Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. உணவு நெருக்கடியில் இருந்து... இலங்கையை மீட்க, ஐந்து நாடுகளுடன்... ரணில் பேச்சு! இலங்கையில் தற்போது நிலவும் உணவு நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாக ஐந்து சக்திவாய்ந்த வெளிநாடுகளுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்படி, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் முன்னாள் பிரதமர் கலந்துரையாடியுள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்காலத்தில் இலங்கை கடுமையான உணவு நெருக்கடியை சந்திக்கும் என முன்னாள் பிரதமரிடம் தெரிவித்த குறித்த நாடுகள், இலங்கைக்கு எவ்வாறு உதவுவது என்பது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளன. சர்வதேச …

  2. மேலும்... 3 இராஜாங்க அமைச்சர்கள், பதவியேற்பு! நாட்டில் மேலும் 3 இராஜாங்க அமைச்சர்கள் புதிதாக பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர். இதன்படி, டயனா கமகே போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரம், சீதா அரம்பேபொல கல்வி மற்றும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சராகவும் விஜித பேருகொட துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை இராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக 21 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1277197

  3. 40,000 மெட்ரிக் தொன், டீசல் கப்பல் இலங்கைக்கு…. ! போதியளவு பெட்ரோல் கையிருப்பில்..! 40,000 மெட்ரிக் தொன் டீசல் அடங்கிய கப்பல் ஒன்று எதிர்வரும் இரண்டு நாட்களில் நாட்டை வந்தடையும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்தியக் கடனுதவியின் கீழ் குறித்த எரிபொருள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளது என பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை நாட்டில் போதுமான அளவு பெட்ரோல் கையிருப்பு இருப்பதாகவும் சுமித் விஜேசிங்க கூறியுள்ளார். எரிபொருளுக்கான புதிய விலை 92 ஒக்டேன் பெட்ரோல் – புதிய விலை: ரூ. 338/- (+84) 95 ஒக்டேன் (யூரோ 4) பெட்ரோல் – புதிய விலை: ரூ. 373/- (+90) டீசல் – புதிய விலை: ரூ. 289…

  4. எரிபொருள் விலையேற்றம்: தனியார் பேருந்து சேவைகள் ஸ்தம்பிதம் – மக்கள் அவதி! எரிபொருள் விலையேற்றம் காரணமாக நாட்டின் பல்வேறு இடங்களில் தனியார் பேருந்து சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. இதனால் பல பிரதேசங்களில் தனியார் பேருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், பல பேருந்துகள் சேவையில் இருந்து விலகியுள்ளதாக பேருந்து தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று காலை பாடசாலை மற்றும் அலுவலகங்களுக்கும் இதர தேவைகளுக்கும் செல்லும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையினை நேற்று முன்தினம் அதிகரித்திருந்த நிலையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலையினை நேற்று அதிகரித்துள்ளமை குறிப்பிட…

  5. எரிபொருள் விலை அதிகரிப்பு: முச்சக்கர வண்டி கட்டணமும் அதிகரிப்பு எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப முச்சக்கர வண்டி வாடகை கட்டணத்தை அதிகரிக்க முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். அதன்படி முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் 80 ரூபாயாகவும் மேலதிகமாக செல்லும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 70 ரூபாயும் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, வரிசையில் நின்று எரிபொருளைப் பெறுவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு விலை அதிகரித்துள்ளது. அதிகரித்து வரும் செலவீனங்களுடன் ஒப்பிடுகையில் பொதுமக்களுக்கு நியாயமான முறையிலேயே முச்சக்கர வண்டி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். https://athavannews.com/…

  6. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும், எரிபொருள் விலையை... உயர்த்தியது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது. இதற்கமைய, ஒக்டென் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 338 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒக்டென் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 373 ரூபாயாகவும் லங்கா ஒட்டோ டீசலின் புதிய விலை 289 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 329 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1277217

  7. 11ஆவது நாளாகவும், தொடரும்... மக்கள் எழுச்சிப் போராட்டம்! காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுள்ள மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) 11ஆவது நாளாகவும் தொடர்கிறது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கொழும்பு காலி முகத்திடலுக்கு வருகை தந்து பொதுமக்கள் இந்த போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கி வருகின்றனர். அத்தோடு, குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு பல்கலைக்கழக மாணவர்கள், சட்டத்தரணிகள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் தொடர்ச்சியாக ஆதரவு வழங்கி வருகின்றனர். ஜனாதிபதியை பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. https://athavannews.com/2022/1277207

  8. போராட்டங்களை நடத்தும், இளைஞர்கள் குறித்து... ஜனாதிபதி கருத்து! நாட்டில் போராட்டங்களை நடத்தும் இளைஞர்களில் பெரும்பாலானோர் நாட்டை உண்மையாக நேசிப்பவர்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குறித்த இளைஞர்கள் நாட்டுக்காக முன்வந்துள்ளமை சுபமான குறியீடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்துகொண்டதன் பின்னர் ஆற்றிய உரையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்த அவர், “நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க உள்ள இளைஞர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்யவும் போராட்டங்களை நடத்தவும் இன்று முழு சுதந்திரம் பெற்றுள்ளனர். அவர்கள் தமது போராட்டங்களை …

  9. உடல் வெப்பநிலையை பரிசோதித்தல்... கட்டாயமில்லை – அரசாங்கம் வளாகம் ஒன்றுக்கு செல்லும் போது உடல் வெப்பநிலையை பரிசோதித்தல் மற்றும் தனிநபர் விபரங்களைத் திரட்டுதல் என்பனவும் கட்டாயம் இல்லை என சுகாதார பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். நேற்று முதல் அமுலாகும் வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன அறிவித்திருந்தார். எனினும் பொதுப் போக்குவரத்து மற்றும் உள்ளக நிகழ்வுகளில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையிலேயே, உடல் வெப்பநிலையை பரிசோதித்தல் மற்றும் தனிநபர் விபரங்களைத் திரட்டுதல் என்பனவும் கட்டாயம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/202…

  10. மின்வெட்டு, அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பு! நாட்டில் இன்றும் நாளையும் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. இதன்படி, A முதல் A வரையான வலயங்களில் இன்றும் நாளையும் முற்பகல் 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியில் 2 மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அத்துடன் மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஒரு மணிநேரமும் 20 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1277229

  11. மூடிஸ் நிறுவனம் இலங்கையின் கடன் மதிப்பீட்டை "Ca2" இலிருந்து "Ca" ஆகக் குறைத்துள்ளது. கடன் கொடுப்பனவுகளை இடைநிறுத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து மூடிஸ் நிறுவனம் இலங்கையின் இறையாண்மை மதிப்பீட்டை குறைத்துள்ளது. தன்னுடைய கடன்களை உரிய காலத்தில் செலுத்த முடியாது என இலங்கை அண்மையில் அறிவித்திருந்தது. இவ்வாறு கடன் தவணை தவறுவது, 'ஒரு நாடு திவாலான நிலைமை' என பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். பொருளாதார வீழ்ச்சியால் இலங்கை கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. விலைவாசி உயர்ந்திருக்கிறது. அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்திருக்கின்றன. நாணயத்தின் மதிப்பு கடுமையாகச் சரிந்திருக்கிறது. இறக்குமதிகள் முடங்கியிருக்கின்றன. இறக்குமதியை நம்பியிருக்க…

  12. தவறை உணர்கிறேன் – பணத்தை திருடவில்லை – நாடாளுமன்றத்தை, அரசியல் அமைப்பை மதிப்பேன்! April 18, 2022 இலங்கையின் வரலாற்றில் மிகவும் கடினமான அதே போன்று, சவாலான பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக, சமூக ரீதியாக நாடு தீர்மானமிக்கதொரு தருணத்தை எதிர்கொண்டுள்ள சந்தர்ப்பத்திலேயே இன்று நான் உங்களிடம் உரையாற்றுகிறேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் இன்று ஆற்றிய விசேட உரையிலேயே இவ்விடயத்தைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவித்ததாவது, இன்று சிரேஷ்ட நிலை பாராமல் புதிய அமைச்சர்களை நியமித்துள்ளேன். அமைச்சர் பதவி என்பது ஒரு வரப்பிரசாதம் அல்ல. அது ஒரு பாரிய …

    • 11 replies
    • 693 views
  13. இலங்கை நெருக்கடி: கொழும்பு போராட்டத்தில் தமிழில் குரல் எழுப்பிப் போராடும் ஒற்றைப் பெண் 5 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, ரஷிகா அருள்செல்வம் இலங்கை தலைநகர் கொழும்புவில் நடந்து வரும் இனம், மொழி கடந்த போராட்டத்தில் ஒரே ஒரு தமிழ்ப் பெண் மட்டும் முழக்கங்களை தமிழில் எழுப்புகிறார். பதாகைகளை தமிழில் ஏந்துகிறார். இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வை கோரியும், ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரியும் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கொழும்பு - காலி முகத்திடல் பகுதியில் கடந்த 9ம் தேதி தன்னெழுச்சி போராட்டம் ஆரம்…

  14. மீண்டும் கட்சி தாவினார், சுரேன் ராகவன்… சுதந்திர கட்சிக்கு... இரண்டாவது இழப்பு! அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மற்றுமொரு உறுப்பினரான சுரேன் ராகவனும் அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்டுள்ளார். 21 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்ட நிலையில் கல்வி இராஜாங்க அமைச்சராக சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டார். முன்னதாக சுதந்திர கட்சியின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றிருந்தார். இந்நிலையில் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த சுதந்திர கட்சியின் இரண்டாவது உறுப்பினரும் தற்போது மீண்டும் அரசாங்கத்தில் இணைந்துள்ளார். அமைச்சு பதவியை பொறுப்பேற்றமையி…

  15. சர்வதேச நாணய நிதியத்தை நாடாதமை, இரசாயன உரம் வழங்காதமை, தவறு – ஜனாதிபதி சர்வதேச நாணயநிதியத்தை முன்னதாகவே இலங்கை நாடியிருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை இயற்கை உர பாவனையை கொண்டுவரும் முயற்சியில், விவசாயிகளுக்கு இரசாயன உரங்களை வழங்காமை பிழையானது என்றும் அவர் ஒப்புக்கொண்டார். ஆகவே விவசாயிகளுக்கு இரசாயன உரத்தை அரசாங்கம் மீண்டும் வழங்கும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டார். சட்டமியற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ள நிலையில் மாற்றங்களை முன்வைக்க தேவையான ஆதரவை வழங்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். சேதனப் பசளை பயன்பாட்டுக்காக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்கப்…

  16. அரசியலமைப்பை... திருத்துவதற்கான, முன்மொழிவை சமர்ப்பிக்க... பிரதமர் திட்டம்! நீதி, நிர்வாகம், நிறைவேற்றுத்துறையை உள்ளடக்கிய அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை அமைச்சரவையில் முன்வைக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். மக்களுக்கு பொறுப்புக்கூறும் அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் முன்வைத்த கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவருவது என்பது மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் என பிரதமர் எதிர்பார்ப்பதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2022/1277167

    • 2 replies
    • 235 views
  17. மக்களின் குரலை... தொடர்ந்தும் புறக்கணிப்பது, ஆபத்தானது – தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை மக்களின் குரலை தொடர்ந்தும் புறக்கணிப்பது ஆபத்தானது என தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் முன்வந்து கலந்துரையாடி தீர்வுகாண வேண்டுமென அந்த ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. நெருக்கடிகள் தொடர்பில் கலந்துரையடி அவற்றுக்கான இணக்கமான தீர்வொன்றை எட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ள தேர்தல் ஆணைக்குழு மக்களின் குரலை தொடர்ந்தும் புறக்கணிப்பது ஆபத்தானது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. https://athavannews.com/2022/1277160

  18. சிங்களவர்களின் போராட்டத்தில்... தமிழ் இளைஞர்கள் பங்கேற்பதால், தமிழ் மக்களுக்கு என்ன இலாபம் – கருணாகரம் சிங்கள இளைஞர்கள் யுவதிகள் தங்களது பிரச்சினைகளை முன்னிறுத்தி போராடும்போது அதில் தமிழ் இளைஞர்கள் பங்குபற்றுவதனால் தமிழ் மக்களுக்கு என்ன இலாபம் என்பதை தெரிந்துகொண்டுதான்போராடவேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “மஹிந்த ராஜபக்ஷ குடும்பத…

  19. மாற்றத்திற்கான... முயற்சிகளுக்கு, இளைஞர்கள் ஆதரவளிக்க வேண்டும் – ஜனாதிபதி புதிய அமைச்சரவையை நியமிக்கும் போது தாம் மூத்த உறுப்பினர்களை கருத்திற் கொள்ளவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமைச்சர் பதவிகள் வெறும் நன்மைகள் அல்ல, அது பெரிய பொறுப்பு என குறிப்பிட்ட அவர் அமைச்சர்கள் எவரும் மேலதிக வரப்பிரசாதங்களை பயன்படுத்த கூடாது என கேட்டுக்கொண்டார். நேர்மையான, திறமையான, கறைபடியாத அரசாங்கத்தை இவர்களிடம் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதேசமயம் தங்களுக்குச் சொந்தமான நிறுவனங்களை ஊழலில் இருந்து விடுவித்து, பொது மக்களுக்கு சேவை செய்ய உறுதிபூண்டவர்களாக மாற்றியமைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டா…

  20. டொலர்கள் எல்லாம் ராஜபக்சே குடும்பத்தினரின் பக்கட்டுகளில் உள்ளது - திருக்கோவிலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச காட்டம் ! By Shana நாட்டில் டொலர்கள் இல்லை இல்லை என்கிறார்கள் . ஆனால் நான் சொல்கிறேன் நாட்டிலுள்ள டொலர்கள் எல்லாம் ராஜபக்சக்கள் பக்கட்டுகளில் இருக்கின்றது . இவ்வாறு நேற்று முன்தினம் திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலைகளுக்கு வைத்திய உபகரணங்களை வழங்கி வைத்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார். சஜித் பிரேமதாச அவர்களின் அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசத்துக்கான இணைப்பாளர் வெள்ளையன் வினோகாந்த் ஏற்பாட்டிலே சுவாசம் வேலைத் திட்டத்தின் கீழ் திருக்கோயில் ஆதார வைத்தியசாலைக்கு 26 லட்சத்து 54ஆயிர…

  21. CSE’s week-long closure draws criticism; ‘bad signal’ to outside world By Duruthu Edirimuni Chandrasekera View(s): 626 A pillar of the free market economy, the Colombo Stock Exchange (CSE) has decided to close trading for the whole of next week (April 18 to 22), amid criticism that it sends a bad signal to the international community from a country that has declared itself “temporarily” bankrupt. Colombo University Economics professor Sirimal Abeyratne said coming on top of last week’s announcement of a temporary default in Sri Lanka’s foreign debt obligations, this was another major blow to the country’s confidence in the eyes of the internation…

    • 1 reply
    • 457 views
  22. 8 பில்லியன் டொலர் குத்தகைக்கு பல சொத்துக்களை வழங்க அரசாங்கம் உத்தேசம்? -சி.எல்.சிசில்- பல பெறுமதி மிக்க அரச சொத்துக்களை குத்தகைக்கு வழங்குவதன் மூலம் 8 பில்லியன் டொலர்களை உடனடியாகத் திரட்ட அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குத்தகைக்கு முன்மொழியப்பட்ட சொத்துக்களில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தள விமான நிலையம் மற்றும் இரத்மலானை விமான நிலையம் ஆகியவை அடங்கும். இவை நீண்ட கால குத்தகைக்கு விடப்படும். கட்டுநாயக்க விமான நிலையத்தை 2 பில்லியன் அமெரிக்க டொலருக்கும், மத்தள விமான நிலையத்தை 300 மில்லியன் அமெரிக்க டொலருக்கும், இரத்மலானை விமான நிலையத்தை 400 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் குத்தகைக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும், க…

    • 49 replies
    • 2.2k views
  23. அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் 20ஆம் திகதி சபாநாயகருக்கு கையளிக்க தீர்மானம் (எம்.ஆர்.எம்.வசீம்) ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவர இருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணை ஆகியவற்றை எதிர்வரும் 20ஆம் திகதி சபாநாயகருக்கு கையளிக்க தீர்மானித்திருக்கின்றது. புத்தாண்டு விடுமுறைக்கு சொந்த இடங்களுக்கு சென்றிருக்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளை செவ்வாய்க்கிழமை கொழும்புக்கு வந்த பின்னர் அவர்களதும் இணக்கப்பாட்டை பெற்றுக்கொண்ட பின்னர் கையளிக்க இருப்பதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். அத்துடன் பிரேரணையை வெற்றிகொள்வதற்கு பாராளுமன்றத்தில் 113 உறுப்பினர்கள…

  24. நடு நிலைமை என்பது... கள்ளர் கூட்டத்தை, ஆதரிப்பதே -வேலுகுமார் மக்கள் பக்கமா? கள்ளர்கள் பக்கமா? என்பதே நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிப்பதும் எதிர்ப்பதும் என்றும் நடுநிலைமை என்பதும் கள்ளர் கூட்டத்தை ஆதரிப்பதே என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாடு முழுவதும் நாளுக்கு நாள் தன்னெழுச்சி போராட்டம் வீரியம் பெற்று வருகின்றது. மக்களின், ‘கோட்டா போ’ என்ற கோஷம் வலுப்பெறுகிறது. ‘ராஜபக்ஷக்களை விரட்டி அடிப்போம், கொள்ளையடித்த பணத்தை திரும்ப பெறுவோம்’ என்று பல மட்டங்களிலும் போராட்டங்கள் வெடித்திருக்கிறது. …

  25. இன்று இரவு... 7:30 க்கு ஜனாதிபதி கோட்டா உரை! ஜனாதிபதியின் உரை இன்று இரவு 7:30 க்கு அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளிலும் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சரவையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆற்றிய உரையே இவ்வாறு ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1277126

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.