ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143580 topics in this forum
-
By T. SARANYA 16 AUG, 2022 | 12:12 PM யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் பயிலும் 14 வயது மாணவன் அதிபரினால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளமை தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் திங்கட்கிழமை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நல்லூர் விநாயகர் வீதியைச் சேர்ந்த 14 வயது மாணவனே இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார். தான் சொன்ன பணியைச் செய்யவில்லை என்று தெரிவித்து அதிபர், மாணவனை கடுமையாகத் தாக்கினார் என்று ஆரம்ப விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவனுக்கு நெற்றியில் காய…
-
- 2 replies
- 624 views
-
-
தாமரை கோபுரத்தை... அடுத்த மாதம், 15 ஆம் திகதி முதல்... திறந்து வைக்க தீர்மானம்! கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரை கோபுரத்தை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வர்த்தக நன்மைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் முதலீட்டு வாய்ப்புகளுக்காக இந்த 300 மீற்றர் உயர கோபுரத்தை திறக்க கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ தனியார் நிறுவனம் தீர்மானித்துள்ளது. தாமரை கோபுரத்தில் அலுவலக வசதிகள், காட்சியறைகள், மாநாட்டு அரங்குகள் மற்றும் பிரத்தியேகமான வர்த்தக நிலையங்களை பெற முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறே அதில், சர்வதேச அளவிலான நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகளை ஏற்பாடு செய்வதற்கான வ…
-
- 7 replies
- 936 views
-
-
ஈஸ்டர் தாக்குதலில்.. பாதிக்கப் பட்டவர்களுக்காக, பாப்பரசரிடம் இருந்து... 100,000 யூரோக்கள் நன்கொடை. ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக ஒரு லட்சம் யூரோக்களை பாப்பரசர் பிரான்சிஸ் வழங்கியுள்ளார். இலங்கை மதிப்பில் 36 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான குறித்த நன்கொடைப் பணத்தை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது கட்டுவாப்பிட்டி மற்றும் கொச்சிக்கடை தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்த குடும்பங்களுக்கு 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட…
-
- 15 replies
- 1.3k views
-
-
By DIGITAL DESK 5 16 AUG, 2022 | 03:16 PM (எம்.மனோசித்ரா) தமிழ் மற்றும் சிங்களம் என்பன அரச மொழிகளாகும். எனவே அடுத்த ஆண்டு கொண்டாடப்படவுள்ள 75 ஆவது சுதந்திர தின நிகழ்வில் இவ்விரு மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்படும். அதில் எவ்வித சிக்கலும் இல்லை என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (16) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் பாடப்படுவது தொடர்பில் எந்த பிரச்சினைகளும் தோற்றம் பெறவில்லை. இதற்கு முன்னரும் சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது தேசிய கீதம் தமிழ் மற்றும் சிங்கள…
-
- 4 replies
- 344 views
-
-
தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதை விட ஜெனிவாக் கூட்டமே ஜனாதிபதிக்கு முக்கியம்! விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு 14 August 2022, 9:58 am தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதை விட நடைபெறவுள்ள ஜெனிவாக் கூட்டமே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு முக்கியமானது என்பதை நாங்கள் அவரது அழைப்பில் இருந்து அறிந்து கொண்டோம் என பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதியின் அழை…
-
- 17 replies
- 1.3k views
-
-
By RAJEEBAN 16 AUG, 2022 | 04:06 PM புலம்பெயர் அமைப்புகள் சில தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதைக் கனடிய தமிழர் பேரவை வரவேற்கிறது. ஆயினும் உறுதியான தொடர் நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கிறது. கனடிய தமிழர் பேரவை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, இலங்கையில் இன உறவுகள் மற்றும் பொருளாதார விளைவுகள் மேம்படும் வகையில் புதிய இலங்கை அரசாங்கத்தால் சில புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் தடைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதைக் கனடிய தமிழர் பேரவை (CTC) வரவேற்கிறது. எவ்வாறாயினும், ஓகஸ்ற் 1, 2022 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் பல தமிழ், முஸ்லிம் அமைப்புக்கள், தனிநபர்கள்…
-
- 4 replies
- 608 views
-
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல்நகர் பொறியியல்பீட வளாகத்தின் முதலாவது பொறியியல் மாநாடு நடைபெறவுள்ளது என பொறியியல்பீட பேராசிரியர் அ.அற்புதராஜா தெரிவித்துள்ளார். இந்த மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. அமெரிக்கா, அவுஸ்ரேலியா, பிரித்தானியா,கனடா, சீனா, கொங்கொங் ஆகிய 9 நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். இதன்போது தங்களது ஆய்வுகளையும் அவர்கள் சமர்ப்பிக்கவுள்ளனர். இந்த மாநாடு மாணவர்களது கண்டுபிடிப்புக்கள் மற்றும் ஆய்வுகளை பகிர்ந்துகொள்ளக்கூடிய ஒரு களமாக அமையும் என பொறியியல்பீட பேராசிரியர் மேலும் தெரிவித்தார். அறிவியல்நகர் வளாகத்தில் முதலாவது பொறியியல் மாநாடு | உதயன் …
-
- 0 replies
- 190 views
-
-
இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன இராணுவநோக்கங்களிற்காக பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யொமுரி சிம்புன் நாளிதழிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அம்பாந்தோட்டை துறைமுகம் இராணுவ நோக்கங்களிற்காக பயன்படுத்தப்படுவதை நாங்கள் விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய கப்பல் போர்க்கப்பல் என்ற பிரிவிற்குள் வரவில்லை,அது ஆராய்ச்சி கப்பல் என்ற பிரிவிற்குள் வருகின்றது அந்த கப்பல் அம்பாந்தோட்டை வருவதற்கு நாங்கள் அவ்வாறே அனுமதி வழங்கினோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா இராணுவ நோக்கங்களிற்கு பயன்படுத்த அனுமதிக்கப்போவதில்லை- ஜனாதிபதி | Virakesar…
-
- 0 replies
- 253 views
-
-
பவித்ரா, ஜோன்ஸ்டன், ரோஹித அபேகுணவர்தன, நாமலுக்கு... அமைச்சு பதவிகளை, வழங்குமாறு பரிந்துரை! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் 16 மாவட்டத் தலைவர்களுக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு கோரி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் பரிந்துரை செய்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் சர்வகட்சி அரசாங்கத்திற்குள் இணையாத காரணத்தினாலேயே இவ்வாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் சிலருக்கு தற்போதைய அமைச்சரவையில் தற்காலிகமாக அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவர்களைத் தவிர எஸ்.எம்.சந்ரசேன, பவித…
-
- 2 replies
- 346 views
-
-
ஜனாதிபதியின் தீர்மானத்தினால்... அரசியல் களத்தில், பெரும் சர்ச்சை? பல மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த தீர்மானம் அரசியல் களத்தில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் சில பிரமுகர்களை ஆளுநராக நியமிக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளமையே இதற்கான காரணம் என கூறப்படுகிறது. அரசியலில் இருந்து ஒய்வு பெற்று, அரசியலில் ஈடுபடாத மரியாதைக்குரிய நபருக்கு ஆளுநர் பதவி வழங்குவதுதான் இதுவரை பொது மரபாக காணப்படுகின்றது. எனினும், இம்முறை பாரம்பரியத்தை மீறி அரசியலில் தீவிரம் காட்டிவரும் சில பிரமுகர்களுக்கு ஆளுநர் பதவி வழங்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்…
-
- 0 replies
- 320 views
-
-
அவசரகால சட்டம், தொடர்ந்தும் நீடிக்கப்படாது? அவசரகால சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்படாது என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த மாதம் 27ஆம் திகதி நாடாளுமன்றில் அவசரகால சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது நாடாளுமன்றம் 29ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 27ஆம் திகதியுடன் நிறைவடையும் குறித்த சட்டத்தை நீடிக்க வேண்டுமெனில் மீண்டும் நாடாளுமன்றின் ஒப்புதலைப் பெற வேண்டியது அவசியமானது. எனினும் தற்போது 27ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டுவதற்கான சந்தர்ப்பம் இல்லையென்பது தெரியவந்துள்ளது. எனவே, எதிர்வரும் 27ஆம் திகதிக்கு பின்னர் இந்த சட்டம் தானாக இரத்தாகும் நிலை உருவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. https://a…
-
- 0 replies
- 140 views
-
-
அரசாங்கத்தின் செயற்பாடுகள்... நாட்டின் பன்மைத்துவத்தினை, வெளிப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் – டக்ளஸ் நாட்டின் பன்மைத்துவத்தினை வெளிப்படுத்தும் வகையில் அரசாங்கத்தின் ஒவ்வொரு செயற்பாடுகளும் அமைய வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சுதந்திர தின ஏற்பாடுகள் தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையிலேயே குறித்த விடயம் தொடர்பாக அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் நல்லாட்சி அரசாங்கத்தின் நல்லெண்ண வெளிப்பாடாக சுதந்திர தினத்தில் தேசிய கீதம் தமிழிலும் பாடப்பட்டமையை சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்காலத்திலும் அந்த நடைமுறை…
-
- 0 replies
- 134 views
-
-
பல புலம்பெயர் அமைப்புகள் மீதான தடை நீக்கப்பட்டமைக்கான காரணத்தை ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் தெளிவுபடுத்தவேண்டும் என கலாநிதி குணதாச அமரசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசாங்கத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ள தருணம் எங்களிற்கு கவலையளிக்கின்றது என அவர் தேசிய அமைப்புகளின் சம்மேளனங்களின் சார்பில் கருத்து தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வுகளை அடிப்படையாக வைத்து இவ்வாறான நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியாது எனகலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். அரசியல் நோக்கம் கொண்ட நடவடிக்கைகளால் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்த முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் சில புலம்பெயர் அமைப்புகள் தனிநபர்கள் மீதான தடையை நீக்குவதற்காக பின்பற்றப…
-
- 6 replies
- 529 views
-
-
யாழ். இந்தியத் துணைத்தூதரகத்தில்... இந்தியாவின், 75 ஆவது சுதந்திரத்தினக் கொண்டாட்டங்கள்! இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினம் இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் கொடியேற்றப்பட்டு கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் இந்தியத் தேசியக்கொடியை துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் ஏற்றிவைத்தார். இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியை துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் வாசித்தார். இந்த நிகழ்வில் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள், குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். https://…
-
- 7 replies
- 669 views
-
-
இந்தியாவால்... அன்பளிப்பாக வழங்கப்பட்ட, "டோனியர்-228" கடல்சார் கண்காணிப்பு விமானம், கட்டுநாயக்க விமானப்படை தளத்தை வந்தடைந்தது. இலங்கை கடற்படையினருக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ள இந்திய கடற்படைக்கு சொந்தமான டோனியர்-228 கடல்சார் கண்காணிப்பு விமானம், கட்டுநாயக்க விமானப்படை தளத்தை வந்தடைந்துள்ளது. இந்திய சுதந்திர தினமான... இன்றைய தினம், குறித்த விமானம்... இலங்கைக்கு வழங்கப்படுகின்றது. விமான நிலை ஊழியர்கள்.. தரையிறங்கிய விமானத்தை, நீர் பீச்சியடித்து வரவேற்றனர். இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர். https://athavannews.com/2022/1294793
-
- 15 replies
- 692 views
- 1 follower
-
-
By RAJEEBAN 15 AUG, 2022 | 12:48 PM 2014 முதல் தடையும் தடைநீக்கமும் தொடர்கின்றது நாங்கள் தமிழ் பேசும் மக்களின் நியாயப்படுத்தக்கூடிய அபிலாசைகளை அடைவது குறித்தும் 2015 பொறுப்புக்கூறும் தீர்மானம் குறித்தும் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளோம் என உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் ஐலண்ட் நாளிதழிற்கு தெரிவித்துள்ளார் 2014 இல் என்னையும் உலக தமிழர் பேரவையையும் தடை செய்தார்கள்,2015இல் தடையை நீக்கினார்கள் 2021 இல் மீண்டும் தடை விதித்தார்கள் 2022 இல் தடையை நீக்கியுள்ளனர் என தெரிவித்துள்ள அவர் தமிழ் பேசும் மக்களின் நியாயப்படுத்தக்கூடிய அபிலாசைகளை அடைவது குறித்தும் 2015 பொறுப்புக்கூறும் தீர்மானம் குறித்தும் தாங்கள் தொடர்ந்தும் அர்…
-
- 1 reply
- 688 views
-
-
கோட்டாபய... சிங்கப்பூரில் தங்கியிருந்த காலப்பகுதியில், "67 மில்லியன் ரூபாவை" ஹோட்டல் கட்டணமாக... செலுத்தியதாக தகவல்! முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரில் தங்கியிருந்த காலப்பகுதியில் 67 மில்லியன் ரூபாவை ஹோட்டல் கட்டணமாக செலுத்தியதாக தகவலறித்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் அவரது மனைவி அயோமா ராஜபக்ஷவும் கடந்த 11ஆம் திகதி தாய்லாந்து செல்லும் வரை சிங்கப்பூரில் உள்ள மரினா பே சாண்ட்ஸ் ஹோட்டலில் தங்கியிருந்தனர். ஹோட்டலின் தங்குமிட கட்டணமாக செலவிடப்பட்ட 67 மில்லியன் ரூபாவை அவன்ட் கார்ட் நிறுவனத்தின் உரிமையாளர் நிஷ்ஷங்க சேனாதிபதி செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, எவ்வாறாயின…
-
- 6 replies
- 596 views
-
-
வைத்தியசாலைகளில்.. சத்திர சிகிச்சைகளை, மேற்கொள்ள முடியாத நிலை! நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் மீண்டும் அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித்த அலுத்கே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இந்த நிலைமை காரணமாக வைத்தியசாலைகளில் சத்திரச் சிகிச்சைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே எதிர்வரும் காலங்களில் அத்தியாவசிய மருந்துகளை களஞ்சியப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1294699
-
- 0 replies
- 511 views
-
-
2500 பொருட்களின் இறக்குமதியை.. கட்டுப்படுத்த, பரிந்துரை? அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை மேலும் மட்டுப்படுத்துமாறு இலங்கை மத்திய வங்கி நிதியமைச்சிற்கு அறிவித்துள்ளது. நாட்டின் டொலர் பற்றாக்குறை மேலும் மோசமடையக்கூடும் என்பதனாலேயே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் வெளிநாட்டு கையிருப்பின் தாக்கம் எதிர்காலத்தில் தொடர்ந்து மோசமாக இருக்கும் என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, இந்த இறக்குமதிக் கட்டுப்பாடுகளை உடனடியாகச் செய்ய வேண்டும் என மத்திய வங்கி பரிந்துரை செய்துள்ளது. எரிபொருள், மருந்து மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலரை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதால், அத்தியாவசியமற்ற அ…
-
- 0 replies
- 326 views
-
-
பொது கடனின் அளவு... மொத்த உள்நாட்டு உற்பத்தியில், அதிகரிப்பு! இலங்கை பொது கடனின் அளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 104.6 வீதமாக அதிகரித்துள்ளது. 2018-2022ஆம் ஆண்டுக்கான நிதி முகாமைத்துவம் மற்றும் பொது கடன் கட்டுப்பாடு தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கையின் விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. டிசம்பர் 31, 2019ஆம் திகதி வரை காணப்பட்ட மொத்த 86.8 வீத பொது கடன், கடந்த 2 ஆண்டுகளில் 17.8 வீத வலுவான வளர்ச்சியைக் காண்பிப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து, கடன் தர மதிப்பீட்டு நிறுவனங்களால் கடன் மதிப்பீடுகளை படிப்படியாகக் குறைப்பது தொடர்பான நிலைமையைத் தணிப்பதற்கு மத்திய வங்கி அல்லது நிதி அமைச்…
-
- 0 replies
- 333 views
-
-
அடையாளம் தெரியா நபரிடமிருந்து ரெட்டாவின் கணக்குக்கு 50 இலட்சம் ! Posted on August 14, 2022 by தென்னவள் 14 0 மக்கள் தன்னெழுச்சி போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளரான ரெட்டா என பரவலாக அறியப்படும் ரனிந்து சேனாரத்னவின் வங்கிக் கணக்குக்கு, அடையாளம் தெரியா நபர் ஒருவர் ஊடாக 50 இலட்சம் ரூபா பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் தனது வங்கிக் கணக்கு உள்ள தனியார் வங்கிக்கு முறைப்பாடளித்துள்ளதாகவும், இன்று உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க நடவடிக்கைகளை எடுப்பதாகவும் ரெட்டா எனும் ரனிந்து சேனாரத்ன குறிப்பிட்டார். ‘நான் CIMA தகுதிமிக்க கணக்காளர் இவ்வாறான அடிப்படையற்ற பண வைப்புக்கள் தொடர்பில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்து…
-
- 1 reply
- 351 views
-
-
சீனா, பாகிஸ்தான் போர்க்கப்பல்களுக்கு அனுமதித்தமை இராஜதந்திரத்துக்கு தோல்வி Posted on August 13, 2022 by தென்னவள் 11 0 இந்தியாவை பகைத்துக்கொண்டு சீனா மற்றும் பாகிஸ்தான் போர்க்கப்பல்கள் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி கொடுத்தது இலங்கை இராஜதந்திரத்துக்கு கிடைத்த முதலாவது தோல்வி எனவே இந்தியா விவகாரத்தில் இலங்கை ஒரு அனிசோரா கொள்கைகளை சரியாக கடைப்பிடிக்கும் பட்சத்தில் இந்தியாவில் இருந்து மேலதிகமான உதவிகளை பெறுவதற்கு வாய்ப்புக்கள் உருவாகும். என கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினரும் ஈபி.ஆர்.எல்.எப் பத்மநாப மன்ற தலைவருமான இரா ,துரைரெட்ணம் தெரிவித்தார். மட்டக்களப்பு பஸார் வீதியிலுள்ள கிழக்கு ஊடக மன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்ற ஊடகம…
-
- 3 replies
- 486 views
-
-
ஜனாதிபதி ரணில் விங்கிரமசிங்க அவர்கள் கடந்த 03-08-2022 அன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய அக்கிராசன உரை மீதான விவாதத்தில் 12-08-2022 அன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் உரையாற்றியிருந்தார். அவைத்தலைவர் அவர்களே, ஐனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையில் கூறப்பட்ட விடயங்களில் எங்களுக்கு மிகுந்த கரிசனைக்குரியனவற்றுக்குச் செல்கிறேன். அவரது உரையில் ஒரிடத்தில் வடக்கு – கிழக்கு தொடர்பாகக் குறிப்பிட்டிருந்ததை நீங்கள் அறிவீர்கள். அவரது உரையின் இறுதிப்பகுதியில் ஒரு பந்தியில் அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார். 'தமிழ்ச் சமூகத்தினர் நீண்ட காலமாக எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு அரசியற் தீர்வு காண்பதும் அவசியமாகிறது…
-
- 3 replies
- 547 views
- 1 follower
-
-
இந்தியா, அமெரிக்காவின் தேவைக்காக... எமது கொள்கையை மாற்றியமைக்க முடியாது, என்கின்றார்... சரத் வீரசேகர இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தேவைக்கமைய எமது வெளிவிவகார கொள்கையினை மாற்றியமைக்க முடியாது என ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். சீன கண்காணிப்பு கப்பல் உளவு பார்ப்பதற்காக ஹாம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தருகிறது என இந்தியா குறிப்பிடுவது அடிப்படையற்றது என்றும் தெரிவித்தார். இந்தியாவை உளவு பார்ப்பதற்கு சீனாவின் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தர வேண்டிய தேவை கிடையாது என்றும் சரத் வீரசேகர சுட்டிக்காட்டினார். இதேவேளை இந்த கப்பலுக்கான அனுமதியை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் வழங்…
-
- 12 replies
- 669 views
-
-
புலம்பெயர் அமைப்புகள் மீதான... தடையை நீக்கியது, அரசாங்கம். இலங்கை அரசாங்கம் சில புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர் அமைப்புகள் மீதான தடையை நீக்கியுள்ளது. உலகதமிழர் பேரவை மற்றும் அதன் பேச்சாளர் சுரேன்சுரேந்திரன் மீதான தடைகளை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவை, கனடா தமிழ் காங்கிரஸ் ஆகிய அமைப்புகள் மீதான தடையையும் இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தடை நீக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/133487?fbclid=IwAR0BlNvSchaz2DpfXZ0wQ02QbjM6vj0iuIpB5q6jD6vVobVGxukdp2m28dc
-
- 30 replies
- 1.9k views
- 2 followers
-