ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
குட்டிமணி, தங்கதுரையின்... 39 ஆவது நினைவு நாள் அனுஸ்டிப்பு! 1983ஆம் ஆண்டு கறுப்பு ஜுலை கலவரத்தின்போது, வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் முக்கியஸ்தர்களான தங்கத்துரை மற்றும் குட்டிமணி உள்ளிட்ட 53 பேரின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட காரியாலயத்தில் மாவட்ட பொறுப்பாளர் புரூஸ் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது குட்டிமணி, தங்கத்துரை மற்றும் ஜெகன் ஆகியோரது உருவப்படங்களுக்கு மலர்மாலை அணிவித்து சுடரேற்றி, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் கட்சியின் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் மயூரன் மற்றும் கட்சியின் உறுப்பி…
-
- 1 reply
- 288 views
-
-
போராட்டத்தில் ஈடுபடுபவர்களை... அடக்குவதை விடுத்து, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை... நிறைவேற்ற வேண்டும் – சாணக்கியன்! போராட்டத்தில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் ஊடாக அடக்குவதை விடுத்து அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். அவசரகால சட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இலங்கை அரசியல் வரலாற்றில் தவறுகளை திருத்திக் கொள்ள அரசியல் தலைவர்களுக்கு பல சந்தர்ப்பம் கிடைத்த போதும் அவர்கள் அவற…
-
- 0 replies
- 204 views
-
-
அமைச்சு பதவிகளுக்காக... கொள்கைகளை, விட்டுக்கொடுக்க முடியாது – சஜித்! அமைச்சு பதவிகளுக்காக கொள்கைகளை விட்டுக்கொடுக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அவசரகால சட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மக்களை ஒடுக்கும் இந்த அரசாங்கத்துடன் கொடுக்கல், வாங்கல் இல்லை எனவும் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், அமைச்சு பதவிகளுக்காக கொள்கைகளை விட்டுக்கொடுக்க முடியாது எனவும், அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித…
-
- 0 replies
- 295 views
-
-
அனைத்து... உப தபால் அலுவலகங்களும், இன்று மூடப்படுகின்றன! நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து உப தபால் அலுவலகங்களும் இன்று(வியாழக்கிழமை) மூடப்படவுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். நிலவும் போக்குவரத்து நெருக்கடிகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, மறு அறிவித்தல் வரை அனைத்து உப தபால் அலுவலகங்களும் திங்கள், செவ்வாய், புதன், வௌ்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காலை 09 மணி முதல் மாலை 03 மணி வரை திறக்கப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. தபால் நிலையங்கள் திங்கட்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும் என்பதுடன் செவ்வாய்க்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை திறக்…
-
- 0 replies
- 268 views
-
-
இலங்கைக்கு அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள கரையோர பாதுகாப்பு கப்பலை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்காவுக்குச் சென்றவர்களில் 9 பணியாளர்கள் அங்கு தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கப்பலை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக நூற்றுக்கும் மேற்பட்டோர் அமெரிக்கா சென்றுள்ளனர். இந்தக் கப்பல் இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் இலங்கைக்கு கொண்டுவரப்படும் என கடற்படை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் தலைமறைவான 9 இலங்கையர்கள்! (newuthayan.com)
-
- 13 replies
- 607 views
-
-
யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மாணவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் சுற்றறிக்கையில் பிரகாரம் 2 வருட காலத்திற்கு குறையாத வகுப்புத்தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. யாழ்.பல்கலைக்கழத்தின் புதுமுக மாணவர்களை ஒன்று கூடல் எனும் பெயரில் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதிக்கு அழைத்து பகிடி வதைக்கு உட்படுத்தப்படுவதாக மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ்க்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் அது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு இணைப்பாளரால் பல்கலைக்கழக நிர்வாகத்திற்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து சட்ட நிறைவேற்று அதிகாரி, மாண…
-
- 2 replies
- 367 views
-
-
கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை ஏந்திய நபர் ஒருவரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு வீடியோ ஒன்றில், குறித்த நபர் படுக்கையில் படுத்திருந்தவாறு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை போர்வையாக பயன்படுத்துவதைக் காட்டுகிறது. அத்தோடு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை தீயிட்டு அழிப்பதாகவும் அவர் கூறியதாகக் கூறப்படுகிறது. ஜூலை 09 ஆம் திகதி கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதன் பின்னர் கொடியை எடுத்துச் சென்ற நபர் சி.சி.டி.வி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் சந்தேக நபர் கொடியை இடுப்பில் கட்டிக்கொண்ட…
-
- 3 replies
- 477 views
-
-
சிங்கப்பூரில் கோட்டாபயவை கைது செய்ய வலுக்கும் கோரிக்கை - நாட்டை விட்டு வெளியேறுகிறாரா? சதீஷ் பார்த்திபன் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கை முன்னாள் ஜனாதிபதி இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய வேண்டும் என்று சிங்கப்பூரில் கோரிக்கை வலுத்து வருகிறது. இது தொடர்பாக சிங்கப்பூர் அரசு தலைமை சட்ட அதிகாரியிடம் (அட்டர்னி ஜெனரல்) குற்றவியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டங்களுக்கான அமைப்பு இந்தப் …
-
- 13 replies
- 1k views
- 1 follower
-
-
இலங்கை தனது இருதரப்பு கடன் வழங்குனரான சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) கோரியுள்ளது. இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பொதியை எதிர்பார்த்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சீனா ஒரு பெரிய கடன் வழங்குநராக உள்ளது. இந்நிலையில், கடன் மறுசீரமைப்பில் இலங்கை சீனாவுடன் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் துறையின் இயக்குனர் கிருஷ்ணா சீனிவாசன் கூறியுள்ளார். ரொயிட்டர் செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கை சீனாவிற்கு 6.5 பில்லியன் டொலர் செலுத்த வேண்டும் IFF (Institute of Internati…
-
- 0 replies
- 377 views
-
-
இலங்கை சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவேண்டும் என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது. சீனா பெரிய கடன்வழங்கும் நாடு இலங்கை கடன்மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவுடன் சாதகமான விதத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டும் என சர்வதேச நாணயநிதியத்தின் ஆசிய பசுபிக்கிற்கான இயக்குநர் கிருஸ்ணா ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். 22 மில்லியன் மக்களை கொண்ட நாடு அதன் வரலாற்றில் ஒருபோதும் இல்லாத பொருளாதார அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. பலமாத எரிபொருள் உணவு மற்றும் மருந்து தட்டுப்பாட்டினை தொடர்ந்து உருவான பாரிய மக்கள் எழுச்சி காரணமாக முன்னைய ஜனாதிபதி பதவி நீக்கப்பட்டதை தொடர்ந்து ஆறு தடவை பிரதமராக பதவி வகித்த ரணில்விக்கிரமசிங்க ஜனாதிபதிய…
-
- 0 replies
- 191 views
-
-
இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கு இந்தியா துரிதமாக உதவியது ஆனால் உதவிக்காக விடுக்கப்பட்ட வேண்டுகோள்களிற்கு சீனா பதிலளிக்கவில்லை என யுஎஸ்எயிட்டின் தலைமை நிர்வாகி சமந்தா பவர் தெரிவித்துள்ளார் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சமந்தா பவர் அங்கு இதனை தெரிவித்துள்ளார். புதுடில்லி ஐஐடியில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கான உதவும் மிக முக்கியமான நடவடிக்கைகளுடன் இந்தியா துரிதமாக பதில்நடவடிக்கையில் ஈடுபட்டது என சமந்தா பவர் தெரிவித்துள்ளார். ஆனால் சீனா கணிசமான நிவாரணத்தை என்ற வேண்டுகோள்களிற்கு இறுதிவரை பதில்அளிக்கப்படவில்லை எனவும் சமந்தா பவர் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 151 views
-
-
இலங்கை சில நிபந்தனைகளில் பின்னடிப்பதால், ஐஎம்எப் உதவி தாமதமாகிறது. 1, படையினர், அரச சேவையில் உள்ளோரின் தொகை குறைத்து வீட்டுக்கு அனுப்புதல். 2, இலவச கல்வி, இலவச மருத்துவம் காத்திரமான குறைப்பு. முன்னர் சிறிமாவோ காலத்தில், ஆஸ்பத்திரி போனால், ஒரு ரூபாய் முத்திரை கொடுத்தே, டிக்கெட் எடுக்க முடியும் என்ற நிலை இருந்தது. அவ்வாறு, நூறு ரூபாய் முதல் ஐநூறு ரூபாய் வரை என்று வரக்கூடும் என்கிறார்கள். அதே போல் கல்விக்கும், நூறு முதல் ஐநூறு ரூபாய் வரை மாதம் அல்லது தவணைக்கு பாடசாலைக்கு கட்டுமாறு கோரலாம். இலங்கையில் பல்கலைக்கழக கல்வி கூட இலவசமானது. பிரிட்டனில் உள்ளது போல, மாணவர்களுக்கு அரசு கடன் கொடுத்து படிக்க வைக்கும் நிலை வரலாம். இவற்றுள் சகலதும் அல்லது …
-
- 2 replies
- 342 views
-
-
எரிபொருளை... அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களை, கைது செய்யும் பொலிஸாருக்கு... பணப் பரிசு! சட்டவிரோதமான முறையில் எரிபொருளினை சேகரித்து அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 50 ஆயிரம் முதல் 3 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணப்பரிசு வழங்கப்படவுள்ளது. பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன இதுதொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். இதற்கமைய 100 லீற்றர் வரையான பெற்றோல் அல்லது டீசலை கைப்பற்றும் அதிகாரிகளுக்கு 50 ஆயிரம் ரூபாவும், 100 முதல் 500 லீற்றர் வரையிலான எரிபொருளை கைப்பற்றும் அதிகாரிகளுக்கு 02 இலட்சம் ரூபாவும் பரிசாக வழங்கப்படவுள்ளது. அத்துடன், 500 முதல் 1000 லீற்றர் வரையான எரிபொருளைக் கைப்பற்றுவோருக்கு 03 இலட்சம் ர…
-
- 2 replies
- 368 views
-
-
அவசரகால சட்டம்... 57 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம். அவசரகால சட்டம் மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவசரகால நிலை சட்டத்தை பிரகடனப்படுத்தி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பிலான விவாதம் இன்று இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து குறித்த சட்டம் தொடர்பான வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதன்போது ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்காரணமாக குறித்த சட்டம் 57 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1292581
-
- 3 replies
- 401 views
-
-
மக்கள் பலத்துடன் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்கவேண்டும் - வாசுதேவ நாணயக்கார (எம்.ஆர்.எம்.வசீம்) ஜனாதிபதி தலைமையிலாள சர்வகட்சி அரசாங்கம் அமைத்தால் அதன் பொருளதாரா கொள்கையின் அடிப்படையிலேயே அதில் இணைவதா இல்லையா என தீர்மானிப்போம். மக்கள் பலத்துடன் ரணில் விக்ரமசிங்கை அந்த பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலே நாங்கள் இருக்கின்றோம் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். சோசலிச மக்கள் முன்னணி நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், புதிய லிபரல்வாதத்த…
-
- 2 replies
- 406 views
-
-
ரணில் விக்கிரமசிங்கவின்... தனிப்பட்ட இல்லத்திற்கு, தீ வைத்த... 20 பேர் அடையாளம் காணப்பட்டனர்! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 20 பேரை இதுவரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் அடையாளம் கண்டுள்ளனர். சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளிகள், புகைப்படங்கள் மற்றும் ஊடக நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட காணொளிகள் ஊடாகவே இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வலுக்கட்டாயமாக இல்லத்திற்கு நுழைந்தவர்கள் மற்றும் இல்லத்திற்குள் நுழைய வழிவகுத்தவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸ் தலைமையகத்தினால் குறித்த சந்தேக நபர்கள் தொடர்பான…
-
- 2 replies
- 289 views
-
-
ஸ்திரத்தன்மை , பொருளாதார மீட்சிக்கான முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் - ஜனாதிபதி ரணிலுக்கு இந்திய பிரதமர் வாழ்த்து (எம்.மனோசித்ரா) இலங்கையின் நெருங்கிய நண்பனாகவும், அண்டை நாடாகவும் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கான முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்து கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்த பதவி காலம் இலங்கையின் அனைத்து பிரஜைகளினதும் அபிலாஷைகளையும் நிறைவேற்றுவதுடன், பொருளாதார ஸ்திரத்தன்மைக்கும் ஊட்டமளிக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.…
-
- 1 reply
- 188 views
-
-
சர்வதேச நாணய நிதியத்திடம் எந்த உதவியையும் இலங்கை எதிர்பார்க்க முடியாது - ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் (நா.தனுஜா) இலங்கை அதன் அரசியல் நெருக்கடிகளிலிருந்து மீளும் வரையில் சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார உதவிச்செயற்திட்டம் இலங்கைக்குக் கிட்டப்போவதில்லை என்று ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டெபோரா ப்ரோட்டிகம் தெரிவித்துள்ளார். 'நாட்டின் அனைத்து விடயங்களும் தொடர்ந்து நெருக்கடி நிலையில் இருக்கும்போது சர்வதேச நிதியத்தினால் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தமுடியாது. எனவே ஸ்திரமான அரசாங்கம் அமைக்கப்பட்டு, நிதியமைச்சரொருவர் நியமிக்கப்படும் வரையில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு யாரும் இருக்கப்ப…
-
- 8 replies
- 750 views
-
-
கோட்டாபய ராஜபக்ஷவின்... பயண அனுமதி காலத்தை, மேலும் நீடித்தது... சிங்கப்பூர் அரசாங்கம் ! இரண்டு வாரங்களுக்கு முன்பு தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூர் சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பயண அனுமதி, மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன மக்களால் முற்றுகையிடப்பட்டதை அடுத்து கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவுக்கு தப்பி ஓடியிருந்தார். ஜூலை 14 ஆம் திகதி, மாலைதீவில் இருந்து சவுதி விமானத்தில் சாங்கி விமான நிலையத்திற்கு வந்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 14 நாள் பயண அனுமதி வழங்கப்பட்டது. சிங்கப்பூர் வந்த சிறிது நேரத்திலேயே, அவர் தனது பதவியை இராஜினாமா செய்த நிலையில் 15 ஆம் திகதி அன்று நாடாளுமன்றத்தால் உத்தியோகப்ப…
-
- 0 replies
- 207 views
-
-
22வது... திருத்தச் சட்டமூலம், இன்று நாடாளுமன்றத்தில்! அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம் இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 19 ஆவது திருத்தத்தில் உள்ள சில சரத்துகளை மீண்டும் உள்வாங்கப்பட்டுள்ள அதே வேளையில் 20வது திருத்தத்தை இரத்து செய்வதை இந்த சட்டமூலம் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஜூன் 24 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இந்த சட்டமூலம் ஜூன் 20 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்றது. இதன்படி, அரசியலமைப்பு பேரவை, இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் அரசியலில் ஈடுபடாமல் தடுப்பது, அமைச்சர்களை நியமிப்பதற்கான புதிய நடைமுறை உள்ளிட்டவை இதில் உள்வாங்கப்பட்டுள்ளன. அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டத்தை முன்வைப்பது …
-
- 0 replies
- 211 views
-
-
நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: ஆளும்கட்சி உறுப்பினர்கள், கட்டாயம் பங்கேற்க வேண்டும் என உத்தரவு. ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் இன்று நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்திற்கு கட்டாயம் வருகை தர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவசரகாலச் சட்டத்தை ஒரு மாதம் நீடிக்கும் திட்டத்தை நாடாளுமன்றம் அனுமதிக்க வேண்டும் என்பதால் அவர்களது வருகை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வருவதற்கு பெற்ற வாக்குகளை அவசரகால சட்டத்தை நிறைவேற்றும் பிரேரணைக்கு கிடைக்காது என அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1292479
-
- 0 replies
- 175 views
-
-
களவாடிய துப்பாக்கிகள் எங்கே?" நேருக்கு நேர் அனுரவிடம் கேட்ட ஜனாதிபதி ரணில் : ஆடிபோன அநுர
-
- 12 replies
- 889 views
-
-
இலங்கையில் இயல்புநிலை திரும்புகிறதா? எரிபொருள் நிலையங்களில் குறையும் கூட்டம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் தீவிரமடைந்துள்ள பொருளாதார நெருக்கடி இன்னும் அவ்வாறே காணப்படுகின்ற போதிலும், அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மிக வேகமாக முன்னெடுத்து வருகின்றது. புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னரான காலப் பகுதியில் அத்தியாவசிய பொருட்களுக்கான வரிசைகள் குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக சமையல் எரிவாயு வரிசைகள் பெருமளவு குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. சமையல் எரிவாயு விநியோகத்தை தற்போது …
-
- 1 reply
- 353 views
- 1 follower
-
-
கோட்டாபய ராஜபக்ஷ தலைமறைவாக இல்லை (வீடியோ) முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமறைவாக இருப்பதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என தாம் நம்புவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (26) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக தேவையான வீசா பெற்று அந்த நாட்டுக்கு சென்றுள்ளதால் அவர் தலைமறைவாக இருப்பதாக நான் நம்பவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=163791
-
- 9 replies
- 1.2k views
-
-
ஜனாதிபதி ரணில் - சீனாவுக்கு பயணம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சீனாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார் என சீனாவுக்கான இலங்கை தூதுவர் பாலித கொஹொன தெரிவித்துள்ளார். வர்த்தகம் முதலீடு மற்றும் சுற்றுலா உள்ளிட்ட விடயங்களில் ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடுவதற்காக அவர் சீனாவிற்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளார் . மேலும் கொழும்பிலும். அம்பாந்தோட்டையிலும் சீனாவின் ஆதரவுடன் கூடிய பரந்த துறைமுகத் திட்டங்களுக்கு மேலதிக முதலீட்டை மேற்கொள்வதன் மூலம் பீய்ஜிங், இலங்கைக்கு உதவ முடியும் என இலங்கை தூதுவர் பாலித கொஹொன குறிப்பிட்டுள்ளார் . இதேவேளை சீனா தொடர்பில், புதிய அரசாங்கத்தின் கொள்கையில் எந்த அடிப்படை மாற்றமும் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்தார். htt…
-
- 6 replies
- 405 views
-