடவடிக்கைகளிலும் இருந்து ஒதுங்கியிருந்தார். இவரது குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம் 3 தங்கைகளும் இருப்பதால் இவரே குடும்பத்தையும் பார்த்து வந்தார். இந்நிலையில் கறுத்தப் பாலத்தை கடந்து செல்பவர்…

  21. ஞாயிறு 08-01-2006 22:06 மணி தமிழீழம் [நிருபர் மாறன்] சிறீலங்கா கடற்படையினருடன் படகுகளில் பயணிப்பதை நிறுத்தியுள்ளோம் - கண்காணிப்புக் குழு கடற்படையினரின் ரோந்து படகுகளில் பயணிப்பதை நிறுத்தியுள்ளதாக போர் நிறுத்தக்கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.திருகோணமலை துறைமுகப்பகுதியில் நேற்று கடற்படையினரின் படகின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது அதில் பயணித்த 13 கடற்படையினர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையி;ல் கடற்படையினரின் படகுகளில் பயணம் செய்வது ஆபத்தானது என்ற அடிப்படையிலேயே இந்த முடிவை மேற்கொண்டதாக போர் நிறுத்தக்கண்காணிப்பு குழுவின் தலைவர் ஹப்ருக் ஹோக்லென்ட் தெரிவித்துள்ளார். கடற்கண்காணிப்பை மேற்கொள்ளும் வகையில் தமது குழுவினர் தனியான படகில் தமது இலச்சினை…

    • 0 replies
    • 1.1k views
  22. இனவெறிப்படையின் கொட்டத்தை அடக்கப் புயலாகப் புறப்படுங்கள் -மட்டு.மாவட்ட பொங்கி எழும் மக்கள் படை- Sunday, January 08 - 06:29:45 (நமது நிருபர்) உங்களது கைகளுக்குள் கை;குண்டையோ அல்லது துப்பாக்கி யையோ திணித்து விட்டு புலியெனக் கூற முற்படும் சிங்கள நயவஞ்சக இனவெறிப்படைகளின் கொட்டத்தை அடக்க புயலாகப் புறப்படுங்கள். இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டப் பொங்கி எழும் மக்கள் படை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது. தமிழ் இளைஞர்களே! யுவதிகளே!! சற்றுச் சிந்தியுங்கள்!!! என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டு ள்ள அத்துண்டுப் பிரசுரத்தில் குறிப் பிடப்பட்டுள்ளதாவது:- அண்மைக் காலமாக தமிழர்கள் மீதான தாக்குதலையும், படுகொலையையும் சிங்கள இனவெறிப் படைகள் தமிழர் தாயக மெங்கும் தி…

    • 4 replies
    • 1.7k views
  23. சிறிலங்காவுக்கு 4 விமானப் பாதுகாப்புக் கருவிகளை வழங்கியது இந்தியா!! சிறிலங்காவுக்கு 4 விமானப் பாதுகாப்புக் கருவிகளை இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளது. இந்திய சிறப்பு விமானத்தின் மூலம் இந்த 4 விமானப் பாதுகாப்பு கருவிகள் நேற்று வெள்ளிக்கிழமை சிறிலங்காவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. தங்களிடம் இருக்கும் ஸ்லிஸ் ரக விமானங்கள் இரண்டைக் கொண்டு விடுதலைப் புலிகள் தாக்குதல்களை நடத்தக் கூடும் என்று சிறிலங்கா அஞ்சியிருந்தது. இந்த நிலையில் இந்திய அரசாங்கம் வழங்கியுள்ள இந்த விமானப் பாதுகாப்புக் கருவிகள் மூலம் முழு இலங்கையையும் கண்காணிக்க முடியும் என்றும் விடுதலைப் புலிகளின் விமானங்கள் குறித்து உடனடியாக அறிந்து கொள்வதற்கும் அவற்றை உடனடியாக அழிப்பதற்கும் உதவும் என்…

    • 34 replies
    • 5.4k views
  24. விடுதலைப்புலிகள் தாக்குதல் எதிரொலி: ராமேசுவரத்தில் கடற்படை ரோந்து தீவிரம் ராமேசுவரம், ஜன. 8- இலங்கையில் விடுதலைப்புலிகள் தமிழ் ஈழம் கேட்டு நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இதனால் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்தினருக்கும் அடிக்கடி சண்டை நடந்து வருகிறது. இதனால் இருதரப்பிலும் ஏராளமானவர்கள் பலியாகி உள்ளனர். இதற்கிடையே நார்வே நாடு சமரச முயற்சியை மேற்கொண்டு போரை முடிவுக்கு கொண்டு வர முயன்றது. ஆனாலும் விடுதலைப்புலிகள்- இலங்கை ராணுவத்தினர் இடையே அவ்வப்போது சண்டைகள் நடைபெற்று வருகிறது. தற்போது இலங்கையின் புதிய அதிபராக ராஜபக்சே பதவி ஏற்ற பிறகு ராணுவத் தினரின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனால் இலங்கையில் பதட்டமான சூழ்நிலை நீடித்து வருகிறது. க…

    • 0 replies
    • 1.2k views
  25. போர் நிறுத்தம் முறிந்து விட்டதா? * சொல்ஹெய்மின் வருகைக்கு முன் எறியப்படவுள்ள குண்டுகளும் தொடரப் போகும் அச்சமும்! போர் நிறுத்த உடன்பாடு முடிவுக்கு வந்துவிட்டதா? போர் தொடங்கி விட்டதாகக் கருதப்படுவதால் போர்நிறுத்த உடன்பாடு குறித்து எவரும் சிந்திக்கப்போவதில்லை. அண்மைக் காலமாக நடைபெற்று வந்த சம்பவங்களெல்லாம் இந்த உடன்பாட்டை முற்று முழுதாகக் கேள்விக் குறியாக்கி வந்த நிலையில் தற்போது இந்த உடன்பாடு முடிவுக்கு வந்துவிட்டதாகவே கருதப்படுகிறது. இதன் உச்சக் கட்டமாக, வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஆழ ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட கிளேமோர் தாக்குதலும் நேற்று அதிகாலை திருகோணமலை கடற்படைத்தளத்திற்கு வெளியே அதிவேக டோரா படகொன்று அழிக்கப்பட்ட தாக்குதலும் அமை…

    • 0 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.