Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ்.பல்கலைக்கழகத்தில்... மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான, நிலையம் திறந்துவைப்பு! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான நிலையம் இன்றைய தினம் திறந்துவைக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட கட்டடத் தொகுதியின் கீழ்த் தளத்தில் உருவாக்கப்பட்ட இந்த மாற்றுத் திறனாளிகளுக்கான நிலையம் நேற்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணியளவில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவினால் திறந்து வைக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் சம வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலும் ஊக்குவிக்கும் முகமாகவும் அவர்களின் எதிர்பார்ப்புகளினை பூர்த்தி செய்வதற்காகவும், இந்நிலையம்…

  2. அனைத்து கடைகள் மற்றும் களியாட்ட விடுதிகள் 10 மணிக்கு பின்னர் பூட்டப்படுவதால் கொழும்பு நகரம் செயலற்று போய்விடுவதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே ஊடகங்களிடம் நேற்று தெரிவித்திருந்தார். மேலும், நேரத்தை செலவிட நகரத்துக்கு வருவோரை இது பாதிப்பதாகவும் நாட்டில் இரவு பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்த அவர், மன்னாரை பொழுது போக்கு வலயமாக மாற்றலாம் என்றும் மேலும் சில சர்சை கருத்துகளையும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மன்னார் குறித்த அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டம் தொடர்பாக தரக் குறைவாக பேசுவதற்கு இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்க…

    • 7 replies
    • 1.1k views
  3. கொழும்பில் வீடுடைத்து திருடும் 2 பேர் கைது ; நகைகள், பொருட்கள் உள்ளிட்டவை மீட்பு By T. SARANYA 16 SEP, 2022 | 02:28 PM (எம்.எப்.எம்.பஸீர்) கொள்ளுபிட்டி, பம்பலபிட்டி, வெள்ளவத்தை மற்றும் நாரஹேன்பிட்டி பகுதிகளை அச்சுறுத்தி வந்த, வீடுடைத்து திருடும் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரை, கொழும்பு தெற்கு வலய குற்ற விசாரணை பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஐ.ஆர்.சி. எனப்படும் நாட்டில் குற்றவாளியாக ஏற்கனவே பதிவுப் பட்டியலில் இருக்கும் நபர் ஒருவர் உட்பட இருவரையே இவ்வாறு கைது செய்ததாக பொலிஸார் கூறினர். சந்தேக நபர்களிடமிருந்து உருக்கப்பட்ட 20 பவுன் தங்கம், 24 கரட் தங்க முலாம் பூசிய புராதன பெறுமதி மிக்க தட்டு,ஒட்டகத்தின் உ…

  4. தாமரை கோபுரத்தின்... செயற்பாடுகள், நாளை முதல் ஆரம்பம் – உட் செல்வதற்கான கட்டணம் குறித்த அறிவிப்பு! தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடமாக நிர்மாணிக்கப்பட்ட தாமரை கோபுரத்தின் செயற்பாடுகளை நாளை (புதன்கிழமை) முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாளை முதல் தாமரை கோபுரம் பொதுமக்களின் பாவனைக்காக திறக்கப்படவுள்ள நிலையில், 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் கட்டணத்தில் நுழைவுச்சீட்டுகளை பெற்றுக்கொண்டு உள்ளே செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்களுக்கு நுழைவுச்சீட்டுக் கட்டணம் 20 அமெரிக்க டொலர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தாமரை கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் இவ்வருடம் பெப்ரவரி 28ஆம் திகதி நிறைவட…

  5. முன்னாள் ஜனாதிபதியை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு! முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (16) அழைப்பாணை வௌியிட்டுள்ளது. அருட்தந்தை சிறில் காமினி மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஏசுதாசன் நடேசன் ஆகியோர் தாக்கல் செய்த தனிப்பட்ட மனுவினை பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை மற்றும் கவனக்குறைவு தொடர்பான தனிப்பட்ட மனுவில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=1656…

  6. இலங்கையின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன் இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படாததையும் உறுதி செய்வோம் - ஜனாதிபதி ரணில் By Digital Desk 5 16 Sep, 2022 | 10:27 AM (எம்.மனோசித்ரா) நாட்டில் யுத்தத்தில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. எனினும் தற்போது நாம் நாட்டில் சமாதானத்தை நிலைநிறுத்த வேண்டும். அதற்கமைய வடக்கு மற்றும் தமிழ் மக்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு அடுத்த சில மாதங்களில் இறுதி தீர்வு ஏற்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். பிராந்தியத்தின் பாதுகாப்பையும் அமைதியையும் பாதிக்கும் முறுகல் நிலை உருவாவதை நாம் விரும்பவில்லை. எந்தவொரு அதிகாரப் …

  7. யாழில் இருந்து கொழும்பு சென்ற ரயில் தடம்புரள்வு : கரையோர ரயில் சேவை பாதிப்பு By Digital Desk 5 16 Sep, 2022 | 11:05 AM யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் இருந்து கல்கிசை நோக்கி பயணித்த அதிவிரைவு குளிரூட்டப்பட்ட ரயில் நேற்றிரவு கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்திற்கு செல்லும் போது தடம்புரண்டுள்ளது. இதனால் கொழும்பில் கரையோர ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் ரயில் பாதை பாரியளவில் உடைந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தடம்புரண்ட ரயிலை மீண்டும் சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்…

  8. நினைவேந்தல்களில் முரண்பட்டு... விடுதலைப் போராட்டத்தை, கொச்சைப் படுத்தாதீர்கள் – மாணவர் ஒன்றியம். விடுதலை போராட்ட வரலாற்றையும் உலக அரங்கில் கொச்சைப்படுத்தும் விதமான கீழ்த்தர விடயங்களை தவிர்த்து நம்போராட்ட வரலாற்றை அடுத்த சந்ததிக்கு கடத்தும் முக்கிய பொறுப்பில் உள்ள நாம் அதை இழிவுபடுத்த வேண்டாம் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. யாழ்ப்பாணம் நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் ஏற்பட்ட முரண்பாடு தொடர்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,1987ம் ஆண்டு செம்டம்பர் மாதம் 15ம் திகதி தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் அடங்கிய முக்கிய ஐந்து அம்ச கோர…

  9. கட்டணம் செலுத்தாத... நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு, நீர் விநியோகத்தை நிறுத்துமாறு பணிப்புரை! நீர் கட்டணம் செலுத்தாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு நீர் விநியோகத்தை நிறுத்துமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. நீர் கட்டணம் செலுத்தாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் சபாநாயகருக்கு அறிவிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் வர்த்தகப் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் பியல் பத்மநாத தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை 3 மில்லியன் ரூபாய் வரை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு நீர…

  10. விவசாய அமைச்சரின் கருத்தினை, நிராகரித்தார்... வர்த்தக அமைச்சர்! வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அரிசி மனித பாவனைக்கு ஏற்றதல்ல என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்த கருத்தை வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ நிராகரித்துள்ளார். நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் சகல அரிசிகளும் மனித பாவனைக்கு ஏற்றவை என அனைத்துப் பரிசோதனைகளிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், விவசாய அமைச்சர் எந்த அடிப்படையில் அவ்வாறு அறிக்கை வெளியிட்டார் எனத் தெரியவில்லை எனவும், அவ்வாறான அறிக்கை தம்மிடம் இருந்தால் அதனை அவர் முன்வைக்க வேண்டும் எனவும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கால்நடை…

  11. யுத்த காலத்தில்... உயிரிழந்தவர்களை, அமைதியாக நினைவேந்த முடியும் – பிரதமர் தினேஷ் குணவர்த்தன. யுத்த காலத்தில் இறந்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்களின் உறவினர்கள் அல்லது அவர்கள் சார்ந்த இனத்தவர்கள் அவர்களை அமைதியாக நினைவேந்த முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் விடுதலைக்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பன்னிரு நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த திலீபனின் 35 ஆவது ஆண்டு நிவைவேந்தல் நிகழ்வு நேற்று(வியாழக்கிழமை) முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை வடக்கு – கிழக்கிலும், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசமெங்கும் கடைப்பிடிக்கப்படவுள்ளது. இந்தநிலையிலேயே பிரதமர் தினேஷ் குணவர்த்தன இந்த …

  12. அண்ணன் செய்த மோசமான செயலால் தங்கை தற்கொலை சுன்னாகம் பொலிஸ் பிரிவில் சகோதரனால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட 20 வயதுடைய இளம் யுவதி ஒருவர் மனவிரக்திக்கு உள்ளாகிய தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் பாவித்த மூத்த சகோதரன் தனது சகோதரியை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார். அதனால் விரக்தியடைந்த சகோதரி குரல் பதிவில் நடந்தவற்றை பதிவு செய்து நண்பிக்கு அனுப்பிவிட்டு தனது உயிரை மாய்த்துள்ளார். மூத்த சகோதரன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு வாக்குமூலம் எடுக்கப்பட்டுள்ளது. வாக்குமூலத்தில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ…

  13. இலங்கை கிரிக்கெட் அணிக்கு பாராட்டுக்களைத் தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர் By T YUWARAJ 15 SEP, 2022 | 05:26 PM இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் சானக்கவை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தமது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார் இந்த சந்திப்பு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி அண்மையில் ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றி சாதனை படைத்திருந்தது. இந்நிலையில், இலங்கை அணியினரை பாராட்டும் முகமாக அணித் தலைவரை சந்தித்து தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இது குறித்து இந்திய உய…

  14. வெளிநாட்டு கஞ்சா செடி வளர்த்தவர் நுவரெலியாவில் கைது ! By T YUWARAJ 15 SEP, 2022 | 07:25 PM நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிளக்பூல் பகுதியில் கஞ்சா செடி வளர்த்து வந்த ஒருவரை விசேட அதிரடி படையினர் இன்று மாலை 4 மணியளவில் கைது செய்துள்ளனர் . நுவரெலியா பிளக்பூல் பகுதியில் அமைந்துள்ள தனிவீடு ஒன்றில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து நுவரெலியா பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையிலேயே வெளிநாட்டு கஞ்சா செடிகள் வளர்ப்பில் ஈடுபட்ட 27 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரால் வளர்க்கப்பட்ட 70 தொடக்கம் 77 கஞ்சா செடிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. …

  15. இலங்கைக்கு எதிர்காலத்தில் இந்தியா நிதியுதவி வழங்காது - ரொய்ட்டர் By RAJEEBAN 15 SEP, 2022 | 04:50 PM சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் காணப்படுவதால் இலங்கைக்கு எதிர்காலத்தில் இந்தியா நிதி உதவி வழங்காது என விடயமறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வருடம் 4 பில்லியன் டொலர்களை வழங்கியுள்ள நிலையில் புதிய நிதியுதவியை வழங்கும் திட்டம் எதுவும் இந்தியாவிடம் இல்லை என விடயமறிந்த இரண்டு தரப்பினர் ரொய்ட்டரிடம் தெரிவித்துள்ளனர். மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்த இலங்கையின் பொருளாதாரம் சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கையை தொடர்ந்து மீண்டும் ஸ்திரமான நிலைக்கு திரும்பிக்…

  16. சீனாவிற்கு கொடுத்து எமது கடல் வளத்தை அழிக்க வேண்டாம் - ஊர்காவற்றுறை பிரதேச கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் By VISHNU 13 SEP, 2022 | 09:26 PM ( எம்.நியூட்டன்) தீவகத்தில் கடலட்டை பண்ணை அமைக்கவேண்டாம் சீனாவிற்கு கொடுத்து எமது கடல் வளத்தை இல்லாது செய்யவேண்டாம் என ஊர்காவற்றுறை பிரதேச கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் சிவநேசபிள்ளை சிவச்செல்வன் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதேஅவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தீவகத்தை பொறுத்தவரையில் ஆழ்கடல் மீன்பிடியை விட களப்பு கடலை நம்பி தொழில்…

  17. எலிசபெத் மகாராணியின்... இறுதிச் சடங்கைக் குறிக்கும் வகையில், 19ஆம் திகதி... விசேட அரசாங்க விடுமுறை! நாட்டில் எதிர்வரும் செப்டம்பர் 19ஆம் திகதி விசேட அரசாங்க விடுமுறையாக பொது நிர்வாகம் மற்றும் உட்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கைக் குறிக்கும் வகையில் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்க விடுமுறை தடையாக இருக்கக் கூடாது என அந்த அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அன்றைய தினம் தேசிய துக்க நாளாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://a…

  18. முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு மந்துவில் படுகொலையின் 23 ஆம் ஆண்டு நினைவேந்தல் By VISHNU 15 SEP, 2022 | 05:16 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மந்துவில் சந்தை வளாகத்தில் 1999 ஆம் ஆண்டு இன்று (15) விமானப்படை விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான குண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொது மக்களுடைய 23 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நினைவு நிகழ்வினை மேற்கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் இம்முறை அமைதியான முறையில் உயிரிழந்தவர்களை நினைவிற் கொண்டுள்ளார்கள். குறிப்பிட்ட இடத்தில் பொதுச்சுடரினை …

  19. பௌத்த – சிங்கள நாட்டில்... புலிப் பயங்கரவாதிகளை, நினைவேந்த... அனுமதி கிடையாது – சரத் வீரசேகர. பௌத்த – சிங்கள நாட்டில் கூண்டோடு அழிக்கப்பட்ட புலிப் பயங்கரவாதிகளைப் போற்றித் துதிபாடவோ அல்லது அவர்களை நினைவேந்தவோ அனுமதி கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் விடுதலைக்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பன்னிரு நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த திலீபனின் 35 ஆவது ஆண்டு நிவைவேந்தல் நிகழ்வு இன்று முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை வடக்கு – கிழக்கிலும், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசமெங்கும் கடைப்பிடிக்கப்படவுள்ளது. இந்தநிலையிலேயே ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரச…

  20. டயனா கமகே... மன்னாரை, ஒரு கலாச்சார சீரழிவுக்கு தள்ளுவதற்கு... முற்படுகின்றார் – இரா.சாணக்கியன். நாங்கள் கல்வியினூடாக எங்களுடைய மாணவர்களை கட்டியெழுப்ப வேண்டும் என யோசிக்கும் பொழுது புதிதாக தெரிவு செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மன்னாரை ஒரு கலாச்சார சீரழிவுக்கு தள்ளுகின்ற வேலை திட்டத்தை ஆரம்பிக்க முற்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பு, பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலம் தேசிய பாடசாலையினுடைய நூற்றாண்டு நிறைவின் “உள்ளம்” சிறப்பு மலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவ…

  21. கசூரினா கடற்படை முகாமை காசு தந்தாலே அகற்றுவோம்! கசூ­ரினா கடற்­க­ரை­யின் சுற்­றுலா மையத்­தில் 4 பரப்பு விஸ்­தீ­ர­ணத்­தில் உள்ள கடற்­படை முகாமை அகற்­று­வ­தற்குக் கடற்­ப­டை­யி­னர் இணக்­கம் தெரி­வித்­துள்­ள­னர். அதற்­காக கடற்­ப­டை­யி­னர் கோரிய பணம் இன்று பிர­தேச சபை­யால் காசோலை மூலம் வழங்­கப்­ப­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டது. கசூ­ரினா கடற்­கரை சுற்­றுலா மையத்­தில் கடற்­படை முகாம் அமைக்­கப்­பட்­டி­ருந்­த­தால், அந்­தப் பகு­தியை அபி­வி­ருத்தி செய்ய முடி­யாத நிலைமை காணப்­பட்­டது. அத்­து­டன் சுற்­று­லா­வி­க­ளும் அசௌ­க­ரி­யங்­களை எதிர்­கொள்ள வேண்­டி­யி­ருந்­தது. அத­னால் அங்­கி­ருந்து கடற்­படை முகாமை அகற்ற வேண்­டும் என்று…

    • 2 replies
    • 419 views
  22. கடல்சார் வர்த்தகத்தின் மையமாக இலங்கையை மாற்றுவோம் - ஜனாதிபதி 15 Sep, 2022 | 10:50 AM இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிசெய்து, உலகிற்குத் திறந்துவிடுவதன் மூலம் பலம்வாய்ந்த ஆசியாவை உருவாக்குவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சுதந்திரமான கடற்பயணத்தை உறுதிப்படுத்தி இலங்கையை கடல்சார் வர்த்தக கேந்திரமாக நிலைநிறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். …

    • 3 replies
    • 376 views
  23. தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் இன்று ஆரம்பம்! தியாக தீபம் திலீபனின் நினை வேந்தல் வாரம் இன்று ஆரம்பமாகவுள்ளது . தமிழ் மக்களின் உரிமைக்காக 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ் . நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி ஈகச் சாவைத் தழுவிக் கொண்ட தியாக தீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வழமை போல் இம்முறையும் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்தில் நடைபெறுவதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன . இன்று 15 ஆம் திகதி வியாழக்கிழமை நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு 26ஆம் திகதி திங்கட்கிழமை வரையான 12 நாட்கள் தொடர்ந்து நடை பெறும் . ந…

  24. ஜெனிவா விவகாரம் : 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த இந்தியா கடும் அழுத்தம் ; விமல் வீரவன்ச By T. Saranya 15 Sep, 2022 | 10:47 AM (இராஜதுரை ஹஷான்) மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதி ஊடாக இலங்கைக்கு கடுமையான அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக இம்முறை புதிய பிரேரணை கொண்டு வரப்படுமாயின் அதனை அரசாங்கம் மாத்திரமல்ல,சகல எதிர்க்கட்சிகளும் நிபந்தனையின்றிய வகையில் கண்டிக்க வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச வலியுறுத்தியுள்ளார். மனித உரிம…

  25. மார்ச் 20 க்கு முன்னர் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்! உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் அடுத்த வருடம் மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னதாக நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த பெப்ரவரியில் இருந்து உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்தார். உள்ளூராட்சி மன்ற கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் ஆணைக்குழுவுக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.samakalam.com/மார்ச்-20-க்கு-முன்னர்-தேர்/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.