ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
80 அழகிகளை இலங்கைக்கு கொண்டுவரும் டயானா கமகே 80 நாடுகளைச் சேர்ந்த 80 அழகிகள் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகே நேற்று (19) தெரிவித்தார். மிஸ் டூரிசம் வேர்ல்ட் இறுதிப்போட்டி டிசம்பர் 8 முதல் 21 வரை கொழும்பில் நடைபெறவுள்ளது. சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகே தலைமையில் நாட்டின் புகழுக்காகவும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காகவும் இநிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . 80 நாடுகளிலிருந்து வரும் அழகிகள் 2 வாரங்கள் நாட்டில் தங்கியிருப்பதுடன் கண்டி, அனுராதபுரம், பொலன்னறுவை, சிகிரியா, ஹபரணை, எல்ல, அறுகம்பே, மிரிஸ்ஸ உள்ளிட்ட முக்கிய சுற்றுலா இடங்களுக்கும் விஜயம…
-
- 1 reply
- 347 views
-
-
சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்குச் சென்ற 183 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்ரேலியாவிற்கு வந்த 183 இலங்கையர்கள் திருப்பியனுப்பப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலிய கடல் எல்லைப் பாதுகாப்பின் கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற பிராந்திய மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோத குடியேற்ற படகுகள் வருவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தங்கள் நாட்டுக்கு வரும் அகதிகள் அனைவரையும் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இருந்…
-
- 1 reply
- 665 views
-
-
பதவிகளை ஏற்காது மக்கள் நலனுக்காக அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார் - சஜித் By NANTHINI 20 OCT, 2022 | 05:08 PM (எம்.மனோசித்ரா) பதவிகள் எதனையும் ஏற்காமல், மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு நாம் தயாராக உள்ளோம். அதற்கு அரசாங்கம் மக்கள் மீது பிரயோகிக்கும் அடக்குமுறைகளை கைவிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். மஹரகம பல் மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு புதன்கிழமை (ஒக் 19) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், மக்க…
-
- 0 replies
- 160 views
- 1 follower
-
-
தீபாவளி முற்பணம் ரூபா 15,000 ஆயிரம் தருவதாக ஏமாற்றம் - தொழிலாளர்கள் போராட்டம் By T. SARANYA 20 OCT, 2022 | 04:30 PM (க.கிஷாந்தன்) தீபாவளி முற்பணம் ரூபா 15,000 ஆயிரம் தருவதாக பெருந்தோட்ட கம்பனிகள் அறிவித்திருந்த போதிலும் அக்கரப்பத்தனை பெருந்தோட்ட கம்பனிக்கு உட்பட்ட அக்கரப்பத்தனை வேவர்லி, மோனிங்டன், போட்மோர், ஆடலி உள்ளிட்ட தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு 5,000 ரூபாய் அல்லது பத்தாயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் முற்பணம் தருவதாக இன்று அறிவித்ததை அடுத்து இத்தோட்டத்தை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு முன்பாக கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணி நேரம் போராட்டத்தில் ஈடுப்பட்டதோ…
-
- 0 replies
- 579 views
- 1 follower
-
-
அனைத்து சிறைச்சாலைகளிலும் நூலகங்கள் ஸ்தாபிக்கப்படும் - சிறைச்சாலைகள் திணைக்களம் தகவல் By T. SARANYA 20 OCT, 2022 | 01:41 PM (எம்.வை.எம்.சியாம்) நாட்டின் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் நூலகங்களை ஸ்தாபிப்பதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஆணையாளர் மற்றும் ஊடகப் பேச்சாளரும் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நாட்டில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் நூலகங்களை அமைப்பதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. மேலும் அனைத்து சிறைச்சாலை நூலகங்களுக்கும் தேவையான புத்தகங்கள் கிடைத்துள்ளது. மேலும் கை…
-
- 1 reply
- 156 views
- 1 follower
-
-
மக்களின் வருமானத்தில் 75 வீதம் உணவுக்கே செலவு By T. SARANYA 20 OCT, 2022 | 01:14 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) நாட்டில் ஐந்தில் ஒரு பகுதி மக்கள் மாத்திரமே போஷாக்கான உணவை உட்கொள்வதாகவும், மக்களின் வருமானத்தில் 75 சதவீதத்ததை உணவுக்காக செலவிடப்படுவதாகவும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால திட்டங்களை அடையாளம் காணும் தேசிய சபை உப குழு கூட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 10 வருடங்களாக நாட்டில் நிலவும் போஷாக்கின்மை நிலைமை, தற்போதைய பொருளாதார நெருக்கடியுடன் அதிகரித்துள்ள நிலையில், இந்நிலைமையை இல்லாமல் செய்வதற்கு மேற்கொள்ளக்கூடிய குறுகிய மற்றும் நடுத்தர கால நடவடிக்கைகள் குறித்து இந்தக…
-
- 0 replies
- 267 views
- 1 follower
-
-
22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலர் எதிர்ப்பு 22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் நேற்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்போது 22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த கலந்துரை…
-
- 1 reply
- 375 views
-
-
இலங்கையில் பச்சை நிற அப்பிள் உற்பத்தி – முதல் பழம் ஜனாதிபதியிடம் கையளிப்பு. இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பச்சை நிற அப்பிள் பழத்தின் முதல் அறுவடை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) முற்பகல் பழம் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. எம்.பி. லக்ஷ்மன் குமார எனும் விவசாயியே கல்கமுவ, தம்புத்தேகம பிரதேசத்தில் இரண்டு ஏக்கர் காணியில் இந்த அப்பிள் விளைச்சலை மேற்கொண்டுள்ளார். மேற்படி விவசாயிடம் பயிர்ச்செய்கை தொடர்பில் தகவல்களைக் கேட்டறிந்த ஜனாதிபதி, அப்பிள் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுவதை நேரில் வந்து பார்ப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் கூறினார். அப்…
-
- 0 replies
- 458 views
-
-
தமிழ் பிரதேசங்களில் பொலிஸார் தமது கடமைகளை செவ்வனே செய்வதில்லை – கலையரசன் தமிழ் பிரதேசங்களில் பொலிஸார் தமது கடமைகளை செவ்வனே செய்வதில்லை. இலஞ்சம் ஊழலுக்குள் அவர்கள் அகப்பட்டு சட்டம் ஒழுங்கை நிலை நாட்டும் விடயங்களில் ஒதுங்கி நிற்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார். அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழாவில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “யுத்தத்தினால் பாதிக்கப்பட்டதன் பின்னர் வடக்கிலும் கிழக்கிலும் அதிகமான இராணுவத்தினரும் பொலிசாரும் குவிக்கப்பட்டுள்ள இந்த நிலையில் இங்கு வாழும் இளைஞர்களை போதை…
-
- 0 replies
- 210 views
-
-
தவறான பொருளாதாரக் கொள்கையால் பாரிய இழப்பு – கோட்டாவை சாடிய ஜனாதிபதி ! கடன் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முன்னெடுத்து முறையாக பொருளாதாரத்தை நிர்வகிக்க அரசாங்கம் தயாராக உள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வரிக் கொள்கை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (புதன்கிழமை) விசேட அறிக்கை ஒன்றை விடுத்து இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் முன்னெடுத்த தவறான பொருளாதாரக் கொள்கையால் நாடு 700 பில்லியன் ரூபாயை இழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் கடந்த இரண்டரை வருடங்களில் 2300 பில்லியன் ரூபாய் நாணயம் அச்சிடப்பட்டதால் பணவீக்கம் 70% ஆல் அதிகரித்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். நேரடி வரிகளை உயர்த்தி, நாட…
-
- 0 replies
- 513 views
-
-
புனர்வாழ்வு சட்டமூலத்தில் உள்ள சில சரத்துகள் அரசியலமைப்பிற்கு முரணானது – உயர் நீதிமன்றம் புனர்வாழ்வு சட்டமூலத்தில் உள்ள சில சரத்துகள் அரசியலமைப்பின் 112 (1)வது பிரிவுக்கு முரணானது என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு அல்லது அதன் சரத்துகள் சிலவற்றைத் திருத்திய பின்னரே அது தொடர்பான வரைபு நிறைவேற்றப்பட வேண்டுமென உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புனர்வாழ்வு பணியக சட்டமூல வரைவு கடந்த செப்டம்பர் 23ஆம் திகதி நாடாளுமன்றத்த…
-
- 0 replies
- 201 views
-
-
பொது இடங்களில் கழிவுகளை வீசுவோர் தொடர்பில் ஆதாரம் தருவோருக்கு சன்மானம் – யாழ்.மாநகர சபை அறிவிப்பு யாழ்.மாநகர எல்லைக்குள் வீதிகள் மற்றும் பொது இடங்களில் குப்பைகளை வீசுகின்றவர்களை புகைப்படம் மற்றும் காணொளி பதிவு செய்து ஆதாரத்துடன் மாநகரசபைக்கு அறிவிப்பவர்களிற்கு குறித்த குற்றத்திற்காக அறவிடப்படுகின்ற தண்டப்பணத்தில் பத்து வீத தொகையினை சன்மானமாக வழங்குவதென யாழ்.மாநகர சபை தீர்மானித்துள்ளது. யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற மாநகர சபைக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டது. மேலும், யாழ்.மாநகரசபை எல்லைக்குட்பட்ட குடியிருப்பாளர்களின் வீடுகளுக்கு முன்னுள்ள வீதியோரத்தினை அவர்கள் தூய்மையாக பேண வேண்டும். வீதியோரங்கள் …
-
- 0 replies
- 335 views
-
-
நல்லூர் மந்திரி மனை புனரமைப்பு பணிகள் ஆரம்பம்! தமிழர் மரவுரிமைச் சின்னங்களை அதன் தனித்துவம் மாறாமல் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கையளிக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண மரவுரிமை மையமானது வரலாற்றுத் தொன்மை மிக்க நல்லூர் இராஜதானி காலத்தை நினைவுபடுத்தும் மந்திரிமனையினைப் புனரமைக்கும் பணியினை ஆரம்பித்துள்ளது. தொல்பொருள் திணைக்களத்தின் தொழில்நுட்ப உதவியுடனும், அனுமதியுடனும், நன்கொடையாளர்கள் மூலம் யாழ்ப்பாண மரவுரிமை மையத்திற்கு கிடைத்த நிதியில் நல்லூர் இராஜதானி காலத்தை நினைவுபடுத்தும் மந்திரிமனையினைப் புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மந்திரிமனையுடன் சேர்ந்து வளர்ந்துள்ள மரமானது மந்திரிமனையின் நீண்டகால பாதுகாப்பு…
-
- 0 replies
- 282 views
-
-
யாழ்.நல்லூர் இராஜதானியை நினைவுபடுத்தும் மந்திரிமனையினைப் புனரமைக்கும் பணிகள் ஆரம்பம் தமிழர் மரவுரிமைச் சின்னங்களை அதன் தனித்துவம் மாறாமல் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கையளிக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண மரவுரிமை மையமானது வரலாற்றுத் தொன்மை மிக்க நல்லூர் இராஜதானி காலத்தை நினைவுபடுத்தும் மந்திரிமனையினைப் புனரமைக்கும் பணியினை ஆரம்பித்துள்ளது. இதேவேளை மந்திரிமனையுடன் சேர்ந்து வளர்ந்துள்ள மரமானது மந்திரிமனையின் நீண்டகால பாதுகாப்பு மற்றும் அதன் உறுதித்தன்னையினை சீர்கெடாமல் பாதுகாக்கும் நோக்குடன் வெட்டப்பட்டு மருந்து ஏற்றும் செயற்பாடு நடைபெற்று வருகின்றது. …
-
- 0 replies
- 156 views
-
-
யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க எதிர்ப்பு! கோண்டாவிலில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கும் யாழ் மாநகர முதல்வரின் முயற்சியை நேற்றைய யாழ் மாநகர சபை அமர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியும் கூட்டாக நிராகரித்து. யாழ் மாநகரசபைக்கு சொந்தமான 11 ஏக்கர் நிலப்பரப்பு கோண்டாவில் பகுதியில் உள்ளது. குறித்த நிலமானது தற்போது எத்தகைய பயன்பாட்டிற்கும் உட்படுத்தப்படாத நிலையில் உள்ளது. குறித்த ஆதனத்தில் யாழ் மாநகரசபை எல்லைக்குள் உள்ள பொதுமக்களிற்கு நீர் விநியோகம் செய்கின்ற கிணறுகள் அமைந்துள்ளன. எதிர்வரும் காலங்களில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் யாழ் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளிற்கு நீர் விநியோகப் பணி ஆரம்ப…
-
- 8 replies
- 588 views
- 1 follower
-
-
புலிகள் மீதான தடையினை நீக்குமாறு இந்தியவிடம் ஜனநாயக போராளிகள் கட்சி கோரிக்கை! புலிகள் மீதான தடையினை நீக்குமாறு இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்ததாக ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி தெரிவித்தார். ஜனநாயக போராளிகள் கட்சியினர் இந்தியாவுக்கு அன்மையில் விஜயம் செய்த போதே குறித்த கோரிக்கையை முன்வைத்ததாக அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்தில் இன்று (புதன்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “அண்மையில் ஜனநாயக போராளிகள் கட்சிக்கு இந்தியா செல்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கிட்டியது அந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் டில்லியில் பாஜகவின் முக்கியஸ்தர் ஒருவரை சந்தித்தபோது பல…
-
- 2 replies
- 266 views
-
-
அம்மான் படையணி உதயம் October 6, 2022 தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியினால் உருவாக்கப்பட்ட அம்மான் படையணி என்ற இளைஞர் படையானது எமது சமூகத்தை சீர்படுத்துவதற்கான படையணியாகும். எங்களுக்கு வன்முறைகள் தேவையில்லை. இளைஞர்களை வழி மாறி போக விடாமல் எமது கட்டுப்பாட்டுக்குள் நேர்கோட்டில் பயணிக்க வைக்க வேண்டும் என்பது எமது விருப்பம் என அக் கட்சியின் உப தலைவரும் அம்மான் படையணியின் தலைவருமான ஜெயா சரவணா தெரிவித்தார் . யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியில் அம்மான் பட…
-
- 31 replies
- 2k views
-
-
பழமையான சட்டங்களை திருத்தம் செய்யும் பொறுப்பு பாராளுமன்றத்துக்குண்டு - நீதி அமைச்சர் By DIGITAL DESK 5 19 OCT, 2022 | 05:59 PM (இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்) பழமையான சட்டங்களை காலத்தின் தேவைக்கமைய திருத்தம் செய்யும் பொறுப்பு பாராளுமன்றத்துக்கு உண்டு. பெரும்பாலான சட்டங்கள் எதிர்வரும் காலங்களில் திருத்தம் செய்யப்படும் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஷ ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார். பாராளுமன்றில் புதன்கிழமை (19) ஐந்து சட்டத்திருத்தச் சட்ட திருத்த மூல வரைபுகளை சபைக்கு முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும…
-
- 1 reply
- 195 views
- 1 follower
-
-
இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் - ஜனாதிபதியிடம் டொனால்ட் லு உறுதி By VISHNU 19 OCT, 2022 | 07:18 PM கடன் மறுசீரமைப்பு தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு (Donald Lu) தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கயை சந்தித்த போதே டொனால்ட் லு இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சந்திப்பு இன்று (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றதுடன், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Chung) ,மற்றும் அரசியல் மற்றும் பொ…
-
- 0 replies
- 157 views
- 1 follower
-
-
முல்லைத்தீவு ஆனந்தபுரத்தில் மனித எச்சங்கள் மீட்பு By VISHNU 19 OCT, 2022 | 05:56 PM கே .குமணன் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் கடந்த 11.10.2022 அன்று இனம் காணப்பட்ட மனித எச்சங்கள் மீதான தடயவியல் பரிசோதனை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய இன்று 19.10.22 மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பொலீசாரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிதி ரி.சரவணராஜா முன்னிலையில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்போது தடையவியல் பொலீசார், மாவட்ட மருத்துவமனை சட்டவைத்திய அதிகாரி ஆர்.றொஹான் மற்றும் பொலீசார் ஆகியோர் முன்ன…
-
- 0 replies
- 302 views
- 1 follower
-
-
டியோகோ கார்சியாவின் சாகோஸ் தீவில் உள்ள இலங்கை தமிழர்களை மூன்றாம் உலக நாடொன்றிற்கு பிரிட்டன் அனுப்பலாம் என அச்சம் By RAJEEBAN 19 OCT, 2022 | 01:22 PM சாகோஸ் தீவில் தஞ்சமடைந்துள்ள இலங்கை தமிழர்கள் ருவான்டா பாணியில் தாங்கள் நாடு கடத்தப்படலாம் என அச்சம் வெளியிட்டுள்ளனர். பிரிட்டன் உரிமை கோரும் சாகோஸ் தீவில் தஞ்சமடைந்து புகலிடம் கோரும் இலங்கை தமிழர்களே பிரிட்டன் தங்களை ருவாண்டா பாணியில் நாடு கடத்தலாம் என அச்சம் வெளியிட்டுள்ளனர். சாகோஸ்தீவில் உள்ள இலங்கையர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பமுடியாவிட்டால் இன்னுமொரு பெயர் தெரியாத இடத்திற்கு அனுப்பப்படுவார்கள் என அரசாங்க சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர் ( பிரிட்டன்) …
-
- 0 replies
- 176 views
- 1 follower
-
-
இலங்கையில் ரணில் உருவாக்கிய நல்லிணக்க குழு கண்துடைப்பா? 35 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. இதன் முதற்கட்டமாக, நல்லிணக்கம் தொடர்பிலான அமைச்சரவை உப குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த உபகுழுவை நியமிப்பதற்காக, ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கையில் வாழும் பல்லின மக்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காக மற்றும் வடக்கு, கிழக்கு மோத…
-
- 0 replies
- 180 views
- 1 follower
-
-
மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இருவர் கடத்தப்பட்டமை குறித்த வழக்கு – கோட்டாவுக்கு மீண்டும் அழைப்பாணை மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இருவர் கடத்தப்பட்டமை தொடர்பான வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை அனுப்புமாறு உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான மனுவை இன்று (புதன்கிழமை) ) விசாரித்த காமினி அமரசேகர, யசந்த கோதாகொட மற்றும் ஏ. எச். எம். டி. நவாஸ் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நுவான் போபகே, நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்ததுடன் மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜ…
-
- 0 replies
- 147 views
-
-
பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும் எரிபொருளை ஆராய நடவடிக்கை By T. SARANYA 19 OCT, 2022 | 03:27 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும் அளவு மற்றும் தரம் குறித்து ஆராய்வதற்கு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நுகர்வோர் மற்றும் சேவை அதிகார சபையுடன் இணைந்து எடை அளவீடு திணைக்களம் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும், அமைச்சரவையின் அங்கீகாரத்தின் அனுமதியுடன் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார். நுகர்வோருக்…
-
- 0 replies
- 126 views
- 1 follower
-
-
தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் இன்று விடுதலை! பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் இன்று விடுதலை செய்யப்படவுள்ளனர். ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் இன்று விடுதலை செய்யப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே சார்ல்ஸ் நிர்மலநாதன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் இதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் நீதி அமைச்சருக்கு வடக்கு கிழக்கு மக்கள் சார்பாக அவர் நன்றியும் தெரிவித்துள்ளார். இவ்வாறு விடுதலை செய்யப்படுபவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செ…
-
- 1 reply
- 173 views
- 1 follower
-