Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கொழும்பு வருகிறார் சீன வெளிவிவகார அமைச்சர் : டொலர் தட்டுப்பாட்டைச் சமாளிக்க இலங்கைக்கு உதவுவாரா ? (லியோ நிரோஷ தர்ஷன்) உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீன வெளிவிவகார அமைச்சர் வோங் யீ சனிக்கிழமை (08) இலங்கை வருகின்றார். கிழக்கு ஆபிரிக்க நாடுகளுக்கான விஜயத்தையடுத்து மாலைத்தீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யும் சீன வெளிவிவகார அமைச்சர் கொழும்பில் முக்கிய பல சந்திப்புகளில் ஈடுப்படவுள்ளார். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்புகளின் போது துறைமுக நகர் திட்டம் குறித்து விசேடமாக கவனம் செலுத்துவார் என்பதுடன் , கடன் தவனை சலுகை அல்லது மேலத…

  2. யாழ். ஆரியகுள உரித்தை உறுதிப்படுத்துமாறு கோரும் ஆளுநர் ஜீவன் தியாகராஜா… யாழ்.ஆரியகுளத்தில் பொதுமக்களுடைய சமய உரிமையை மீறி செயற்படும் அதிகாரம் உள்ளமைக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்கும்படி வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மாநகர ஆணையாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். யாழ்.மாநகர முதல்வரின் ஏற்பாட்டில் தனியார் நிதிப் பங்களிப்புடன் ஆரியகுளம் அழகுபடுத்தப்பட்டு, பொழுதுபோக்குத் திடலாகப் பொதுமக்களின் பாவனைக்குத் திறந்து விடப்பட்டிருந்தது. ஆரியகுளப் புனரமைப்புப் பணிகளின்போது, மதச் சின்னங்களை நிறுவுவதில் இழுபறி நிலை தோன்றியிருந்த நிலையில், எந்தவொரு மத அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான கட்டமைப்பெதனையும் அமைப்பதி…

  3. பலாலி விமான நிலையம் மூடப்பட்டுள்ளமை கவலையளிக்கிறது – அர்ஜுன ரணதுங்க பலாலி சர்வதேச விமான நிலையம் தற்போது மூடப்பட்டுள்ளமை கவலையளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு நேற்று(வியாழக்கிழமை) விஜயம் மேற்கொண்ட அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ் யாழ்ப்பாண மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் முகமாக பலாலி சர்வதேச விமான நிலையம் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு திறந்து விடப்பட்டது. குறிப்பாக வட பகுதியிலுள்ள மக்கள் குறைந்த நேரத்தில் குறைந்த செலவுடன் தென்பகுதிக்கு வந்து செல்வதற்க…

  4. புதுக்குடியிருப்பில் தாங்கியெதிர்ப்பு ஏவுகணைகளை மூன்றாம் தரப்பினருக்கு விற்கமுயன்றதாக அறுவர் கைது இறுதி யுத்தத்தின்போது புலிகளால் பாவிக்கப்பட்டதாக நம்பப்படும் இரு தாங்கியெதிர்ப்பு ஏவுகணைகளை மூன்றாம் தரப்பினருக்கு விற்கமுயன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஆறு தமிழர்களை காவல்த்துறை கைதுசெய்திருக்கிறது. சுமார் 400 கிலோ கிராம்கள் எடைகொண்டதாக (400 கிராமாக இருக்கலாம்) கருதப்படும் இவ்விரு ஏவுகணைகளையும் எதற்காக இவர்கள் விற்கமுயன்றார்கள் என்பதுபற்றி விசாரணைகளை பொலீஸார் ஆரம்பித்திருக்கின்றார்களாம். இந்த அறுவரும் மாங்குளம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படுவார்கள் என்று தெரியவருகிறது மூலம் : டெயிலி மிரர், ஆங்கிலம்

    • 4 replies
    • 352 views
  5. மரணத்தில் சந்தேகம் : உறவினர்கள் நீதிமன்றில் மனுத்தாக்கல் கடந்த செப்ரம்பர் மாதம் மர்மமான முறையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட முன்னாள் போராளியான மாணிக்கம் ஜெயக்குமாரின் (ஆதவன்) மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நேற்றுமுன்தினம் (04) மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் விண்ணப்பம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாயை சேர்ந்த, இரு பிள்ளைகளின் தந்தையான இவர் கடந்த 2021 செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி காலை 6 மணியளவில், வழமைபோல நடைப்பயிற்சிக்கு செல்வதாகக்கூறி வெளியே சென்றுள்ளார், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பின்னர் 2021 செப்டம்பர் 30ஆம் திகதி மாலை குறித்த நபர் நவாலிப்பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இவரது மரணத்த…

    • 3 replies
    • 378 views
  6. கிழக்கு மாகாண தமிழ் மக்கள் இனியொரு காலத்திலும் விட்டுக்கொடுப்பு அரசியலை செய்யப்போவதில்லை January 2, 2022 கிழக்கு மாகாண தமிழ் மக்கள் இனியொரு காலத்திலும் விட்டுக்கொடுப்பு அரசியலை செய்யப்போவதில்லை - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், நசீர் அகமட் எம்.பிக்கு பதில் !! கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் இனியொரு காலத்திலும் விட்டுக்கொடுப்பு அரசியலை செய்யப்போவதில்லையென இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள அமைச்சரின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தொலைக்காட்சி நிகழ்வொன்றில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நசீ…

  7. ஒரு கிலோ அரிசி 300 ரூபா வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் - ஒன்றிணைந்த அரிசி உற்பத்தியாளர் சங்கம் (இராஜதுரை ஹஷான்) புத்தாண்டு காலத்தில் ஒரு கிலோகிராம் அரிசியின் விலை 300 ரூபா வரை உயர்வடையும் சாத்தியம் உள்ளதாக ஒன்றிணைந்த அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா தெரிவித்தார். சேதன பசளை திட்டத்தின் காரணமாக விவசாயிகள் பாரிய நெருக்கடிகயை எதிர்க்கொண்டுள்ளார்கள். பிரதான நெற்செய்கை பிரதேசங்களில் உள்ள விவசாயிகள் விவசாய நடடிவக்கையில் இருந்து விலகியுள்ளார்கள். இம்முறை பெரும்போக விவசாயத்தில் அதிக விளைச்சலை பெற முடியாது. விவசாயிகள் தங்களின் சுய தேவைக்காக மாத்திரமே விளைச்சலை மேற்கொண்டுள்ளார்கள். டொலர் நெருக்கடி காரணமாக மக்கள் அத்தியாவசிய பொருட்களை…

  8. தீவக பகுதியில் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி அதிகரிக்கப்படுகின்றது- டக்ளஸ் தீவக பகுதியில் வேலைவாய்ப்பு இன்றி காணப்படும் இளைஞர் யுவதிகளுக்களின் தொழில்முயற்சிக்கான வாழ்வாதாரத்தின் பெற்றுக்கொடுக்க எதிர்காலத்தில் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி அதிகரிக்கபட்டுவருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ் தீவக வேலணை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மண்கும்பான் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சுற்றுலாத்தளத்தின் கடற்பரப்பிலான சுற்றுலாபடகுகள் சேவையினை ஆரம்பிக்கும் கட்டிட நிர்மாணப்பகுதியினை திறந்துவைக்கும் இன்று (வியாழக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கடற்றொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ்தேவானந்தா கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையி…

    • 3 replies
    • 429 views
  9. சீனா- இலங்கைக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு மேலும் பலப்படுத்தப்படும்- சீனத் தூதுவர் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவதற்கு உறுதியாக இருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ சென்ஹொங் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ சென்ஹொங்வுக்கும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கும் இடையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் இரண்டு நாடுகளுக்கு இடையில் முன்னெடுக்கப்பட்டு வரும் வர்த்தக மற்றும் கலாசார ரீதியிலான தொடர்புகளை பலப்படுத்தவும் புதிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவும் தாம் தயாராக இருப்பதாகவும் சீன தூதுவர் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்த…

  10. எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்! திருகோணமலை சீனக்குடா எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. திருகோணமலை பிரதான பஸ் நிலையத்திற்கு நேற்று (புதன்கிழமை) முன்னால் கிழக்கு மக்களின் குரல் அமைப்பினால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நாட்டை விற்காதே,அரசாங்கமே தேசத்தின் சொத்துக்களை விற்றுத் தின்னாதே, ,டொலர் இல்லையென்றால் எண்ணைக்குத்தங்கள் மூலம் நாட்டிட்க்கு வருமானத்தை அதிகாரி மற்றும் தேசிய சொத்துக்களை கூறுபோடாதே சுலோகங்களை ஏந்தியவாறு தமது எதிர்ப்பினை தெரிவித்திருந்…

  11. டக்ளஸ் தேவானந்தாவின் நிதி ஒதுக்கீட்டில் பாசையூர் கடலில் வெளிச்ச வீடு! கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அறிவுறுத்தலுக்கு அமைய பாசையூர் கடற்கரை பகுதியில் வெளிச்சவீடு அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை முன்னெடுப்பது தொடர்பான கள ஆய்வுப் பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் பிரதேச செயயாளர் சுதர்சன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் மற்றும் துறைசார் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது. பல தசாப்த காலமாக பாஷையூர், குருநகர், சாவற்கட்டு, காக்கைதீவு, நாவாந்துறை உள்ளிட்டபல பிரதேசங்களை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் சங்கமித்து தமது தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பகுதியாக காணப்படும் இந்த இடத்தில் வெள…

  12. சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை நிதியுதவி கோராது! அமைச்சரவையில் எதிர்ப்பு January 5, 2022 சர்வதேச நாணய நிதியத்திடம் நிதியுதவி கோருவதற்கான அமைச்சரவைக் கூட்டம் இணக்கமின்றி முடிந்தது. இதனால், இலங்கை நிதி கோரி சர்வதேச நாணய நிதியத்தை நாடாது என்று தெரியவருகின்றது. நேற்று முன்தினம் இரவு நடந்த அமைச்சரவை கூட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்திடம் நிதி உதவி கோருவதற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் அனுமதி அளிக்கவில்லை என்று தெரிய வருகின்றது. நிதியுதவிக்காக சர்வதேச நாணய நிதியம் முன்வைக்கும் நிபந்தனைகளை அவர்கள் ஏற்கத் தயாராக இல்லாமையே இதற்குக் காரணம் என்று தெரிய வருகின்றது. அரசாங்கம் கோரினால் இலங்கைக்கு நிதி அளிப்பது தொடர்பில் ஆராயப்படும் என்று சர்…

    • 1 reply
    • 1.1k views
  13. மாகாணத் தேர்தல் நடக்கவே நடக்காது, என்கிறார் அமைச்சர் கம்மன்பில! மாகாணசபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசுக்குள் கலந்துரையாடல் எதுவும் நடைபெறவில்லை. அதேபோல, வெளிநாடுகளிலிருந்து அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை -என்று இணை அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது, மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “விரைவில் மாகாணசபைத் தேர்தல் வருகிறதா என கேள்வி எழுப்பப்பட்டது. அரசால் நிவாரணம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதனை ஊகமாக வைத்தே இந்தக் கேள்வி எழுப்பப்பட்டிருக்கலாம். த…

    • 2 replies
    • 301 views
  14. வல்வை பட்டத்திருவிழா இடைநிறுத்தம் January 5, 2022 வல்வெட்டித்துறை பட்டத்திருவிழா கொரோனா இடர் காரணமாக இடைநிறுத்தப்படுவதாக , ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் வருடாந்திரம் தைப்பொங்கல் தினத்தன்று மாபெரும் பட்டத்திருவிழா இடம்பெறுவது வழமையாகும். அந்த வகையில் இம்முறையில் பட்டத்திருவிழாவை நடாத்த ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்து இருந்தனர். அந்நிலையில் , கொரோனா அச்சுறுத்தல் முழுமையாக நீங்காத நிலையில் , பட்டத்திருவிழாவை நடாத்தும் போது , கொரோனா தொற்று அபாயம் அதிகரிக்கும் என பிரதேச மக்கள் அச்சம் தெரிவித்தமையால் , பட்டத்திருவிழாவை இடை நிறுத்துவதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது. அதேவேளை இம்முறை …

    • 1 reply
    • 445 views
  15. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவன் ஒருவர், புதுமுக மாணவர்கள் மீது பகிடிவதையில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் மறு அறிவித்தல் வரை - விசாரணைகள் முடியும் வரை பல்கலைக்கழகத்தின் எந்தவொரு பகுதிக்கும் உள் நுழைய முடியாதபடி தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவனை உடனடியாக விடுதியில் இருந்தும் வெளியேறுமாறும் பணிக்கப்பட்டுள்ளது. http://cdn.virakesari.lk/uploads/medium/file/116239/reging.JPG விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவன் ஒருவர் மீதே விஞ்ஞான பீடாதிபதியினால் இந்தத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில், புதுமுக மாணவர்களைப் பகிடிவதைக்கு உள்ளாக்கியதுடன் மாணவர்கள் மீது தாக்குதல் நட…

  16. தமிழகத்தை சேர்ந்த 12 மீனவர்கள் விடுதலை- மன்னார் நீதிமன்றம் தமிழகத்தை சேர்ந்த 12 மீனவர்களை விடுதலை செய்யுமாறு மன்னார் நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி செயற்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த 18 ஆம் திகதி, இராமேசுவரம் மண்டபம் பகுதிகளிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 43 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். அதேபோன்று புதுக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களையும் குறித்த குற்றச்சாட்டுக்களுக்காகவே படகுகளுடன் அடுத்தடுத்த நாள்களில் கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றனர். இதன்படி 68 தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மன்னார் நீதிமன்றம்,…

  17. வங்கி கணக்குகளில் உள்ள அந்நிய செலாவணி வேறு பிரிவுகளுக்கு மாற்றப்படுகிறதா? – கப்ரால் விளக்கம்! இலங்கை வங்கிகளில் வாடிக்கையாளர்களின் கணக்குகளில் உள்ள அந்நிய செலாவணியை வேறு பிரிவுகளுக்கு மாற்றுமாறு இலங்கை மத்திய வங்கி, வர்த்தக வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என மத்திய வங்கி அறிவித்துள்ளது. அரசாங்கத்திற்கு கலங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறான பிரசாரங்கள் வெளியாகி வருவதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் அவரது உத்தியோகப்பூர்வ ருவிட்டர் பக்கத்தில் இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளார். இலங்கை வர்த்தக வங்கிகளில் உள்ள வெளிநாட்டு நாணய வைப்பாளர்களின் கணக்குகளில் உள்ள வைப்புத்தொகைகளில் 25வீதம் உள்ளூர் நாணயங்களுக்…

    • 1 reply
    • 230 views
  18. வடக்கு விவசாயிகள் நெல் அறுவடையை முற்கூட்டியே திட்டமிடுவது உகந்தது January 5, 2022 அடுத்தவாரம் மழையை எதிர்பார்க்க முடியும் என்பதால் விவசாயிகள் நெல் அறுபடையை முன்கூட்டியே திட்டமிடுவது உகந்தது. என யாழ்.பல்கலைகழக புவியியல்துறை விரிவுரையாளர் நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், வடமாகாணத்தில் தற்போது பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. எனினும் எதிர்வரும் 9ம் திகதி தொடக்கம் 13ம் திகதிவரை வடமாகாணத்தின் பல பகுதிகளிலும் மிதமானது தொடக்கம் கனமானது வரை மழை பெய்யும் வாய்ப்புள்ளது. தற்போதைக்கு வடமாகாணத்தின் உள்நில பகுதிகளில் குறிப்பாக ஏ-9 வீதியை அண்மித்த பகுதிகளில் இரவு வெப்பநிலை 17 செல்சியஸ்வரை குறைவடையகூடிய…

    • 1 reply
    • 239 views
  19. இலங்கை இந்த ஆண்டில் 6.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக செலுத்த வேண்டியுள்ளது – பசில் இலங்கை இந்த ஆண்டில் 6.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக செலுத்த வேண்டியுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து சிங்கள வார இதழொன்று வெளியிட்டுள்ள செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு அரசாங்கத்தினால் குறித்த கடனை உரிய முறையில் திருப்பி செலுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். செலுத்தப்பட வேண்டிய கடன் தவணைகள் இதுவரையில் எவ்வித பிரச்சினையும் இன்றி செலுத்தப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்திலும் இவ்வாறே செயற்படுவதாகவும் நிதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். கடன் செலுத்தப்படும் அதேவேளை, மக்களுக்கு நிவாரணம் வழங…

    • 1 reply
    • 411 views
  20. தமிழ் தலைமைகள் தங்களைப் பலப்படுத்திக்கொள்ள வேண்டும் – இரா.துரைரெட்னம் தற்போது ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பகரமான செயற்பாடுகள் ஒரு வகையில் எங்களை பலமுள்ளதாக மாற்றும்.அதற்கேற்றாற்போல் தமிழ் தலைமைகள் தங்களைப் பலப்படுத்திக்கொள்ள வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் பத்மநாபா மன்றத்தின் தலைவருமான இரா.துரைரெட்னம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்தியாவினை தமிழர்களுக்கு விரோதமானதாக மட்டும் பார்க்காமல் தமிழர்களின் நலன்சார்ந்த விடயங்களில் இந்தியா செயற்பாடேயாகும் எனவும் அவர் தெரிவித்தார். தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு சுயாட்சி…

  21. மாகாண சபை தேர்தலை ஒத்திவைக்க காரணமாக இருந்தவர் சுமந்திரன் – நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் மாகாண சபை தேர்தலை ஒத்திவைக்க காரணமாக இருந்தவர் எம்.ஏ.சுமந்திரன் எனவும் அவர் முடிந்தால் என்னுடன் விவாதத்திற்கு வரட்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முடிந்தால் என்னுடன் விவாதத்திற்கு வரட்டும் .இது தொடர்பில் நான் மக்களுக்கு உண்மையை சொல்ல தான் தயங்க மாட்டேன் என அவர் மேலும் தெரிவித்தார். 13வது சீர்திருத்த சட்ட மூலத்தை தலைவர் அஸ்ரப் உட்பட கிழக்கு மாகாண முஸ்லீம்களும் முழுமைகாக எதிர்த்த ஒரு சட்ட மூலமாகும் தற்போதைய ஒப்பந்த நகலும் வடகிழக்கில் பிறந்த எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பின…

    • 3 replies
    • 368 views
  22. மூட்டைகளை கட்டிக்கொண்டு இராஜாங்க அமைச்சில் இருந்து வெளியேறினார் சுசில் ஜனாதிபதியினால் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மீண்டும் சட்டத்தரணி பணிக்கு திரும்பவுள்ளதாக தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டமையை ஊடகங்கள் மூலமே அறியக் கிடைத்தது என்றும் எவ்வித முன்னறிவிப்பும் வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் விவசாயமும் அரசாங்கத்தின் கொள்கை திட்டமும் தோல்வியடைந்துவிட்டன என்று பதிலளித்ததாக சுசில் பிரேமஜயந்த கூறினார். திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கலாம் இருந்தாலும் முடிவுகளை எடுப்பவர்கள் கல்வியை மதிப்ப…

    • 7 replies
    • 634 views
  23. (எம்.நியூட்டன்) யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மலேரியா நோயாளி ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை இனங்காணப்பட்டுள்ளார். குருநகர் பகுதியை சேர்ந்த குறித்த நபர், தென்னாபிரிக்காவிலிருந்து அண்மையிலேயே யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கடந்த ஒரு மாதத்தில் யாழ்.போதனா மருத்துவமனையில் இனங்காணப்பட்ட மூன்றாவது மலேரியா நோயாளி இவராவார். முன்னதாக, மல்லாகம் மற்றும் ஆனைக்கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவர் மலேரியாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. யாழ்.போதனா வைத்தியசாலையில் மூன்றாவது மலேரியா நோயாளி இனங்காணப்பட்டார் | Virakesari.lk

  24. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக வைத்தியர் கே.நந்தகுமாரன் நியமனம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக வடமாகாணத்தின் சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் கே.நந்தகுமாரன் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால் நேற்றையதினம் இந்நியமனக்கடிதம் வழங்கிவைக்கப்பட்டது. அதனடிப்படையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தனது பதவியை பொறுப்பேற்றுள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக இருந்த வைத்தியர்.த.சத்தியமூர்த்தி மேற்படிப்புக்காக மீண்டும் வெளிநாடு சென்றுள்ள காரணத்தினால் தற்காலிகமாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை வைத்தியர் கே.நந்தகுமாரன்…

  25. யாழில் இந்து ஆலயங்களில் விக்கிரகங்கள் திருடிய குற்றச்சாட்டில் இராணுவச் சிப்பாய் இராணுவப் பொலிஸாரினால் கைது காங்கேசன்துறை காவல் பிராந்தியத்தில் இராணுவ மற்றும் கடற்படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள இந்து ஆலயங்களில் விக்கிரகங்கள் திருடிய குற்றச்சாட்டில் இராணுவச் சிப்பாய் ஒருவர் இராணுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சந்தேக நபர் இராணுவ பொலிஸாரினால் நேற்று திங்கட்கிழமை தெல்லிப்பழை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதேவேளை டிசெம்பர் 9ஆம் திகதிக்கும் 23ஆம் திகதிக்கும் இடையே தெல்லிப்பழை மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுகளில் உள்ள இந்து ஆலயங்களில் விக்கிரகங்கள் திருடப்பட்டன.அத்துடன் உயர் பாதுகாப்பு வலயங்களி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.