ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143576 topics in this forum
-
பிச்சைக்காரனுக்கும் மேடை அமைத்து பேசமுடியும் – மைத்திரி தெருவில் பிச்சைக்காரனுக்கும் மேடை அமைத்து அதில் ஏற முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் பிரவேசம் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். எதிர்வரும் தேர்தலில் சுதந்திரக் கட்சி பரந்துபட்ட கூட்டணியுடன் போட்டியிடும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஆளும்கட்சியின் பேச்சுக்கு உட்பட்டு செயற்படுகின்றார் என்றும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். இந்த அரசாங்கத்தினாலும் நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை என அவர் …
-
- 0 replies
- 157 views
-
-
ஸ்ரீலங்கன் விமான சேவையை தனியார் மயமாக்குவது தொடர்பான அமைச்சரவை தீர்மானத்திற்காக காத்திருப்பு ஸ்ரீலங்கன் விமான சேவையை தனியார் மயமாக்குவது தொடர்பான இறுதி அமைச்சரவை தீர்மானம் காத்திருப்பதாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி ரிச்சர்ட் நட்டால் (Richard Nuttall) தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் போது உலகின் ஏனைய விமான சேவைகளைப் போன்று ஸ்ரீலங்கன் விமான சேவையும் நட்டத்தை சந்தித்த போதிலும் கடந்த 12 மாதங்களில் நிறுவனம் செயற்பாட்டு இலாபத்தை ஈட்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் முழுமையான இலாபம் இன்னும் கிடைக்கப்பெறவில்லை எனவும் கடந்த காலங்களில் ஏற்பட்ட நட…
-
- 0 replies
- 151 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகளை சந்தித்தார் அமைச்சர் விஜயதாச ! நீண்ட காலமாக சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகளை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழில் சந்தித்து கலந்துரையாடினார். சில தமிழ் அரசிகள் கைதிகள் அண்மையில் விடுவிக்கப்பட்ட நிலையில் எஞ்சியுள்ள 34 பேரையும் விடுவிக்க இந்த சந்திப்பின்போது கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக சாதகமான நிலைப்பாட்டியே பின்பற்றி வருவதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இதன் போது தெரிவித்தார். இதேவேளை சிறையில் உள்ளவர்களின் வழக்கு நிலைமைகள் குறித்து சட்டமா அதிபருடன் தொடர்ந்து கலந்துரையாடி விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். குறித்த …
-
- 0 replies
- 133 views
-
-
“எந்த அரசியல் கட்சியும் மக்களின் நலனுக்காக செயல்படுவதில்லை” - ஆகவே பொதுமக்கள் வரவிருக்கும் தேர்தல்களில் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க கூடாது. - தம்மரதன நாயக்க தேரர்.- நாட்டிலுள்ள எந்தவொரு அரசியல் கட்சியும் பொது மக்களின் நலனுக்காக செயற்படுவதில்லை என மிஹிந்தலை ரஜமஹா விஹாராதிபதி வளவஹங்குணவேவே தம்மரதன நாயக்க தேரர் தெரிவித்துள்ளார். ஆகவே பொதுமக்கள் வரவிருக்கும் தேர்தல்களில் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க கூடாது என தம்மரதன நாயக்க தேரர் தெரிவித்துள்ளார். நாட்டின் வீழ்ச்சிக்கு அனைத்து தரப்பினரும் காரணம் என்பதனால் இலங்கையை ஆட்சி செய்த அரசாங்கங்கள் மீது தமக்கு நம்பிக்கை இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்க…
-
- 0 replies
- 157 views
-
-
சுமந்திரனால் தமிழ் தேசியம் தேய்ந்து செல்கிறது. இனியும் சுமந்திரன் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம் – கே.வி. தவராசா குற்றச்சாட்டு. இனியும் சுமந்திரன் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம் என்ற சிறீதரநின் கருத்தை முற்று முழுதாக ஏற்றுக்கொள்வதாக இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்புகிளை தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராஜா தெரிவித்துள்ளார். யாழில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் கூறிய இந்த விடயத்தினை நான் கட்சிக்குள் உள்வாங்கப்பட்ட பின்னர் 2010 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை 12 ஆண்டுகளாக தொடர்ச்சியாக கூறி வருகிறேன். கட்சி என்று கூறும் போத…
-
- 12 replies
- 595 views
- 1 follower
-
-
புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிக்கு ஆதரவளிக்கத் தயார் என்கிறார் சம்பந்தன் By NANTHINI 30 OCT, 2022 | 09:13 PM (ஆர்.ராம்) உள்ளக சுயநிர்ணயத்தினை உறுதிப்படுத்தும் வகையில் மக்களிடத்தில் இறைமையை பகிரும் வகையிலான புதிய அரசியலமைப்பு உருவாக்கும் முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுக்கும் பட்சத்தில், அதற்கு முழுமையான ஆதரவினை அளிப்பதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தயாராகவே உள்ளதாக அதன் தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ள போதும், தற்போது வரையில் அவை நடைமுறைப்படுத்தப்படாதுள்ள நிலையில், இதயசுத்தியுடன் தற்போது முன்னெட…
-
- 1 reply
- 235 views
- 1 follower
-
-
ஒவ்வொரு சூழ்நிலையிலும் அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவு வழங்கியது - ஜனாதிபதி By VISHNU 30 OCT, 2022 | 08:50 PM அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 74 வருடகால உறவை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், நாடு நெருக்கடியை எதிர்கொண்ட போதெல்லாம் இலங்கைக்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவை ஒருபோதும் மறக்க முடியாது என்றும் தெரிவித்தார். கொழும்பில் கடந்த 28ஆம் திகதி அமெரிக்க தூதரகத்தின் புதிய கட்டிடத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டபோதே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இதனைத் தெரிவித்தார். இறுதி யுத்தத்தின் போது அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இட…
-
- 1 reply
- 397 views
- 1 follower
-
-
முன்னாள் போராளிகளின் விபரம் திடீரென சேகரிப்பு செ.கீதாஞ்சன் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் முன்னாள் போராளிகளின் முழுமையான விபரங்களை திரட்டும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது. புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர் யுவதிகள் தொடர்பிலான அடிப்படை தகவல்களை சேகரித்தல் என்ற தகவலுக்கு அமைய நீதி அமைச்சின் கீழ் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள முன்னாள் போராளிகளின் விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. வாழ்வாதார உதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தினால் இந்த விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது. https…
-
- 9 replies
- 829 views
- 1 follower
-
-
போலி ஆவணங்கள் தயாரித்த இருவர் கைது By VISHNU 30 OCT, 2022 | 07:07 PM (எம்.வை.எம்.சியாம்) கொழும்பு - பொரளை பிரதேசத்தில் போலி ஆவணங்களை தயாரித்த இருவர் 29 ஆம் திகதி சனிக்கிழமை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் 47 மற்றும் 64 வயதுடைகளுடைய, கொழும்பைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் போலிப் பிறப்பு சான்றிதழ்கள், கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்கள், திறந்த பல்கலைக்கழக சான்றிதழ்கள், மாணவர்களின் செயல்திறன் குறிக்காட்டிகள், நீர் கட்டண சீட்டு , வங்கி அனுமதி சீட்டுகள், சாதாரண மற்றும் உயர்தர பரீட்சை பெறுபேற்று சான்றிதழ…
-
- 0 replies
- 478 views
- 1 follower
-
-
தமிழ் அரசியல் கைதி ஒருவருக்கு உயர் விருது ஒன்று வழங்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று அரச இலக்கிய விருது வழங்கும் நிகழ்வில் விருதொன்றை அவர் தன்வசப்படுத்திக் கொண்டார். ஆதுரசாலைக்கு விருது சிவலிங்கம் ஆருரன் என்ற தமிழ் அரசியல் கைதி ஒருவரே தான் எழுதிய நூலுக்காக இந்த விருதினைப் பெற்றுக் கொண்டுள்ளார் . ஆரூரன் எழுதிய “ஆதுரசாலை” என்ற தமிழ் நாவலுக்கு சிறந்த நாவலாக விருது வழங்கப்பட்டது. கொழும்பு – பித்தலை சந்தியில் 2006ம் ஆண்டு நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, அவர் தற்போது சிறைவாசம் அனுபவித்து வருகின்றார். சிறையில் இருந்தவாறே, புத்தகமொன்றை எழுதியமைக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. சிறை…
-
- 16 replies
- 953 views
- 2 followers
-
-
சவூதி - ரியாத் boulevard இல் வியாழன் மற்றும் வெள்ளியன்று நடந்த "ஸ்கேரி வீக்கெண்ட்" சீசன் இல் Holloween நிகழ்வுகள் இடம்பெற்றன. பார்வையாளர்களை பயமுறுத்தும் ஆடைகளை அணிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ரியாத் boulevard இற்கு இலவச நுழைவு வழங்கப்பட்டது. திகிலூட்டும் மாறுவேடங்களைக் காண்பிப்பதற்காகவும், சவுதியை சேர்ந்த மற்றும் அந்நாட்டில் வசிக்கும் மக்களின் ஆக்கப்பூர்வமான வடிவமைப்புகளை அணிவகுப்பதற்காகவும் இந்த நிகழ்வு அர்ப்பணிக்கப்பட்டது என தெரிவிக்க படுகிறது. பல்வேறு கேரக்டர் உடைகளுக்குப் பின்னால் உள்ள கதைகளை பார்வையாளர்களுக்கு இவர்கள் வெளிப்படுத்தியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன அப்துல்ரஹ்மான…
-
- 9 replies
- 665 views
-
-
திருடர்களை பாதுகாக்க திருடர்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கம் இது - சஜித் By NANTHINI 30 OCT, 2022 | 04:02 PM (க. கிஷாந்தன்) திருடர்களை பாதுகாத்துக்கொள்வதற்காக திருடர்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கமே இது. இப்படியான அரசாங்கத்துக்கு எவ்வாறு ஆதரவு வழங்குவது? மக்களை வீழ்த்திவிட்டு, பிணங்கள் மீது நின்று மீண்டெழுவதில் பயன் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் நுவரெலியா விஜயத்தின்போது மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுச்சாமி இராதாகிருஷ்ணனின் ஏற்பாட்டின் பேரில் நேற்று சனிக்கிழமை (ஒக் 29) இரவு நுவரெலியா அரலிய விருந்த…
-
- 1 reply
- 472 views
- 1 follower
-
-
ராஜபக்ஷக்களை மக்கள் முழுமையாக நிராகரிக்க வேண்டும் - சரத் பொன்சேகா By NANTHINI 30 OCT, 2022 | 07:00 AM (எம்.மனோசித்ரா) நாட்டு மக்கள் தற்போது அனுபவிக்கும் துயரங்களுக்கு தாமே காரணம் என்பதை உணராமல், மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறும் ராஜபக்ஷக்களின் ஆட்சி அமைக்கப்பட்டால், தற்போதுள்ளதை விட கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியேற்படும். எனவே, மக்கள் அவர்களை முழுமையாக நிராகரிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். பயங்கரவாத விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முத…
-
- 2 replies
- 296 views
- 1 follower
-
-
யாழ்.மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு! By VISHNU 30 OCT, 2022 | 03:08 PM யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டு , யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 4 அடி 5 அங்குலம் உயரமுடைய பச்சை நிற சேலை அணிந்த பெண்ணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் வைத்திய சாலை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. https://www.virakesari.lk/article/138691
-
- 1 reply
- 206 views
- 1 follower
-
-
கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தாமதம் - இந்தியாவுடனான பேச்சுவார்த்தையில் சில சர்ச்சைகள் By RAJEEBAN 30 OCT, 2022 | 12:18 PM கடன்மறுசீரமைப்பு தொடர்பான இந்தியாவுடனான பேச்சுவார்ததைகள் வித்தியாசமான தரவுகள் குறித்த சர்ச்சையில் சிக்கியுள்ளன என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தங்களிற்கு இதுவரை வழங்கப்பட்ட ஆவணங்கள் பல கேள்விகளை எழுப்பியுள்ளன என தெரிவித்துள்ள இந்தியா பல கேள்விகளை எழுப்பியுள்ளது. கடன் மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளிற்காக ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் சாகல ரட்நாயக்க கடந்த வாரம் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டவேளை இந்தியா இது குறித்து சுட்டி…
-
- 0 replies
- 170 views
- 1 follower
-
-
சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு மக்களின் முட்டாள்தனமான மனப்பான்மையே தடையாக உள்ளது- டயனா கமகே By RAJEEBAN 30 OCT, 2022 | 11:27 AM சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு மக்களின் முட்டாள்தனமான மனப்பான்மையே தடையாக உள்ளது என இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார் சண்டே ஓப்சேவரிற்கான பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். சிங்கப்பூரை விட அதிகளவு மக்களை கவரும் இடங்களை கொண்ட இலங்கையால் ஏன் சுற்றுலாப்பயணிகளை கவரமுடியவில்லை என்ற கேள்விக்கே டயனா கமகே இவ்வாறு தெரிவித்துள்ளார். எங்களின் முட்டாள்தனமான மனோநிலை காரணமாக எங்களால் சிங்கப்பூர் போல சுற்றுலாப்பயணிகளை கவரமுடியாது என அவர் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 163 views
- 1 follower
-
-
யாழ் மாவட்டத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பு யாழ் மாவட்டத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் தரவுகளில் இருந்து தெரியவருகிறது.2022ஆம் ஆண்டு 16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் மீது பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் 9 சம்பவங்களும் யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்தியத்தில் 15 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.இதேவேளை யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்தியத்தில் உள்ள சுன்னாகம் பிரிவில் அதிகமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 2020 ஆம் ஆண்டு பாரதூரமான வன்முறைச் சம்பவங்கள…
-
- 0 replies
- 181 views
-
-
நவம்பர் 2 ஆர்ப்பாட்டத்திற்கு முழுமையான ஆதரவு - சம்பிக்க ரணவக்க By T. SARANYA 29 OCT, 2022 | 03:52 PM (இராஜதுரை ஹஷான்) ஜனநாயகத்திற்கு எதிரான அரசாங்கத்தின் அடக்குமுறை, பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 2 ஆம் திகதி (புதன்கிழமை) கொழும்பில் இடம்பெறும் போராட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். மக்கள் போராட்டம் வெகுவிரைவில் கிளர்ச்சியாக வெளிப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். சிவில் அமைப்புக்களின் தலைவர்களுடன் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கொழும்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். …
-
- 0 replies
- 153 views
- 1 follower
-
-
கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் காயங்களுக்குள்ளாகிய யானை By DIGITAL DESK 5 30 OCT, 2022 | 06:41 AM புத்தளம் எலுவாங்குளம் கங்கைவாடி பகுதியில் காயங்களுக்குள்ளகிய நிலையில் கொம்பன் யானையொன்று காணப்படுவதாக வண்ணாத்திவில்லு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து குறித்த பகுதிக்கு சென்று காயங்களுக்குள்ளான கொம்பன் யானையை தேடும் முயற்சியில் ஈடுபட்டு நேற்று மாலை கண்டுபிடித்துள்ளதாக வண்ணாத்திவில்லு வனஜீவராசிகள் திணைக்கள வலைய உதவிப் பொருப்பதிகாரி எம்.பி.எல்.எஸ் மாரசிங்ஹ தெரிவித்தார். இந்த நிலையில் விலங்குளை வேட்டையாடுவதற்கு வைக்கப்பட்டிருந்த கட்டுத்துப்பாக்கி வெடித்ததில்…
-
- 0 replies
- 92 views
- 1 follower
-
-
புதிய பயணத்தை ஆரம்பித்துள்ள அமைச்சர்கள் குழு: ஆளும்கட்சிக்குள் மேலும் பிளவு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மற்றுமொரு அமைச்சர்கள் கட்சியில் இருந்து பிரிந்து தனி குழுவை அமைப்பதற்கு தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவிகளை வகிக்கும் பலர் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பதவிகள் இல்லாமல் இருக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவும் இதில் இணைவதற்கு தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அடுத்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் நேரடியாக தொடர்பு கொள்ளாமல் தனியான குழுவாக கூட்டணி அமைக்கும் நோக்கில் அவர்க…
-
- 0 replies
- 103 views
-
-
மாத்தறை துப்பாக்கி பிரயோகம்: பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல் ! மாத்தறையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 15 வயது சிறுவன் மீதான துப்பாக்கி பிரயோகம் குறித்து மாத்தறை பிரதான நீதவான் முன்னிலையில் இன்று விசாரணை இடம்பெற்ற போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக அவர் மீதான குற்றச்சாட்டை சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் ஏற்றுக்கொண்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1307755
-
- 0 replies
- 376 views
-
-
ஜனாதிபதி பொதுஜன பெரமுன கட்சியின் அழுத்தங்களால் சரியாகச் பயணிக்க முடியாத நிலையில் உள்ளார்-மைத்ரிபால சிறிசேன எதிர்வரும் தேர்தலில் பரந்த கூட்டணியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கை மகளிர் சங்கம் மற்றும் இலங்கை இளைஞர் சங்கம் ஆகியவற்றின் பொதுச் சபைக் கூட்டங்களின் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் பொதுஜன பெரமுன கட்சியின் அழுத்தங்களுக்கு ஜனாதிபதி உள்ளாகி சரியாகச் பயணிக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1307769
-
- 0 replies
- 393 views
-
-
வடக்கு அபிவிருத்தி தொடர்பில் வடக்கு ஆளுநர் ஜப்பான் தூதரகம் இணைந்து கலந்துரையாடல் 29 Oct, 2022 | 09:31 AM வட மாகாணத்தில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பாங்கெடுப்புகள் தொடர்பில் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ஹிடோக்கி மிசுகோஷி இணைந்து கொழும்பில் நேற்று (28) கலந்துரையாடலை ஏற்பாடு செய்தனர். குறித்த கலந்துரையாடலில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ஹிடேக்கி மிசுகோஷி, மாற்றுக் கொள்கைக்கான மையம் (CPA ) - கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க இந்தியாவில் உள்ள இலங்கை தூதுவர் மிலிந்த மொரகொட,வடக்கு ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் தன்யா ரத்னாவல், கொரிய தூதுவர் ச…
-
- 3 replies
- 775 views
- 1 follower
-
-
யாழில்.இயங்கும் வன்முறை கும்பலான ஆவா குழுவின் தலைவன் கைது! யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் சிறுவன் மீது வாள் வெட்டு தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் , யாழில் இயங்கும் ஆவா குழுவின் தலைவன் என பொலிஸாரினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள வினோதன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தவணை ஒன்றுக்காக சென்று திரும்பிய நிலையிலேயே விநோதன் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் , கைது செய்யப்பட்ட வினோதனிடம் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் அவரிடமிருந்து வாள் ஒன்றினையும் மீட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். உரும்பிராய் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் மீது , தீபாவளி தினமான கடந்த திங்கட்கிழமை இணுவில் பகுத…
-
- 12 replies
- 1.2k views
-
-
அமெரிக்க துணைத் தூதர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு அரசியல் தரப்புகளை சந்தித்து கலந்துரையாடினார். இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு அரசியல் தரப்புகளை சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளை தனித்தனியாக அமெரிக்க துணை தூதர் சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாண சபை அவை தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தரப்புக்கள் தனியாகவும் அகில இலங்கை தமிழ் க…
-
- 23 replies
- 936 views
- 1 follower
-