Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சர்வதேச நாடுகளின் இராணுவ உதவி நிறுத்தப்படும்: மகிந்தவுக்கு பகிரங்க எச்சரிக்கை சிறிலங்காவில் பாரிய அரசியல் மாற்றத்தை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உருவாக்காவிட்டால் சர்வதேச நாடுகளின் இராணுவ உதவி நிறுத்தப்படும் என்று சிறிலங்காவுக்கான டொச் தூதுவர் வன் டிஜிக் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கான ஐரோப்பிய பிரதிநிதியாக உள்ள வன் டிஜிக் கொழும்பு ஆங்கில ஊடகத்துக்கு அளித்த நேர்காணல்: அமைதி முயற்சிகளை மீண்டும் தொடங்க மறுத்தால் சிறிலங்கா அரசாங்கமும் போராளிகள் குழுவும் சர்வதேச ரீதியாக ஓரங்கட்டுப்படுகிற நிலை உருவாகி உள்ளது. நாம் வெறும் இராஜதந்திர மொழியில் மட்டும் கேட்டுக்கொள்ளவில்லை. பேச்சுக்களைத் தொடங்க மறுத்தால் சர்வதேச சமூகத்தினது ஆதரவு கைவிடப்படும். இதுதான் இருதரப்…

  2. ஆயுதம் தாங்கிய சிங்களக் காடையர்கள் வெலிக்கந்தை வீதியில் அட்டகாசம், மக்கள் பதற்றம்! [வியாழக்கிழமை, 1 யூன் 2006, 21:31 ஈழம்] [காவலூர் கவிதன்] ஓமடியாமடுப் பகுதியில் 13 சிங்களவர்கள் கொல்லப்பட்டமை மற்றும் துணை இராணுவக் குழுக்களின் முகாம்கள் தமது பகுதிகளில் அமைக்கப்பட்டு சிறிலங்காப் படைகளால் பராமரிக்கப்பட்டு வருவது போன்றவற்றை எதிர்த்து, ஓமடியாமடு கிராமத்தில் நூற்றுக்கணக்கான ஆயதம் தாங்கிய சிங்களவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் இன்று வியாழக்கிழமை இரவு 7:45 மணியளவில் வெலிக்கந்தை ஏ-11 பாதைக்கு வந்த இந்தக் காடையர்கள், அந்த வீதியில் பயணிக்கும் தமிழர்களைத் தாக்குவதற்குத் தயார் நிலையில் காத்திருந்ததுடன், ஆக்ரோசமாக இனவெறியுள…

    • 0 replies
    • 1.2k views
  3. தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களை போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் தலைவர் உல்ப் ஹென்றிசன் கிளிநொச்சியில் இன்று(01.06.2006) சந்தித்து கலந்துரையாடினார். தமிழீழ அரசியல்துறை நடுவப்பணியகத்தில் முற்பகல் 10.30 தொடக்கம் 11.30 வரை இச் சந்திப்பு இடம்பெற்றது. சந்திப்பின் நிறைவில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய நேர்காணால் பின்வருமாறு, கேள்வி:- இந்த சந்திப்பு தொடர்பாக? பதில்:- கண்காணிப்புக்குழு தலைவர் கடந்த மூன்று தினங்களாக இங்கு தங்கியிருந்து நிலைமைகளை பார்வையிட்டார். எமது தளபதிகள், மக்களை சந்தித்து பேசியிருக்கின்றார். இன்று அவர் எம்மை சந்தித்தார். யுத்தநிறுத்த உடன்படிக்கை தொடர்பாகவும் கண்காணிப்புக…

    • 1 reply
    • 1.1k views
  4. விடுதலைப்புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை உத்தியோகபுூர்வமாக அறிவிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பின்னரே தடை குறித்த உத்தியோகபுூர்வ அறிக்கை வெளிவந்திருக்கிறது. இவ்வறிக்கையின் உள்ளடக்கம் புலிகள் மீதான குற்றப் பத்திரிகையாக மட்டும் அமையாமல் அறிக்கையின் பெரும்பகுதி சிறீலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சித்தும் கண்டித்தும் அது நடைமுறைப்படுத்த வேண்டிய விடயங்கள்பற்றி அறிவுறுத்தியும் அமைந்துள்ளது. ஏற்கனவே இணைத்தலைமை நாடுகளின் ரோக்கியோ மே 30நாள் கூட்டப்பிரகடனத்தினால் நொந்துபோயும் சீற்றமடைந்தும் இருக்கும் சிங்கள தேசத்துக்கு மேலும் கடுப்புூட்டுவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கையும் அமைந்துவிட்டது. எனவேதான் சிங்கள தேசம் இப்போது தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் …

  5. புலிகளுக்கு வெள்ளைபூச இணைத்தலைமை நாடுகள் முயற்சி தமிழரை பாதுகாக்குமாறு எமக்கு கற்பிக்கத் தேவையில்லை [01 - June - 2006] [Font Size - A - A - A] -இணைத் தலைமை நாடுகளின் அறிக்கையால் விமல் வீரவன்ச ஆவேசம் இலங்கையின் பிரச்சினையை இந்த வகையில் தான் தீர்க்க வேண்டுமென ஆணையிடும் அதிகாரம் இணைத் தலைமை நாடுகளுக்கு கிடையாது. அவர்கள் எமக்கு ஆணையிட ஆளுநர்கள் அல்ல என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே அதன் பொதுச் செயலாளரும் ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச இதனைத் தெரிவித்தார். …

    • 1 reply
    • 1.5k views
  6. ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது விதித்துள்ள தடையுடன் தமிழ் மக்களுக்கு அற்ப சொற்பமாக சர்வதேச சமூகத்திடம் இருந்த நம்பிக்கையும் அற்றுப்போய்விட்டது. இதனை வன்னிப் பெருநிலப் பரப்பில் வெகுசன ஒன்றியத்தினர் வெளியிட்ட அறிக்கையே வெளிக்காட்டி நிற்கின்றது. அவ்வறிக்கையில், "எமது மக்கள் கொல்லப்படும்போது தனது கண்களை இறுகப் பொத்திக் கொள்ளும் சர்வதேசம் சிங்களவர்களின் தலைமயிர் உதிரும்போதுகூடக் கண் விழித்துக் கொண்டு உரத்த குரல் எடுக்கின்றது. இவற்றின் மூலம் ஒரே ஒரு முடிவிற்கு வருகின்றோம்.நாடற்றவர்கள் உலகில் வாழும் தகுதியற்றவர்கள். அவர்கள் விலங்குகளுக்கும் கீழான நிலையிலேயே கணிக்கப்படுவார்கள்" எனத் தெரிவித்திருப்பதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதியற்ற செயல் குறித்துத்…

  7. வன்முறைகளுக்கு முடிவு கட்டி, சமாதான பேச்சுவார்த்தைகளை மீளவும் ஆரம்பிப்பதற்கு ஏதுவாக, தமிழீழ விடுதலைப் புலிகளுடனான உறவுகள் தொடர்ந்தும் பேணப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை உறுதி செய்து, இன்று அதிகாரபூர்வ அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றியப் பேரவை, கடந்த செப்ரம்பர் மாதம் 27ம் திகதி முதல் விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளின் தொடர்ச்சியாக, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை அமுலுக்கு வந்திருப்பதாக தெரிவித்துள்ளது. இருந்த போதும், தொடரும் வன்முறைகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமே காரணம் அல்ல என்றும், ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக் காட்டியுள்ளது. அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நிகழும் சகல விதமான வன்மு…

  8. வன்முறையைக் கைவிட்டுப் பேச்சுக்குத் திரும்ப புலிகளுக்கு வற்புறுத்து ஆயுதக் குழுக்களின் பயங்கரவாதத்தை இலங்கை விரைந்து தடுக்க வேண்டும்! இணைத் தலைமைகள் கூட்டறிக்கை * விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாதம், வன்முறை ஆகியவற்றைக் கைவிட்டு உடன் அமைதிப் பேச்சுகளுக்கு மீளத் திரும்ப வேண்டும். * இலங்கை அரசு தனது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வன்முறை மற்றும் பயங்கரவாதச் செயல்களில் ஆயுதக் குழுக்கள் ஈடுபடுவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பகிரங்கமான கூட்டறிக்கை மூலம் கோரியிருக்கின்றன இலங்கைக்கு உதவும் நாடுகளின் இணைத் தலைமைகள். கருணா மற்றும் ஈ.பி.டி.பியின் வன்முறை மூலங்களின் தாக்குதல்களைத் தடுக்க இலங்கை அரசு தவறி விட்டதாகவும் இணைத் தலைமை கள் குற்றம் சு…

  9. தொடரும் தமிழினப்படுகொலைகள் - என்ற தலைப்பில் ஈழமுரசு பத்திரிகையில் சு.பாஸ்கரனின் ஆக்கம். http://www.eelamurazu.com/To%20Day%20News/...s/Page%2009.pdf

  10. முன்னரங்க நிலைகளுக்கு சென்று போராளிகளுடன் கலந்துரையாடிய மக்கள் [செவ்வாய்க்கிழமை, 30 மே 2006, 18:58 ஈழம்] [யாழ். நிருபர்] யாழ். வடமராட்சி கிழக்கு மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை நாகர்கோவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகளுக்குச் சென்று போராளிகளுடன் கலந்துரையாடியுள்ளனர். வடமராட்சி கிழக்கு அரசியல்துறைப் பொறுப்பாளர் இசையூரான் தலைமையில் வெற்றிலைக்கேணி, ஆழியவளை, கொடுக்குளாய், உடுத்துறை, வேம்படி, வத்திராயன், மருதங்கேணி, தாளையடி, செம்பியன்பற்று, மாமுனை, நாகர்கோவில், குடத்தனை, பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் முன்னரங்க நிலைப் பகுதிகளுக்குச் சென்றனர். களமுனைத் தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகளைச் சந்தித்த அவர்கள், போராளிகளுக்கு உலர் உணவுகளை வ…

    • 0 replies
    • 1.2k views
  11. ஓமடியாமடு கொலைச் சம்பவத்துக்கு சிறிலங்கா இராணுவமே காரணம்: தயா மாஸ்டர் வெலிக்கந்தை ஓமடியாமடு கொலைச் சம்பவத்துக்கு சிறிலங்கா இராணுவமே காரணம் என்று விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக நீர்ப்பாசனத் திட்டப் பணியில் ஈடுபட்டிருந்த அப்பாவி சிங்களத் தொழிலாளர்களை சிறிலங்கா இராணுவத்தினர் படுகொலை செய்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத் தடையைத் தொடர்ந்து திட்டமிட்டு இந்தப் படுகொலையை சிறிலங்கா இராணுவத்தினர் நடத்தியுள்ளனர். துணை இராணுவக் குழுவான கருணா குழுவினர் அக்கிராமத்தில் இயங்கி வந்தனர். இப்படுகொலைக்குப் பின்னால் அரசியல் உள்நோக்கம்…

  12. மகிந்தவுடன் புலம்பெயர்ந்த கனடா தமிழர் போர் பிரகடனம்! யுூலை 1 முதல் முழுமையான புறக்கணிப்பு சமாதான முன்முயற்சிகளை முழுமையாக சிதைத்து, இலங்கைத்தீவில், அவலத்தையும், அழிவையும் திணிக்கும் வகையில் போர் ஒன்றை முன்னெடுக்க முயலும், மகிந்த அரசிற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், புலம்பெயர்ந்த தமிழருடன் சீண்டாதே என்பதை வலியுறுத் தியும், எமது தாயக உறவுகளை சர்வதேசத்தில் இருந்து நீ தனிமைப்படுத்தலாம் என்று நினைத்தால் நாம் உன்னை சர்வதேசத்தில் இருந்து தனிமைப்படுத்துவோம் என்பதை அடித்துச் கூறும் வகையில், ஒரு துண்டுப்பிரசுரம், ரொரன்ரோவில் நடைபெற்ற உரிமைக்குரலல் நிகழ்வில் இறுதியில் இளையவர்கள் சிலரால் விநியோகிக்கப்பட்டது. அதனை வாசித்த பலரும் அம்முயற்சி பலத்த ஆதரவை வெளியிட்டதையும் காணக்கூட…

    • 9 replies
    • 3.6k views
  13. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்காப் படையினருக்கும் இடையில் நடைபெறும் மோதல்கள் தீவிரம் அடைந்துள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளைப் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதப் இயக்கமாக அறிவித்துள்ளது. பெல்ஜியத்தின் புறுசெல்சில் வழக்கமாக நடைபெறுகின்ற சந்திப்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி இவர்களின் விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் உறையில் நிலையில் வைக்கப்படும். இச்சொத்து முடக்க நடவடிக்கையானது புலிகளின் போர் முனைப்பை பாதிக்கும் என்றும் இவர்கள் ஐரோப்பாவிற்கான கடந்த கால பயணங்கள் யாவும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடமிருந்து பணம் திரட்டுவதற்காகப் பயன்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. பொதுவாக, இத்தடையானது புலிகளின் முகத்தில் அறைந்த இராஜதந்திர அடியாகு…

    • 23 replies
    • 6.7k views
  14. அவுஸ்திரேலியாவில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற உரிமைக்குரல். - பாண்டியன் - ஆழனெயலஇ 29 ஆயல 2006 13:10 புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் மக்களின் ஒன்றுபட்ட எழுச்சி நிகழ்வான உரிமைக்குரல் அவுஸ்திரேலியாவில் இன்று பேரெழுச்சியுடன் நடைபெற்றது. அவுஸ்திரேலியத் தலைநகர் கன்பராவிலுள்ள நடுவன் அரசின் நாடாளுமன்ற கட்டடத்துக்கு முன்பாக ஒன்று திரண்ட தமிழ் மக்கள் அவுஸ்திரேலியாவே தமிழ் மக்களை காப்பாற்று என கோஷம் எழுப்பினர். (படங்கள் இணைப்பு) அவுஸ்திரேலியாவின் பல மாநிலங்களிலுமிருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயணச் சிரமங்களையும் பாராது உரிமைக்குரலி;ல் கலந்துகொண்டனர். சர்வதேச சமூகத்தின் தற்போதைய நிலையையும் சிறீலங்கா அரசின் படுகொலைகளையும் அதனால் தமிழ்மக்கள்…

    • 5 replies
    • 2.3k views
  15. நடுக்கடலில் படகில் தத்தளித்த 9 பேர் மீட்பு இலங்கையைச் சேர்ந்தவர்கள் போர்பந்தர்இ மே.29- குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே நடுக்கடலில் ஒரு படகு தத்தளிப்பதை இந்திய கடலோரக் காவல்படையினர் கண்டறிந்தனர். உடனே அவர்கள் அந்த இடத்துக்கு ரோந்து கப்பலில் விரைந்தனர். அங்கு இலங்கையைச் சேர்ந்த ஒரு படகு இயந்திரக் கோளாறு காரணமாக பழுதுபட்டதால் அதில் இருந்த 9 பேர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரையும் இந்திய கடலோரக் காவல்படையினர் மீட்டு கப்பலில் அழைத்து வந்தனர். போர்பந்தர் வந்து சேர்ந்ததும்இ அவர்களிடம் விசாரணை நடத்தப்படும்.

    • 0 replies
    • 1.4k views
  16. பிரபல சிங்கள திரைப்பட இயக்குநர் அசோக கந்தகம `தினக்குரல்' க்கு விசேட பேட்டி -சோ.ஜெயமுரளி- ` அக்ஷரய' (A Letter of Fire) எனும் சிங்கள திரைப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பிரபல சிங்கள திரைப்பட இயக்குநர் அசோக கந்தகமவின் இத் திரைப்படத்தில் 12 வயது சிறுவன் ஒருவன் தவறான விதத்தில் சித்திரிக்கப்படுவதாகவும் இது சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கையெனவும் கூறி கலாசார அமைச்சர் இத் திரைப்படத்தை இலங்கையில் திரையிட அனுமதிக்க முடியாதென தெரிவித்துள்ளார். தணிக்கை சபையால் திரையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள இத் திரைப்படத்தை கலாசார அலுவல்கள் அமைச்சர் மகிந்த யாப்பா அபேயவர்த்தனவின் அதிகாரத்தை பயன்படுத்தி தேசிய திரைப்பட கூட்டுத் தாபனம் தடை செய்ய முயற்சிப்பதாக இயக்குநர் அசோக கந்தகம தெ…

    • 0 replies
    • 1.6k views
  17. வாழ்வியல் உரிமைகளுக்காகவும், அடிப்படைச் சுதந்திரங்களுக்காகவும்-ஏன் தம் இனத்தின் தனித்துவமான இருப்பை உறுதிப்படுத்தவும் வேண்டி-ஈழத் தமிழர்கள் நடத்திவரும் போராட்டத்தின் சரிதம் நீண்டது; நெருக்கடிகள் நிறைந்தது; கொந்தளிப்பான இந்த வரலாற்றுப் பாதையில் தொடர்ச்சியாகக் கொடூரங்களையும், அடக்குமுறை களையும், கொடும் போரையும் எதிர்கொண்டவர்கள் தமிழர்கள். அந்த வரலாற்று ஓட்டத்திலே மற்றொரு மைல் கல்லிலே நாம் இன்று நிற்கின்றோம். சுயநிர்ணயத்துக்கான தமிழரின் இந்த அரசியல், இராணுவப் போராட்ட வரலாறு சுமார் ஆறு தசாப்த காலத்துக்கு நீண்டு செல்கின்றது. இந்தப் படிநிலை வரலாற்றில், வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு வழிமுறைகளில், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான பல்வேறு முயற்சிகளில் தமிழ…

  18. Started by msuresh,

    ஐரோப்பிய யூனியனிற்கான எதிர்ப்பு மனுவை மே மாதம் 29 ம் திகதிக்கு முன்பு விபரங்களைப் பூர்த்தி செய்து உடன் அனுப்பி வையுங்கள். Online Petition http://www.gopetition.com/online/8663.html Here you have the opportunity to send a direct message to Foreign Minister Dr. Ursula Plassnik (fields marked * are mandatory). http://www.bmaa.gv.at/view.php3?f_id=1438&...LNG=en&version=

    • 0 replies
    • 1.2k views
  19. இலங்கைத்தமிழினைக் காப்பாற்றிய இந்தி - தட்ஸ் தமிழ் இணையத்தளத்தில் வந்த செய்தி http://thatstamil.oneindia.in/news/2006/05...5/25/hindi.html

  20. விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான மன்னார் மடுப்பகுதியில் சிறிலங்காப் படையின் ஆழ ஊடுருவும் படையணியினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் போராளி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். மடு உயிலங்குளம் பகுதியிலிருந்து மடு தேவாலயம் நோக்கிய திசையில் பயணித்த உழவு இயந்திரத்தை இலக்கு வைத்து நேற்று புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் வீரவேங்கை கயல்வெற்றி என்றழைக்கப்படும் யாழ். மாவட்டத்தை சொந்த இடமாகவும் வெள்ளாங்குளம் சந்தியை தற்காலிக முகவரியாக கொண்ட மருதலிங்கம் சிவலிங்கம் என்ற போராளி வீரச்சாவடைதுள்ளதுடன், மன்னார் முட்கொம்பனைச் சேர்ந்த செல்லத்துரை விஜயபாலன் (வயது 22) என்ற இளைஞர் காயமடைந்துள்ளார். காயமடைந்த இளை…

  21. Started by msuresh,

    மிகஅவசரமான எதிர்ப்புமனு http://www.gopetition.com/online/8663.html More informaion about humanrights repport and Photos http://nesohr.org/human-rights-reports/ http://www.tchr.net http://tamilink.org.uk/tl/ http://www.tamilcanadian.com/eelam/hrights/ http://www.tamilnation.org/humanrights.htm

    • 0 replies
    • 1.4k views
  22. லெப் கேணல் வீரமணி வீரமரணம் களமுனைக் கட்டளைத்தளபதி வீரமணி தவறுதலான வெடிவிபத்தில் வீரச்சாவடைந்தார். நேற்று இச்சம்பவம் இடம்பெற்றது. தளபதி வீரமணியின் வித்துடல் கிளிநொச்சியில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு;ள்ளது. இவரது வித்துடலுக்கு அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் பொன் தியாகம் உட்பட பெருமளவு போராளிகளும் மக்களும் அஞ்சலி செலுத்தினர். (தலைப்பு திருத்தப்பட்டு மேலதிக செய்தியும் சங்கதி தளத்தில் இருந்து இணைக்கப்பட்டுள்ளது)

  23. மிகஅவசரமான எதிர்ப்புமனு http://www.gopetition.com/online/8663.html

    • 1 reply
    • 2.3k views
  24. யாழ்ப்பாணம் கோப்பாய் கிறிஸ்தவக்கல்லு}ரி மாணவன் சிறீலங்காப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுப்பிட்டி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த செல்லத்துரை ரமேஸ்கண்ணா (15) என்பவரே இவ்வாறு படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் 5.00 மணியளவில் சிறுப்பிட்டி நோக்கி உறவினர்களுடன் சிற்று}ர்தி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தவேளை வழியில் மறித்து சிற்று}ர்தியை சோதனையிட்ட சிறீலங்கா படையினர் குறித்த மாணவனிடம் சிறீலங்கா தேசிய அடையாள அட்டை இல்லை எனக்காரணம் காட்டி அவரைக்கைது செய்துள்ளனர். க.பொ.த(சாஃத) பாPட்சைக்கு தோற்றுவதற்காக மட்டுமே 16 வயதுடையவர்களுக்கு தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ள வேண்டுமென சிறீலங்காவில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. nitharsanam

  25. வவுணதீவு சிறிலங்கா படைமுகாம் மீது இன்று காலை நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலில் நான்கு சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளனர். முன்னதாக காலை வவுணதீவு முகாமில் இருந்து மக்கள் குடியிருப்புக்களை நோக்கி படையினரால் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. இதனை தொடர்ந்தே வவுணதீவு முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது எனவும் இதில் நான்கு படையினர் கொல்லப்பட்டனர் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதல் சம்பவம் காலை 6:30 மணிக்கு இடம்பெற்றிருக்கின்றது. ஈழநாதம்

    • 0 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.