ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
நாட்டை... பொறுப்பேற்கத் தயார் – சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவும்: சஜித். புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு உடனடியாக சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய புதிய கொள்கைகளின் கீழ் நாட்டைப் பொறுப்பேற்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை சந்திக்க வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றபோதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இந்த நாட்டை அழிக்கும் அரசாங்கத்தை ஜனநாயக ரீதியில் அகற்றுவதற்கான தேசிய பிரசாரத்தை …
-
- 4 replies
- 282 views
-
-
ஜனாதிபதியை சந்தித்த அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் குழு அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள மற்றும் அமெரிக்க திறைச்சேறி திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு குறித்த குழுவினர் நேற்று காலை இலங்கையை வந்தடைந்திருந்தனர். இன்று காலை அவர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://tamil.adaderana.lk/news.php?nid=162793 அமெரிக்க திறைசேரி, இராஜாங்க திணைக்களத்தின் உயர்மட்ட குழு ஜனாதிபதியை சந்திப்பு! …
-
- 1 reply
- 417 views
- 1 follower
-
-
கோத்தா பதவிக்கு வந்தபின்னர், தூக்குத்தண்டனைக்கு காத்திருந்த பலர் ஜனாதிபதி மன்னிப்பினை பெற்று தூக்கில் இருந்து தப்பியது மட்டுமல்ல, சிறைக்கு வெளியேயும் வந்தனர். 7 வயது சிறுமி உள்பட 8 பேரை கழுத்தினை ஆடு அறுப்பது போல சீவி கொலை செய்த, சார்ஜெண்ட் ரத்னாயக்கா வெளியே வந்து, தனது 9 வயது மகளை மடியில் வைத்து கொஞ்சிக் கொண்டிருந்தார். அதுபோல வெளியே வந்த இன்னும் ஒருவரான துமிந்த சில்வா, அமைதியாக போக விடாமல், தனது மமதையினை காட்டும் கோத்தாவின் முட்டாள் தனத்தினால், வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டார். நீதித்துறைக்கு, நடுவிரல், தூக்கி காட்டும் ஒரு அபத்தமாகவே தெரிந்தது அந்த நியமனம். மேலும், அரசசேவையில் உள்ள பலருக்கும் அது ஒரு கரப்பான் பூச்சி, படுக்கை அறைக்குள் நு…
-
- 2 replies
- 400 views
-
-
காங்கேசன்துறைக்கும் தமிழ்நாட்டின் பாண்டிச்சேரி, காரைக்காலுக்கும் இடையிலான படகு சேவைக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி - அமைச்சர் டக்ளஸ் தமிழ்நாட்டின் பாண்டிச்சேரி, காரைக்கால் போன்ற துறைமுகங்களுக்கும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் இடையிலான சரக்கு படகு சேவை நடத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கூடிய விரைவில் சரக்கு படகு சேவை ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/129901/Douglas_Devananda.jpg குறித்த படகு சேவை மூலம் தேவையான மண்ணெண்ணை, டீசல் போன்ற எரிபொருட்களையும், உரம், பால்மா, மருந்து பொருட்கள் உட்பட்ட அத்தியாவசியப் பொருட்களை நியாயமான விலையில் தேவையானளவு …
-
- 14 replies
- 920 views
- 1 follower
-
-
எரிபொருள் நிரப்பு நிலையங்களை... வேறு நிறுவனங்களுக்கு வழங்க, அரசாங்கம் தீர்மானம் ! இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை வேறு நிறுவனங்களுக்கு வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் நாளை (27) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், 1,690 நிரப்பு நிலையங்கள் கூட்டுத்தாபனத்திடம் உள்ளதாகவும் அவற்றை வேறு நிறுவனங்களுக்கு மாற்ற முன்மொழிந்துள்ளதாகவும் கூறினார். அத்தோடு அவ்வாறு எரிபொருள் நிரப்பு நிலையங்களை பெற்றுக்கொள்பவர்களுக்கு நிபந்தனைகள் முன்வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். கட…
-
- 0 replies
- 208 views
-
-
பிரதமருக்கு ஆதரவாக இருந்தால்... சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து, சாதகமான பதில் கிடைக்கும் என... ரணில் தரப்பு நம்பிக்கை ! சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக 6 பில்லியன் டொலர்களை சர்வதேச நாணய நித்தியத்திடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளார். மேலும் ரூபாயை நிலைப்படுத்த மேலும் ஒரு பில்லியன் டொலரையும் அவர் கோரியுள்ள நிலையில் இதற்கு சாதகமான பதில் கிடைக்க வாய்ப்புள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என விரும்புவோர் பிரதமருக்கு ஆதரவாக இருந்தால், சாதகமான முடிவு கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். ச…
-
- 0 replies
- 223 views
-
-
மட்டக்களப்பில்... எரிபொருளுக்காக காத்திருந்தவர்கள் மீது, பேருந்து மோதி விபத்து – 5 பேர் காயம்! மட்டக்களப்பு – ஊறணி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் வரையில் காயமடைந்துள்ளதுடன், 5 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்திற்கு முன்னால், இன்று (திங்கட்கிழமை) காலை வரிசையில் தரித்திருந்த வாகனங்கள் மீது வீதியில் பயணித்த தனியார் பேருந்தொன்று மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. செங்கலடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக கொக்குவில் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த ஐவரும் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட…
-
- 0 replies
- 356 views
-
-
70 சதவீத எரிபொருள் நிரப்பு நிலையங்களை மூட நடவடிக்கை - எரிபொருள் நிரப்பும் நிலைய உரிமையாளர்கள் சங்கம் (எம்.மனோசித்ரா) நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற் கொண்டு 70 சதவீதமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டபிள்யு.எஸ்.பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , 30 நாட்களுக்கு முன்னர் முற்பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும் , இதுவரையிலும் போதுமானளவு எரிபொருள் கிடைக்கப் பெறவில்லை. இதனால் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்கப் பெறாமையின் காரணமாக நாம் பெரும் நெரு…
-
- 2 replies
- 335 views
-
-
’காணாமல் போனோருக்கு நடந்தது என்ன?’ தான் அறிந்த வகையில், வலிந்து காணாமல் போனோரது குடும்பங்களின் முதல் கேள்வி, முதல் கோரிக்கை யாதெனில், கடத்தப்பட்டு, சரணடைந்து, கைதாகி காணாமல் போன தங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதே என்று தான் நினைப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். வடக்குக்கு விஜயம் செய்த நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவும், காணாமல் போனோர் அலுவலக தலைவர் மஹேஷ் கடுலந்தவும் “மக்கள் ஒத்துழைத்தால், காணாமல் போனோர் பிரச்சினைக்கு தீர்வு காணலாம்” என கூறி வந்துள்ளனர் என்று மனோ எம்.பி சுட்டிக்காட்டினார். மேலும் “காணாமல் போனோர் குடும்பங்களுக்கு கொடுப்பனவுகள், வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை, அரச வைத்தியசாலைகளில…
-
- 0 replies
- 247 views
-
-
இந்தியாவில் இருந்து வருகின்றது மண்ணெண்ணெய் எஸ். தில்லைநாதன் இந்தியாவிலிருந்து 3 இலட்சம் கொள்கலன்களில் மண்ணெண்ணெயை இலங்கைக்கு எடுத்து வருவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மேலும், இலங்கையில் உள்ள விவசாயிகள் மற்றும் கடற்தொழிலாளர்கள் தமது பொருளாதார நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு மண்ணெண்ணெய் கிடைக்காமை பாதகமான விடயமாக காணப்படுகிறது. அதனை தீர்ப்பதற்கு இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், 210லீட்டர் கொள்ளக்கூடிய 3 இலட்சம் கொள்கலன்களை இறக்குமதி செய்வதற்கு சாதகமான முடிவை எட்டியுள்ளோம். கப்ப…
-
- 0 replies
- 160 views
-
-
மத்திய வங்கியிலிருந்த... தங்கம், எவ்வாறு காணாமல் போனது? – விசாரணை வேண்டும் என்கின்றார் பேராயர் ! நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமானவர்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். றாகம பகுதியில் ஊடகண்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பல ஆண்டுகளாக இந்த நாட்டின் வளங்களை வீணடிக்கும் செயல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக குறிப்பிட்டார். 7, 8 பில்லியன் என்ற பாரிய கையிருப்பு எவ்வாறு பூச்சியமானது என்றும்... மத்திய வங்கியிலிருந்த தங்கம் எவ்வாறு காணாமல்போனது என்றும் கேள்வியெழுப்பினார். இந்த முட்டாள்தனமாக தீர்மானத்தை எடுத்து இந்தப் பணத்தை வீணடித்தவர்கள் யார் என்பதை மக்கள் அறிந்துகொள்ள…
-
- 9 replies
- 488 views
-
-
“பரந்தன் பூநகரி வீதி அரசியல்வாதிகளின் சட்டைப் பையுக்குள் சென்றுவிட்டது” June 26, 2022 வீதிக்காக ஒதுக்கப்பட்ட நிதி அரசியல்வாதியின் சட்டைப்பைக்குள் காணப்படுகின்றது. இதுதான் இலங்கையின் அபிவிருத்தி என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியினுடைய யாழ்ப்பாண மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அனுரகுமார திசாநாயக்க, “பரந்தனில் இருந்து பூநகரி ஊடாக நான் யாழ்ப்பாணம் வந்தேன். அந்த வீதி போடப்பட்டு எத்தனை ஆண்டுகள் சென்றிருக்கும். எட்டு ஆண்டுகளாகி இருக்குமா? அந்த வீதிக்கு என்ன நடந்தது? சாதாரணமாக அத்தகையவொரு வீதிக்கு 20 வருடங்களாவது உத்தரவாதம் இருக…
-
- 6 replies
- 523 views
- 1 follower
-
-
வரிசையில் காத்திருந்த மக்களுக்கு உணவளித்த எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் Sri Lankan PeoplesSri Lanka Fuel Crisis 1 மணி நேரம் முன் நீண்ட நேரமாகியும் எரிபொருள் வழங்க முடியாத நிலை எரிபொருள் வரும் வரை பல மணி நேரம் வரிசையில் காத்திருந்த மக்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் ஒருவர் உணவளித்துள்ளார். ஊறுகல எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரே இவ்வாறு உணவளித்தவர் ஆவர். ஊறுகல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக வருகை தந்திருந்த மக்களுக்கு நீண்ட நேரமாகியும் எரிபொருள் வழங்க முடியாத நிலை காணப்பட்டதால் குறித்த உணவு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது . உரிமையாளரின் இச்செயல் சமூக ஊடகங்களில் பாராட்டுக்குள்ளாகி வருகின்ற…
-
- 7 replies
- 667 views
- 1 follower
-
-
இன்று, அதிகாலை முதல்... எரிபொருள் விலை அதிகரிப்பு ! இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது. இதன்படி 92 ஒக்டேன் பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 470 ரூபாயாக உயர்ந்துள்ளது. அத்துடன், 95 ஒக்டேன் பெட்ரோல் விலை 100 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் லீற்றர் ஒன்றின் புதிய விலை 550 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஓட்டோ டீசல் 60 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 460 ரூபாவாகும், சூப்பர் டீசல் 75 ரூபாயினால் உயர்ந்து 520 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ள விலை அ…
-
- 11 replies
- 500 views
-
-
தன்மீது... முன் வைக்கப்பட்ட, குற்றச்சாட்டுக்கள்... பொய்யானவை – நாமல் எந்தவொரு அரச நிறுவனத்திற்கும் ஊழியர்களையோ அதிகாரிகளையோ நியமிக்கும் அதிகாரம் தனக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னிலை சோசலிசக் கட்சியின் செயலாளர் புபுது ஜயகொட வெளியிட்ட தகவல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் தன்னால் அரச நிறுவனத்திற்கும் ஊழியர்களை நியமிக்க முடியும் என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என அவர் தெரிவித்துள்ளார். அரச நிறுவனங்களுக்கான அதிகாரிகளை நியமிக்கும் செயற்படு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட குழுவினால் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார். …
-
- 6 replies
- 386 views
-
-
இரண்டு வாரத்திற்கு... பொதுமன்னிப்பு காலம்: 15,000 டொலருக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை ! பொதுமன்னிப்புக் காலத்தின் இறுதியில், மேலதிக வெளிநாட்டு நாணயத்தை உடமையில் வைத்திருக்கின்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக் தமக்கு உள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இலங்கையிலுள்ள அல்லது வதிகின்ற ஆளொருவரினால் உடமையில் வைத்திருக்கும் வெளிநாட்டு நாணயத் தொகையை 15,000 டொலரிலிருந்து 10,000 டொலர் அல்லது வேறு வெளிநாட்டு நாணயங்களில் அதற்குச் சமனான தொகைக்குக் குறைத்தல் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு கடந்த 16 ஆம் திகதி வெளியிடப்பட்டது. குறித்த தொகைக்கு மேலதிகமான வெளிநாட்டு நாணயத்தை உடமையில் வைத்திருக்கின்ற, இலங்கையிலுள்ள அல்லது வதிகின்ற ஆட்களுக்காக கடந்…
-
- 9 replies
- 588 views
-
-
கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் இருந்து தப்பிச்சென்ற இளைஞர் மகாவலியில் சடலமானார்! June 25, 2022 வெலிகந்த கந்தக்காடு இராணுவ பண்ணைக்கு பின்புறமாக உள்ள மகாவலி ஆற்றின் கிளையாற்றில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 22 ஆம் திகதி கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வந்த மூவர் முகாமில் இருந்து தப்பிச்சென்தாக ஏற்கனவே காவற்துறையினர் தெரிவித்தனர். தப்பியோடிய மூவரில் ஒருவரது சடலமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர் ஏறாவூரை சேர்ந்த 19 வயதான இளைஞர் என அடையாளங்காணப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் பொலன்னறுவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்…
-
- 1 reply
- 308 views
-
-
சுகாதாரத் துறையினருக்கான எரிபொருள் விநியோகத்தை குழப்ப முனைவோரையும் சுகாதார சேவைகள் பணிப்பாளரை தாக்கியவர்களையும் வன்மையாக கண்டிக்கின்றோம் - வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் (எம்.நியூட்டன்) சுகாதாரத் துறையினருக்கான எரிபொருள் விநியோகத்தை குழப்ப முனைவோரையும் கிளிநொச்சி மாவட்டத்தின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை தாக்கியவர்களையும் வன்மையாக கண்டிக்கின்றோம் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், நாடு முழுவதும் எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. மக்கள் அனைவருமே எரிபொருளுக்காக நீண்ட வரிசைகளில் காத்திருப்பதை …
-
- 3 replies
- 331 views
-
-
தேசிய மக்கள் சக்தியின்... யாழ். மாவட்ட மாநாடு ஆரம்பம்! தேசிய மக்கள் சக்தியினுடைய யாழ்ப்பாண மாவட்ட மாநாடு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்று வருகிறது இன்று (சனிக்கிழமை) மாலை 2.30 மணியளவில் ஆரம்பித்த இந்த மாநாடு தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்று வருகின்றது. சீரழிந்த தாயகத்தை கட்டியெழுப்புகின்ற தீர்வு எனும் தலைப்பில் நடந்த மாநாட்டில் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய, ஜே.வி.பியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர், இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்…
-
- 1 reply
- 188 views
-
-
சட்ட விரோதமாக... இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட, 5 சொகுசு வாகனங்கள் மீட்பு! சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஐந்து சொகுசு வாகனங்களை சுங்க திணைக்களம் கைப்பற்றியுள்ளது. கைப்பற்றப்பட்ட வாகனங்களில் பிஎம்டபிள்யூ, மெர்சிடெஸ் மற்றும் ஆடி கார்கள் உள்ளடங்குவதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஐக்கிய இராச்சியத்தில் இருந்து உதிரி பாகங்கள் என்ற போர்வையில் இந்த வாகனங்கள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஒருகொடவத்தையில் அமைந்துள்ள களஞ்சியசாலையில் இருந்து இந்த வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாக சுங்க அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். இதற்கிடையில், சுங்க அதிகாரிகள் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பு…
-
- 6 replies
- 599 views
- 1 follower
-
-
"காணாமல் ஆக்கப்பட்டோர்" விவகாரத்திற்கு... விரைவில் தீர்வு கிட்டும் – யாழில் நீதி அமைச்சர் உறுதியளிப்பு. காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தின் செயற்பாடுகளை துரிதப்படுத்தி, அதனூடாக விசாரணைகளை மேற்கொண்டு விரைவில் நீதியை பெற்றுத்தருவதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர், கல்வியங்காட்டில் அமைந்துள்ள காணாமற்போனோர் பற்றிய அலுவலகத்தில் உறவுகளை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். தற்போதுவரை கிடைத்துள்ள முறைப்பாடுகள் குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாகவும் மேலும் இழப்பீட்டு அலுவலகம் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தினாலு…
-
- 0 replies
- 241 views
-
-
ஊழல் நிறைந்த அரசாங்கத்துடன்... இணைந்து செயற்பட, பிரதமர் எடுத்த முடிவு... தவறானது – சுமந்திரன். நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இந்த நிலையில் எந்தவொரு இடைக்கால நடவடிக்கைகளிலும் ஆளும்கட்சி உள்வாங்கப்படக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதேபோன்று ஊழல் நிறைந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணங்கியமை தவறு என்றும் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்னவென்பதை சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் ஆராய்ந்து தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம் என பிரிட்டனைச் சேர்ந்த பிரபல இராஜதந்த…
-
- 0 replies
- 150 views
-
-
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், திறைசேரியை பிரதிநிதித்தும் 4 பிரதிநிதிகள்... நாட்டை வந்தடைந்தனர். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் மற்றும் திறைசேரி திணைக்களத்தின் நான்கு உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு இன்று இலங்கையை வந்தடைந்துள்ளது. நாட்டின் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு எத்தகைய உதவிகளை வழங்கமுடியும் என்பது குறித்து அவர்கள் பல தரப்பினருடனும் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளனர். இந்தக்குழுவினர் எதிர்வரும் புதன்கிழமை (29) வரை இலங்கையில் தங்கியிருந்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொருளியலாளர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளனர். இந்த விஜயமானது இலங்கை மக்களின் பாதுகாப்பு மற்றும் சுபீட்சம் ஆகியன தொடர்பாக அமெரிக்கா கொண்டி…
-
- 0 replies
- 214 views
-
-
வெளிநாட்டு நாணய கையிருப்பு குறித்து இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு Published by T. Saranya on 2022-06-25 வெளிநாட்டு நாணயங்களை கையிருப்பில் வைத்திருப்பது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இலங்கையில் நபரொருவர் தனது உடமையில் வைத்திருக்கக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் அதிகபட்ச வரம்பு 15,000 அமெரிக்க டொலர்களில் இருந்து 10,000 அமெரிக்க டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மேலதிக வெளிநாட்டு நாணயத்தை உடமையில் வைத்திருக்கின்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தமக்கு உரிமையுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இலங்கையிலுள்ள அல்லது வசிக்கின்ற நபரொருவரின் உடமையில் வைத்திருக்கும் வெளிநாட்டு நாணயத் தொகையை 15,000 அ…
-
- 1 reply
- 273 views
-
-
பொருளாதார நெருக்கடிக்குக் காரணமான ஜனாதிபதி பதவி விலக வேண்டிய தருணம் இதுவாகும் - அமெரிக்காவின் பிரபல பொருளியலாளர் (நா.தனுஜா) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கைகளே உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படுவதற்குப் பிரதான காரணம் என்று சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்காவின் பிரபல பொருளியலாளர் ஸ்டீவ் ஹன்க், ஜனாதிபதி பதவி விலகவேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவின் முதலாவது ஆய்வுப்பல்கலைக்கழகமான ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளியலாளரான ஸ்டீவ் ஹன்க் மிகமோசமடைந்துவரும் இலங்கையின் பொருளாதார நிலைவரம் குறித்து கடந்த சில மாதங்களாக தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாகப் பதிவுகளைச் செய்துவருகின்றார். …
-
- 6 replies
- 352 views
-