ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143346 topics in this forum
-
ஓவியமொன்றுக்காக பல மில்லியனை வாரி இறைத்த அரசியல் வாரிசு நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாரிய சிக்கல்களை எதிர்கொண்டுள்ள அதேவேளை, தமது அத்தியாவசியப் பொருள்களுக்காக மணித்தியாலக் கணக்கில் வரிசைகளில் காத்திருக்கும் நிலையில், இலங்கை அரசியல்வாதியொவரின் மகனால் ஒவியம் ஒன்று, அதி கூடிடிய விலைக்கு வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 35 மில்லியன் ரூபாய்க்கு குறித்த ஓவியம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் சிங்கள இணயைத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த அரசியல்வாதியின் மகனால், இலங்கையின் பிரபல செல்வந்த வர்த்தகர் ஒருவரிடமிருந்து இந்த ஓவியம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் …
-
- 0 replies
- 517 views
-
-
4 இந்திய மீனவர்கள் கைது இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த 4 மீனவர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்துக்கு அழைத்து வந்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 4 இந்திய மீனவர்கள் கைது (adaderana.lk)
-
- 0 replies
- 285 views
-
-
புலமைப் பரிசில் பரீட்சையில்.. மட்டக்களப்பு கல்வி வலயம், இலங்கையில் இரண்டாம் இடம்!. இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அகில இலங்கை ரீதியான தரம் ஐந்து 2021ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் பகுப்பாய்வுகளின் படி மட்டக்களப்பு கல்வி வலயம் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் சித்தி பெற்ற அடிப்படையில் இலங்கையில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு வலய கல்விபணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார். மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், ”2021ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளிவந்த நிலையில் அதனைத் தொடர்ந்து …
-
- 5 replies
- 502 views
-
-
உணவுப் பொருட்கள் அடங்கிய... ஆயிரம் கொள்கலன்கள், கொழும்பு துறைமுகத்தில் தேக்கம்! உணவுப் பொருட்கள் அடங்கிய ஆயிரம் கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளன. அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் நிஹால் செனவிரத்ன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அரிசி, சீனி, பருப்பு, மிளகாய் ஆகிய பொருட்கள் அடங்கிய மேலும் ஆயிரம் கொள்கலன்களே இவ்வாறு தேங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவற்றை விரைவில் விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் நிஹால் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மேலதிக உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு டொலர் பற்றாக்குறை…
-
- 0 replies
- 181 views
-
-
சம உரிமையுள்ள பிரஜைகளாக மாற... எமக்கு நீங்கள் உதவுங்கள் – ஜெய்சங்கரிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி கோரிக்கை! இலங்கை அரசுடன் உங்களுக்கு உள்ள நல்லுறவை பயன்படுத்தி, முழுமையான சம உரிமையுள்ள பிரஜைகளாக மாற, எமக்கு நீங்கள் உதவுங்கள் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரிடம், தமிழ் முற்போக்கு கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரினை இன்றைய தினம்(திங்கட்கிழமை) சந்தித்து பேசியபோதே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு இந்திய தூதுவரின் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வே. ராதாகிருஷ்ணன், எம். உதயகுமார், ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்த…
-
- 0 replies
- 192 views
-
-
இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தது... இ.தொ.கா! இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று(திங்கட்கிழமை) நடைபெற்றது. மலையகத்தில் மேற்கொள்ளப்படும் இந்திய அபிவிருத்தி திட்டங்கள் குறித்து இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது. அத்துடன், மலையகத்துக்கான இந்தியாவின் உதவித் திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். https://athavannews.com/2022/1273761
-
- 0 replies
- 153 views
-
-
பண்டிகைக் காலத்தில்... அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு, தட்டுப்பாடு? பண்டிகைக் காலத்தில் பொது மக்களுக்கு தட்டுப்பாடின்றி அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வோரின் சங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 5ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளுக்கு பின்னர் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை எந்தவித தட்டுப்பாடும் இன்றி வழங்கக்கூடியதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த காலப்பகுதியில் இந்திய கடனுதவியின் கீழ் துறைமுகத்திலுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விரைவாக விடுவித்து பொருட்களை சந்தைக்கு விநியோகிக்…
-
- 0 replies
- 140 views
-
-
எரிபொருளுக்கு தட்டுப்பாடு? அதிகரிக்கப் படுகின்றது மின் வெட்டு நேரம்? அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தற்போதைய மின்வெட்டை மேலும் அதிகரிக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெற்றோலியம் மற்றும் துறைமுக நல்லிணக்க தொழிற்சங்க கூட்டமைப்பின் பேச்சாளர் ஆனந்த பாலித இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் எரிபொருளின் அளவு இழக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் தற்போதைய எரிபொருள் விநியோகம் இன்றுடன்(செவ்வாய்கிழமை) நிறைவடையவுள்ளதாகவும் மின்வெட்டை அதிகரிப்பதன் மூலம் ஓரளவு எரிபொருளை சேமிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்…
-
- 0 replies
- 146 views
-
-
இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையில்... ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து! இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோருக்கு இடையில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற இருதரப்பு சந்திப்பைத் தொடர்ந்தே இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. அவற்றில் இந்திய உதவியுடன் ஏற்படுத்தப்படவுள்ள ஷங்ரி லங்கா அடையாள டிஜிட்டல் அடையாள அட்டை தொடர்பான உடன்படிக்கை, யாழ்ப்பாணத்திற்கு அருகிலுள்ள மூன்று தீவுகளில் மின் உற்பத்தி நிலையங்களை அமைக்கும் ஒப்பந்தங்களும் உள்ளடங்கும் என தெரிவிக்கப்படுகின்றது. பொரு…
-
- 0 replies
- 120 views
-
-
IMF இன் அறிக்கையினை... நாடாளுமன்றில் முன்வைப்பதற்கு, அமைச்சரவை அனுமதி! இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையை நாடாளுமன்றில் முன்வைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று(திங்கட்கிழமை) முன்வைத்த யோசனைக்கே இவ்வாறு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையின் உறுப்புரை 4 பணிக்குழு அறிக்கையின் கீழ் இலங்கை தொடர்பான 2021ம் ஆண்டுக்கான அறிக்கை கடந்த 25ஆம் திகதி வெளியிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து குறித்த அறிக்கையினை நாடாளுமன்றில் முன்வைக்குமாறு எதிர்கட்சி கட்சிகள் அண்மையில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews…
-
- 0 replies
- 111 views
-
-
அயலக கொள்கையில் இலங்கைக்கு என்றும் முதலிடம் - இந்திய வெளிவிவகார அமைச்சர் (இராஜதுரை ஹஷான்) 'அயலகத்திற்கு முதலிடம் 'கொள்கைக்கமைய இந்தியா இலங்கையுடன் தொடர்ந்து செயற்படும் என இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கு உறுதியளித்துள்ளார். கொழும்பில் இடம்பெறும் 5ஆவது பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார கூட்டுறவிற்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு (பிம்ஸ்டெக்) மாநாட்டில் கலந்துக்கொள்ள இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரிற்கும்,நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றது. இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும் இந்தியாவின் முன்னேற்றகரமான…
-
- 1 reply
- 187 views
-
-
துறக்கிறார் மஹிந்த : ஏற்கிறார் ரணில் பிரதமர் பதவியில் மாற்றங்கள் ஏற்படக்கூடுமென, அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாடு தற்போது முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், தற்போதைய அரசாங்கத்தினால் அரசியல் ரீதியில் பாரிய மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. அதனடிப்படையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியை துறப்பார் என்றும் அதன்பின்னர், அரசியல் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல, தேசிய அரசாங்கமொன்றை நிறுவி, பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்குவதற்கும் கலந்துரையாடப்படுவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு த…
-
- 9 replies
- 806 views
-
-
இந்திய உயர் தூதுவராலயம் கொழும்பு ஊடக அறிக்கை இலங்கை அரசு - தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பேச்சுவார்த்தைகளை இந்தியா வரவேற்கிறது ! 1. இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர், நா.உறுப்பினர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவை இன்று சந்தித்தார். 2. இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான மார்ச் 25 சந்திப்புக் குறித்து, த.தே.கூட்டமைப்புப் பிரதிநிதிகள் அமைச்சர் ஜெய்சங்கருக்குப் பேச்சுவார்த்தை குறித்த இறுதி நிலைமைகள் பற்றி விளக்கினர். அரசியல் கைதிகளின் விடுதலை, காணிப் பாவனை, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துதல், புலம்பெயர்ந்தோர் முதலீடு உள்ளிட்ட விடயங்க…
-
- 2 replies
- 326 views
-
-
அமெரிக்காவிடமும் இலங்கை கடன் வாங்குகிறது! March 29, 2022 புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களுக்கு சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனம் (USAID) மூலம், இலங்கைக்கு கடன் வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார். ஜூலி சங்குக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (28.03.22) முற்பகல் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் திருமதி விக்டோரியா நூலண்ட் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்பை தூதுவர் பாராட்ட…
-
- 0 replies
- 131 views
-
-
இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் நிலவும் உள்ளக முரண்பாடு ஒன்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்பாக வெளிப்பட்ட சுவாரஸ்ய சம்பவம் நடந்தது. ஜனாதிபதி கோட்டாபயவிற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான தமிழ் அரசு கட்சி, புளொட் என்பனவற்றிற்கும் இடையில் நேற்று நடந்த கலந்துரையாடலில் இந்த சம்பவம் நடந்தது. இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் நடக்கும் கலந்துரையாடல்கள் பலவற்றில், எம்.ஏ.சுமந்திரனின் சில நடவடிக்கைகளை, அணுகுமுறைகளை சுட்டிக்காட்டி, கண்டித்து வருபவர் சி.சிறிதரன். குறிப்பாக, தன்னை மையப்படுத்திய சுமந்திரனின் நடவடிக்கைகள், தானே அனைத்தையும் செய்வதை போன்ற தோற்றத்தை உருவாக்கும் நடவடிக்கைகளை கட்சியின் உள்ளக கூட்டங்களில் சிறிதரன் சுட்டிக்காட்டி வந்…
-
- 0 replies
- 283 views
-
-
Published by T. Saranya on 2022-03-28 15:55:25 இலங்கை - இந்திய நட்புறவின் சின்னமாக இந்திய அரசின் அரசின் 1.6 பில்லியன் நிதியுதவில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் இன்று எளிமையான முறையில் திறந்து வைக்கப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரால் நண்பகல் 01.00 மணியளவில் காணொளி முறையில் எளிமையான முறையில் திறந்து வைக்கப்பட்டது. கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா, கல்வியமைச்சர் டினேஸ் குணவர்த…
-
- 4 replies
- 566 views
-
-
எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு விஜயம் செய்த ஜெய்சங்கர் கொழும்பின் புறநகரிலுள்ள லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு விஜயம் செய்ததாக இலங்கை வந்துள்ள இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி. எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். முகாமைத்துவப்பணிப்பாளர் மனோஜ் குப்தா எரிபொருள் விநியோக நிலைமை குறித்து தன்னிடம் தெரிவித்ததாவும் அவர் தெரிவித்துள்ளார். 500 மில்லியன் USD இந்திய கடனுதவி இலங்கை மக்களின் அன்றாட வாழ்வுக்கு உதவுவதாகவும் அவர் குறித்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு விஜயம் செய்த ஜெய்சங்கர் (adaderana.lk)
-
- 8 replies
- 583 views
-
-
இலங்கை பொருளாதார நெருக்கடி: "ஜனாதிபதி பதவி விலகி, மேலை நாடுகளில் செல்வாக்கு உள்ள ஒருவர் கைக்கு நாடு செல்லவேண்டும்" ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 6 மணி நேரங்களுக்கு முன்னர் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகி, மேலை நாடுகளின் செல்வாக்கு பெற்ற ஒருவர் கைக்கு இலங்கை செல்லவேண்டும் என்று கூறியுள்ளார் பொருளாதார வல்லுநர் விஜேசந்திரன். இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவுகளை சந்தித்துள்ள இந்த தருணத்தில், நாட்டு மக்கள் நாளாந்தம் பல்வேறு விதமான பிரச்னைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இவ்வாறான நிலையில், நாடு எத…
-
- 16 replies
- 1.1k views
- 1 follower
-
-
கொழும்பு - மொஸ்கோ இடையிலான விமான சேவைகள் இடைநிறுத்தம் கொழும்புக்கும் மொஸ்கோவிற்கும் இடையிலான விமான சேவைகள் இன்று (28) முதல் அமுலுக்கு வரும் வகையில் மறுஅறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது. உக்ரைன் - ரஷ்யா இடையேயான முதல் கட்ட பேச்சுவார்த்தை பெலாரஸ் நாட்டின் எல்லை நகரமான கோமலில் கடந்த மாதம் 28 ஆம் திகதி நடைபெற்றது. சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற அந்த முதற்கட்ட பேச்சுவார்த்தையில், எந்த உறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை. அதன் தொடர்ச்சியாக, கடந்த 3 ஆம் திகதி இரு நாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன்பிறகு மூன்றாம், நான்காம் கட்ட பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், போரை…
-
- 3 replies
- 299 views
-
-
எரிபொருள் வரிசையில் காத்திருந்த... மற்றுமொருவர், உயிரிழப்பு! அத்துருகிரிய பகுதியில் எரிபொருள் கொள்வனவு செய்ய வருகைத் தந்த நபரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் கடந்த 26ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 85 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. வேனொன்றில் வருகைத் தந்து, எரிபொருளை நிரப்புவதற்காக வரிசையில் நின்றுக் கொண்டிருந்த தருணத்தில் ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக, அவர் அத்துருகிரிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம…
-
- 1 reply
- 364 views
-
-
பசிலுக்கு எதிராக களமிறங்கும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் ! Digital News Team 2022-03-27T14:33:02 நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு வேறு ஒரு அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டும் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 31ஆம் திகதி அபயாராமயவில் மஹா சங்கத்தினர் இணைந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மரணமடையாதவர்களின் வீட்டிலிருந்து கடுகு விதையை கொண்டு வருமாறு கோதமியிடம் சிசா சொன்னதாக வரலாறு சொல்கிறது. அதேபோன்று தற்போது வருத்தமடையாத வீட்டில் இருந்து ஒரு கோப்பை நீர் கொண்டு வருமாறு நானும் இந்த அரசாங…
-
- 0 replies
- 181 views
-
-
சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடுவது... தற்காலிகமாக நிறுத்தப்பட்டது! நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1273678
-
- 0 replies
- 200 views
-
-
பஷில் ராஜபக்ஷவினை, சந்தித்து பேசினார்... இந்திய வெளிவிவகார அமைச்சர்! இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கருக்கும், நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்டிபெற்றுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு இலங்கைக்கு வருகை தந்துள்ளார். அவர், கொழும்பில் இடம்பெறவுள்ள பிம்ஸ்டெக் அமைச்சர்கள் மட்ட மாநாட்டில் பங்கேற்கவுள்ளார். இந்தநிலையிலேயே இன்று காலை அவர் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவினை சந்தித்து பேசியுள்ளார். இதன்போது இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது.…
-
- 0 replies
- 201 views
-
-
புத்தாண்டுக்கு நிவாரணம் – இடைக்கால வரவு செலவுத் திட்டத்தினை, முன்வைக்க தயாராகின்றது அரசாங்கம்? தமிழ் – சிங்களப் புத்தாண்டுக்காக பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் விதத்தில் புதிய வரவுசெலவுத் திட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரச செலவினத்தை அதிகபட்சமாக குறைத்து பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக கூறப்படுகின்றது. அரச செலவினத்தில் 5 ஆயிரத்து 300 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதியின் செலவினங்களும் இதில் அடங்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை சர்வ கட்சி மாநாட்டில் புதிய வரவு செலவுத் திட்டம் கு…
-
- 0 replies
- 163 views
-
-
வயிறு, வருமானம்... குறித்து மட்டுமே, நாட்டு மக்கள் சிந்திக்கக் கூடாது என்கிறார் மஹிந்தானந்த! வயிறு குறித்தும் வருமானம் பற்றியுமே நாட்டு மக்கள் சிந்திக்கின்றனர். எனவே, தற்போதைய நிலைமையையும் நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “நெருக்கடிக்கு மத்தியிலும் நாட்டு மக்களுக்கு அரசு தடுப்பூசிகளை வழங்கியது. அதனால்தான் இன்று எவ்வித அச்சுறுத்தலும் இன்றி போராட்டங்களை நடத்தமுடிகின்றது. இதற்கு காரணம் அரசுதான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். நாட்டில் தற்போது சிக்கல் ஏற்பட்டு…
-
- 0 replies
- 181 views
-