Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சண்முகம் தவசீலன் - மதம் மாறாவிட்டால் ஆண்டவரின் சாபம் கிடைக்கும் என மிரட்டி மதம் மாற்ற முயன்ற குற்றச்சாட்டில் 3 பேர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் ஒன்று, முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம், கிழவன்குளம் கிராமத்தில், நேற்று (28) இடம்பெற்றுள்ளது. மதம் மாற்றச் சென்ற கிறிஸ்தவ சபையைச் சேர்ந்த ஒரு குழுவினர், தன்னை பேசி, அச்சுறுத்தல் விடுத்ததாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து, மாங்குளம் பொலிஸாரால் வாகனத்துடன் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிழவன்குளம் பகுதிக்கு, ஹயஸ் ரக வான் மற்றும் மோட்டர் சைக்கிள் என்பவற்றில் சனிக்கிழமை (27) சென்ற ஒரு குழுவினர், அங்குள்ள வ…

  2. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் யாழில் போராட்டம்! வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நாவலர் வீதியிலுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னால் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. வலிந்து காணாமல்போனோருக்கு மரணச் சான்றிதழ் வேண்டாம், இழப்பீடு வேண்டாம், காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம் வேண்டாம், சர்வதேசமே நீதியைத் தா போன்ற பல்வேறு கோஷங்கள் இதன்போது எழுப்பப்பட்டன. ஒவ்வொரு மாதமும் 30ஆம் திகதி வலிந்து காணாமல் போனோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/…

  3. யாழ். மாநகரசபை முதல்வரை சந்தித்தார் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் இலங்கை நாட்டுக்கான ஜேர்மன் தூதுவர்Holger seubrt க்கும் யாழ். மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று (திங்கட்கிழமை) யாழ். மாநகரசபை முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பில், தமிழ் மக்களின் நீண்ட கால கோரிக்கையாகவுள்ள சமஷ்டி அடிப்படையிலான தீர்வை பெற்றுக்கொள்வதற்கும், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட இன அழிப்பு உட்பட்ட அநீதிகளுக்கு நீதியை பெற்று கொடுப்பதற்கும் ஜேர்மன் உள்ளிட்ட சர்வதேச சமூகம் உதவ வேண்டும் என்ற கோரிக்கையை தூதுவரிடம் முதல்வர் முன்வைத்துள்ளார். மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்ட மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவ…

  4. யாழ்ப்பாணம் மாதகல் குசுமந்துறை பகுதியில் குவிக்கப்பட்டுள்ள கடற்படையினர் யாழ்ப்பாணம் மாதகல் குசுமந்துறை கிராம சேவையாளர் பிரிவு – 150, பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியாருக்கு சொந்தமான 1 பரப்பு காணியை சுவீகரிப்பதற்கான காணி அளவீட்டு பணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெறவுள்ளது.இந்நிலையில் குறித்த காணியை அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக அரசியல்வாதிகள், அப்பகுதி மக்கள் என பலரும் குறித்த காணிக்கு முன்பாக கூடிய வேளை, கொட்டான்களுடன் கடற்படையினர் அவர்களை சூழ்ந்து கொண்டு, அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் யாழ்ப்பாணம் மாதகல் குசுமந்துறை பகுதியில் கடற்படையின…

  5. இலங்கைக்கு மீண்டும் சீனாவின் அபாய சங்கு- கடனை செலுத்தாத உகாண்டாவின் சர்வதேச விமான நிலையம் கபளீகரம்.! கம்பாலா: தம்மிடம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த இயலாததால் உகாண்டா நாட்டின் ஒரே ஒரு சர்வதேச விமான நிலையத்தையும் சீனா தன்வசமாக்கி இருக்கிறது. சீனாவிடம் பெருந்தொகையிலான பணத்தை கடனாக வாங்கி ஏற்கனவே தமது நாட்டின் நிலப்பரப்புகளை சீனாவிடம் இழந்து இருக்கும் இலங்கைக்கு இது மிகப் பெரிய இன்னொரு எச்சரிக்கை மணி என்கின்றனர் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள். கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டா, 2015-ம் ஆண்டு சீனாவிடம் இருந்து ரூ1,533 கோடி கடன் பெற்றது. என்டெபே சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக சீனாவிடம் இந்த கடனைப் பெற்றது உகாண்டா. இது தொடர்பான ஒப்பந்தத்தில…

  6. எந்நிலைவரினும் விட்டுக்கொடுக்கமாட்டோம் - தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர்நாள் உத்தியோகபூர்வ அறிக்கை தமிழீழத் தேசத்தின் இறைமையை எந்நிலைவரினும் விட்டுக்கொடுக்கமாட்டோம் என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் நாள் - 2021 தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கை வெளிவந்துள்ளது தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27.11.2021 எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழ மக்களின் இறைமையை மீட்டெடுத்து, தமிழீழத்தேச அரசமைக்கும் புரட்சிகர வரலாற்றுப்பயணத்திற்காக, விடுதலைக்கனவுடன் தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரத் தெய்வங்களை வணங்கி, நினைவுகூர்ந்து, அவர்கள் கனவு நனவாக நாம் உறுதியுடன் போராட…

    • 16 replies
    • 1.3k views
  7. எமது மக்களுக்கும் சுகந்திரமில்லை ஊடகவியலாளர்களுக்கும் சுதந்திரம் இல்லை – சாணக்கியன் சாடல் November 29, 2021 முல்லைத்தீவில் ஊடகவியலாளர் ஒருவர் மீது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து நீதியானதும், சுயாதீனமானதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் செய்தி அறிக்கையிடலில் ஈடுபட்ட ஊடகவியலாளர் மீது கடந்த 27ஆம் திகதி இராணுவத்தினர் மிலேச்சத்தனமான முறையில் திட்டமிட்ட வகையில் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதன்போது ஊடகவியலாளர் விஸ்வ…

  8. மாதகலில் நாளை காணி அளவீடு – போராட்டத்திற்கு அழைப்பு! November 28, 2021 மாதகலில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சிக்காக காணி அளவீட்டு பணிகள் நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ளது. மாதகல் கிழக்கில் 3 பரப்பு காணி கடற்படையினரின் தேவைக்கு சுவீகரிப்புக்காக அளவீட்டு பணிகள் நாளைய தினம் திங்கட்கிழமை 09 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது. அதேவேளை மாதகல் மேற்கில் 16 ஏக்கர் காணி அளவீட்டு பணிகள் காலை 11 மணியளவில் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த காணி அளவீட்டு பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக நாளை குறித்த காணிகளுக்கு முன்பாக காணி உரிமையாளர்கள் , அரசியல்வாதிகள் , அப்பகுதி மக்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர…

  9. வவுனியாவில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்! வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் இன்றைய தினம் ( திங்கட்க்கிழமை ) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டஅது. இலங்கை ரீதியாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் அரச உத்தியோகத்தர்களால் நாட்டிற்கு சுமை என்ற கருத்தை அரசாங்கம் விலக்கிக்கொள்ள வேண்டும், அரச உத்தியோகத்தர்களின் அடிப்படை சம்பளத்தை பத்தாயிரத்தால் உயர்த்த வேண்டும், அரச ஊழியர்களின் வயதெல்லையை 65 வயதாக உயர்த்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அரச ஊழிர்களின் கருத்து சுதந்திரத்தை மறுக்காதே ஆகிய நான்கு விடயங்களை முன்வைத்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா மாவட்ட செயலகத்த…

  10. தமிழ் அரசியல் தலைமைகளின், ஒற்றுமை முயற்சிக்கு... சித்தார்த்தன் தலைமை தாங்க வேண்டும்- மாவை தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் தலைமைகளின் ஒற்றுமை முயற்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தலைமை தாங்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தமிழீழ மக்கள் கழகத்தின் பொதுச்செயலாளர் சதானந்தனின் நினைவுதின நிகழ்வில் பங்கெடுத்து உரையாற்றும்போதே, இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், தமிழ் மக்களுடைய பிரச்சினை தொடர்பாக சரியான ஒரு கோட்டில், நாங்கள் பயணிக்கவில்லை என்பதை பெரும்பாலானோரின் கருத்துக்கள் தெளிவாக கோடிட்டு காட்டுகின்றன என மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள…

  11. வடக்கில் மேலும் 3,000 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிக்க தீர்மானம் வடக்கில் மேலும் 3,000 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் மேய்ச்சல் நிலத்திற்கான பற்றாக்குறை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இன்று சபையின் கவனத்திற்கு கொண்டுவந்தார். இந்நிலைமை காரணமாக மாவட்டத்தில் பண்ணையாளர்களுக்கும் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படுவதாகவும் நாடாளுமன்றில் குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே வடக்கில் மாத்திரமின்றி நாட்டின் பல பகுதிகளில் இந்தப் பிரச்சினை காணப்படுவதாக தெரிவ…

  12. பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு வருமாறு முன்னாள் அரசியல் கைதியொருவருக்கு அழைப்பு வவுனியாவில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதி ஒருவரை, பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வருமாறு பயங்கரவாத விசாரணை பிரிவினரால் இன்று (திங்கட்கிழமை) அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. வவுனியா- தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதியான செல்வநாயகம் ஆனந்தவர்ணன் என்பவரையே, எதிர்வரும் 01.12.2021 ஆம் திகதி கொழும்பில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவுக்கு வருகை தருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அரசியல் கைதிக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பாணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசா…

  13. அமெரிக்காவினால் நடத்தப்படும் மெய்நிகர் உச்சி மாநாட்டில், இலங்கை புறக்கணிக்கப்பட்டமை ஆச்சரியமில்லை – UNP ஐக்கிய அமெரிக்காவினால் நடத்தப்படும் ஜனநாயகம் தொடர்பான மெய்நிகர் உச்சி மாநாட்டில் இலங்கை புறக்கணிக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை என ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தெரிவித்துள்ளது. ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அண்மையில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு கண்டனம் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சி, கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட உயர் நெடுஞ்சாலையை அரசாங்கம் திறந்து வைப்பதாகவும் குற்றம் சாட்டியது. இந்த தாக்குதல்களுக்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவோ அல்லது அமைச்சரவையின் முன்னாள் அமைச்சர்களோ பொறுப்பென ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு …

  14. இலங்கையில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக அனுமதிக்க பெண் எம்.பி.க்கள் ஆதரவு ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் 'விபசாரம்' என்று அழைக்கப்படும் பாலியல் தொழிலை சட்டமாக்குவது தொடர்பான விவாதம் பரவலாக எழுந்திருக்கிறது. நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் உறுப்பினர்களில் சிலர் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், பாலியல் தொழிலுக்கு சட்ட அனுமதி வழங்குவதற்கு எதிர்ப்பும் காணப்படுகிறது. சுற்றுலா நாடு என்ற விதத்தில் இலங்கையில் இரவு நேர பொருளாதாரம் அமல்படுத்தப்பட வேண்டியது…

  15. மாவீரர்களை நினைவுகூறிய பிற்றர் இளஞ்செழியன் அதிரடியாக கைது! சற்றுமுன் திடீர் பரபரப்பு

  16. மொழியால் ஒன்றுபட்ட தமிழ் - முஸ்லிம் சமூகங்கள் அரசியல் தளத்தில் ஒன்றுபடவேண்டும் : கனேடியவாழ் இலங்கை முஸ்லிம் மக்கள் மத்தியில் சுமந்திரன் உரை (நா.தனுஜா) இலங்கையில் எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கின்ற, மொழியால் ஒன்றுபட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் ஒன்றிணைந்து செயலாற்றுவதன் ஊடாக மாத்திரமே பேரினவாதத்தின் அடக்குமுறைகளை வெற்றிகொள்ளமுடியும். தமிழ்பேசுபவர்கள் வாழ்கின்ற, 'தமிழ்' என்ற மொழி அடையாளத்தைக்கொண்ட பிரதேசத்தில்தான் நாங்கள் அதிகாரப்பகிர்வைக் கேட்கின்றோம். எனவே இவ்விடயத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைவதன் ஊடாக அதிகாரங்கள் பகிரப்படுவதற்கான வாய்ப்பு பன்மடங்காக உயரும் என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பி…

  17. விஷ்வா மீதான தாக்குதல்; இராணுவத்தினர் மூவர் முல்லைத்தீவுப் பொலிஸாரால் கைது முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் ஊடகவியலாளர் விஸ்வசந்திரன் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேகத்தில் இராணுவத்தினர் மூவர் முல்லைத்தீவு பொலிஸாரால் இன்றுகாலை (28) கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று காலை (27) முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்து முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் விஸ்வசந்திரன்மீது இராணுவத்தினரால் மிலேச்சத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்திருந்தனர். இதில் காயமடைந்த ஊடகவியலாளர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார் . இன்றையதினம்(28) முல்லைத்தீவு நகரில் தாக்குதலை கண்டித்து கண்ட…

  18. ஒற்றையாட்சிக்குள் எந்தவொரு தீர்வினையும் ஏற்கத்தயாராக இல்லை : ஐ.நா.உதவிபொதுச்செயலாளரிடத்தில் கஜேந்திரகுமார் தெரிவிப்பு (ஆர்.ராம்) இலங்கையின் ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள் எந்தவொரு அரசியல் தீர்வினையும் ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இல்லை என்று ஐக்கியநாடுகள் உதவி பொதுச் செயலாளரிடத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் ஒற்றையாட்சிக் கட்டமைப்பை வலுவாக்கி சிங்கள, பௌத்த நாடாக இலங்கையை பிரகடனப்படுத்துவதற்கு முயல்வதாகவும் அதனை தடுப்பதற்கு சர்வதேசத்தின் முழுமையான அழுத்தம் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கு வருகை தந்திருந்த ஐ.நா உதவி பொதுச்செயலாளர் காலித் கியாரிக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் இடையிலான சந…

  19. முல்லைத்தீவு சூரியன் ஆற்றுப்பகுதியில் 1900 ஏக்கர் காணியை சுவீகரிக்க நடவடிக்கை (ஆர்.ராம்) முல்லைத்தீவு மாவட்டத்தின் சூரியன் ஆற்றுப்பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான 1900 ஏக்கர் அளவுள்ள விவசாய காணிகளை மகாவலித் திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்காக சுவீகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 1970 ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் சூரியன் ஆற்றுப்பகுதியில் தலா 10 ஏக்கர்கள் வீதம் 190 குடும்பங்களுக்கு 1900ஏக்கர்கள் விவசாயக் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டு அதற்கான காணிப் பெமிற்றுக்களும் வழங்கப்பட்டுள்ளது. போரின் பின்னரான சூழலில் உருவாக்கப்பட்ட வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்டதாக ‘கலம்பவெவ என்றொரு கிராமம் உருக்கப்பட்டது. இந்தக் கிரமத்தி…

  20. மலையக மக்கள் ஒரு ” தேசிய இனம்” என்ற வகையில் அங்கீகரிக்கப்படவேண்டும்- தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணைத்தலைவர் செல்வம் எம்.பி இலங்கையில் பெருந்தோட்ட மக்கள் ஒரு தேசிய இனமாக அடையாளப்படுத்தப்படவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கோரப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணைத்தலைவரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவருமாகிய நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இந்தக் கோரிக்கையை விடுத்தார். எனினும் பெருந்தோட்ட தேசிய இனத்தின் தொழில்சார் உாிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இந்தநிலையில் அவர்களுக்கான காணி பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும் என்றும் செல்வம் அடைக்கநாதன் கோரிக்கை விடுத்தார். மலையக மக்களுக்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட…

  21. வடக்கில் நடைபெற்ற வன்முறைகள் தொடர்பில் எதிரணி விமர்சனம்! மாவீரர் நாளான நேற்று வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் மேற்கொண்ட அராஜகங்களைப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வன்மையாகக் கண்டித்துள்ளது. “இது ஜனநாயக நாடு எனில் போரில் இறந்தவர்களை அமைதியான முறையில் நினைவேந்த அவர்களின் உறவுகளுக்கு உரித்துண்டு. அதை ஆயுதமுனையில் அடக்க முயல்வது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கில் ஆயுதப் படைகள் நடந்துகொண்ட விதம் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் இராணுவ ஆட்சிக்கு இதுவொரு சிறந்த எடுத்துக்காட்டு” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிர…

  22. மட்டக்களப்பு: ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையினை கண்டித்து போராட்டம் November 28, 2021 முல்லைதீவு மற்றும் திருகோணமலை பகுதியில் இராணுவத்தினராலும் குண்டர்களினாலும் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையினை கண்டித்தும் ஊடகவியலாளர்களை தாக்கியவர்களை கைதுசெய்யக்கோரியும் மட்டக்களப்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்,மட்டு.ஊடக அமையம்,மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் என்பன இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்தது. வடக்கு கிழக்கில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் நீதிகோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் என்னும் தொனிப்பொருளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு கா…

  23. முதல் மாவீரர் சங்கர் சத்தியநாதன் இல்லத்தில் நினைவேந்தல்! தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முதல் மாவீரர் லெப்ரினன் சங்கருக்கு, ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. மாவீரர் லெப்ரினன் சங்கருடைய இல்லத்தில் கப்டன் பண்டிதர் அவர்களுடைய தாயர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபை உப தவிசாளரும் தற்போதைய உறுப்பினருமான க.சதீஸ் ஆகியோர் ஈகை சுடரேற்றி, அவருக்கு அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தியுள்ளனர். https://www.meenagam.com/முதல்-மாவீரர்-சங்கர்-சத்/

  24. மாவீரர்களின் கல்லறைகளைச் சிதைத்து அரச பயங்கரவாதத்தை அரசே செய்தது: கோப்பாய் தவிசாளர் நிரோஷ்! AdminNovember 28, 2021 கோப்பாய் உள்ளிட்ட மாவீரர் துயிலும் இல்லங் களை அரசு படைத்தரப்பின் ஊடாக சிதைத்தது நாட்டின் வரலாற்றில் வெட்கக்கேடான அரசபயங்கரவாதம் ஆகும் . போரில் இறந்தவர்களைக் கூட மலினப்படுத்தும் இன வாதமும் வெறித்தனமும் அரசிடம் நிலைத்திருப்பது மானிடத்தன்மை அல்ல என தவிசாளர் நிரோஷ் தெரி வித்தார் . வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கும் முகமாக ஈகச்சுடர் ஏற்றி வைத்து உரையாற்று கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் . மேலும் , நினைவுகூர்தல் என்பது எமது உரிமையா கும் . இன்றைய நிலையில் அந்த நினைவுகூரும் உரி மையை இராணுவ பிரசன் னங்கள் , அடாவடித்தனங் கள் ஊடாகத…

  25. அதிக மழைவீழ்ச்சி காரணமாக இரணைமடுக் குளத்தின் நான்கு வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன வடக்கு மாகாணத்தில் பாரிய குளமான இரணைமடுக் குளத்தின் நான்கு வான் கதவுகள், கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் ராஜகோபால் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோரினால் திறந்து விடப்பட்டுள்ளன.இதேவேளை கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் ராஜகோபு, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளதாவது, இரணைமடு குளத்தின் நீர்வரத்து அதிகரித்தமையினால் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டன.இரணைமடு குளத்தில் இருந்து வெளியேறுகின்ற நீரினால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தெரிவித்துள்ளார். அதிக மழைவீழ்ச்சி காரண…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.