ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143607 topics in this forum
-
(எம்.மனோசித்ரா) இலங்கைக்கான மலேஷியாவின் பிரதி உயர்ஸ்தானிகராக 2009 - 2011 காலப்பகுதியில் கடமையாற்றிய மேஜர் ஜெனரல் உதய பெரேரா அமெரிக்காவினால் போர்க்குற்ற சந்தேகநபராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதனால் அவருக்கு அமெரிக்காவுக்குள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேஜர் ஜெனரல் உதய பெரேரா தனது குடும்பத்தாருடன் கடந்த 5 ஆம் திகதி அமெரிக்கா செல்வதற்காக பண்டாநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்ற போது , அவருக்கு இவ்வாறான தடை விதிக்கப்பட்டுள்ளமை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. 2020 பெப்ரவரி 14 ஆம் திகதி இராணுவத்தளபதி சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இவ்வாறு அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டது. அது மாத்திரமின்றி கடற்படை அதிகாரி…
-
- 2 replies
- 264 views
-
-
வெளிநாட்டு பிரஜையை திருமணம் செய்துகொள்ள பாதுகாப்பு அமைச்சின் அனுமதி அவசியம்! வெளிநாட்டு பிரஜையை திருமணம் செய்துகொள்ளும் இலங்கை பிரஜை அதற்காக பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக பதிவாளர் திணைக்களத்தினால் சகல மாவட்ட பதிவாளர் திணைக்களங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இந்த விதிகள் அமுலுக்கு வரும் வகையில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு பிரஜையை இலங்கை பிரஜை ஒருவர் திருமணம் செய்துகொள்ளும்போது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெளிநாட்டு பிரஜை ஒருவரை இலங்கை பிரஜை திருமணம…
-
- 9 replies
- 881 views
-
-
மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எவர் வந்தாலும் நாங்கள் வரவேற்போம் - டக்ளஸ் எங்களை அபிவிருத்தி செய்வதற்கு எங்களிடம் நிதி வசதிகள் இல்லை வெளிநாட்டவர்கள் வரும்போது நாட்டிற்கும், மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் யார் வந்தாலும் நாங்கள் வரவேற்போம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழுள்ள விவசாயிகளின் பிரச்சனை மற்றும் பல்வேறுபட்ட மாவட்டத்தின் பிரச்சினைகள் தொடர்பில் இன்று (28-12-2021) கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கிளிநொச்சி ம…
-
- 2 replies
- 301 views
-
-
யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு உண்மையை எடுத்து கூறியதற்காக தங்களது பதவிகளை ஜனாதிபதி பறிப்பாராக இருந்தால் அது தொடர்பில் தாம் கவலைப்படப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்த அமைச்சர் கம்மன்பில, அமைச்சுப் பதவிகளைவிட நாட்டைப் பாதுகாப்பதே முக்கியமெனவும் ஜனாதிபதிக்கு பதிலளித்துள்ளார். அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக இருக்கும் வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோர் அமைச்சரவையில் யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக உயர்நீதிமன்றம் சென்றிருப்பது, அந்தத்தீர்மானத்தை விமர்சித்தமை ஆகியன தவறென, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். ஜனாதிபதியின் இந்த கூற்று தொடர்பில் ஊடகமொன்றுக்குக் கர…
-
- 3 replies
- 417 views
-
-
கிளிநொச்சி மயில்வாகனபுரத்தில் நேற்றிரவு(27) நத்தார் நிகழ்வு முடித்து கார் ஒன்றில் பயணித்த அருட்தந்தையர்களின் கார் வீதியில் மறிக்கப்பட்டு அடித்து உடைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் அருட்தந்தையர்கள் தெரிவிக்கையில், நேற்றிரவு(27) நத்தார் ஒன்றுகூடல் நிகழ்வு முடித்து அதில் கலந்துகொண்ட ஏழு அருட்தந்தையர்களில் ஒருவரை தவிர ஏனையவர்கள் தங்களின் அருட்தந்தையர்களுக்குரிய ஆடைகளுடன் கார் ஒன்றில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது சுமார் 10 பேர் கொண்ட இளைஞர் குழுவொன்று மது போதையில் மயில்வாகனபுர வீதியில் காரை மறித்து பணம் கோரினர், அருட்தந்தையர்கள் மறுப்புத் தெரிவித்த போது அவர்கள் பயணித்த வாகனம் அடித்து உடைக்கப்பட்டதோடு, அருட்தந்தையர்கள் மீதும் தா…
-
- 0 replies
- 275 views
-
-
நிலுவை சம்பளத்துடன் வைத்தியர் ஷாபி சிஹாப்தீனை மீண்டும் பணியில் அமர்த்த தீர்மானம் சட்டவிரோத கருத்தடை அறுவை சிகிச்சை செய்த குற்றச்சாட்டின் பேரில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி சிஹாப்தீனை மீண்டும் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர் பணியில் இல்லாது விடுமுறையில் இருந்த காலத்துக்கான சம்பள நிலுவையையும் வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட சுகாதார அமைச்சின் ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. TAGS வைத்தியர் ஷாபி சிஹாப்தீனை மீண்டும் பணியில் அமர்த்த தீர்மானம் | Virakesari.lk
-
- 22 replies
- 1.6k views
-
-
யாழ் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குள் 2019 மே 03ஆம் திகதி இராணுவத்தினர் நடத்திய தேடுதலின் போது, கைது செய்யப்பட்ட முன்னாள் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளான மாணவர்கள் இருவருக்கும் எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதனடிப்படையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் உள்ள சான்றுப்பொருள்களை பாரப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு மே 3ஆம் திகதி இராணுவத்தினர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்திலும், விடுதிகளிலும் பெருமெடுப்பில் சோதனைகளை முன்னெடுத்திருந்தனர். நூற்றுக்கணக…
-
- 0 replies
- 184 views
-
-
இலங்கை முழுவதும் மீண்டும் மலேரியா பரவும் அபாயம் – மலேரியா கட்டுப்பாட்டுப் பிரிவு இலங்கை முழுவதும் மீண்டும் மலேரியா நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மலேரியா கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.இவ்வருடம் 25 மலேரியா நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 24 பேர் ஆபிரிக்க நாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்த இலங்கையர்கள் எனவும் வைத்தியர் ரணவீர சுட்டிக்காட்டியுள்ளார்.கடந்த 25ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மலேரியா நோயாளி அடையாளம் காணப்பட்டார். இவர் கடந்த 7ஆம் திகதி ஆபிரிக்க நாடொன்றிலிருந்து இலங்கை வந்துள்ளார். இந்நிலையில் யாழ். மாவட்டத்தில் மலேரியா பரவினால் அது நாடு முழுவதும் அனைத்து மா…
-
- 0 replies
- 149 views
-
-
விமல்,வாசு,கம்மன்பில ஆகியோர் ஆகியோர் நீதிமன்றத்தை நாடியமை தவறு – ஜனாதிபதி கோட்டாபய கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலைய விவகாரத்தில் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் நீதிமன்றத்தை நாடியமை தவறு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.மறைந்த அமைச்சர் லலித் அத்துலத்முதலியும் அவ்வாறானதொரு நடவடிக்கையை முன்னெடுத்த போது, நீதியரசர் மார்க் பெர்னாண்டோ இந்த விடயம் தொடர்பாக தீர்ப்பு வழங்கியிருந்தார் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார். நேற்று இடம்பெற்ற பத்திரிக்கை ஆசிரியர்களுடனான சந்திப்பின்போது, முக்கிய விடயங்களில் அரசாங்கத்திற்குள் காணப்படும் பலதரப்பட்ட கருத்துக்கள் தொடர்பாக வினவ…
-
- 0 replies
- 140 views
-
-
சிங்களச் சட்டமே நாட்டின் சட்டம்!!! - ஞானசார தேரர் அதன் கீழேயே தமிழர்கள், முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்ந்தார்கள் என்கிறார் ஞானசாரர் ஒரு நாடு என்றால் ஒரே இனமாக மாறவேண்டும். சிறுபான்மை இனத்தவர் என்ற வசனம் பயன்படுத்தக் கூடாது. கலாசாரம், இனம் என்பதையும் தாண்டி நாம் அனைவரும் ஒன்றாக சிங்கள நாட்டுக்குள் வாழவேண்டும். இங்கு தமிழர்கள் வாழலாம். முஸ்லிம்கள் வாழலாம். ஆனால் இந்த நாடு சிங்கள நாடாகவே இருக்கவேண்டும். இன, மத அடிப்படையி வெவ்வேறு சட்டங்கள் இருக்க முடியாது. இந்த நாட்டில் உள்ள தனிப்பட்ட சகல சட்டங்களும் நீக்கப்படவேண்டும். சிங்களச் சட்டமே எம் அனைவரினதும் சட்டமாகும். இவ்வாறு ’ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் தலைவரும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலருமான ஞானசார தேரர் த…
-
- 2 replies
- 368 views
-
-
சீனாவிடமிருந்து 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் இலகு கடனாம்! December 27, 2021 இலகு பணப்பரிமாற்றத்தின் கீழ் சீன மத்திய வங்கியிடமிருந்து 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், இந்த வாரத்துக்குள் குறித்த நிதி இலங்கைக்கு கிடைக்கப்பெறும் என திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல கூறியுள்ளார். https://globaltamilnews.net/2021/171077
-
- 2 replies
- 360 views
-
-
13வது திருத்தச் சட்டம் அகற்றப்படுமாக இருந்தால் நிச்சயமாக இலங்கை சர்வாதிகார ஆட்சிமுறைமைக்குள் கொண்டு செல்லப்படும்… 13வது திருத்தச் சட்டம் அகற்றப்படுமாக இருந்தால் நிச்சயமாக இலங்கை சர்வாதிகார ஆட்சிமுறைமைக்குள் கொண்டு செல்லப்படும். 13வது திருத்தச் சட்டத்தினூடாக மாகாணங்களுக்கு உரிய அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்ட மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்பட்டு மக்களுக்கு இருக்கின்ற அதிகாரத்தையாவது தக்க வைத்துக் கொள்ளுகின்ற நிலைமையை இங்கு உருவாக்க வேண்டும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார். 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் நிலைப்பாடு சம்மந்தமான அறிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், …
-
- 0 replies
- 275 views
-
-
குருத்தூர்மலையில் நிரந்தர பௌத்த அடையாளங்கள் நிறுவ முயற்சி December 27, 2021 குருந்தூர்மலையில் பௌத்த அடையாளங்களை நிரந்தரமாக நிறுவும் கட்டுமானப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. அத்துடன், வரலாற்று தொன்மை வாய்ந்தவை என்று நிரூபிப்பதற்கான முன்னேற்பாடுகளுடன் அந்த வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்று ஆதாரங்களுடன் தகவல்கள் வெளியாகியுள்ளன. இராணுவத்தினரின் பலத்த பாதுகாப் புக்கு மத்தியில் இந்த நிரந்தரக் கட்டுமா னப் பணிகளை பழமையான முறைமை களுடன் தொல்பொருள் திணைக்களத் தின் வழிகாட்டலில் மேற்கொள்ளப்படுகின்றன என்று அறிய வருகின்றது. முல்லைத்தீவு – குமுழமுனை – குருந் தூர்மலையில் சைவ மக்கள் வழிபட்டு வந்த இடத்தை பௌத்த தொல்லிடம் என்று தொல்பொருள் தி…
-
- 0 replies
- 384 views
-
-
அரசாங்கத்தின் மோசமான தீர்மானங்களே இந்த நிலைமைக்கு காரணம் – முன்னாள் ஜனாதிபதி மைத்ரி சாடல் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமென அரசாங்கம் எதிர்பார்த்தால், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை உடன் நடவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார். அரசாங்கம் தற்போது பொருளாதார, அரசியல் மற்றும் சர்வதேச பிரச்சினைகளில் சிக்கியுள்ளது என்றும் மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். மேலும் அரசாங்கத்தின் மோசமான தீர்மானங்களினால் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதமடைந்துள்ளது என அவர் குற்றம் சாட்டினார். தான் ஜனாதிபதியாக இருந்த காலத்தை நினைவு கூர்ந்த மைத்ரிபால சிறிசேன, தனது பதவிக் காலம் முழுவதும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து பணியாற்றியதாக தெரிவித்தார். நாட்டின் …
-
- 0 replies
- 242 views
-
-
பி.பி. ஜயசுந்தரவின் இராஜினாமா கடிதத்தை ஏற்றார் ஜனாதிபதி கோட்டா ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பி. ஜயசுந்தரவினால் கையளிக்கப்பட்ட இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து ஜனாதிபதியின் புதிய செயலாளராக பிரதமரின் தற்போதைய செயலாளர் காமினி செனரத் நியமிக்கப்படக்கூடுமென தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர்களினால் எழுப்பப்பட்ட ஆட்சேபனைகளைத் தொடர்ந்து, அவரை பதவி விலகுமாறு வலியுறுத்தியிருந்த நிலையில் அவர் இராஜினாமாவை கையளித்திருந்தார். தான் பதவியில் இருந்த காலத்தில் எதிர்கொண்ட இடையூறுகளை விவரித்து, மூன்று அல்லது நான்கு பக்கங்கள் கொண்ட இராஜினாமா கடிதத்தை அவர் கையளித்திருந்தார். https://athavannew…
-
- 0 replies
- 251 views
-
-
நீர்வேளாண்மையை விஸ்தரிப்பிற்கு டக்ளஸ் நடவடிக்கை! நீர்வேளாண்மை மூலமான உற்பத்திகளை விஸ்தரிக்கும் நோக்கில் வங்கிக் கடன் வசதிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், சமுர்த்திப் பயனாளர்களாக இருக்கும் கடற்றொழிலாளர்கள் சமுர்த்தி வங்கியின் ஊடாக தலா 50 இலட்சம் ரூபாய் வரையிலான கடனையும், பிரதேச அபிவிருத்தி வங்கியின் மூலம் சுமார் 250 இலட்சம் ரூபாய் வரையிலான கடனையும் பெற்று நீர்வேளாண்மை செயற்பாடுகளுக்கான ஆரம்ப முதலீடுகளாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் கடற்றொழிலாளர்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக ஆராயும் வி…
-
- 0 replies
- 251 views
-
-
யாழில் சிலை கடத்தலில் ஈடுபட்ட சகோதரர்கள் கைது – 15க்கும் மேற்பட்ட சிலைகளை கடத்தி விற்றுள்ளார்களாம் December 25, 2021 யாழில் காணாமல் ஆக்கப்படும் சிலைகளை கடத்தி விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர்கள் இருவர் காங்கேசன்துறை காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 09ஆம் திகதி காங்கேசன்துறை குமார கோவில் பிள்ளையார் சிலை காணாமல் ஆக்கப்பட்டு இருந்தது. அது தொடர்பில் , கோவில் நிர்வாகத்தினரால் காங்கேசன்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சில நாட்களில் தெல்லிப்பளை , பலாலி உள்ளிட்ட வலி வடக்கில் உள்ள நான்கு ஆலயங்களில் பிள்ளையார் சிலை உள்ளிட்ட சிலைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை காவல்துறையினருக்கு முறைப்பாட…
-
- 1 reply
- 241 views
-
-
“தேசத்தின் வீழ்ச்சியை தடுக்க முடியாது”என்கிறார் ஆளும் கட்சி MP! December 27, 2021 கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான மக்கள் குறைந்த பட்சம் ஒரு வேளை உணவையாவது சாப்பிட முடியுமா என்ற கவலையில் இன்று உள்ளனர் எனத் தெரிவித்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி, தேசத்தின் வீழ்ச்சியை அரசாங்கத்தால் தடுக்க முடியாது என்றார். காலியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி குறித்து உரையாற்றும் போது கருத்து வெளியிட்ட அவர், தற்போது ஏமாற்றமடைந்துள்ள மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.. மேலும், கிராமப்புறங்களில் உள்ள மக்கள் ஒரு வேளை உணவைக் கூட வாங்க முடியாத ச…
-
- 0 replies
- 422 views
-
-
இந்திய பிரதமருக்கான கடிதம் இறுதி செய்யப்பட்டுள்ளது 29ஆம் திகதி கைச்சாத்திடப்படலாம்-சுரேந்திரன் இந்திய பிரதமருக்கான கடிதம் இறுதி செய்யப்பட்டுள்ளது 29ஆம் திகதி கைச்சாத்திடப்படலாம் என ரெலோ ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், இந்திய பிரதமருக்கு அனுப்புவதற்காக தமிழ் பேசும் மக்களின் கட்சித் தலைவர்கள் தயாரித்த கடிதம் இறுதி செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 29ஆம் திகதி டிசம்பர் மாதம் கொழும்பில் தலைவர்கள் கைச்சாத்திட ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. கடந்த 21ஆம் திகதி கொழும்பு குளோபல் டவர் ஹோட்டலில் தமிழ் பேசும் மக்களின் கட்சித் தலைவர்கள் இந்திய பிரதமருக்கு அனுப்பும் கோரிக்கைகள் அடங்கிய இறுதி செய்யப்பட்ட வரைபை சீர்ச…
-
- 2 replies
- 283 views
-
-
பிரபாகரனுக்கு படிப்பறிவு இல்லை – பாலசிங்கத்திற்கும் இருந்ததா என்பது சந்தேகமே என்கிறார் சரத் பொன்சேகா! December 23, 2021 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் படிப்பறிவு இல்லாதவர் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, ”பயங்கரவாத அமைப்பில் ஆரம்பத்தில் இருந்தவர்கள் எவருக்கும் அவ்வளவாக படிப்பறிவு இல்லை.” எனவும் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், தமிழ் மக்களின் பிரதிநிதிகள், தனி இராஜ்ஜியம் உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்கி நாடாளுமன்றத்துள் பிரவேசித்தனர். பின்னர் இந்த வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றவில்லை. இதனாலேயே ஆயுதப் போராட்டம் ஏற்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார். நாட்டை …
-
- 16 replies
- 1.4k views
- 1 follower
-
-
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரண்டு நாள் புனித யாத்திரையாக வியாழனன்று இந்தியாவின் திருப்பதியை சென்றடைந்துள்ளார். திருப்பதி விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு, மாநில துணை முதல்வர் கே.நாராயணசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் எம்.ஹரிநாராயணா தலைமையில் சித்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. பிரதமர் மஹந்த ராஜபக்ஷ தனது குடும்ப உறுப்பினர்களுடன் வெள்ளிக்கிழமை காலை திருப்பதி திருமலை கோவிலில் வழிபாடு நடத்துவார். பிரதமரின் 2 நாள் விஜயத்துக்கான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருப்பதியில் பிரதமர் மஹிந்த | Virakesari.lk
-
- 17 replies
- 1.2k views
-
-
ஜனவரி முதல் நாட்டில் உணவுத்தட்டுப்பாடு ஏற்படும் December 26, 2021 ஜனவரி மாதம் முதல் நாட்டில் உணவுக்குத் தட்டுப்பாடு ஏற்படுமெனத் தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன மக்கள் தங்களுடைய வீட்டுத் தோட்டங்களில் ஏதாவது மரக்கறிக்களை பயிரிடவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா். மேலும் மிளகாய், கத்திரிச்செடி மற்றும் நிவித்தி போன்ற செடிகளை உடனடியாக வீட்டுத் தோட்டங்களில் பயிரிடுமாறும் அவா் அறிவுறுத்தியுள்ளார். https://globaltamilnews.net/2021/171043
-
- 1 reply
- 382 views
- 1 follower
-
-
தமிழ்க் கட்சிகள் இந்திய பிரதமரிடம் முன்வைக்கவுள்ள கடிதத்தின் பொருள் மாற்றம் – சுமந்திரன் தமிழ்க் கட்சிகள் இந்திய பிரதமரிடம் முன்வைக்கவுள்ள கடிதத்தின் பொருள் மாற்றப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று(புதன்கிழமை) விசேட ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “தமிழ் கட்சிகள் தமது கோரிக்கையாக தயார் செய்த கடிதத்தின் தலைப்பு ’13 ஆம் திருத்தத்தை அமுல் படுத்த கோருதல்’ என இருந்த நிலையில், தற்போது ‘தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்வதும் இலங்கை இந்திய ஒப்பந்தமும்’ என மாற்றப்பட்டுள்ளது. ப…
-
- 47 replies
- 2.3k views
-
-
சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் December 26, 2021 சுனாமி பேரலை இடம்பெற்று இன்றுடன் 17 ஆம் ஆண்டுகள் பூா்த்தியடைந்துள்ளது. இந்தநிலையில் இலங்கையில் பல பாகங்களிலும் சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (26) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளன. அந்தவகையில் ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. 17வது ஆண்டு நிறைவையொட்டி இந்த நினைவேந்தல் யாழ். பல்கலை வளாகத்தில் மாணவர்களால் அனுஷ்டிக்கப்பட்டது அத்துடன் இன்று யாழ்ப்பாணம் வடமராட்சியிலும் உடுத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினுடைய ஏற்பாட்டில் இன்ற…
-
- 4 replies
- 451 views
- 1 follower
-
-
தமிழர்களின் கலை வரலாற்றில் விடுதலைப் புலிகளின் காலம் பொற்காலம் – சிறீதரன் தமிழர்களின் கலை வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலம் பொற்காலம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கலாலயத்தின் வெளியீடான விழுதொலிகள் இறுவட்டினை வெளியிட்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “போர் முடிந்ததன் பின்னரான காலப்பகுதியில் கலைஞர்கள் தங்களின் படைப்புக்களுக்கு உரித்தான அந்தஸ்து கிடைப்பதில்லை என்பதான ஒரு குற்றச்சாட்டு கலைஞர்களால் முன்வைக்கப்பட்டிருக்கிறது. உண்மைதான் எம்மவர்கள் இந்த மண்ணில் இருந்தபோது கலைகளையும் கலைஞர்களையும் வளர்க்க விடுதலைப் புல…
-
- 0 replies
- 153 views
-