ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
ஈஸ்டர் தாக்குதல் – இலங்கைக்கு விரையும், "ஸ்கொட்லாந்து யார்ட்" பொலிஸார்! ஈஸ்டர் தாக்குதலுக்கான மூல காரணத்தை கண்டறியும் வகையில் ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸ் குழுவொன்று விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் நடாத்தப்பட்டது. இந்த தாக்குதல் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், இது குறித்து சுயாதீன விசாரணை நடாத்தும் நோக்கிலேயே ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸார் இலங்கை வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இதுவரையில் சுயாதீனமான விசாரணைகள் நடாத்தப்படவில்லை என கொழும்பு பேராயர் கர்தினால் …
-
- 10 replies
- 679 views
-
-
இலங்கையை மையப்படுத்தி தம்மை வலுப்படுத்தும் ஜப்பான்! Digital News Team 2022-08-26T16:01:21 இலங்கையை மையப்படுத்தி முக்கிய சர்வதேச ராஜதந்திர நகர்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் இலங்கையின் கடன் நெருக்கடியை தீர்க்கும் வகையில் இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளின் கூட்டம் ஒன்றை கூட்டுவதற்கு ஜப்பான் முன்வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது ஜப்பானிய அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாதபோதும் உறுதிப்படுத்தப்பட்ட செய்தியாகவே வெளியாகியுள்ளது. முன்னதாக இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை மையப்படுத்தி கடன் வழங்குனர்களின் மாநாட்டை நடத்துமாறு இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரம…
-
- 9 replies
- 857 views
- 1 follower
-
-
400 மில்லியன் ரூபாவிற்கு வீடு கொள்வனவு! வெளியாகியானது ராஜபக்சவினரின் அம்பலம்! ராஜபக்ச குடும்பத்தினர் 400 மில்லியன் பெறுமதியான காணி மற்றும் வீடு ஒன்றை கொள்வனவு செய்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்க முன்னாள் தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்துரைக்கும் போதே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கையில் பில்லியன் கணக்கில் ராஜபக்சவினர் சொத்துக்களை சேகரித்துள்ளனர், இவர்கள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமைக்கான காரணம் என்ன என்றும் கேள்வியெழுப்பியுள்ளார். நாடு நெருக்கடியில் சிக்கியுள்ள வேளையில் கடந்த சில மாதங்க…
-
- 0 replies
- 256 views
-
-
ஆலய முன்றலில் இடம்பெற்ற கைகலப்பில் இளைஞன் பலி; இருவர் காயம் - மட்டக்களப்பில் சம்பவம் By VISHNU 26 AUG, 2022 | 08:24 PM வாழைச்சேனை நிருபர் மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வாகநேரியில் 25 ஆம் திகதி இரவு ஆலய முன்றலில் இடம்பெற்ற கைகலப்பின்போது இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். ஏனைய இருவர் காயமுற்ற நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். குளத்துமடு வாகநேரியைச் சேர்ந்த ந.ரமேஸ்காந்தன் வயது (19) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பிரதேசத்தில் உள்ள திரௌபதி அம்மன் ஆலயத்தில் வருடாந்த உற்சவம் இடம்பெற…
-
- 2 replies
- 283 views
- 1 follower
-
-
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு... வழங்கப்பட்டுள்ள சலுகைகள் எதுவும், கோட்டாவிற்கு கிடைக்காது? அரசியலமைப்பு ரீதியாக முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் எதுவும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கிடைக்காது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவிக் காலம் முடிந்து ஓய்வு பெற்ற ஜனாதிபதியல்ல, அவர் சேவையிலிருந்து விலகிய ஜனாதிபதி என முன்னாள் பிரதம நீதியரசர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு சேவையில் இருந்து விலகிய ஜனாதிபதி ஒருவருக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சலுகைகள் எதுவும் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசியலமைப்புச் சட்டத்த…
-
- 1 reply
- 212 views
-
-
தேசிய பட்டியலில்.. முதல் வெற்றிடத்திற்கு, ரஞ்சன் ராமநாயக்க ! ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் முதல் வெற்றிடத்திற்கு ரஞ்சன் ராமநாயக்க நியமிக்கப்படவுள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அத்தோடு நாட்டின் ஊழல் தடுப்பு வேலைத்திட்டத்தின் தலைவராக செயற்படுவதற்கு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு விடுக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க நேற்று பொதுமணிபோப்பில் விடுதலை செய்யப்பட்டார். இதனை அடுத்து ரஞ்சன் ராமநாயக்கவுடன் இணைந்து ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ச…
-
- 0 replies
- 198 views
-
-
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும்... தரத்தை உறுதிப்படுத்துவதற்கான, "ஸ்டிக்கர்களை" மதுபான போத்தல்களில், ஒட்ட முடியாத நிலை. தரத்தை உறுதிப்படுத்துவதற்கான ஸ்டிக்கர்கள் மதுபான போத்தல்களில் ஒட்டமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மதுபான விற்பனையில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக மதுபானசாலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். மதுபான விற்பனை நிலைய உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுபான தரத்தினை உறுதிப்படுத்துவதற்கான ஸ்டிக்கர்கள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செயற்படுகின்றன. குறித்த ஸ்டிக்கர்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய முடியாத நிலையில் தரப்படுத்துவதற்கான ஸ்டிக்கர்க…
-
- 0 replies
- 171 views
-
-
இலங்கையில் உள்ள... தமது குடிமக்களை, எச்சரிக்கின்றது... இந்தியா!! இலங்கையில் இருக்கும் இந்திய குடிமக்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. புதுடெல்லியில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய போதே இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பாக்சி இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார். இலங்கையில் இந்தியர்களின் பாதுகாப்பை பாதிக்கும் சம்பவங்கள் குறித்து இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் இலங்கையில் உள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளது. இது தொடர்பாக இந்திய குடிமக்களுக்கு வழிகாட்டுதலை வழங்கியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 201 views
-
-
யாழில் நல்லிணக்க மையம் இராணுவத் தளபதியால் திறந்து வைப்பு By VISHNU 26 AUG, 2022 | 08:16 PM யாழ்ப்பாணம் பலாலி சந்தி பகுதியில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட நல்லிணக்க மையம் இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேயினால் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. நல்லிணக்கத்தின் செயல் திட்டமாக ஆரோக்கியம் நிறைந்த நோயற்ற சந்ததியினரை உருவாக்குவதற்கு இலங்கை இராணுவத்தின் பங்களிப்புடன் இலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை உருவாக்கும் முகமாக இந்த நல்லிணக்க மையம் திறந்து வைக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது. புதிதாக பதவியேற்ற இலங்கை ராணுவ தளபதியின் முதலாவது யாழ் மாவட்ட விஜயம் இத…
-
- 2 replies
- 477 views
- 1 follower
-
-
கோட்டாவை, பிரதமராக நியமிப்பதில்... தமக்கு ஆட்சேபனை இல்லை என்கின்றனர், ஆளும் கட்சியினர் ! முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பதில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் கிடையாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மதுர விதானகே மற்றும் பிரதீப் உடுகொட ஆகியோர் இவ்வாறு தெரிவித்தனர். 69 இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதியாகவும் போரை வெற்றிகொண்ட அதிகாரியாகவும் கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்ப முடியும் என பிரதீப் உடுகொட தெரிவித்தார். அவர் நாடு திரும்புவதற்கான உரிமையை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் உறுதி செய்துள்ளது என்றும் பிரதீப்…
-
- 5 replies
- 544 views
- 1 follower
-
-
ஒரு விவசாயிக்கு 50 கிலோ உரம் இலவசம் Digital News Team 2022-08-26T17:36:43 உலக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தினால் இலங்கைக்கு வழங்கப்பவுள்ள ஆயிரம் மெற்றிக் தொன் யூரியா உரம் எதிர்வரும் இரண்டு வாரங்களில் பெற்றுக்கொள்ளப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள குறைந்த வருமான பெறும் விவசாயக் குடும்பங்களுக்கு நெற்செய்கைக்காக 375,000 50 கிலோ யூரியா உர மூட்டைகளை வழங்குவதற்கு அவர்கள் இணக்கம் தெரிவித்திருந்தனர் இதன்படி ஒரு ஏக்கருக்கும் குறைவான நெல் வயல்களை வைத்திருக்கும் 375,000 விவசாயிகளுக்கு ஒரு விவசாயிக்கு 50 கிலோ வீதம் இலவசமாக இந்த உரம் வழங்கப்பவுள்ளது. https://thinakkural.lk/articl…
-
- 0 replies
- 292 views
- 1 follower
-
-
மின்சார சபை இருபத்தெட்டு பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளது Digital News Team 2022-08-26T17:53:18 -சி.எல்.சிசில்- புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து தேசிய மின் கட்டமைப்புக்கு வழங்கும் மக்களுக்கு இலங்கை மின்சார சபை இருபத்தெட்டு பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளதாக சூரிய சக்தி கைத்தொழில் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் தொகை போதுமானதாக இல்லை என்றும், அதை ஓரளவுக்கு உயர்த்த வேண்டும் என்றும் அவர் கூறினார். தற்போதைய மின்சார நெருக்கடிக்குத் தீர்வாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டம் முன்மொழியப்பட்ட போதிலும், அதிகாரிகள் உரிய கவனம் ச…
-
- 0 replies
- 176 views
- 1 follower
-
-
இலங்கைக்கு இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளும் குடிமக்களுக்கு இந்தியா விடுத்துள்ள அறிவிப்பு By T. SARANYA 26 AUG, 2022 | 04:10 PM (நா.தனுஜா) இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வதற்குத் திட்டமிடும் இந்தியப்பிரஜைகளை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வலியுறுத்தியிருக்கும் அந்நாட்டு அரசாங்கம், இலங்கைக்கு அத்தியாவசிய பயணங்களை மேற்கொள்வதற்கு முன்பாக நாணயமாற்று இயலுமை மற்றும் எரிபொருள் கிடைப்பனவு ஆகிய விடயங்கள் தொடர்பில் விசேடமாகக் கவனத்திற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. பாரிய பொருளாதார நெருக்கடியின் விளைவாகக் கடந்த சில மாதங்களாக நாட்டில் உணவு மற்றும் எரிபொருள் ஆகியவற்றுக்குத் தீவிர தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதுடன் அதனையடுத்து நாட…
-
- 0 replies
- 322 views
- 1 follower
-
-
”தரை, வான், கடல் மாத்திரமன்றி சைபர் தளத்திலும் யுத்தம் நிகழலாம்” எதிர்காலத்தில் தரை, வான், கடல் மாத்திரமன்றி சைபர் தளத்திலும் யுத்தம் நிகழலாம். எனவே எமது வீரர்கள் அவ்வாறான தொழில்நுட்ப யுத்தத்துக்குத் தேவையான அறிவைப் பெற்றிருக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார். வெற்றிகரமான இராணுவத்தை உருவாக்க ஒழுக்கம், பயிற்சி, அறிவு ஆகியன அவசியம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஏற்கனவே இந்த விடயங்கள் அனைத்தையும் நிறைவேற்றி வருவதாகவும் தெரிவித்தார். ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்திற்கு ஜனாதிபதி வர்ணம் மற்றும் பல்கலைக்கழக வர்ணம் வழங்க…
-
- 3 replies
- 560 views
-
-
"ஆசிய கிண்ண" வலை பந்தாட்ட அணியில்... தர்ஜினி சிவலிங்கம்! சிங்கப்பூரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசிய கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணியில் தர்ஜினி சிவலிங்கம் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். தற்போது அவுஸ்ரேலியாவில் வலைபந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றிவரும் தர்ஜினி சிவலிங்கம் அங்கிருந்து நேரடியாக சிங்கப்பூர் சென்று இலங்கை குழாத்துடன் இணைந்து கொள்ளவுள்ளார். ஆசிய கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் ஐந்து தடவைகள் சம்பியனான இலங்கை, கடைசியாக 2018 இல் வென்ற கிண்ணத்தை தக்கவைத்துக்கொள்ளும் என நம்பப்படுகிறது. இலங்கை வலைபந்தாட்ட அணியின் தலைவியாக கயஞ்சலி அமரவன்ச நியமிக்கப்பட்டுள்ளதுடன் உதவித் தலைவியாக துலங்கி வன்னித்திலக்க ச…
-
- 4 replies
- 390 views
-
-
நாடளாவிய ரீதியில்... மீண்டும், கையெழுத்து வேட்டையை... ஆரம்பிக்கின்றது கூட்டமைப்பு ! பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்க வலியுறுத்தி, முன்னதாக நாடளாவிய ரீதியில் முன்னெடுத்திருந்த கையெழுத்து வேட்டையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டிய உடனடித்தேவை ஏற்பட்டுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். பயங்கரவாத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்படும் எனவும் அது பயன்படுத்தப்பட்டது என்றும் வழங்கிய வாக்குறுதியை ஜனாதிபதி மீறிவிட்ட நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார். எனவே இந்நாட்டிலுள்ள பிரஜைகள் அனைவரும் இந்த கையெழுத்து வேட்டை பிரசாரத்திற்கு தமது ஆதரவை வழங்கி, மிகமோசமான பயங்கரவாதத் தடைச் சட்டத…
-
- 2 replies
- 353 views
- 1 follower
-
-
எமது சிறுவர்களின் எதிர்காலத்தை அழித்தவர் கோட்டா - உதயதுங்க சீற்றம்- மூன்றாம் திகதி வரக்கூடும் எனவும் தெரிவிப்பு By Rajeeban 26 Aug, 2022 செப்டம்பர் மூன்றாம் திகதி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பக்கூடும் என முன்னாள் தூதுவர் உதயங்கவீரதுங்க தெரிவித்துள்ளார். அவர் 24 அல்லது 25 ம் திகதி நாடு திரும்பியிருக்கவேண்டும்,எனினும் நான் அவர் வரும் திகதியை முன்கூட்டியே வெளியிட்டதை தொடர்ந்து குழப்பங்கள் உருவாகியுள்ளன என உதயங்கவீரதுங்க தெரிவித்துள்ளார். எனினும் அனேகமாக அவர் மூன்றாம் திகதி இலங்கை திரும்பக்கூடும் என உதயங்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிக்க…
-
- 0 replies
- 250 views
-
-
தமிழர்களின் அரசியல் பிரச்சனைக்கான தீர்வு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுடன்பேச்சு-சாணக்கியன் By Rajeeban 26 Aug, 2022 பொதுநலவாய அமைப்பின் 65வது நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது தமிழர்களின் அரசியல் பிரச்சனைக்கான தீர்வு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுடன்பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாகதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது தமிழர்களின் அரசியல் பிரச்சனைக்கான தீர்வு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுட…
-
- 0 replies
- 190 views
-
-
4 நாட்களாக... பட்டினியாக, இருந்த பிள்ளைகளுக்கு... அரிசி திருடிய தந்தை கைது. பொரளை பிரதேசத்தில் 3 கிலோ அரிசி மற்றும் சிறுதானிய உணவுப் பொதியை திருடிய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெஹிவளை பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், பொரளை பிரதேசத்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் 4 நாட்களாக பிள்ளைகள் பட்டினியால் வாடிய காரணத்தினால் இந்த பொருட்களை திருடியுள்ளார். பொரளை பொலிஸாருக்கு அழைத்து வரப்பட்ட சந்தேக நபர் உண்மையைக் கூறியதையடுத்து, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் திருடப்பட்ட பொருட்களின் பெறுமதியை தீர்த்து வைத்ததுடன், அறிவுறுத்தல்களை வழங்கிய பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். https://tamil.madyawediya.lk/2022/08/25/4-நாட்களாக-பட்…
-
- 1 reply
- 281 views
- 1 follower
-
-
சர்வதேச விசாரணை வலியுறுத்தி... ஆகஸ்ட் 30ஆம் திகதி, சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில்... மாபெரும் போராட்டம்! சர்வதேச விசாரணை வலியுறுத்தி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில், புதுக்குடியிருப்பில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் போராட்டத்தில் கலந்துக்கொள்ள அனைவருக்கும் பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவர் மரியசுரேஷ் ஈஸ்வரி மற்றும் செயலாளர் பிரபாகரன் ரஞ்சனா ஆகியோர் இந்த பகிரங்க அழைப்பை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தின் இரண்டாயிரமாவது நாட்களின் நிறைவும் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினமு…
-
- 0 replies
- 158 views
-
-
தாலிக்கொடி அறுப்பு ; வசமாக சிக்கிய இராணுவ வீரர் By T. SARANYA 24 AUG, 2022 | 03:29 PM (கே.பி.சதீஸ்) வவுனியாவில் தாலிக்கொடியை அறுத்து தப்பி சென்ற இராணுவ வீரர் ஒருவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா கனகராயங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தாலிக்கொடியினை சிவில் உடையில் வந்த இராணுவ வீரர் ஒருவர் அறுத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்ற வேளையில், போக்குவரத்து பொலிஸாரின் உதவியுடன் விரைந்து செயற்பட்ட அப்பகுதி பொதுமக்களால் துரத்திப் பிடிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு பறித்து சென…
-
- 6 replies
- 926 views
- 1 follower
-
-
மீண்டும்... எரிபொருளுக்கு தட்டுப்பாடு – நாளை முதல், பேருந்து சேவையை... 50 சதவீதமாக குறைக்க நடவடிக்கை! முத்துராஜவெல பெற்றோலிய முனையத்திலிருந்து பெற்றோல், டீசல் விநியோகங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின், தனியார் தாங்கிகள் உரிமையாளர் சங்கத்தின் இணை செயலாளர் டீ.வீ சாந்த சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். எனவே நாளை(26) முதல் பேருந்து சேவையை 50 சதவீதமாக குறைக்க வேண்டும் எனவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1296116
-
- 1 reply
- 376 views
-
-
பண்டாரவன்னியனின்... 219ஆவது, நினைவு நாள் இன்று. வன்னி இராஜ்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின், 219வது நினைவு நாள் நிகழ்வு வவுனியாவில் இன்று (வியாழக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா நகரசபை மற்றும் பண்டார வன்னியன் விழாக்குழுவின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் தலைமையில் காலை 8.15மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது, வவுனியா மாவட்ட செயலக முன்றலில் அமைந்துள்ள பண்டார வன்னியனின் நினைவுத்தூபிக்கு ஜனாதிபதி சட்டத்தரணியும் அவரது சிலை மாவட்ட செயலகத்தில் அமைவதற்கு காரணமாக இருந்தவருமான மு.சிற்றம்பலம் சார்பாக மலர்மாலை அணிவிக்கப்பட்டது. அத்துடன், நகரசபை உறுப்பினர்கள், பொது அமைப்பினர், அரச அதிகாரிகள், சமூக செயற்பாட்டாள…
-
- 9 replies
- 530 views
- 1 follower
-
-
ஜனநாயக போராட்டம் என்ற பெயரில் பயங்கரவாதமே முன்னெடுக்கப்பட்டது - சாகர காரியவசம் By T. SARANYA 25 AUG, 2022 | 05:13 PM (இராஜதுரை ஹஷான்) ஜனநாயக போராட்டம் என்ற பெயரில் பயங்கரவாத செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டன. அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களின் பின்னணியில் குறுகிய அரசியல் நோக்கம் காணப்பட்டுள்ளமை தற்போது உறுதிப்படுத்தப்பட்ட வண்ணம் உள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். கொழும்பில் புதன்கிழமை (24) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலை…
-
- 0 replies
- 161 views
- 1 follower
-
-
மலையக மண்ணில் இருந்து வறுமை முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டும் - பாரத் அருள்சாமி By VISHNU 25 AUG, 2022 | 08:02 PM (க.கிஷாந்தன்) " நாம் வாழும் மண்ணையும், நமது பெண்களையும் இரு கண்கள்போல பாதுகாக்க வேண்டும். எமது மலையக மண்ணில் இருந்து வறுமை முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டும். அதற்காகவே காங்கிரஸ் போராடிக்கொண்டிருக்கின்றது. இதற்காக பல திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் ஓர் அங்கமாகவே பெண்களுக்கு சுயதொழில் பயிற்சி மற்றும் பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது." - என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பிரஜாசக்தி செயல் திட்டத்தின் பணிப்பாளருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார். …
-
- 0 replies
- 348 views
- 1 follower
-