Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மீளுருவாகிய... கோட்டா கோ கம – எதிர்ப்புகளை மீறி ஒரு மாதத்தைக் கடந்து தொடரும் போராட்டம்! காலிமுகத்திடலில் ஏற்பட்ட வன்முறையை அடுத்து தரைமட்டமாக்கப்பட்ட கோட்டா கோ கம மீள உருவாக்கப்பட்டு இன்றும் (செவ்வாய்க்கிழமை) போராட்டம் தொடர்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைதியான முறையில் ஆரம்பமான மக்கள் எழுச்சிப் போராட்டம் ஒரு மாதத்தைக் கடந்த நிலையில், பல எதிர்ப்புகளையும் மீறி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் நேற்றுடன் ஒரு மாதத்தை பூர்த்தி செய்திருந்தது. இந்த நிலையில், நேற்றையதினம் அலரிமாளிகையில் மஹிந்த ராஜபக்ஷவை பாதுகாப…

  2. காலிமுகத்திடல் தாக்குதலை கண்டித்து... கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்! காலிமுக திடலில் கோட்டா கோ கம மீது இடம்பெற்ற தாக்குதலை கண்டித்து மட்டக்களப்பு ஊறணி சந்தியில் கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் நேற்று (திங்கட்கிழமை) இரவு ஈடுபட்டனர். கிழக்கு பல்கலைக்கழ மாணவர்கள் ஊறணி சந்தியில் இன்று இரவு 7 மணிக்கு ஓன்றினைந்து காலிமுக திடலில் இடம்பெற்ற தாக்குதலை கண்டித்து பல்வேறு வசனங்கள் கொண்ட சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு அங்கிருந்து ஆர்பாட்ட ஊர்வலமாக ஆரம்பித்து பிள்ளையரடி வரையும் ஊர்வலமாக சென்று அங்கு சுமார் அரை மணிநேரம் எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து ஆர்ப்பாடகாரர்கள் கலைந்து சென்றனர் . இந்த ஆர்ப்பாட்…

  3. நாடாளுமன்றத்தை... உடனடியாக, கூட்டுங்கள் – சபாநாயகர் கோரிக்கை நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். https://athavannews.com/2022/1281025

  4. கோட்டா கமவை, தாக்குவதற்காக... கைதிகளும் அழைத்து வரப்பட்டனர்? கோட்டா கோ கமவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை தாக்குவதற்காக கைதிகளும் அழைத்து வரப்பட்டதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மைனா கோ கம மற்றும் கோட்டா கோ கமவில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய போராட்டக்காரர்களை தாக்குவதற்காக அரசாங்கத்துடன் இணைந்த குழுக்கள் பல்வேறு சிறைகளில் இருந்து சிறைக் கைதிகளையும் அழைத்து வந்துள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களால் தாக்கப்பட்ட பின்னர் பல கைதிகள் சிறைபிடிக்கப்பட்ட காணொளிகள் காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1281011

    • 7 replies
    • 495 views
  5. வன்முறையினை தூண்டிய... மஹிந்த, ஜோன்ஸ்டன்... கைது செய்யப்பட வேண்டும் – மைத்திரி! ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களை அழைத்து, போராட்டக்காரர்களை தாக்குதவதற்கு தூண்டிய மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்டவர்கள் உடன் கைது செய்யப்பட வேண்டும் என ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனும் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார். https://athavannews.com/2022/1280992

  6. மஹிந்த ராஜபக்ஷவை... உடனடியாக, கைது செய்ய வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்து உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கேட்டுக்கொண்டுள்ளது. அமைதியான போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் முதல் குற்றவாளி அவரே என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இதேவேளை ஜனாதிபதியும் அரசாங்கமும் பதவி விலகும் வரை எந்தவொரு கலைத்துரையாடலிலும் கலந்துகொள்ளாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1281007

  7. இலங்கையின்... தற்போதைய நிலைமை குறித்து, அமெரிக்கா கவலை! இலங்கையின் தற்போதைய நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இலங்கையின் நிலைமையை... உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றோம். அமைதியான போராட்டக்காரர்கள் மற்றும் அப்பாவி மக்கள் மீதான வன்முறைளுக்கு எதிராக ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளோம். பொருளாதார மற்றும் அரசியல் சவால்களுக்கு நீண்டகால தீர்வுகளைக் கண்டறிவதிலும் செயல்படுத்துவதிலும் கவனம் செலுத்துமாறு அனைத்து இலங்கையர்களையும் கேட்டுக்கொள்கிறோம்“ எனத் தெரிவிக்கப்பட்டுள…

  8. கொழும்பில்... இடம்பெற்ற மோதல்களில், இருவர் உயிரிழப்பு!, 218 பேர் வைத்தியசாலையில் அனுமதி. கொழும்பில் இடம்பெற்ற மோதல்களின் போது அலரிமாளிகையில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 218 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலை அறிவித்துள்ளது. https://athavannews.com/2022/1280970

  9. தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட... பல்வேறு தொழிற்சங்கங்கள் தீர்மானம்! தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட பல்வேறு தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. வன்முறைகளை ஊக்குவிக்கும் அரசாங்கத்திற்கு அதிருப்தியை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று(செவ்வாய்கிழமை) முதல் மறு அறிவித்தல் வரை அனைத்து கடமைகளிலிருந்தும் விலகுவதற்கு தமது உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக இலங்கை பொது நிர்வாக சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், அரசியல்வாதிகள் பங்கேற்கும் கூட்டங்களில் கலந்துகொள்வதைத் தவிர்ப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சுகாதார ஊழியர்களும் நேற்று நள்ளிரவு முதல் பணிப…

  10. மகிந்தவின் ராஜினாமாவை... கோட்டாபய ஏற்றார் – வர்த்தமானி வெளியானது! பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் உத்தியோகபூர்வ ராஜினாமா கடிதத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, ஏற்றுக்கொண்டுள்ளார். அதனையடுத்து மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியிலிருந்து விலகுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1280962

  11. ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில்.... அத்தியாவசிய சேவைகளை, முன்னெடுக்க முடியும்! ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப்பிரிவு இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது. பணிக்கான அடையாள அட்டையினை பயன்படுத்தி குறித்த சேவைகளை முன்னெடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1280976

  12. ஊரடங்கு உத்தரவு, நீடிக்கப் பட்டது – சற்று முன்னர் வெளியானது அறிவிப்பு தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் புதன்கிழமை (11) அதிகாலை 7 மணிவரை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையைக் கருதி குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, நாளை (10) அதிகாலை 7 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்குமென அரசாங்கம் அறிவித்திருந்த நிலையிலேயே, தற்போது குறித்த ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1280959

    • 1 reply
    • 403 views
  13. மஹிந்தவின்... மெதமுலன இல்லமும், தீக்கிரை. மஹிந்த ராஜபக்ஷவின் பரம்பரை இல்லமான வீரக்கெட்டிய, மெதமுலன இல்லமும் தீக்கிரையாகியுள்ளது. ஆர்ப்பாட்டகாரர்கள் சிலரினால் இவ்வாறு தீ வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, வீரகெட்டியவில் அமைந்துள்ள டி.எ.ராஜபக்ஷ உருவச்சிலைக்கும் மக்கள் தீ வைத்துள்ளனர். https://athavannews.com/2022/1280952

  14. பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரின் வீடுகள், வாகனங்கள் தீக்கிரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரின் வாகனங்கள் மற்றும் வீடுகள் போராட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்டுள்ளன. நாட்டில் இன்று காலை முதல் காலிமுகத்திடல் மற்றும் அலரிமாலிகை உள்ளிட்ட பல பகுதிகளில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன. அந்த வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள், வாகனங்கள் மற்றும் அலுவலகங்கள் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்டும், தீ வைக்கப்பட்டும் வருகின்றது. அந்த வகையில் முன்னாள் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோவின் குருநாகலிலுள்ள கட்சி அலுவலக…

    • 26 replies
    • 2.1k views
  15. நி்ட்டம்புவவில் ஆளும் கட்சி MP அமரகீர்த்தி அத்துக்கொரள மர்மமான முறையில் இறந்துள்ளார்.

  16. முன்னாள் பிரதமர்... மஹிந்த ராஜபக்சவை, கைது செய்யுங்கள் – சுமந்திரன். முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் இன்று கொழும்புக்கு ஆதரவாளர்களை அழைத்து வந்த அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன்னிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். https://athavannews.com/2022/1280936

    • 5 replies
    • 584 views
  17. அமைதி போராட்டத்தில்... மோதல்: 130 பேர் இதுவரை வைத்தியசாலையில் அனுமதி! காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு முன்பாக இடம்பெற்ற மோதல் சம்பவங்களில் காயமடைந்த 130 பேர் இதுவரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1280931

  18. அனைவரும் இணங்கினால்.... நாட்டின் பிரதமராகத் தயார் – கரு ஜயசூரிய அனைவரும் இணங்கினால்... சிறந்த செயற் திட்டத்துடன், மிகக் குறுகிய காலத்திற்கு நாட்டின் பிரதமராகத் தயார் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1280776

    • 7 replies
    • 724 views
  19. காலவரையற்ற... வேலைநிறுத்தப் போராட்டம் – 2,000 தொழிற்சங்கங்கள் அறிவிப்பு இன்று (09) நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக 2,000 தொழிற்சங்கங்கள் அறிவிப்பு https://athavannews.com/2022/1280901

  20. மஹிந்த ஆதரவாளர்கள் மீதும்... அவர்களை ஏற்றிவந்த பேருந்துகள் மீதும், சரமாரி தாக்குதல் ! அலரிமாளிகைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்களை இன்று ஏற்றிவந்த பேருந்துகள் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அலரிமாளிகைக்கு முன்பாகவும், காலி முகத்திடலில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தியதால், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களை கொழும்புக்கு ஏற்றிச் சென்ற பல பேருந்துகள் நகரை விட்டு வெளியேற முற்பட்ட போது பொதுமக்களால் தாக்கப்பட்டுள்ளன. http…

  21. கோட்டா கோ கம.... கிராமம், மீள உருவாக்கப்படுகின்றது. காலிமுகத்திடலில் ஏற்பட்ட வன்முறையை அடுத்து தரைமட்டமாக்கப்பட்ட கோட்டா கோ கம கிராமம் மீள உருவாக்கப்படுகின்றது. முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களால் இன்று காலை மைனா கம மற்றும் கோட்டா கமவில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக கூடாரங்கள் அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1280912

  22. அமைதி வழியில்... போராடிய மக்கள் மீது, வன்முறை பிரயோகிக்கப்பட்டமையை... கண்டிக்கிறேன் – அங்கஜன் ஜனநாயக மரபுகளின்படி அமைதி வழியில் போராடிய மக்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டமையை கண்டிக்கிறேன் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனது உத்தியோகபூர்வ முகநூலில் பதிவிட்டுள்ளார். காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகை முன்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலக கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் மீது , வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடாத்தி , அவர்களின் கூடாரங்களை அடித்து நொறுக்கி அவற்றுக்கு தீ வைத்துள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தனது உத்தியோக பூர்வ முகநூலில் மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில் மேலும் …

  23. கொழும்பு காலி முகத்திடல் போராட்டக் களத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கலவரத்தின் போது பாதிரியார்கள் சிலர் தாக்கப்பட்டதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். கொழும்பு காலி முகத்திடலில் அமைதியான முறையில் கடந்த ஒரு மாதமாக முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் சில அடாவடி கும்பல்களின் தாக்குதலால் இன்றைய தினம் யுத்தக் களமானது. பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் என தெரிவித்துக் கொண்ட கும்பல் சிலர் ஆர்ப்பாட்டக் களத்தில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை எரித்து அடித்து உடைத்து அடாவடித் தனத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில பாதிக்கப்பட்ட 23இற்கும் அதிகமானோர் வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் விளைவாக நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்க…

    • 5 replies
    • 766 views
  24. இலங்கை போராட்டத் திடலில் ராஜபக்ஷ ஆதரவாளர்கள் வன்முறை, தீ வைப்பு: கண்ணீர்ப் புகை வீச்சு 9 மே 2022, 08:05 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, காலிமுகத் திடல் போராட்டக் காரர்களின் கூடாரம் எரிப்பு. இலங்கை தலைநகர் கொழும்பு காலிமுகத் திடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தி ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வருகிறவர்கள் மீது மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் என்று அறியப்படுவோர் இன்று வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டனர். கொழும்பு நகரில் முதலில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு பிறகு நாடு முழுவதற்கும் விரிவுபடுத்தப்பட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.