Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழர்களுக்கெதிராக நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பில் பூர்வாங்க ஆய்வைக்கோரும் அறிக்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு (நா.தனுஜா) ஈழத்தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் நீதிநிலைநாட்டப்படுவதை வலியுறுத்தியும் இலங்கையில் தண்டனையின்மைக்கு எதிராகப்போராடுகின்ற முக்கியமானதோர் சர்வதேச நடவடிக்கையாகவும் ரோமசாசனத்தின் 15 ஆவது பிரிவின்கீழ் பூர்வாங்க ஆய்வொன்றினை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தும் தகவல் அறிக்கையொன்று கனடாவைத் தளமாகக்கொண்டியங்கும் தமிழர் உரிமைக்கான குழுமத்தினால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குரைஞர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ…

  2. (ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்) எதிர்க்கட்சியினரின் இன்றைய பாராளுமன்ற ஆர்ப்பாட்டத்தில் ''நந்தி ஒழிக, நீதி வாழ்க” என எழுதப்பட்ட பதாகை காட்சிப்படுத்தப்பட்டமை தொடர்பில் இந்து மதத்தை முன்னிறுத்தி வெளிவரும் விமர்சனங்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்கள் விளக்கமளித்துள்ளனர். இந்து மதத்தை இழிவுபடுதும் எந்தவொரு நோக்கத்திலும் இவை முன்னெடுக்கப்படவில்லை எனவும் எதிர்க்கட்சி தமிழ் உறுப்பினர்கள் வீரகேசரிக்கு தெரிவித்தனர். கொழும்பில் செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் பேரணிக்கு பொலிஸாரினால் ஏற்படுத்தபட்ட இடையூறுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள…

  3. இலங்கை இருளில் மூழ்கப் போவதாக மக்கள் விடுதலை முன்னணி எச்சரிக்கை! இலங்கை அடுத்த மாதம் முதல் இருளில் மூழ்கப் போவதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். பெலவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எதிர்வரும் டிசம்பர் மாத இறுதியில் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் நிலக்கரி தீர்ந்துவிடும் என்றும் அன்றிலிருந்து நாட்டு மக்கள் இருளில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, பழுது நடவடிக்கை காரணமாக சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மூடப்படவில்லை என்றும் மசகு எண்ணெய்க்குச் செலுத்த வேண்டிய டொலர்கள் இல்லாத காரணத்தினால்தான் மூ…

  4. கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு... யாழில் களைகட்டும் சிட்டி வியாபாரம்! இந்துமக்களால் அனுஷ்டிக்கப்படும் கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிட்டி வியாபாரம் மும்முரமாக இடம்பெற்று வருகிறது. தமிழர்கள் தொன்றுதொட்டுக் கொண்டாடிவருகின்ற விழாக்களுள் ஒன்றான கார்த்திகைத் தீபத் திருநாள் நாளை கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு யாழ்.குடாநாட்டின் முக்கிய சந்தையான திருநெல்வேலி பொதுச் சந்தையை அண்டியுள்ள பகுதிகளில் வியாபாரிகள் சிட்டி வியாபாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருவதைக் காண முடிகின்றது. தமது வீடுகளிலும், ஆலயங்களிலும் தீபமேற்றி வழிபடுவதற்காக மக்கள் பலரும் ஆர்வத்துடன் சிட்டிகளைக் கொள்வனவு செய்து செல்கின்றனர். சி…

  5. ஈழத்தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் – சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிப்பு ஈழத்தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படுவதை வலியுறுத்தியும் ரோமசாசனத்தின் 15 ஆவது பிரிவின்கீழ் பூர்வாங்க ஆய்வொன்றினை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தும் தகவல் அறிக்கையொன்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குரைஞர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கனடாவைத் தளமாகக்கொண்டியங்கும் தமிழர் உரிமைக்கான குழுமத்தினால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், “இலங்கையில் தமிழ் மக்களை இலக்குவைத்து மனிதாபிமானமற்ற மிகமோசமான குற்றங்களும் போர்க்குற்றங்க…

  6. மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு நீதிமன்றம் தடை! முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த, 47 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதற்கமைய, முல்லைத்தீவு மற்றும் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த, 23 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அத்துடன் புதுக்குடியிருப்பு, ஒட்டுச்சுட்டான், மாங்குளம், மல்லாவி மற்றும் ஐயன் குளம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் 24 பேருக்கு குறித்த நிகழ்வுகளை நடத்த நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருடாந்தம், நவம்பர் மாதம் 21 ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்…

  7. கையேந்தும் நிலையிலேயே தொடர்ந்தும் இருக்காமல் சுயமாக எழுந்து நிற்கக் கூடிய மக்களாக மாற வேண்டும் – டக்ளஸ் சமுர்த்தி திட்டத்தை பெறும் மக்கள் கையேந்தும் நிலையிலேயே தொடர்ந்தும் இருக்காமல், அதை பயன்படுத்தி பொருளாதார ரீதியில் சுயமாக எழுந்து நிற்கக் கூடிய மக்களாக மாற வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பிலான கருத்துக்களை நாடாளுமன்றில் தெரிவித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் , “அத்துடன், இம்முறை பாதீட்டில் 17 இலட்சத்து 93 ஆயிரத்து 533 சமுர்த்தி பயனாளிக் குடும்பங்களுக்கென 50 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், சமுர்த்தி நிவாரண…

  8. கலாநிதி வஜிரா சித்ரசேனவுக்கு இந்திய அரசாங்கத்தினால் பத்மஸ்ரீ விருது! இலங்கையின் நடனக் கலையை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் சென்ற முன்னணி நடனக் கலைஞரான தேசபந்து கலாநிதி வஜிரா சித்திரசேன அவர்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.ஈ.கோபால் பாக்லே அவர்களினால் இன்று (புதன்கிழமை) அலரிமாளிகையில் வைத்து வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் இந்திய குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும் இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது 2020 ஆம் ஆண்டிற்காக கலைத்துறையில் ஆற்றிய சேவைக்காக கலாநிதி வஜிரா சித்திரசேன அவர்களுக்கும், இலங்கையில் ஹிந்தி மொழியை பிரபலப்படுத்தி இலக…

  9. கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு 2 ஆண்டுகள் பூர்த்தி! கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு இன்றுடன் (வியாழக்கிழமை) இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன. 2019ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ களமிறங்கியிருந்தார். குறித்த தேர்தலில் அவர் 52.25 சதவீத வாக்குகளைப் பெற்று இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 7ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து, நவம்பர் மாதம் 18ஆம் திகதி அநுராதபுரத்தில் அவர் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1250639

  10. நாகர்கோவில் பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெறுவதாக குற்றச்சாட்டு! தொடர்ச்சியாக நாகர்கோவில் பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் ஆ.சுரேஸ்குமார் தெரிவித்துள்ளார். நாகர்கோவில் மேற்கு, நாகர்கோவில் கிழக்கு, நாகர்கோவில் வடக்கு, குடாரப்பு பகுதிகளில் கும்பல் ஒன்றினால் மணல் கொள்ளை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதிகளில் ஒருசிலர் உழவு இயந்திரத்தில் ஏற்றி வந்து வீதிகளில் மணலை கொட்டுவதாகவும், மற்றவர்கள் கனரக வாகனத்தை கொண்டு வந்து அள்ளிச் செல்வதாகவும், பல்வேறு இடங்களிலும் இவ்வாறு மணல் ஏற்றப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இது ஒரு பாரிய த…

  11. கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை ஆழ்கடல் பகுதிகளில் உள்ள கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு இன்று (வியாழக்கிழமை) இயற்கை அபாய முன்னெச்சரிக்கை மையத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக மன்னாரிலிருந்து காங்கேசன்துறை மற்றும் அரபிக்கடலுக்கு ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வங்கக்கடலில் இலங்கைக்கு வடகிழக்கில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மேற்கு நோக்கி நகர்ந்து தெற்கு ஆந்திரா மற்றும் அதை அண்மித்த வட தமிழக கடற்கரையை இன்று அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கிழக்கு-மத்திய அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மேற்க…

  12. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 200 கோடி முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்ட அல்லாஹ்வை ''உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி''எனக்கூறி கேவலப்படுத்திய ஒருவரை “ஒரே நாடு ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணியின் தலைவராக நியமித்ததன் மூலம் இலங்கை முஸ்லிம்களை மிரட்டப்பார்க்கின்றீர்களா? என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் சபையில் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை(16), அரசாங்கத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில், இந்த நாட்டிலே தனியார் சட்டங்களை சில விடயங்கள் முஸ்லிம்களின் இனம…

    • 2 replies
    • 311 views
  13. சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவது தொடர்பில் அரசு இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை. எனினும், உதவியை பெறவேண்டுமா என்பது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. – என்று அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது டொலர் நெருக்கடிக்கு தீர்வை காண சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது பற்றி அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டதா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெறவேண்டுமா என்பது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. அவ…

  14. யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் ஏற்பாட்டில் இரண்டாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நேற்று ஆரம்பமாகியது. தமிழ்த்துறையின் தலைவர், பேராசிரியர் ம.இரகுநாதன் தலைமையில் ஆரம்பமாகிய இந்த ஆய்வு மாநாட்டில், பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா முதன்மை விருந்தி னராகவும், கலைப்பீடாதிபதி பேராசிரியர் க.சுதாகர் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர். யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் முன்னாள் தலைவரும், வாழ்நாள் பேராசிரியருமான, அ.சண்முகதாஸ் மாநாட்டின் சிறப்புரையை வழங்கி, மாநாட்டை ஆரம்பித்து வைத்தார். மாநாட்டின்போது, ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கும், மொழிக்கும் தொண்டாற்றிய ஏழு புலமையாளர்களுக்குக் கௌரவம் வழங…

  15. இ.சுதாகரன் “பௌத்தர்கள் இல்லாத இடத்தில் விஹாரை அமைக்கப்படவுள்ளது. அப்படியென்றால், பெரும்பான்மையினக் குடியேற்றம் நடைபெற வாய்ப்புள்ளது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் விகாரைகள் அமைக்கப்படுவது தொடர்பாக கருத்துரைக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பொலன்னறுவை மாவட்டத்தின் எல்லையிலுள்ள வடமுனையில் இருந்து 5 கிலோமீற்றர் தொலைவிலுள்ள நெளுக்கல் மலையில் விஹாரை ஒன்றை அமைப்பதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் துரித நடவடிக்கை எடுத்துள்ளார். “பொலன்னறுவை மாவட்ட சொறுவில், கறுப்பளை, முத்துக்கல், மன்னம்பிட்டி மற…

  16. கடல் பகுதிகளில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை கிழக்கு மத்திய வங்காள விரிகுடா, தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதிகள் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் குறித்து இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, வடக்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் கிழக்கு-மத்திய மற்றும் அதனை அண்மித்த தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அடுத்த 24 மணி நேரத்தில…

  17. ’ராஜபக்ஷ குடும்பமே நாட்டுக்கு சுமை’ பா.நிரோஸ் அரச ஊழியர்கள் நாட்டுக்கு சுமையில்லை என தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, ராஜபக்ஷக்களின் குடும்பமே நாட்டுக்கு சுமை என்றும் தெரிவித்தார். வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், அரச ஊழியர்கள் நாட்டுக்கு சுமை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார். எனினும் பசில் ராஜபக்ஷ அமைச்சராக இருந்த முன்னாள் அரசாங்கத்திலேயே 87 சதவிதமான அரச ஊழியர்கள் சேவைக்கு இணைத்துகொள்ளப்பட்டுள்ளனர் என்றார். உண்மையில் நாட்டுக்கு ராஜபக்ஷக்களின் கு…

  18. வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சுரேன் ராகவன் 2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு November 11, 2021 நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் தமக்கு 2021 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதி 10 மில்லியன் ரூபாவில் இரண்டு மில்லியன் ரூபாவை முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் புனர்நிர்மாண நடவடிக்கைக்களுக்காக ஒதுக்கியுள்ளார். ஏற்கனவே முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 4 மில்லியன் ரூபா ஒதுக்கியிருந்த நிலையில் மேலும் 2 மில்லியன் ரூபாவை ஆலயத்தின் நிர்மாணப் பணிகளுக்காக ஆலய நிர்வாகசபைத் தலைவரின் வேண்டுகோளுக்கு அமைவாக ஒதுக்கியுள்ளார். இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் 14 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள் கிடைக்கவுள்ளமை…

  19. போராட்டத்தை நீர்த்து போக செய்வதற்காகவே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நிதி- கா.ஜெயவனிதா November 17, 2021 எங்களுடைய போராட்டத்தை நீர்த்துப் போக செய்வதற்காகவே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக வவுனியாவில் தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்க தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா தெரிவித்தார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக வரவு செலவு திட்டத்தில் 300 மில்லியன் ரூபாய் அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நாங்கள் இன்று 1738 ஆவது நாளாக போராடி கொண்டிருக்கின்றோம். எங்…

  20. வல்வெட்டித்துறை பாதீடு தோற்கடிப்பு ; இரண்டு மாதங்களுக்கு முன்னர் தவிசாளரானவர் பதவியிழக்கும் நிலை! இரண்டு மாதங்களுக்கு முன்னர் தவிசாளராக தெரிவானவர் பாதீடு தோற்கடிக்கப்பட்டமையால் , தவிசாளர் பதவியை இழக்கும் நிலைமையில் உள்ளார். வல்வெட்டித்துறை நகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்றைய தினம் புதன்கிழமை சபையில் புதிய தவிசாளர் செல்வேந்திராவால் சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த பாதீடு மீதான வாக்கெடுப்பில் பாதீடு ஒரு வாக்கினால் தோல்வியடைந்தது. அந்நிலையில் 14ஆம் நாள் மீண்டும் பாதீடு திருத்தங்களுடன் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் அன்றைய தினமும் பாதீடு தோல்வியடைந்தால் , தவிசாளர் பதவி இழக்க நேரிடும். வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் தவிசாளரான கோணலிங்கம் க…

  21. மாவீரர் நாளினை ஏனைய தேவைகளுக்காகப் பயன்படுத்த மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்-கதிர் November 17, 2021 மாவீரர் நாளினை ஏனைய தேவைகளுக்காக யாரும் பயன்படுத்துவதை மக்கள் அனுமதிக்கமாட்டார்கள் என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இராசையா கதிர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இராசையா கதிர், “தமிழ்மக்களின் தமிழ்தேசிய விடுதலைக்காக இந்த மண்ணில் இலங்கை அரசாங்கத்துடன் போராடி வீரமரணம் அடைந்த மாவீரர்களை நினைவு கொள்வதற்காக தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்ட நாளிலே அந்த மாவீரர் நாள் மண்ணில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. மாவீரர் நாள் என்பது …

  22. நல்லிணக்கத்தில் அக்கறையிருந்தால் 13 இல் பறிக்கப்பட்டதை வழங்குங்கள்; சித்தார்த்தன் November 17, 2021 “இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி – இந்த நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்ல வேண்டுமென்ற கரிசனை இருந்தால் – அதில் அர்பணிப்பிருந்தால் – முதலில் அரசியல் யாப்பில் இருப்பவற்றை நிறைவேற்றுங்கள். 13 இலிருந்து பறிக்கப்பட்ட விடயங்களை மீளவும் தமிழ் மக்களுக்கு வழங்குங்கள்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யும் புளொட் தலைவருமான த.சித்தார்த்தன் வலியுறுத்தினார். அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு நேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தமது உரையில் மேலும் முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு: …

  23. யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்களுக்கு வருடாந்தம் தங்கப்பதக்கங்கள் November 17, 2021 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக, முகாமைத்துவ பீடத்திலுள்ள கணக்கியல், நிதிமுகாமைத்துவம் மற்றும் வணிகம் (கணக்கியலும், நிதியும்) ஆகிய துறைகளில் பயின்று சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் இடம்பெறும் பட்டமளிப்பு விழாவின் போது இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினால் தங்கப்பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன. இதற்காக வணிக முகாமைத்துவ பீடத்துக்கும், இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முற்பகல் 9 மணியளவில், யாழ். பல்கலைக்கழக வணிக, முகாமைத்துவ பீடாதிபதி …

  24. கிளிநொச்சி நகரத்தில் பொலிசாருக்கு காணி அளவீடு செய்வதற்கு மக்கள் எதிர்ப்பு! கிளிநொச்சி நகரத்தில் பொலிசாருக்கு காணி அளவீடு செய்வதற்கு மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் எதிர்ப்பை அடுத்து குறித்த அளவீட்டு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கே. என் 23 கிராம அலுவலர் பிரிவில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணிகள் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன இந்த நிலையில் காணிகளை சுவீகரிக்கும் நோக்கில் காணி அளவீடு செய்வதற்காக நில அளவையாளர்கள் பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் குறித்த இடத்திற்கு வருகை தந்திருந்தனர் . இதனையடுத்து சம்பவ இடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் காணி உரிமையாளர்கள்…

  25. பௌத்த அறநெறி பாடசாலைகளையும் மீள ஆரம்பிக்க ஆலோசனை! நாடளாவிய ரீதியில் சகல பௌத்த அறநெறி பாடசாலைகளையும் மீள ஆரம்பிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் 28ஆம் திகதி முதல் பௌத்த அறநெறி பாடசாலைகளை மீள ஆரம்பிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பௌத்த விவகார ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. நவம்பர் 21ஆம் திகதி தேவையான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் 28ஆம் திகதி முதல் பௌத்த அறநெறி பாடசாலைகளை திறக்க முடியும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவ்வாறு திறக்கப்படும் பாடசாலைகளில் சுகாதார விதிமுறைகளை கடுமையாக அமுல்படுத்துமாறும் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார். https://athavann…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.