ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
22 வது திருத்தத்தின் சில சரத்துகள் அரசியலமைப்பின் விதிகளுக்கு முரணானது. -உயர் நீதிமன்றம்.- அரசியலமைப்பின் 22 வது திருத்தத்தின் உட்பிரிவுகள் அரசியலமைப்பின் விதிகளுக்கு முரணாக இருப்பதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவை பொது வாக்கெடுப்பு இல்லாமல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் எனில் திருத்தப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே சபாநாயகர் மஹிந்த யப்பா அபேவர்தன இதனை தெரிவித்தார். https://athavannews.com/2022/1297841
-
- 0 replies
- 200 views
-
-
இந்த ஆண்டு... ஓய்வு பெறும் அரச ஊழியர்களின் எண்ணிக்கை, 20 ஆயிரத்தை தாண்டும்? எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி ஓய்வு பெறும் அரச ஊழியர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60ஆக குறைக்க முன்மொழிந்தார். இந்த முன்மொழிவின்படி, எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் 60 வயதை பூர்த்தி செய்த அரச ஊழியர்கள் ஓய்வு பெற வேண்டும். இதற்கமைய எதிர்வரும் டிசம்பர்…
-
- 0 replies
- 211 views
-
-
‘எந்தவொரு சுதந்திரமும்... பயங்கரவாத் தடைச் சட்டத்தின் மூலம். பறிக்கப்பட இடமளிக்கக்கூடாது’ -பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் .- அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்ட எந்தவொரு சுதந்திரமும் பயங்கரவாத் தடைச் சட்டத்தின் மூலம் பறிக்கப்படுவதற்கு இடமளிக்கக்கூடாது என பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே பயங்கரவாத்தடைச் சட்டத்தைப் பயன்படுத்தும்போது சட்டத்தின் ஆட்சி நிலை நாட்டப்பட வேண்டும் என பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அரசியலமைப்பின் ஊடாக உறுதிசெய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அச்சட்டம் பயன்படுத்தப்படக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது. 1991 பிரகடனத்திற்கு அமைவாக செயற்படும…
-
- 0 replies
- 156 views
-
-
எந்தவொரு... வெளியகப் பொறிமுறையையும், ஏற்றுக்கொள்ள மாட்டோம் – அரசாங்கம். இணைய அனுசரணை நாடுகளால் முன்வைக்கப்படக்கூடிய அரசியலமைப்பிற்கு ஒவ்வாத எந்தவொரு வெளியகப் பொறிமுறையையும் தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக பாதிக்கப்பட்ட தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய உண்மையைக் கண்டறியும் பொறிமுறையொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களுக்கு எமது நாட்டின் அரசியலமைப்பிற்கு உட்பட்டு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின்…
-
- 3 replies
- 1k views
-
-
இந்தியாவில் இருந்து... இலங்கை அகதிகளை அழைத்து வர, புதிய குழு. இந்தியாவில் அகதிகளாக உள்ள இலங்கையர்களை, நாட்டுக்கு திருப்பியழைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். ஜனாதிபதியின் ஊடகப்பிரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, புகலிடம்கோரி அகதிகளாக இந்தியாவுக்கு சென்ற இலங்கையர்களை நாட்டுக்கு திருப்பி அழைப்பதற்கான வசதிகளை முன்னெடுப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்க நாயக்கவினால் இந்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1297691
-
- 0 replies
- 315 views
-
-
குறைக்கப்பட்டது மின்வெட்டு நேரம் R.Maheshwary / 2022 செப்டெம்பர் 05 , பி.ப. 04:36 - 0 - 59 FacebookTwitterWhatsApp இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளை (06) முதல் வெள்ளிக்கிழமை (09) வரை 1 மணிநேர மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய A முதல் W வரையான 20 வலயங்களில் நாளை (06) தொடக்கம் 9ஆம் திகதி வரை மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியில் 1 மணிநேர மின் வெட்டு அமுலாகவுள்ளது. https://www.tamilmirror.lk/…
-
- 2 replies
- 357 views
- 1 follower
-
-
ஒரு ஜனாதிபதிக்கு இவ்வளவு தேவையா? Freelancer / 2022 செப்டெம்பர் 05 , பி.ப. 02:08 - 0 - 240 FacebookTwitterWhatsApp ஜனாதிபதி ரணிலின் வாகனத்தின் பெறுமதி எவ்வளவு என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார். ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு 205 மில்லியன் ரூபா சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் 14 மில்லியன் ரூபா வீட்டிற்கு ஏற்பட்ட சேதம் எனவும் எஞ்சிய 191 மில்லியன் ரூபா வாகனத்திற்கு ஏற்பட்ட சேதம் எனவும் சுட்டிக்காட்டியுள்ள ஜே…
-
- 0 replies
- 210 views
- 1 follower
-
-
கொழும்புக்கு வருகிறது அமெரிக்க அன்பளிப்பு Freelancer / 2022 செப்டெம்பர் 05 , பி.ப. 04:45 - 0 - 66 FacebookTwitterWhatsApp அமெரிக்காவின் கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்ட P 627 ஆழ்கடல் ஊடுருவல் கப்பல், அமெரிக்காவின் சியாட்டெல் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளது. 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி, அமெரிக்காவின் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் இலங்கை கடற்படையிடம் உத்தியோகபூர்வமாக இந்தக் கப்பல் கையளிக்கப்பட்டது. இலங்கை கடற்பட…
-
- 6 replies
- 503 views
- 1 follower
-
-
நலன்புரி மானியம் பெறுவோருக்கு QR நலன்புரி மானியங்களுக்கு தகுதியான நபர்களுக்கு கியூஆர் (QR) குறியீட்டு முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் பி.விஜயரத்ன தெரிவித்தார். இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சமுர்த்தி, முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோய் உதவி, போன்ற நலன்புரி திட்டங்களின் கீழ் தற்போது நன்மைகளைப் பெறும் தனிநபர்களை இலக்காகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பவுள்ளது. மேலும், மானியத்துக்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ள நபர்கள் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நபர்கள…
-
- 0 replies
- 222 views
- 1 follower
-
-
ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் வெளி பொறிமுறையில் உடன்பாடு இல்லை: -அலி சப்ரி மனித உரிமைகளுக்கான முழுமையான மற்றும் நீண்டகால தீர்வை இலங்கை எதிர்நோக்கி வருவதாகவும், இலங்கையின் அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள் உண்மையைக் கண்டறியும் பொறிமுறைக்கு செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசியலமைப்புச் சட்டம் அதற்கு இடமளிக்காத நிலையில், வெளிப் பொறிமுறையில் உடன்பாடு இல்லை என்பதே ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் கொள்கை என அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். நாட்டில் வாழும் அனைத்து சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வெளிப்படையான மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உள்நாட்டுப் பொறிமு…
-
- 1 reply
- 290 views
-
-
பதவியை இராஜினாமா செய்ய தனிப்பட்ட தேவை எதுவும் இல்லை பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யுமாறு எந்தவொரு தரப்பினரும் தம்மைக் கோரவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தனக்கு தனிப்பட்ட தேவை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சீதா அரம்பேபொல தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக வெளியான செய்திகள் குறித்து “அத தெரண” எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அந்தப் பதவியை இராஜினாமா செய்துவிட்டு, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பாராளுமன்றத்திற்குள் நுழைய வாய்ப்பளிக்கவ…
-
- 2 replies
- 352 views
-
-
சுதந்திரக் கட்சியில் கொள்கையோ, ஆட்களோ இல்லை: பெயர் பலகை மட்டுமே உள்ளது – சந்திரிக்கா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது எந்தக் கொள்கையையும் கொண்டிருக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தற்போது கட்சியில் வெறிபிடித்தவர்களே உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். குமார வெல்கம தலைமையிலான புதிய கட்சி அலுவலகத்தை கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) திறந்து வைத்ததன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கையில் பெரிய ஜனநாயகக் கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இருந்ததாகவும், தற்போது அது அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார…
-
- 0 replies
- 164 views
-
-
இந்தியாவின் எழுச்சி இலங்கைக்கு பலம் – வாசுதேவ நாணயக்கார உலகப் பொருளாதாரத்தில் இந்தியா ஐந்தாவது இடத்திற்கு வருவதென்றால், உலகில் பொருளாதார சக்தி பரிமாற்றத்தின் தனித்துவமான தருணத்திற்கு ஆசியா வந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்தியா அண்டை நாடாக உயர்ந்துள்ளமை இலங்கைக்கு பலம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தீர்வு காண பிரச்சினைகளை பேசுவதில் பயனில்லை என்றும் தீர்வுகளை பற்றி மாத்திரம் பேசுவதே பலனளிக்கும் என்றும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1297710
-
- 1 reply
- 255 views
-
-
டொலர்களைப் பயன்படுத்தி வீடுகளை கொள்வனவு செய்பவர்களுக்கு சலுகை – அரசாங்கம் டொலர்களை பயன்படுத்தி வீடுகளை கொள்வனவு செய்யும் வெளிநாட்டு இலங்கையர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு சலுகை வழங்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது. அதன்படி, டொலர்களை பயன்படுத்தி வீடுகளை கொள்வனவு செய்பவர்களுக்கு 10 வீதம் சலுகை வழங்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையின் முகாமைத்துவ சபை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்படும் நடுத்தர வருமான வீட்டுத் திட்டங்களில் வீடுகளை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கும். நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடிக்கு மற்றொரு தீர்வாக இந்த புதிய மு…
-
- 14 replies
- 606 views
-
-
அரசியலமைப்பின் 22வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரங்கள் பகிரப்படும் – அலி சப்ரி அரசியலமைப்பின் 22வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரங்கள் பகிரப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். கொழும்பில் செய்தியாளர்களிடம் இன்று (திங்கட்கிழமை) பேசிய அவர், அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட பெரும்பாலான கட்டமைப்புகள் அரசியலமைப்பின் 22 வது திருத்தம் நிறைவேற்றப்படும்போது மீண்டும் திரும்பும் என்று கூறினார். முன்னர் திட்டமிடப்பட்ட இடைக்கால ஏற்பாட்டை தக்கவைக்க தற்போதைய ஜனாதிபதி விரும்பவில்லை என்றும் 19 வது திருத்தத்தை முழுமையாக …
-
- 0 replies
- 157 views
-
-
இந்தியாவில் இருந்து இலங்கை அகதிகளை அழைத்து வர புதிய குழு இந்தியாவில் அகதிகளாக உள்ள இலங்கையர்களை, நாட்டுக்கு திருப்பியழைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். ஜனாதிபதியின் ஊடகப்பிரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, புகலிடம்கோரி அகதிகளாக இந்தியாவுக்கு சென்ற இலங்கையர்களை நாட்டுக்கு திருப்பி அழைப்பதற்கான வசதிகளை முன்னெடுப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்க நாயக்கவினால் இந்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. https://athavannews…
-
- 0 replies
- 142 views
-
-
இன்று நள்ளிரவு முதல் எரிவாயு விலைகள் குறைகிறது By T. SARANYA 05 SEP, 2022 | 11:52 AM உலக சந்தையில் நிலவும் எரிவாயு விலையை கருத்திற்கொண்டு, விலைச் சூத்திரத்துக்கு அமைய, இன்று (05) நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார். அதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 113 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை 4,551 ரூபாவாகும். 5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 45 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை 1,827 ரூபாவாகும். 2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 21 ரூபாவால் விலை குறைக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை…
-
- 0 replies
- 218 views
- 1 follower
-
-
மூட வேண்டிய நிலையில் 400 சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்கள் - எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் சாடல் By T. SARANYA 05 SEP, 2022 | 12:19 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய கட்டண முறை காரணமாக சுமார் 400 சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களை தற்காலிகமாக மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ஷ தெரிவித்தார். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் புதிய கட்டண முறைமைக்கு அமைவாக, நாங்கள் (எரிபொருள் நிரப்பு நிலையங்கள்) பெற்றுக்கொள்ள விரும்பும் எரிபொருட்களின் தொகைக்கான கட்டணத்தை முதல் நாள் இ…
-
- 0 replies
- 524 views
- 1 follower
-
-
9 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை ! By T. SARANYA 05 SEP, 2022 | 01:07 PM ஒன்பது மாவட்டங்களில் கடும் வெள்ளம் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இன்று (05) வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் இலங்கையின் தென்கிழக்கு பகுதியில் நிலவும் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக இந்த கடும் மழை பெய்துள்ளதாகவளிமண்டலவியல் திணைக்களம் இன்று (05) தெரிவித்துள்ளது. இதன்படி, கம்பஹா, கேகாலை, கண்டி, நுவரெலியா, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி ம…
-
- 0 replies
- 174 views
- 1 follower
-
-
குடும்பசுமை ; வேலைக்கு செல்வதற்காக பாடசாலை கல்வியை கைவிடும் மலையக சிறுவர்கள் - ஐநா அறிக்கையாளர் கவலை By RAJEEBAN 05 SEP, 2022 | 12:24 PM இலங்கையில் இன சிறுபான்மையினர் வசிக்கும் வறுமைநிலவும் கிராமப்பகுதிகளில் சிறுவர்கள் வேலைக்கு செல்வது அதிகமாக காணப்படுகின்றது என அடிமைத்தனத்தின் சமகால வடிவங்கள் அதன் விளைவுகள் குறித்த ஐநாவின் விசேட அறிக்கையாளர் டொமயா ஒபகட்டா தெரிவித்துள்ளார். கடந்த வருடம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பின்னர் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் எதிர்வரும் அமர்விற்கு சமர்ப்பித்துள்ள இலங்கை தொடர்பான அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. சிறுவர்களை தொழிலிற்கு அ…
-
- 0 replies
- 140 views
- 1 follower
-
-
இலங்கை வாழ் தெலுங்கு மக்கள் அவல நிலை: "மக்களை கண்டால் ஓடி ஒளிவோம், பிச்சை எடுத்து வாழ்கிறோம்" ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 38 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, விளிம்பு நிலையில் வாழ்க்கை: இலங்கை வாழ் தெலுங்கு மக்கள் பல்வேறு இனங்கள் வாழும் நாடாக இலங்கை விளங்கும் நிலையில், சில இனத்தைச் சேர்ந்தவர்கள் இன்றும் கவனிப்பாரற்ற நிலையில் உள்ளமை, வெளி உலகத்திற்கு வரவில்லை. குறிப்பாக இந்தியாவிலிருந்து வந்த பல இனத்தவர்கள், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இன்றும் வாழ்கின்றனர். தமது கலை, கலாசாரம், பண்பாடு, மொழி உள்ளிட்ட தமது அடையாளங்களை இன்றும் மறக்க…
-
- 11 replies
- 1.6k views
- 1 follower
-
-
இந்தியா இலங்கைக்கு 4 பில்லியன் டொலர் உதவிகளை வழங்கியுள்ளது - ஐநாவில் இந்தியா By Rajeeban 05 Sep, 2022 | 10:54 AM மனிதனை மையமாக கொண்ட உலகமயமாக்கலில் தனது ஆக்கபூர்வமான பங்களிப்பு குறித்து ஐநாவில் கருத்து தெரிவித்துள்ள இந்தியா இலங்கைக்கு உணவு மற்றும் நிதியுதவியாக கிட்டத்தட்ட 4 பில்லியன் டொலர்களை வழங்கியதாக தெரிவித்துள்ளது. சமாதானத்தை ஏற்படுத்தும் ஆணைக்குழு தொடர்பான ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் வருடாந்த கூட்டு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய இந்தியாவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ருச்சிரகம்போஜ் இதனை தெரிவித்துள்ளார். எங்களின் நெருங்கிய அயலில் உணவுப்பாதுகாப்பை உறுதி செய்வதற…
-
- 2 replies
- 271 views
- 1 follower
-
-
பல்கலைக்கு தெரிவான மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல் 2021-2022 கல்வி ஆண்டுகளுக்கான பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நாளை(05) ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 23ம் திகதி வரையில் இதற்காக விண்ணப்பிக்க முடியும். 2021-2022 கல்வியாண்டிற்காக 42 ஆயிரத்து 519 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுள்ளனர். பல்கலைக்கழக பிரவேசத்திற்கான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள மாணவர் கைநூல் தற்போது நூல் விற்பனை நிலையங்களுக்கு விநி…
-
- 0 replies
- 155 views
-
-
கோட்டாபய நாடு திரும்பியமைக்கு எதிராக எவரும் குரல் எழுப்ப முடியாது; பிரசன்ன ரணதுங்க! முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியமைக்கு எதிராக எவரும் குரல் எழுப்ப முடியாது. அவரைக் கைது செய்யுமாறும் எவரும் அழுத்தம் கொடுக்கவும் முடியாது." - இவ்வாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- "கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியிலிருந்து விலகி வீடு செல்லுமாறே ஆர்ப்பாட்டக்காரர்கள் அன்று கோரினர். அவரை நாட்டைவிட்டு வெளியேறுமாறோ அல்லது வெளிநாட்டில் தங்குமாறோ எவரும் கோரவில்லை. அவருக்கென சொந்த நாடு இருக்கும்போது அவர் ஏன் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்? எமது கோரிக்கையின் பிரகாரம் அவர் நாடு திரும்பியுள்ளார். அவரு…
-
- 0 replies
- 209 views
-
-
குமார வெல்கம தலைமையில்... புதிய கட்சி, உதயம் – அலுவலகத்தை திறந்து வைத்தார்... சந்திரிகா. நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் கட்சித் தலைமையகம் இன்று (திங்கட்கிழமை) திறந்துவைக்கப்படுகிறது. கொழும்பு பத்தரமுலையில் இந்த அலுவலகம் இன்று (திங்கட்கிழமை) காலை திறந்துவைக்கப்படுகிறது. இந்த புதிய கட்சி அலுவலகத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க திறந்து வைக்கின்றார். https://athavannews.com/2022/1297588
-
- 1 reply
- 166 views
-