ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
கிளிநொச்சி, அக்கராயன் பிரதேசத்தில் அமைந்துள்ள கரும்புத் தோட்டக் காணியில் உடனடியாக விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மணல் அகழ்வதற்கான அனுமதிகளை வழங்குவதன் மூலம் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், மாவட்ட செயலகத்தில் இன்று (18.09.2021) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே, குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்றது. கரும்பு தோட்டமாக அடையாளப்படுத்தப்படுகின்ற சுமார் 196 ஏக்கர் விஸ்தீரனமான நிலப்பரப்பு, நீண்ட காலமாக சரியான பராமரிப்பு இன்றி காணப்படுகின்றது. குறித்த காணியில் பயிர்செய்கை நடவடிக்…
-
- 2 replies
- 412 views
-
-
நா.தனுஜா இலங்கையிலிருந்து சீனாவிற்கு மீனுற்பத்தி மற்றும் கடலுணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு, சீன சுங்கத்தின் பொது நிர்வாகப்பிரிவினால் அங்கீகாரமளிக்கப்பட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட சுகாதார சான்றிதழை ஏற்றுமதியாளர்கள் பெற்றிருக்கவேண்டும் என்று சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் மீன் உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான புதுப்பிக்கப்பட்ட சுகாதாரத் தரச்சான்றிதழுக்கு சீன சுங்கத்தின் பொது நிர்வாகப்பிரிவு அங்கீகாரமளித்திருக்கிறது. இதன்மூலம் அனுமதியளிக்கப்பட்ட மீனுற்பத்திகள் மற்றும் கடலுணவுப்பொருட்கள் சீனாவின் போட்டிச் சந்தைக்குள் நுழைவதற்கும் இலங்கையின் வணிகங்கள் அவற்றின் உற்பத்தியை மேலும் விரிவாக்குவதற்கும் வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக இலங்கையிலுள்ள சீனத…
-
- 2 replies
- 710 views
-
-
(லியோ நிரோஷ தர்ஷன்) கொழும்பு துறைமுக நகரத்துடனான சமீபத்திய முன்னேற்றங்களைத் தொடர்ந்து இலங்கை தனது இருதரப்பு ஒத்துழைப்பை கவனத்தில் கொள்ள வேண்டும் என இந்தியா தெரிவித்துள்ளது. கடல்சார் பாதுகாப்பை உள்ளடக்கிய பகிரப்பட்ட பரஸ்பர இருதரப்பு சிறப்பு ஒத்துழைப்பை நினைவில் கொள்ள வேண்டும் என்று இந்தியா எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. டெல்லியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர்அரிந்தம் பக்ஷி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்தியாவின் பாதுகாப்பை கருதி துறைமுக நகரின் நகர்வுகள் குறித்து அவதானித்து வருகின்றோம். குறிப்பாக துறைமுக நகர் இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகுமா என்ற கோணத்தில் அவதானிப்பதாகவும் அவர…
-
- 4 replies
- 697 views
-
-
தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் இலங்கையின் முயற்சிக்கு இந்தியா ஆதரவு வழங்கும் 6 Views “அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைவாகவும், ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்புக்குள்ளும் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் இலங்கையின் நல்லிணக்கத்துக்கு இந்தியாவின் நிலையான ஆதரவு இருக்கும்.” என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். கொழும்பிலுள்ள இந்த…
-
- 14 replies
- 911 views
-
-
புதைக்கப்பட்ட விதுஷனின் உடலை மீளவும் தோண்டுமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவு Sayanolipavan இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த சந்திரன் விதுஷன் எனும் இளைஞனின் சடலத்தினை தோண்டியெடுத்து இலங்கையிலேயே சிறந்த நிபுணத்துவம் வாய்ந்த பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் முன்னிலையில் மீள் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் கடந்த 3ம் திகதி மட்டக்ளப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ஏ.இளங்கோவன் அவர்களின் தலமையிலான சட்டவைத்தியர்களினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறித்த இளைஞன் அதிகளவான ஜஸ் போதைப்;பொருள் பைகளை வாயில் போட்டு விழுங்கியதன் காரணமாக உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் வெள…
-
- 0 replies
- 461 views
-
-
கொழும்பிலிருந்து யாழ். வந்த ரி.ஐ.டி.யினர் மறவன்புலவு சச்சியிடம் 2 மணி நேர விசாரணை June 18, 2021 சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தனைக் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பயங்கரவாதத் தடைப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று மாலை இரண்டு மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தினார்கள். தயாரித்துக் கொண்டு வந்திருந்த வினாக்கொத்து ஒன்றினைக் கொண்டு 22க்கும் கூடுதலான கேள்விகளை மறவன்புலவு சச்சிதானந்தத்திடம் தொடுத்தனர். அதற்கான பதில்களைப் பதிந்து சென்றுள்ளார்கள். இந்த விசாரணைகள் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு நீடித்தது. சிவசேனை அமைப்புக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் அவர்கள் விசாரணை அமைந்தது. இதுவரை காலம் சிவசேனை வ…
-
- 2 replies
- 635 views
-
-
மட்டக்களப்பு வாவியில் 1.5 மில்லியன் இறால் குஞ்சுகள் விடுவிப்பு June 18, 2021 மட்டக்களப்பு வாவியில் 1.5 மில்லியன் இறால்குஞ்சுகளை விடுவிக்கும் நிகழ்வு கடற்தொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. மட்டக்களப்பு வாவியின் பிள்ளையாரடி மற்றும் வவுனதீவு பகுதிகளில் இன்று காலை 4.00 மணிக்கு குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் ருக்சான் குரூஸ் தலைமையில் குறித்த இறால் குஞ்சுகள் வாவியில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டன. இங்கு கருத்துவெளியிட்ட மாவட்ட உதவிப் பணிப்பாளர் ரூக்சான் குரூஸ்,மட்டக்களப்பு வாவியில் மீன்வளத்தை அதிகரி…
-
- 0 replies
- 262 views
-
-
இலங்கை – மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங் நியமனம்! June 16, 2021 இலங்கை மற்றும் மாலைதீவுக்கான புதிய உவராக ஜூலி ஜியூன் சங்கின் (Julie Jiyoon Chung) பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனினால் நேற்றைய தினம் இவருடைய பெயர் பரிந்துரை செய்யப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னர் இவர் கம்போடியா, தாய்லாந்து, ஈராக், கொலம்பியா, வியட்நாம், ஜப்பான் மற்றும் சீனாவிற்கான அமெரிக்க தூதுவராலயங்களில் பல்வேறு பொறுப்புகளில் கடமையாற்றியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2021/162345/
-
- 4 replies
- 577 views
-
-
முள்ளிவாய்கால் நினைவேந்தல்: கைது செய்யப்பட்ட 10 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு மட்டக்களப்பு- கல்குடா கடற்கரையில், முள்ளிவாய்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 10 பேரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த 10பேரையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் நேற்று முன்தினம் (புதன்கிழமை) உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த மே மாதம் 18ஆம் திகதி, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்வதற்கு எதிராக லவக்குமாருக்கு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது. ஆனாலும் அவர் உட்பட 10 பேர், நீதிமன்ற தடை உத்தரவை மீறி நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உ…
-
- 0 replies
- 189 views
-
-
’போலி தொலைபேசி அழைப்புகளுக்கு பலியாகவேண்டாம்’’ வீடுகளில் உள்ள நிலையான தொலைபேசிகளுக்கு அழைப்பு மேற்கொண்டு பொலிஸார் என தெரிவித்து மக்களிடம் பணம் கேட்டு அச்சுறுத்தும் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். அவ்வாறான அழைப்புகள் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன், இருக்குமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண அறிவுறுத்தியுள்ளார். ஏப்ரல் - 21 தாக்குதல் சம்பவத்தை தொடர்புபடுத்தி இனந்தெரியாத நபர்களால் இவ்வாறான அழைப்புகள் பொதுமக்களுக்கு மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு மேற்கொள்ளப்படும் அழைப்புக்களில் அதிகமானவை நிலையான தொலைப்பேசிகளுக்கு மேற்கொள்ளப்படுதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு…
-
- 0 replies
- 324 views
-
-
நம்பிக்கையில்லா பிரேரணை... சிறு பிள்ளையின் கடிதம் போல், பல பிழைகளை கொண்டுள்ளது – கம்மன்பில தனக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சிறு பிள்ளையின் கடிதம் போல் பல பிழைகளை கொண்டுள்ளது என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “நிதி அமைச்சரின் இணக்கப்பாட்டின் படியே எரிபொருள் விலையை அதிகரிக்க முடியும். அமைச்சரவையின் அனுமதி தேவை இல்லை. நான் அமைச்சராக பதவியேற்றது 2020 ஓகஸ்ட் மாதம். 2020 ஜனவரி மாதம் அல்ல என்பதை எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். இதில் கைச்சாத்திட்ட நாட…
-
- 0 replies
- 176 views
-
-
முல்லைத்தீவில் சட்டவிரோத தொழில்கள் அதிகரித்துள்ளதாகவும் கடற்றொழில் நீரியல்வள திணைக்களமும் கடற்படையும் வேடிக்கை பார்ப்பதாகவும் மீனவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் சாலை முதல் கொக்கிளாய் முகத்துவாரம் வரையான கடற்பரப்பில் அண்மை நாட்களாக சட்டவிரோத தொழில்கள் அதிகரித்துள்ளதாகவும் சட்டவிரோத தொழிலாளர்களால் தமது வலைகள் அறுக்கப்படுவதாகவும் கடலில் திருவிழா போன்று வெளிச்சம் பாய்ச்சி மீன் பிடித்தல் இடம்பெறுவதாகவும் திணைக்களமும் கடற்படையும் வேடிக்கை பார்ப்பதாகவும் இதனை உடனடியாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரியுள்ளனர். குறிப்பாக தாம் கடலில் இறங்கி தொழில் செய்யவே அச்சப்படுவதாகவும் அங்கு நங்கூரமிட்டு வெளிச்சம் பாய்ச்சி மீன் பிட…
-
- 1 reply
- 283 views
-
-
கொரோனா தொற்றால் நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் தொழில்களுக்குச் செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இவ்வாறான நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருள் விலை அதிகரிப்பு மிகப்பெரும் சிக்கலைத் தோற்றுவித்துள்ளது என பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றில், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால், மீன் வளங்கள் அழிவடைந்து பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. அந்தக் கப்பலால் கடல் வளம், சுற்றாடல், மீன் வளத்துக்கு ஏற்பட்ட பாதிப்பைக் கணக்கிட கூட முடியாத நிலையில் உள்ளது. இந்த நிலையில் எரிபொருள் விலை அதிகரிப்பு மீனவர்களின் வாழ்வில் மேலும் பாதிப்பை ஏற்…
-
- 1 reply
- 331 views
-
-
"எங்களின் கடலில் எங்களின் வளத்தினை நாங்கள் பயன்படுத்திக் கொள்வதற்கான அனுமதிகளைப் பெற்றுத் தாருங்கள்" என்று வடமாராட்சி கிழக்கு கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர். வடமாராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடும் நோக்கில் இன்று(17.06.2021) மருதங்கேணியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. வடமாராட்சி கிழக்கு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தடைசெய்யப்பட்ட சட்ட விரோத தொழில் முறைகளை கட்டுப்படுத்துவதுடன் பாரம்பரியமாக சிறுதொழிலில் ஈடுபடுகின்றவர்களை பாதிக்காத வகையில், பிரதேசத்தின் பெரும்பாலானவர்களின் நலன்களின்…
-
- 0 replies
- 334 views
-
-
நாயாறு – நந்திக்கடல் – காக்கைதீவு என நாடெங்கும் அபிவிருத்தி : டக்ளஸ் தீவிரம் நந்திக்கடல், நாயாறு களப்பு புனரமைப்பு பணிகளை நடைமுறைப்படுத்துமாறு தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் வோனந்தா, யாழ். காக்கைதீவு கடல் நீரேரியை தூர்வாருவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் குறிப்பிட்டார். நடளாவிய ரீதியில் காணப்படுகின்ற களப்புக்களை புனரமைக்கும் வேலைத் திட்டம் தொடர்பாக இடம்பெற்ற மீளாய்வுக் கலந்துரையாடலின் போதே, கடற்றொழில் அமைச்சரினால் மேற்குறித்த ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகின்ற சுமார் ஒன்பது பிரதான களப்புக்களை அபிவிருத்தி செய்வதற்கான ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நக்டா,…
-
- 15 replies
- 830 views
-
-
மக்களின் எதிர் பார்ப்பினை, நிறைவேற்றவுள்ள... பிரதமருக்கு டக்ளஸ் நன்றி தெரிவிப்பு! திருகோணமலை மாவட்ட மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றவுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்டத்திற்கு பி.சி.ஆர். இயந்திரத்தின் அவசியம் தொடர்பாக, குறித்த மாவட்டத்தினைச் சேர்ந்த சமூக தலைவர்களினால் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது. இதுதொடர்பாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சி ஆகியோருடன் கலந்துலையாடியிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, திருகோணமலை, வவுனியா போன்ற மாவட்டங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பி.ச…
-
- 5 replies
- 596 views
-
-
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இரத்து – EU நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைக்க இலங்கை தீர்மானம்! நாடு வழமைக்கு திரும்பியதும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இருந்து ஒரு குழுவை இலங்கைக்கு அழைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஐரோப்பிய நாடாளுமன்றம் சமீபத்தில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றியது. குறித்த தீர்மானம் இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியது. இதன்படி இலங்கை செயற்படாவிட்டால் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை தொடர்பாக மீண்டும் மீள்பரிசீலனை செய்யவேண்டும் என்று அந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் குறித்து மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக வெளிவிவாகர அமைச்சர…
-
- 1 reply
- 257 views
-
-
இணையவழி கற்பித்தல் தோல்வி 2,000ற்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு சிக்கல் தொற்றுநோய் காலத்தில் பாடசாலை மாணவர்களுக்கு இணையவழியில் மேற்கொள்ளப்பட்ட கற்பித்தல் நடவடிக்கை வெற்றியளிக்கவில்லை என்பது அரசாங்க புள்ளிவிபரங்கள் ஊடாக தெரியவந்துள்ளன. கல்வி அமைச்சின் தரவுகளுக்கு அமைய, நாட்டில் 2,000ற்கும் மேற்பட்ட பாடசாலைகளில் இணைய வசதி இல்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நாட்டின் முன்னணி ஆசிரியர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுநோயால் வீழ்ச்சியடைந்த பாடசாலை கல்வியைப் மேம்படுத்த, தோல்வியுற்ற இணையவழி கல்வி முறையை கைவிட்டு மாற்று திட்டம் தொடர்பான கல்விச் சீர்திருத்தங்களை கண்டறிவது தொடர்பில், கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் …
-
- 0 replies
- 523 views
-
-
4 மாத பயணக்கட்டுப்பாடு அல்லது கடுமையான ஊரடங்கு சட்டம் சுகாதார பணிப்பாளர் எச்சரிக்கை 4 மாதங்களுக்கு பயண கட்டுப்பாடுகளை நீடிப்பது அல்லது கடுமையான ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி கடுமையான சட்டத்தை செயற்படுத்த நேரிடும் என பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் விசேட மருத்துவர் ஹேமந்த ஹேரத் எச்சரித்துள்ளார். பயண கட்டுப்பாடுகளை பொதுமக்கள் புறக்கணித்து செயற்பட்டால் இந்த நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடுமையான சட்டத்திட்டங்களை விதித்து கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு முயற்சித்தால், அதனால் ஏற்படும் பொருளாதார பாதிப்பு மிக அதிகம் என அவர் கூறியுள்ளார். தொற்றினை கட்டுப்படுத்துவதென்றால் என்றால் அனைவரும் பயணக்கட்டுப்பாடினை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என அவர் க…
-
- 0 replies
- 232 views
-
-
தடுப்பூசி திருட்டு தொடர்பில் விசாரணை ஆரம்பம் 90,000 ரூபாய் பெறுமதியான சைனோபார்ம் தடுப்பூசிகள் திருடப்பட்டமை தொடர்பில் காலி குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காலி, ஹபராதுவ சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகத்தில் இருந்த 30 தடுப்பூசிகள் திருடப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹபராதுவ சுகாதார வைத்திய அதிகாரியின் முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.https://www.tamilmirror.lk/செய்திகள்/தடபபச-தரடட-தடரபல-வசரண-ஆரமபம/175-274327
-
- 1 reply
- 691 views
-
-
வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிய 92 உறவுகள் இதுவரை உயிரிழப்பு வடக்குக்கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி போராட்டம் மேற்கொண்டு வரும் அவர்களது உறவுகள் அவர்களின் விடுதலையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களையும் நீண்டகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடியலைந்து சொல்லெண்ணா துன்பங்களையும் , துயரங்களையும் சுமந்து வயோதிப ஓய்வு காலங்களில் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலைகளிலும் ஏனைய உறவுகளின் பாதுகாப்பிலும் இருந்து வருகின்றார்கள் . இவ்வாறு தமது உறவுகளை தேடியலைந்து 92 உறவுகள் நோயினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் 12 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக உறவுகள் தெரிவித்துள்ளனர். வடகிழ…
-
- 1 reply
- 789 views
-
-
மாவட்ட பொது வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் கொண்டு வருவது அரசியலமைப்பை மீறும் செயல் – ப. சத்தியலிங்கம் மாவட்ட பொது வைத்தியசாலைகளை மத்திய சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர எடுக்கப்படும் நடவடிகையானது அரசியலமைப்பை அப்பட்டமாக மீறும் செயல் என வட மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் தமிழரசுக்கட்சியின் பதில் செயலாளருமான மருத்துவர் ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். மத்திய அரசாங்கத்தின் கீழ் மாவட்ட பொது வைத்தியசாலைகளை பொறுப்பேற்பது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 14/06/2021 ம் திகதியன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளென அரசாங்க தகவல் திணைகளத்தால் அறிவிக்கப்பட்டதன்…
-
- 0 replies
- 287 views
-
-
யாழ்.நகர் மத்தியில், வெடிக்காத நிலையில் எறிகணை மீட்பு! யாழ்.மாநகர சபையினால் யாழ்.நகர் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் வடிகால் துப்பரவு செய்யும் பணியின் போது வெடிக்காத நிலையில் எறிகணை (செல்) ஒன்று மீட்கப்பட்டுள்ளது. யாழ்.நகர் ஸ்ரான்லி வீதி பகுதியூடாக செல்லும் வெள்ள வாய்க்கால் கடந்த சில கிழமைகளாக யாழ்.மாநகர சபை தூய்மைப்படுத்தும் தொழிலாளிகளினால் துப்பரவு செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்றைய தினம்(வியாழக்கிழமை) காலை வழமை போன்று அவர்கள் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த போதே வெடிக்காத நிலையில் எறிகணை ஒன்றினை கண்ணுற்றுள்ளனர். அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, பொலிசார் எறிகணையை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர…
-
- 0 replies
- 458 views
-
-
சீனாவின் எழுச்சியே ஆசியாவின் எழுச்சியை தீர்மானிக்கும் என்கிறார் மகிந்த! June 16, 2021 சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி இயக்கத்தின் ஆதரவு காரணமாக ஒரு அணிசேரா நாடாக சுதந்திர உலகில் முன்னேற முடிந்தது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நேற்று (15) பிற்பகல் அலரி மாளிகையில் வைத்து தெரிவித்தார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு விழாவில், காணொளி தொழில்நுட்பம் ஊடாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆற்றிய முழுமையான உரை வருமாறு, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு விழா கொண்டாடப்படும் இச்சந்தர்ப்பத்தில் எமது அன்பான வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகிறோம். அக்கட்சியின் நூறாவ…
-
- 6 replies
- 800 views
-
-
கடலில் காவியம் படைப்போம் என்று ஓவியம் தீட்டி - உசுப்பேற்றி எமது மக்களுக்கு காடாத்தி செய்தவர்கள்தான், பஸ்களை கடலில் போட்டு கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கதினை அதிகரிக்கும் செயற்பாடுகள் தொடர்பாக ஊழையிடுகின்றனர் என்று கடற்றொழில அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கடற்றொழில் அமைச்சரின் யாழ். அலுவலகத்தில் இன்று(16.06.2021) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பாவனைக்கு உதவாத பஸ்களையும் புகையிரதப் பெட்டிகளையும் கடலில் போடுகின்ற செயற்றிடம் தொடர்பில் சிலரினால் முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்கள் தொடர்பாக கேட்கப்பட்ட போதே, கடற்றொழில் அமைச்சரினால் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், "கடல் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்தினை அ…
-
- 2 replies
- 537 views
-