கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3082 topics in this forum
-
நல்லவர் ‘‘அப்பா, நான் ஆபீஸ்ல ஒருத்தரை லவ் பண்றேன். அவர் ரொம்ப நல்லவர்!’’‘‘ம்...’’‘‘முதல்ல கோயிலுக்குப் போகலாம்னு சொல்லிட்டு என்னைக் கூட்டிட்டுப் போனார். போன் பண்ணி அவர் அம்மாவையும் வரச்சொல்லியிருக்கார். அவ்வளவு டீசென்ட்டான டைப் அவர்...’’‘‘ம்...’’ ‘‘சினிமாக்குப் போகலாம்னு சொல்லிட்டு அவர் தங்கையையும் கூட கூட்டிட்டு வந்து எங்க ரெண்டு பேர் சீட்டுக்கும் நடுவுல அவளை உட்காரச் சொன்னார். ஹி ஈஸ் எ ஜென்டில்மேன்!’’ ‘‘ம்ம்...’’ ‘‘நீ முதல்ல உங்க அப்பாகிட்ட பேசு! அவர் ஒத்துக்கிட்டா முறைப்படி எங்க வீட்ல எல்லாரையும் கூட்டிக்கிட்டு முறைப்படி வந்து பேசறேன்னு கண்ணியமா சொன்னார், தெரியுமா?’’‘‘ம்ம்ம்...’’ ‘‘என்னப்பா இது? நான் பாட்டுக்கு அவரைப் பத்தி சொல்லிக் கிட்டே போறேன்.…
-
- 1 reply
- 1.6k views
-
-
ஒரு நிமிட கதை: பிரேஸ்லெட் வரவர ஞாபகமறதி அதிகமாகிக்கொண்டே போகிறது. இரவில் இரண்டாவது காட்சி சினிமாவுக்கு செல்வதே தவறு. அதுவும் டூ வீலரில் பெட்ரோல் இருக்கிறதா இல்லையா என்று கவனிக்காமல் செல்வது அதைவிட பெரிய தவறு என்று மனதுக்குள் புலம்பிக்கொண்டே டூவீலரை உருட்டிக்கொண்டு சென்றேன். இரவு 2 மணி ஆகிவிட்டதால் என்னைத் தவிர யாரும் இல்லை. மனதுக்குள் ஒருவித அச்சம். இன்னும் ஒரு தெருவைத் தாண்டிவிட்டால் வீடு வந்துவிடும். அந்த நேரத்தில் குறுக்கு சந்தில் இருந்து ஓடிவந்த ஒருவன் முரட்டுத்தனமாக என் மீது மோதினான். வண்டியோடு சேர்த்து நானும் கீழே விழுந்தேன். ஒரு நிமிடத்தில் சுதாரித்து எழுந்த நான், என் கையைப் பார்த்தேன். ஐயோ என் பிரேஸ்லெட்! சில அடிதூரம் ஓட…
-
- 1 reply
- 1.3k views
-
-
பெண் ஆசையால் நடந்த கொடூரம் ! | சூலூர் சுப்பாராவ் கொலை சம்பவம் | பிரிட்டிஷ் அரசாங்கத்தால் திவான் பகதூர் பட்டம் பெற்ற லட்சுமிநரசிம்ம அய்யரின் பேரன் சூலூர் சுப்பாராவ் பண திமிரு, பெண் ஆசையால் போட்டோகிராபர் குருசாமி பிள்ளையை கொன்றான். ரத்தினா பாய் மேல் ஆசைப்பட்ட சுப்பாராவ் அவருடைய அண்ணன் கையால் கொல்லப்பட்டான்.
-
- 0 replies
- 4k views
-
-
தாராளம் ‘‘என்ன செல்லம்மா... வீட்டுல இருந்து எண்ெணயை எடுத்துப் போறியா?’’ - தன் வீட்டு வேலைக்காரப் பெண்மணி கையில் ஒரு பாட்டில் நிறைய எண்ணெயை எடுத்துச் செல்வதைக் கண்ட சுந்தரம், சந்தேகத்தோடு கேட்டான்.அந்நேரம் அங்கே வந்த அவன் மனைவி விமலா, ‘‘அட... நான்தாங்க அதை அவளுக்குக் குடுத்தேன். அவ ஒண்ணும் தூக்கிட்டுப் போகலை!’’ என்றாள்.வேலைக்காரி நகர்ந்தாள். ‘எப்படி நம் மனைவி இவ்வளவு தாராளப் பிரபு ஆனாள்’ என்று மலைத்த சுந்தரம், மனைவியிடம் கேட்டான்... ‘‘நீ சாதாரணமா எதையும் யாருக்கும் தூக்கிக் கொடுத்துட மாட்டியே... இன்னைக்கு என்ன ஆச்சு?’’‘‘டி.வியில சொன்னாங்க... திரும்பத் திரும்ப எண்ணெயைக் காய்ச்சி சமையலுக்குப் பயன் படுத்தினா புற்றுநோய் வருமாம். அதனாலதான் நான் யூஸ் பண்ணுன பழைய எண்ணெயை…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஷினுகாமி - சிறுகதை சிறுகதை: லதாமகன், ஓவியங்கள்: ஸ்யாம் ``ஹிரோஷிமானி இக்கோ தெசுகா?’’ கொஞ்சல் ஜப்பானிய மொழியில் அந்தப் பெண் புன்னகைத்துக் கேட்டபோது புரியவில்லை. ``மன்னிக்கவும், ஜப்பானிய மொழி தெரியாது’’ என்றேன். ``ஹிரோஷிமா போறீங்களா?’’ நல்லதொரு நுனி நாக்கு ஆங்கிலம். சிகரெட் சாம்பலை அதற்காக வைக்கப்பட்டிருந்த நீண்ட தொட்டியில் முடிந்தவரை நளினமாகத் தட்டிவிட்டு ‘`ஆம்’’ என்றேன். `‘தனியாகவா’’ ஜப்பானியப் பெண்கள் எல்லாவற்றிலும் ஆச்சர்யம் கொண்ட கீச்சுக்குரலை நுழைத்துவிடுகிறார்கள் என்று தோன்றியது. மீண்டும் `‘ஆம்’’ . ‘`ஏன் ஹிரோஷிமா?’’ இந்த இரண்டு ஆண்டுகளில் சுற்றும் பாதைகளெல்லாம் இந்தக் கேள்வியைச் சந்தித்திருக்கிறேன். பெரும்பாலும் ஒரு விருந்த…
-
- 0 replies
- 2.2k views
-
-
அட்வைஸ் நாத்தனார் சித்ரா தனது புருஷனிடம் காரணமில்லாமல் கோபித்துக்கொண்டு, அடிக்கடி அண்ணன் வீட்டுக்கு வந்து மாதக்கணக்கில் தங்குவது, அண்ணி அம்பிகாவிற்கு எரிச்சலைத் தந்தது.நாத்தனாரிடம் நேரடியாகச் சொல்ல முடியாமல் அம்பிகா கையைப் பிசைந்துகொண்டிருந்தபோது, வேலைக்காரி வேலம்மா வந்தாள். ‘‘அட, இவ்ளோதானா? நான் பார்த்துக்கறேன்!’’ என்றவள் சித்ராவிடம் என்ன சொன்னாளோ தெரியவில்லை... அடுத்த அரை மணி நேரத்தில் சித்ரா புகுந்த வீட்டுக்குப் புயலாகப் புறப்பட்டாள். அம்பிகாவிற்கு ஆச்சரியம். ‘‘வேலம்மா, சித்ராகிட்ட அப்படி என்ன சொன்னே?’’‘‘ ‘இப்படி புருஷனை விட்டு அடிக்கடி இங்கே வந்து மாசக்கணக்கா இருக்கிறியே, பொண்டாட்டி இல்லாத குறைக்கு, உன் புருஷன் அங்கே வேற யாரையாவது தேடிக்கிட்டா நீ என்ன பண…
-
- 4 replies
- 2k views
-
-
சிபாரிசு ‘‘போப்பா, என்னை ரொம்ப ஏமாத்திட்டியே!’’ என்றபடியே வந்தார் நீண்ட நாள் நண்பர் சண்முகம்.‘‘என்னப்பா... வரும்போதே குறை சொல்லிக்கிட்டு வர்றே..?’’ என்றார் ரமணி.‘‘என் உறவினர் பையன் ஒருத்தனை சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ் வேலைக்கு உன்கிட்ட அனுப்பினேன். பார்க்கலாம்னு சொல்லி அனுப்பிட்டியாமே. இதுதான் நீ எனக்குக் கொடுக்குற மரியாதையா?’’ - படபடத்தார் சண்முகம். ‘‘நீ அனுப்பின பையன் எம்.ஏ படிச்சவன், அழகா டிப் டாப்பா இருக்கான், நாகரிகமா டிரஸ் பண்றான். அதெல்லாம் சரி... ஆனா, எனக்கு ஒத்து வர மாட்டானே!’’‘‘எப்படிச் சொல்றே?’’‘‘இன்டர்வியூவுக்கு வந்தவன் நெத்தியில விபூதி, குங்குமம் எதுவும் இல்ல. என் அறை முழுக்க இருந்த படங்களைக் காட்டி, ‘இங்குள்ள சாமி படங்களைப் பத்தி என்ன நினைக்கிறே?’னு…
-
- 1 reply
- 1k views
-
-
வயது பதிமூன்று -வேதா கோபாலன் பதிமூன்று வயது தாமினி கர்ப்பமா..? டாக்டர் ரேவதி அதிர்ந்து நிமிர்ந்தாள். தலை சுற்றியது போன்ற உணர்வில் அப்படியே ரிவால்விங் நாற்காலியில் படிந்தாள். “தாமினி...’’ சட்டென்று தழுதழுத்த உணர்வு. இவளை ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும் என்பதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் அனைத்தையும் பின்னுக்குத் தள்ளி நான்தான் முந்தி என்று ஒரு காரணம் நின்றது. இது இவளின் பேஷன்ட் இல்லை. “இந்த ரெண்டு வாரம் நீ ஓ.பி பார்த்துடுடீ ரேவ்ஸ்...” என்று கன்னத்தைப் பிடித்துக் கெஞ்சிவிட்டு டார்ஜிலிங்குக்கு புருஷன் திலீபனுடன் நாலாவது தேனிலவுக்கு ஓடினாளே அந்த அல்பனாவின் வழக்கமான பேஷன்ட் இவள். ஆதர்ச தம்பதி அல்பனாவும் திலீபனும். அன்யோன்யத்…
-
- 0 replies
- 2.3k views
-
-
ஒரு நண்பன் - சிறுகதை நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... அசோகமித்திரன், ஓவியங்கள்: அனில் கே.எஸ். ஹரிகோபால் என்னை எச்சரித்தான்: ''இதோ பார், நீ ரொம்ப 'ரெட்’ ஆகுற. போலீஸ் பிடிச்சா என்ன ஆகும் தெரியாது!'' அவன் சொன்னதில் தவறு கிடையாது. ஆனால் இவன் யார், எப்போது பார்த்தாலும் என்னை இதைச் செய்யாதே அதைச் செய்யாதே என்று சொல்வது? விவிலியத்தில் கெய்ன், கர்த்தரிடம் சொல்வான்: 'நான் என்ன, என் சகோதரனைக் காவல் காப்பவனா?’ இதை அவன் சகோதரன் ஏபல்லைக் கொன்ற பிறகு சொல்கிறான். என்ன நெஞ்சழுத்தம்! ஹரிகோபால், இந்த மாதிரி என் விஷயங்களில் தலையிடுவது இது முதல்முறை அல்ல. நான் இன்ஸ்பெக்டர் செண்பகராமனுடன் சினிமாவுக்குப் போனது, அவர் ஒரு மாடி வீட்டுக்க…
-
- 0 replies
- 7.9k views
-
-
ஒவ்வொன்றாய்த் திருடுகிறாய் சிறுகதை: ஜி.ஆர்.சுரேந்தர்நாத், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு பின்வரும் குறிப்புகளில் இருந்து, நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்... எஃப்.எம் தொகுப்பாளினிக்கு மதியம் 12 மணி வெயிலில் போன் போட்டு, 'குளிருதே... குளிருதே... உடம்பெல்லாம் உதறுதே...’ என்ற பாடலை ஒலிபரப்பச் சொல்லி, என் நண்பன் அரவிந்துக்கு டெடிகேட் செய்வேன் (அப்போதுதான் அரவிந்த் மறுநாள், 'நெஞ்செல்லாம் சிதறுதே... நீ வேணும்னு கதறுதே...’ என்ற பாடலை எனக்கு டெடிகேட் செய்வான்). நீங்கள் நினைப்பது சரிதான். நான் படித்து முடித்துவிட்டு வீட்டில் சும்மா இருக்கிறேன். ஓர் ஆண், வேலை இல்லாமல் இருப்பது …
-
- 4 replies
- 4.3k views
-
-
ஆலமரத் துயில் - சிறுகதை சிறுகதை: லஷ்மி சரவணகுமார், ஓவியங்கள்: ஸ்யாம் ஆகாயத்தை விடவும் பரந்து விரிந்த அல்லிகுண்டம் கண்மாய், இப்படி ஒட்டுமொத்தமாய் வறண்டு போகுமென ஊரில் ஒருவரும் நினைத்திருக்கவில்லை. கோடை, மனித உடலின் கடைசி துளிக் குருதியையும் வியர்வையாய்க் குடித்துக்கொண்டிருந்தாலும் இந்த ஒற்றைக் கண்மாயை நம்பி இருக்கும் பதின்மூன்று கிராமங்களின் வயல்களில், சம்சாரிகள் காய்ந்த பயிர்களை இன்னும் நம்பிக்கையோடு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரேயொரு மழை பெய்தாலும் மிச்சம் மீதி இருக்கும் பயிர்கள் பிழைத்துக் கொள்ளும். ஆனால், இறங்கிவர மனமின்றி இயற்கை இறுக்கமாகவே தான் இருந்தது. சதுரகிரி மலையில் துவங்கி மேற்குத் தொடர்ச்சி மலையின் இந்த அடிவார கிராமங்களெங்கும் க…
-
- 0 replies
- 3.1k views
-
-
அன்றைய காலைப்பொழுது அவளுக்கு அதிகாலை நான்கு மணிக்கே விடிந்து விட்டது இடியப்பம் அவிக்க நேரம் ஆகிவிட்டதே என அடுப்படியை வெளியாக்கி கொண்டிருக்கும் போது அதில் இருந்த விறகு கட்டைக்குள் பாம்பைக்கண்டவள் கொஞ்சம் அதிர்ந்து போனாள் . என்ன பாம்பு என பார்ப்போம் என விளக்கு எடுத்து வருவதற்குள் அந்த பாம்பு மாயமாய் மறைந்து விட்டது . அவள் மனதிற்குள் எப்பதான் நான் ஒரு வீடு ஒன்றைக்கட்டி நிரந்தரமாக குடி இருக்கிறதெண்டு தெரியலையே முருகா என மனதிற்குள் புறு புறுத்துக்கொண்டு பாம்பை தேடினாள் அவள் . அவளின் அந்த ஓலைக்குடிசைக்குள்….. வெளியில் வந்து தேடிப்பார்த்த போது அது போன தடம் தெரியவே மனதுக்கு நிம்மதியாக இருந்தாலும் அப்படியே நிமிர்ந்து பார்த்தாள் அந்த கோவில் கோபுரத்தை ஆண்டவா இன்றைய நாள் எல்லோருக…
-
- 9 replies
- 1.7k views
-
-
பயிற்சி ‘‘ஏண்டா ஆறுமுகம்... உன் மேல நம்ம முதலாளி நிறைய மரியாதை வச்சிருக்கார். அவர்கிட்ட உன் மகன் சோமுவுக்கு டிரைவர் வேலை கேட்டா நிச்சயம் தருவார். நல்ல வருமானம் கிடைக்கும். அதை விட்டுட்டு வேற ஒரு கம்பெனியில அவனை நைட் வாட்ச்மேன் வேலைக்கு விட்டிருக்கியே... இது நல்லாவா இருக்கு?’’ என்றார் நண்பர் சம்பத்.ஆறுமுகம் அர்த்தப் புன்னகை பூத்தார்.‘‘நம்ம கம்பெனி பஸ் எல்லாமே மதுரை, திருச்சி, கோவைன்னு நைட் சர்வீஸ்தான் ஓடுது. என் மகன் சோமு நல்லாத்தான் வண்டி ஓட்டுறான். ஆனா, ராத்திரி பயணத்துல வண்டி ஓட்ட நம்மை மாதிரி பயிற்சியும் பக்குவமும் தேவை. ஒரு வருஷம் இந்த வாட்ச்மேன் வேலையைப் பார்த்தா என் மகனுக்கு ராத்திரி கண் விழிக்கிற பயிற்சி வந்துடும். அப்புறம் அவன் நம்ம கம்பென…
-
- 1 reply
- 1.1k views
-
-
திட்டம் ‘‘என்னது... பில்லு கட்ட பணமில்லையா? அப்போ ஒருநாள் ஓட்டல்ல வேலை செய்... என்ன வேலை தெரியும் உனக்கு?’’‘‘நல்லா பரோட்டா போடுவேன் சார். ஊர்ல நான் பரோட்டா மாஸ்டர்...’’ என்றான் கணேசன்.‘‘அப்போ உள்ளே போய் பரோட்டா போடு...’’ என்றார் முதலாளி. கணேசன் உள்ளே போய் பரோட்டா போட ஆரம்பித்தான். ஒரு மணி நேரத்திலேயே ரிசல்ட் தெரிந்தது. ‘‘என்ன சார்... உங்க கடை பரோட்டா இன்னைக்கு வழக்கத்தைவிட சூப்பரா இருக்கு. ரொம்ப ஸாஃப்ட், செம டேஸ்ட்...’’ என்று வரிசையாக கஸ்டமர்கள் பாராட்டினார்கள். அங்கிருந்த மேனேஜர், ‘‘சார்... பரோட்டா போட்டுட்டு இருந்த மணி ஒரு வாரமா வர்றது இல்லை... இவனையே நம்ம கடையில வேலைக்கு வச்சுக்கலாமே!’’ என்றார். ‘ஒரு வாரம் முன்னால இதே ஓட்டல்…
-
- 3 replies
- 1.3k views
-
-
தட்சணை பலரும் முகம் சுளித்தனர்.‘‘ஏண்டி பங்கஜம், குருக்கள் நல்லா வசதியாத்தானே இருக்கார். அவர் ஒரே பையன் அமெரிக்காவுல செட்டில் ஆகியிருக்கான். மாசா மாசம் பணம் அனுப்பிடறான். அப்படி இருந்தும் அல்பமா தட்சணையை இப்படி அல்பமா வாய்விட்டுக் கேட்கறது நல்லாவா இருக்கு?’’ எனக் கேட்டாள் கல்யாணி. ‘‘அடிப் போடி, ‘காசேதான் கடவுளடா’ ஆசாமி அவரு. கோயில் நடை சாத்தற நேரம்... சீக்கிரம் பிராகாரம் சுத்திட்டு கிளம்பலாம்!’’ என்றாள் பங்கஜம். சுற்றிய பின் இருவரும் ஓரமாய் உட்கார்ந்தனர்.அப்பொழுது மூச்சிரைக்க ஒரு இளைஞன் கோயிலுக்குள் நுழைந்து, ‘‘சாமி...’’ என அந்த குருக்களை அணுகி, கொஞ்சம் தயங்கி நின்றான். கேட்டுக் கேட்டு வாங்கிய மொத்த தட்சணை பணத்தையும் அள்ளி அவனிடம் கொடுத்த குருக்கள், ‘‘க…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஜான்சிராணியை பின்தொடரும் காதல் காந்திமதி காற்றில் சிக்கிய பலூன் போல் வெடவெடத்தாள். உள்ளங்கைகள் பிசுபிசுத்திருந்தன. பிடி கிடைக்காமல் அந்தரத்தில் தொங்கிய கால்களின் கனம் அவளைக் கீழ் நோக்கி இழுப்பது போலிருந்தது. ‘‘காந்தி பயமா இருந்தா கண்ண மூடிக்கோ. ரொம்ப பயமா இருந்தா வாயத் தொறந்து கத்திருடி. எல்லாரும் அப்படித்தான் சத்தம் போடுவாவோ!” என்றாள் அருகில் அமர்ந்திருந்த ராதா. காந்திமதி கண்களை மூடிப் பார்த்தாள். தலை மட்டும் தனியாகச் சுழன்றது. உடனேயே கண்களை அகலத் திறந்து வைத்துக் கொண்டாள். ராட்சத ராட்டினத்தின் ஒவ்வொரு இருக்கையும் மெதுவாக நிரப்பப்பட்டுக் கொண்டிருந்தது. காந்திமதி அமர்ந்திருந்த இருக்கை உச்சிக்குச் சென்றது. அங்கிருந்து மொத்த பொருட்காட்சியும் சிறிதெனப்பட்டது. க…
-
- 0 replies
- 1.2k views
-
-
மரியபுஷ்பத்தின் சைக்கிள்கள்! - சிறுகதை நரன் சிறுகதை: நரன், ஓவியங்கள்: செந்தில் பழனி, சிறு வயது முதலே பெரியாண்டவர் சைக்கிள் கடையில் வேலை செய்தான். அவன் கொஞ்சம் கெந்திக் கெந்தி நடப்பான். காலையில் முதலாளியின் வீட்டுக்குச் சென்று கடையின் சாவியை வாங்கிவந்து கடையைத் திறப்பது முதல் கடை முன் இருக்கும் மண்ணைச் சுத்தம் செய்து நீர் தெளித்து, முந்தைய நாளில் குறை வேலையாகவிட்ட சைக்கிள்களை மீண்டும் வெளியே எடுத்து வைப்பதுவரை எல்லாமே இவன்தான் செய்வான். காலை 8 மணிக்கு முன்பே, வேலை செய்வதற்கு ஏற்ப கடையைத் தயார்செய்துவிட வேண்டும். காலையில் பள்ளிக்குச் செல்லும் சில சைக்கிள்கள் காற்று நிரப்பிக்கொள்ள வரும். ஆண்களின் சைக்கிள் என்றால், அவர்களையே நிர…
-
- 0 replies
- 3.9k views
-
-
பிரபல ரவுடி 'குரங்கு குமார்': வளர்ச்சியும் & வீழ்ச்சியும் | செங்கல்பட்டு நகரத்தை கலக்கிய குரங்கு குமாரின் கொலை சம்பவம்! யார் இந்த குரங்கு குமார்? அவருடைய குடும்ப பின்னணி, பிரபல ரவுடி ஆன கதை. இறுதியில் யாரால் கொல்லப்பட்டார்? எதற்காக கொல்லப்பட்டார் குமார்
-
- 1 reply
- 5.1k views
-
-
அப்பா ‘‘பா.... மழ நின்னுடுச்சுப்பா... பட்டாசு வெடிக்க போகலாம். வாங்கப்பா...’’ கதிரவனின் கையைப் பிடித்து மழலை மொழியில் கெஞ்சிக் கொண்டிருந்தாள் ஐந்து வயது லிஜி. எதையும் கண்டுகொள்ளாத மாதிரி சிலையைப் போல நாற்காலியில் அமர்ந்திருந்தான் கதிரவன். ‘‘வாங்கப்பா... நாளைக்கு தீவாளிப்பா. ஃப்ரண்ட்ஸ் எல்லாம் இப்பவே பட்டாசு வெடிக்க ஆரம்பிச்சுட்டாங்க...’’ பக்கத்து தெருவுக்கு கேட்கிற மாதிரி கத்தினாள் லிஜி. அப்போதும் கல்லைப் போல வெறுமனே அமர்ந்திருந்தான் கதிரவன். ‘‘அப்பாவால இப்ப வரமுடியாது செல்லம்... அம்மாவை கூட்டிட்டு போ’’ தொய்வான குரலில் கதிரவன் சொல்லச் சொல்ல அணுகுண்டின் வெடிச் சத்தம் காதைப் பிளந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டின் ஒரு மூலையில் போய் உட்கார்ந்து கொண்டு கதற…
-
- 0 replies
- 1.9k views
-
-
வெண்டி மாப்பிள்ளை சிறுகதை:எஸ்.செந்தில்குமார்ஓவியங்கள்: செந்தில் வெண்டி பூச்சிமருந்தைக் குடித்து சாகக் கிடக்கிற விஷயம், பட்டறை வீதிக்குத் தெரிவதற்கு முன்பாக, செல்லையா ஆசாரிக்குத் தகவல் போய்ச் சேர்ந்திருந்தது. இத்தனைக்கும் வெண்டியை நேற்று இரவு ஞானம் சலூனில் பார்த்திருந்தார் செல்லையா. வெண்டியைப் பார்த்ததும், செல்லையாவுக்கு வெட்கம் வந்தது. நமுட்டுச் சிரிப்பு சிரித்துக்கொண்டார். வெண்டி மாப்பிள்ளை, தன் பெயருக்கு ஏற்றதுபோல கிராப்பு வெட்டி, சவரம்செய்து, கிருதாவை மேல் தூக்கிவைத்து...பார்ப்பதற்கு லட்சணமாக இருந்தான். வெண்டி, சலூன் கடையை விட்டுக் கீழே இறங்கிப்போனது இன்னும் அவர் கண்களில் இருந்தது. வெண்டி கடையைவிட்டுப் போனதும் 'செல்லம் அப்பச்சி... நீங்க உங்க…
-
- 0 replies
- 2.7k views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் நெருக்கடி நடந்துபோனால், அரைமணி நேரத்துக்குள் போய்விடும் அலுவலகத்துக்கு ஒரு மணி நேரம் ஊர்ந்தபடியே காரில் போனான் ராகுல்! - கே.சதீஷ் புரிதல் ``ஹாய் டாட்!’’ என்ற வாட்ஸ் அப் மெசேஜ் பார்த்து மகளுக்கு `டாப் அப்’ செய்தார் அப்பா! - கி.ரவிக்குமார் சுறுசுறுப்பு “ஹோம் ஒர்க் எழுத முடியல...தூக்கம் வருதும்மா...” என்றவனிடம், மொபைலை நீட்டியதும் எழுந்து உட்கார்ந்தான்! - சி.சாமிநாதன் பிரார்த்தனை படம் பார்த்துக்கொண்டிருக்கையில் பேயின் ஆசை நிறைவேற கடவுளை பிரார்த்தித்தது குழந்தை! - பெ.பாண்டியன் தனிமை ஆயிரமாவது ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட்டை அக்செப்ட் செய்துவிட்டு, ஃபீலிங் லோன்லி …
-
- 0 replies
- 1.4k views
-
-
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…- A Musical Love Story ஆனந்த விகடன் வார இதழில் எனது ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி’ சிறுகதை பிரசுரமானபோது இளையராஜாவின் இசைக்குழுவில் 12 ஆண்டுகள் வாத்தியக்கருவி வாசித்த ஒரு இசைக்கலைஞர் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். கதையைப் பாராட்டிக்கொண்டிருந்தவர், இடையில் தொண்டை அடைத்து, குரல் கம்ம பேச்சை நிறுத்தி, ஃபோனை கட் செய்துவிட்டார். இரண்டு நிமிடங்கள் கழித்து மீண்டும் பேசியவர், “என்னால முடியல சார்….” என்றார். உண்மையில் அவர் எதுவும் பேசாத அந்த இரண்டு நிமிடங்கள்தான் அந்தக் கதைக்கு கிடைத்த பெரிய பாராட்டாக கருதுகிறேன். இக்கதையை பிரசுரித்த விகடன் இதழுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு நண்பர்களுக்காக அக்கதை: ஒரு சிறந்த இசைய…
-
- 0 replies
- 2.1k views
-
-
மம்மூதன் - சிறுகதை வரவணை செந்தில், ஓவியங்கள்: ஸ்யாம் பந்தடித் தெருக்கள் சந்திக்கும் இடத்தில் வெளிர் சந்தன நூற்பாவுகளைத் தகதகக்கும் பச்சை நிறச் சாயத்தில் முக்கி எடுத்துக்கொண்டிருந்தனர் பட்டு நூல்காரர்கள். ஒரு கையில் வேல்கம்பும், மறுகையில் சோழவந்தான் கொழுந்து வெற்றிலையும், கதுப்பில் அடக்கிய பாக்குமாக அவர்களிடம் சுண்ணாம்பு கேட்டுக்கொண்டிருந்தார் தலையாரி பொன்னன். ``ஏப்பா ஏய்... வடக்க இருந்துவந்த தலையாரியா, நாயக்கர் கூப்புடுறாரு...’’ என்று திடுதிடுவென ஓடிவந்து காவல்காரன் அழைக்கவும், பாக்கைத் துப்பிவிட்டு, வேல் முனையைப் பின்பக்கமாகத் திருப்பிக் கையிடுக்கில் வைத்துக்கொண்டு, குனிந்து பவ்யமாக மஹாலுக்குள் ஓட்டமும் நடையுமாகத் தலையாரி நுழைந்தார்.…
-
- 0 replies
- 3.3k views
-
-
சகோதரர்கள் செய்த கொடூரம்! பார்வதி ஷா வழக்கு! | பாண்டிச்சேரி வைர வியாபாரி மனைவி பார்வதி ஷா கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றார். அப்படி அவர் என்ன செய்தார் தெரியுமா? தொடரும்...
-
- 1 reply
- 3.7k views
-
-
ஓலைக் கிளி எஸ். ராமகிருஷ்ணன்ஓவியங்கள் : ஸ்யாம் அபார்ட்மென்ட்டின் காவலாளி வந்து வீட்டின் காலிங் பெல்லை அடித்தபோது காலை மணி எட்டரை இருக்கும். பேப்பர் படித்துக்கொண்டு இருந்த நான் எழுந்து கதவைத் திறந்தபோது, சற்று எரிச்சலான குரலில் வாட்ச்மேன் சொன்னான், ''டாக்டர் சார், உங்களைப் பாக்க ஒரு கிழவன் ஒரு பொண்ணைக் கூட்டிக்கிட்டு வந்து கேட் முன்னாடி உட்கார்ந்து இருக்கான். விடிகாலை நாலு மணிக்கு எல்லாம் அந்த ஆளு வந்து உங்க பேரைச் சொல்லிக் கேட்டான். மூணாவது ஃப்ளோர்ல வீடுன்னு சொன்னேன். அய்யா தூங்கி எந்திரிச்சி குளிச்சி, சாப்பிட்டு ரெடியாகட்டும். அதுவரைக்கும் இப்படி உட்கார்ந்துக்கிடுறேன்னு சொல்லி பைக் ஸ்டாண்ட் பக்கமா உட்கார்ந்துக்கிட்டான். பேரைக…
-
- 0 replies
- 3.5k views
-