Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கோட்டாவின் ஆதரவாளர்கள் விரட்டியடிப்பு அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில், அரசாங்கத்தின் ஆதரவு ஆர்ப்பாட்டங்களும் ஆங்காங்கே முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில், சிலாபம் நகரில் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட போது, ஜனாதிபதி கோட்டாபயவுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதனால் அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டது. ஆதரவான குழுவினருக்கும் எதிரான குழுவினருக்கும் இடையில் முறுகல் நிலையொன்று ஏற்பட்டது. எனினும், பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நிலைமையை கட்டுப்படுத்திவிட்டனர். இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் குழு…

    • 5 replies
    • 811 views
  2. இந்திய ஊடகத்திற்கு வழங்கியுள்ள பேட்டியில் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளது என்ன? 1 உங்கள் செய்தியை தெரிவித்துவிட்டீர்கள் – இனி அமைதியாகயிருங்கள் – தொடர்ந்து போராடுவதால் பிரயோசனமில்லை இலங்கை மாத்திரமல்ல- பாக்கிஸ்தானை பாருங்கள் அனேகமான நாடுகள் நிதிநெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. – கொவிட் பாதித்தது- – சுற்றுலாப்பயணிகள் வரவில்லை – இலங்கையில் தற்போது காணப்படுவது எரிபொருள் நெருக்கடியே – தவறான நிர்வாகமும் காரணம் – மக்களிற்கு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட உரிமையுள்ளது – — இந்தியாவின் நியுஸ் எக்சிற்கு வழங்கியுள்ள பேட்டியி…

    • 3 replies
    • 456 views
  3. ஜனாதிபதி பதவி விலகவேண்டும் அல்லது மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றை முன்வைக்கவேண்டும்- ரணில் தற்போது அதிகார மையம் என்பது இந்த இளைஞர்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களின் கரங்களில் காணப்படுகின்றது ————— ஜனாதிபதி பதவி விலகவேண்டும் அல்லது மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றை முன்வைக்கவேண்டும் என தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க நாட்டில் தற்போது அதிகாரம் ஆர்ப்பாட்டக்காரர்கள் இளைஞர்களின் கரங்களிற்கு சென்றுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார் சிஎன்பிசிக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். உங்களால் எங்களிற்கு வர்ணிக்க முடியுமா? …

    • 3 replies
    • 330 views
  4. மனசாட்சிபடி வாக்களிக்க கோர வேண்டும் ஜனாதிபதிக்கு அதீத அதிகாரங்களை வழங்கும் 20ம் திருத்தத்தை அகற்றி, பாராளுமன்றத்துக்கு அதிகாரங்களை மீளப்பெறும் 19ம் திருத்தத்தை உள்வாங்கி, ஜனாதிபதியின் அதிகாரங்களை பிடுங்கும் 21ம் திருத்தத்தை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடுவோம். இதற்கான வாக்கெடுப்பில் கட்சி பேதங்களுக்கு அப்பால் சென்று பாராளுமன்ற உறுப்பினர்களை வாக்களிக்க கோருவோம். 225 எம்பீகளில் மனசாட்சிபடி வாக்களிக்கும் எம்பீகள் யார், மனசாட்சியை மறந்துவிட்டு வாக்களிப்பவர்கள் யார் என்பதை அவர்களுக்கு வாக்களித்த மக்களும், வெளியே போராடும் மக்களும் அறிந்துகொள்ளலாம். முதலில் இவரது அதிகாரங்களை பிடுங்க வேண்டும். அதைவிடுத்து …

    • 0 replies
    • 150 views
  5. நாட்டு மக்களுக்கு... விசேட உரையாற்றுகின்றார், பிரதமர் மஹிந்த !! நாட்டு மக்களுக்கு இன்று (திங்கட்கிழமை) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட உரையாற்றவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் அவர் மக்களுக்கு உரையாற்றவுள்ளார். https://athavannews.com/2022/1276258

  6. கட்டுநாயக்க... விமான நிலைய ஊழியர்களும், வேலை நிறுத்த போராட்டம் ! கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் இன்று காலை 9:30 மணி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பள பிரச்சினை மற்றும் மேலதிக கொடுப்பனவு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். எவ்வித அரசியல் கட்சிகள் அல்லது தொழிற்சங்க கோரிக்கைகளும் இல்லாமல் அனைத்து விமான நிலைய ஊழியர்களும், வேலைநிறுத்த போராட்டத்தில் இணைந்துள்ளனர். பணிப் புறக்கணிப்பு மற்றும் எதிர்ப்புப் போராட்டம் இடம்பெற்றாலும் விமான நிலையத்தின் அன்றாட நடவடிக்கைகளுக்கு இதுவரை இடையூறு ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2022/1276255

  7. பிரதமரை... பதவி நீக்கம் செய்யுமாறு, சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை – ஜனாதிபதி நிராகரிப்பு! பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அப்பதவியில் இருந்து நீக்குமாறு அரசாங்கத்தின் 41 சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி சரியான பதிலை வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. குறித்த கோரிக்கையை நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போதும் ஜனாதிபதி நிராகரித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் உள்ள கட்சிகளின் தலைவர்களை உள்ளடக்கிய தேசிய நிறைவேற்று சபையொன்றை உருவாக்கி புதிய பிரதமரை நியமித்து நிறைவேற்று சபையின் பணிப்புரையின் பேரில் எதிர்கால தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில்…

  8. அத்தியாவசியப் பொருட்கள் எங்கே? – யாழில் ஆர்ப்பாட்டம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வலிகாமம் வடக்கு மக்களின் ஏற்பாபாட்டில் தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு அருகில் இன்றைய தினம் (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் எங்கே, வலிகாமம் வடக்கு மீள் குடியேற்றத்தை துரிதப்படுத்து, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, வலிகாமம் வடக்கு மக்களின் காணிகளை உடனடியாக விடுவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. https://athavannews.com/2022/1276259

  9. எதிர்வரும் நாட்களில் பொதுஜன பெரமுனவின் முக்கிய பதவிகளில் மாற்றம் - சாகர காரியவசம் (இராஜதுரை ஹஷான்) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய பதவிகளில் எதிர்வரும் நாட்களில் மாற்றம் ஏற்படுத்தப்படும். கட்சியின் முக்கிய பொறுப்பினை ஏற்குமாறு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிற்கு உத்தியோகப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நாட்டில் தற்போது தோற்றம் பெற்றுள்ள அரசியல் ஸ்தீரமற்ற தன்மைக்கு இன்னும் ஓரிரு நாட்களில் தீர்வு பெற்றுக்கொள்ளப்படும். அரசாங்கத்தை பலவீனப்படுத்த அரசாங்கத்திற்குள் ஒரு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சி தற்காலிகமாகவே வெற்றிப்பெற்றுள்ளது. வெ…

  10. தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர் ஈ.சரவணபவனால் சிறுவர் பூங்கா திறந்துவைக்கப்பட்டது! முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனால் இன்று மாலை வலி தென்மேற்கு பிரதேசத்தின் பண்டத்தரிப்பு பகுதியில் சிறுவர் பூங்கா திறந்து வைக்கப்பட்டது. இதன்போது ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் தமிழர்களின் பாரம்பரிய இசைநிகழ்வுகளுடன் அழைத்துவரப்பட்டதோடு இதனைத்தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் இடம்பெற்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனால் நாடாவெட்டி சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து விருந்தினர்கள்,பொதுமக்கள், சிறுவர்கள் சிறுவர்பூங்காவை பார்வையிட்டனர். இதனைத்தொடர்ந்து கலைநிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன…

    • 3 replies
    • 231 views
  11. ஜனாதிபதி – சுயாதீன எம்.பிக்களுடனான சந்திப்பில் இணக்கப்பாடு இல்லை! ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும், ஆளுங்கட்சியில் இருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்படும் எம்.பிக்களுக்கும் இடையில் நேற்றிரவு நடைபெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளது. புதிய பிரதமர் தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைக்க வேண்டும் என்று சுயாதீன உறுப்பினர்களின் கோரிக்கையாக உள்ளது. அத்துடன் அந்த அமைச்சரவையில் ராஜபக்சக்கள் இடம்பெறக்கூடாது எனவும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட 11 கட்சிகளின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக மேற்படி பிரதிநிதிகளை ஜனாதிபதி நேற்றிரவு அழைத்திரு…

  12. காலி முகத்திடலில்... உதயமானது, ‘கோட்டா கோ கிராமம்‘ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடல் வளாகத்தில் இன்று(மூன்றாவது நாளாகவும் போராட்டம் தொடரும் நிலையில், அப்பகுதிக்கு “கோட்டா கோ கிராமம்“ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகும்வரை போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காலி முகத்திடல் வளாகத்தில் தற்காலிக கூடாரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. https://athavannews.com/2022/1276203

  13. 15 பேர் கொண்ட, புதிய அமைச்சரவை இன்று.. ஜோன்ஸ்டன், ரோஹித போன்றோருக்கும் அமைச்சுப்பதவி? 15 பேர் கொண்ட புதிய அமைச்சரவை இன்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்த பல அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்கவுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, காமினி லொக்குகே, பவித்ரா வன்னியாராச்சி, எஸ்.எம். சந்திரசேன ஆகியோருக்கும் பதவி வழங்கப்படவுள்ள அதேவேளை இவர்களில் டலஸ் அழகப்பெரும இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் மக்களால் வெறுக்கப்படும் அமைச்சரவையொன்றை நியமிக்க ஜனாதிபதி முடிவு செய்தால் அரச…

  14. கோட்டாவிற்கு எதிரான... நம்பிக்கையில்லாப் பிரேரணையை, கொண்டு செல்ல வேண்டாம் – வாசுதேவ உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள்! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார மற்றும் விமல் வீரவன்ச உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு செல்ல வேண்டாம் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கு அவர்கள் ஆலோசனை வழங்கியதாக வாசுதேவ நாணயக்கார ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்தார். ஜனாதிபதி மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை இந்த நேரத்தில் பொருத்தமானதாக இருக்கா…

  15. அனைத்து... மதுபானசாலைகளுக்கும், பூட்டு! சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் எதிர்வரும் 2 தினங்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் சகல மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மதுபானசாலைகள் உரிமையாளர்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இதனை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மதுவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1276187

  16. 19 ஆவது திருத்தத்தை... நடைமுறைப்படுத்தினால், சர்வதேசம் முழுமையாக ஒத்துழைக்கும் என்கின்றார் மைத்திரி 20 ஆவது திருத்தத்தை முழுமையாக இரத்து செய்து 19 ஆவது திருத்தத்தை மீண்டும் கொண்டு வந்தால் சர்வதேசம் இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனநாயக்த்தை ஸ்தாபிக்க வேண்டுமாயின் 19 ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் சர்வதேசத்தின் மத்தியில் அரசாங்கத்திற்கு நன்மதிப்பு கிடையாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்குமாறு ஜனாதிபதிக்கு வலியுறுத்தியுள்ளதுடன் பல யோசனைகளையும் முன்வைத்துள்ளதாக மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மேலும…

  17. அரசியல் ஸ்திரத்தன்மை, கேள்விக்குள்ளாயிருக்கும் சூழலில்... இராணுவத்தின் ஆதிக்கம் – சுமந்திரன் எச்சரிக்கை. நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை கேள்விக்குள்ளாயிருக்கும் சூழ்நிலையில், அந்த இடைவெளியில் இராணுவத்தின் ஆதிக்கம் மேலோங்கக்கூடிய அச்சுறுத்தல் நிலை காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், நெதர்லாந்து, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட் நாடுகளின் பிரதிநிதிகளிடம் கலந்துரையாடிய போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை இதனை சுட்டிக்காட்டியுள்ளார். பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நாட்டின் செலவினங்களைக் குறைக்குமாறு பரிந்துரைகளை குறித்த நாடுகள் முன்வைக்க வேண்ட…

  18. 20 ஆவது திருத்தச் சட்டத்தை... நீக்கும் நகர்வுகளை, முன்னெடுத்தது எதிர்க்கட்சி !! 20 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு தனிநபர் பிரேரணையை முன்வைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்னெடுத்துச் செல்வதற்கும் ஆளும் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்று அங்கீகாரம் பெறுவதற்கும் எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளது. சஜித் பிரேமதாச விரைவில் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களை சந்தித்து அவர்களின் ஆதரவைப் பெறுவார் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் நாடாளுமன்ற உறுப்பினர்களுமான லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார். இதேவேளை நேற்று இடம்ப…

  19. ராஜபக்ஷ குடும்பத்தினர்... பதவி விலக வேண்டும் – சஜித்துடனான சந்திப்பில் மைத்திரி ராஜபக்ஷ குடும்பத்தினர் பதவி விலக வேண்டும் என சஜித்துடனான சந்திப்பின்போது மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார். இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அத்தோடு, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண புதிய பிரதமரைக் கொண்ட இடைக்கால ஆளும் சபையை நிறுவ வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளதாக மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார் இந்தச் சபையின…

  20. எரிபொருளுக்காக... வரிசையில், காத்திருந்த... இருவர் உயிரிழப்பு! தங்கொடுவ மற்றும் வென்னபுவ ஆகிய பகுதிகளில் எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் நின்ற இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதற்கமைய, சுமார் இரண்டு நாட்களாக டீசல் பெறுவதற்காக தங்கொடுவ நகரில் வரிசையில் காத்திருந்த கோனவில பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவர் மயங்கி விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இதேவேளை, வென்னபுவ பகுதியில் எரிபொருள் கொள்வனவு செய்ய வரிசையில் நின்ற 51 வயதுடைய மற்றொருவரும் உயிரிழந்துள்ளார். https://athavannews.com/2022/1276115

  21. அரசாங்கத்துக்கு எதிரான... ஆர்ப்பாட்டம், கொழும்பு – காலி முகத்திடலில்... 3ஆவது நாளாகவும் தொடர்கிறது அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் மூன்றாவது நாளாக இன்றும் (திங்கட்கிழமை) தொடர்கின்றது. அதிகளவானோர் காலி முகத்திடலிலும் ஜனாதிபதி செயலக வளாகத்திற்கு முன்பாக கூடியும் தொடர்ச்சியாக தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர். அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும், பொருளாதார முன்னேற்றத்திற்கு கொள்கை அடிப்படையிலான தீர்வு வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குறித்த பகுதிகளில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. …

  22. ஜனாதிபதிக்கும், சுதந்திரக் கட்சிக்கும்.... இடையிலான சந்திப்பு, இணக்கப்பாடின்றி நிறைவு! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு எவ்வித முடிவும் எட்டப்படாமல் நிறைவடைந்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்றுசெய்தி வெளியிட்டுள்ளது. எவ்வாறாயினும் புத்தாண்டு விடுமுறைக்குப் பின்னர் மற்றொரு சுற்று பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் தற்போது நிலவும் அரசியல் அமைதியின்மையை தணிக்கவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணவும் இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பாகவும் இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான…

  23. இலங்கை விவகாரங்களில்... அண்டை நாடுகள், தலையிடுகின்றன: பேராயர் குற்றச்சாட்டு! இலங்கை விவகாரங்களில் அண்டை நாடுகளைச் சேர்ந்த சில குழுக்கள்கூட தலையிடத் தொடங்கியுள்ளன என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். சில அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வருவதற்கு ஈஸ்டர் தாக்குதலைப் பயன்படுத்தினர் என்றும் எனினும் அவர்கள் வழங்கிய பெரும்பாலான பரிந்துரைகளை செயற்படுத்தத் தவறிவிட்டனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். ஈஸ்டர் தாக்குதல்களை நிரூபித்த ஜனாதிபதி ஆணைக்குழு, ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இருந்தவர்களை மறைத்து வருகின்றதென்றும் எனவே இலங்கைக்கு சாபக்கேடு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சாடினார். இலங்கை விவகாரங்களில் தலையிடுவதற்கு அண்டை நாடுகளில…

  24. நாட்டில்... இன்றும், நாளையும் 4 மணிநேர மின்வெட்டு! நாட்டில் இன்றும் (திங்கட்கிழமை) நாளையும் 4 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று காலை 8.30 மணி முதல் இரவு 10.45 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என சபை தெரிவித்துள்ளது. அதன்படி, ABCD வலயங்களுக்கு காலை 8.30 மணி முதல் 10.45 மணி வரையும் மாலை 5.30 மணி முதல் 7.15 மணி வரையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் DEF வலயங்களுக்கு இன்று காலை 10.45 முதல் மதியம் 1 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என சபை தெரிவித்துள்ளது. மேலும் GH…

  25. அணியும் ஆடை முதல் அனைத்திலும் சவால், போராட வீதியில் இறங்கிவிட்டேன்" - இலங்கை முஸ்லிம் பெண் ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் பொருளாதார நெருக்கடி தற்போது தீவிரமடைந்துள்ள சூழ்நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் நாளாந்தம் வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ''கோட்டாபய கோ ஹோம்" என கோஷங்களை எழுப்பியவாறு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் ஒன்று கூடி போராடி வருகின்றனர். இவ்வாறான சூழ்நிலையில், கொழும்பு - காலி முகத்திடலுக்கு தன்னிச்சையாக கூடிய பெரும் எண்ணிக்கையிலானோர் நேற்றைய தினம் தன்னெழுச்சிப் போராட்டத்தை நடத்தியிருந்தன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.