Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கீரிமலையில் கடற்படையினருக்கு காணி அளவிடும் நடவடிக்கை முறியடிப்பு! யாழ். கீரிமலை பகுதியில் கடற்படையினருக்கு காணி அளவிடும் நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களால் முறியடிக்கப்பட்டது. காணி உரிமையாளரின் ஒப்புதல் இல்லாமல் கீரிமலை நகுலேஷ்வரம், ஜே/226 கிராம சேவகர் பிரிவில் காணிகளை சுவீகரிப்பதற்கான அளவீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திட்டம் ஒன்று நில அளவை திணைக்களத்தினால் திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் அங்கு ஒன்றுகூடிய காணி உரிமையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து, காணி அளவீட்டு நடவடிக்கைகளை தற்காலிகமாக கைவிட்டுவிட்டு செல்வதாக கூறிவிட்டு நில அளவைத் திணைக்களம் அவ்விடத்தில் இருந்து சென்றது. https:/…

  2. மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் இன்று கொழும்பில் போராட்டம்! இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள போராட்டம் இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது. இந்தப் போராட்டம் இன்று மதியம் 12 மணிக்கு கொழும்பில் உள்ள இலங்கை மின்சார சபையின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக நாட்டில் உள்ள அனைத்து மின்சார சபை ஊழியர்களும் கொழும்பு நோக்கிப் பயணித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. எவ்வாறிருப்பினும் நாட்டு மக்களுக்கு மின்சாரம் இருக்கின்ற நிலையில்தான், தாங்கள் கொழும்புக்கு வருவதற்குத் தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் இணைப்பாளர் ர…

  3. ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணி தலைவரை மகாநாயக்கர்கள் பரிந்துரைக்க வேண்டும் – பொன்சேகா ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணிக்கு மகாநாயக்க தேரரால் பரிந்துரைக்கப்பட்ட பிக்கு ஒருவரை நியமித்திருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், குறித்த செயலணிக்கு தலைமை தாங்கும் நபர் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவராக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். எனவே இவ்வாறான நியமனங்கள் தொடர்பாக அரசாங்கம் மகாநாயக்க தேரர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இந்த நியமனமானது தமது சித்தாந்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பம் …

  4. சட்டங்களை இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு, ஞானசாரருக்கு அல்ல – ஐக்கிய தேசியக் கட்சி ‘ஒரு நாடு ஒரே சட்டம் தொடர்பான சட்டங்களை இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே இருக்கின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளது. நேற்று சிறிகொத்தவில் இடம்பெற்ற விசேட நிகழ்வில் பேசிய அவர், ஒரு நாடு ஒரே சட்டம் என்ற கருத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு ஜனாதிபதி செயலணிக்கு இல்லை என்றும் சுட்டிக்காட்டினார். முஸ்லீம் சமூகத்தையும் நீதித்துறையையும் பகைத்துக்கொண்டது மட்டுமல்லாமல் ஒரு தமிழரை கூட குறித்த செயலணியில் நியமிக்காமல் அந்த சமூகத்தை ஜனாதிபதி அவமதித்துள்ளார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். நாட்டின் உண்மையான தலைவர் அனைத்து ச…

  5. இலங்கைக்கு அண்மையில் நீடிக்கும் குறைந்த அழுத்தப் பிரதேசம் – 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி! இலங்கைக்கு அண்மையாகக் குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் காணப்படுவதால், நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பெய்யுமென அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்க…

  6. அதிகார பகிர்வே தேசிய இனப்பிரச்சினைக்கான நிலையான தீர்வு – விக்னேஸ்வரன் இணைந்த வடக்கு கிழக்கில் உயர்ந்தபட்ச சமஷ்டி அதிகார கட்டமைப்பு ஒன்றின் கீழ் ஏற்படுத்தப்படும் அதிகார பகிர்வே தேசிய இனப்பிரச்சினைக்கான நிலையான தீர்வாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று நடைபெற்ற தமிழ் கட்சிகளுக்கு இடையிலான கூட்டத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட வரைபு ஆவணத்திலேயே விக்னேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எனவே சமஷ்டி கட்டமைப்பின் கீழ் இத்தகைய ஒரு நிலையான தீர்வினை ஏற்படுத்துவதற்கு இந்தியா அனைத்துவிதமான முன்னெடுப்புக்களையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். குறுகிய அரசியல் இலாபம், தூர நோக்கற்ற சிந்தனை மற்றும் கடும் பௌத்த …

  7. வடக்கு – கிழக்கு இணைந்த மாகாண சபையில் முதலமைச்சராக இருக்க விரும்புகின்றேன் என்று நான் கூறியிருந்தேன். அப்போது அதை நான் விளையாட்டாகவே கூறியிருந்தேன். ஆனால் இப்போது சிந்தித்துப் பார்த்தால் அது ஒரு நல்ல திட்டம். எனக்கு அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் நான் நிச்சயமாக அதனை விரும்புவேன். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- வடக்கும், கிழக்கும் இணைந்த மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கும் எனது விருப்பத்தை நீங்கள் பார்க்கலாம். நான் இப்படி கூறியவுடன், சாணக்கியன் எவ்வாறு இப்படிக் கூற முடியும் என்று எ…

    • 7 replies
    • 457 views
  8. கீரிமலையில் கடற்படையினர் காணி சுவீகரிப்பு – நாளை எதிர்ப்பு போராட்டம்! யாழ்.கீரிமலையில் கடற்படையின் தேவைக்காக தமிழ் மக்களுக்கு சொந்தமான சுமார் 0.6474 ஹெக்டயர் காணிகளை கடற்படையின் தேவைக்காக சுவீகரிப்பதற்று நாளை அளவீட்டு பணிகள் இடம்பெறவுள்ளது. கீரிமலை – நகுலேஸ்வரம் ஜே/226 கிராமசேவகர் பிரிவில் நாளை (புதன்கிழமை) காலை .8.30 மணிக்கு குறித்த காணி சுவீகரிப்பிற்கான அளவீட்டு பணிகள் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் காணி உரிமையாளர்களின் ஒப்புதல் இல்லாமலே அளவீட்டு பணிகள் நாளை இடம்பெறவுள்ள நிலையில் காணி அளவீட்டை தடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காணி உரிமையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2…

    • 1 reply
    • 330 views
  9. ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றதன் பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவை சந்தித்துள்ளார். இதன்போது, இரு நாடுகளின் தலைவர்களும் நட்பு ரீதியிலான கலந்துரையாடலில் ஈடுப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவை க்ளஸ்கோ நகரில் சந்தித்தமை மகிழ்ச்சியளிப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சந்திப்பு! - உதயன் | UTHAYAN (newuthayan.com)

  10. (இராஜதுரை ஹஷான்) புறக்கணிக்கப்பட்ட சேதன பசளையை மீண்டும் பெற்றுக் கொள்ளுமாறு சீனா இராஜதந்திர மட்டத்தில் அழுத்தம் பிரயோகிக்கிறது. இலங்கையின் காலநிலைக்கும், மண்வளத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் சீன நாட்டு உரம் நாட்டுக்குள் வருவதற்கு அதிக வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. ஜனாதிபதியின் தவறான தீர்மானத்தினால் ஏற்படபோகும் அழிவிற்கு முழு அரசாங்கமும் பொறுப்புக் கூற வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் நாடு தற்போது பெரும் அழிவை நோ…

  11. உடைப்பெடுக்கவுள்ள நொச்சிக்குளம்! வவுனியாவில் கடும் மழை பெய்துவரும் நிலையில் நொச்சிக்குளம் உடைப்பெடுக்கும் நிலையில் உள்ளது. இதனையடுத்து உடைப்பை தடுக்கும் நடவடிக்கை இரவிரவாக மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவால் மேற்கொள்ளப்பட்டது. வவுனியா மாவட்டத்தில் சில நாள்களாக கடும் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வருவதுடன், தாழ் நிலப்பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி வருகின்றது. மழை காரணமாக வவுனியா, ஓமந்தை நொச்சிக்குளத்தின் நீர் வரத்து அதிகரித்த நிலையில் குளத்தில் காணப்பட்ட உமை காரணமாக குளத்தின் கட்டு கீழ் இறங்கி உடைப்பெடுக்கும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு மற்றும் இராணுவத்தினர், நகரசபையின் தீயணைப்புப்…

  12. (எம்.எப்.எம்.பஸீர்) ‘முஜாஹித்தீன் for அல்லாஹ் ‘ (mujahideen for allah) எனும் பெயரிலான வட்ஸ் அப் குழுமம் ஒன்றின் ஊடாக ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் செயற்பாடுகள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான குண்டுதாரியான தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவன் ஸஹ்ரான் ஹாஷிமின் போதனைகளுடன் தொடர்புபட்டதாக கூறப்படும் 702 இலங்கை தொலைபேசி இலக்கங்கள் மற்றும் அவற்றின் உரிமையாளர்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்திய தேசிய உளவுத்துறை அந்நாட்டில் கைது செய்த ஐ.எஸ்.ஐ எஸ் சந்தேக நபரின் தொலைபேசியிலிருந்து பெற்றுக்கொண்ட தகவல்களுக்கு அமைய, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் ஊடாக அளித்த தகவல் பரிமாற்றத்தை மையப்படுத்தி, பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரம…

  13. தமிழ்த் பேசும் மக்களின் தலைவர்கள் 2ம் திகதி யாழில் சந்திப்பு! 13ஆம் திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக, அது ஆரம்ப கட்டத்தில் அமுல்படுத்தப்பட்ட நிலையிலேயே, நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கத்தை ஒருமித்த நிலைப்பாட்டில் கோருவதற்கான கலந்துரையாடல் 2ம் திகதி நவம்பர் மாதம் காலை பத்து மணி தொடக்கம் யாழ்ப்பாணம் திண்ணை ஹோட்டலில் ஏற்கனவே தீர்மானிக்க பட்டதன் பிரகாரம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் சி வி விக்னேஸ்வரன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஜனநாய மக்கள் விடுதலை முன்னணியின்( புளட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்…

  14. யாழ். கீரிமலையில் கடற்படையினரால் காணி சுவீகரிப்பு!! யாழ். கீரிமலையில் கடற்படையின் தேவைக்காக தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை சுவீகரிக்கும் முயற்சிக்கு எதிராக போராட்டம் இடம்பெற்று வருகின்றது. காணி உரிமையாளர்களின் ஒப்புதல் இல்லாமலே கீரிமலை – நகுலேஸ்வரம் ஜே/226 கிராமசேவகர் பிரிவில் காணிகளை சுவீகரிப்பிற்கான அளவீட்டு பணிகள் இடம்பெறவிருந்தன. இருப்பினும் அங்கு கூடிய காணி உரிமையாளர்களும் பொதுமக்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் வகையில் ஈடுபட்டுள்ளனர். அடாத்தாக கடற்படையினர் கைப்பற்றியுள்ள குறித்த காணிகளை மீட்டுத்தருமாறு பலதடவைகள் அரச அதிகாரிகளிடம் கோரிக்கை முன்வைத்தபோதும் இதுவரை அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும்…

  15. மட்டு.கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள நிலப்பகுதியினை வேலியிட்டு அடைக்க முயற்சி! மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள வடிச்சல் நிலப்பகுதியினை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வேலியிட்டு அடைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி பிரதேச மக்களினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. கல்லடியை ஊடறுத்து கல்லடி பாலத்தினை இணைக்கும் வகையில் உள்ள குறித்த வடிச்சல் பகுதியை இன்று சிலர் வேலியடைக்கமுற்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் உள்ள கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,பிரதேச கிராம சேவையாளர் உட்பட கிராம மக்கள் அப்பகுதிக்கு வந்து குறித்த சம்பவத்தினை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதன்போது அங்குவந்த பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யப்படும் பொதுமக்களி…

  16. முழுமையாக தடுப்பூசி பெற்ற இலங்கையர்களுக்கு பிரித்தானியாவிற்குள் பிரவேசிக்க இன்று முதல் அனுமதி! பிரித்தானியாவிற்குள் பிரவேசிப்பதற்கு இன்று (திங்கட்கிழமை) முதல் இலங்கையின் தடுப்பூசி சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், அஸ்ட்ரா செனெகா, பைஸர் மற்றும் மொடர்னா தடுப்பூசி வகைகள் செலுத்தப்பட்டமைக்கான சான்றிதழ் பிரித்தானியாவில் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி சட்டத்தின் கீழ், சுற்றுலா பயணிகள் பிரித்தானியாவிற்கு வருகை தருவதாயின், குறைந்தது 14 நாட்களுக்கு முன்னர் முழுமையாக தடுப்பூசி பெற்றிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தேசிய அளவிலான ப…

  17. கரன்னகொடவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை வாபஸ் குறித்த இரகசிய அறிக்கை இன்று தாக்கல் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை வாபஸ் பெற்றமைக்கான காரணங்களை விளக்கும் இரகசிய அறிக்கை இன்று நீதிமன்றில் சமர்பிக்கப்படவுள்ளது. குற்றப்பத்திரிகையை வாபஸ் பெற்றமை தொடர்பாக தொகுக்கப்பட்ட அறிக்கைதம்மிடம் உள்ளதாக தெரிவித்த சட்டமா அதிபர் திணைக்களம், அதனை இரகசிய அறிக்கையாக தாக்கல் செய்வதற்கு நீதிமன்ற அனுமதியை கோரியிருந்தது. அதற்கமைவாக குறித்த அறிக்கையை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் கொண்ட அமர்வு சட்டமா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்தது. வசந்த கரன்னகொடவுக்கு எதிராக, நீதிபதிகள் மூவ…

  18. “இயற்கைக்கு எதிராக மாறாத புதிய விவசாயப் புரட்சியொன்று அவசியம்” உலகத் தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு! இயற்கைக்கு எதிராக மனிதர்கள் செயற்படுவதற்குப் பதிலாக, அதனோடு மிகவும் இணைந்துச் செயற்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், நிலையான அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட புதிய விவசாயப் புரட்சியொன்று அவசியம் என்று எடுத்துரைத்தார். ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இடம்பெற்று வரும் COP: 26 என்றழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டுக்கு இணையாக “நைதரசனை மீண்டும் கண்டுபிடித்தல், காலநிலை மாற்றம், சுகாதார உயிரியல் பன்முகத்தன்மை மற்றும் நிலையான பொருளாதாரத்துக்கான த…

    • 2 replies
    • 263 views
  19. சுத‌ந்திர‌த்துக்கு பின் வ‌ந்த‌ எந்த‌ அர‌சாங்க‌மாவ‌து த‌வ‌று செய்யாம‌ல் இருந்த‌துண்டா? முத‌லாவ‌தாக‌ ஆட்சிக்கு வ‌ந்த‌ unp அர‌சாங்க‌ம் க‌ல்லோயா திட்ட‌த்தை கொண்டு வ‌ந்து அம்பாரை முஸ்லிம்க‌ளை விர‌ட்டிய‌து. அத‌ன் பின் வ‌ந்த‌ ப‌ண்டார‌நாய‌க்கா த‌னிச்சிங்க‌ள‌ம் ச‌ட்ட‌த்தை கொண்டு வ‌ந்து நாட்டை சீர‌ழித்தார். அத‌ன்பின் வ‌ந்த‌ ஸ்ரீமா அர‌சாங்க‌ம் ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு மாவ‌ட்ட‌த்திலிருந்து க‌ல்முனை மாவ‌ட்ட‌த்தை பிரித்து அம்பாரை பெரும்பான்மை சிங்க‌ள ஊர்க‌ளை இணைத்து அம்பாரை மாவ‌ட்ட‌ம் ஆக்கினார். புத்த‌ள‌த்தில் ப‌ள்ளியில் துப்பாக்கிச்சூடு. பின்ன‌ர் வ‌ந்த‌ ஜே ஆரின் ஆட்சியில் வ‌ர‌லாறு காணாத‌ துன்ப‌ம். முஸ்லிம்க‌ளை ஒதுக்கிவிட்டு இந்திய‌ இல‌ங்கை …

    • 7 replies
    • 587 views
  20. ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின்... சட்டவரைபில், பொதுபல சேனாவின் முன்மொழிவுகளும் உள்ளடக்கப்படும் – ஞானசாரர் ஒரே நாடு, ஒரே சட்டம் செயலணியினால் தயாரிக்கப்படும் சட்டவரைபில் பொதுபல சேனா அமைப்பின் முன்மொழிவுகளும் உள்ளடக்கப்படும் என குறித்த செயலணியின் தலைவரும் குறித்த அமைப்பின் செயலாளருமான கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் பொதுபல சேனா அமைப்பு எழுப்பிய பிரச்சினைகள் இன்றும் அவதானிக்கப்பட வேண்டியவையாக உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன் விளைவாக, பொதுபல சேனா எழுப்பிய மற்றும் விவாதிக்கப்பட்ட பிரச்சினைகள் செயலணியால் விவாதிக்கப்பட்டு க…

    • 2 replies
    • 328 views
  21. நாம் மீண்டும் முடக்கத்திற்கு செல்ல தயாராகின்றோமா ? - விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள் ! (எம்.மனோசித்ரா) நாட்டில் கடந்த ஒரு வாரமாக கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை வீழ்ச்சியில் மந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே தீபாவளி பண்டிகை, திருமண வைபவங்கள் மற்றும் மரண சடங்குகள் உள்ளிட்டவற்றில் பங்குபற்றும் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுவது அவசியம் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். நாம் மீண்டும் பழைய முடக்க முறைமைக்கு செல்வதற்கு தயாராகின்றோமா ? அல்லது நாடு என்ற ரீதியில் முன்னோக்கிச் செல்கின்றோமா ? என்பதை நாமனைவரும் பொறுப்புடன் செயற்படுவதன் ஊடாகவே தீர்மானிக்க முடியும் என…

  22. (எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில், கொழும்பு, ட்ரயல் அட்பார் விஷேட நீதிமன்றில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றப் பத்திரத்தை வாபஸ் பெற சட்ட மா அதிபர் எடுத்துள்ள தீர்மானத்தை அறிய முன்வைக்கப்பட்டுள்ள தகவல் அறியும் உரிமை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட, தனது ஒரே மகனை இழந்துள்ள கொழும்பு - கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த சரோஜா நாகநதன் எனும் தாய் முன்வைத்த தகவல் அறியும் விண்ணப்பமே இவ்வாறு நிராகரிக்கப்படுவதாக சட்ட மா அதிபர் சார்பில்…

  23. எதிர்காலத்தில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் – எஸ்.பி. திஸாநாயக்க நாட்டுக்கு வருமானம் இல்லை. பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, எதிர்காலத்தில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும். பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். கொத்மலை – பூண்டுலோயா பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” சுற்றுலாத்துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, ஆடை ஏற்றுமதி ஆகியன பாதிக்கப்பட்டுள்ளதால் வருமான வழிகள் இழக்கப்பட்டுள்ளன. இதனால் அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளத…

  24. நாட்டு மக்களுக்கு... இராணுவத் தளபதியின், அறிவிப்பு! இலங்கையில் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று நிலவுவதால் மக்கள் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ள வேண்டும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்ட இராணுவ வைத்தியசாலையில் இன்று (திங்கட்கிழமை) காலை இராணுவத்தினருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மக்கள் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ளாவிடின் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1247761

  25. கரன்னகொட விவகாரம் – இரகசிய அறிக்கையை தாக்கல் செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி! முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை மீளப்பெறுவதற்கான காரணங்களை விளக்கி இரகசிய அறிக்கையை தாக்கல் செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) சட்டமா அதிபருக்கு அனுமதி வழங்கியுள்ளது. சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, கரன்னகொடவுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகளை மீளப்பெற்றமை தொடர்பில் தொகுக்கப்பட்ட இரகசிய அறிக்கையை தமது திணைக்களம் வைத்துள்ளதாக தெரிவித்ததோடு, அதனை இரகசிய அறிக்கையாக தாக்கல் செய்வதற்கு நீதிமன்றத்தின் அனுமதியையும் கோரினார். இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.