Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கடன் வசதியை இடைநிறுத்தியது சீனாவின் எக்ஸிம் வங்கி ! இலங்கையின் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதற்கட்ட நிர்மாணப் பணிகளுக்காக வழங்கப்பட்ட கடன் வசதியை சீனாவின் எக்ஸிம் வங்கி இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்தும் முடிவு ஆகியவை இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி முதற்கட்ட நிர்மாணப் பணிகளுக்காக வழங்கப்பட்ட 51 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையை சீனாவின் எக்ஸிம் வங்கி இடைநிறுத்தியுள்ளது. இதனால் சுமார் 2000 வேலைகள் இழக்கும் அபாயத்தை இலங்கையர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், கடவத்…

    • 0 replies
    • 446 views
  2. ரயில் பயணிகளுக்கான அறிவிப்பு! கொவிட் தொற்று நிலைமை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த திருகோணமலை-கொழும்பு இரவு நேர தபால் புகையிரதம் இன்று (07) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. கொவிட் தொற்று நிலைமை காரணமாக, திருகோணமலை-கொழும்பு புகையிரதம் கல்ஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. எனவே திருகோணமலையில் இருந்து வரும் பயணிகள் மட்டக்களப்பில் இருந்து வரும் இரவு நேர தபால் ரயிலுக்கு மாற்ற வேண்டியிருந்தது. பயணிகளின் கடும் கோரிக்கையை ஏற்று மீண்டும் புகையிரதத்தை இயக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த புதிய புகையிரதம் 11 பெட்டிகளை கொண்டுள்ளது. அதில் இரண்டு குளிரூட்டப்பட்ட பெட்டிகள். 2ம் வகுப்பு மற்றும் 1ம் வகுப்பு பயணிகளின் வசதிக்காக ப…

    • 0 replies
    • 392 views
  3. அரச வங்கியொன்றில் பல கோடி ரூபாய் மோசடி! அரச வங்கியொன்றில் இருந்து 68 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மோசடிக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வங்கியின் உதவிப் பொது முகாமையாளராக கடமையாற்றிய பெண்ணொருவர் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு கடவத்தை பிரதேசத்தில் உள்ள அரச வங்கி ஒன்றில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து 48 தனிநபர் கடன் ஆவணங்கள் மூலம் ஆறு கோடியே 83 இலட்சத்து 40,000 ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முறைப்பாடு கிடைத்திருந்தது. சம்பவம் தொடர்பில் மேற்கொண்ட நீண்ட நேர விசாரணையின் பின்னர் கடந்த 5ஆம் திகதி, குறித்த சந்தேக நபர் பண மோசடிக்கு உதவிய குற…

    • 0 replies
    • 209 views
  4. பல வருடங்களின் பின்னர் இலாபம் ஈட்டிய லிட்ரோ! கடந்த ஜூலை மாதம் பல வருடங்களின் பின்னர் லிட்ரோ நிறுவனம் இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாறியுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார். குறித்த காலப்பகுதியில் நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், கடந்த 22 நாட்களில் சுமார் 27 லட்சம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல் சர்வதேச சந்தை விலையுடன் ஒப்பிடும் போது உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை நாளை (08) பிற்பகல் குறைக்கப்படும் எனவும் லிட்ரோ தலைவர் குறிப்பிட்டுள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=164229

    • 0 replies
    • 192 views
  5. யுவான் வாங் 5 கப்பலின், விஜயத்தை ஒத்திவைக்குமாறு... சீனாவிடம், அரசாங்கம் கோரிக்கை ! சீன யுவான் வாங் 5 கப்பலின் விஜயத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு சீன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. செயற்கைக் கோள்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் போன்றவற்றை கண்காணிக்கும் நவீன கருவிகளை இந்த கப்பல் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குறித்த கப்பல் வந்தடையும் என கூறப்பட்டதை அடுத்து பிராந்தியத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. வடமேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் விண்வெளி செயற்கைக்கோள் நடவடிக்கைகளை கண்காணிக்க இந்த கப்பல் ஹம்பாந்தோட்டை வருவதாக இந்தியா தெரிவித்தது. குறித்த கப்பலின் …

    • 3 replies
    • 332 views
  6. மாதாந்தம், ஏழு பில்லியன் டொலர்... நட்டத்தை எதிர்கொள்ளும், ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ்! எரிபொருளுக்கான செலவுக்கு மேலதிகமாக மாதாந்தம் ஏழு பில்லியன் டொலர் நட்டத்தை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் சந்திக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் விமானத்திற்கான எரிபொருளை வழங்காததாலும், அந்த எரிபொருளை இந்தியாவிடமிருந்து பெற வேண்டியமையினால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியா செல்லும் விமானக் குழுவினருக்கு தங்குமிடம் மற்றும் இதர வசதிகள் செய்தல், விமானம் தரையிறக்கல் மற்றும் புறப்பாட்டுக்காகவும் செலவு ஏற்படுகின்றது. ஒரு மாதத்திற்கு 25 முதல் 30 விமானங்கள் இந்தியாவிற்கு செல்வதாகவும் ஒரு நாளைக்கு ஐந்தரை லட்சம் லீட்டர் எரிபொருள் தேவை …

    • 7 replies
    • 680 views
  7. கூட்டமைப்பை... உடைக்கின்ற, முதலாவது தேங்காயை... உடைத்து இருக்கின்றார், ஜனாதிபதி ரணில் – சீ.வீ.கே.சிவஞானம். ஜனாதிபதி அவருடைய பாணியிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கின்ற முதலாவது தேங்காயை உடைத்து இருக்கின்றாரென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் வடமாகாண சபையின் அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்பத்தாவது தேசிய மாநாட்டில் உரையாற்றும்போதே சீ.வீ.கே.சிவஞானம் இதனை தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு வாக்களித்ததாக ரணில் விக்கிரமசிங்க கூறுகின்றார். பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சந்தேகக் கண்ணுடன் ஒருவரை ஒருவர் பார்க்கின்ற விடயத்தை கெட்டித்தனமாக…

    • 1 reply
    • 280 views
  8. அவசரகால சட்டத்தின்... பல சரத்துக்களில், திருத்தம் – வர்த்தமானியை வெளியிட்டார் ஜனாதிபதி. ஜூலை 18ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்ட அவசரகால சட்டத்தின் பல சரத்துக்கள் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் திருத்தப்பட்டுள்ளன. அதன்படி, தேடுதல் மற்றும் கைது தொடர்பான குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 365 (a) மற்றும் 365 (b) நீக்கப்பட்டு, பிரிவுகள் 408 மற்றும் 410 முதல் 420 வரையான பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், உயர் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் விதிக்கப்படும் தண்டனை தொடர்பான பிரிவின் கீழ் உள்ள, குற்றவியல் சட்டத்தின் 365, 365 (ஏ) மற்றும் 365 (பி) ஆகியன நீக்கப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட விசேட வர்த்த…

  9. இலங்கை தொடர்பில்... கடுமையான, புதிய தீர்மானத்தை முன்வைக்க... இணை அனுசரணை வழங்கிய நாடுகள் தீர்மானம். இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து நேரில் கண்டறிவதற்காக ஐ.நா. மனித உரிமை பேரவையின் உயர் மட்ட குழுவொன்று அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ஆசிய பசுபிக் பிரிவிற்கான தலைவர் ரொனி முங்கொவன் தலைமையில் இந்த குழு இலங்கை வரவுள்ளது. குறித்த விஜயத்தின் போது அவர்கள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளனர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் குழுவினரின் அறிக்கையை மனித உரிமை ஆணைக் குழுவின் 51வது அமர்வில் புதிய ஆணையாளர் அல்லது இடைக்க…

  10. போராட்டகார்களுக்கு... புதிய இடம். -ஜனாதிபதி. புறக்கோட்டை – மெனிங் சந்தைக்கு அருகில் உள்ள மிதக்கும் சந்தைப் பகுதியை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் ஜனாதிபதி இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1293866

  11. சர்வகட்சி அரசாங்கத்தை, அமைக்கவே... கோட்டா, பதவி விலகினார் – நாமல். சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பொதுஜன பெரமுன கட்சியின் அலுவலகத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தனவுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவி அவர் இவ்வாறு கூறினார். ஜனாதிபதியை இராஜினாமா செய்ய வைக்கும் ஆரம்ப இலக்கு நிறைவேறியதன் பின்னர் காலி முகத்திடலில் போராட்டக்காரர்களிடம் எவ்வித திட்டமும் இல்லை என்றும் தெரிவித்தார். இந்நிலையில் தன்னை நிரூபித்து நாட்டை வழிநடத்த புதிய ஜனாதிபதிக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார். …

    • 8 replies
    • 509 views
  12. இராணுவ அதிகாரிகளை... கைது செய்ய, நடவடிக்கை எடுக்குமாறு... மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தல். குற்றச்சாட்டில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்சிலெட் வலியுறுத்தியுள்ளார். அதற்காக சர்வதேச நீதி அமைப்பை பயன்படுத்துமாறும் 47 நாடுகளின் தலைவர்களிடம் மிச்சேல் பச்சிலெட் கோரிக்கை விடுத்துள்ளார். குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட 58 இராணுவத்தினரையும் கைது செய்ய அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையிலேயே அவர்களை கைது செய்ய சர்வதேச நீதி அமைப்பை அமல்படுத்த வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார். தற்போது இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா, சீனா …

    • 2 replies
    • 321 views
  13. இளைஞர்களுடன்... வெளிப்படைத் தன்மையுடன், பணியாற்றத் தயார் – ஜனாதிபதி. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடனும் இளைஞர்களுடனும் வெளிப்படைத் தன்மையுடன் பணியாற்றத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என கூறிய ஜனாதிபதி, அதற்கான அனைத்து முயற்சிகளிலும் இளைஞர்களை ஈடுபடுத்த தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல தரப்பினருடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (5) ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடலை மேற்கொண்டார். இதன்போது ஜனநாயகமற்ற அரசியலுக்கும் வன்முறைக்கும் தான் எதிரானவர் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். போராட்டங்கள் ம…

    • 4 replies
    • 385 views
  14. இலங்கை அணுசக்தியை பயன்படுத்துவது குறித்து சிந்திக்கவேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பை தளமாக கொண்ட அட்வொகொட்டா நிறுவகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் ரிவோர்ம் நவ் பொருளாதார மாநாட்டில் உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். அணுசக்தியை இலங்கை பயன்படுத்துவது குறித்து அறிக்கையொன்றை பெற்றுக்கொள்வது குறித்து நாங்கள் தீவிரமாக சிந்திக்கவேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதிக வலுசக்தியிருந்தால் அதிகளவு வலுசக்தியை இந்தியாவிற்கு விற்பனை செய்யலாம் அதேவேளை அதிகளவு மீள்புதுப்பிக்க தக்க சக்தியை இலங்கையி;ல் வைத்திருக்கலாம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அணுசக்தியை பயன்படுத்துவது குறித்து இலங்கை சிந்திக்கவேண்டும் - ரணி…

  15. அதாவுல்லா, விக்கி, பிள்ளையானுக்கு... அமைச்சு பதவி : வெளியான முக்கிய தகவல். சர்வகட்சி அரசாங்கத்தில் ஜீவன் தொண்டமான், ஏ.எல்.எம். அதாவுல்லா, சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு, கிழக்கு மற்றும் மலையக தமிழ் மக்களுக்கு அதிகூடிய சேவையை வழங்குவதற்காக அந்த மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிற…

  16. இந்தியாவின் பாதுகாப்பானது இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்போடு பின்னிப் பிணைந்திருப்பதால், சீன உளவுக் கப்பல் இலங்கைக்கு வருவது குறித்து பல சிவப்புக் கொடிகள் உயர்த்தப்பட்டுள்ளதாக தெற்காசிய அரசியல் கொள்கைகளுக்கான ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 11ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குச் சீன ஆய்வு கப்பல் வருவது தொடர்பில் தற்போது பல்வேறு சர்ச்சைகள் சர்வதேச மட்டத்தில் எழுந்துள்ளன. குறிப்பாக சீன கப்பலின் இலங்கை விஜயத்தை இந்தியா வன்மையாக எதிர்த்து வருவதுடன், அதனை நிறுத்த இராஜதந்திர ரீதியில் முயற்சிகளையும் முன்னெடுத்து வருகின்றது. எனினும் ஹம்பாந்தோட்டைக்கு வரும் சீனக் கப்பலானது எரிபொருள் நிரப்புவதற்காக வருகிறதாகவும், வேறு எந்த நோக்கத்திற்காகவும் அல்ல என்…

  17. தராதரம் பாராமல்... சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என பொலிஸார் எச்சரிக்கை – போராட்டக் களத்தினை விட்டு வெளியேற, சிலர் மறுப்பு! காலி முகத்திடல், அதனை அண்மித்த பிரதேசத்தில் உள்ள அனுமதியற்ற நிர்மாணங்கள் மற்றும் பயிர் செய்கைகளை அகற்றுவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடையவுள்ளது. குறித்த கால அவகாசம் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 5 மணியுடன் நிறைவடையவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். போராட்டக் களத்திற்கு நேற்றைய தினம் மீண்டும் வந்த கோட்டை பொலிஸார் காலிமுகத்திடலை விட்டு வெளியேறுமாறு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அறிவித்துள்ளனர். நாட்டில் தற்போதுள்ள சட்டத்திற்கு அமைவாகவும், பொதுமக்களை வன்முறை ஏற்படுத்தாத வகையிலும் செயற்பட வேண்டும் எனவும் பொலிஸார் தங்கள் அறிவ…

    • 1 reply
    • 284 views
  18. யாழில் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்தவர்களுக்கு 1 இலட்சம் ரூபா தண்டம் யாழ்ப்பாணத்தில் அரிசியின் நிர்ணய விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த இரு வர்த்தகர்களுக்கும்,சமையல் எரிவாயு சிலிண்டரை பதுக்கி வைத்திருந்த வர்த்தகர் ஒருவருக்கும் தண்டம் அறவிடப்பட்டுள்ளது. குறித்த மூன்று வர்த்தகர்களும் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புகொண்டமையை அடுத்து மூவருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய் தண்டம் அறவிடப்பட்டுள்ளது. மாவட்ட பாவனையாளர் அதிகாரசபையினருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை நேற்று நடாத்தப்பட்டது.இதன் போதே பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்த மூன்று வர்த்தகர்கள் சிக்கியுள்ளனர். https://newuthayan.c…

    • 3 replies
    • 304 views
  19. நாட்டைப் பற்றி சிந்தித்து அனைத்து அரசியல் கட்சிகளும் சர்வகட்சி அரசாங்கத்துடன் இணைய வேண்டும் - இலங்கை அமரபுர மகா நிகாயவின் மகா தேரர் நிலையான பொருளாதாரக் கொள்கையொன்றை அமுல்படுத்துவதன் மூலம் நாட்டின் நெருக்கடியான பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்கு பலமான அரசாங்கம் அவசியமானது எனவும், அதற்கு சர்வகட்சி ஆட்சி மிகவும் முக்கியமானது எனவும் இலங்கை அமரபுர மகா நிகாயவின் அதியுயர் மகாதலைவர் அக்கமஹா பண்டித வண. தொடம்பஹல சந்தசிறி தேரர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நேற்று வியாழக்கிழமை மாலை தேரரை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். நேற்று (04) பிற்பகல் இராஜகிரிய, கலபலுவாவ, கோதம தபோவன விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க …

    • 1 reply
    • 231 views
  20. (எம்.ஆர்.எம்.வசீம்) பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீள கட்டியெழுப்புவதற்கு இனம், மதம், கட்சி பேதங்களை மறந்து ஜனாதிபதி முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொருளாதார நெருக்கடி தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்த தவறியமையே கோத்தாபய ராஜபக்ஷ் செய்த தவறு என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை விளக்க உரை தொடர்பில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார் இதுதொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய கொள்கை விளக்க உரை காலத்திற்கு மிகவும் பொருத்தமானது. நாடு தற்போது எதிர் கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து நா…

    • 1 reply
    • 350 views
  21. வருகிறார் கோட்டா முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அடுத்தவாரம் வியாழக்கிழமை (11) இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிய வருகின்றது. தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கான வீசா காலம் எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகின்றது. இந்நிலையில் அதற்கு மூன்று தினங்களுக்கு முன்னதாகவே அவர் இலங்கைக்கு வரவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. எனினும், அவர் இலங்கைக்கு வந்தவுடன் எங்கு தங்கப்போகின்றார் என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லையாம், அது குறித்து தனது சகோதரர்களுடன் கலந்துரையாடி வருவதாகவும், அவருக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தித்தருமாறும் முன்னாள் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், முன்னாள் ஜனா…

  22. ஜனாதிபதி இன்று ஐக்கிய மக்கள் சக்தியுடன் சந்திப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று ஐக்கிய மக்கள் சக்தியை சந்திக்கவுள்ளது. சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில், ஜனாதிபதியுடன் பல்வேறு அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றதுடன், கட்சிகளுக்குள்ளே உள்ளக கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான பின்னணியில், இன்று பிற்பகல் 3 மணிக்கு எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளனர். (a) https://www.tamilmirror.lk/செய்திகள்/ஜனாதிபதி-இன்று-ஐக்கிய-மக்கள்-சக்தியுடன்-சந்திப்பு/175-301758

  23. சீரற்ற காலநிலை காரணமாக... 5 பேர், உயிரிழந்துள்ளனர் – 13 ஆயிரத்து 739 பேர் பாதிப்பு நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 4 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் விசேட விழிப்புணர்வு பிரிவின் பணிப்பாளர் சுகத் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சீரற்ற காலநிலையினால் 65 பிரதேச செயலகப் பகுதிகள…

  24. "கோட்டா கோகம" போராட்ட களத்தில் காணப்படும், சட்டவிரோத கூடாரங்கள் அகற்றப்படாது. காலி முகத்திடல் கோட்டா கோகம போராட்டகளத்தில் காணப்படும் சட்டவிரோத கூடாரங்கள் அகற்றப்படாது என சட்ட மாஅதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். எதிர்வரும் 10ஆம் திகதி வரை குறித்த கூடாரங்கள் அகற்றப்படாது எனவும் அறிவித்துள்ளார். https://athavannews.com/2022/1293740

  25. கோட்டாவைக் கைது செய்யுமாறு... வலியுறுத்தி, யாழில் சுவரொட்டிகள்! இலங்கையை இராணுவ ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிய தமிழனப் படுகொலையாளி கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய் என்ற தொணியில் யாழில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டிலேயே இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினரை ஊழல்வாதிகளாக வெளிப்படுத்தும் சித்திரத்துடன் தென்னிலங்கை போராட்ட களங்கள் அமைந்திருந்த நிலையில், தமிழர் தேசத்தைப் பொறுத்தவரை அவர்கள் தமிழினப்படுகொலையாளிகள் என்பதனை இந்தச் சுவரொட்டிகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளதாக தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/1293756

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.