Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அனைத்துக் கட்சிகளையும்... இணைத்து, அமைச்சரவை வேண்டும் – தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை நாடாளுமன்றில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் இணைந்தது அமைச்சரவை அமைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. இதனை அடுத்து நாட்டில் காணப்படும் தற்போதைய பொருளாதார நிலையைத் தீர்ப்பதற்கு இடைக்காலத் திட்டத்தைச் செயற்படுத்தவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1278702

  2. சீனாவிடமிருந்து... மற்றுமொரு கடனுதவியைப் பெற, திட்டம் – நாலக கொடஹேவா சீனாவினால் மற்றுமொரு கடனுதவி வழங்க முன்மொழியப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்த அமைச்சர், இலங்கையில் தற்போது நிலவும் கடன் நெருக்கடிக்கு தீர்வாக கடனை மறுசீரமைப்பது சிக்கலாக இருப்பதால் சீனா இந்த முடிவை எடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சீனா ஏற்கனவே உலகின் பல்வேறு நாடுகளுக்கு கடனை வழங்கியுள்ள நிலையில், ஒரு நாட்டிற்கு மட்டும் கடனை மறுசீரமைப்பது நெருக்கடியை ஏற்படுத்தும் என்று சீனா கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1278654

  3. தமிழ் அரசியல் வாதிகளிடம்... ஒற்றுமை இல்லை – யாழ். மறைமாவட்ட ஆயர் எமது அரசியல்வாதிகளிடம் ஒற்றுமை என்பது கிஞ்சித்தும் கிடையாது என தான் அமெரிக்க தூதுவரிடம் தெரிவித்ததாக யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டீன் பேர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்தார். இலங்கைக்கான அமொிக்க தூதுவர் ஐீலி சுங் யாழ் மறைமாவட்ட ஆயரை நேற்றைய தினம் (திங்கட்கிழமை) சந்தித்து கலந்துரையாடினர். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஆயர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ”நாட்டின் நிலைமை பற்றியும் விசேடமாக வடக்கிலே என்ன மாதிரியான நிலைமை காணப்படுகின்றது என்பதை அமெரிக்க தூதுவர் கேட்டறிந்து கொண்டார். முப்பது வருடங்களாக இந்த சூழ்நிலையில் வாழ்ந்து வந்த பழக்கப்பட்…

    • 1 reply
    • 463 views
  4. பயங்கரவாத தாக்குதல் குறித்த, உண்மைகளை மறைக்க... அரசாங்கம் விரும்பவில்லை – நாலக கொடஹேவா 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மைகளை மறைக்க அரசாங்கம் விரும்பவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் பேசிய அவர், உண்மைகளை மறைப்பதன் மூலம் தாம் நமையடைய போவதில்லை என கூறினார். இந்த விடயம் தொடர்பாக அண்மையில் ஜனாதிபதியுடன் தனிப்பட்ட முறையில் பேசியதாகவும் அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகள் குறித்த தற்போதைய அரசாங்கத்தின் ஒரே குறைபாடு தொடர்பாடல் இல்லாததுதான் என்றும் அமைச்சர் கூறினார். எதிர்காலத்தில் பொதும…

  5. விலையை அதிகரிக்காமல்... சமையல் எரிவாயுவை, விநியோகிக்க முடியாது – லிட்ரோ நிறுவனம் சமையல் எரிவாயு விலைகளை அதிகரிக்காமல் எரிவாயுவை விநியோகிக்க முடியாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே, விலை அதிகரிப்பு தொடர்பாக அரசாங்கம் முடிவெடுக்க வேண்டுமென அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பாக இன்றைய தினம் தீர்மானம் எட்டப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். 12.5 கிலோ கிராம் நிறைக் கொண்ட சமையல் எரிவாயுவின் விலையை 2 ஆயிரத்து 500 ரூபாவால் அதிகரிக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்திருந்தது. எனினும்இ அந்த விலை அதிகரிப்பை நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கவில்லை என அரசாங்கம் அறிவித்த…

  6. வெளிநாட்டு கடன் மதிப்பீடு மட்டத்தில் இருந்து... இலங்கை தரமிறக்கம்! ஸ்டேன்டர்ட் என்ட் புவர் க்ளோபல் ரேட்டிங் நிறுவனத்தினால் இலங்கையின் வெளிநாட்டு கடன் மதிப்பீடு மேலும் குறைக்கப்பட்டுள்ளது. இறையாண்மை முறிகளுக்கான வட்டியை செலுத்தாமையால் இவ்வாறு இலங்கையின் வெளிநாட்டு கடன் மதிப்பீடு குறைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மைய தரவுகளின் அடிப்படையில் இலங்கை சிசி மட்டத்தில் இருந்து எஸ்.டி நிலைக்கு தரமிறக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1278671

  7. இடைக்கால அரசாங்கத்தில்... பங்கேற்பதைவிட, அரசியலில் இருந்து... ஓய்வு பெறுவதே சிறந்தது – சஜித் இடைக்கால அரசாங்கத்தை அமைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளில் பங்கேற்பதை விட அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதே சிறந்தது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் கண்டியில் இருந்து கொழும்பு வரையிலான பேரணியில் கலந்துகொள்வதற்கு முன்னர் அஸ்கிரிய மகாநாயக்கர் வரகாகொட ஞானரதன தேரரை இன்று (செவ்வாய்க்கிழமை) பார்வையிட்டதன் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “தற்போதைய பாராளுமன்றத்தின் அமைப்பு எப்படி உருவானது என்பதை நாம் பார்க்க வேண்…

  8. இலங்கை மத்திய வங்கி, வெளியிட்டுள்ள... நாணய மாற்று விகிதம் ! இலங்கை மத்திய வங்கி இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் பின்வருமாறு, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வில்லை 333.88 ரூபாயாகவும் விற்பனை விலை 346.49 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் கொள்வில்லை 428.58 ரூபாயாகவும் விற்பனை விலை 445.81 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இதேவேளை யூரோ ஒன்றின் கொள்வில்லை 362.94 ரூபாயாகவும் விற்பனை விலை 374.92 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இதேவேளை ஜப்பானின் யென் ஒன்றின் கொள்வில்லை 2.63 ரூபாயாகவும் விற்பனை விலை 2.73 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. https://athavannews.com/2022/1278680

  9. உறவுகளை இழந்த மக்களின்.... அவலங்களை, இன்று நேரடியாக... அறிந்துகொண்டேன் – அமெரிக்க தூதுவர் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் இரண்டினதும் அவசியத்தை அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர் இன்று செவ்வாய்க்கிழமை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்தித்து கலந்துரையாடினார். தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்வதற்கு அனைவரும் உரிமை உண்டு என்றும் அமெரிக்கத் தூதுவர் தெரிவித்தார். போரின் போது குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களின் இதயத்தை உடைக்கும் கதைகளை இன்று நேரடியாக கேட்டு அறிந்துகொண்டதாகவும் அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1278688

    • 12 replies
    • 657 views
  10. இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக... பதவியேற்க, தயாரில்லை – மைத்திரி இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக பதவியேற்க தாம் தயாரில்லை என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசாங்கம் தற்போது பெரும்பான்மையை இழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் சம்மதத்துடன் புதிய பிரதமரை நியமிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1278678

  11. இடைக்கால... அரசாங்கம் குறித்து, ஜே.வி.பி.இன் அறிவிப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான எந்தவொரு யோசனையையும் நிராகரிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. அத்தகைய பிரேரணைகளுக்கு ஜே.வி.பி ஒருபோதும் உடன்படாது என ஜே.வி.பியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டுமென்பது பொதுமக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளான போதிலும், ஜனாதிபதி அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார். நாட்டின் ஸ்திரத்தன்மை மேலும் சீர்குலைந்தாலும், பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு …

  12. அலரி மாளிகைக்கு... முன்பாக, அமைக்கப்பட்டுள்ள... ‘மைனா கோ கம’ – 2ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்! கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகைக்கு முன்னாள் ‘மைனா கோ கம’ உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு நேற்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) 2ஆவது நாளாகவும் தொடர்கிறது. கொள்ளுப்பிட்டி – அலரி மாளிகைக்கு முன்னால் ‘ மைனா கோ கம ‘ எனும் பெயரில் நேற்று இரவிரவாக போராட்டம் இடம்பெற்றது. இதையடுத்து அலரிமாளிகைக்கு முன்னால் பொலிஸ் வாகனங்கள் நடைபாதையில் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் இன்று அதிகாலையில் குறித்த பகுதியில் சற்று பதற்றமான நிலை காணப்பட்டதுடன், ஆர்ப்பாட்டத்தில் ஈ…

  13. அமெரிக்க தூதுவர்... ஜீலி சுங் முகமாலை பகுதிக்கு விஜயம்! அமெரிக்க தூதுவர் ஜீலி சுங் முகமாலை பகுதிக்கு விஜயம்; கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை பார்வையிட்டார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க தூதுவர் இன்று காலை 7.45 மணியளவில் முகமாலை பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்க கொடையாளர்களின் நிதி உதவியில் முகாமாலை பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை நேரில் பார்வையிட்டுள்ளார். டாஸ் நிறுவனத்தினால் குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவருக்கு குறித்த மனிதநேய பணி தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது. தொடர்ந்து குறித்த பகுதியில் மேற்கொள்ளப்ப…

  14. உயிரிழந்தவர்களில்... புலஸ்தினி? அனைவரது சடலங்களையும் தோண்டி எடுக்க நீதிமன்றம் அனுமதி. 2019 ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் பூதவுடல் கள் நாளை (27) தோண்டி எடுக்கப்படவுள்ளது. தற்கொலை தாக்குதலில் உயிரிழந்த 17 பேரில் சாரா ஜாஸ்மின் என்கிற புலஸ்தினி மகேந்திரன் உள்ளாரா என்பதை அறியவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சஹரான் ஹாஷிமின் சகோதரர் மொஹமட் ரில்வான் தற்கொலை அங்கியை வெடிக்கச் செய்ததில் குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் அறிவித்தனர். இருப்பினும், அந்த நேரத்தில் டி.என்.ஏ. சோதனைகள் சம்பவ இடத்தில் சாரா ஜாஸ்மின் இருப்பதை உறுதிப்படுத்தவில்லை. முந்தைய இரண்டு முறை மேற்கொள்ளப்பட்ட சோதனையில…

  15. உள்நாட்டு எரிவாயு விநியோகம், நாளை முதல் ஆரம்பமாகும் – லிட்ரோ நிறுவனம் 3 ஆயிரத்து 600 மெட்ரிக் தொன் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு கொண்ட கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கப்பல் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மணியளவில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், உள்நாட்டு எரிவாயு விநியோகம் நாளை முதல் ஆரம்பமாகும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/1278613

  16. ஆளும்கட்சியின்... முன்னாள் மாகாண சபை, உள்ளூராட்சி உறுப்பினர்கள் அலரிமளிகைக்கு அழைப்பு ஆளும்கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரும் அலரிமாளிகையில் அழைக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்காக இவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இக் கலந்துரையாடலில் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2022/1278590

  17. மின் கட்டணத்தை... உயர்த்துவது குறித்து, இதுவரையில்... தீர்மானிக்கவில்லை – மின்சக்தி அமைச்சு மின் கட்டணத்தை அதிகரிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், நுகர்வுக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. இந்த நிலையில், இன்று டுவிட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர், மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட கட்டணத் திருத்தங்களுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது இது முதல் தடவை அல்ல என தெரிவித்துள்ளார். 2015 ஆம் ஆண்டிலிருந்து பல தடவைகள்…

  18. யாழில்... தந்தை செல்வாவின், 45ஆம் ஆண்டு நினைவு தினம்! இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 45 ஆவது நினைவு தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பிரதான வீதியிலுள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஓய்வு நிலை ஆயரும் தந்தை செல்வா நினைவு அறங்காவற்குழு தலைவருமான கலாநிதி சு.ஜெபநேசனின் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நினைவுத் தூவிக்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்யப்பட்டது. அஞ்சலி நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்…

  19. ராஜபக்சக்களுக்கு இடையில்... கலந்துரையாடல்? – போராட்டம் உள்ளிட்ட, பல விடயங்கள் குறித்து ஆராய்வு! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ராஜபக்ஷ குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களுக்கும் இடையிலான விஷேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல் நேற்று (திங்கட்கிழமை) இரவு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கலந்துரையாடலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோரும் கலந்துகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் நிலவும் பாரிய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்ட…

  20. சஜித் பிரேமதாச: இலங்கையை மீட்போம்; 13-ஆவது திருத்தத்தை அமலாக்குவோம் - பிபிசிக்கு அளித்த முழுமையான பேட்டி எம். மணிகண்டன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையின் தற்போதைய அரசியல், பொருளாதார நெருக்கடி, வருங்காலத் திட்டம், தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக பிபிசி தமிழுக்கு இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பேட்டி அளித்துள்ளார். அதன் உரை வடிவம் இது. கே: இந்த நெருக்கடிக்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள்? பதில்: இது மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது. தற்போதைய நிர்வாகம், கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சி, மற்றும் நா…

  21. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 10 போ் விடுதலை April 26, 2022 பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 10 போ் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவானினால் நேற்றையதினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனா். கடந்த வருடம் மட்டக்களப்பு கிரான் கடற்கரையில் முள்ளிவாய்க்கால் படுகொலையின் நினைவேந்தலை நினைவு கூர்ந்தமைக்காக இவா்கள் கைது செய்யப்பட்டிருந்தனா். இந்த நினைவேந்தலை நினைவு கூர்ந்த வடக்கு கிழக்கு முன்னேற்றகழக தலைவர் வி.லவக்குமார் உள்ளிட்ட 10 பேரையும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்திருந்த கல்குடா காவல்துறையினா் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்ததனை தொடர்ந்து அவா்கள்…

  22. தந்தை செல்வாவின் 45ஆம் ஆண்டு நினைவு தினம் April 26, 2022 இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 45 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பிரதான வீதியிலுள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஓய்வு நிலை ஆயரும் தந்தை செல்வா நினைவு அறங்காவற்குழு தலைவருமான கலாநிதி சு.ஜெபநேசனின் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நினைவுத் தூவிக்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்யப்பட்டது. அஞ்சலி நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், உள…

  23. எங்களுக்கு... சிறிது கால, அவகாசம் வழங்குங்கள் – ஜனாதிபதி கோரிக்கை! தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக் கூறவேண்டியுள்ளதுடன் தற்காலிக மற்றும் நிலையான தீர்வுகளை வழங்குவதற்கான முறையான அணுகுமுறையை எங்கள் அரசாங்கம் தற்போது மேற்கொண்டுள்ளதால், பலன்களை பெற்றுக்கொள்ள எங்களுக்கு சிறிது கால அவகாசம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மூன்று நிக்காயாக்களினதும் தலைமை பீடாதிபதிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று(திங்கட்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில், “நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதா…

  24. அரசாங்கத்துக்கு எதிரான, ‘ஐக்கிய மக்கள் பேரணி’ கண்டியில்... இருந்து. இன்று ஆரம்பம்! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தி கண்டியிலிருந்து கொழும்பிற்கு ஏற்பாடு செய்துள்ள பேரணி இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகிறது. ‘ஐக்கிய மக்கள் பேரணி’ என்ற தொனிப்பொருளிலில் ஆரம்பமாகின்ற இந்த பேரணி, 5 நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்கமைய இன்றைய தினம் கண்டி – தலதா மாளிகையில் ஆரம்பமாகும் பேரணி மாவனெல்ல வரையில் பணயிக்கவுள்ளதுடன், நாளை மாவனெல்லையிலிருந்து கலிகமுவ வரையும் 28ஆம் திகதி கலிகமுவையிலிருந்து தனோவிட வரையும் பயணிக்கவுள்ளது. தொடர்ந்து, 29 ஆம் திகதி தனோவிடவிலிருந்து யக்கல வரையும் …

  25. மக்கள் எழுச்சிப் போராட்டம், 18ஆவது நாளாகவும் தொடர்கிறது – அலரிமாளிகைக்கு முன்பாகவும்... இரவிரவாக போராட்டம்! ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு வலியுறுத்தி காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) 18ஆவது நாளாகவும் தொடர்கிறது. இந்த போராட்டத்தில் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான அதிபர் ஆசிரியர்களும் கலந்து கொண்டிருந்தனர். அது மாத்திரமின்றி நாட்டின் பல பிரதேசங்களிலிருந்தும் வருகை தந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மாத்திரமின்றி மேலும் பல தொழிற்சங்கங்களும் மதங்களை பிரதிநிதித்துவப்படுத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.