ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142874 topics in this forum
-
நியூசிலாந்து பிரஜைகளுக்கு... பயண எச்சரிக்கை! இலங்கையிலுள்ள நியூசிலாந்து பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயத்தினால் இவ்வாறு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார நிலைமை மோசமடைந்து வருவதாகவும், இதன் காரணமாக எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு வருவதாகவும் நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் நீண்ட நேர மின் விநியோகத் தடை முன்னெடுக்கப்படுவதாகவும் நியூசிலாந்து உயரஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் நாட்டில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் இலங்கையிலுள்ள நியூசிலாந்து உ…
-
- 0 replies
- 146 views
-
-
அவசரகால பிரகடனத்தை... மீளப் பெறுமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்து! அவசரகால பிரகடனத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக மீளப் பெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு அமைய அவரகால சட்டம் நேற்று(வெள்ளிக்கிழமை) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், தமது கூட்டணியின் நிலைப்பாட்டை தனது டுவிட்டர் பக்கத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். அவசரகால பிரகடனத்தை ஜனாதிபதி உடனடியாக மீளப் பெற வேண்டும் எனவும், அரசாங்கத்திற்கு எதிரான எதிர்பினையும் போராட்டங்களைய…
-
- 0 replies
- 226 views
-
-
அமைச்சு பதவிகளை துறந்து... அரசிலிருந்து வெளியேறுவதற்கு, தயாராகின்றது சு.க – ஜனாதிபதிக்கும்... கடிதம் அனுப்பி வைக்கப்படுகின்றது! இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படாவிட்டால், அமைச்சு பதவிகளை துறந்து அரசிலிருந்து வெளியேறுவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்றிரவு(வெள்ளிக்கிழமை) கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. இதன்போதே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இன்று(வெள்ளிக்கிழமை) கடிதம் அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் அ…
-
- 0 replies
- 116 views
-
-
அரசாங்கத்திற்கு எதிராக... வலுப் பெறும் போராட்டங்கள் – ஆளுங்கட்சியினரை சந்தித்தார் ஜனாதிபதி! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், ஆளும்கட்சியின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் வலுப்பெற்றுள்ள நிலையிலேயே நேற்று(வெள்ளிக்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை மற்றும் நேற்று முன்தினம் ஜனாதிபதியின் இல்லம் அமைந்துள்ள மிரிஹானை பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் என்பன குறித்தும் கலந்த…
-
- 0 replies
- 256 views
-
-
“நான் தான் நன்றாக செய்தேன்” என்று கூறிய ஜனாதிபதிக்கு... தக்க பதிலடி கொடுத்த கொடுத்த பொதுமக்கள் – இராதாகிருஷ்ணன் நான் தான் நன்றாக செய்தேன் என்று கூறிய ஜனாதிபதிக்கு மக்கள் நேற்று பதில் வழங்கியுள்ளார்கள். இதனை புரிந்துக் கொண்டு எதிர்கால நடவடிக்கைகளை ஜனாதிபதி திட்டமிட வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ர உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நுவரெலியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ”இலங்கை அரசியல் வரலாற்றில் முதன்முறையாக ஒரு ஜனாதிபதியின் வீட்டை முற்றுக…
-
- 0 replies
- 181 views
-
-
ஞாயிற்றுக்கிழமை... ஊரடங்குச் சட்டத்தை, அமுல்படுத்த தயாராகின்றது அரசாங்கம்? எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1274306
-
- 0 replies
- 118 views
-
-
தோற்றிருப்பது... நாட்டின் பொருளாதாரம் அல்ல, இந்த அரசாங்கத்தின் இனவாதமே – கி.சேயோன் இன்று தோற்றிருப்பது பொருளாதாரமோ ஏனைய விடயங்களோ அல்ல. இந்த அரசாங்கத்தின் இனவாதமே தோற்றிருக்கின்றது என்பதே இன்று நாட்டின் நிலைமை சொல்லும் உண்மையான செய்தி என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவரும், கோரளைப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினருமான கி.சேயோன் தெரிவித்தார். மட்டக்களப்பில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் 124வது ஜனன தின நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது இந்த நாட்டின் அரசாங்கம் பொருளாதாரக் கொள்கையில் தோல்வியடைந்து நாட்டை நிருவகிக்க முடியாமல் இருக்கின்றது. இன்று …
-
- 0 replies
- 181 views
-
-
ஜனாதிபதியின் வீட்டிற்கு அருகில்... முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, பேருந்துக்கு இராணுவமே தீ வைத்தது? நுகேகொட போராட்டமானது மத அடிப்படைவாதிகளால் மேற்கொள்ளப்பட்டது எனும் அர்த்தத்தில் அரசாங்கம் கூறவில்லை எனவும், மாறாக அடிப்படைவாத சிந்தனையுள்ள அரசியல் கட்சியினரால் மேற்கொள்ளப்பட்டதாகவே கருதப்படுவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டு மக்களுக்கு இன்று பிரச்சினைகள் உள்ளன. ஆனால், இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக இந்தப் பிரச்சினைகள் எல்லாம் தீர்க்கப்படும் என்றால் நாமும் இத…
-
- 0 replies
- 165 views
-
-
ஜனாதிபதியின் வீட்டிற்கு அருகில்... முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, கைதானவர்களுக்கு ஆதரவாக... களமிறங்கியுள்ள 300 சட்டத்தரணிகள்! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டின் முன்பாக இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் சார்பாக அதிகளவான சட்டத்தரணிகள் மிரிஹான பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளனர். சுமார் 300 இற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் இவ்வாறு ஆஜராகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சட்டத்தரணிகள் தமது சேவைகளை இலவசமாக வழங்க தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. https://athavannews.com/2022/1274334
-
- 0 replies
- 87 views
-
-
சர்வதேச நாணய நிதியத்தின்... இலங்கை தொடர்பான, அறிக்கை மீது 8ஆம் திகதி விவாதம் சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள இலங்கை தொடர்பான அறிக்கை மீதான விவாதம் எதிர்வரும் 8ஆம் திகதி நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது. சபை முதல்வர் அமைச்சர் தினேஸ் குணவர்தன இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பான அறிக்கையினை அண்மையில் முன்வைத்திருந்தது. இது, குறித்த நாடாளுமன்ற விவாதத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் கோரியிருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1274342
-
- 0 replies
- 142 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து, நாங்கள் வெளியேற மாட்டோம் – டெலோ தமிழ் தேசிய கூட்டமைப்பில் நாங்கள் தொடர்ந்து இருப்போம். தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்தில் எங்களுடைய பங்கு இருக்கின்றது என தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமன செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”தமிழ் தேசிய கூட்டமைப்பு சம்பந்தமாக பேசுவதற்கு சுமந்திரனுக்கு அருகதை இல்லை என்பதை நான் இந்த நேரத்தில் கூறிக்கொள்கின்றேன். ஏனெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆரம்பித்து 10 வருடங்களுக்கு பின்பு தான் சுமந்…
-
- 0 replies
- 156 views
-
-
ராஜபக்சாக்கள் நாட்டிலிருந்து தப்பியோட முயல்கின்றனரா? theweek Lakshmi Subramanian ராஜபக்சாக்கள் நாட்டிலிருந்து தப்பியோடமுயல்கின்றனர் என கொழும்பில் தகவல்கள் பரவுவதாக இந்தியாவின் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது அதுமேலும் தெரிவித்துள்ளதாவது. இலங்கையில் பொருளாதார நிலை மிக மோசமடைந்துள்ளது,இதற்கு மத்தியில் ராஜபக்சாக்கள் இலங்கையிலிருந்து தப்பியோட முயல்கின்றனர் என்ற தகவல்கள் கொழும்பில் காட்டுதீ போல பரவுகின்றன. கட்டுநாயக்காவிலும் இரத்மலானையிலும் ராஜபக்சாக்களை ஏற்றிக்கொண்டுபயணிப்பதற்காக இரண்டு விமானங்கள் தயார் நிலையில் உள்ளன என்ற தகவல்களும்…
-
- 6 replies
- 662 views
-
-
ஐக்கிய மக்கள் சக்தியினரின்... யாழ் போராட்டத்தில், குழப்பம்! ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பேரணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த பேரணி யாழ் மாவட்ட செயலகத்தில் இருந்து யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்த இறுதி நேரத்தில் அங்கு அரசாங்கத்துக்கு ஆதரவாக ஒரு ஒரு குழு செயற்படவே அங்கு முறுகல் நிலை உருவானது. முறுகல் நிலை ஏற்பட்டதுடன் கைகலப்பும் உருவானது. பதற்றத்தை தணிப்பதற்காக பொலிஸார் குவிக்கப்பட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன் கைகலப்பில் சிலர் காயமடைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய மக்…
-
- 16 replies
- 853 views
-
-
நுகேகொடை – மிரிஹான ஆர்ப்பாட்டத்தின் போது... கைதான 21 பேருக்கு பிணை நுகேகொடை – மிரிஹான பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைதானவர்கள் 21 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளர். இவர்கள் தலா 100,000 ரூபாய் சரீர பிணையில் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர். கங்கொடவில நீதவான் முன்னிலையில் அவர்களை ஆஜர்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கைதான மேலும் 6 பேருக்கு 4ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கைது செய்யப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோரை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கங்கொடவில நீதவான் உத்தரவிட்டுள்ளார். …
-
- 0 replies
- 101 views
-
-
40 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிலான... டீசல் தாங்கிய கப்பல், நாட்டினை வந்தடைந்தது! இந்திய கடன் வசதியின் கீழ், 40 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிலான டீசல் தாங்கிய கப்பலொன்று இன்று(வெள்ளிக்கிழமை) நாட்டை வந்தடைந்துள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த கப்பலில் இருந்து இன்று மாலை எரிபொருள் தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1274396
-
- 0 replies
- 133 views
-
-
பண்டிகை காலத்தில்... லாஃப்ஸ் சமையல் எரிவாயுவை, நுகர்வோருக்கு வழங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிப்பு! 5 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் லாஃப்ஸ் சமையல் எரிவாயு கப்பல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. லாஃப்ஸ் நிறுவனத்தின் தலைவர் டபிள்யு கே.எம் வேகப்பிட்டிய இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு முன்னர் இதற்கான நாணயக் கடிதத்தினை விடுவிக்குமாறு விநியோகஸ்தர்கள் தெரிவித்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதனை தொடர்ந்து, நாணயக் கடிதத்தைப் பெற்றுக்கொள்வதற்காக, அரச உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டதாகவும் அவ் தெரிவித்துள்ளார். எனினும், எரிவாயுவை இறக்குவதற்கான கட்டணத்திற்காக அரச வங்கியொன்றினால் 4.9 மில்லியன் அமெரிக…
-
- 0 replies
- 173 views
-
-
மிரிஹான ஆர்ப்பாட்டம் – 150 இற்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலம்! நுகேகொடை, மிரிஹான பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் இதுவரை 150 இற்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைகளத்தினால் இவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நுகேகொடை, மிரிஹான பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக விசாரணை நடவடிக்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1274418
-
- 0 replies
- 112 views
-
-
அமைச்சர்களின்... வீடுகளுக்கு, இராணுவ பாதுகாப்பு? அமைச்சர்களின் வீடுகளுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி மற்றும் முக்கிய அமைச்சர் ஆகியோரின் வீடுகளுக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான வீட்டின் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று இரவு (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது. அத்துடன், வர்த்தக அமைச்சர் பந்துல வீட்டையும் சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளதாக தெரிவக்கப்படுகிறது. இவ்வாறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் நிலையில் அமைச்ச…
-
- 1 reply
- 328 views
-
-
புலிகளுடன் இணைந்து கூட்டமைப்பை நாமே உருவாக்கினோம்; கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தகுதி சுமந்திரனுக்கு உள்ளதா? ரெலோ விடுதலைப் புலிகளின் ஆசீர்வாதத்துடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை உருவாக்கியவ்கள் நாமே. விடுதலைப் புலிகளை வன்முறையாளர்கள் போல காட்டிக் கொள்ளும் சுமந்திரன், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் அங்கம் வகிக்கும் தகுதியுள்ளதா என கேள்வியெழுப்பியுள்ளார் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன். தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை சீர்குலைக்கிறார் என எம்.ஏ.சுமந்திரன் மீது நீண்டகாலமாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபயவை சந்திப்பதில்லையென ரெலோ எடுத்த முடிவை சும…
-
- 7 replies
- 598 views
-
-
ஜனாதிபதி.. தனது வீட்டில் இருக்கும்போதே, பேருந்திற்கு தீ வைக்கப்பட்டது – திலும் அமுனுகம நுகேகொட ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்தலாம் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நுகேகொட ஆர்ப்பாட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து பொலிஸார் நீர்த்தாரை மற்றும் தடியடிப் பிரயோகம் நடத்தி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தை கட்டுப…
-
- 2 replies
- 524 views
-
-
“எனது மனைவியிடம் கேளுங்கள்” தற்போது இடம்பெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல பதிலளித்து கொண்டிருக்கின்றார். கேள்வியெழுப்பிய ஊடகவியலாளர், “ சமையல் எரிவாயு வரிசை பிரச்சினை நாட்டில் எப்படி இருக்கிறது” எனக் கேட்டார். அதற்கு பதிலளித்த அமைச்சர் கெஹலிய, “எரிவாயு வரிசையின் நிலைமை பற்றி எனக்குத் தெரியாது, காஸ் தொடர்பில், எனது மனைவியிடமே கேட்கவேண்டும்” என்றார். Tamilmirror Online || “எனது மனைவியிடம் கேளுங்கள்”
-
- 2 replies
- 400 views
-
-
நேற்றய போராட்டத்தின் பின்னணியில் கடும்போக்குவாதிகள் செயற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு நேற்றிரவு வியாழக்கிழமை இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் நுகோகொடை, ஜூபிலிகனுவ பிரதேசத்தில் இடம்பெற்ற போராட்டத்தில் திட்டமிட்ட கடும்போக்குவாதிகள் வன்முறைகளைத் தூண்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இரும்புக் ஆயுதங்கள் மற்றும் பொல்லுகளுடன் ஆயுதம் ஏந்திய குழுவினர், ஆர்ப்பாட்டக்காரர்களைத் தூண்டிவிட்டு, மிரிஹான பங்கிரிவத்தையில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தை நோக்கி பேரணியாகச் சென்று கலவரத்தை ஏற்படுத்தியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கலவரக்காரர்கள் திட்டமிட்ட வகையில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி…
-
- 6 replies
- 359 views
-
-
ரூபாயின் பெறுமதி... மேலும் வீழ்ச்சி: டொலரின் பெறுமதி 282 ரூபாயாக அதிகரிப்பு இலங்கை மத்திய வங்கியினால் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின்படி ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 272 ரூபாயாகவும் விற்பனை விலை 282 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. மேலும் ஸ்டெர்லிங் பவுண்டின் கொள்முதல் விலை 359 ரூபாயாகவும் விற்பனை விலை 372 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. அவுஸ்ரேலிய டொலரின் விற்பனை விலை 210 ரூபாயாகவும் கனேடிய டொலரின் விற்பனை விலை 225 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. https://athavannews.com/2022/1272909
-
- 21 replies
- 1.3k views
- 1 follower
-
-
மிரிஹானவில் கைதானோருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்த வேண்டாம் : இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மிரிஹான சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்த வேண்டாம் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் மிரிஹான சம்பவம் தொடர்பான நிலைமையை ஆராய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சிறப்புக்குழுவொன்றும் மிரிஹான பொலிஸ் நிலையத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது. நேற்று (31) இரவு நுகேகொடை மிரிஹான பெங்கிரிவத்தையிலுள்ள ஜனாதிபதி இல்லத்தை முற்றுகையிட்டு மக்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். இந்நிலையில், இதனை கட்டுப்படுத்த பொலிஸ், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டது. பொலிஸா…
-
- 10 replies
- 523 views
- 1 follower
-
-
ஒழுங்கமைக்கப்படாத போராட்டங்களில் கலந்து கொள்ளும் போது எச்சரிக்கையுடன் இருங்கள் - ஜே.வி.பி. (எம்.மனோசித்ரா) நெருக்கடிகளுக்கு தீர்வுகளைக் கோரி போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு. ஆனால் பொறுப்பு கூறுவதற்கு எவரும் அற்ற ஒழுங்கமைக்கப்படாத போராட்டங்களில் கலந்து கொள்ளும் போது விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் செயற்படுமாறு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஜே.வி.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டில் பாரதூரமான நெருக்கடி நிலைமையே நிலவுகிறது என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். ஒவ்வொரு கணமும் சமூகத்திலுள்ள அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறானதொரு தருணத்…
-
- 0 replies
- 164 views
-