ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
ஜனாதிபதி மாளிகையில் இருந்து பெறுமதியான 39 ஓவியங்கள் காணாமல் போயுள்ளன ! போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையில் பிரவேசித்த பின்னர் அங்கிருந்த 39 மர மற்றும் கேன்வாஸ் ஓவியங்கள் காணாமல் போயுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி மாளிகையின் 209 ஓவியங்கள் மற்றும் சித்திரங்கள் பாதுகாப்பிற்காக தொல்பொருள் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், அதிகாரிகள் குழுவொன்று அரண்மனைக்கு சென்று தற்போது அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது. தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் (இரசாயனப் பாது…
-
- 1 reply
- 212 views
-
-
அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் வட்டாரப்பிரிப்பில் முரண்பாடு : செவ்வாய் மீண்டும் திட்டவரைபை சமர்பித்தவர்களை சந்திக்கிறார் அரசாங்க அதிபர் ! kugenDecember 31, 2022 (நூருல் ஹுதா உமர்) அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேச உள்ளுராட்சி மன்ற எல்லை நிர்ணயங்களிலும், வட்டார பிரிப்பிலும் மாவட்ட எல்லை நிர்ணயக்குழுவினால் முஸ்லிங்களுக்கு அநீதி இடம்பெற்றுள்ளதாகவும் அதன்காரணமாக இந்த வட்டார பிரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் புதிதாக எல்லைநிர்ணய அறிக்கையை தயாரிக்க வேண்டும் என்று தேசிய எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் வேண்டுகோள் விடுத்தார். தேசிய எல்லை நிர்ணய க…
-
- 0 replies
- 196 views
-
-
”2023 புதிய தீர்க்கமான ஆண்டாக இருக்கும்” 2023 புதிய ஆண்டு நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு புதிய திருப்புமுனையைக் குறிக்கும் ஒரு தீர்க்கமான ஆண்டாக இருக்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் இதனை தெரிவித்துள்ளார். அவரின் வாழ்த்துச் செய்தி வருமாறு, புத்துணர்ச்சியுடன் புதிய வருடம் ஒன்று பிறக்கிறது. புதிய சிந்தனைகள், திடமான நோக்கு என்பவற்றுடன் எண்ணங்களைப் புதுப்பித்துக் கொள்ள இதுவொரு சிறந்த சந்தர்ப்பமாகும். எண்ணிலடங்கா சிரமங்கள், நிச்சயமற்ற சூழ்நிலைகள், ஏமாற்றங்களுடனான ஒரு வருடத்தை முடித்துக்கொண்டு, நாம் 2023 என…
-
- 0 replies
- 323 views
-
-
திலீபனை நினைவு கூர்ந்த விவகாரம்: கொழும்பில் சிவாஜிக்கு எதிராக வழக்கு ! தியாகதீபம் திலீபனை நினைவு கூர்ந்தமை தொடர்பான வழக்கிற்காக எம்.கே. சிவாஜிலிங்கத்தை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் அவரது வீட்டிற்குச் சென்ற வல்வெட்டித்துறை பொலிஸார் எதிர்வரும் 11 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராக வேண்டும் என்ற நீதிமன்ற கட்டளையை வழங்கியுள்ளனர். நீதிமன்ற தடையை மீறி தியாகதீபம் திலீபனை நினைவு கூர்ந்தமைக்காக கடந்த 2020 ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் 15 ஆம் திகதி எம்.கே. சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டிருந்தார். கோண்டாவிலில் வைத்து கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்ற எக்காரிகையை அடுத்து 2 இலட்சம் ரூபாய் சரீர…
-
- 0 replies
- 387 views
-
-
2022 இல் 240 மில்லியன் டொலர் உதவியை அமெரிக்கா வழங்கியுள்ளது – ஜூலி சுங் 2022 ஆம் ஆண்டில் மட்டும் இலங்கைக்கு 240 மில்லியன் டொலருக்கும் அதிகமான உதவிகளை அமெரிக்கா அறிவித்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார். இவ்வாறு வழங்கப்பட்ட உதவியால், அடிப்படை உணவுப் பாதுகாப்பு, மாணவர்களுக்கான மதிய உணவு, விவசாயிகளுக்கு உரம் போன்றவற்றுக்கு உதவியாக இருந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். மேலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பண உதவி உள்ளிட்ட மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் தேவைகளை நிவர்த்திகூடியதாக அமைந்தது என அமெரிக்க தூதுவர் கூறியுள்ளார். இந்த உதவியானது அரசாங்கம், தனியார், சிவில் சமூகம் மற்றும் இலங்கை மக்களுடன் இணைந்து …
-
- 0 replies
- 244 views
-
-
நெல்லியடி கூட்டு பாலியல் வன்புணர்வு : 09 வருடங்களின் பின் சந்தேகநபர் கைது! யாழ்ப்பாணம் நெல்லியடியில் கூட்டு பாலியல் வன்புணர்வு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் 09 வருடங்களின் பின்னர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 07ஆம் திகதி நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முள்ளி பகுதியில் பெண்ணொருவர் கூட்டுப்பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார். சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் தப்பி சென்ற நிலையில் இருவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவருக்கும் எதிராக வழக்கு விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் தப்பி சென்றவருக்கு எ…
-
- 0 replies
- 667 views
-
-
ஹிருணிகாவிடம் 1.5 பில்லியன் ரூபாய் நஷ்டஈடு கோரும் ஆசு மாரசிங்க! வளர்ப்பு நாயை பாலியல் ரீதியில் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக, தன் மீது போலி குற்றச்சாட்டுக்களை சுமத்திய, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர மற்றும் ஆதர்ஷா கரதனா ஆகியோரிடமிருந்து 1.5 பில்லியன் ரூபாய் நஷ்டஈட்டை கோரி ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகர் பேராசிரியர் ஆசு மாரசிங்க அழைப்பாணை அனுப்பியுள்ளார். இதன்படி, ஆசு மாரசிங்க, ஹிருணிகா பிரேமசந்திரவிடம் 500 பில்லியன் ரூபாவும், ஆதர்ஷா கரதனாவிடம் ஒரு பில்லியன் ரூபாவும் நஷ்டஈடாக கோரியுள்ளார். ஆஸூ மாரசிங்கவுடன் உறவுகளை பேணியதாக கூறப்படும் ஆதர்ஷா கரதனா, ஆசு மாரசிங்க வளர்ப்பு நாயை பாலியல் ரீதியில் துன்புறுத்தலுக்கு உட…
-
- 12 replies
- 875 views
-
-
30 ஆயிரத்துக்கும் அதிக அரசாங்க ஊழியர்கள் ஓய்வு - அரசாங்கம் By VISHNU 29 DEC, 2022 | 07:34 PM (எம்.ஆர்.எம்.வசீம்) நாடளாவிய ரீதியில் அரசாங்க ஊழியர்கள் 30,000ற்கும் மேற்பட்டோர் 31 ஆம் திகதியுடன் ஓய்வு பெற்று செலகின்றனர். இவர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் உரிய வேலைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது என பொது நிர்வாக,மாகாண சபைகள், உள்ளூராட்சி சபை இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார். 60 வயது பூரணமான அதிகமான அரச ஊழியர்கள் ஒரே தடவையில் ஓய்வுபெற்றுச் செல்வதால் அந்த வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரி…
-
- 3 replies
- 317 views
- 1 follower
-
-
பணவீக்கம் டிசம்பரில் வீழ்ச்சி - இலங்கை மத்திய வங்கி By NANTHINI 31 DEC, 2022 | 04:55 PM (எம்.மனோசித்ரா) கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் இவ்வருடத்தில் (2022) மூன்றாவது முறையாக டிசம்பரிலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதற்கமைய பணவீக்கம் 57.2 சதவீதமாகவும், உணவு பணவீக்கம் 64.4 சதவீதமாகவும், உணவல்லாப் பணவீக்கம் 53.4 சதவீதமாகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. நவம்பரில் 61 சதவீதமாக காணப்பட்ட பணவீக்கம், டிசம்பரில் 57.2 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வாறு பணவீக்கம் 4 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதை தொடர்ந்து, உணவுப…
-
- 0 replies
- 271 views
- 1 follower
-
-
தமிழ் மக்களின் அண்மைய அரசியல் நிலைமைகளை விளக்குகிறார் எம்.கே.சிவாஜிலிங்கம்
-
- 0 replies
- 236 views
-
-
கூட்டமைப்பே நிபந்தனையின்றி பேச்சுக்கு செல்லாதே க. அகரன் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக குறித்த போராட்டம் இன்று (30) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் படங்களையும், பதாதைகளையும் ஏந்தியிருந்த உறவுகள் 'ராஜபக்ஷ குடும்பம் பேரக்குழந்தைகளை கொஞ்சி மகிழும் போது நாங்கள் பேரக் குழந்தைகளைத் தேடி வீதியில் அழுது திரிகிறோம், நிபந்தனையின்றி ரணில் அரசுடன் பேசாதே, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதி வேண்டும், ஐ.நாவே எமக்கான தீர்வைப் பெற்றுத்தா, வடக்கு - கிழக்கில் இருந்து இராணுவமே வெளியேறு, கூட்டமைப்பே நிபந்தனையின்றி …
-
- 4 replies
- 360 views
- 1 follower
-
-
2023 ஆம் ஆண்டிலாவது பிச்சை எடுப்பதை நிறுத்துங்கள் – கொழும்பு பேராயர் ! 2023 ஆம் ஆண்டிலாவது உலக நாடுகளிடம் கையேந்தாத நிலைக்கு இலங்கை வளர்ச்சியடைய வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். அதற்காக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான புதிய கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். புதிய கட்டமைப்பை உருவாக்கத் தவறினால் நாடு அழிந்துவிடும் என்றும் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை எச்சரித்துள்ளார். இலங்கையுடன் சுதந்திரம் பெற்ற பல நாடுகள் முன்னேறியுள்ள போதும் இலங்கை ஒரு ஏழை நாடு என்ற பிம்பத்தைப் பெற்றுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு காலங்காலமாக தேசத்தை ஆட்சி செய…
-
- 3 replies
- 490 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான பங்காளி கட்சியான இலங்கை தமிழரசு கட்சி தனது பாரம்பரிய கூட்டாளிகளுக்கு மேல் அதிகமாக மற்ற தமிழ் கட்சிகளை சேர்த்து பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான கோரிக்கையை தமிழரசு கட்சியின் அரசியல் குழு நிராகரித்திருப்பதாக தமிழரசு கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்த கருத்தை தமிழரசு கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா வன்மையாக கண்டித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான பங்காளி கட்சியான இலங்கை தமிழரசு கட்சி தனது பாரம்பரிய கூட்டாளிகளுக்கு மேல் அதிகமாக மற்ற தமிழ் கட்சிகளை சேர்த்து பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான கோரிக்கையை…
-
- 3 replies
- 420 views
-
-
கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ணா போதோட்ட இடையில் சந்திப்பு! யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ணா போதோட்ட, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று (சனிக்கிழமை) ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். தலைமை அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனை, வாள் வெட்டு உட்பட்ட சமூக விரோதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாத வகையில், உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருக்கின்ற காணிகளை விடு…
-
- 2 replies
- 282 views
-
-
தமிழ் மக்களின் மனதிலும் தமிழ் மண்ணிலும் வேரூன்றும் முயற்சியாகவே சீனா அரிசியை வழங்கியுள்ளது: ஐங்கரநேசன்! பட்டினியால் குடும்பங்கள் படும் அவலத்தை சீனா சாதகமாகப் பயன்படுத்தித் தமிழ் மக்களின் மனதிலும் தமிழ் மண்ணிலும் வேரூன்றும் முயற்சியாகவே அரிசியை வழங்கி வருவதாக, தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ‘அற்றார் அழிபசி தீர்த்தல்’ என்ற திட்டத்தின்கீழ் பொருளாதார ரீதியாக நலிவுற்றிருக்கும் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கி நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்…
-
- 0 replies
- 604 views
-
-
உள்வருகை மற்றும் வெளியேறலுக்கு அனுமதியுடைய துறைமுகமாக அறிவிக்கப்பட்டது காங்கேசன்துறை துறைமுகம்! காங்கேசன்துறை துறைமுகத்தை உள்வருகை மற்றும் வெளியேறலுக்கு அனுமதியுடைய துறைமுகமாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 23ஆம் திகதி திகதியிடப்பட்டு, இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. காங்கேசன்துறைக்கும், புதுச்சேரிக்கும் இடையில் ஜனவரி மாதம், பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்தநிலையிலேயே காங்கேசன்துறை துறைமுகம், உள்வருகை மற்றும் வெளியேறலுக்கு அனுமதியு…
-
- 0 replies
- 288 views
-
-
மோசடி செய்யப்பட்ட அரச நிதியை அரசுடமையாக்குங்கள் - எல்லே குணவங்க தேரர் பிரதமரிடம் வலியுறுத்தல் By VISHNU 30 DEC, 2022 | 12:45 PM (இராஜதுரை ஹஷான்) பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண நாட்டு மக்களை வதைக்கும் வகையில் வரி அதிகரிப்பதை விடுத்து, மோசடி செய்யப்பட்ட அரச நிதியை அரசுடமையாக்குங்கள் என தேசிய வளங்களை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் எல்லே குணவங்க தேரர் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் வலியுறுத்தினார். மின்கட்டணத்தை அதிரகித்தால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக இருக்க வேண்டும்.மக்கள் படும் துயரத்தை உணர்வுபூர்வமாக சிந்தியுங்கள் எனவும் வலியுறுத்தினார். கொழும்பில் வெள்ளிக்கிழமை (30) இடம்ப…
-
- 0 replies
- 656 views
- 1 follower
-
-
நிலக்கரி கொள்வனவில் மோசடி : எனது கூற்று உண்மையெனில் அமைச்சர் காஞ்சன பதவி விலக வேண்டும் - ஓமல்பே சோபித தேரர் By DIGITAL DESK 2 30 DEC, 2022 | 03:35 PM (இராஜதுரை ஹஷான்) நிலக்கரி கொள்வனவு மோசடி தொடர்பில் நான் முன்வைத்த குற்றச்சாட்டு பொய் என்றால் தண்டனை ஏற்க தயார். குற்றச்சாட்டு உண்மையாயின் மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர பதவி விலக வேண்டும் என மக்கள் பேரவை அமைப்பின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். கொழும்பில் உள்ள மக்கள் பேரவை காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (டிச. 30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அ…
-
- 0 replies
- 203 views
- 1 follower
-
-
வாகன இலக்கத் தகடுகளில் புதிய மாற்றம் Posted on December 30, 2022 by நிலையவள் 6 0 புதிய வாகனப் பதிவுகளுக்காக வாகன இலக்கத் தகடுகளின் மாகாணத்தைக் குறிக்கும் ஆங்கில எழுத்துகள் ஜனவரி 1ம் திகதி முதல் அகற்றப்படும் என மோட்டார் பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. வாகனங்களின் உரிமை மாகாணங்களுக்கு இடையில் மாற்றப்படும் ஒவ்வொரு முறையும் இலக்கத் தகடுகளை மாற்ற வேண்டியிருக்கும் போது வாடிக்கையாளர்களும் மோட்டார் போக்குவரத்து திணைக்களமும் பல சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளதாகவும்,வாகன அனுமதிப்பத்திரங்களை வழங்கும் போது வாடிக்கையாளர்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இலகுபடுத்தும் வகையிலும் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்ப…
-
- 0 replies
- 773 views
-
-
மின்வெட்டு குறித்த அறிவிப்பு By T. SARANYA 30 DEC, 2022 | 04:41 PM நாளை (டிசம்பர் 31) மற்றும் ஜனவரி முதலாம் திகதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இருப்பினும், ABCDEFGHIJKLPQRSTUVW குழுக்களின் கீழ் வரும் பகுதிகளுக்கு ஜனவரி 2 ஆம் திகதி 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பகலில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என ஆணைக்குழு மேலும் தெரிவிததுள்ளது. https://www.virakesari.lk/article/144569
-
- 0 replies
- 549 views
- 1 follower
-
-
இலங்கையில் மீண்டும் கொரோனா மரணங்கள் பதிவு! இலங்கையில் கொரோனா தொற்றினால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி நேற்று (திங்கட்கிழமை) இந்த கொரோனா மரணங்கள் நிகழ்வுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இலங்கையும் கொரோனா பரவல் தொடர்பாக அவதானமாக இருக்க வேண்டும் எனவும் துறைசார் நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றமை குறிப்பிடதக்கது. https://athavannews.com/2022/1317601
-
- 2 replies
- 237 views
- 1 follower
-
-
இந்திய உதவியில் கிடைத்த பாவனைக்குதவாத அரிசி மீட்பு By VISHNU 29 DEC, 2022 | 08:14 PM வவுனியாவில் பாவனைக்கு உதவாத நிலையில் மீட்கப்பட்ட இந்திய உதவியில் கிடைத்த அரிசி தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வவுனியா ஆசிகுளம் கிராம சேவகர் பிரிவில் உள்ள மதுராநகர் கிராமத்தில் அரச கட்டிடமொன்றின் அறையினுள் இந்தியாவின் தமிழ்நாடு அரசினால் வழங்கப்பட்ட நிவாரண அரிசிகள் பதுக்கி வைக்கப்பட்ட நிலையில் அப்பகுதி மக்களால் இன்று(29) கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இவ் விடயம் தொடர்பாக வவுனியா பிரதேச செயலாளருக்கு கிராம மக்களால் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் மாவட்ட செயலக கணக்காய்வு உத்தியோகத்தர்கள்…
-
- 2 replies
- 345 views
- 1 follower
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளின் எல்லை நிர்ணயம் தொடர்பான கலந்துரையாடல். kugenDecember 30, 2022 (எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளின் எல்லை நிர்ணயம் தொடர்பான குழு கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் இன்று (29) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது. உள்ளூராட்சி சபைகளின் எல்லை நிர்ணயம் தொடர்பான கலந்துரையாடலின்போது எல்லை நிர்ணயம் மேற்கொள்ளும்போது எற்படும் நிர்வாக எல்லை பிரிப்புக்கள் தொடர்பான பிரச்சினைகளை இனம் கண்டு அவற்றை தீர்ப்பதற்கான ஆலோசனை மற்றும் கருத்துக்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சமுக அமைப்புக்களின் பிரதி நிதிகளினால் முன் மொழியப்பட்டு அதன் சாத்திய …
-
- 0 replies
- 254 views
-
-
கிளிநொச்சியில் பெண்கள் வாழ்வுரிமைச் சங்க அலுவலகத்தை உடைத்தமைக்கு எதிராக போராட்டம் By Vishnu 30 Dec, 2022 | 01:51 PM கிளிநொச்சி தொண்டமான் நகர் பகுதியில் பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் இணைப்பு அலுவலகம் உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டதை கண்டித்து இன்றையதினம் (30) வாயில் கறுப்பு பட்டிகளை அணிந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி தொண்டமான் நகரில் அமைந்துள்ள பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் மாவட்ட இணைப்பு அலுவலகம் நேற்று முன்தினம் இரவு உடைக்கப்பட்டு பெறுமதி வாய்ந்த இரண்டு மடிக்கணினிகள் மற்றும் கணினி உள்ளிட்ட உபகரணங்களும் ஆவணங்களும் திருடப்பட…
-
- 0 replies
- 587 views
-
-
கட்சிகளின் இணைவுகள் அர்த்தபூர்வமாக இருந்தால் தமிழ் மக்களுக்கு நன்மை - சந்திரகுமார் By Digital Desk 2 30 Dec, 2022 | 02:42 PM கட்சிகளின் இணைவு என்பது முக்கியமல்ல அது ஒரு அர்த்தபூர்வமாக இருக்க வேண்டும். தமிழ் கட்சிகளுக்குள் நான் பெரிய கட்சி நீ பெரிய கட்சி என்ற நிலைப்பாடு மாறும் வரை ஒற்றுமையும் இல்லை, தமிழ் மக்களுக்கு விடுதலையும் இல்லை சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார். வவுனியாவில் சமத்துவக் கட்சியின் வன்னி தலைமை அலுவலக திறப்பு விழாவின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவி…
-
- 0 replies
- 338 views
-