Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை அங்கீகரிக்கும் செயற்பாட்டில் பின்னடைவு – மனித உரிமைகள் அலுவலக பேச்சளார் சுட்டிக்காட்டு பொறுப்புக்கூறலை உறுதிசெய்வது மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை அங்கீகரிக்கும் செயற்பாடுகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தின் ஊடகப்பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக பெண்களால் பிரதிநிதித்துவப்படுத்தும் காணாமல்போனோரின் குடும்பங்கள் முகங்கொடுத்திருக்கும் பாதுகாப்பற்ற நிலை குறித்து தாம் அறிந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கை குறித்து வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே ஊடகப்பேச்சாளர் ரவினா ஷம்தாசனி இதனை தெரிவித்துள்ளார். அத்த…

    • 2 replies
    • 240 views
  2. (எம்.மனோசித்ரா) நாட்டில் அந்நிய செலாவணி இருப்பு 500 மில்லியன் டொலராகக் குறைவடைந்துள்ளது. ஆனால் இவ்வாண்டில் மேலும் ஒரு பில்லியன் டொலர் கடனை மீள செலுத்த வேண்டியுள்ளது. பொருளாதார நெருக்கடியை எவ்வாறு தீர்ப்பது என்ற திட்டமிடலற்ற இந்த அரசாங்கம் இலங்கையை சோமாலியாவாக மாற்றிய பின்னரே ஆட்சியை விட்டுச் செல்லும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார். ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று இளைஞர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் எதுவுமே நடக்காததைப் போன்று செயற்படுகின்றமையானது, எதிகாலத்தில் தோற்…

    • 6 replies
    • 429 views
  3. (எம்.மனோசித்ரா) மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடரின் உயர்மட்ட அமர்வின் பக்க அம்சமாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் இலங்கை பிரதிநிதிகள் ஐக்கிய இராச்சிய பொதுநலவாய செயலகம், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் உலக புலமை சொத்து அமைப்பு ஆகியவற்றுடன் இருதரப்பு சந்திப்புக்களில் ஈடுபட்டுள்ளனர். ஐக்கிய இராச்சியத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியா, ஐ.நா. மற்றும் பொதுநலவாய இராஜாங்க அமைச்சர் தாரிக் அஹம்மட் உடனான சந்திப்பின் போது , 'இரு தரப்பு ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்கத்தை முன்னேற்றுவதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் , ஒற்றுமை , நல்லிணக்கத்தை வளர்ப்பதில் அரசாங்கத்தின் விரிவான முயற்சிகள் குறித்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கல…

  4. விடுதலைப் புலிகளினால் ஏற்பட்ட தாக்கங்களை காட்டிலும், தற்போது பாரதூரமான சவால்களை எதிர்கொண்டுள்ளோம் – உதய கம்மன்பில விடுதலைப் புலிகளினால் ஏற்பட்ட தாக்கங்களை காட்டிலும் தற்போது பாரதூரமான சவால்களை தாம் எதிர்கொண்டுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் இலங்கையில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் அச்சம் கொண்டுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். இதேவேளை எதிர்வரும் 4 நாட்களுக்கு தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். மேலும் இறக்குமதி செய்யும் போது அரசாங்கம் மருந்து, எரிபொருள், தொழில்துறை பொருட்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். கடந்த வரு…

  5. Published on 2022-03-01 12:22:13 (எம்.ஆர்.எம்.வசீம்) நாட்டில் தற்போது முன்னெடுத்துவரும் 5 மணி நேர மின் துண்டிப்பு 24 மணி நேரமாக மாறும் காலம் நீண்ட தூரத்தில் இல்லை. ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற நடவடிக்கையே இதற்கு காரணமாகும் என இலங்கை மின்சாரசபை ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பின் அமைப்பாளர் ரன்ஜன் ஜயலால் தெரிவித்தார். நாட்டில் தற்போது முன்னெடுத்துவரும் மின் துண்டிப்பு தொடர்பாக நேற்று திங்கட்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் தற்போது கைவசம் இருக்கும் எரிபொருள் தொடர்பாகவும் அதனால் மின்சாரசபை முன்னெடுத்துவரும் மின் துண்டிப்பு த…

  6. சாப்பிட இல்லாத மக்கள் என, யாரும் இந்த நாட்டில் இல்லை – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சாப்பிட இல்லாத மக்கள் என யாரும் இந்த நாட்டில் இல்லை என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பு – ஹொரண வீதியின் 120 இலக்க பேருந்து மார்க்கத்தை விரிவுபடுத்தும் போது வீடுகளை இழந்தவர்களுக்கு, புதிய வீடுகளுக்கான திறப்புகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஒன்றரை வருடம் வீடுகளில் அடைப்பட்டிருந்ததை மக்கள் அறிவார்கள். அந்தக் காலத்தில் செய்ய முடியாது போனதை தற்போது செய்ய முயற்சிக்கிறார்கள். நாட்டின் பொருளாதாரத்தையும் தமது பொருளாதாரத்தையும் மக்கள…

    • 6 replies
    • 368 views
  7. Published by T Yuwaraj on 2022-02-28 19:22:31 இராணுவத்தினரால் வெளிநாட்டில் வசிக்கும் சிரேஷ்ட அதிகாரியொருவரின் அனுசரணையுடன் மணவாளப்பட்டமுறிப்பு அம்பகாமம் பகுதியில் வசிக்கும் பாடசாலை மாணவியொருவருக்கு புதிய வீடொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது. பாடசாலை அதிபரின் ஆலோசனைப்படி அனுசரணையாளரின் நிதியுதவியுடன் கறிப்பட்டமுறிப்பு தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவியின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஆர்.ரத்னசிங்கத்தின் அனுசரணை மூலம், 'இதயம் கொண்ட இராணுவம்' எனும் திட்டத்தின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்யத் தயாராக இருக்கும் படையினர் இந்த சமூகம் தொடர்பான நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத…

    • 10 replies
    • 572 views
  8. கடற்படைத் தளத்திற்கு காணி வழங்க சிலா் இணக்கம் March 1, 2022 முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் கடற்படைத் தளத்திற்கான காணிசுவீகரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தெரிவித்துள்ள நிலையில் அதற்கான காணியினை வழங்க சிலர் முன்வந்துள்ள போதிலும் பலர் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது. வட்டுவாகல் கடற்படைத்தளத்திற்காக 671 ஏக்கர் காணியினை கையகப்படுத்த கோரப்பட்டுள்ள நிலையில் அதில் 292 ஏக்கர் அரச காணிகளாக காணப்பட்டுள்ள போதும் ஏனைய 379 ஏக்கர் காணி 35 தனிநபா்களுக்கு சொந்தமாக காணப்படுகின்றது. இந்நிலையில் அவா்களில் 12 போ் காணி சுவீக…

    • 3 replies
    • 333 views
  9. ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீடிப்பு ஒரே நாடு - ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நேற்று (28) வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி நிறுவப்பட்ட ஒரே நாடு - ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைய இருந்தது. நாட்டின் சகல மாகாணங்களையும் உள்ளடக்கிய பொது மக்கள் மற்றும் நிபுணர்கள் குழுவின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதாலேயே ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீட…

    • 1 reply
    • 199 views
  10. உக்ரைன் நெருக்கடியே தனது தோல்விகளிற்கு காரணம் என அரசாங்கம் அடுத்த மூன்று வருடங்களிற்கு தெரிவிக்கப்போகி;ன்றது – எதிர்கட்சி உக்ரைன் நெருக்கடியே தனது தோல்விகளிற்கு காரணம் என அரசாங்கம் அடுத்த மூன்று வருடங்களிற்கு தெரிவிக்கும் என எதிர்கட்சி தெரிவித்துள்ளது. நாட்டின் தற்போதைய நிலைக்கு பொறுப்பேற்க இந்த அரசாங்கம் தயாரில்லை என எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கயந்தகருணாதிலக தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக அரசாங்கம் கொரோனா வைரசினை காரணம் காட்டியது,அடுத்த மூன்று வருடங்களில் இடம்பெறப்போகி;ன்ற தவறுகள் மற்றும் பிழைகளிற்கு அரசாங்கம் உக்ரைன் நெருக்கடியை குறைகூறும் என அவர் தெரிவித்துள்ளார். …

    • 1 reply
    • 263 views
  11. (இராஜதுரை ஹஷான்) ரஷ்ய சந்தையினை இலக்காக கொண்ட இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு தற்போதைய சூழ்நிலையில் எவ்வித பாதிப்பும் ஏற்பட கூடாது. இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக மற்றும் இராஜதந்திர உறவை பேணுவது அவசியமாகும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன ரஷ்யாவின் பிரதியமைச்சர் அலெக்ஸி வி.குஸ்தேவிடம் வலியுறுத்தினார். வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கும், ரஷ்யாவின் கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் அலெக்ஸி வி குஸ்தேவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் கொழும்பில் உள்ள வர்த்தகத்துறை அமைச்சில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன இலங்கையின் தேசிய உற்பத்திகளுக்கு ரஷ்யாவின் சந்தையில் முன்னுரிமை வழங்குமாற…

    • 5 replies
    • 427 views
  12. களனிதிஸ்ஸ மின் நிலையம்... செயலிழந்து ஒரு மாதம் பூர்த்தி! களனிதிஸ்ஸ மின் நிலையம் செயலிழந்து ஒரு மாதம் பூர்த்தியடைந்துள்ளது. மின்சார சபையின் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொது முகாமையாளருமான அன்ட்ரூ நவமுனி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். செயலிழந்த சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்தில் தற்போது மின்னுற்பத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கபடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1269864

  13. வடக்கு, கிழக்கில் உள்ள காணிகள் அங்குள்ளவர்களுக்கு மாத்திரமே சொந்தமானது – சாணக்கியன்! வடக்கு, கிழக்கில் உள்ள காணிகள் அங்குள்ளவர்களுக்கு மாத்திரமே சொந்தமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். களுவாஞ்சிக்குடியில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1269871

  14. ஐ.நா. ஆணையாளருக்கு 5 தமிழ்க் கட்சிகள் கடிதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 49ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சி தவிர்ந்த 5 தமிழ்க் கட்சிகள், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையாருக்குக் கூட்டுக் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளன. 2022 பெப்ரவரி 25ஆம் திகதியிடப்பட்டு எழுதப்பட்டுள்ள மேற்படிக் கடிதத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் த.சித்தார்த்தன், ஈழமக்கள் புரட்சிகர…

  15. மின்சார சபைக்கான... எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டது ! எரிசக்தி அமைச்சினால் இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்படும் எரிபொருள் விநியோகம் சில மணிநேரங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இலங்கை மின்சார சபை பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ட்ரூ நவமுனி தெரிவித்துள்ளார். ஒருவரத்திற்கான எரிபொருளை எரிசக்தி அமைச்சு முன்னர் வழங்கிவந்த நிலையில் தற்போது நாளாந்த அடிப்படையிலேயே கிடைப்பதாக அவர் கூறினார். இவ்வாறான நிலையில் எரிபொருள் விநியோகம் தற்போது சில மணிநேரங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது. http…

  16. இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் திருக்கேதீஸ்வரத்தில் சிவராத்திரி திருவிழா March 1, 2022 நாயன் மார்களால் பாடல் பெற்ற திருத்தலமான இலங்கையில் உள்ள பஞ்ச ஈஸ்வரங்களின் முதன்மையானதாக கருதப்படும் மன்னார் திருக்கேதீஸ்வர திருத்தலத்தின் மஹா சிவராத்திரி திருவிழா கொரோனா பெருந்தொற்று காரணமாக இறுக்கமான சுகாதார நடை முறைகளுடன் இன்று (1) காலை ஏழு மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. 3 தடுப்பூசிகள் போட்டுக் கொண்டவர்கள் மாத்திரமே பாலாவியில் தீர்த்தம் எடுத்து வருவதற்கு அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ராணுவம் , காவல்துறை, சுகாதாரத் துறையினர் இணைந்து இந்த பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளார்கள். மன்னார் பிரதேச செயலாளரின் ஒழுங்கு படுத்துத…

  17. சட்டவிரோத வெளிநாட்டு நாணயமாற்று நடவடிக்கை – பொதுமக்களின் உதவியை கோரும் மத்தியவங்கி ! சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயங்களை மாற்றும் நிலையங்கள் மற்றும் நபர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு மத்திய வங்கி பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் வெளிநாட்டு நாணயங்களை கொள்வனவு செய்தல், விற்பனை செய்தல் மற்றும் மாற்றுதல் என்பன அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் மாத்திரமே மேற்கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளது. ஏதாவது ஒரு நிறுவனம் அல்லது நபர்கள் மத்திய வங்கியின் அனுமதியின்றி வெளிநாட்டு நாணயங்களை மாற்றும் நடவடிக்கையில் ஈடுபடுவார்களாயின் அது சட்டவிரோத செயற்பாடாகும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அவ்வாறான நிலையங்கள் அல்லது நபர்கள் தொடர்பாக வெளிநாட்ட…

    • 3 replies
    • 339 views
  18. மனித உரிமைகள் பாதுகாக்க படவேண்டுமானால் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் – எம்.ஏ.சுமந்திரன் இந்த நாட்டில் மனித உரிமைகள் பேணப்படவேண்டுமானால்,இந்த நாட்டில் மனித உரிமைகளுக்கு இடமிருக்கவேண்டுமானால் இந்த நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்,இதற்கு அனைத்து மக்களும் குரல்கொடுக்கவேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணியும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். …

    • 2 replies
    • 259 views
  19. (லியோ நிரோஷ தர்ஷன்) அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலர் விக்டோரியா நுலாண்ட் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். இவரது விஜயமானது மார்ச் மாதம் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி ஜோ பைடனின் ஆட்சி ஏற்பின் பின்னர் இலங்கை குறித்த அமெரிக்காவின் பார்வை மற்றும் அணுகுமுறை என்பவற்றில் மாற்றம் ஏற்பட்டுள்ளன. இதனடிப்படையிலேயே அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் மூத்த இராஜதந்திரியான விக்டோரியா நுலாண்ட் கொழும்பு வருகிறார். இவரது விஜயத்தின் போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரச தரப்பினரையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட எதிர்க்கட்சியினரையும் சந்தித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வொஷிங்டன் த…

    • 6 replies
    • 431 views
  20. காயங்களை மீண்டும் திறந்ததால் வெறுப்பை வளர்க்க மட்டுமே முடிந்தது: ஐ.நாவில் ஜி.எல் பயங்கரவாத தடுப்புச் சட்டம் கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தக் கூடாது என்பதில் இலங்கை உறுதியாக இருக்கிறது என இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சரான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐ.நாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடரின் உயர்மட்டப் பிரிவுக் கூட்டத்தில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜி.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடுப்புச் சட்டம், விசாரணைத் தடுப்பு மற்றும் விசாரணைக்கு உட்பட்ட நபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் வேண்டும் என்பதில் இலங்கை உறுதியாக உள்ளது, கருத்துச் சுதந்திரம் போன்ற ஜனநா…

    • 4 replies
    • 427 views
  21. யாழ். மாவட்டத்தில்... மேலதிகமாக, எரிபொருளை கொள்வனவு செய்யும் மக்கள்! யாழ்ப்பாண மாவட்டத்தில் 30 ஆயிரம் லீட்டர் பெற்றோல் மேலதிகமாக மக்களால் கொள்வனவு செய்யப்படுகின்றது என யாழ் மாவட்டச் செயலர் க.மகேசன் தெரிவித்தார். யாழ் மாவட்டச் செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் தற்போது எரிபொருள் பற்றாக்குறை காணப்படுகிறது. யாழ் மாவட்டத்தில் இந்த நிலைமையை இல்லாமல் செய்வதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். நாள் ஒன்றுக்கு யாழ் மாவட்டத்துக்கு 1 லட்சம் லீற்றர் பெற்றோல் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது நாளொன்றுக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் பெற்றோல் தேவைப்படுகிறது. தட்டுப்பாடு ஏற்படும் என்…

  22. ஞானசாரர்... தலைமையிலான, செயலணியின் பதவிக்காலத்தை நீடித்தார் ஜனாதிபதி கோட்டா !! ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய பொதுமக்கள் மற்றும் நிபுணர்கள் குழுவின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளவே செயலணியின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி “ஒரே நாடு, ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணி நிறுவப்பட்டு அதற்கு தலைவராக ஞானசார தேரரை ஜனாதிபதி நியமித்திருந்தமை குறிப்பிடத…

  23. கூட்டமைப்பு... நாடாளுமன்றில் யோசனையை கொண்டுவந்தால், ஆதரிக்கத் தயார் – திஸ்ஸ விதாரன பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்யக்கோரி கூட்டமைப்பு நாடாளுமன்றில் யோசனையை கொண்டுவந்தால் அதனை ஆதரிக்கத் தயார் என பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டம் குறித்து கருத்து தெரிவித்த அவர், தற்போதைய காலக்கட்டத்தில் அரசியல் நோக்கங்களுக்காகவே இச்சட்டம் பயன்படுத்தப்படுவதை அவதானிக்க முடிகிறது என சுட்டிக்காட்டினார். யுத்த காலத்தில் இச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டதன் தாக்கம் இன்றுவரை தொடர்கிறது என்றும் 12 வருடங்களின் பின்னரும் அது நடைமுறையில் இருப்பது முறையற்றது என்றும் அவர் குறிப்பிட்டார். பயங்கரவாத தடைச்சட்டம் மனித உரிமை மீறல…

  24. மன்னார் மாவட்டத்தில்... நெல் அறுவடை இயந்திரங்களுக்கு, டீசல் இன்மையால் விவசாயிகள் பாதிப்பு! மன்னார் மாவட்டத்தில் தற்போது பெரும்போக அறுவடைகள் பல பிரதேசங்களிலும் இடம் பெற்று வரும் நேரத்தில் உழவு இயந்திரங்கள் மற்றும் அறுவடை இயந்திரங்கள் போன்ற வற்றிற்கான எரிபொருள் (டீசல்) தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது. இதனால் மன்னார் மாவட்டத்தில் நெல் அறுவடையை மேற்கொண்டு வருகின்ற விவசாயிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இதேவேளை அதி கூடிய விவசாய பிரதேசமாக காணப்படும் நானாட்டான் மற்றும் முருங்கன் பகுதிகளிலும் தற்போது அறுவடைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அறுவடைக்கு தேவையான உழவு இயந்திரங்கள் மற்றும் அறுவடை இயந்திரங்கள் போன்றவற்றிற்கான எ…

  25. நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் – கட்டுப்பாடுகளுடன் வழங்கப்படும் எரிபொருள்! நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை வாகன சாரதிகளுக்கும், மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. அந்தவகையில், அட்டன் மற்றும் நுவரெலியா, கொட்டகலை ஆகிய எரிபொருள் நிலையங்களை சூழ வாகனங்கள் அணிவகுத்து நிற்பதுடன், அதிகளவு தூரம் வரை எரிபொருள் நிரப்புவதற்கு மக்கள் வரிசை நீடிப்பதையும் அவதானிக்க முடிந்தது. அத்தோடு எரிபொருளை கொள்வனவு செய்யும் போது ஒவ்வொருவருக்கும் மிகக் குறைந்த அளவிலேயே எரிபொருளை பெற்றுக்கொள்ளுமாறு, எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் கட்டுப்பாடுகளை விதித்து வழங்கி வருவதாகவும், எரிபொருளுக்காக காத்திருக்கும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.