Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், திறைசேரியை பிரதிநிதித்தும் 4 பிரதிநிதிகள்... நாட்டை வந்தடைந்தனர். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் மற்றும் திறைசேரி திணைக்களத்தின் நான்கு உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு இன்று இலங்கையை வந்தடைந்துள்ளது. நாட்டின் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு எத்தகைய உதவிகளை வழங்கமுடியும் என்பது குறித்து அவர்கள் பல தரப்பினருடனும் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளனர். இந்தக்குழுவினர் எதிர்வரும் புதன்கிழமை (29) வரை இலங்கையில் தங்கியிருந்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொருளியலாளர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளனர். இந்த விஜயமானது இலங்கை மக்களின் பாதுகாப்பு மற்றும் சுபீட்சம் ஆகியன தொடர்பாக அமெரிக்கா கொண்டி…

  2. வெளிநாட்டு நாணய கையிருப்பு குறித்து இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு Published by T. Saranya on 2022-06-25 வெளிநாட்டு நாணயங்களை கையிருப்பில் வைத்திருப்பது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இலங்கையில் நபரொருவர் தனது உடமையில் வைத்திருக்கக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் அதிகபட்ச வரம்பு 15,000 அமெரிக்க டொலர்களில் இருந்து 10,000 அமெரிக்க டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மேலதிக வெளிநாட்டு நாணயத்தை உடமையில் வைத்திருக்கின்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தமக்கு உரிமையுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இலங்கையிலுள்ள அல்லது வசிக்கின்ற நபரொருவரின் உடமையில் வைத்திருக்கும் வெளிநாட்டு நாணயத் தொகையை 15,000 அ…

    • 1 reply
    • 264 views
  3. பொருளாதார நெருக்கடிக்குக் காரணமான ஜனாதிபதி பதவி விலக வேண்டிய தருணம் இதுவாகும் - அமெரிக்காவின் பிரபல பொருளியலாளர் (நா.தனுஜா) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கைகளே உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படுவதற்குப் பிரதான காரணம் என்று சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்காவின் பிரபல பொருளியலாளர் ஸ்டீவ் ஹன்க், ஜனாதிபதி பதவி விலகவேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவின் முதலாவது ஆய்வுப்பல்கலைக்கழகமான ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளியலாளரான ஸ்டீவ் ஹன்க் மிகமோசமடைந்துவரும் இலங்கையின் பொருளாதார நிலைவரம் குறித்து கடந்த சில மாதங்களாக தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாகப் பதிவுகளைச் செய்துவருகின்றார். …

    • 6 replies
    • 343 views
  4. வடமாகாண, வைத்தியர்களின்... சம்பளம் குறைப்பு! பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தற்போது வைத்தியர்கள் பணியாற்றி வரும் நிலையில், வடமாகாணத்தில் அவர்களுக்கான சம்பளம் குறைக்கப்பட்டு முழுமையாக வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளர் கதிரமலை உமாசுதன் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பல்வேறு நெருக்கடிகள் தற்போது நாட்டில் காணப்பட்டாலும் கூட அதை எதிர்கொண்டு வைத்தியர்கள் தங்களால் இயன்றவரை பணியாற்றி வருகின்றனர். நாம் பல்வேறு கோரிக்கைகளை உயர் அதிகாரிகளுக்கு முன்வைத்த போதும் அதனைக் கருத்தில் கொள்ளாது வடமாகாணத்தில் வைத்தியர்களின் சம்பளத்தை குறைத்துள்ளதுடன் முழுமையாக வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது. …

  5. இலங்கை நாட்டு மக்கள் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். அவர்களில் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவான ஒரு சிறு பகுதியினர் இருக்கலாம். எனினும் இவர்கள் வந்து இலங்கையில் முதலீடு செய்ய முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மேலும், வடக்கு- கிழக்கை எமக்கு தாருங்கள் நாங்கள் செய்து காட்டுகிறோம் என்று கூறாமல் வட கிழக்கு உள்ளிட்ட முழு நாட்டையும் புலம்பெயர் தமிழர்கள் முன்னேற்ற செய்யலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கையர்களுக்கு மத்திய வங்கியின் அவசர அறிவிப்பு! சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் புதுப்பிக்கத்தக்க மி…

    • 14 replies
    • 786 views
  6. குறைந்த செலவில் உள்நாட்டிலேயே பெற்றோல், டீசல் உற்பத்தி! இலகுவாக கிடைக்கும் பொருட்களை கொண்டு பயோ பெற்றோல் மற்றும் பயோ டீசல் என்பவற்றை குறைந்த விலையில் உற்பத்தி செய்ய முடியும் என யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆய்வு கூட உதவியாளர் தெரிவித்தார். நவாலியினை சேர்ந்த செல்வராசா சுரேஸ்குமார் இன்றையதினம் அதற்கான செய்முறை விளக்கத்தினை நிகழ்த்திக் காட்டினார். இதன்போது தேங்காய் எண்ணெய்/வேப்பெண்ணெய் , சாம்பல் போன்ற இலங்கையில் இலகுவாக கிடைக்கும் மூலப்பொருட்களை வைத்து பயோ டீசலினை இலகுவாக தயாரிக்க முடியும் எனவும் அதேபோன்று நீர் மற்றும் சிரட்டைக்கரி போன்ற காபன் வகைகளை பயன்படுத்தி பயோ பெற்றோலினை இலங்கையில் உற்பத்தி செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளார். இதற்கான தயாரிப…

  7. கொள்கைகளுக்கேற்ப இலங்கைக்கு உதவ முடியும் ; சர்வதேச நாணய நிதியக்குழு தெரிவிப்பு (எம்.மனோசித்ரா) நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு, தமது கொள்கைகளுக்கு ஏற்ப இந்த இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு உதவ எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளது. கடந்த 20 ஆம் திகதி திங்கட்கிழமை நாட்டுக்கு விஜயம் செய்த சர்வதேச நாணய நிதிய தூதுக்குழு எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இங்கு தங்கியிருந்து, பொருளாதார நெருக்கடிகளை தீர்ப்பதற்கு உதவக் கூடிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து வருகிறது. இக்குழு தனது முதலாவது சந்திப்பினை நாட்டுக்கு விஜயம் செய்த அன்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் முன்னெடுத்திருந்தது. எனினும் இதன் போது க…

    • 3 replies
    • 299 views
  8. அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணத்திற்காக பெறப்பட்ட வெளிநாட்டு கடன் அரசின் எந்த வைப்பு கணக்குகளிலும் உள்வாங்கப்படவில்லை - கோப் குழுவில் சுட்டிக்காட்டல் (இராஜதுரை ஹஷான்) அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருடகாலத்திற்கு குத்தகை அடிப்படையில் வழங்கியதன் ஊடாக கிடைக்கப்பெற்ற நிதியை துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கு பெற்றுக்கொண்ட கடனை செலுத்த பயன்படுத்தவில்லை. அம்பாந்தோட்டை துறைமுகம் நிர்மாணிப்பிற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட வெளிநாட்டு கடன் அரசின் எந்த வைப்பு கணக்குகளிலும் இதுவரை உள்வாங்கப்படவில்லை கோப்குழுவில் சுட்டிக்காட்டப்பட்டது. நிதியமைச்சு, துறைமுக அதிகார சபையுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு ஒருமாத காலத்திற்குள் உரிய ஆவணப்படுத்தலுடன் கணக்குகளை தயாரித்து கோப் குழுவிற்கு…

  9. இலங்கை வந்த இந்தியத் தூதுக்குழு: தொடர்ந்து இந்தியா, தமிழ்நாடு வழங்கும் உதவிகள் என்ன? ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PMD SRI LANKA இலங்கை எதிர் நோக்கியுள்ள இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு, நெருங்கிய நண்பனாக இந்தியா முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கும் என இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்துள்ளார். பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு தொடர்ந்து நிதியுதவிகளை வழங்குவது குறித்து ஆராய்வதற்காக இந்திய தூதுக்குழு ஜூன் 23 காலை கொழும்புவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தது. இந்…

  10. புதிதாக, தேர்தலை நடத்த... தற்போது வாய்ப்பு இல்லை – பிரதமர் உறுதியான பொருளாதார அடித்தளத்தை ஏற்படுத்தினால் மட்டுமே புதிதாக தேர்தலை நடத்த முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். முதலில் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதன் பின்னரே தேர்தலை நடத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த விடயம் குறித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், சில பிரச்சினைகளுக்கு தீர்வை கண்ட பின்னர் மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என கூறினார். 225 பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்ய வேண்டிய பொறுப்பும் உரிமையும் பொதுமக்களுக்கு உள்ளது எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார். இதேவேளை நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் நாம…

  11. பாடசாலைக்குச் செல்ல முடியாது என... இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவிப்பு! தமக்கு முறையான அறிப்பு இல்லையென்றால் திங்கள் முதல் பாடசாலைக்குச் செல்ல முடியாது என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன் அவர்கள் ஊடகங்களுக்கு அனுப்பிய செய்தி குறிப்பிலேயே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஆசிரியர்களின் போக்குவரத்திற்கு ஏதாவது பொறிமுறையை உருவாக்குமாறு பல தடவைகள் அரசிடம், அமைச்சிடம் கோரிக்கை முன்வைத்தோம். அதற்கு இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை. நாளுக்குநாள் நெருக்கடிகள் அதிகரித்தே செல்கின்றன. பொதுமக்களுக்கும் ஆசிரியர்களுக்கும் முரண்பாடுகள் உருவாக …

  12. 3 பில்லியன் பெறுமதியான பொருட்களுடன் நாட்டை வந்தடைந்த கப்பல்! இந்திய மக்களால் இலங்கைக்கு வழங்கப்பட்ட மனிதாபிமான உதவித்தொகையுடன் கூடிய கப்பல் இன்று (24) இலங்கையை வந்தடைந்துள்ளது. அவற்றில் 14,712 மெட்ரிக் தொன் அரிசி, 250 மெட்ரிக் தொன் பால் மா மற்றும் 38 மெட்ரிக் தொன் மருந்துகள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மனிதாபிமான உதவியின் மொத்த பெறுமதி 3 பில்லியன் இலங்கை ரூபா என தெரிவிக்கப்படுகிறது.. இந்திய மக்களால் வழங்கப்பட்ட முதல் மனிதாபிமான உதவித்தொகை கடந்த மாதம் 22 ஆம் திகதி நாட்டை வந்தடைந்ததுடன் அதில் 9,000 மெட்ரிக் தொன் அரிசி, 50 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் 25 மெட்ரிக் தொன் மருந்துகள் அடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http:/…

    • 4 replies
    • 467 views
  13. நாடு, பாரிய போஷாக்கின்மைக்கு.. முகங்கொடுத்துள்ளதாக... எச்சரிக்கை. பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு பாரிய போஷாக்கின்மைக்கு முகங்கொடுத்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று(24) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அந்த சங்கத்தின் ஊடகக் குழு உறுப்பினர் கலாநிதி பிரசாத் கொலம்பகே இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டுக்கான அத்தியாவசிய மருந்துகளை இந்தியச் சந்தையில் இருந்து கொள்வனவு செய்யுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் ஆறு வாரங்களுக்குள் அவற்றைக் கொள்வனவு செய்யுமாறு வைத்தியர்கள் அமைச்சருக…

  14. கர்ப்பிணித் தாய்மார்களுக்கு... அவர்களது வீட்டிலேயே, பிரசவம் செய்ய தயாராக இருக்குமாறு... அறிவிப்பு. கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அவர்களது வீட்டிலேயே பிரசவம் செய்ய தயாராக இருக்குமாறு அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் சங்கம் தனது உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளது. தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக கர்ப்பிணித் தாய்மார்களை வைத்தியசாலையில் அனுமதிக்க முடியாத நிலையில் வீட்டிலேயே பிரசவம் மேற்கொள்ளலாம் என அதன் தலைவி தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் சூழ்நிலையில் போக்குவரத்து சிரமங்கள் உள்ளதால் எந்த நேரத்திலும் பிரசவத்தை எதிர்கொள்ளும் தாய்க்கு வசதிகளை செய்து கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரசவத்தில் …

  15. 4 இலட்சம் கடவுச்சீட்டுகள்.... வழங்கப்பட்டுள்ள போதிலும், 70 ஆயிரம் பேர் மாத்திரமே நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். ஜனவரி மாதம் முதல் 400,000 பேருக்கு கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளபோதிலும் அவர்களில் 70,000 பேர் மாத்திரமே வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இது பெறப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையில் 20% க்கும் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் நாளாந்தம் வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையும் தற்போது 2400ஆக அதிகரித்துள்ளது. ஒரு நாள் சேவையின் கீழ் ஆயிரம் கடவுச்சீட்டுகளும் சாதாரண சேவையின் கீழ் 800 கடவுச்சீட்டுகளும் வழங்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள…

    • 5 replies
    • 507 views
  16. பல கொலைகள், மற்றும் குற்றச்சாட்டுக்கள் குறித்த தகவல்களை... ஐ.நா.விடம் வெளிப்படுத்திய "தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின்" (TMVP) உறுப்பினர் வெளிநாட்டில் தஞ்சம்! தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த ஒருவர் பல கொலைகள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார் என்று ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதல்கள், பல கொலைகள் மற்றும் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முக்கிய தகவல்களை அவர் வெளிப்படுத்தியதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி அந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பிலும் வெளிநாட்டிலும் உள்ள சில முக்கிய இராஜதந்திர தூதரகங்களுக்கு த…

    • 3 replies
    • 439 views
  17. இலங்கையின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக தம்மிக்க பெரேரா பதவிப் பிரமாணம்! June 24, 2022 இலங்கையின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக தம்மிக்க பெரேரா பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் அவர் இன்று மாலை பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. தம்மிக்க பெரேரா நேற்றைய தினம் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2022/177784

  18. இந்து, பௌத்த... கலாசார பேரவையின் பொதுச் செயலாளர், எம்.டி.எஸ்.இராமச்சந்திரனின் அழைப்பையேற்று... நீதி அமைச்சர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்! நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ இன்றையதினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை மதியம் 12 மணியளவில் வந்தடைந்த அமைச்சருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. இந்து பௌத்த கலாசார பேரவையின் பொதுச் செயலாளர் எம்.டி.எஸ்.இராமச்சந்திரனின் அழைப்பையேற்று இந்து பௌத்த கலாசார பேரவையில் இரண்டாம் மொழி கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவத்திற்கு பிரதம அதிதியாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கலந்து கொள்ளவுள்ளார். மேலும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவ…

  19. விவசாய அமைச்சின் அதிரடி தீர்மானம்! எதிர்வரும் ஜூலை மாதம் 06 ஆம் திகதி முதல் விவசாய அமைச்சின் கீழ் உள்ள அனைத்து ஊழியர்களினதும் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிடம் இருந்து கிடைக்கப்பெறவுள்ள யூரியா உரத்தை வினைத்திறனான முறையில் விநியோகிப்பதற்காக இவ்வாறு விடுமுறைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=162694

  20. இதுவரை... சுமார் 4 பில்லியன் டொலர்கள், இந்திய கடன் மூலம் இலங்கை பெற்றுள்ளது – பிரதமர் இந்திய கடன் மூலம் இதுவரை சுமார் 4 பில்லியன் டொலர்கள் பெறப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை விசேட உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், ”நாங்கள் இந்தியாவிடமிருந்து அதிக கடன்களைக் கேட்டுள்ளோம். ஆனால் இந்தியா எங்களுக்கு தொடர்ந்து கடன் கொடுக்க முடியாது. கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான அமைப்பை நாங்கள் வகுக்க வேண்டும். ஆனால், கொடுப்பது பற்றி விவாதிக்க யாரும் எங்களுக்கு பணம் தருவதில்லை” என தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1288160

    • 6 replies
    • 275 views
  21. இலங்கை வரலாற்றில்... மிக நீண்ட, எரிபொருள் வரிசை! வரலாற்றில் மிக நீண்ட எரிபொருள் வரிசையை இலங்கை இன்று (வெள்ளிக்கிழமை) எதிர்கொண்டுள்ளது. SUTUஇன் ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித, நாட்டில் உள்ள 85 சதவீத எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் தீர்ந்துவிட்டதாக ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்தார். ஜூன் 24 ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் இருப்பதால் லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருளை விநியோகிக்கவில்லை என்று அவர் கூறினார். இன்று 50 மெட்ரிக் டன் பெட்ரோல் மட்டுமே வழங்கப்பட்டதென்றும் பாலித கூறினார். https://athavannews.com/2022/1287439

  22. இலங்கையில் டீசல் நிரப்புவதற்காக 5 நாள்களாக வரிசையில் காத்திருந்த லாரி டிரைவர் பலி 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,LAKRUWAN WANNIARACHCHI/GETTY IMAGES படக்குறிப்பு, இலங்கையில் எரிபொருள் நிரப்ப காத்திருக்கும் வண்டிகள். கோப்புப் படம். இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் சிலவற்றில் இன்று (24/06/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். இலங்கையில் டீசல் நிரப்புவதற்காக 5 நாள்களாக வரிசையில் காத்திருந்த லாரி டிரைவர் அங்கேயே இறந்துவிட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி. பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கையில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நி…

  23. தீர்க்கப்படாத தமிழ் தேசிய பிரச்சினையே பொருளாதார பின்னடைவிற்கு முக்கிய காரணம்! June 24, 2022 தீர்க்கப்படாத தமிழ் தேசிய பிரச்சினையே, சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையின் பொருளாதார பின்னடைவிற்கு முக்கிய காரணம் என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்து நாளிதலுக்கு வழங்கிய விசேட செவ்வியில், பொருளாதார முன்னேற்றம் அடைவதற்கு தமிழ் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பது மிகவும் அவசியமானது எனவும் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். ஊழல், தவறான நிர்வாகம், பிழையான முன்னுரிமைகளால் தற்போதைய பொருளாதார நெருக்கடி உருவாகியுள்ள போதிலும் தீர்க்கப்படாத தமிழ் மக்களின் அபிலாசைகள் நாட்டின் பொருளாதா…

  24. சட்டவிரோதமாக படகில் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 35 பேர் கைது (எம்.மனோசித்ரா) சட்ட விரோதமாக கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட மேலும் 35 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று வியாழக்கிழமை பாணந்துறை கடற்பிரதேசத்திற்கு அப்பால் கடற்படையினரால் விசேட கண்காணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்துக் கொண்டிருந்த மீன்பிடிப்படகொன்று கடற்படையினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. இதன் போதே குறித்த படகிலிருந்த ஆட்கடத்தல்காரர்கள் ஐவர் , 25 ஆண்கள், 4 பெண்கள் மற்றும் 6 சிறுவர்கள் உள்ளடங்களாக 35 பேர் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன் போது மேற்கொள்ளப்பட்ட …

  25. ஹிருணிகா: "என் மார்பகங்கள் குறித்து பெருமை அடைகிறேன்" - இலங்கை முன்னாள் எம்.பி ஏன் இப்படி பேசினார்? ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 23 ஜூன் 2022, 07:34 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,FACEBOOK/HIRUNIKA PREMACHANDRA படக்குறிப்பு, ஹிருணிகா பிரேமசந்திர தனது மார்பகங்கள் குறித்து தான் பெருமை அடைவதாக முன்னாள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது கொழும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.