ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142865 topics in this forum
-
மேலும் சில அமைச்சர்கள்... இன்று, பதவிப் பிரமாணம்? புதிய அமைச்சரவையில் மேலும் சில அமைச்சர்கள் இன்று (திங்கட்கிழமை) பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 22 அமைச்சர்கள் அடங்கியதாக இந்த புதிய அமைச்சரவை இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் குறிப்பிடுகின்றன ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின்னர் 4 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அதன்பின்னர் மேலும் 9 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். இதற்கமைய பிரதமர் தலைமையிலான புதிய அமைச்சரவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது 14 ஆக காணப்படுகின்றது. அதன்படி, நிமல் சிறிபால டி சில்வா – துறைமுகம் கப்பற்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர், சுசில் பிரேம ஜயந்த – …
-
- 0 replies
- 206 views
-
-
எந்தவொரு அமைச்சு பதவியையும், ஏற்கப் போவதில்லை – சம்பிக்க! எந்தவொரு அமைச்சு பதவியையும் ஏற்கப்போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். எரிசக்தி அமைச்சர் பதவியை ஏற்பதற்கு சம்பிக்க ரணவக்க தயார் என்றால் அவருக்கு ஆதரவளிக்க தயார் என அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்திருந்தார். அந்த அமைச்சிற்கு தலைமைதாங்குவதற்கு சம்பிக்க ரணவக்கவே பொருத்தமானவர் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். பொருத்தமான நபருக்காக தனது பதவியை விட்டுக்கொடுக்க தயார் எனவும் அவர் தெரிவித்திருந்தார். எனினும், எந்தவொரு அமைச்சு பதவியையும் ஏற்கப்போவதில்லை என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்திற்கு சாதகமான அரசா…
-
- 0 replies
- 138 views
-
-
கட்சி தலைவர் சொல்லித்தான் நாம் செய்தோம் என்றனர்!
-
- 0 replies
- 229 views
-
-
தமிழக மக்களின் மனிதாபிமான நன்கொடை பொருட்கள் இலங்கையை வந்தடைந்தன இலங்கைக்கு இந்தியா நன்கொடையாக வழங்கிய மேலும் 2 பில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான பொருட்கள் தாங்கிய கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளன. மனிதாபிமான உதவியாக இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட பால் மா, அரிசி மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் உட்பட 2 பில்லியன் ரூபா பெறுமதியான முதலாவது கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. குறித்த பொருட்கள் இலங்கையை இன்று வந்தடைந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்திய தமிழக மக்களால் வழங்கப்பட்டதும் இரண்டு பில்லியன் இலங்கை ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பாரிய மனிதாபிமான உதவிப்பொருட் …
-
- 3 replies
- 523 views
-
-
தனியார் எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள்.... பொலிசாரிடம், பாதுகாப்பு கோரிக்கை. இலங்கை பெற்றோலிய தனியார் உரிமையாளர்கள் சங்கம், எரிபொருள் கொண்டு செல்லும் போது பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் இன்று ( ஞாயிற்க்கிழமை ) கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர் . கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட சில குழுக்கள் செய்த பல்வேறு இடையூறுகளை மேற்கோள் காட்டி, அச்சங்கத்தின் இணைச் செயலாளர் டி.வி. சாந்த சில்வா எரிபொருள் போக்குவரத்தின் போது பாதுகாப்பு வழக்குமாறு கோரியுள்ளார் . மேலும் பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால் கடமைக்கு சமூகமளிக்க முடியாது எனவும் அவர் பொலிஸ் மா அதிபரிடம் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1283268
-
- 0 replies
- 178 views
-
-
50,000 டொலர்களுடன்... ஒருவர், கைது. 50,000 அமெரிக்க டொலர்களை வைத்திருந்த நபர் ஒருவர் நேற்று மாலை வெலிக்கடை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்ரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு 15, அளுத்மாவத்தையில் வசிக்கும் 36 வயதுடைய ஒருவரே சோதனையின் போது கைது செய்யப்பட்டதோடு அவரிடம் 50,000 டொலர்கள் கைப்பற்றப்பட்டது. 50,000 டொலர்களை எவ்வாறு பெற்றுக்கொண்டார் என்பதை நிரூபிக்கத் தவறியமைக்காக பணமோசடி சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். https://athavannews.com/2022/1283264
-
- 0 replies
- 288 views
-
-
பஷிலின் விருப்பத்திற்கமையவே அரசாங்கம் முக்கிய தீர்மானங்களை முன்னெடுக்கிறது - திஸ்ஸ விதாரண (இராஜதுரை ஹஷான்) அரசியலமைப்பின் 21 ஆவது திருத்த்தில் இரட்டை குடியுரிமையுடையவர் அரசியலில் செல்வாக்கு செலுத்துவதில் தடைவிதிக்கப்படாவிடின் நாட்டில் மீண்டும் அரசியல் நெருக்கடி தீவிரமடையும். பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷவின் விருப்பத்திற்கமையவே அரசாங்கம் முக்கிய தீர்மானங்களை முன்னெடுக்கிறது என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் பொருளாதார நெருக்கடியும்,அரசியல் நெருக்கடியும் தீவிரமடைவதற்கு முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ பொறுப்புக்கூற வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கர…
-
- 0 replies
- 178 views
-
-
21 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த ராஜபக்ஷர்கள் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கமாட்டார்கள் - சம்பிக்க (இராஜதுரை ஹஷான்) காலிமுகத்திடல் சம்பவத்தை தொடர்ந்தும் ராஜபக்ஷர்கள் குடும்பம் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத நிலைமையே ஏற்படும். அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைத்த ராஜபக்ஷர்கள் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கமாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று முன்தினம் இடம்பெற்ற 43 ஆவது படையணியின் ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகை…
-
- 1 reply
- 365 views
-
-
இலங்கைக்கு உதவ 3 சர்வதேச நிதிவழங்கல் கட்டமைப்புக்கள் கூட்டிணைந்த பொதுச்செயற்திட்டத்தின் கீழ் ஒன்றிணைவு (நா.தனுஜா) பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்குப் பொதுவானதும் கூட்டிணைந்ததுமான செயற்திட்டமொன்றின்கீழ் இயங்குவதற்கு உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி ஆகிய மூன்று முக்கிய கட்டமைப்புக்களும் தீர்மானித்திருக்கின்றன. பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு அவசியமான உதவிகளை வழங்குவது குறித்து சர்வதேச நிதிவழங்கல் கட்டமைப்புக்களான உலகவ ங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி ஆகிய மூன்றும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்…
-
- 0 replies
- 261 views
-
-
2024 ஆம் ஆண்டு வரை... தேர்தலை நடத்தாமல் இருக்க, அரசாங்கம் தீர்மானம் ! பொருளாதாரத்தை ஸ்திரபடுத்தும் வகையில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டுவரை எவ்வித தேர்தலையும் நடத்தாமல் இருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எனவே அடுத்த வருடம் முழுவதும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திட்டங்களை செயற்படுத்த முன்னுரிமை வழங்குவது அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கு விஜயம் மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை நெருக்கடிக்கான தீர்வை முன்னிறுத்திய பன்னாட்டு ஒத்துழைப்பு மையத்தை நிறுவுதல், கொழும்பில் சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை நடத்தவும் முடிவு செய…
-
- 3 replies
- 380 views
-
-
எரிபொருள் நிரப்பு நிலையங்களில்... நீண்ட வரிசையில், யாழ் மக்கள் ! யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெறுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தமையை அவதானிக்க முடிந்தது. இன்று அதிகாலை முதல் கொக்குவில், திருநெல்வேலி, கல்வியங்காடு, அச்சுவேலி உட்பட யாழ்ப்பாணத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். பரீட்சை கடமையில் ஈடுபடுவோர் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருட்களை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கினாலும் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டே காணப்ப…
-
- 0 replies
- 164 views
-
-
ஆரியகுளத்தை வைத்து... அரசியல் செய்வதை, நிறுத்துங்கள்!! மக்களின் பொழுதுபோக்கு மையமாக அமைக்கப்பட்ட ஆரியகுளத்தை வைத்து அரசியல் செய்வதை நிறுத்துங்கள் என யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் கேட்டுக்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். ஆரியகுளத்தை மாநகர சபையிடமிருந்து பறிக்க எடுக்கும் முயற்சி என்பது யாழ்ப்பாணத்தில் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு விடயம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறானதொரு நிலைமை ஏற்படுமாக இருந்தால் அதற்கு எதிரான மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராக வேண்டும் என கேட்டுக்கொண்டார். அத்தோடு ப…
-
- 0 replies
- 401 views
-
-
மேலும் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள்... அரசாங்கத்திற்கு தாவல்? சுதந்திரக் கட்சியின் மேலும் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகியவன்ன, ஜகத் புஷ்பகுமார மற்றும் சாமர சம்பத் தசநாயக்க ஆகியோர் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும் தான் புதிய அரசாங்கத்தில் இணைந்துகொள்ளப்போவதில்லை என முன்னாள் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார். தமது கட்சியைச் சேர்ந்த ஐவர் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தனக்குத் தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எஞ்சிய 4 பேரில் மூவருக்கு இராஜாங்க அமைச்சர் பதவிகள் கிடைக்க வாய்ப்ப…
-
- 0 replies
- 170 views
-
-
இலங்கையின், "கடன் மீள் செலுத்துகை" ஆற்றல்... ‘டி’ நிலைக்குத் தரமிறக்கம்! சர்வதேச பிணையங்களுக்கான கொடுப்பனவைச் செய்யத்தவறியமையால் ஃபிட்ச் ரேட்டிங் சர்வதேச தரப்படுத்தல் நிறுவனம் இலங்கையைக் கடன்களை மீளச்செலுத்தமுடியாத ‘டி’ நிலைக்குத் தரமிறக்கியுள்ளது. வெளிநாட்டுக்கடன் மீள்செலுத்துகையை இடைநிறுத்துவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 12 ஆம் திகதி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் இலங்கையை ‘சி’ நிலைக்குத் தரமிறக்கியிருந்துது. இந்நிலையில் தற்போது நாட்டை ‘சி’ நிலையிலிருந்து ‘டி’ நிலைக்குத் தரமிறக்கியுள்ள ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் வெளிநாட்டு கொடுப்பனவு மீளச் செலுத்தப்படாமையே அதற்குக் காரணம் என்றும் விளக்கமளித்துளள…
-
- 0 replies
- 125 views
-
-
பொருளாதார நெருக்கடி குறித்து, சர்வதேச நாடுகளுடன் பேச்சு! நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைவரம் குறித்து சர்வதேச நாடுகளுடன் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதன்படி சர்வதேச நாடுகள் சாதகமான முறையில் பதிலளித்திருக்கின்றன என்றும் குறிப்பாக இந்தியாவே துரிதமாக உதவிகளை வழங்கியது என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற நிதியுதவியே நாடு தொடர்ந்து இயங்குவதற்கு உறுதிசெய்தது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு, வெளிநாட்டு நாணயப் பற்றாக்குறை, ஆர்ப்…
-
- 0 replies
- 106 views
-
-
HND மாணவர்களைக் கலைக்க... பொலிஸார், கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம். கொழும்பில் உள்ள உலக வர்த்தக மையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட HND மாணவர்களைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இன்று கொழும்பு, கோட்டையில் HND மாணவர்களின் எதிர்ப்பு பேரணிக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை விதித்த நிலையில் பொலிஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். https://athavannews.com/2022/1283215
-
- 1 reply
- 358 views
-
-
அட்டைகள் பற்றாக்குறை: சாரதி அனுமதிப் பத்திரங்களை பெறுவதில், மக்கள் சிரமம் சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடுவதற்கு தேவையான அட்டைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள காரணத்தினால் அலுவலகத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. புதிய சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான விண்ணப்பங்களும், காலாவதியான உரிமங்களை புதுப்பிப்பதற்கான விண்ணப்பங்களும் குவிந்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடப் பயன்படுத்தப்படும் அட்டைகள் ஒஸ்திரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் மத்திய வங்கியில் அந்நியச் செலாவணி இல்லாததால் சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் நடவடிக்கைகள் பல மாதங்க…
-
- 0 replies
- 149 views
-
-
HND மாணவர்கள், எதிர்ப்பு பேரணிக்கு... கொழும்பு கோட்டை நீதிமன்றம் தடை! இன்று கொழும்பு, கோட்டையில் HND மாணவர்களின் எதிர்ப்பு பேரணிக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கோட்டைப் பொலிஸ் பிரிவில் உள்ள எந்தவொரு அரச அல்லது உத்தியோகபூர்வ நிறுவனங்கள் அல்லது கட்டிடங்களுக்குள் நுழைய முடியாது. அத்தோடு வலுக்கட்டாயமாக நுழைவதையோ அல்லது சேதப்படுத்துவதையோ தடுக்க பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1283208
-
- 0 replies
- 169 views
-
-
9 ஆம் திகதி, இடம்பெற்ற அமைதியின்மை: 1348 சந்தேகநபர்கள் கைது. இலங்கையில் கடந்த மே 9 ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பாக இதுவரை 1300 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி இதுவரை 1348 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 638 சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அவர்களில் 654 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இந்நிலையில் சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்கு உதவி செய்தமைக்காக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். அமைதி போராட்டத்தின் மீதான தாக்குதல்களை அடுத்து 70 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் …
-
- 0 replies
- 136 views
-
-
எரிவாயு, எரிபொருள் மற்றும் மண்ணெண்ணெய்... ஆகியவற்றிற்கு, மக்கள் நீண்ட வரிசை – முரண்பாடும் ஏற்பட்டது. நாட்டில் சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கான வரிசை நாளுக்கு நாள் நீளும் நிலையில், இன்றைய தினமும் (21) மக்களும், வாகன சாரதிகளும் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிட்டது. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் அட்டன் மற்றும் கொட்டகலை பகுதிகளில் நீண்டநேரம் வரிசைகளில் காத்திருந்தவர்களில் பலர் ஏமாற்றத்தோடு வெறுங்கையுடன் வீடு திரும்பினர். அத்தோடு விரக்தியடைந்த மேலும் சிலர், புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீதும் சரமாரியாக விமர்சனங்களை முன்வைத்தனர். அட்டன் மற்றும் கொட்டகலை பகுதிகளில் எரிவாயு, எரிபொருள் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றை …
-
- 0 replies
- 222 views
-
-
உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்: 15 லட்ச ரூபாய்க்காக தனியார் உதவியை எதிர்பார்க்கும் இலங்கை அரசு 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MAHINDA RAJAPAKSA FB படக்குறிப்பு, மஹிந்த ராஜபக்ஷ (மே 21: இன்றைய இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.) அண்மையில் நாட்டில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பில் போலிசாரிடம் எந்த நேரத்திலும் வாக்குமூலம் வழங்கத் தயார் என இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக லங்காஸ்ரீ இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது. நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு முழுவதும் அரசாங்கத்திற்…
-
- 13 replies
- 569 views
- 1 follower
-
-
பசில் ராஜபக்சவின் இரட்டைக்குடியுரிமை நீக்கப்படும் May 21, 2022 இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 21-வது திருத்தச்சட்டத்தின் மூலம் இரட்டைக்குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை நிரந்தரமாக நீக்குவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன் இரட்டைக்குடியுரிமை பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆசனங்களும் ரத்து செய்யப்படும் எனத் தொிவித்துள்ள அவா் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் இரட்டைக்குடியுரிமையும் நீக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளாா். https://globaltamilnews.net/2022/176982
-
- 8 replies
- 563 views
-
-
அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தம் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதே தனது பரிந்துரை - பிரதமர் (நா.தனுஜா) காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள், அரசியல் கட்சிகள் என்பன ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்துகின்ற போதிலும், ஜனாதிபதியின் பதவி விலகல் குறித்து சட்டத்தரணிகள் சங்கம் எதனையும் கூறவில்லை. எனவே அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கவேண்டும் என்று தான் பரிந்துரைத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிரபல சர்வதேச ஊடகமொன்றுக்கு நிகழ்நிலையில் வழங்கிய நேர்காணலில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலைக்கு யார் கார…
-
- 1 reply
- 249 views
- 1 follower
-
-
ஜனாதிபதி பிரகடனம் செய்த... அவசரகாலச் சட்டம், செயலிழந்து போனது ! இலங்கையில்... கடந்த மே மாதம் 6ஆம் திகதி அமுல் படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டம் நாடளுமன்ற அனுமதி பெறப் படாதமை காரணமாக, காலாவதியாகியுள்ளது. பாதுகாப்புப் படையினருக்கு முழு அதிகாரம் அளித்து, மே மாத தொடக்கத்தில் இரண்டாவது முறையாக அவசரகால நிலையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரகடனம் செய்தார். இந் நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை முதல் அவசரகால சட்டம் செயலில் இல்லை என ஜனாதிபதி அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. அவசரகாலச் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட வேண்டும், ஆனால் அதை முன்வைக்க வேண்டாம் என்று அரசாங்கம் முடிவு செய்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022…
-
- 0 replies
- 162 views
-
-
“முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு, நீதியை வழங்கி... தர்மத்தின் வழியில், ராஜபக்ஷ குடும்பம் அரசியலை... நடத்தியிருக்கலாம்” - சிறிதரன்.- முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலைகளுக்கு ராஜபக்ஷ அரசாங்கம் நீதியை வழங்கியிருந்தால் அவர்களது அரசியல் பிழைக்காமல் இருந்திருக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். மகாவம்ச சிந்தனையில் ஊறித் திளைத்து இருப்பதனாலேயே ராஜபக்ஷ குடும்பமும் சிங்கள மக்களும் இந்த நிலையில் இருந்து மீள முடியாமல் இருப்பதாக அவர் கூறியுள்ளார். இதன் காரணமாகவே …
-
- 0 replies
- 144 views
-