ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
சமூக பாதுகாப்பு பங்களிப்பு VAT வரி 20% ஆக அதிகரிக்கும்: அனுரகுமார திஸாநாயக்க உத்தேச சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி விதிப்பு மக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும், இதன் விளைவாக பெறுமதி சேர் வரி (VAT) மேலும் 20% ஆக அதிகரிக்கப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று தெரிவித்தார். இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட வரிவிதிப்பு 15% VATக்கு மேலதிகமாக 2.5% வரியை வசூலிக்க எதிர்பார்க்கப்படுவதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். புதிய சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியானது இறக்குமதி, ஏற்றுமதி, உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனையின் போது மொத்தமாக 20% VAT அதிகரிப்பின் போது விற்…
-
- 0 replies
- 229 views
-
-
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதில் சவால் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதில் இலங்கை பல சவால்களை எதிர்நோக்குவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு உள்ள தடைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ரஷ்யாவின் தற்போதைய நிதி நிலைமை, கடன் தரமதிப்பீட்டை விட கடன் தரம் வீழ்ச்சியடைந்துள்ளமை, எரிபொருள் வழங்குநர்கள் பணம் செலுத்தத் தவறியமை மற்றும் கடன் பத்திரங்களை திறக்க முடியாத நிலை போன்ற காரணங்களால் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதில…
-
- 0 replies
- 214 views
-
-
எந்தவொரு... வெளியகப் பொறிமுறையையும், ஏற்றுக்கொள்ள மாட்டோம் – அரசாங்கம். இணைய அனுசரணை நாடுகளால் முன்வைக்கப்படக்கூடிய அரசியலமைப்பிற்கு ஒவ்வாத எந்தவொரு வெளியகப் பொறிமுறையையும் தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக பாதிக்கப்பட்ட தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய உண்மையைக் கண்டறியும் பொறிமுறையொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களுக்கு எமது நாட்டின் அரசியலமைப்பிற்கு உட்பட்டு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின்…
-
- 3 replies
- 1k views
-
-
இந்தியா இலங்கைக்கு 4 பில்லியன் டொலர் உதவிகளை வழங்கியுள்ளது - ஐநாவில் இந்தியா By Rajeeban 05 Sep, 2022 | 10:54 AM மனிதனை மையமாக கொண்ட உலகமயமாக்கலில் தனது ஆக்கபூர்வமான பங்களிப்பு குறித்து ஐநாவில் கருத்து தெரிவித்துள்ள இந்தியா இலங்கைக்கு உணவு மற்றும் நிதியுதவியாக கிட்டத்தட்ட 4 பில்லியன் டொலர்களை வழங்கியதாக தெரிவித்துள்ளது. சமாதானத்தை ஏற்படுத்தும் ஆணைக்குழு தொடர்பான ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் வருடாந்த கூட்டு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய இந்தியாவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ருச்சிரகம்போஜ் இதனை தெரிவித்துள்ளார். எங்களின் நெருங்கிய அயலில் உணவுப்பாதுகாப்பை உறுதி செய்வதற…
-
- 2 replies
- 270 views
- 1 follower
-
-
மலையகத்தில் நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரிப்பு - நீர் தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு By T. SARANYA 06 SEP, 2022 | 11:41 AM (க.கிஷாந்தன்) மத்திய மலைநாட்டில் பெய்து வரும் மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. கடந்த தினங்களாக பெய்து வந்த மழையினால் நீரோடைகள், ஆறுகள் என பெருக்கம் எடுத்து நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேல் கொத்மலை, கெனியன் ஆகிய நீரேந்தும் பகுதிகளில் அதிகமான நீர்மட்டம் காணப்பட்டது. இந்நீரினை வெளியேற்றுவதற்காக இன்று நீரேந்தும் பக…
-
- 0 replies
- 273 views
- 1 follower
-
-
சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கை குறித்த விபரங்களை அரசாங்கம் பகிரங்கப்படுத்தக்கூடாது - பேராசிரியர் ரொகான் சமரஜீவ 06 Sep, 2022 | 10:44 AM சர்வதேச நாணயநிதியத்துடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை குறித்த விபரங்களை அரசாங்கம் பொதுமக்களிற்கு தெரிவிக்ககூடாது என குறிப்பிட்டுள்ள பேராசிரியர் ரொகான் சமரஜீவ உடன்படிக்கை குறித்த விபரங்களை பகிரங்கப்படுத்தினால் அது அரசாங்கத்தின் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளிற்கு பாதிப்பை பாதகமாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சியொன்றிற்கான பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் இலங்கை தனக்கு கடன்வழங்கியவர்களுடன் இன்னமும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதால் இலங்கைக்…
-
- 0 replies
- 508 views
-
-
இலங்கையில்... ஞாபக மறதி நோயாளர்களின் எண்ணிக்கை, அதிகரிப்பு! இலங்கையில் ஞாபக மறதி நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகத்து வருவதாக மருத்துவத்துறை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. செப்டம்பர் மாதம் சர்வதேச ஞாபகமறதி நோயாளர்களுக்கான மாதமாகவும், செப்டம்பர் 21ஆம் திகதி சர்வதேச ஞாபக மறதியாளர்கள் தினமாகவும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையிலும் ஞாபகமறதி நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்து வருவதாக இலங்கை அல்சைமர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தநிலை இப்படியே அதிகரிக்கும் பட்சத்தில் எதிர்வரும் 2050ஆம் ஆண்டளவில் இலங்கையில் அரை மில்லியனுக்கும் அதிகமான ஞாபகமறதி நோயாளர்கள் காணப்படக் கூடும் எனவும் அல்சைமர் சங்கம் எதிர்வு கூ…
-
- 1 reply
- 217 views
-
-
22 வது திருத்தத்தின் சில சரத்துகள் அரசியலமைப்பின் விதிகளுக்கு முரணானது. -உயர் நீதிமன்றம்.- அரசியலமைப்பின் 22 வது திருத்தத்தின் உட்பிரிவுகள் அரசியலமைப்பின் விதிகளுக்கு முரணாக இருப்பதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவை பொது வாக்கெடுப்பு இல்லாமல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் எனில் திருத்தப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே சபாநாயகர் மஹிந்த யப்பா அபேவர்தன இதனை தெரிவித்தார். https://athavannews.com/2022/1297841
-
- 0 replies
- 200 views
-
-
இந்த ஆண்டு... ஓய்வு பெறும் அரச ஊழியர்களின் எண்ணிக்கை, 20 ஆயிரத்தை தாண்டும்? எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி ஓய்வு பெறும் அரச ஊழியர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60ஆக குறைக்க முன்மொழிந்தார். இந்த முன்மொழிவின்படி, எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் 60 வயதை பூர்த்தி செய்த அரச ஊழியர்கள் ஓய்வு பெற வேண்டும். இதற்கமைய எதிர்வரும் டிசம்பர்…
-
- 0 replies
- 210 views
-
-
‘எந்தவொரு சுதந்திரமும்... பயங்கரவாத் தடைச் சட்டத்தின் மூலம். பறிக்கப்பட இடமளிக்கக்கூடாது’ -பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் .- அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்ட எந்தவொரு சுதந்திரமும் பயங்கரவாத் தடைச் சட்டத்தின் மூலம் பறிக்கப்படுவதற்கு இடமளிக்கக்கூடாது என பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே பயங்கரவாத்தடைச் சட்டத்தைப் பயன்படுத்தும்போது சட்டத்தின் ஆட்சி நிலை நாட்டப்பட வேண்டும் என பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அரசியலமைப்பின் ஊடாக உறுதிசெய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அச்சட்டம் பயன்படுத்தப்படக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது. 1991 பிரகடனத்திற்கு அமைவாக செயற்படும…
-
- 0 replies
- 156 views
-
-
இந்தியாவில் இருந்து... இலங்கை அகதிகளை அழைத்து வர, புதிய குழு. இந்தியாவில் அகதிகளாக உள்ள இலங்கையர்களை, நாட்டுக்கு திருப்பியழைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். ஜனாதிபதியின் ஊடகப்பிரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, புகலிடம்கோரி அகதிகளாக இந்தியாவுக்கு சென்ற இலங்கையர்களை நாட்டுக்கு திருப்பி அழைப்பதற்கான வசதிகளை முன்னெடுப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்க நாயக்கவினால் இந்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1297691
-
- 0 replies
- 314 views
-
-
குறைக்கப்பட்டது மின்வெட்டு நேரம் R.Maheshwary / 2022 செப்டெம்பர் 05 , பி.ப. 04:36 - 0 - 59 FacebookTwitterWhatsApp இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளை (06) முதல் வெள்ளிக்கிழமை (09) வரை 1 மணிநேர மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய A முதல் W வரையான 20 வலயங்களில் நாளை (06) தொடக்கம் 9ஆம் திகதி வரை மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியில் 1 மணிநேர மின் வெட்டு அமுலாகவுள்ளது. https://www.tamilmirror.lk/…
-
- 2 replies
- 356 views
- 1 follower
-
-
பதவியை இராஜினாமா செய்ய தனிப்பட்ட தேவை எதுவும் இல்லை பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யுமாறு எந்தவொரு தரப்பினரும் தம்மைக் கோரவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தனக்கு தனிப்பட்ட தேவை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சீதா அரம்பேபொல தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக வெளியான செய்திகள் குறித்து “அத தெரண” எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அந்தப் பதவியை இராஜினாமா செய்துவிட்டு, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பாராளுமன்றத்திற்குள் நுழைய வாய்ப்பளிக்கவ…
-
- 2 replies
- 351 views
-
-
ஒரு ஜனாதிபதிக்கு இவ்வளவு தேவையா? Freelancer / 2022 செப்டெம்பர் 05 , பி.ப. 02:08 - 0 - 240 FacebookTwitterWhatsApp ஜனாதிபதி ரணிலின் வாகனத்தின் பெறுமதி எவ்வளவு என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார். ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு 205 மில்லியன் ரூபா சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் 14 மில்லியன் ரூபா வீட்டிற்கு ஏற்பட்ட சேதம் எனவும் எஞ்சிய 191 மில்லியன் ரூபா வாகனத்திற்கு ஏற்பட்ட சேதம் எனவும் சுட்டிக்காட்டியுள்ள ஜே…
-
- 0 replies
- 209 views
- 1 follower
-
-
நலன்புரி மானியம் பெறுவோருக்கு QR நலன்புரி மானியங்களுக்கு தகுதியான நபர்களுக்கு கியூஆர் (QR) குறியீட்டு முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் பி.விஜயரத்ன தெரிவித்தார். இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சமுர்த்தி, முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோய் உதவி, போன்ற நலன்புரி திட்டங்களின் கீழ் தற்போது நன்மைகளைப் பெறும் தனிநபர்களை இலக்காகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பவுள்ளது. மேலும், மானியத்துக்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ள நபர்கள் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நபர்கள…
-
- 0 replies
- 221 views
- 1 follower
-
-
ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் வெளி பொறிமுறையில் உடன்பாடு இல்லை: -அலி சப்ரி மனித உரிமைகளுக்கான முழுமையான மற்றும் நீண்டகால தீர்வை இலங்கை எதிர்நோக்கி வருவதாகவும், இலங்கையின் அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள் உண்மையைக் கண்டறியும் பொறிமுறைக்கு செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசியலமைப்புச் சட்டம் அதற்கு இடமளிக்காத நிலையில், வெளிப் பொறிமுறையில் உடன்பாடு இல்லை என்பதே ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் கொள்கை என அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். நாட்டில் வாழும் அனைத்து சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வெளிப்படையான மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உள்நாட்டுப் பொறிமு…
-
- 1 reply
- 289 views
-
-
இந்தியாவின் எழுச்சி இலங்கைக்கு பலம் – வாசுதேவ நாணயக்கார உலகப் பொருளாதாரத்தில் இந்தியா ஐந்தாவது இடத்திற்கு வருவதென்றால், உலகில் பொருளாதார சக்தி பரிமாற்றத்தின் தனித்துவமான தருணத்திற்கு ஆசியா வந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்தியா அண்டை நாடாக உயர்ந்துள்ளமை இலங்கைக்கு பலம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தீர்வு காண பிரச்சினைகளை பேசுவதில் பயனில்லை என்றும் தீர்வுகளை பற்றி மாத்திரம் பேசுவதே பலனளிக்கும் என்றும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1297710
-
- 1 reply
- 254 views
-
-
சுதந்திரக் கட்சியில் கொள்கையோ, ஆட்களோ இல்லை: பெயர் பலகை மட்டுமே உள்ளது – சந்திரிக்கா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது எந்தக் கொள்கையையும் கொண்டிருக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தற்போது கட்சியில் வெறிபிடித்தவர்களே உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். குமார வெல்கம தலைமையிலான புதிய கட்சி அலுவலகத்தை கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) திறந்து வைத்ததன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கையில் பெரிய ஜனநாயகக் கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இருந்ததாகவும், தற்போது அது அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார…
-
- 0 replies
- 163 views
-
-
அரசியலமைப்பின் 22வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரங்கள் பகிரப்படும் – அலி சப்ரி அரசியலமைப்பின் 22வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரங்கள் பகிரப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். கொழும்பில் செய்தியாளர்களிடம் இன்று (திங்கட்கிழமை) பேசிய அவர், அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட பெரும்பாலான கட்டமைப்புகள் அரசியலமைப்பின் 22 வது திருத்தம் நிறைவேற்றப்படும்போது மீண்டும் திரும்பும் என்று கூறினார். முன்னர் திட்டமிடப்பட்ட இடைக்கால ஏற்பாட்டை தக்கவைக்க தற்போதைய ஜனாதிபதி விரும்பவில்லை என்றும் 19 வது திருத்தத்தை முழுமையாக …
-
- 0 replies
- 156 views
-
-
இந்தியாவில் இருந்து இலங்கை அகதிகளை அழைத்து வர புதிய குழு இந்தியாவில் அகதிகளாக உள்ள இலங்கையர்களை, நாட்டுக்கு திருப்பியழைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். ஜனாதிபதியின் ஊடகப்பிரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, புகலிடம்கோரி அகதிகளாக இந்தியாவுக்கு சென்ற இலங்கையர்களை நாட்டுக்கு திருப்பி அழைப்பதற்கான வசதிகளை முன்னெடுப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்க நாயக்கவினால் இந்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. https://athavannews…
-
- 0 replies
- 141 views
-
-
இன்று நள்ளிரவு முதல் எரிவாயு விலைகள் குறைகிறது By T. SARANYA 05 SEP, 2022 | 11:52 AM உலக சந்தையில் நிலவும் எரிவாயு விலையை கருத்திற்கொண்டு, விலைச் சூத்திரத்துக்கு அமைய, இன்று (05) நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார். அதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 113 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை 4,551 ரூபாவாகும். 5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 45 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை 1,827 ரூபாவாகும். 2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 21 ரூபாவால் விலை குறைக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை…
-
- 0 replies
- 217 views
- 1 follower
-
-
மூட வேண்டிய நிலையில் 400 சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்கள் - எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் சாடல் By T. SARANYA 05 SEP, 2022 | 12:19 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய கட்டண முறை காரணமாக சுமார் 400 சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களை தற்காலிகமாக மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ஷ தெரிவித்தார். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் புதிய கட்டண முறைமைக்கு அமைவாக, நாங்கள் (எரிபொருள் நிரப்பு நிலையங்கள்) பெற்றுக்கொள்ள விரும்பும் எரிபொருட்களின் தொகைக்கான கட்டணத்தை முதல் நாள் இ…
-
- 0 replies
- 523 views
- 1 follower
-
-
9 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை ! By T. SARANYA 05 SEP, 2022 | 01:07 PM ஒன்பது மாவட்டங்களில் கடும் வெள்ளம் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இன்று (05) வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் இலங்கையின் தென்கிழக்கு பகுதியில் நிலவும் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக இந்த கடும் மழை பெய்துள்ளதாகவளிமண்டலவியல் திணைக்களம் இன்று (05) தெரிவித்துள்ளது. இதன்படி, கம்பஹா, கேகாலை, கண்டி, நுவரெலியா, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி ம…
-
- 0 replies
- 174 views
- 1 follower
-
-
குடும்பசுமை ; வேலைக்கு செல்வதற்காக பாடசாலை கல்வியை கைவிடும் மலையக சிறுவர்கள் - ஐநா அறிக்கையாளர் கவலை By RAJEEBAN 05 SEP, 2022 | 12:24 PM இலங்கையில் இன சிறுபான்மையினர் வசிக்கும் வறுமைநிலவும் கிராமப்பகுதிகளில் சிறுவர்கள் வேலைக்கு செல்வது அதிகமாக காணப்படுகின்றது என அடிமைத்தனத்தின் சமகால வடிவங்கள் அதன் விளைவுகள் குறித்த ஐநாவின் விசேட அறிக்கையாளர் டொமயா ஒபகட்டா தெரிவித்துள்ளார். கடந்த வருடம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பின்னர் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் எதிர்வரும் அமர்விற்கு சமர்ப்பித்துள்ள இலங்கை தொடர்பான அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. சிறுவர்களை தொழிலிற்கு அ…
-
- 0 replies
- 139 views
- 1 follower
-
-
விமல் வீரவன்ஸ தலைமையில்... புதிய கட்சி, அங்குரார்ப்பணம்! அரசாங்கத்திலிருந்து வெளியேறிய சுயாதீன கட்சிகள் ஒன்றிணைந்து ‘மேலவை இலங்கை கூட்டணி’ என்ற புதிய கூட்டணியை அங்குரார்ப்பணம் செய்துள்ளன. இந்த நிகழ்வு மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தலைமையில் இந்தப் புதியக் கூட்டணி உருவாகியுள்ளது. தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, பிவித்துரு ஹெல உறுமய, இலங்கை கமியூனிஸ்ட் கட்சி மற்றும் இலங்கை சமசமாஜ கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. தலைவர் – விமல் வீரவன்ஸ செயலாளர் – கலாநிதி ஜி.வீரசிங்க தேசிய அமைப்பாளர் – வாசுதேவ நாண…
-
- 1 reply
- 457 views
-