விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
அவிஷ்க மற்றும் திமுத்தின் வலுவான ஆரம்பம் மற்றும் ஹசரங்கவின் பொறுப்பான துடுப்பாட்டத்தினால் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியை இலங்கை அணி ஒரு விக்கெட்டுக்களினால் வென்றுள்ளது. இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்றைய தினம் கொழும்பு எஸ்.எஸ்.சி. கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியானது களத்தடுப்பை தேர்வு செய்ய மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அதன்படி மேற்கிந்தியத்தீவுகள் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 289 ஓட்டங்களை குவித்தது. மேற்கி…
-
- 0 replies
- 384 views
-
-
அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க ஆகிய அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகின்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 254 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இந்த நிலையில் 255 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடி வரும் தென்னாப்பிரிக்க அணி சற்று முன்னர் வரையில் 30 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களை பெற்றுள்ளது. http://www.hirunews.lk/tamil/sports/236030/தென்னாப்பிரிக்கா-அணியின்-அதிரடி-ஆட்டம்
-
- 0 replies
- 346 views
-
-
ஷகிப் அல் ஹசன் பயணித்த ஹெலிகொப்டர் விபத்து ; ஒருவர் பலி பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். ஷகிப் அல் ஹசன் மற்றும் அவரது மனைவி ஆகியோரை விளம்பர படப்பிடிப்பில் இறக்கிவிட்ட பின்னர் டாக்கா நோக்கி பயணித்த குறித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது. ஹெலிகொப்டரில் ஏற்பட்ட தொழினுட்ப கோளாறு காரணமாக விபத்து விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து ஷகிப் அல் ஹசன் தரையிறங்கிய இடத்திலிருந்து சுமார் 1.5 கிலோமீற்றர் தூரத்தில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஷகிப் அல் ஹசன் தா…
-
- 0 replies
- 460 views
-
-
சேஸிங்கில் வல்லவரான விராட் கோலியுடன் கலந்துரையாட விரும்பும் ஜோ ரூட் சேஸிங்கில் வல்லவரான விராட் கோலியுடன் அமர்ந்து கலந்துரையாட வேண்டும் என்று இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோ ரூட் தனது விருப்பத்தை கூறியுள்ளார். இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 351 ரன்கள் என்ற இமாலய சேஸிங்கை எட்டி வெற்றி பெற்றது. ஒரு கட்டத்தில் இந்தியா 63 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. அதன்பின் விராட் கோலியும், கேதர் ஜாதவும் சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து ம…
-
- 0 replies
- 391 views
-
-
2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் விளையாடுவேன்: டோனி நம்பிக்கை 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்டில் விளையாட முடியும் என்று இந்திய வீரர் டோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார். புதுடெல்லி: 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்டில் விளையாட முடியும் என்று இந்திய வீரர் டோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி, 2014-ம் ஆண்டு இறுதியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஜனவரி மாதம் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகினார். இதையடுத்து மூன்று வடிவிலான கிரிக…
-
- 0 replies
- 364 views
-
-
கடும் போராட்டத்திற்குப்பின் பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றினார் ஜோகோவிச் நடாலை வென்ற ஜோகோவிச்சுக்கு சிட்சிபாஸ் அச்சுறுத்தலாக இருக்கமாட்டார் என நினைத்தபோதும் சிட்சிபாஸ் மிகவும் சிறப்பாக விளையாடிய நிலையில், கடும் போராட்டத்திற்குப்பின் சிட்சிபாஸை வீழ்த்தி பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றினார் ஜோகோவிச். நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் செம்மண் தரையில் நடைபெறுவது பிரெஞ்ச் ஓபன். புல் தரையில் விளையாடுவது போல், செம்மண் தரையில் விளையாடுவது எளிதானது அல்ல. களிமண் தரையில் சிங்கமான ரபேல் நடாலை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் செர்பியாவின் ஜோகோவிச். மற்றொரு அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் 8ஆம் நிலை வீரரான கிரீஸ் நாட்டின் ஸ்டெபனோஸ் …
-
- 0 replies
- 335 views
-
-
2022 ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டிக்கான அரங்கொன்று வடிவமைப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கட்டாரின் அல் வக்காரா நகரிலுள்ள இந்த கால்பந்தாட்ட அரங்கின் வடிவமைப்பானது பெண்ணுறுப்பை போன்ற தோற்றத்தில் காணப்படுகிறது என சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். 2022 ஆம் ஆண்டின் உலகக்கிண்ணப் போட்டிகள் நடைபெறவுள்ள நகரங்களில் ஒன்றாக அல் வக்காரா விளங்கவுள்ளது. இந்நகரில் நிர்மாணிக்கப்படவுள்ள அரங்கின் கணினி மூலமான தோற்றத்த்தை கட்டார் உலகக்கிண்ண ஏற்பாட்டுக்குழு சில தினங்களுக்குமுன் வெளியிட்டது. 45,000 ஆசனங்களைக் கொண்ட இந்த அரங்கின் மேற்புறக் கூரையின் தோற்றத்தைப் பார்த்த சிலர் இது பெண்ணுறுப்பு வடிவில் உள்ளது எனக் கருத்துத் தெரிவித்த…
-
- 0 replies
- 623 views
-
-
பனாமாவை வீழ்த்தி மெக்சிகோ அணி 2018 உலகக்கோப்பை கால்பந்துக்கு தகுதி வெற்றியைக் கொண்டாடும் மெக்சிகோ வீரர்கள். - படம். | ஏ.எஃப்.பி. உலகக்கோப்பைக் கால்பந்து தகுதிச் சுற்று போட்டியில் பனாமா அணியை 1-0 என்று வீழ்த்தி மெக்சிகோ அணி ரஷ்யாவில் நடைபெறும் 2018 உலகக்கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் பிரேசில், ஜப்பான், இரான், போட்டியை நடத்தும் ரஷ்யா ஆகிய நாடுகளுடன் 2018 உலகக்கோப்பைக் கால்பந்துக்குத் தகுதி பெற்ற 5-வது அணியானது மெக்சிகோ. மெக்சிகோ சிட்டியில் உள்ள ஆஸ்டெக்கா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் ஹிர்விங் லோசானோ 53-வது நிமிடத்தில் தலையால் முட்டி கோல…
-
- 0 replies
- 318 views
-
-
ஐ.பி.எல் என்ற மூன்று எழுத்து, பாரத தேசத்தின் பாராளுமன்றம் முதல் பட்டி தொட்டி வரை பேசும் விஷயமாகிவிட்டது. ஐ.பி.எல் பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. ஒரு அமைச்சரின் பதவியையும் காவுவாங்கியுள்ளது. காரணம் இதன் பின்னால் நடந்த திரை மறைவு விவகாரங்கள் வெளியே வந்தததால்தான். 2008ல் தான் முதன் முதலில் ஐ.பி.எல் 20-20 மேட்ச் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணி, பெங்களுர் ராயல் சேலஜ்ஜர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணி என 8 அணிகள் உருவாக்கப்பட்டது. இந்த அணிகள் சந்தையில் ஆடு, மாடுகள் ஏலம் விடப்படுவதை போல ஏலம் விடப்பட்டன. ஏலத்தில் பெருமுதலாளிகளும், சினிமா நட்சத்திரங்களும் கலந்து கொண்டு அணிகளை ஏலம் …
-
- 0 replies
- 645 views
-
-
கவர் ட்ரைவ் கில்லி... ஃப்ளிக் ஷாட் புலி... கோலியின் பேட்டிங் ப்ளூ ப்ரின்ட்! #VikatanExclusive Chennai: "இந்திய அணியை 20 ஆண்டுகாலம் சுமந்திருந்தார். இது நாங்கள் அவரைச் சுமக்க வேண்டிய தருணம்" - 2011 உலகக்கோப்பையை வென்றதும், சச்சினைத் தன் தோள்களில் மைதானம் முழுதும் சுமந்து சென்ற விராட் கோலி கூறிய வார்த்தைகள். லிட்டில் மாஸ்டரை அன்று சுமந்த தோள்கள்தான், இன்று அவர் சுமந்த இந்தியக் கிரிக்கெட்டையும் சுமந்துகொண்டிருக்கிறது. டி-20யில் நம்பர் 1, ஒருநாள் போட்டியில் நம்பர் 2, டெஸ்டில் ஆறாம் இடம்... அனைத்து ஃபார்மட்களிலும் டாப் 10-ல் இருக்கும் மூன்று வீரர்களுள் முதன்மையானவர் விராட். போட்டிகளின்போது இவரோடு சேர்ந்தே களம் காண்கின்றன சாதனைகள். இந்த வாரமும் தன் சாதனைப் …
-
- 0 replies
- 532 views
-
-
என்னை கல்யாணம் செய்து கொள்வீர்களா?: ரசிகர் கேள்விக்கு மரியா ஷரபோவாவின் ரியாக்சன் துருக்கியில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியின்போது ரஷிய வீராங்கனை மரியா ஷரபோவாவை நோக்கி ரசிகர் ஒருவர் என்னை திருமணம் கொள்வீர்களா? என்று கேட்டதற்கு அவரது ரியாக்சனைப் பார்ப்போம். ரஷியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா. உலகளவில கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். டென்னிஸ் மற்றும் விளம்பரங்கள் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்தவர். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரின்போது ஊக்கமருந்து பயன்படுத்தியதா…
-
- 0 replies
- 438 views
-
-
இளம் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு ராகுல் திராவிட் போன்ற பயிற்சியாளர் தேவை; ரமீஸ் ராஜா வலியுறுத்தல் ராகுல் திராவிட் போல் ஒருவர் தேவை: ரமீஸ் ராஜா. - படம். | ராய்ட்டர்ஸ். நியூஸிலாந்தில் நடைபெறும் யு-19 உலகக்கோப்பை அரையிறுதியில் இந்திய இளம் வீரர்களிடம் பாக். இளம் வீரர்கள் 203 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா தனது பார்வைகளை வெளியிட்டுள்ளார். இளம் இந்திய வீரர்களை வளர்த்தெடுப்பதில் ராகுல் திராவிடின் பங்கை விதந்தோதிய ரமீஸ் ராஜா, பாகிஸ்தானுக்கும் திராவிட் போல் ஒரு பயிற்சியாளர் தேவை என்பதை வலியுறுத்தினார். தோல்வியின் இடைவெளி அதிர்ச்சிகரமாக உள்ளது என்றார் ரமீஸ் ராஜா. “…
-
- 0 replies
- 178 views
-
-
8 ஆவது உலக கரம் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம் By VISHNU 06 OCT, 2022 | 11:16 AM (என்.வீ.ஏ.) மலேசியாவின் லங்காவி உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் 8 ஆவது உலக கரம் சம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான குழுநிலைப் பிரிவில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. இலங்கை சார்பாக முன்னாள் உலக சம்பியன் நிஷான்த பெர்னாண்டோவும் ஷஹீத் ஹில்மியும் இணைந்து வெண்கலப் பதக்கதை வென்றனர். பங்களாதேஷ் அணியினரை எதிர்த்தாடிய இலங்கை அணி 2 - 1 ப்ரேம்கள் கணக்கில வெற்றிபெற்று 3 ஆம் இடத்தைப் பெற்றது. கடந்த திங்கட்கிழமை (03) ஆரம்பமான 8 ஆவது உலக கெரம் சம்பியன்ஷிப் போட்டி வெள்ளிக்கிழமை (07) நிறைவடையவுள்ளது. …
-
- 0 replies
- 233 views
- 2 followers
-
-
பள்ளி நாட்களில் நன்றாக விளையாடியதற்காக புறக்கணிக்கப்பட்ட கிளென் மேக்ஸ்வெல் ஆஸ்திரேலிய அதிரடி பேட்ஸ்மென் கிளென் மேக்ஸ்வெல் நன்றாக விளையாடியதன் காரணமாகவே அவர் படித்த பள்ளி அவரைப் புறக்கணித்தது. இன்று ரிவர்ஸ் ஷாட்டில் பெரிய அளவுக்கு பவுலர்களை மிரட்டி வரும் ஆஸ்திரேலிய அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல் அவரது பள்ளியினால் ஒதுக்கப்பட்ட ஒரு கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது வலது கை பேட்ஸ்மெனாக தொடக்கப் பள்ளி காலத்திலேயே பெரிய அச்சுறுத்தலாகத் திகழ்ந்த கிளென் மேக்ஸ்வெலை அழைத்து இனி இடது கையில் விளையாடினால்தான் அணியில் இருக்கப்போகிறாய் என்று பள்ளி விளையாட்டு ஆசிரியர்கள் இவரை ஒடுக்கியுள்ளனர். அதன் பிறகு இடது கையில் பேட்டிங் செய்யத் தொடங்கியுள்ளார் மேக்ஸ்வெல்.…
-
- 0 replies
- 474 views
-
-
வெங்கர்... வெற்றிக்கு ஓடியவர்களிடையே கால்பந்தின் அழகியலை ஆராதித்தவர்! #MerciWenger ஓர் அணியின் வரலாறு... அடையாளம்... தனி மனிதன் ஒருவரின் கையில் கொடுக்கப்படுகிறது. அந்த நாட்டில் வேறு எந்த அணிக்கும் இல்லாத சிறப்பு அது. அதை அப்படி எந்த அணியும் எளிதில் ஒரு தனி நபருக்குக் கொடுத்துவிடாது. ஆனால், அர்செனல் கொடுத்திருக்கிறது. பிரீமியர் லீகில் எந்த அணியும் கொண்டிருக்காத 'invincibles' கோப்பையை அர்சென் வெங்கர் கைகளில் கொடுத்துவிட்டது அர்செனல். ஏன்..? அதை அவர்தான் வென்று கொடுத்தார் என்பதற்காக அல்ல. உலகின் ஒவ்வொரு மூளையிலும் இந்த லண்டன் கிளப்பின் லோகோவில் இருக்கும் பீரங்கியின் சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறதென்றால் அதற்குக் காரணம் அவர்தான். அந்த அணிக்கு அவர் அடையாள…
-
- 0 replies
- 589 views
-
-
கொண்டாட்டத்துக்குத் தயாராகுங்கள்… - பரவசமூட்டிய தருணங்கள் ஆஸ்திரேலியா-நியூசிலாந்தில் நடைபெற உள்ள உலகக் கோப்பைக் கிரிக்கெட் திருவிழாவுக்காக ரசிகர்கள் தவம் இருக்கிறார்கள். நம் நாட்டு ரசிகர்களுக்கு உலகக் கோப்பைக் கிரிக்கெட் என்றால் சாப்பாடு, தூக்கம் எதுவுமே வேண்டாம். போட்டிகள் முடியும்வரை ஒட்டுமொத்த நினைப்பும் மட்டையையும் பந்தையும் சுற்றியே இருக்கும். உலகக் கோப்பை கிரிக்கெட் நினைவலைகள் ஒவ்வொரு ரசிகரின் நெஞ்சிலும் பட்டாம்பூச்சியாய் படபடக்கும். நினைவுகளின் வண்ணத்துப் பூச்சிகளைப் பின் தொடர்வோமா? இதோ இன்றிலிருந்து தொடங்கிவிட்டது உலகக் கோப்பைக்கான முன்னோட்டம். மறக்கவே முடியாத தருணங்கள் 10 உலகக் கோப்பைப் போட்டிகள். பதினாயிரம் நினைவுகள். கிரிக்கெட்டின் ஆகப்பெரிய சவால…
-
- 0 replies
- 297 views
-
-
அவுஸ்திரேலியாவைத் தோற்கடித்தது இந்தியா மேற்கிந்தியத் தீவுகளில் இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் உலக இருபதுக்கு – 20 தொடரில், கயானாவில் நேற்று இடம்பெற்ற குழு பி போட்டியொன்றில் அவுஸ்திரேலியாவை இந்தியா தோற்கடித்தது. அந்தவகையில், குறித்த குழுவிலிருந்து இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றிருந்த நிலையில், குறித்த போட்டி முடிவுடன் குறித்த குழுவிலிருந்து வெற்றியாளர்களாக அரையிறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதிபெற்றுள்ளது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: இந்தியா இந்தியா: 167/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஸ்மிருதி மந்தனா 83 (55), ஹர்மன் பிறீட் கெளர் 43 (27) ஓட்டங்கள். பந்துவீச்சு: எலைஸ் பெரி 3/1…
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நேற்றைய உலகக்கிண்ண போட்டியின் போது இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் மற்றும் கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர்பிச்சை ஆகிய இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இங்கிலாந்தின் பேர்மிங்காம் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை காண கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை சென்றிருந்தார். அப்போது போட்டி வர்ணனையாளராக இருந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சினை, சுந்தர் பிச்சை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படத்தை பிசிசிஐ தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளது. https://www.virakesari.l…
-
- 0 replies
- 775 views
-
-
விதிமுறை மீறிய குற்றச்சாட்டில் அபராதத்திற்குள்ளாகிய ஸ்டுவர்ட் ப்ரோட் By Akeel Shihab - AFP சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய ஒழுக்க விதிமுறையை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் ப்ரோட் மீது ஐ.சி.சி போட்டி ஊதியத்திலிருந்து அபராத தொகை விதித்துள்ளதுடன் ஒரு தகுதி இழப்பீட்டு புள்ளியும் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்க மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கு மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியுடன…
-
- 0 replies
- 386 views
-
-
கோடிகளில் கொழிக்கும் கிரிக்கெட் வீரர்கள்... கிறுகிறுத்துக்கிடக்கும் ஹாக்கி வீரர்கள்! விளையாட்டு என்பது ஒன்றுதான். ஆனால் கிரிக்கெட்டுக்கு ஒரு சம்பளம், ஹாக்கி, கால்பந்து விளையாட்டுக்கு ஒரு சம்பளம் என ஒரு கண்ணில் வெண்ணையும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பும் ஏன் கொந்தளிக்கிறார்கள் கிரிக்கெட் அல்லாத விளையாட்டு வீரர்கள். ஏற்கனவே அழிவின் விளிம்பில் இருக்கும் ஹாக்கி விளையாட்டுக்கு எப்போதுதான் விமோசனம் கிடைக்கப்போகிறதோ என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது. கிரிக்கெட் வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு, ஹாக்கி விளையாட்டு வீரர்களுக்கு முக்கியதுவம் கொடுப்பதில்லை. கிரிக்கெட், ஹாக்கி, டென்னிஸ் போன்ற விளையாட்டு வீரர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா ? …
-
- 0 replies
- 484 views
-
-
கடலில் நீந்தி கிரேக்கம் சென்ற அகதி ஒலிம்பிக்ஸில் பங்கேற்கிறார் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் 'அகதிகள் அணி' என்கிற பெயரில் ரியோ ஒலிம்பிக்ஸில் கலந்துக்கொள்ள விருக்கும் அணியின் வீராங்கனை, பதினெட்டு வயது யஸ்ரா மர்தினி. சிரியாவிலிருந்து வெளியேறிய இவர், ஐரோப்பா வருவதற்காக துருக்கியிலிருந்து கிளம்பினார். ஆனால் இவர் வந்த படகு கடலில் மூழ்கத் தொடங்கியது. அவரும் அவரது சகோதரியும் கிரேக்கத்தை நோக்கி நீச்சலடித்து சென்று சேர்ந்தார்கள். பல மாதங்களுக்குப்பின் ஜெர்மனியில் உள்ள அவர், ரியோ ஒலிம்பிக்ஸ் நீச்சல் போட்டியில் பங்கேற்கும் நம்பிக்கையுடன் உள்ளார். http://www.bbc.com/tamil/multimedia/2016/07/160729_refugee_team?ocid=socialflow_facebook%3FSThi…
-
- 0 replies
- 685 views
-
-
2018 உலக கிண்ணத்துடன் ஓய்வு பெறுகிறார் வெய்ன் ரூனி. 2018 உலக கிண்ணத்துடன் ஓய்வு பெறுகிறார் வெய்ன் ரூனி. இங்கிலாந்து கால்பந்து அணியின் தலைவரும் நட்சத்திர வீரருமான வெய்ன் ரூனி, 2018 இல் ரஸ்யாவில் இடம்பெறவுள்ள கால்பந்து உலக கிண்ணப் போட்டிகளுடன் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். 30 வயதாகும் வெய்ன் ரூனி, இப்போது உலக கிண்ண தகுதிகாண் போட்டிகளில் இங்கிலாந்து சார்பில் பங்கேற்று வருகின்றார்.2014 ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து அணியின் தலைவராக வெய்ன் ரூனி நியமனம் பெற்றார். அணித்தலைவராக நியமனம் பெற்றதன் பின்னர் இங்கிலாந்து அணி முக்கிய 6 தொடர்களில் பங்கெடுத்தது, ஆயினும் ஒன்றிலும் இங்கிலாந்து காலிறுதியை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில்தான் தனத…
-
- 0 replies
- 447 views
-
-
வங்கப் புலிகளின் தொடர் வெற்றிகளுக்கு முடிவு கட்டியது இங்கிலாந்து. வங்கப் புலிகளின் தொடர் வெற்றிகளுக்கு முடிவு கட்டியது இங்கிலாந்து. பங்களாதேஷுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட தொடரின் இறுதி போட்டி நிறைவுக்கு வந்திருக்கிறது. ஏற்கனவே தொடர் 1-1 என்று சமநிலையில் இருந்த நிலையில் இன்றைய 3 வதும் இறுதியுமான போட்டியை வெற்றிகொண்ட இங்கிலாந்து அணி தொடரை 2-1 என்று சொந்தமாக்கியது. இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோஸ் பட்லர் முதலில் களத்தடுப்பு தீர்மானத்தை மேற்கொண்டார், அதன்படி முதலில் ஆடிய பங்களாதேஷ் அணி 6 விக்கெட்டுக்களை இழந…
-
- 0 replies
- 226 views
-
-
இங்கிலாந்து அணியின் திறனை இந்தியாவில் தீர்மானிக்க முடியும்: இயன் போத்தம் கருத்து இங்கிலாந்து கிரிக்கெட் அணி வங்கதேச மண்ணில் அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்தது. முதல் டெஸ்டில் தட்டுத்தடுமாறியே இங்கிலாந்து அணி வெற்றியை வசப்படுத்தியிருந்தது. 2-வது டெஸ்ட்டில் 100 ரன்கள் வரை விக்கெட்களை இழக்காமல் இருந்த நிலையில் அடுத்த 64 ரன்களை சேர்ப்பதற்குள் அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத் தது. இதனால் 108 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்ததுடன் போட்டியை 3 நாட்களில் முடிவுக்கும் கொண்டு வந்தது இங்கிலாந்து அணி. ஒரே ஷெசனில் இங்கிலாந்து அணியை சுருட்டிய வங்கதேச அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. சுழ…
-
- 0 replies
- 311 views
-
-
“மிஸ் யூ யூனிஸ் !” - பாகிஸ்தானின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் ஓய்வு பாகிஸ்தானின் ஆச்சர்யகரமான பேட்ஸ்மேன், அட்டகாசமான பிளேயர் யூனிஸ் கான். நேற்று நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெற்றார். கடந்த ஏப்ரல் 7-ம் தேதி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடக்கும் டெஸ்ட் தொடரோடு ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அப்போது ஒரு செய்தியாளர் ஒரு கேள்வி கேட்டார். "இன்னும் 23 ரன்கள் எடுத்தால் போதுமே, பத்தாயிரம் ரன்களைக் கடந்து முதல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆக வேண்டிய ஆள் என்ற பெருமை கிடைக்குமே?" நிதானமாய் யூனிஸ்கான் சொன்ன பதில் இதுதான், "உலகம் இப்படித்தான் கேட்டுக் கொண்டே இருக்கும். 10,000, 12,000 என்று இலக்குகள…
-
- 0 replies
- 711 views
-