Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புத்திஜீவிகள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் புத்திஜீவிகள் காய்தல் உவத்தலின்றி பலமான அமைப்பாகச் செயற்பட்டு புலத்திலும், புலத்திற்கு வெளியிலும் சிதறியுள்ள தமிழ்கட்சிகளையும் தமிழ் அமைப்புகளையும் தீர்வை நோக்கிய கொள்கைதளத்தில் ஒன்றிணைக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கோரிக்கை விடுத்துள்ளார். இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்தார். செவ்வியின் முழு விபரம்:- கேள்வி: இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் எவ்வாறு இருக்கின்றது? பதில்: மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிப்பது போல் யுத்தத்தால் பல இழப்பகளைச் சந்தித்து அதற்கான நீதி …

    • 0 replies
    • 276 views
  2. Published by Rajeeban on 2022-06-16 14:56:39 இந்தியாவின் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு இலங்கை பிரதமரை சந்தித்தார் என தெரிவித்துள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் அவர் யாரை பிரதிநிதித்துவம் செய்தார் என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதானி குழுமத்திற்கு புதுப்பித்தக்க வலுசக்தி திட்டம் வழங்கப்பட்டுள்ளமை குறித்து இலங்கையில் உருவாகியுள்ள சர்ச்சைகளின் மத்தியில் கொழும்பிற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பின் உறுப்பினர் ராம் மாதவ் விஜயம் மேற்கொண்டுள்ளமை பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்திய அரசாங்கத்தில் உத்தியோபகபூர்வ பதவிகள் எதனையும் வகிக்காத ராம்மாதவ் இலங்கை பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார். அவர…

  3. இந்தியாவின் அதானி குழுமத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் எதிரான உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் தற்போது ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறுகின்றது. பம்பலப்பிட்டி மெஜஸ்டிக்சிட்டியின் முன்பாக ஆரம்பமான ஆர்ப்பாட்டம் கொள்ளுப்பிட்டியை நோக்கி நகர்ந்தவண்ணமுள்ளது. இந்தியாவின் அதானி குழுமத்துடான மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டத்தை கைவிடக்கோரி சுமார் 75 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் அவர்கள் கொள்ளுப்பிட்டியை நோக்கி நகரத்தொடங்கியுள்ளனர் என பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதானி குழுமத்துடனான உடன்படிக்கைக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் | Virakesari.lk

    • 3 replies
    • 397 views
  4. கொழும்பில் 16 மணிநேர நீர் வெட்டு கொழும்பின் பல பகுதிகளுக்கு 16 மணிநேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை (NWSDB) தெரிவித்துள்ளது. நீர் குழாய்களை திருத்தும் பணிகள் காரணமாக கொழும்பில் சனிக்கிழமை (18) இரவு 11.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (19) பிற்பகல் 3.00 மணி வரை 16 மணிநேர நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு 05 மற்றும் 06 ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது. கொழும்பு 04 இல் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படும். https://thinakkura…

    • 0 replies
    • 194 views
  5. இலங்கை தொடர்பில் ஐ.நா. கவலை இலங்கையில் தொடர்ந்து அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி மக்களின் அன்றாட வாழ்க்கையை கடுமையாக பாதித்து வருகிறது. அதிகரித்து வரும் உணவு தட்டுப்பாடும், கடுமையான விலைவாசி உயர்வும் மக்களின் பட்டினியை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இலங்கையின் பொருளாதார நெருக்கடி மக்களின் வாழ்க்கை சூழலை எவ்வாறு பாதித்து இருக்கிறது? என ஐ.நா. அங்கு ஆய்வு நடத்தியது. குறிப்பாக ஐ.நா.வின் உலக உணவு திட்டமும், இலங்கையின் தேசிய திட்டமிடல் துறையும் இணைந்து நடத்திய இந்த ஆய்வில் அதிர்ச்சிகரமான முடிவுகள் வெளியாகி உள்ளன. அந்தவகையில் இலங்கையில் விலைவாசி உயர்வு மற்றும் மக்களின் வாங்கும் திறன் குறைந்ததால் 80 சதவீதத…

    • 0 replies
    • 247 views
  6. பயிர்ச் செய்கையில்... ஆர்வமுள்ள இளைஞர்களிடம், அரசுக்கு சொந்தமான... நிலங்களை ஒப்படைக்கவும் – ஜனாதிபதி! மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் அனைத்து அரச சேவைகளையும் பரவலாக்குவது காலத்தின் தேவையாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன், அரசுக்கு சொந்தமான, பயிரிடப்படாத நிலங்களைக் கண்டறிந்து, பயிர்ச்செய்கையில் ஆர்வமுள்ள இளைஞர்களிடம் விரைவில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அரச செலவினத்தை முகாமைத்துவம் செய்வது தொடர்பாக கொழும்பு- கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஆட்களைப் பதிவு செய்தல், குடிவரவு, குடியகல்வுஎ…

    • 24 replies
    • 1k views
  7. எரிபொருள் பெறுவதற்காக... வரிசையில் காத்திருந்த, மேலுமொருவர் உயிரிழப்பு! பாணந்துறையில் எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த மேலுமொருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பாணந்துறை வெகட பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காத்திருந்த 55 வயதான முச்சக்கர வண்டி சாரதி என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2022/1287153

  8. நிலாவரை கிணறு சம்பந்தமாக... வலி கிழக்கு, தவிசாளருக்கு.. எதிரான வழக்கு ஒத்திவைப்பு. நிலாவரையில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு தடையாக அமைந்ததன் வாயிலாக தொல்லியல் திணைக்களத்தின் அரச கருமங்களுக்கு தடை ஏற்படுத்தினார் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்கு எதிராகத் தொடாரப்பட்ட வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த வருடம் தொடரப்பட்ட இவ் வழக்கில் வழக்கினை முன்னொண்டு செல்வதாயின் சட்டமா அதிபரின் ஆலோசனையினைப் பெறுமாறு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (புதன்கிழமை) மல்லாகம் நீதவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, அச்சுவேலி பொலிஸார் மேலதிக அறிக்கை…

  9. யாழ்- கொழும்பு, விசேட புகையிரத சேவை... நாளை ஆரம்பம். தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியினை கருத்திற்கொண்டு யாழ்ப்பாணம் கொழும்பு விசேட புகையிரத சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய பிரதம புகையிரத நிலைய அதிபர் தி.பிரதீபன் தெரிவித்தார் இன்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ”எதிர்வரும் 17ம் திகதி வெள்ளிக்கிழமையிலிருந்து கல்கிசையில் இருந்து காங்கேசன்துறைக்கு ஒரு இரவு நகர் சேர் கடுகதி புகையிரதம் ஒன்று சேவையில் ஈடுபட உள்ளது .இது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் கல்கிசையில் இரவு 10 மணிக்கு புறப்பட்டு அங்கிருந்து வெள்ளவத்தை பம்பலப்பிட்டி …

  10. கொடுப்பனவு, செலுத்தப்பட்ட பின்னரே... எரிபொருள் விநியோகம்! முன்பதிவுகளுக்கு அமைய, கொடுப்பனவு செலுத்தப்பட்ட பின்னர் மாத்திரம், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை கொண்டுசெல்லும் புதிய முறைமை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அகில இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள காசோலை வசதி உடனடியாக நிறுத்தப்பட்டு, பணம் செலுத்தப்பட்ட பின்னர் எரிபொருளை விநியோகிக்கும் முறைமையே நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கமைய எரிபொருள் கிடைக்கப்பெற்றதன் பின்னர், காசோலை மூலம் ஒரே தடவையில் இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்திற்கு பணத்தை செலுத…

  11. இலங்கைக்கு... புதிதாக, 120 மில்லியன் டொலர் கடன் வழங்குவதற்கு... அமெரிக்கா அனுமதி! இலங்கைக்கு புதிதாக 120 மில்லியன் டொலர் கடன் வழங்குவதற்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது. அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபனம் U.S. International Development Finance Corporation (DFC) இந்த அனுமதியினை வழங்கியுள்ளது. சிறிய, நடுத்தர தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்துவதற்காக இதில் 100 மில்லியன் டொலர் வழங்கப்படவுள்ளது. மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருள் தயாரிப்பு, பிளாஸ்டிக் கழிவுகளை குறைப்பதற்காக 15 மில்லியன் டொலர் பயன்படுத்தப்படவுள்ளது. இந்த கடன் தொகையில் 5 மில்லியன் டொலர் உணவு உற்பத்தி நிறுவனமொன்றுக்காக பயன்படுத்தப்படவுள்ளது. …

  12. அமெரிக்க, நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தில்... திருத்தம் செய்யுமாறு, சீனாவிடம் இலங்கை கோரிக்கை. 1.5 பில்லியன் அமெரிக்க நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை திருத்துவதற்கு இலங்கை சீனாவுடன் பேச்சுவார்த்ததையில் ஈடுபட்டுள்ளதாக உயர்மட்ட வட்டாரத்தை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பரிமாற்ற ஏற்பாட்டிற்காக சீனாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி, இலங்கையிடம் மூன்று மாதங்களுக்கு போதுமான வெளிநாட்டு கையிருப்பு இருந்தால் தவிர, அதைப் பயன்படுத்த முடியாது. இலங்கைக்கு தேவையான அளவு இருப்புக்கள் குறைவாக இருப்பதால் இந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. …

  13. நுரைச்சோலை... அனல் மின் நிலையத்தின், இரண்டாம் மின்பிறப்பாக்கியின் தொழிற்பாடுகள் நிறுத்தம்! நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் இரண்டாம் மின்பிறப்பாக்கியின் தொழிற்பாடுகள் நாளை மறுதினம்(சனிக்கிழமை) முதல் நிறுத்தப்படவுள்ளன. திருத்தப் பணிகள் காரணமாக அதன் தொழிற்பாடுகள் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு நிறுத்தப்படவுள்ளன. இதன் காரணமாக 300 மெகாவோட் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்பிற்கு கிடைக்காது போகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1287158

  14. இந்திய, கடன் வசதியின் கீழ்... எரிவாயுவை ஏற்றிய, இறுதி கப்பல் இன்று நாட்டிற்கு வருகை. இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொண்ட 700 மில்லியன் கடன் வசதியின் கீழ் கிடைக்கும் எரிவாயுவை ஏற்றிய இறுதி கப்பல் இன்று (வியாழக்கிழமை) நாட்டை வந்தடையவுள்ளது. குறித்த கப்பலில் இருந்து 40,000 மெட்ரிக் தொன் டீசல் நாட்டிற்கு கிடைக்கவுள்ளது. எவ்வாறிருப்பினும் இன்று நாட்டை வந்தடையவுள்ள கப்பலிலுள்ள டீசலை விநியோகம் செய்வதற்கு இன்னும் 03 நாட்கள் செல்லும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். எரிபொருள் இல்லை என தெரிவித்து சில எரிவாயு நிலையங்கள் மூடப்பட்டுள்ள போதிலும் நாட்டின் பல இடங்களிலும் எரிபொருளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் மக்கள் நீண்ட வரிசைக…

  15. சமையல் எரிவாயுவின் விலை... மேலும் அதிகரிக்கும், சாத்தியம்? நாட்டில் சமையல் எரிவாயுவின் விலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாய்லாந்தின் சியாம் நிறுவனத்திடமிருந்து எரிவாயு கொள்வனவை நிறுத்தி, இதற்கு முன்னர் இலங்கைக்கு எரிவாயு விநியோகித்த ஓமான் நிறுவனத்திடமிருந்து எரிவாயுவினை கொள்வனவு செய்வதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாகவே சமையல் எரிவாயுவின் விலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சியாம் நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்வதை விடவும், ஓமான் நிறுவனத்திடமிருந்து எரிவாயு கொள்வனவு செய்யும் போது, ஒரு மெற்றிக் தொன்னிற்கு 34 டொலரை மேலதிகமாக செலுத்த வேண்டியுள்ளதாக …

  16. பதில், வெளிவிவகார அமைச்சராக... தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். பதில் வெளிவிவகார அமைச்சராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக தினேஸ் குணவர்தன பதவி வகித்து வருகின்றார். வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஜெனீவா சென்றுள்ளார். இந்தநிலையிலேயே, பதில் வெளிவிவகார அமைச்சராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். https://athavannews.com/2022/1287121

  17. ஜனாதிபதியின் அதிகார போராட்டமே 21 ஆவது திருத்தம் காலம் தாழ்த்தப்படக் காரணமாகும் - ஆளும் , எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் கூட்டாக வலியுறுத்தல் (எம்.மனோசித்ரா) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அதிகாரப் போராட்டத்தின் காரணமாகவே 21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றும் செயற்பாடுகள் காலம் தாழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எனவே அடுத்த வாரம் இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அங்கீகாரத்தைப் பெற்று 21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சுயாதீனமாக செயற்படும் ஆளும் , எதிர்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பிக ரணவக்க, அனுர பிரியதர்ஷன யாபா, ஜோன் செனவிரத்ன மற்றும் சந்திம வீரக்கொடி ஆகியோர் இணைந்து 15 ஆ…

  18. அனைத்து அரச சேவைகளையும் மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்தில் பரவலாக்க நடவடிக்கை - ஜனாதிபதி வீட்டிலிருந்து கடமைகளை நிறைவேற்றுவதைப் போன்று, மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் அனைத்து அரச சேவைகளையும் பரவலாக்குவது காலத்தின் தேவை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆட்களைப் பதிவு செய்தல், குடிவரவு, குடியகல்வு மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் உள்ளிட்ட பிற அரச நிறுவனங்களையும் மேலும் மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் பரவலாக்குவதன் மூலம் அந்த சேவைகளை மிகவும் திறமையாக வழங்க முடியும். இவ்வாறான முக்கிய நிறுவனங்களை ஒன்றோடொன்று இணைப்பதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். விவசாயம், உணவுப் பாதுகாப்பு, பொது மக்களுக்கான சேவைகளை வினைத்திறனாக்க ப…

  19. இலங்கைக்கு உதவுவதாக பைடன் உறுதி ; நட்புறவை மீளக் கட்டியெழுப்ப ஜப்பான் இணக்கம் - பிரதமர் (எம்.மனோசித்ரா) சர்வதேசம் இலங்கையின் இக்கட்டான நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போது இலங்கைக்கு உதவுவதாக அந்நாட்டிலுள்ள இலங்கை தூதுவரிடம் தெரிவித்துள்ளார். இதேபோன்று இலங்கையுடனான நட்புறவை மீண்டும் கட்டியெழுப்ப இணக்கம் தெரிவித்துள்ள அந்நாட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அடுத்த மாதம் நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்தோடு கடன் மறுசீரமைத்தல் தொடர்பான சர்வதேச ஆலோசகர்கள் நாட்டுக்கு விஜயம் செய்துள்ளதாகவ…

  20. மட்டக்களப்பு பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட 3 பேர் கைது மட்டக்களப்பு பார் வீதியில் அமைந்துள்ள பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு முன்னால் பெற்றோல் வழங்குமாறு கோரி நேற்று (15) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து பொலிஸார் வெளியேற்றியதுடன், அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேரை கைதுசெய்துள்ளனர். குறித்த பெற்றோலிய கூட்டுத் தாபனத்துக்கு முன்னால் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அதிகாலை 03.00 மணி தொடக்கம் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர். இந்நிலையில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் தான் எரிபொருளுக்கு பணம் செலுத்தி நான்கு நாட்கள் தனக்கு எரிபொருளை வழங்காது, நகரிலுள்ள…

  21. பயங்கரவாத தடைச்சட்டம், 21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து மனித உரிமைகள் பேரவை தலைவருக்கு அமைச்சர் பீரிஸ் விளக்கம் (எம்.மனோசித்ரா) பயங்கரவாதத் தடைச் சட்டம், 21 ஆவது திருத்தம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம் என்பன தொடர்பில் மனித உரிமைகள் பேரவையின் தலைவரும் அர்ஜென்டினாவின் நிரந்தரப் பிரதிநிதியுமான ஃபெடரிகோ வில்லேகாசுடனான சந்திப்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் விளக்கமளித்துள்ளார். மனித உரிமைகள் பேரவையின் 50 ஆவது கூட்டத் தொடரின் பக்க அம்சமாக, மனித உரிமைகள் பேரவையின் தலைவர் மற்றும் அணிசேரா இயக்கத்தின் (ஜெனீவா அத்தியாயம்) ஒருங்கிணைப்பாளரை சந்தித்த வெளிநாட்டலுவல…

  22. எரிபொருளை வழங்குமாறு கோரி கொந்தளித்த மக்கள் : கொழும்பில் வீதிகிளை மறித்துப் பெரும் போராட்டம் (நா.தனுஜா) நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியின் விளைவாகத் தோற்றம்பெற்ற எரிபொருள் பிரச்சினை பல வாரங்களாகத் தொடரும் நிலையில், இன்று 15 ஆம் திகதி புதன்கிழமை கொழும்பின் சில பாகங்களில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்திருந்த மக்கள் வீதிகளை மறித்துப் போராட்டங்களை முன்னெடுத்ததன் காரணமாக பாடசாலைக்குச்செல்லும் மாணவர்கள், அலுவலகங்களுக்குச்செல்லும் ஊழியர்கள், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசியதேவைகளுக்காகச் செல்பவர்கள் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினரும் வெகுவாகப் பாதிக்கப்பட்டனர். 'வாகனங்களுக்கு அவசியமான எரிபொருளுக்குப் பற்றாக்குறை காணப்படுவதைப்போன்று தற்போத…

  23. Published by Digital Desk 5 on 2022-06-15 14:42:10 லண்டனில் இருந்து கொழும்புக்கு பயணத்தை மேற்கொண்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் யு.எல் 504 என்ற விமானம் நேற்று (14) பாரிய விபத்திலிருந்து தப்பியமை தொடர்பில் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விமானம், 275 பயணிகளுடன் லண்டனிலிருந்து கட்டுநாயக்க நோக்கி பயணித்துக்கொண்டிருந்தபோது,சுமார் 33,000 அடி உயரத்தில் குறித்த பறந்துகொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேய்ஸூக்கு சொந்தமான விமானம் ஒன்று 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தது. துருக்கி வான்வெளியில் பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் 33,000 அடியில் இருந்து 35,000 அடி உயரத்திற்கு பயணிக்குமாறு துருக்கி - அங்காரா விமானக் கட்டுப்பாடு அறையில் இருந…

  24. நாட்டை கட்டியெழுப்ப ரணிலிடம் எந்த திட்டமும் இல்லை-சரத் பொன்சேகா. கம்பஹாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சரத் பொன்சேகா.” அரசாங்கம் மக்களை நிரந்தரமாக ஏமாற்றி வருகின்றது அத்துடன் பிரதமரின் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியேற்ற ஊழல்வாதிகளை தண்டிக்க விருப்பம் இல்லையா?” என கேள்வியெழுப்பியுள்ளார் நான் பொலிஸ் அமைச்சரானால் முதலில் இந்த அரசாங்கத்தில் உள்ள அனைவரையும் சிறையில் அடைத்திருப்பேன். ரணில் விக்ரமசிங்கவுக்கு முன்பாகவே நான் பிரதமராக பதவியேற்க வேண்டும் என்று கூறப்பட்டது. அப்போது எனக்கு எந்த நிபந்தனையும் இருக்கவில்லை. செய்ய வேண்டிய திட்டம் பற்றி பேசினேன்…

  25. சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 64 சந்தேக நபர்கள் திருகோணமலை கடற்பகுதியில் கைது இலங்கை கடற்படையினர் இன்று காலை கிழக்கு கடற்பரப்பில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது நாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 64 பேரை கைது செய்துள்ளனர். கிழக்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட விரைவு படகு இன்று காலை திருகோணமலைக்கு அருகில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான உள்ளூர் மீன்பிடி இழுவை படகு ஒன்றை இடைமறித்து சோதனையிட்டுள்ளனர். சோதனையின் போது, கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்குச் செல்ல முயன்றதாக சந்தேகிக்கும் 64 பேரை கைது ச…

    • 0 replies
    • 139 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.