Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கு இணக்கம்! கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள, அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை நாளை மறுதினம் (திங்கட்கிழமை) விடுவிக்க முடியும் என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அரிசி, சீனி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய ஆயிரத்து 500 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக அந்த சங்கத்திள் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற நிதியமைச்சருடனான கலந்துரையாடலின்போதே, குறித்த கொள்கலன்களை விடுவிப்பதற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னர் நிதியமைச்சின் தலையீட்டில் துறைமுகத்தில் தேங்கியிருந்த 500 கொள்கலன்கள்…

  2. இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு... வருகையின் பின்னரான, விசா அனுமதியை வழங்க நடவடிக்கை! இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு, ‘வருகையின் பின்னரான விசா’ (On arrival visa) அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொரோனா தொற்றுப் பரவல் குறைவடைந்து வருகின்ற நிலையில், இலங்கையின் சுற்றுலாத் துறையை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையின் மிகப்பெரிய சுற்றுலா சந்தையாக இந்தியா உள்ளதென்றும் கடந்த ஆண்டு இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டவர்களுள் 42 சதவீதமானோர் இந்திய சுற்றுலாப் பயணிளே என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்திய சுற்றுலாப் பயணிகள், இலங்கைக்கு வந்ததன் பின்னர், தங்களது விசா அனுமதியைப் பெற்றுக் கொ…

  3. சஹ்ரான் ஹாசீமின் படங்களை வைத்திருந்தவர் உட்பட 9 பேர் கைது – மட்டக்களப்பில் சம்பவம்! வாழைச்சேனையில் வேன் ஒன்றில் பிரயாணித்த ஒருவர் கையடக்க தொலைபேசியில் சஹ்ரான் ஹாசீமின் படங்களை வைத்திருந்ததை அடுத்து 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு கொழும்பு வீதியில் உள்ள ரிதிதென்னை பொலிஸ் சோதனைச் சாவடியில் இன்று (சனிக்கிழமை) காலை அக்குரனையில் இருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த வாகனம் ஒன்றை நிறுத்தி இராணுவத்தினர் சோதனையிட்டனர். இதன்போதே, முகமட்பாரூக் முகமட் ஆசாத் என்பவர் தனது கையடக்க தொலைபேசியில் தடுப்பூசி ஏற்றியதற்கான அட்டையின் படத்தை காட்ட முற்பட்டபோது, ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவாதியான சஹ்ரான் ஹாசீமின் படங்களை வைத்திருந்தமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து, குறித்த வ…

  4. குமாரபுரம் படுகொலையை நினைவேந்த முயன்ற மக்களை அச்சுறுத்திய புலனாய்வாளர்கள்! – த.தே.ம.மு. கண்டனம் மூதூர் குமாரபுரம் கிராமத்தில் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட அழித்தொழிப்பு நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட தமிழ்ப் பொதுமக்களின் நினைவேந்தலை உறவுகள் முன்னெடுக்க முனைந்தபோது புலனாய்வாளர்கள் கடும் அச்சுறுத்தலை மேற்கொண்டதனைத் தாம் கடுமையாகக் கண்டிப்பதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. மக்கள் முன்னணியின் பிரதிப் பொதுச் செயலாளர் இ.ஸ்ரீஞானேஸ்வரன் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 11.02.1996 அன்று சுற்றிவளைக்கப்பட்டு குமாரபுரம் மக்கள் படையினரின் தாக்குதலுக்கு உள்ளாகிய போது கர்ப்பிணிப் பெண்கள் உட்ப…

  5. “கொலைக்குற்றவாளியே நாட்டின் ஜனாதிபதி”-வவுனியாவில் போராட்டம்! AdminFebruary 11, 2022 கோத்தபாயவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை சிறிலங்கா காவல்துறையினர் தடுத்து நிறுத்தியமையால் வவுனியா – மன்னார் பிரதான வீதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்ததுடன், காவல்துறையினருக்கும் மக்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்ப்பட்டது. வவுனியா பல்கலைக்கழகத்தின் ஆரம்ப விழா நிகழ்வு பம்பைமடு பகுதியில் அமைந்துள்ள பல்கலைக்கழக வளாகத்தில் கோத்தாவின் தலைமையில் இன்று காலை இடம்பெற்றது. இதனையடுத்து அவரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலைக்கழகத்திற்கு முன்பாக காணாமல் போனவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் …

  6. by கதிர் கொக்கிளாய் தொடக்கம் நாயாறு வரையான தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களை கைய கப்படுத்தும் செயற்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு கொக்கிளாய் பாட சாலை முன்பாகப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்புப் புள்ளியான கொக்கிளாய் தொடக்கம் நாயாறு வரையான தமிழ் மக்களுக்குச் சொந்தமான பாரம்பரிய நிலங்களை கனிய மணல் அகழ்வு எனும் போர்வையில் கையகப்படுத்தும் நோக்கோடு நில அளவீடு மேற்கொள்ளப்பட்டு சுவீகரிப்பதற்க்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக அரசால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே சிங்களக் குடியேற்றங்களாலும், இராணுவ ஆக்கிரமிப்பாலும் மகாவலி எல் வலயத்தாலும், வன ஜீவராசிகள் திணைக்களம், வளவளத் திணைக்களம் …

  7. சர்வதேச கடன்களை மீள் கட்டமைப்பதற்கு நாடுகளுடன் பேச்சு (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) நாட்டின் கடன் நெருக்கடிகளை சமாளிக்கவும், பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை கையாளவும் இலங்கை பெற்றுக்கொண்டுள்ள சர்வதேச கடன்களில் மீள் கட்டமைப்பை செய்வது குறித்து சர்வதேச நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மற்றும் பாராளுமன்ற நிதிக்குழுக்கள் பொது இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர். விரைவில் அரசாங்கத்திற்கு எழுத்துமூல அறிக்கை ஒன்றினை வழங்கவும் தீர்மானித்துள்ளனர். நாடு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி மற்றும் கடன்களை மீள செலுத்துவதில் உள்ள நெருக்கடிகள் குறித்து ஆராயும் விதமாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்ப…

  8. விகிதாசார மற்றும் தொகுதிவாரி முறையை உள்ளடக்கிய கலப்பு முறையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த ஆராய்வு (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) விகிதாசார மற்றும் தொகுதிவாரி முறையை உள்ளடக்கிய கலப்பு முறையின் கீழ் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதற்கு தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் சபை முதல்வர், கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த…

  9. தங்கம் வென்ற முல்லை யுவதியை கௌரவித்த கோட்டாபய! பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இலங்கைக்குப் பெருமையைத் தேடித் தந்த முல்லைத்தீவு மாவட்ட வீராங்கனை கணேஷ் இந்துகாதேவியை அரச தலைவர் கோட்டபாய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) கௌரவித்துள்ளார். வவுனியா பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் வைத்து யுவதி அரச தலைவரால் கௌரவிக்கப்பட்டுள்ளதோடு நினைவு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கணேஷ் இந்திராதேவி கடந்த மாதம் 18ஆம் திகதி பாகிஸ்தான் லாகூர் நகரில் இடம்பெற்ற இரண்டாவது சிறிலங்கா பாகிஸ்தான் சவேட் குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மாத்திரம் இல்லாமல் நாட்டிற்கும் பெ…

  10. தேசிய பல்கலைக்கழகமாக வவுனியா வளாகம் திறந்து வைப்பு! யாழ் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்த வவுனியா வளாகம், “வவுனியா பல்கலைக்கழகம்” என்ற பெயரில் தேசிய பல்கலைக்கழகமாக அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (11) இடம்பெற்றது. இதன்படி, இந்நாட்டின் 17ஆவது அரச பல்கலைக்கழகமாக “வவுனியா பல்கலைக்கழகம்” வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த பிரயோக விஞ்ஞான பீடம், வர்த்தக பீடம் மற்றும் ஆங்கில மொழிப் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய வவுனியா வளாகம், 1997ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. இந்த வவுனியா வளாகத்தை …

  11. வைத்திய சேவைகள் மற்றும் மின் விநியோகம் என்பன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்! சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய இந்த அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நேற்று வெளியிடப்பட்டது. இதற்கமைய மின்சார விநியோகம், வைத்தியசாலை, முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள், நோயாளர் பராமரிப்பு சேவைகள் மற்றும் சிகிச்சை ஆகியவை தொடர்பிலான அனைத்து சேவைகள் மற்றும் தொழில்கள் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த அதிவிசேட வர்த்தமானி…… https://drive.google.com/file/d/13ip1bxfwg-HvLme61W8RWfEgRf0ygGYR/view https:/…

  12. பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைப்பு! சட்டமூலம் குறித்து சுமந்திரன் மற்றும் ஹக்கீம் கேள்வி..! 1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸினால் நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) முன்வைக்கப்பட்டுள்ளது. அத்தோடு, சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை இடம்பெறும் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இதன்போது, ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ள குறைபாடுகளில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான உறுதிமொழிகள் சட்டமூலத்தில் பரிசீலிக்கப்படுமா என…

    • 3 replies
    • 272 views
  13. ஒரு முட்டையின் விலை 50 ரூபாய்? ஒரு முட்டையின் விலை 50 ரூபாயாக அதிகரிக்கும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. கால்நடை தீவன விலை உயர்வால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் எச்.எம்.பி. ஆர். அழகக்கோன் தெரிவித்துள்ளார். சோயா, மக்காச்சோளம் ஆகியவற்றின் விலை உயர்ந்து, கால்நடை தீவன மூட்டை 3 ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரமாக உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் தினசரி நுகர்வு செய்யப்படும் 80 இலட்சம் முட்டைகளில் கிட்டத்தட்ட 65 இலட்சம் வடமேல் மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படுவதுடன், அந்த மாகாணத்தில் சுமார் 4 இலட்சம் வ…

    • 2 replies
    • 458 views
  14. ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக இலங்கை கடற்பரப்பிலுள்ள எரிபொருள் அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பிலான ஆய்வுகளுக்கான கலந்துரையாடல்களை நடத்த இந்தியா முன்வந்துள்ளதாக, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, தனியார் துறையினருடன் ஒன்றிணைந்து முன்னெடுக்கக்கூடிய திட்டத்தை, அமெரிக்காவில் மார்ச் மாதம் நடைபெறும் எரிபொருள் உச்சி மாநாட்டில் தான் முன்வைத்து, தனியார் துறையையும் இதனுடன் இணைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறுகின்றார்.இதன்படி, 2022ம் ஆண்டு மார்ச் மாதம் மன்னார் வளைகுடாவிலுள்ள எம் - 02 என்ற பிரிவை ஏலத்தில் விடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.இந்த ஏலம் நிறைவடைந்து, நிறுவனமொன்று தெரிவு செய்யப்பட்டதன் …

    • 6 replies
    • 612 views
  15. ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு தமிழ் மொழி மூல கல்வெட்டு இடமாற்றம் February 10, 2022 ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு தமிழ் மொழி மூல கல்வெட்டு இடித்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது, வவுனியா பல்கலைக்கழகத்திற்கு நாளைய தினம் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பயணம் மேற்கொண்டு அங்குராப்பணம் செய்து வைக்கவுள்ளார். அதன் போது பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள சுற்றுவட்ட பாதையின் நடுவில் முக்கோண வடிவில் தூண் ஒன்று கட்டப்பட்டு அதன் முகப்பு பக்கத்தில் தமிழ் மொழியும் மற்றைய பக்கங்களில் ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளிலான நினைவு கல் வெட்டு பாதிக்கப்பட்டு இருந்துள்ளது. நாளைய தினம் ஜனாதிபதி குறித்த கல் வெட்டினை திரைநீக்கம் செய்…

  16. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) யுத்த காலகட்டத்தில் பலர் காணாமல் போனதற்கு ஈ.பி.டி.பி.யும் காரணமாகும், இது குறித்த விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்பட்டால் அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தூக்கில் தொங்க வேண்டி வரும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பி. யான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார். இதன்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஈ.பி.டி.பி. எம்.பி. குல சிங்கம் திலீபன் , முடிந்தால் டக்ளஸ் தேவானந்தாவின் பெயரைக் கூறி வழக்குத் தொடர்ந்து அவருக்கு தண்டனை பெற்றுக்கொடுங்கள் என சபையில் சவால் விடுத்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை 10 ஆம் திகதி இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய ஈ…

    • 2 replies
    • 283 views
  17. கறுப்புச்சந்தையில் டொலரை பெற்று ஆயதக்கொள்வனவு – நிதியமைச்சரின் கூற்று குறித்து வெளிநாட்டு தூதரகங்கள் அதிருப்தி ஜெனீவா அமர்வில் ஆராயப்படாலம் – சர்வதேச நிதியமைப்புகளின் உதவியை பெறும் இலங்கையின் முயற்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் கறுப்புசந்தையில் பெற்ற டொலரை பயன்படுத்தி வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளமை குறித்து இலங்கையில் உள்ள பல வெளிநாட்டு தூதரகங்களும் சர்வதேச அமைப்புகளும் கரிசனை வெளியிட்டுள்ளன இலங்கை அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தால் அது சர்வதேச மோதல்கள் குறித்த வழக்காறுகளை மீறு…

    • 11 replies
    • 712 views
  18. பிரதமரின் தலைமையில் “நாவலர் ஆண்டு” பிரகடனம் December 17, 2021 சைவத் தமிழ் உலகிற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் இருநூறாவது ஜனன ஆண்டான 2022ஆம் ஆண்டை “நாவலர் ஆண்டு” என இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் பிரகடனம் செய்வதற்கான தீர்மானத்தை அங்கீகரிக்கும் நிகழ்வு பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் தலைமையில் இன்று (17) அலரி மாளிகையில் நடைபெற்றது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரகடனத்திற்கான அங்கீகாரத்தையும் முழுமையான ஒத்துழைப்பையும் வழங்கும் வகையில் பிரதமரினால் அங்கீகாரக் கடிதம் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு.அ. உமாமகேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டது. …

    • 191 replies
    • 13.4k views
  19. (எம்.மனோசித்ரா) இலங்கை அரசாங்கம் இதுவரையில் எவ்வித நிதி உதவியையும் கோரவில்லை என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இலங்கையிலிருந்து நிதி உதவிக்கான எவ்வித கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை. எனினும் தாம் இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு தயாராகவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடற் பிரிவின் பணிப்பாளர் ஜெரி ரைஸ் தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்திகளை தாம் தொடர்ந்தும் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இலங்கையிலுள்ள சர்வதேச நாணய நிதிய குழுவின் நான்காவது ஆலோசனை பிரிவு மாத்திரமே தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் ஜெரி ரைஸ் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த ஆலோசனைகள் தொடர்பில்…

  20. இலங்கை எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடிக்கு மத்தியில் கடன் மறுசீரமைப்பு அல்லது சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச முதலீட்டாளர்களை மேற்கோள்காட்டி Financial Times வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 2019ம் பாரிய வரிக் குறைப்பு செய்யப்பட்டதுடன், கோவிட் தொற்று காரணமாக சுற்றுலா துறை பெரும் பாதிப்பை எதிர்நோக்கியது. வட்டி மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக இந்த ஆண்டு சுமார் 7 பில்லியன் அமெரிக்க டொலர் செலுத்த வேண்டும். ஆனால் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 3 பில்லியனுக்கு குறைவான அமெரிக்க டொலர்களே இருக்கிறது. இந்நிலையில், இலங்கை பெரும்பாலும் வங்குரோத்து நிலையை அடைய…

  21. தமிழ் மக்களுடன் பேசி பிரச்சினைகளை தீர்க்க முடியாதவர்களாகவே முஸ்லிம் தலைவர்கள் இருக்கிறார்கள் – மௌலவி முபாரக் அப்துல் மஜீத்! சாணக்கியன், சுமந்திரன் போன்றவர்கள் தங்களுடைய இனத்தவர்கள் செய்யும் காரியங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மௌனம் காப்பது சிறந்ததல்ல என ஐக்கிய காங்கிரசின் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். கல்முனையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “முஸ்லிங்களுக்கு ஆதரவானவர்கள் போன்று காட்டிக்கொள்ளும் சாணக்கியன், சுமந்திரன் போன்றவர்கள் தங்களுடைய இனத்தவர்கள் செய்யும் காரியங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மௌனம் காப்பது சி…

    • 10 replies
    • 806 views
  22. தமிழ் இனத்துக்காக போராடியவர்களை சிறையில் நிம்மதியாகவாவது உறங்க விடுங்கள் – சாணக்கியன் இனத்துக்காக போராடிய தமிழ் அரசியல் கைதிகளை சிறையில் நிம்மதியாகவாவது உறங்க விடுங்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கேட்டுக் கொண்டார். நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பாக மேலும் உரையாற்ற அவர், “இன்று கொலை செய்து, கற்பழித்து, களவெடுத்த குற்றத்தில் சிறைத்தண்டனைப் பெறும் கைதிகளுக்காக சபையில், இன்று பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால், தங்களுடைய இனத்தின் விடுதலைக்காக போராடி, தன்னுடைய இனத்தின் அரசியல் உரிமைக்காகப் போராடி, 20 – 30 வருடங்களாக சிறை…

    • 1 reply
    • 223 views
  23. உலக அமைதி மாநாட்டில் மைத்திரிபால சிறப்புரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தென்கொரியா சென்றுள்ளார். உலக அமைதி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் சியோல் சென்றுள்ளார். மாநாட்டில் அவர் சிறப்புரை ஆற்ற உள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக அமைதி மாநாட்டில் மைத்திரிபால சிறப்புரை (adaderana.lk)

    • 5 replies
    • 361 views
  24. Published on 2022-02-10 21:20:13 (இராஜதுரை ஹஷான்) கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 2 ஆயிரம் கொள்கைகளை விடுப்பதற்கு 30 மில்லியன் தொடக்கம் 35 மில்லியன் வரையில் அமெரிக்க டொலர்களை மத்திய வங்கி வழங்க வேண்டும். எதிர்வரும் வாரமளவில் அக்கொள்கலன்களை விடுவிக்க முடியும் என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, டொலர் நெருக்கடி காரணமாக கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் தொடர்பிலான தகவல்கள் உள்ளடங்கிய அறிக்கையை வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் சமர்ப்பித்துள்ளோம். க…

  25. Published by J Anojan on 2022-02-10 13:13:11 (நா.தனுஜா) பயங்கரவாத தடை சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, அஹ்னாப் ஜஸீம் மற்றும் ஏனைய சிலர் அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டமையை அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன வரவேற்றுள்ளன. அதேவேளை, பயங்கரவாத தடை சட்டத்தின்கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவர்கள் குறித்து தொடர்ந்தும் கரிசனையை வெளிப்படுத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளன. உரியவாறு வரைவிலக்கணப்படுத்தப்படாத குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின்பேரில் நபர்களைக் கைதுசெய்வதற்கும் அவர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தாமல் 18 மாதங்கள்வரை தன்னிச்சையாகத் த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.