Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முள்ளிவாய்க்கால் ஆத்மசாந்தி பூஜை நிகழ்வு; ஊடகவியலாளர்களுடன் மல்லுக்கட்டிய பொலிஸார் முள்ளிவாய்க்கால் ஆத்மசாந்தி பூஜை நிகழ்வை செய்திசேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுடன் வவுனியா பொலிஸார் மல்லுக்கட்டலில் ஈடுபட்டனர். வவுனியா தமிழ்விருட்சம் அமைப்பு மற்றும் கருமாரி அம்மன் கோவில் நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் மண்ணில் மரணித்த தமிழ் மக்களிற்கான ஆத்மசாந்தி பிரார்த்தனை நிகழ்வு குட்செட் வீதி கருமாரி அம்மன் கோவிலில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அதனை செய்தியாக்க சென்ற வவுனியா பிராந்திய ஊடகவியலாளர்களுடன் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் மல்லுக்கட்டிதுடன்,அடையாள அட்டையை காண்பிக்குமாறு அச்சுறுத்தியிருந்தனர். …

  2. பாதுகாப்பு கெடுபிடிகளையும் தாண்டி நந்திக்கடலோரத்தில் சுடரேற்றி அஞ்சலி May 18, 2021 முல்லைத்தீவில் பாதுகாப்பு கெடுபிடிகளையும் தாண்டி வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. முல்லைத்தீவு நந்தி கடலோரம் எம்.கே.சிவாஜிலிங்கம் , பீற்றர் இளஞ்செழியன் , நிசாந்தன் ஆகியோர் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள். https://globaltamilnews.net/2021/161086/

  3. யாழ். பல்கலையைச் சுற்றி இராணுவத்தினர் குவிப்பு – நினைவேந்தலைத் தடுப்பதற்கு முயற்சி 2 Views முள்ளிவாய்க்கால் நினை வேந்தல் நிகழ்வுகளை யாழ். பல்கலைக்கழத்தினுள் மாணவர்கள் இன்று ஏற்பாடு செய்வார்கள் எனப் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன எனக் கூறி, பல்கலைக்கழகத்தைச் சுற்றி படையினர் நேற்று குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகின்றது. நாட்டில் எழுந்துள்ள கொரோனாப் பெருந்தொற்று நிலைமைகளை அடுத்து, இம்மாதம் தொடக்கத்தில் இருந்து, நாட்டிலுள்ள சகல பல்கலைக்கழகங்களினதும் கல்வி நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டமையை அடுத்து, யாழ்.பல்கலைக்கழகத்திலும் அத்தியாவசியப் பரீட்சை செயற்பாடுகள், ஆய்வு நடவடிக்க…

    • 2 replies
    • 454 views
  4. முள்ளிவாய்க்கால்நினைவேந்தலிற்கு நீதிமன்ற அனுமதி கிடைத்ததை தொடர்ந்து, அந்த பகுதிக்கு சென்றவர்களையும் பொலிசார், இராணுவம் தடுத்து நிறுத்தி வருகின்றனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்த அனுமதிக்கக் கூடாதென தடைவிதிக்க கோரி 27 பேரின் பெயர் குறிப்பிட்டு பொலிசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.அதற்கமைவாக கடந்த 13 ஆம் திகதி நீதிமன்று நினைவேந்தலில் ஈடுபட தடையுத்தரவு வழங்கியிருந்தது. இந்த தடையுத்தரவுக்கு எதிராக இன்று நகர்த்தல் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை நடைபெற்றது. இதில், சுகாதார விதிமுறைகளை மீறாமலும், பயங்கரவாத நடவடிக்கைகளை அனுசரிக்காது அஞ்சலியை நடத்த நீதிமன்றம் அனுமதித்தது. அத்துடன், ஏற்கனவே வழங்கிய தீர்ப்பிலும் முள்ளிவாய்க்கால் அஞ்…

    • 2 replies
    • 546 views
  5. 24 மற்றும் 25ஆம் திகதிகள்... அரச விடுமுறை தினங்களாக அறிவிப்பு! இலங்கையில் எதிர்வரும் 24 மற்றும் 25ஆம் திகதிகள் அரச விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பான அறிவிப்பை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ளார். https://athavannews.com/2021/1216514

  6. நினைவிடத்தை அழிக்கலாம் நினைவுகளை அழிக்க முடியாது – யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் 5 Views இவ்வாண்டு மே 18 தமிழினப் படுகொலையின் 12வது ஆண்டு நினைவு நாளாகும். தமிழ் மக்களை கொடூரமாக அழித்ததோடல்லாமல் நமது நினைவையும் அடக்கும் ஒரு மோசமான அரசின் ஆட்சியில் இந்த நினைவு கூறலை நாங்கள் எதிர்கொள்கின்றோம் என மே 18 தமிழ் இனப்படுகொலையின் நினைவு நாள் குறித்து யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. மாணவர் ஒன்றியம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: எமது பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை திட்டமிட்டு அழித்த அரசு எமது மாணவரின் போராட்டத்தின் காரணமாக அதனை மீள அமைக்க வழி விட…

    • 1 reply
    • 510 views
  7. பயணத்தடை அமுலில் இருக்கும் போது... யாழில் பிறந்தநாள் கொண்டாட்டம் – 15 பேர் தனிமைப் படுத்தலில்! நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில் இருக்கும் போது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வடமராட்சி கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாள் கொண்டாட்டம் இடம்பெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து நெல்லியடி பொலிஸாருடன் சுகாதார பிரிவினர் குறித்த பகுதிக்கு சென்றபோது கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்றிருந்தனர். இந்நிலையில் பிறந்தநாள் கொண்டாடியவரின், தொலைபேசியில் காணப்பட்ட படங்களின் அடிப்படையில் அதில் உள்ள 15 பேரும் அடையாளம் காணப்பட்டு தனிமைப்ப…

    • 12 replies
    • 1.3k views
  8. வவுனியா நைனாமடுப் பகுதியில் ஆக்கிரமிப்பிற்கு தயாராகும் தொல் பொருள் திணைக்களம் 65 Views வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நைனாமடு கிராமசேவகர் பிரிவின் கோடாலிபறிச்சான் காட்டுப்பகுதியில் விகாரையுடன் தொடர்புடைய இடிபாடுகள் இருப்பதாக தெரிவித்து வவுனியா பிராந்திய தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் அண்மையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நைனாமடுவில் அமைந்துள்ள ஒதுக்கப்பட்ட காட்டுப்பகுதியில் சுமார் 8 பாறைக்கோபுரங்களைக் கொண்ட ஒரு கட்டிட அமைப்பு, பாறைத்துருவ அடித்தளத்தைக் கொண்ட அமைப்புகள், 5 மீட்டர் உயரமுள்ள தூண் ஆகிய இடிபாடுகளை பார்வையிட்ட இராணுவத்தினர் இது தொடர்பாக தொல்பொருள் திணைக்களத்திற்கு தெரியப்படுத்…

    • 2 replies
    • 791 views
  9. வடக்கு மாகாணத்தில் இன்று (16) புதிதாக 55 பேர் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 9 பேர் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில், முல்லைத்தீவு மருத்துவமனையில் 8 பேருக்கும், புதுக்குடியிருப்பு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 12 பேருக்கும் என 20 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் அங்குள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுபவர்கள் என்று தெரியவருகின்றது. யாழ்ப்பாணம் பல்கலைக் கழக வவுனியா வளாக மாணவர்கள் 6 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா வளாக மாணவர்கள் 31 பேருக்கு ஏற்கனவே சில நாள்களுக்கு முன்னர் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் போதனா…

  10. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை தொலைகாணொளி ஊடாக அனுஷ்டிக்க சுமந்திரன் அழைப்பு! மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தமிழர்கள் அனைவரும் தொலைகாணொளி ஊடாக அதாவது Zoom வழியாக அனுஷ்டிப்போம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் இன்று (திங்கட்கிழமை) தனது முகப்புத்தகத்தில் காணொளியொன்றைப் பதிவிட்டுள்ளார். குறித்த காணொளியில் மேலும் தெரிவித்துள்ள அவர், நாட்டில் தொடர்ந்து பரவிவரும் கொரோனா பரவலுக்கு மத்தியில் மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒன்றுகூடி நினைவுகூர முடியாமலிருப்பது கவலைக்குரியது என தெரிவித்துள்ளார். எனினும் தொழில்நுட்பத்தின் உதவியோடு (Zoom) இணை…

    • 0 replies
    • 654 views
  11. தேர்தல் சீர்திருத்தம் - தமிழ், முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை குறைக்க இடமளிக்க முடியாது! ஒட்டுமொத்த இலங்கைவாழ் தமிழர், முஸ்லிம் ஜனத்தொகையில், வடக்கு கிழக்குக்கு வெளியே 50 விகித தமிழரும், 65 விகித முஸ்லிம்களும், தென்னிலங்கை மாவட்டங்களில் சிதறி வாழ்கிறார்கள். இன்றைய விகிதாசார தேர்தல் முறைமை அடாத்தாக மாற்றப்பட்டு உத்தேச கலப்பு முறைமை கொண்டுவரப்பட்டால், எமது மக்களின் பிரதிநிதித்துவங்கள் சரிபாதிக்கு மேல் பாராளுமன்றத்திலும், மாகாணசபைகளிலும் குறைந்து விடும். அதேபோல், அம்பாறையில் தமிழரும், மட்டக்களப்பில் முஸ்லிம்களும் வெற்றிபெறுவதுகூட கடினமாகிவிடும். திருகோணமலையிலும், வன்னியிலும் கூட இன்றுள்ள ஒழுங்கு மாறும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். …

    • 0 replies
    • 320 views
  12. தமிழ்மொழி புறக்கணிப்பு: சீன நிறுவனத்திற்கு தூதரகம் விடுத்த முக்கிய அறிவிப்பு !! மும்மொழிக் கொள்கையை பின்பற்றுமாறு நாட்டில் இயங்கும் ஒரு சீன நிறுவனத்திற்கு இலங்கைக்கான சீனத் தூதரகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. பெயர் பலகைகள் அமைக்கும் போது நாட்டின் உத்தியோகபூர்வ மொழிகளை புறக்கணிப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக அண்மையில் சீன நிறுவனம் ஒன்று அமைத்துள்ள பெயர்பலகையில் தமிழ்மொழி இடம்பெறாதமையை கண்டித்து மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் டுவிட்டரில் பதிவொன்றினை பகிர்ந்திருந்தார். இந்நிலைய…

    • 0 replies
    • 487 views
  13. நாடாளுமன்றம் நாளை கூடும் போது கறுப்பு ஆடையுடன் தமிழ் எம்.பி.க்கள் வருவர் May 17, 2021 நாளை செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் கறுப்பு ஆடையுடன் செல்ல தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகளின் எம்.பிக்கள் இந்த முடிவை எடுத்தனர். கடந்த மாதம் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்திற்குள் கறுப்பு ஆடை அணிந்து வந்த சமயத்தில், அதை பார்த்த தமிழ் எம்.பிக்கள், அன்றைய தினமே இந்த முடிவை எடுத்தனர். அன்றைய தினமே கூட்டமைப்பு எம்.பி சிறிதரன், மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இந்த யோசனையை சொல்ல, ஏனையவர்கள் அதை ஆமோதித்தனர். அண்மையில்…

    • 1 reply
    • 495 views
  14. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை நடத்துவதற்கு கூட்டமைப்பினைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட 26 பேருக்கு தடை மட்டக்களப்பு 12 பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை நடத்துவதற்கு 26 பேருக்கு தடை உத்தரவு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமூக சேவை அமைப்புக்கள் உள்ளிட்ட 26 பேருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1216209

    • 1 reply
    • 569 views
  15. பொருளாதார சூழ்நிலை காரணமாக மக்கள் அரசியல் சூதாட்டம் பற்றி சிந்திக்க முடியாத நிலையில் உள்ளனர் – சந்திரசேகரன் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சூழ்நிலை காரணமாக மக்கள் அரசியல் சூதாட்டம் பற்றி சிந்திக்க முடியாத நிலையில் உள்ளனர் என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நாளை மறுதினம் நாடாளுமன்றத்தில் துறைமுக நகர சட்டமூலம் நிறைவேற்றப்படவுள்ளது. அவசர அவசரமாக இவ்வாறான ஒரு சூழலிலேயே சீனாவிற்கு நகரத்தை …

    • 0 replies
    • 278 views
  16. இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா: பயணக் கட்டுப் பாடுகளை நீடிக்க அரசு நடவடிக்கை 48 Views இலங்கையில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் மூன்றாவது நாளாக இன்றைய தினமும் (ஞாயிற்றுக்கிழமை) அமுலில் உள்ளன. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, பிறப்பிக்கப்பட்ட இந்த பயணக் கட்டுப்பாடுகள், நாளை (17) அதிகாலை 4 மணியுடன் நிறைவடையவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும், நாளை (17) தொடக்கம் எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில், ஒவ்வொரு நாளும் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை, பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த பயணக்கட்டுப்பாடுகளால…

  17. மக்களை கொரோனாவில் இருந்து காப்பதற்கு இரவு பகலாக உழைக்கும் வவுனியா இளைஞர்கள் 67 Views கொரோனா தொற்றுக்குள்ளாகும் நோயாளர்களை தங்க வைப்பதற்காக இரவு, பகலாக வவுனியா இளைஞர்கள் முன்மாதிரியாக செயற்பட்டு வருகின்றனர். இலங்கையில் கொரோனா மூன்றாம் அலையின் தாக்கமானது வேகமாக அதிகரித்து வரும் நிலையில், வவுனியா மாவட்டத்திலும் கொரோனா வைத்தியசாலைகளை நிறுவ அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு தேவையான கட்டில்களை இளைஞர்கள் முன்வந்து வடிவமைத்து வருகின்றனர். வவுனியா மாவட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அதனுடன் இணைந்து செயற்படும் இளைஞர்கள், இரவு பகலாக இந்த செயற்பாட்டை முன்னெடுத்து…

  18. பயணத்தடை அமுலில் உள்ள நிலையில்... யாழில், வீடு புகுந்து தாக்குதல் யாழ்ப்பாணம் புதிய செம்மணி வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த கும்பல், வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன், வீட்டின் பொருட்களையும் சேதப்படுத்தி தப்பிச் சென்றுள்ளது. மேலும் குறித்த குழுவினர் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியும் மோட்டார் சைக்கிள், துவிச்சக்கர வண்டி உள்ளிட்டவற்றையும் சேதப்பட்டுத்திச் சென்றுள்ளனர். நாடளாவிய ரீதியில் பயண தடை அமுலில் உள்ள நிலையில் நேற்று (சனிக்கிழமை) மாலை 6 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது இந்த தாக்குதலில் வீட்டில் இருந்த மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் வீட்டிலிருந்த இளைஞர் ஒருவரின் தங்க சங்கிலி ஒன்றையும் கொள்ளையடித்து சென்றுள…

    • 1 reply
    • 431 views
  19. முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைக்கப்பட்டமை கண்டிக்கத்தக்க விடயம் - வியாழேந்திரன் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைக்கப்பட்டது என்பது கண்டிக்கத்தக்க ஒன்றான விடயம் என இராஜாங்க அமைச்சர் எஸ் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தில் அமைக்கப்பட்டுவரும் தற்காலிக கொரோனா சிகிச்சை நிலைய பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் அப்பணியினை பார்வையிட கரடியனாறு பிரதேசத்திற்கு மேற்கொண்ட விஜயத்தினை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி என்பது பாதிக்கப்பட்ட உறவுகள் தமது சொந்தங்களை, உறவினர்களை, தமது பிள்ளைகளை, அம்மாவை, அப்பாவை ஆத்மார்த்தமாக நினைவு கூறும் இடம். அந் நினைவுத்தூப…

    • 1 reply
    • 418 views
  20. "அஸ்ட்ராஜெனெகா" தடுப்பூசிகளை... வாங்குவதற்கு முயற்சி: இங்கிலாந்தில் இருந்து பச்சைக்கொடி – அரசாங்கம் இரண்டாவது டோஸ் வழங்குவதற்காக தேவையான ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளைப் பாதுகாக்க கோரியதற்கு இலங்கைக்கு இங்கிலாந்திலிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்தியாவில் பதிவாகும் அதிகளவிலான நோயாளிகள் மற்றும் இறப்புக் காரணமாக சீரம் நிறுவனத்தால் கோஷீல்ட் தடுப்பூசிகளை வழங்க முடியாத நிலையில் வேறு தரப்பிடம் இருந்து தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள திட்டமிடுவதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இந்நிலையில் ஒரு மில்லியன் டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை வழங்குவதற்காக இங்கிலாந்தில் இருந்து நேர்மறையான பதில் கிடைத்ததாகவும் தற்போது இரு அரசாங்க…

  21. இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல்: இஷ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு இஷ்ரேலில் உள்ள இலங்கையர்கள் அனைவரையும் விழிப்புடன் இருக்குமாறும் பெரிய கூட்டங்கள் மற்றும் தேவையற்ற பயணங்களையும் தவிர்க்குமாறு டெல் அவிவில் (Tel Aviv) உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. காசா பகுதியில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான கலவரங்கள் மற்றும் மோதல்களால் அதிகரித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தீவிர அவசரநிலை ஏற்பட்டால் இலங்கை சமூகத்தின் தேவைகளுக்கு பதிலளிக்கும் பொருட்டு தூதரகம் துரித எண்களையும் அறிமுகப்படுத்தியது. அதன்படி, இலங்கையர்கள் கே.பி. சந்திரதிலகே, 058 6875764 அல்லது இண்டிகா சேனரத்ன, தொழிலாளர் மற்றும் நலன்புரி 055 9284399 ஆகிய எண்களுடன் தொட…

  22. இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஹக்கீம் கண்டனம் பலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து , ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹக்கீம்,தனது ட்விட்டர் பக்கத்தில் மூன்று தனித்தனிப் பதிவுகளையிட்டுள்ளார்.அவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இஸ்ரேலுக்கு தற்காத்துக் கொள்வதற்கான உரிமை உண்டு” என கிளிப்பிள்ளைப் போன்று அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்திருக்கின்றார். அத்துடன் “இந்தப் பிரச்சினை விரைவிலோ அல்லது பின்னரோ தீரும்” எனவும் தெளிவில்லாமல் எதையோ உளறியிருக்கின்றார். சுதந்திரமான உலக நாடொன்றின் தலைவர் இவ்வாறு பரிதாபமான தொனியில் முணுமுணுப்பார் என நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. இனரீதியான ஒதுக்கலைக் கடைப்பிடித்துவரும் இஸ்ரேல் அரசாங்கத்திற…

    • 4 replies
    • 768 views
  23. கோதாபய ஒரு உணர்ச்சியற்ற, இரக்கமற்ற, ஒரு வெற்றுடல்” – அனுரகுமார திசநாயக்கா கடும் சாடல் “கோதாபய ராஜபக்சவின் ஆணவத்தினால்தான் இந்நாட்டு மக்கள் மரணித்துக்கொண்டிருக்கிறார்கள்” என, ஒரு மணித்தியாலத்துக்கு மேலாக ஆற்றிய தனது உரையின்போது, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அனுர குமார திசநாயக்கா சாடியிருக்கிறார். “நந்தசேன கோதாபய ராஜபக்ச ஒரு கருணையற்ற, நாட்டு மக்கள் மீது எந்தவித பொறுப்புணர்வும் கொண்டிராத ஒரு வெறும் உலர்ந்துபோன கோது” என ஊடகவியாளர் மத்தியில் திசநாயக்கா தெரிவித்தார். “மருத்துவ அதிகாரிகள் தமது உண்மையான அனுபவங்களையும், கருத்துக்களையும், புத்திமதிகளையும் ஜனாதிபதிக்கு முன்னால் கூறுவதற்கு அஞ்சுகிறார்கள். தமது கருத்…

    • 1 reply
    • 1k views
  24. இழந்தவர்களை நினைவு கூர்வதற்கே தமிழர்கள் போராட வேண்டி உள்ளது -சுரேஷ் பிரேமச்சந்திரன் 56 Views இறுதி யுத்தத்தில் தமது உறவுகளை இழந்த மக்கள் அவர்களை நினைவுகூர்வதற்கான உரிமையைக்கூட மதிக்காமல் நினைவுத்தூபியையும் அரச இயந்திரம் இடித்தழித்துள்ளது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்ததைக் கண்டித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், இழந்தவர்களை நினைவு கூர்வதற்கே தமிழர்கள் போராட வேண்டிய துர்பாக்கியநிலை ஏற்பட்டுள்ளது. நடந்து முடிந்த ஈழவிடுதலைப் போராட்டத்தில் இலட்சக்கணக்கான பொதுமக்களை நாங்கள் இழந்திருக்கிறோம். அதேபோல் இறுதி யுத்…

  25. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் இனவழிப்பு சம்பவங்களை நினைந்து கறுப்புக்கொடிகளை பறக்கவிடுங்கள் – தமிழ்தேசிய மக்கள் முன்னணி வேண்டுகோள் இனவழிப்புக்கான நீதியை வேண்டி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில், இனவழிப்பின் சாட்சியங்களாய் எமது ஆத்மாவை தினமும் உலுப்பிக்கொண்டிருக்கும் கொடூரமான இனவழிப்புச் சம்பவங்களை நினைந்து கறுப்புக்கொடிகளை பறக்கவிடுமாறும் கேட்டுக்கொள்கின்றோம். என தமிழ்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. முள்ளிவாய்க்கால் இன அழிப்பையொத்த இன்னொரு இன அழிப்பு யுத்தத்தை சிறீலங்கா அரசு கொவிட்-19 பெருந்தொற்றின் மூலம் தமிழர் தாயகத்தில்; கட்டவிழ்த்துவிட்டுள்ளதா என்ற சந்தேகங்கள் மக்கள் மத்தியில் வலுவாக எழுந்துள்ளது. என தமிழ்தேசிய மக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.