ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143603 topics in this forum
-
யோஷித நாட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ளார் – முக்கிய பிரமுகர்கள் ஜெட் விமானம் மூலம் வெளிநாட்டுக்கு May 10, 2022 முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் மகன் யோஷித ராஜபக்ஸ நேற்று (9) அதிகாலை நாட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ளார் என தகவல்கள் தெரிவித்துள்ளன. யோஷிதவும் அவரது மனைவியும் சிங்கப்பூர் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் சிங்கப்பூருக்கு பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவா்களது தனிப்பட்ட வாகனத்தில் விமான நிலையத்துக்கு சென்றுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.. அதேவேளைஅரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் திருகோணமலை படைத்தளம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் ,அவர்கள் அங்கிருந்து ஜெட் விமானம் ஒன்றின் மூலம் வெளிநாட…
-
- 4 replies
- 554 views
-
-
நாட்டில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்படலாம் May 10, 2022 வன்முறைச் சம்பவங்களை தூண்டி நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தப்படலாமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளாா். நீதிக்காகவும், ஜனநாயக ஆட்சிக்காகவும் அமைதியான முறையில் அற்புதமான போராட்டத்தை நடத்தி வரும் அனைவரிடம் தான் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன் எனத் தொிவித்த அவா் வன்முறைச் சம்பவங்களை தூண்டி நாட்டில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்படலாம் எனத் தெரிவித்துள்ள அவா் நிறுவனத் திறமைகளை பயன்படுத்த வேண்டுமெனவும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். https://globaltamilnews.net/2022/176450
-
- 1 reply
- 269 views
-
-
ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை மீதான விவாதம் குறித்த திகதி நாளை தீர்மானிக்கப்படும் - சுமந்திரன் (நா.தனுஜா) அவசரகாலச்சட்டப்பிரகடனத்திற்குப் பாராளுமன்றத்தில் அனுமதி பெற்றுக்கொள்வதைத் தவிர்க்கும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செயற்பட்டுவருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், இதுகுறித்து ஆராய்வதற்கு இவ்வாரமே பாராளுமன்றம் கூடவேண்டும் என்று தாம் வலியுறுத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதுமாத்திரமன்றி நாளைய தினம் நடைபெறவுள்ள கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கான திகதி தீர்மானிக்கப்படும் என்றும் அவர் மே…
-
- 0 replies
- 313 views
-
-
கலவரபூமியான கொழும்பும் அதன் இன்றைய நிலையும் ! அதிகாலை அலரிமாளிகையில் இருந்து வெளியேறிய மஹிந்த கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைதியான முறையில் ஆரம்பமாக மக்கள் எழுச்சிப் போராட்டம் நேற்று மே மாதம் 9 ஆம் திகதி காலை ஒரு மாதம் நிறைவடையும் வரை அமைதியாகவும் சாத்வீகமாகவும் முன்னெடுக்கப்பட்டு வந்தது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வந்தது. இந்நிலையில், நேற்றையதினம் அலரிமாளிகையில் மஹிந்த ராஜபக்ஷவை பாதுகாப்போம் என்ற தோரணையில் பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் பலர் ஒன்றுகூடி கூட்டமொன்றை ஏற்பாடு செய்ததுடன் ஆர்ப்பாட்டமொன்றையும் மேற்கொண்டனர். இதன் பின்னர் அலரிமாளிகைக…
-
- 3 replies
- 426 views
- 1 follower
-
-
தமிழ் இளைஞர்கள்... மிகவும், நிதானத்தோடு... செயற்பட வேண்டும் – சிறிதரன் இத்தனை நிலைக்கு காரணமான ஜனாதிபதியே முதலில் பதவி விலகியிருக்க வேண்டும் எனவும் சமகால நிலை தொடர்பில் தமிழ் இளைஞர்கள் அமைதி காக்கவேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் சமகால நிலை தொடர்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது நாடு மிக மோசமான நிலையை எட்டியிருக்கின்றது. வன்முறை உச்சத்தை தொட்டிருக்கின்றது. ராஜபக்சக்களின் குண்டர்கள் நியாயமான போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் இடங்களிற்குள் புகுந்து அவர்களை தாக்கியிருக்கின்றார்கள். அதனால் கோபம…
-
- 1 reply
- 302 views
-
-
பொலிஸ்மா அதிபர் மற்றும்.. இராணுவ தளபதிக்கு அழைப்பு! -மனித உரிமைகள் ஆணைக்குழு.- இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவ தளபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை பேணத் தவறியதற்கான காரணத்தை விளக்குமாறு கோரியே மனித உரிமைகள் ஆணைக்குழு அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி இராணுவ தளபதி சவேந்திர சில்வா மற்றும் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவை எதிர்வரும் 12 ஆம் திகதி முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1281047
-
- 0 replies
- 153 views
-
-
சிகிச்சைக்காக... வெளிநாடு செல்ல, தயாராகின்றார் மஹிந்த? முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனும் இந்த தகவலினை இதுவரையில் உறுதிப்படுத்த முடியவில்லை. https://athavannews.com/2022/1280968
-
- 0 replies
- 196 views
-
-
கண்ணீர் புகைத் தாக்குதலை மேற்கொண்ட... பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு கொழும்பில் அலரிமாளிகைக்கு அருகில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்த கண்ணீர் புகைத் தாக்குதலை மேற்கொண்ட உப பொலிஸ் பரிசோதகர் உயிரிழந்துள்ளார். கண்ணீர்ப்புகைத் தாக்குதலின்போது ஏற்பட்ட வெடிப்பின் பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2022/1281046
-
- 0 replies
- 307 views
-
-
இராணுவப் பாதுகாப்புடன்... அலரி மாளிகையை விட்டு, வெளியேறினார் மஹிந்த …! முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இராணுவப் பாதுகாப்புடன் இன்று செவ்வாய்க்கிழமை காலை அலரிமாளிகையை விட்டு வெளியேறியுள்ளார். அலரிமாளிகையை நேற்று முற்றுகையிட்டு நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்களை கலைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர். சுமார் 3 தடவைகள் கண்ணீர்ப்புகை தாக்குதலை நடத்திய பொலிஸார் இறுதியாக வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தையும் மேற்கொண்டனர். இந்நிலையில் இன்று காலை பலத்த இராணுவ பாதுகாப்போடு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரிமாளிகையை விட்டு வெளியேறினார். இதே வேளை அவர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ப…
-
- 1 reply
- 283 views
-
-
வன்முறை சம்பவங்களில்... குறைந்தது, 7 பேர் உயிரிழப்பு…! 5 பேர் ஆபத்தான நிலையில், அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வன்முறை சம்பவங்களில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் 231 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் 218 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு 5 பேர் ஆபத்தான நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2022/1281035
-
- 0 replies
- 141 views
-
-
நான் அரசியலில் இருந்து... ஒரு ரூபாய்கூட, சம்பாதிக்கவில்லை... சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன – நாடாளுமன்ற உறுப்பினர் தான் அரசியலில் இருந்து ஒரு ரூபாய் கூட சம்பாதிக்கவில்லை என்றும், பிரத்தியேக வகுப்புகளை நடத்திச் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தும் தீயிட்டு எரித்து நாசமாக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குணபால ரத்னசேகர தெரிவித்துள்ளார். மேலும் தான் வாழும் வரை அரசியலுக்கு திரும்ப மாட்டேன் என்றும் தனது முகநூல் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1281039
-
- 0 replies
- 154 views
-
-
மீளுருவாகிய... கோட்டா கோ கம – எதிர்ப்புகளை மீறி ஒரு மாதத்தைக் கடந்து தொடரும் போராட்டம்! காலிமுகத்திடலில் ஏற்பட்ட வன்முறையை அடுத்து தரைமட்டமாக்கப்பட்ட கோட்டா கோ கம மீள உருவாக்கப்பட்டு இன்றும் (செவ்வாய்க்கிழமை) போராட்டம் தொடர்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைதியான முறையில் ஆரம்பமான மக்கள் எழுச்சிப் போராட்டம் ஒரு மாதத்தைக் கடந்த நிலையில், பல எதிர்ப்புகளையும் மீறி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் நேற்றுடன் ஒரு மாதத்தை பூர்த்தி செய்திருந்தது. இந்த நிலையில், நேற்றையதினம் அலரிமாளிகையில் மஹிந்த ராஜபக்ஷவை பாதுகாப…
-
- 0 replies
- 470 views
-
-
காலிமுகத்திடல் தாக்குதலை கண்டித்து... கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்! காலிமுக திடலில் கோட்டா கோ கம மீது இடம்பெற்ற தாக்குதலை கண்டித்து மட்டக்களப்பு ஊறணி சந்தியில் கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் நேற்று (திங்கட்கிழமை) இரவு ஈடுபட்டனர். கிழக்கு பல்கலைக்கழ மாணவர்கள் ஊறணி சந்தியில் இன்று இரவு 7 மணிக்கு ஓன்றினைந்து காலிமுக திடலில் இடம்பெற்ற தாக்குதலை கண்டித்து பல்வேறு வசனங்கள் கொண்ட சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு அங்கிருந்து ஆர்பாட்ட ஊர்வலமாக ஆரம்பித்து பிள்ளையரடி வரையும் ஊர்வலமாக சென்று அங்கு சுமார் அரை மணிநேரம் எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து ஆர்ப்பாடகாரர்கள் கலைந்து சென்றனர் . இந்த ஆர்ப்பாட்…
-
- 0 replies
- 159 views
-
-
நாடாளுமன்றத்தை... உடனடியாக, கூட்டுங்கள் – சபாநாயகர் கோரிக்கை நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். https://athavannews.com/2022/1281025
-
- 0 replies
- 188 views
-
-
கோட்டா கமவை, தாக்குவதற்காக... கைதிகளும் அழைத்து வரப்பட்டனர்? கோட்டா கோ கமவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை தாக்குவதற்காக கைதிகளும் அழைத்து வரப்பட்டதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மைனா கோ கம மற்றும் கோட்டா கோ கமவில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய போராட்டக்காரர்களை தாக்குவதற்காக அரசாங்கத்துடன் இணைந்த குழுக்கள் பல்வேறு சிறைகளில் இருந்து சிறைக் கைதிகளையும் அழைத்து வந்துள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களால் தாக்கப்பட்ட பின்னர் பல கைதிகள் சிறைபிடிக்கப்பட்ட காணொளிகள் காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1281011
-
- 7 replies
- 499 views
-
-
வன்முறையினை தூண்டிய... மஹிந்த, ஜோன்ஸ்டன்... கைது செய்யப்பட வேண்டும் – மைத்திரி! ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களை அழைத்து, போராட்டக்காரர்களை தாக்குதவதற்கு தூண்டிய மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்டவர்கள் உடன் கைது செய்யப்பட வேண்டும் என ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனும் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார். https://athavannews.com/2022/1280992
-
- 0 replies
- 115 views
-
-
மஹிந்த ராஜபக்ஷவை... உடனடியாக, கைது செய்ய வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்து உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கேட்டுக்கொண்டுள்ளது. அமைதியான போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் முதல் குற்றவாளி அவரே என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இதேவேளை ஜனாதிபதியும் அரசாங்கமும் பதவி விலகும் வரை எந்தவொரு கலைத்துரையாடலிலும் கலந்துகொள்ளாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1281007
-
- 0 replies
- 182 views
-
-
இலங்கையின்... தற்போதைய நிலைமை குறித்து, அமெரிக்கா கவலை! இலங்கையின் தற்போதைய நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இலங்கையின் நிலைமையை... உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றோம். அமைதியான போராட்டக்காரர்கள் மற்றும் அப்பாவி மக்கள் மீதான வன்முறைளுக்கு எதிராக ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளோம். பொருளாதார மற்றும் அரசியல் சவால்களுக்கு நீண்டகால தீர்வுகளைக் கண்டறிவதிலும் செயல்படுத்துவதிலும் கவனம் செலுத்துமாறு அனைத்து இலங்கையர்களையும் கேட்டுக்கொள்கிறோம்“ எனத் தெரிவிக்கப்பட்டுள…
-
- 0 replies
- 425 views
-
-
கொழும்பில்... இடம்பெற்ற மோதல்களில், இருவர் உயிரிழப்பு!, 218 பேர் வைத்தியசாலையில் அனுமதி. கொழும்பில் இடம்பெற்ற மோதல்களின் போது அலரிமாளிகையில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 218 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலை அறிவித்துள்ளது. https://athavannews.com/2022/1280970
-
- 0 replies
- 176 views
-
-
தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட... பல்வேறு தொழிற்சங்கங்கள் தீர்மானம்! தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட பல்வேறு தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. வன்முறைகளை ஊக்குவிக்கும் அரசாங்கத்திற்கு அதிருப்தியை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று(செவ்வாய்கிழமை) முதல் மறு அறிவித்தல் வரை அனைத்து கடமைகளிலிருந்தும் விலகுவதற்கு தமது உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக இலங்கை பொது நிர்வாக சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், அரசியல்வாதிகள் பங்கேற்கும் கூட்டங்களில் கலந்துகொள்வதைத் தவிர்ப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சுகாதார ஊழியர்களும் நேற்று நள்ளிரவு முதல் பணிப…
-
- 0 replies
- 585 views
-
-
மகிந்தவின் ராஜினாமாவை... கோட்டாபய ஏற்றார் – வர்த்தமானி வெளியானது! பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் உத்தியோகபூர்வ ராஜினாமா கடிதத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, ஏற்றுக்கொண்டுள்ளார். அதனையடுத்து மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியிலிருந்து விலகுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1280962
-
- 0 replies
- 93 views
-
-
ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில்.... அத்தியாவசிய சேவைகளை, முன்னெடுக்க முடியும்! ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப்பிரிவு இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது. பணிக்கான அடையாள அட்டையினை பயன்படுத்தி குறித்த சேவைகளை முன்னெடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1280976
-
- 0 replies
- 83 views
-
-
ஊரடங்கு உத்தரவு, நீடிக்கப் பட்டது – சற்று முன்னர் வெளியானது அறிவிப்பு தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் புதன்கிழமை (11) அதிகாலை 7 மணிவரை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையைக் கருதி குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, நாளை (10) அதிகாலை 7 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்குமென அரசாங்கம் அறிவித்திருந்த நிலையிலேயே, தற்போது குறித்த ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1280959
-
- 1 reply
- 412 views
-
-
மஹிந்தவின்... மெதமுலன இல்லமும், தீக்கிரை. மஹிந்த ராஜபக்ஷவின் பரம்பரை இல்லமான வீரக்கெட்டிய, மெதமுலன இல்லமும் தீக்கிரையாகியுள்ளது. ஆர்ப்பாட்டகாரர்கள் சிலரினால் இவ்வாறு தீ வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, வீரகெட்டியவில் அமைந்துள்ள டி.எ.ராஜபக்ஷ உருவச்சிலைக்கும் மக்கள் தீ வைத்துள்ளனர். https://athavannews.com/2022/1280952
-
- 9 replies
- 1.1k views
- 1 follower
-
-
பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரின் வீடுகள், வாகனங்கள் தீக்கிரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரின் வாகனங்கள் மற்றும் வீடுகள் போராட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்டுள்ளன. நாட்டில் இன்று காலை முதல் காலிமுகத்திடல் மற்றும் அலரிமாலிகை உள்ளிட்ட பல பகுதிகளில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன. அந்த வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள், வாகனங்கள் மற்றும் அலுவலகங்கள் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்டும், தீ வைக்கப்பட்டும் வருகின்றது. அந்த வகையில் முன்னாள் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோவின் குருநாகலிலுள்ள கட்சி அலுவலக…
-
- 26 replies
- 2.2k views
-