Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பொலிஸார் துப்பாக்கிச் சூடு – பேருந்தில் பயணித்த பெண் உயிரிழப்பு ! கம்பஹா தங்கொவிட்ட பிரதேசத்தில் பேருந்தில் பயணித்த பெண்ணொருவர் மீது இன்று காலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் 29 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தங்கோவிட்ட பிரதேசத்தில் உள்ள மதுபானசாலைக்கு நேற்று இரவு பிரவேசித்த சிலர், அங்கு கொள்ளையிட்டு தப்பியோட முயன்றுள்ளனர். இது தொடர்பில் தமக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் தங்கொவிட்ட பொலிஸ் குழுவொன்று குறித்த இடத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்போது அவர்கள் தப்பியோட முயன்ற நிலையில், கொள்ளையர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே பரஸ்பர துப்பாக்…

    • 1 reply
    • 234 views
  2. வல்வெட்டித்துறையில் கணவனும் மனைவியும் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு! வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சடலமாக கண்டறியப்பட்டுள்ளனர். நேற்று (01-10-2022) அதிகாலை 4.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். வல்வெட்டித்துறை நெடியகாடு, ஏஜிஏ ஒழுங்கையைச் சேர்ந்த சரவணபவா ரஞ்சித்குமார் (வயது -30) அவரது மனைவி கிருசாந்தினி (வயது -26) என்ற இருவருமே சடலமாக காணப்படுகின்றனர். வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின…

    • 4 replies
    • 341 views
  3. கடந்த 8 வருடங்களில் ஜனாதிபதி ஆணைக்குழுக்களிற்காக ரூ.504 மில்லியன் செலவு கடந்த எட்டு வருடங்களில் நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்கள் நியமித்த, ஜனாதிபதி ஆணைக் குழுக்களுக்கு 504 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்பட்ட விண்ணப்பத்தின் மூலம், இந்த தகவல் தெரியவந்துள்ளது. கோட்டாபய தலைமையிலான அரசின் ஆட்சிக்காலத்திலேல் அதிகபட்சமாக 120 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளமை இதில் தெரியவந்துள்ளது. இதேவேளை நல்லாட்சி அரசாங்கத்தின் ஐந்து ஆண்டுகளில், ஐந்துஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு அதற்காக 254 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆலோசனைகள் மற்று…

  4. பின்வாங்கினார் ஜனாதிபதி ரணில்: வர்த்தமானி வெளியீடு கொழும்பில் உள்ள பல முக்கிய இடங்களை அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தி அண்மையில் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று (01) அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். 1955 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க அரச இரகசியச் சட்டத்தின் பிரிவு 2 இன் கீழ், கடந்த செப்டம்பர் 16 ஆம் திகதி வெளியிட்ட அதி உயர் பாதுகாப்பு வலயங்களின் பிரகடன வர்த்தமானியே இரத்துச் செய்யப்பட்டுள்ளது. https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/பி…

  5. ஐ.நா.வில் 6 ஆம் திகதி இலங்கை தொடர்பான பிரேரணை வாக்கெடுப்புக்கு வருகிறது ; சர்வதேச நியாயாதிக்கத்தைப் பயன்படுத்துமாறு உறுப்புநாடுகளிடம் சுமந்திரன் வலியுறுத்தல் By T. Saranya 01 Oct, 2022 | 08:34 PM (நா.தனுஜா) ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் 6 ஆம் திகதி வாக்கெடுப்பிற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள இலங்கை தொடர்பான புதிய பிரேரணையில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறை மேலும் வலுப்படுத்தப்படவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில், அதன்மூலம் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான…

  6. இலங்கை மலையக தமிழர்கள்: 200 வருடங்களில் "தோட்டக்காட்டான்" பெயரே மிஞ்சியது ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் ''எங்களுக்கு ஒரு முன்னேற்றமும் இல்லை. என்னதான் இருந்தாலும் தோட்டக்காட்டான் என்ற பெயரைத்தான் வாங்கியுள்ளோம். பிள்ளைகள் போறதுக்கு பாடசாலை இல்லை. எங்களுக்கும் படிக்க வசதி இல்லை. சரி பிள்ளைகளை படிக்க வைக்கலாம்னு பார்த்தால், அதுக்கும் வசதி இல்லை" - கவலைப்படும் இலங்கை மலையக தமிழர்களின் குமுறல்கள் இந்த வரிகள். "முன்னேற்றம் ஒன்று இருந்தால் தானே பிள்ளைகளை படிக்க வைக்க முடியும் முடியும். யார் போனாலும் தோட்டக்காட்டன்னுதான் அழைக்கிறாங்க. அந்த ப…

  7. நீதிமன்றம் சென்ற சரத் பொன்சேகா கொழும்பின் சில இடங்களை அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யுமாறு கோரி, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா மற்றும் சட்டத்தரணி சுதத் விக்ரமரத்ன ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளனர். சட்டமா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, பொலிஸ் மா அதிபர், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனர். அரச இரகசிய சட்டமூலத்தின் கீழ் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர்கள், அந்த சட்டமூலத்தின் கீழ் இவ்வாறான உத்தரவ…

    • 3 replies
    • 504 views
  8. நாட்டில் தமிழ் மக்களுக்கென்று பிரச்சினைகள் எதுவும் இல்லையாம் – சரத் வீரசேகர நாட்டில் தமிழ் மக்களுக்கென்று பிரச்சினைகள் எதுவும் இல்லை என்றும் அவர்கள் தாமாகவே பிரச்சினைகளைத் தேடுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். எனவே, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று வெளிவரும் செய்திகளை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். தேசிய பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் தமிழ் மக்களுடன் அரசு விரைவில் பேச்சை ஆரம்பிப்போம் என உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்களிடம் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தெரிவித்திருந்தனர். அதேவேளை, தொடர்ச்சியாகத் தமிழ் மக்களை ஏமாற்றாமல், பேச்சுக்களை இ…

    • 8 replies
    • 471 views
  9. இளம் பிக்குகள் பாலியல் துஷ்பிரயோகம் - நிபந்தனைகளுடன் பிணை! இளம் பிக்குகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பிரதம பௌத்த மதகுரு பல நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும் பிணைகாரர்கள் வருகை தராமையினால் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டதுடன் மீண்டும் குறித்த வழக்கானது எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்தி வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஹாரை ஒன்றில் வைத்து 3 இளம் பிக்குகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பிலான வழக்கு இன்று (30) கல்முனை நீதிமன்ற நீதிவான் எ…

    • 2 replies
    • 388 views
  10. மட்டக்களப்பு மக்களை எண்ணி நான் பெருமைகொள்கிறேன் – இந்திய தூதுவர் காந்தியின் அகிம்சைப்போராட்டத்தினையும் தியாகத்தினையும் தொடர்ந்து மட்டக்களப்பு மக்கள் நினைவுகூருவதை எண்ணி தான் பெருமைகொள்வதாக இந்திய தூதுவர் கோபால் பக்லே தெரிவித்தார். காந்தி ஜெயந்தி தினம் நாளைய தினம் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் அதன் சிறப்பு நிகழ்வு இன்று மட்டக்களப்பு காந்திபூங்காவில் நடைபெற்றது. அகிம்சையினை உலகுக்கு போதித்த மகாத்மா காந்தியின் பிறந்த தினம் காந்தி ஜெயந்தி தினமாக அனுஸ்டிக்கப்படுகின்றது. இன்றைய தினம் காந்தி ஜெயந்தி தின நிகழ்வுகள் மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள மகாத்மா காந்தி சிலையருகில் நடைபெற்றது. காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிக…

  11. இலங்கையில்... 10 ஆண்டுகளில் 100 பில்லியன் டொலரினை, முதலீடு செய்ய தயாராகின்றது... இந்திய அதானி குழுமம்? இந்திய அதானி குழுமம் எதிர்வரும் 10 ஆண்டுகளில் 100 பில்லியன் டொலரினை இலங்கையில் முதலீடு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வலுசக்தி துறைக்கே அதிக முதலீடுகளை மேற்கொள்வதற்கு அதானி குழுமம் எதிர்பார்த்துள்ளதாக குறித்த நிறுவனத்தின் தலைவர் கௌதம் அதானி தெரிவித்துள்ளார். அதானி நிறுவனம் கடந்த 1988 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிலையில், தற்போது பல்வேறு நாடுகளிலும் அதானி குழுமம் முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றது. https://athavannews.com/2022/1301691

  12. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் By DIGITAL DESK 5 01 OCT, 2022 | 04:03 PM காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று (01) காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது அலுவலகம் முன்பாக இடம்பெற்றது. இதன்போது, வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிற்கு சர்வதேசம் நீதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பதாதைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது. சிறுவர் தினமான இன்றைய தினம் இடம்பெற்ற போராட்டத்தில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது உறவினர்களான சிறுவர்களும் கவனயீர்ப…

  13. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - விசாரணை ஒத்தி வைப்பு! உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பில் கைதான பிரதான பொலிஸ் பரிசோதகர் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நவம்பர் மாதம் 11 திகதி வரை மறுவிசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்ற நீதிவான் ஜயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் விசாரணைக்கு கடந்த வியாழக்கிழமை (29) வந்தபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்படி வழக்கானது விசாரணைக்காக எடுக்கப்பட்ட வேளை, பிரதிவாதி சார்பாக சட்டத்தரணிகளான சஞ்சீப், சப்றீன், என்.எம் சஹீட் மூவரும் ஆஜராகி இருந்தனர். குறித்த விசாரணையின் போது மன்றில் பிரதான பரிசோதகரின் கைது தொடர்பில் ஆட்சேபனை …

    • 0 replies
    • 189 views
  14. நுரைச்சோலை மின் உற்பத்தி குறித்து பொறியியலாளர்களின் நம்பிக்கை By T. SARANYA 01 OCT, 2022 | 12:50 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் செயலிழந்திருந்த மூன்றாவது மின்பிறப்பாக்கி இன்று மாலை தேசிய மின் உற்பத்தி கட்டமைப்பில் இணைத்துக்கொள்ள முடியும் என மின் உற்பத்தி நிலை பொறியியலாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். கடந்த 27 ஆம் திகதியன்று இந்த மின் உற்பத்தி நிலையத்தில் இடம்பெற்ற தொழில்நுட்ப கோளாறு காரணமாக குறித்த மூன்றாவது மின் பிறப்பாக்கி செயலிழந்தாகவும், அதன் திருத்தப் பணிகள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படாது இருக்கும் பட்சத்தில…

  15. கொழும்பில் பயணிகளின் கையடயக்கத்தொலைபேசிககளை திருடும் சம்பவம் தொடர்பில் இருவர் கைது By T. SARANYA 01 OCT, 2022 | 02:59 PM (எம்.வை.எம்.சியாம்) கொழும்பு - கொட்டாவை பிரதேசத்தில் பஸ்களில் பயணிகளுடைய கையடயக்கத்தொலைபேசிகளை திருடும் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சந்தேக நபர்கள் நேற்று (30) குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கொட்டாவை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் அத்துமீறி நுழைந்து அங்கிருந்து குளியலறைகளில் உள்ள பொருட்கள் மற்றும் கொழும்பில் பயணிக்கும் பல்வேறு பஸ்களில் பயணிகளிடமிருந்து அவர்களின் கையடயக்கத்தொலைபேசி…

  16. மாகாண சபை தவிசாளர்களுக்கான கொடுப்பனவுகளை மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானம் By DIGITAL DESK 5 01 OCT, 2022 | 01:04 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) மாகாண சபை தவிசாளர்களுக்கு வழங்கப்படும் எரிபொருள், தொலைப்பேசி உள்ளிட்ட கொடுப்பனவுகளை மட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான சுற்று நிரூபமொன்று ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவால், மாகாண ஆளுனநர்கள், மாகாண சபை செயலாளர்கள், ஆளுநரின் செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. குறித்த சுற்று நிரூபத்தின்படி, மாகாண சபை தவிசாளருக்கு ஒரேயொரு உத்தியோகபூர்வ மோட்டார் வாகனமொன்றை மாத்திரம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. …

  17. ஒக்டோபர் மாத இறுதியில் அரசியல் சுனாமி- ஹிருணிகா By RAJEEBAN 30 SEP, 2022 | 04:48 PM ஒக்டோபர் மாத இறுதியில் அரசியல் சுனாமி அனைத்து ஊழல்அரசியல்வாதிகளையும் அழிக்கும் என ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். இந்த கருத்தை தெரிவிப்பதற்காக என்னை சிஐடியினர் விசாரணைக்கு அழைக்கலாம் ஆனால் ஒக்டோபர் மாத இறுதியில் நிச்சயம் இந்த புரட்சி நிச்சயமாக வெடிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் சுனாமி தாக்கும்போது முன்னைய ஜனாதிபதியின் நிலை தற்போதைய ஜனாதிபதிக்கும் ஏற்படும் என தெரிவித்துள்ள ஹிருணிகா எந்த புரட்சியும் முன் அறிவிப்புடன் நிகழ்வதில்லை எனவும் தெரிவித்துள்ளார். கடந்த அரகலயவில் பெண்களே முக்கிய பங்களிப்பை செய்தன…

  18. புனர்வாழ்வு பணியகம்:சமூக மற்றும் அரசியல் ஆர்வலர்கள் அச்சம் புனர்வாழ்வு பணியகத்தை அமைப்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டமூலம் போராட்கார்களை ஒடுக்குவதற்கு வழி வகுக்கும் என சமூக மற்றும் அரசியல் ஆர்வலர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். போராட்ட செயற்பாட்டாளர்களை புனர்வாழ்வு முகாம்களில் நீண்டகாலம் தடுத்து வைக்க இந்த சட்டமூலம் அனுமதிக்கும் என அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவினால் புனர்வாழ்வு பணியகம் என்ற சட்டமூலத்தை செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. போதைப்பொருள் பயன்படுத்துவோர், முன்னாள் மற்றும் தவறாக வழிநடத்தப்பட்ட போராளிகள், வன்முறை குழுக்களின் உறுப்பினர்களை மறுவாழ்வு அளிப்பதே…

  19. இன்று முதல் புதிய வரி விதிப்பு அறிமுகம்! சமூக பாதுகாப்புக்கு பங்களிப்பு வழங்கும் வகையிலான புதிய வரி இன்று சனிக்கிழமை முதல் அமுல்படுத்தப்படுகின்றது. இதன்மூலம், 140 பில்லியன் மேலதிக வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. எவ்வாறாயினும், இந்த புதிய வரி விதிப்பினால், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் மேலும் உயரக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இவ்வாறான வரிகள் அரசாங்கத்திற்கான வருமானத்தை ஈட்டுவதற்கு தற்காலிகமாக பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்க சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி, 2022 ஆம் ஆண்டுக்கான வரவு…

  20. யாழில் கடந்த 09 மாதங்களில் கொரோனா தொற்றால் 08 பேர் உயிரிழப்பு! யாழ் மாவட்டத்தில் இவ் வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 2548 கொரோனா நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டதுடன் எட்டு மரணங்களும் பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ் மாவட்ட விசேட நுளம்புக் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், கடந்த சில மாதங்களாக யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன் அதிக மரணங்களும் பதிவாகின்றன. கொரோனா தொற்று காரணமாக. மா…

  21. சீனாவின் செஞ்சிலுவைச் சங்கம், வடக்கு மக்களுக்கு உதவி! சீனாவின் செஞ்சிலுவைச் சங்கம், இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள பெரும்பாலான ஏழைக் குடும்பங்களுக்கு மேலும் 150,000 அமெரிக்க டொலர் பெறுமதியான உணவுப் பொதிகளை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக வழங்கத் தீர்மானித்துள்ளது. இலங்கைக்கான சீனத் தூதரகம் இதனை தெரிவித்துள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=166158

    • 14 replies
    • 1.2k views
  22. சவுக்கு மரங்களை வெட்டிக் கடத்த முற்பட்ட இரு பெண்கள் உள்ளிட்ட 7 பேர் கைது! By VISHNU 30 SEP, 2022 | 04:45 PM யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, மணற்காட்டு பகுதியில் சட்டவிரோதமான முறையில் சவுக்கு மரங்களை வெட்டிய குற்றச்சாட்டில் இரு பெண்கள் உள்ளிட்ட 07 பேர் 29 ஆம் திகதி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். மணற்காட்டில் சட்டவிரோதமான முறையில் சவுக்கு மரங்கள் வெட்டப்பட்டு துவிச்சக்கர வண்டிகளில் கடத்தப்படுவதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு இரகசிய தகவல்கள் கிடைக்கப்பெற்றது. அதனை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் , அப்பகுதியில் சவுக்கு மரங்களை வெட்டி துவிச்சக்கர வண்டியில் கடத்த முற்பட்ட இரண்டு பெண்கள் உள்ள…

    • 4 replies
    • 398 views
  23. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு யாழில் துவிச்சக்கர பேரணி! மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தினை முன்னிட்டு யாழ் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர பேரணி இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) காலை நடைபெற்றது. மகாத்மா காந்தியின் பிறந்த தினம் எதிர்வரும் ஒக்டொபர் 02ஆம் திகதியாகும். அதனை முன்னிட்டு, யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ். போதனா வைத்திய சாலை முன்பாக உள்ள காந்தி சிலையில் முன்றலில் இருந்து, வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி வரை துவிச்சக்கர வண்டி பேரணி சென்றது. யாழ் இந்திய துணைத் தூதுவரின் பங்கு பற்றுதலோடு மும்மதத் தலைவர்களின் ஆசியோடு இந்த பேரணி ஆரம்பமானது. https://athavannews.com/2022/1302026

  24. தகவல் அறியும் ஆணைக்குழுவும் அழுத்தங்களை எதிர் நோக்குகிறது : ஆணையாளர் பின்டோ ஜெயவர்த்தன By VISHNU 30 SEP, 2022 | 10:20 PM K.B.சதீஸ் தகவல் அறியும் ஆணைக்குழுவும் அழுத்தங்களை எதிர் நோக்குகிறது என ஆணையாளர் கிசாலி பின்டோ ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகவியலாளரின் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்துவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சில அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்கள் என்பவற்றால் சில தகவல்களை வழங்கப்படாமை குறித்து ஆணைக்குழுவிற்கும் முறைப்பாடுகள் கிடைத்தன.…

  25. போதையில் ஆலய மின் குமிழ்களை உடைத்தவர்களை எச்சரித்தவர்களின் வீடுகள் மீது தாக்குதல்! By VISHNU 30 SEP, 2022 | 04:19 PM யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை பகுதியில் உள்ள நான்கு வீடுகள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள ஆலயமொன்றில் நவராத்திரி பூஜையை முன்னிட்டு ஆலய வீதியில் மின் குமிழ்கள் பொருத்தப்பட்டு இருந்தன. அவற்றினை 28 ஆம் திகதி புதன்கிழமை வீதியால் சென்ற இருவர் போதையில் மின் குமிழ்களை அடித்து உடைத்துள்ளனர். அதனை அவதானித்த அப்பகுதி இளைஞர்கள் இருவரையும் பிடித்து கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் 29 ஆம் திகதி வியாழக்கிழமை அதிகாலை வேளை மோட்டார் சைக்கிளில் வந்த வன்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.