ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
சட்ட விரோத சிறுநீரக வர்த்தகம் : பிரதான தரகர் பாயின் விளக்கமறியல் நீடிப்பு By T. SARANYA 13 DEC, 2022 | 05:18 PM (எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு - பொரளை, கொட்டா வீதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றினை மையப்படுத்தி, ஏழை எளியவர்களை ஏமாற்றி இடம்பெற்றதாக கூறப்படும் சட்ட விரோத சிறுநீரக வர்த்தகம் தொடர்பிலான விசாரணையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, பாய் என அறியப்படும் பிரதான தரகரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டது. கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய இதற்கான உத்தரவை இன்று செவ்வாய்க்கிழமை பிறப்பித்த நிலையில், அவரது விளக்கமறியல் காலம் எதிர்வரும் 28 ஆம் திகத…
-
- 0 replies
- 338 views
- 1 follower
-
-
யாழ் - இந்திய விமான சேவையை அடுத்து படகு சேவை : வெளியான அறிவிப்பு JaffnaSri LankaIndiaJaffna International AirportSevvai Peyarchi 5 மணி நேரம் முன் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான படகு சேவையை விரைவில் ஆரம்பிக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதுவர் ராகேஸ் நடராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் மீள் இயக்க விழாவில் கலந்துகொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார். படகு சேவை கொரோனா தொற்றுக் காரணமான பயணத்தடைகளால் இடைநிறுத்தப்பட்டிருந்த இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமான யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான ந…
-
- 0 replies
- 267 views
- 1 follower
-
-
இலங்கை வங்கி, மக்கள் வங்கி உள்ளிட்ட ஐந்து வங்கிகளுக்கு எதிராக மத்திய வங்கி எடுத்துள்ள நடவடிக்கை Central Bank of Sri LankaHDFC BankThe Bank of Ceylon 9 மணி நேரம் முன் 2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதி பரிவர்த்தனைகள் அறிக்கையிடல் சட்ட விதிகளுக்கு இணங்காத ஐந்து வங்கிகளுக்கு எதிராக இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி குறித்த வங்கிகளுக்கு நிதி அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன. அபராதம் விதிக்கப்பட்டுள்ள வங்கிகள் டீஎப்சீசீ, இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய அபிவிருத்தி வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியவற்றுக்கே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதமாக வசூலிக்கப்பட்ட பணம் ஒருங்கிணைந்த ந…
-
- 0 replies
- 663 views
- 1 follower
-
-
மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து - மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு By DIGITAL DESK 5 13 DEC, 2022 | 02:53 PM (எம்.வை.எம்.சியாம்) மின்சார சபை எதிர்கொண்டுள்ள நட்டத்தை ஈடு செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்ற தீர்மானம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும் கடுமையான நெருக்கடிகளுக்குள் தள்ளப்பட்டுள்ள மக்களை பயமுறுத்தி, அச்சுறுத்தி மின்கட்டணத்தை அறவிடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஊடாக அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்புக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்தார். மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெர…
-
- 0 replies
- 388 views
- 1 follower
-
-
150 இலங்கை பெண்கள் அடிமைகளாக விற்பனை ஏ.எச்.ஏ. ஹுஸைன் இலங்கையிலிருந்து டுபாய் நாட்டிற்கு சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து ஓமான் நாட்டில் தாங்கள் அடிமைகளாக விற்கப்பட்டுள்ளதாகவும் தங்களை மீட்டெடுக்குமாறும் கோரி, ஓமானிலிருந்து 150க்கும் மேற்பட்ட பெண்கள் அவலக் குரல் எழுப்பி மன்றாடியுள்ளனர். இந்த விடயம் சம்பந்தமாக பாதிக்கப்பட்டு நிர்க்கதி நிலையில் உள்ளதாகக் கூறப்படும் வீட்டுப் பணிப்பெண்கள் அங்கிருந்து தகவல்களை அனுப்பி வைத்துள்ளதுடன், காணொளிகளும் வெளியிடப்பட்டுள்ளன. அவர்களால் வெளியிடப்பட்ட தகவல்களில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் பெண்கள் ஜனாதிபதியிடம் உருக்கமாக இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளனர். அதில் அவர்கள் தெரிவி…
-
- 11 replies
- 1k views
- 2 followers
-
-
யாழ். காரைநகரில் காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம் By VISHNU 13 DEC, 2022 | 01:33 PM யாழ்ப்பாணம், காரைநகர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட காரைநகர் - நீலங்காடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான 40 ஏக்கர் காணியை இலங்கை எழாறா கடற்படை முகாமிற்கு அளவிடுவதற்கு மக்கள் பாரிய எதிர்ப்பை வெளியிட்டனர். குறித்த காணியை அளவிடுவதற்கு நில அளவைத் திணைக்களத்தினர் இன்றையதினம் வருகை தந்தபோது அப்பகுதியில் கூடிய பொதுமக்கள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஒன்று கூடி தமது எதிர்ப்பை வெளியிட்டனர். அதனையடுத்து அங்கு வந்த நில அளவைத் திணைக்களத்தினர், மக்களுக்…
-
- 0 replies
- 569 views
- 1 follower
-
-
மீண்டும் காணி சுவீகரிப்பு நடவடிக்கை: கடற்படை முகாமிற்கு முன்னால் மக்கள் கூட்டம் ! முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் கடற்படை முகாமிற்கு காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கொழும்பில் இருந்து ஒரு அணி, நில அளவை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் அறிந்ததையடுத்து, அதனைத் தடுத்து நிறுத்துவதற்காக கடற்படை முகாமிற்கு முன்னால் மக்கள் திரண்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ள நிலையில் குறித்த பகுதியில் சுமார் பத்திற்கும் மேற்ப்பட்ட புலனாய்வாளர்களும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட்டுவாகல் பகுதியில் தமிழ் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் நிலங்களை கடந்த 13 வருடங்களாக ஆக்கிரமித்து பாரிய …
-
- 1 reply
- 365 views
- 1 follower
-
-
இலங்கைக்கு உதவி கிடைக்க கூடாது என்பதற்காகவா மனித உரிமைகள் குறித்து உலக நாடுகள் பேசுகின்றன- நியுசிலாந்து தூதுவரின் பதில் என்ன? By RAJEEBAN 13 DEC, 2022 | 03:20 PM இலங்கைக்கு உதவிகள் கிடைக்ககூடாது என்பதற்காக இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் குறித்து பேசவில்லை என இலங்கைக்கான நியுசிலாந்து தூதுவர் மைக்கல் அப்லெடென் தெரிவித்துள்ளார் பேட்டியொன்றில் இதனை குறிப்பிட்டுள்ள அவர்; என விரும்புகின்றோம் இலங்கை அரசாங்கம் பொருளாதார விடயங்களிலும் ஆட்சி தொடர்பான விடயங்களிலும் சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என தெரிவித்துள்ளார் டெய்லிமிரருக்கான பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்த…
-
- 0 replies
- 533 views
- 1 follower
-
-
தேர்தல்களில் கூட்டமைப்பின் கட்சிகள் தனித்தனியாக போட்டியிட ஆராய்வு! தேர்தல்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சிகள் தனித்தனியாக முகம் கொடுப்பது தொடர்பில் தொழில் நுட்ப ரீதியில் ஆராயப்பட்டுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டம் நேற்று (11) வவுனியா, குடியிருப்பு கலாசார மண்டபத்தில் தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் இடம்பெற்றது. அதன் பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தமிழரசுக் கட்சியின் மத்திய கு…
-
- 9 replies
- 1k views
- 1 follower
-
-
வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட நால்வர் ஆயுதங்களுடன் கைது! யாழ்ப்பாணம், வலிகாமம் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட நால்வர், வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் பொலிஸ் விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே அவர்கள் வாள்கள் மற்றும் , கூரிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நால்வரையும் , அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்களையும் மேலதிக நடவடிக்கைக்காக மானிப்பாய் பொலிசாரிடம் , பொலிஸ் விசேட அதிரடி படையினர் கையளித்துள்ளனர். https://athavannews.com/2022/1315200
-
- 0 replies
- 324 views
-
-
மின் கட்டண பாக்கியை செலுத்த அமைச்சர்களுக்கு 2 வார கால அவகாசம்! தற்போதைய அமைச்சர்களுக்கு மின் கட்டணத்தை செலுத்துவதற்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த, பல அமைச்சர்களினால் அதிகளவான மின்சாரக் கட்டணங்கள் தீர்க்கப்படாமல் இருப்பதைக் கருத்தில் கொண்டு புதிய செயல்முறையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்தார். அமைச்சர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் அவர்களது உத்தியோகபூர்வ இல்லங்களை காலி செய்ய மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்ட போதிலும், அந்த காலத்தின் போது அத்தகைய வீடுகளுக்கான கட்டணங்கள்…
-
- 0 replies
- 160 views
-
-
சர்வகட்சி கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை – உதய கம்மன்பில ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (செவ்வாய்கிழமை) பிற்பகல் நடைபெறவுள்ள சர்வகட்சி கூட்டத்தில் தமது கூட்டமைப்பு பங்கேற்காது என உத்தர லங்கா கூட்டமைப்பின் உப தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வுக்காக அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த தயார் என ஜனாதிபதி அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்திருந்தார். இதற்கமைய அமைய இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. https://athavannews.com/2022/1315298
-
- 0 replies
- 725 views
-
-
தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய விலை நிலவரம் ! இந்நாட்டில் தங்கத்தின் விலையில் இன்று செவ்வாய்க்கிழமை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தங்கப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த வாரம் தங்கப் பொருட்களின் விலையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இன்றைய தங்கம் விலை பின்வருமாறு பதிவு செய்யப்பட்டது. தங்க அவுன்ஸ் 649,160.00 24 கரட் 1 கிராம் ரூ. 22,900.00 24 கரட் 8 கிராம் (1 பவுன்) ரூ. 183,200.00 22 கரட் 1 கிராம் ரூ. 21,000.00 22 கரட் 8 கிராம் (1 பவுன்) ரூ. 167,950.00 21 கரட் 1 கிராம் ரூ. 20,040.00 21 கரட் 8 கிராம் (1 பவுன்) ரூ. 160,300.00 https://athavannews.com/2022/1315291
-
- 0 replies
- 398 views
-
-
இனப்பிரச்சினையை தீர்த்து புலம்பெயர் தமிழர்களது முதலீட்டைப்பெற்று இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே பேச்சுவார்த்தையின் நோக்கம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் By DIGITAL DESK 2 12 DEC, 2022 | 11:10 AM இந்த இனப்பிரச்சினையை தீர்த்து புலம்பெயர் தமிழர்களது முதலீட்டையும் நிரப்பி, ஒட்டுமொத்தமாக இந்த இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவற்கு ஒரு மிகப்பெரிய தேவை ஒன்று இருப்பதால் நாங்கள் எங்களுடைய முக்கியத்துவத்தை இந்த சந்தர்ப்பத்தில் விளங்கிக் கொண்டு தமிழ் மக்களால் தெரிவு செய்யப்படவர்கள் என்ற வகையில் செயற்பட வேண்டும் என்பது தான் எங்களுடைய நோக்கம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்…
-
- 12 replies
- 766 views
- 1 follower
-
-
நான்கு நாடுகளை அவசரமாக அழைக்கிறார் செல்வம் எம் .பி க. அகரன் ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை தொடருமானால் பேச்சுவார்த்தைக்கு இந்தியாவின் தலைமையில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடாவின் மேற்பார்வை தேவை என்பது எமது பிரதான கோரிக்கையாக இருக்கும் என்று தெரிவித்த வன்னி மாவட்ட பாராளுமன்ற செல்வம் அடைக்கலநாதன், இல்லாவிட்டால் எம்மை வைத்து தங்கள் நலனை பார்க்கும் பேச்சாக அமைந்துவிடும் என்றும் சுட்டிக்காட்டினார். வவுனியாவல் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் நேற்று (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில், “5 தமிழ் கட்சிகள் சம்பந்தர் தலைமையில் கூடி சில தீர்மானங்களை ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்தோம். அதனை நடைமுறைப்படுத்…
-
- 3 replies
- 413 views
-
-
(எம்.மனோசித்ரா) இந்தியாவின் புதுடில்லி நகரில் ஏற்பட்ட வளி மாசடைவின் தாக்கம் கடந்த சில தினங்களாக இலங்கையிலும் பாதிப்பினை ஏற்படுத்தியது. அதற்கமைய தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் இன்று (12) திங்கட்கிழமை காலை 8 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கைக்கு அமைய, ஞாயிற்றுக்கிழமையுடன் ஒப்பிடும் போது சில மாவட்டங்களில் வளி மாசடைவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை பாரியளவில் உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்ற போதிலும் , சுவாசம் தொடர்பான பிரச்சினைகள் காணப்படுவோர் அவதானமாக செயற்பட வேண்டும் என்றும் , மேலும் ஓரிரு நாட்களுக்கு இந்நிலைமை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கைக்கு அமைய காற்று தரக்குறியீடான…
-
- 7 replies
- 837 views
- 1 follower
-
-
கடும் குளிரால் இறக்கும் கால்நடைகள்! நாட்டில் நிலவும் கடும் குளிரால் கால்நடைகள் பல்வேறு நோய் நிலைகளுக்கு முகம்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கில் ஆடுகள், மாடுகள் மற்றும் கோழிகள் பல இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னகர் பகுதியில் சிவராசா சிவகாந்தன் என்பவரது பண்ணையில் இருந்த கால்நடைகளே இவ்வாறு உயிரிழந்தும், உயிருக்காக போராடியும் வருகிறது. இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளன. கால்நடைகளில் உயிரை பாதுகாக்கும் செயற்பாட்டில் பண்ணையாளரும், அயல…
-
- 33 replies
- 1.9k views
- 2 followers
-
-
தன்னை பதவிவிலகுமாறு மத்திய குழுவினால் கோர முடியாது – இரா.சம்பந்தன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தன்னை பதவிவிலகுமாறு மத்திய குழுவினால் கோர முடியாது என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார். திருகோணமலையில் செயற்படாத நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள சம்பந்தனை பதவி விலக்கி, வல்லமையுள்ள ஒருவரை நியமிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. இவ்வாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை இரா.சம்பந்தன் நிராகரித்துள்ளதாக நேற்று நடைபெற்ற இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து சம்பந்தனுடன் பேசுவதற்கு மாவை சேனாதிராசா, சீ.வீ.கே.சிவஞானம், எம்.ஏ.சுமந்திரன், ப.சத்தியலிங்கம் ஆகியோர் அடங்கிய 4…
-
- 7 replies
- 1.4k views
- 2 followers
-
-
ஜனாதிபதி உண்மையான அக்கறையுடன் இருந்தால் இந்திய மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க இணங்க வேண்டும் - சி.வி.விக்னேஸ்வரன் By DIGITAL DESK 5 12 DEC, 2022 | 10:07 AM ஒற்றை ஆட்சியின் கீழான எந்த ஒரு தீர்வும் அர்த்தமுள்ள ஒரு தீர்வாக அமையாது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை பற்றி கலந்துரையாடுவதற்காக 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சந்திப்பு ஒன்றுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். ஒற்றை ஆ…
-
- 3 replies
- 282 views
- 1 follower
-
-
மக்களுக்கு மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை ! By VISHNU 12 DEC, 2022 | 08:00 PM (எம்.மனோசித்ரா) மோசடியான தொலைபேசி அழைப்புக்கள், குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள் மற்றும் சமூக வலைத்தள வலையமைப்புகள் ஊடாக ஆட்களை ஏமாற்றுவது தொடர்பில் பொதுமக்களை மிக அவதானத்துடன் இருக்குமாறு மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது. மோசடியான தொலைபேசி அழைப்புகள், குறுந்தகவல்கள், மின்னஞ்சல் செய்திகள் மற்றும் சமூக வலைத்தள செய்திகள் போன்றவற்றின் ஊடாக வெளிநாட்டுத் தொழிலுக்கு அனுப்புவதாக வாக்குறுதியளித்து அல்லது பல்வேறு பெறுமதிவாய்ந்த பொருட்களைக் கொண்ட பொதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு சுங்கத் தீர்வைகளைச் செலுத்துமாறு கோரி இவ்வாறான மோசடிகள் இடம்பெறுகின்றனர…
-
- 0 replies
- 476 views
- 1 follower
-
-
திருகோணமலை கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் திகதி சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் அதில் பயணித்த மீனவரொவருவரை 16 நாட்களின் பின்னர் ஞாயிற்றுக்கிழமை (11) இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். 5 மீனவர்களுடன் பயணித்த 'ஹிம்சரா' பல நாள் மீன்பிடி இழுவை படகு சீரற்ற காலநிலையை தொடர்ந்து சங்கமன் கந்த முனையிலிருந்து 46 கடல் மைல் தொலைவில் படகு கவிழ்ந்தது. மேற்படி விடயத்தை மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் ஊடாக தகவலை உறுதிப்படுத்திய பின்னர் மீனவர்களை மீட்பதற்காக தென்கிழக்கு கடற்பரப்பில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த எஸ் எல் என் எஸ் ரணரிசியை கடற்படையினர் அனுப்பியுள்ளனர். அனர்த்தம் பற்…
-
- 0 replies
- 1k views
-
-
செக்ஸ் தேடலில் இந்த ஆண்டும் இலங்கை : அதிலும் வடக்குமாகாணம் முதலிடம் !!! கூகுள் தேடல் மென்பொருளில் செக்ஸ் என்ற வார்த்தையை அதிகம் தேடிய நாடுகளில் இந்த ஆண்டும் இலங்கை முதலிடத்தை பெற்றுள்ளது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவின்படி இரண்டாவது இடத்தை வியட்நாமும், மூன்றாவது இடத்தை பங்களாதேஷும் பெற்றுள்ளன. இலங்கையில் வடக்கு மாகாணத்திலேயே செக்ஸ் என்ற வார்த்தை அதிகமாக கூகுள் மென்பொருளில் தேடப்பட்டுள்ளதாக குறித்த தரவுகள் காட்டுகின்றன. இதேவேளை இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை முறையே ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்கள் பெற்றுள்ளன. https://athavannews.com/2022/1314970
-
- 44 replies
- 4.1k views
- 2 followers
-
-
யாழ்ப்பாணத்தில் போராளிகள் நலன்புரிச் சங்கம் அங்குரார்ப்பணம்! போராளிகள் நலன்புரிச் சங்கம் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) “இனத்துக்காக உழைத்தவர்களை இன்னலின்றி வாழ வைப்போம்” எனும் தொனிப் பொருளில் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ். இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது. சர்வ மத தலைவர்களின் ஆசியுரையோடு இடம்பெற்ற குறித்த நிகழ்வில் போராளிகள், சட்டத்தரணி தவராசா மற்றும் சர்வ மத தலைவர்கள், வர்த்தக பிரதிநிதிகள், முன்னாள் போராளிகள் என பலரும் கலந்து கொண்டிந்தனர். https://athavannews.com/2022/1314985
-
- 11 replies
- 803 views
-
-
இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பான எந்தவொரு சொற்பதமும் ஜனாதிபதியின் அழைப்பில் இல்லை இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பான எந்தவொரு சொற்பதமும் ஜனாதிபதியின் அழைப்பில் இல்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஒற்றையாட்சிக்குள் தீர்வு எந்தவகையும் சாத்தியமில்லாத நிலையில் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு மக்களை ஏமாற்ற தாம் விரும்பவில்லை என்றும் ஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஒற்றையாட்சிக்குள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனக்கான அரசியல் அங்கீகாரத்தினை தேட முனையும் பேச்சுக்களில் பங்கேற்று வரலாற்று தவறிழைக்க தாம் தயாராக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும…
-
- 0 replies
- 395 views
-
-
“ஒற்றை ஆட்சியின் கீழான எந்த ஒரு தீர்வும் அர்த்தமுள்ள தீர்வாக அமையாது” ஒற்றை ஆட்சியின் கீழான எந்த ஒரு தீர்வும் அர்த்தமுள்ள தீர்வாக அமையாது என்றும் அதுவே தமது கட்சியின் நிலைப்பாடு என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை பற்றி கலந்துரையாடுவதற்காக எதிர்வரும் 13 ஆம் திகதி சந்திப்பு ஒன்றுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள நிலையில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். ஏற்கனவே இருக்கின்ற 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த முடியாத ஜனாதிபதி துணிச்சலானதும் சரியானதுமான ஒரு அணுகுமுறையை கையாள்வாரா என்பதில் நம்பிக்கை இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயின…
-
- 0 replies
- 299 views
-