ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142865 topics in this forum
-
ராஜபக்சக்களைக் காப்பாற்ற... ரணில், பிரதமராகவில்லை – பாலித ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை ஏற்றது ராஜபக்சக்களைக் காப்பாற்றுவதற்காக அல்ல என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார். சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், ராஜபக்சக்களிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றுவதே நோக்கம் என கூறினார். இக்கட்டான காலங்களில் எவ்வாறு செயற்படுகின்றார்கள் என்பதை கருத்திற்கொண்டு நாட்டுக்கான சிறந்த தலைவரை அடையாளம் கண்டுகொள்ளம என தெரிவித்தார். மேலும் தற்போது நாட்டின் தலைவர்கள் செல்லாத காசாகிவிட்டார்கள் என்றும் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார். https://athavannews.com/2022/1283814
-
- 0 replies
- 138 views
-
-
நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை கடவுச்சீட்டை கையளிக்காத முன்னாள் பிரதமர் மஹிந்த ( எம்.எப்.எம்.பஸீர்) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வந்த எந்த கட்சியையும் சாராத அமைதி போராட்டக்காரர்கள் மீது ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மூர்க்கத்தனமாக நடத்திய தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டு அவரது கடவுச் சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதும், இதுவரை இதுவரை அதனை அவர் செய்யவில்லை என இன்று ( 25) கோட்டை நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது. அத்துடன் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனும் …
-
- 2 replies
- 242 views
-
-
31க்கு பின்னர்... கட்டுநாயக்க உட்பட, அனைத்து விமான நிலையங்களும்... மூடப்படும் அபாயம்! இம்மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் கட்டுநாயக்க உட்பட அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம் உள்ளதாக தெரியவருகின்றது. எரிபொருள் பறக்குறையே இதற்கு காரணம் என விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்ற போதும் இதனை அதிகாரிகள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. கட்டுநாயக்க விமான நிலையத்தில் இம்மாதம் 31ஆம் திகதி வரை மட்டுமே விமானங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பதாக விமான நிலைய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் தரையிறக்கப்பட்ட பல விமானங்கள்... எரிபொருள் நிரப்புவதற்காக, சென்னைக்கு திரும்பியுள்ளதாகவும் விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. https://athavann…
-
- 18 replies
- 1k views
- 1 follower
-
-
நிதி அமைச்சராக ரணில் பதவிப்பிரமாணம்? பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதுவரையில், 20 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதுடன், புதிய செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்களும் நேற்று பிற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து கையளிக்கப்பட்டன. இந்த நிலையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் ரணில் இதுவரை நிதி அமைச்சராக பதவி வகித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1283658
-
- 2 replies
- 212 views
-
-
"70 மில்லியன் ரூபாய்க்கு"... என்ன நடந்தது? நாமலுக்கு, எதிரான வழக்கு... ஒத்திவைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ இன்று (25) நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். சுமார் 70 மில்லியன் ரூபாய் பணத்தை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பிலே அவர் நீதிமன்றில் ஆஜரானார். இந்த முறைப்பாடு இன்று (25) கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கை எதிர்வரும் புரட்டாசி மாதம் 21 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித…
-
- 3 replies
- 493 views
-
-
இலங்கைக்கு... புதிய நிதி உதவிகளை, வழங்கத் திட்டமில்லை – உலக வங்கி! போதிய பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை இலங்கைக்கு புதிய நிதி உதவிகளை வழங்கத் திட்டமிடவில்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கி இலங்கை தொடர்பாக அண்மையில் வெளியிட்ட அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும், இலங்கை மக்கள் தொடர்பில் கரிசனை கொண்டுள்ளதாகவும், இலங்கைக்கு உதவுவதற்காக சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய அபிவிருத்தி பங்காளிகளுடன் இணைந்து செயற்படுவதாகவும் உலக வங்கி அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/1283664
-
- 1 reply
- 234 views
- 1 follower
-
-
பயங்கரவாத தாக்குதல்: முக்கிய சூத்திரதாரிகளின்... தந்தை மற்றும் சகோதரருக்கு பிணை மொஹமட் இல்ஹாம் மற்றும் மொஹமட் இன்ஷாப் ஆகியோரின் தந்தை மற்றும் சகோதரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கோட்டை நீதவான் நவரத்ன மாரசிங்கவினால் இந்த உத்தரவு இன்று புதன்கிழமை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இருவரும் தலா 200,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும் தலா 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளிலும் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டதுடன், அவர்களது கடவுச்சீட்டுகளை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தோடு மாதத்தின் முதல் மற்றும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு…
-
- 1 reply
- 255 views
-
-
காணாமல் ஆக்கப்பட்ட... உறவுகளை தேடிய, 115 உறவுகள்... இதுவரை உயிரிழப்பு! வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி போராட்டம் மேற்கொண்டு வரும் அவர்களது உறவுகள் அவர்களின் விடுதலையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களையும் நீண்டகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடியலைந்து சொல்லெண்ணா துன்பங்களையும், துயரங்களையும் சுமந்து வயோதிப ஓய்வு காலங்களில் நோய்வாய்பட்டு வைத்தியசாலைகளிலும் ஏனைய உறவுகளின் பாதுகாப்பிலும் இருந்து வருகின்றனர். இவ்வாறு தமது உறவுகளை தேடியலைந்து 115 உறவுகள் நோயினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் 15 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக உறவுகள் தெரிவித்துள்ளனர். வடகிழக்கில் காணாம…
-
- 0 replies
- 129 views
-
-
சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பலர்... இராஜாங்க அமைச்சர்களாக, பதவியேற்கவுள்ளனர் – மஹிந்த அமரவீர! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் எதிர்காலத்தில் இராஜாங்க அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். வனஜீவராசிகள் அமைச்சில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது உங்களுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணையை எப்படி சமாளிப்பீர்கள் என கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “அவ்வாறான ஒழுக்காற்று விசாரணை குறித்து எங்களுக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை. இந்த முடிவு குறித்து அடுத்த வாரம் முடிவு செய்வோம். எங்களில் பலர் இராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்போம். ஒழ…
-
- 0 replies
- 126 views
-
-
பேருந்து சேவையில் இருந்து விலக... இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம்! க.பொ.த சாதாரண தர பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் பேருந்து சேவையில் இருந்து விலகுவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைத் தெரிவித்தார். சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கப்பம் கோருபவர்கள் தற்போது பேருந்துகளுக்கு எரிபொருளை கப்பமாக கோரியதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2022/1283755
-
- 0 replies
- 118 views
-
-
பொருளாதாரத்தை, சரிசெய்யவே... ரணில் நியமிக்கப்பட்டார் – ஆளும்கட்சி கடும் குற்றச்சாட்டு அரசியலமைப்பில் திருத்தத்தை கொண்டு வருவதற்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் எனவும் ஆளும்கட்சி பிரதமர் மீது கடுமையாக சாட்டியுள்ளது. மேலும் குறிப்பிட்ட நபர்களை குறிவைத்து நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிப்பதை அல்லது ஜனாதிபதியாக வருவதையோ தடுக்கும் வகையில் இவ்வாறான திருத்தங்கள் கொண்டுவர கூடாது என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட 19 ஆவது திருத்தம் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு வழிகோலியது என ஆளும் கட்சியின் பொதுச்செயலாளர் சாகர க…
-
- 0 replies
- 101 views
-
-
மருந்துப் பற்றாக்குறையை... நிவர்த்தி செய்வதற்கு, உலக சுகாதார ஸ்தாபனம்... 2 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி. இலங்கையில் ஏற்பட்டுள்ள மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் உலக சுகாதார அமைப்பின் இலங்கை பிரதிநிதி அலங்கா சிங்கிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது. மருந்து நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு முழு ஆதரவை வழங்குவதாகவும் தூதுவர் பிரதமரிடம் தெரிவித்தார். https://athavannews.com/2022/1283743
-
- 0 replies
- 104 views
-
-
தேசபந்து தென்னகோனுக்கு எதிராக... கோட்டை நீதிமன்றுக்கு, முன்பாக போராட்டம். சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1283740
-
- 0 replies
- 193 views
-
-
மே 9 வன்முறைச் சம்பவம் – இதுவரை 1808 பேர் கைது. நாடு முழுவதும் கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 1808 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் 100 பேர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட 1808 சந்தேக நபர்களில் 784 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அன்றைய தினம் 853 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1283770
-
- 0 replies
- 291 views
-
-
தவறான மதிப்பீடுகளை சமர்ப்பித்து திறைசேரி, நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தியுள்ளதாக நாடாளுமன்ற பொது நிதி தொடர்பான குழுவிடம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். யதார்த்தமற்ற முறையில் அதிக வருவாய் மதிப்பீடுகள் நாடாளுமன்றுக்கு காட்டப்பட்டுள்ளன. இதனடிப்படையிலேயே குறைக்க முடியாத செலவீனங்கள் மதிப்பிடப்பட்டுள்ளன. இது உண்மைக்குப் புறம்பானது என்று தெரிந்தும், தவறான மதிப்பீடுகளைச் சமர்ப்பித்து நாடாளுமன்றம், தவறாக வழிநடத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கூறப்பட்டபடி, வருமானம் வெளிப்படையாக வரவில்லை. பணம் அச்சிடுதல் அல்லது ஏனைய நிதி பல்வேறு வழிகளில் இந்த வருவாய் மதிப்பீடு காட்டப்பட்டுள்ளமையால், செலவீனங்களுக்கு ஏற்ப கடனை அதிகரிக்கவேண்டிய…
-
- 0 replies
- 175 views
-
-
இரண்டு வருட, நிவாரணத் திட்டம் உள்ளடங்கலாக.... ஆறு வாரங்களுக்குள், இடைக்கால வரவுசெலவு திட்டம் : பிரதமர் உறுதி ஆறு வாரங்களுக்குள் இடைக்கால வரவுசெலவு திட்டத்தை தாக்கல் செய்யவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். அந்தவகையில் இடைக்கால வரவுசெலவு திட்டத்தின் மூலம் நாட்டின் மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு உதவ நிதி கிடைக்கும் என்று கூறினார். உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான நிதியை குறைத்து இரண்டு வருட நிவாரணத் திட்டமாக இந்த இடைக்கால வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார். நெருக்கடியைச் சமாளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்போது பணவீக்கம் அதிகரிக்கும் என்றும், இதனால் போராட்டங்கள் இன்னும் அதிகரிக்கலாம் என்றும் அவர் குறி…
-
- 2 replies
- 258 views
-
-
புலமைப் பரிசில்: பிரபல பாடசாலைகளுக்கு அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள்! 2021 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை 6 ஆம் தரத்தில் பிரபல பாடசாலைகளுக்கு அனுமதிப்பதற்கான வெட்டுபுள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. கல்வி அமைச்சு இதனை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழ் மொழி மூல படசாலைகளுக்கான வெட்டுப்புள்ளி விபரங்கள் வருமாறு, http://www.samakalam.com/புலமைப்-பரிசில்-பிரபல-பா/
-
- 0 replies
- 272 views
-
-
ராஜபக்ஷ குடும்பத்தின் பாதுகாவலர்களுடன் ஒருபோதும் இணையேன் - சஜித் உறுதி (நா.தனுஜா) தற்போதைய சூழ்நிலையில் சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடுவதன் மூலம் ராஜபக்ஷ குடும்பத்தைப் பாதுகாப்பதா? இல்லாவிட்டால் நாட்டுமக்களின் நலனை முன்னிறுத்திய கொள்கையை அடிப்படையாகக்கொண்ட அரசியலில் ஈடுபடுவதா? என்ற கேள்வி எழும்போது, ராஜபக்ஷ குடும்பத்தின் பாதுகாப்பு அதிகாரிகளாகச் செயற்படுவர்களுடன் நான் ஒருபோதும் இணையமாட்டேன் என்ற தீர்மானத்தையே மேற்கொள்வேன் என்று எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: ஒட்டுமொத்த நாடும் மாற்றத்தை எதிர்பார்க்கின்ற தருணத்தில், அதற்கு மாறான விடயங்களே நடைபெறுகின்றன. கடந்த காலங்களில் ஊழல்க…
-
- 0 replies
- 215 views
-
-
பிரதமர் ரணில் - சமந்தா பவர் ஆகியோருக்கு இடையில் தொலைபேசி உரையாடல் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவர் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்குமிடையிலான தொலைப்பேசி ஊடாக உரையாடலொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. இலங்கை எதிர்க்கொண்டுள்ள இக்கட்டான சூழ்நிலையை வெற்றிக்கொள்ள தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதாக இதன்போது சமந்தா பவர் பிரதமருக்கு உறுதியளித்துள்ளார். அதுமாத்திரமன்றி சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்கா பிரதிநிதிகள், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஜி7 அமைப்பு உள்ளிட்ட உதவி வழங்குநர்களுடன் இணக்கமாகச் செயற்படுமாறும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இலங்கை மக்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பவேண்டுமா…
-
- 0 replies
- 182 views
-
-
புலம் பெயர் தமிழர்களிடம்... பிரதமர் ரணில் கோரிய உதவியை, ஏற்றுக் கொள்ள முடியாது – சந்திரகாந்தன். இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சனைகளை மறந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புலம்பெயர் தமிழர்களிடம் உதவியை எதிர்பார்த்து நேசக்கரம் நீட்டியுள்ளதை ஒரு போதும் புலம் பெயர் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார். தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடக அறிக்கைஒன்றை வெளியிட்டுள்ளர். குறித்த அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாடு தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியை எ…
-
- 0 replies
- 264 views
-
-
மட்டக்களப்பிற்கு... 50 ஆயிரம், இந்திய நிவாரண பொதிகள் ஒதுக்கீடு! இந்தியாவின் தமிழ்நாட்டு அரசினால் வழங்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகளில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 50 ஆயிரம் பொதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார். இந்திய நிவாரணப் பொதிகள் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் நேற்று (செவ்வாய்க்கிழமை) தொடர்பு கொண்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்தியாவின் தமிழ்நாட்டு அரசினால் இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரண பொருட்கள் இலங்கையில் வறுமையில் வாடும் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர்களை இணையவழியில்…
-
- 0 replies
- 125 views
-
-
அரசாங்கத்தில் இல்லாத கட்சிகள்... ஒன்றிணைந்து, கூட்டணி அமைக்க தீர்மானம் – விமல் அரசாங்கத்தில் இல்லாத கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைக்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். எதிர்கால அரசியல் இலக்குகளை அடைவதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறுயுள்ளார். அரசாங்க சுயேட்சை கட்சி தலைவர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “வரவிருக்கும் அரசியல் சவால்களை சமாளிக்க, எங்கள் கட்சிகள் எதிர்காலத்தில் ஒரு சட்டபூர்வமான கூட்டணியை உருவாக்க முடிவு செய்துள்ளன. மேலும் நாட்டில் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் அதன…
-
- 0 replies
- 184 views
-
-
மட்டக்களப்பில்... சாதாரண பரீட்சைக்கு தோற்ற விடாமல், தடுக்கப்பட்ட மாணவர்கள்! மட்டக்களப்பில் உள்ள சில பாடசாலைகளில் சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அனுமதி அட்டை வழங்கப்படாமல் தடுக்கப்பட்டுள்ளதாகவும் இது இலங்கையின் அரசியலமைப்பின் அடிப்படை உரிமையினை மீறும் செயற்பாடு என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொன்.உதயரூபன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உள்ள மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது கருத்து தெரிவித்த அவர், நாட்டில் பல சிரமங்களுக்கு மத்தியில் கா.பொ.சாதாரண தர பரீட்சை நடைபெற்றுவருகின்றது.பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மாணவர்கள் பரீட்சையினை சவ…
-
- 0 replies
- 294 views
-
-
ஒரு மில்லியனுக்கும்.... அதிகமான, சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பங்கள்... தேங்கியுள்ளதாக தகவல்? மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடுவதற்கான அட்டைகள் இல்லாமை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. குறிப்பாக சில மாதங்களுக்கு முன்னர், அவுஸ்ரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த ‘ஸ்மார்ட்’ அட்டைகளுக்கு 6 இலட்சம் யூரோக்கள் செலுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கியிடம் பணம் இல்லாமையினாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. எனினும் தற்பொழுது தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுவதாக மோட்டார…
-
- 0 replies
- 106 views
-
-
நாடளாவிய ரீதியில்... 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள், மூடப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பல்வேறு போராட்டங்கள் மற்றும் அமைதியின்மை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்துள்ளார். அந்த நிரப்பு நிலையங்களில் முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து எரிபொருள் கையிருப்புகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்தில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீது இதுவரை 5 முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதா…
-
- 0 replies
- 107 views
-