விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
Published By: VISHNU 11 SEP, 2024 | 08:04 PM (நெவில் அன்தனி) உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் மிகப் பெரிய அளவில் நடத்தப்பட்ட ஐசிசி ஆடவர் உலகக் கிண்ணம் 2023 போட்டி மூலம் இந்தியாவுக்கு 11,637 கோடி ரூபா (இந்திய நாணயப்படி) வருவாய் கிடைத்துள்ளதாக ஐசிசி புதன்கிழமை (11) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அஹமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, தரம்சாலா, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புனே ஆகிய 10 நகரங்களில் 2023 அக்டோபர் 5ஆம் திகதியிலிருந்து நவம்பர் 19ஆம் திகதிவரை உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதன்போது பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு உலகக் கிண்ண கிரிக்கெட் ஊக்கியாக இருந்தத…
-
- 0 replies
- 539 views
- 1 follower
-
-
விம்பிள்டன்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் வீனஸை வீழ்த்தி முகுருசா சாம்பியன் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தி முகுருசா சாம்பியன் பட்டம் வென்றார். இங்கிலாந்தின் லண்டன் நகரில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் 10-ம் நிலை வீராங்கனையான 37 வயதான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸும், 14-ம் நிலை வீராங்கனையான 23 வயதே ஆன ஸ்பெயின் நாட்டின் கார்பின் முகுருசாவும் பலப்பரீட்சை நடத்தினார்கள். முதல் …
-
- 0 replies
- 539 views
-
-
மூன்று முரை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற சைக்கிள் பந்தய வீராங்கனை மரணம் உலக சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்க சைக்கிள் பந்தய வீராங்கனை கெல்லி கேட்லின் மரணம் அடைந்தார். அமெரிக்காவின் பிரபல சைக்கிள் பந்தய வீராங்கனை கெல்லி கேட்லின் மரணம் அமெரிக்காவைச் சேர்ந்த அணைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. உயிரிழந்த சைக்கிள் பந்தய வீராங்கனை கெல்லி கேட்லின் வயது 23 , இவர் 3 முறை (2016, 2017, 2018) உலக சாம்பியன் பட்டத்தை வென்றார். 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற அமெரிக்க அணியில் அங்கம் வகித்தவர். இந்நிலையில், கெல்லி கேட்லின் கடந்த வியாழக்கிழமை மரணம் அடைந்ததாக அவரது சகோதரர் சமூக வலைத்தளம் மூலம் தகவல் வெளியிட்டார். சைக்கிள் பந்தயத்தில…
-
- 0 replies
- 539 views
-
-
ஆரம்பப் போட்டியிலேயே நியூஸிலாந்து அதிரடி ; இலங்கைக்கு இமாலய வெற்றியிலக்கு இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 371 ஓட்டங்களை குவித்தது. நியூஸிலாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது நியூஸிலாந்துடன் இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஒரு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரை நியூஸிலாந்து அணி கைப்பற்றியுள்ள நிலையில், இவ் விரு அணிகளுக்கிடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று காலை மௌனன்குயினில் ஆரம்பானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடி நி…
-
- 0 replies
- 539 views
-
-
காமன்வெல்த் போட்டி- 14 தங்கத்துடன் 36 பதக்கங்கள் பெற்று ஆஸ்திரேலியா முதலிடம் காமன்வெல்த் 2-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 14 தங்கத்துடன் 36 பதக்கங்கள் பெற்று முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. #CWG2018 #GC2018 ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டில் காமன்வெல்த் போட்டி நேற்றுமுன்தினம் (ஏப்ரல் 4-ந்தேதி) கலைநிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று போட்டிகள் தொடங்கியது. தொடக்க நாளில் இங்கிலாந்து 6 தங்கம், தலா மூன்று வெள்ளி, வெண்கலத்துடன் 12 பதக்கங்…
-
- 2 replies
- 539 views
-
-
இரணைமடு ஆதவன் வி.கழக கரப்பந்தாட்ட சுற்றுத் தொடர் கிளிநொச்சி புதிய பாரதி சம்பியன் 2014-09-01 10:26:46 இரணைமடு ஆதவன் விளையாட்டுக் கழகம் நடத்திய மாபெரும் கரப்பந்தாட்ட தொடரின் வெற்றிக் கிண்ணத்தை புதிய பாரதி அணி கைப்பற்றிக் கொண்டது. கிளிநொச்சி மாவட்ட கரப்பந்தாட்ட அணிகளுக்கிடையில் நடத்தப்பட்ட இப் போட்டித் தொடரின் இறுதி ஆட்டம் அண்மையில் இரணைமடு ஆதவன் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது. இப் போட்டியில் இளந்தென்றல் அணியும் புதிய பாரதி அணியும் மோதிக் கொண்டன. இரு அணிகளும் தலா ஒவ்வொரு செட்டினை பெற்று சமநிலையில் இருந்தன. விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி செட்டில் வெற்றிபெற்று 2:1 என்ற கணக்கில் கிளிநொச்சி புதிய பாரதி அணி வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை பெற்றுக் கொண்டது. …
-
- 0 replies
- 539 views
-
-
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு 'விண்டீஸ்' எனப் பெயர் மாற்றம்! வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் பெயர், 'விண்டீஸ்' (Windies) என்று மாற்றப்பட்டுள்ளது. நேற்று, இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் 91-வது ஆண்டு விழா தொடங்கியுள்ளது. இதை முன்னிட்டு, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவுசெய்துள்ளது. இதுகுறித்து, பேசிய வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜானி கிரேவ்ஸ் கூறுகையில், 'இந்தப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளையும் முன்னேற்றத் திட்டமிட்டுள்ளோம். இன்னும் சில வருடங்களுக்கு, விளையாட்டு வீரர்களுடன் நெருக்கமாக இண…
-
- 0 replies
- 539 views
-
-
இலங்கையின் ஒரு நாள் அணியின் தலைவர் திமுத் கருணாரட்ண ரி20 அணியின் தலைவர் லசித் மலிங்க உட்பட முக்கிய வீரர்கள் பாதுகாப்பு காரணங்களிற்காக பாக்கிஸ்தான் செல்வதற்கு மறுத்துள்ளனர் என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது. திமுத் கருணாரட்ன தினேஸ் சந்திமல் அஞ்சலோ மத்தியுஸ் சுரங்க லக்மால் நிரோசன் டிக்வெல குஜால் ஜனித் பெரோ தனஞ்செய சில்வா திசார பெரேரா லசித்மலிங்க அகில தனஞ்செய ஆகிய வீரர்களே பாதுகாப்பு காரணங்களிற்காக பாக்கிஸ்தான் செல்ல மறுத்துள்ளனர் என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது. பாக்கிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள அணியின் வீரர்களை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அதிகாரிகள் இன்று சந்தித்துள்ளனர். …
-
- 1 reply
- 539 views
-
-
டோக்கியோ ஒலிம்பிக்: மூன்று இந்திய மல்யுத்த வீரர்கள் ஒலிம்பிக்கை எட்டிப்பிடித்த கதை 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP டோக்கியோவிலிருந்து பதக்கங்களைக் கொண்டு வரக்கூடிய இந்திய மல்யுத்த வீரர்களின் சொந்த வாழ்க்கை, யுத்த களத்தின் போராட்டத்துக்கு சளைத்தது அல்ல. பல தசாப்தங்களாக ஹாக்கி தவிர மற்ற விளையாட்டுகளில் ஒலிம்பிக் பதக்கத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கும் இந்தியாவின் நிலை கடந்த சில ஆண்டுகளில் மேம்பட்டுள்ளது. இந்த முறை இந்தியாவின் பல வீரர்கள் ஒலிம்பிக் பதக்கங்களை கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவர்களில், ஹரியானாவைச் சேர்ந்த மூன்று மல்யுத்த வீரர்களின் கதை மிகவும் சுவாரஸ்யமானது…
-
- 2 replies
- 539 views
- 1 follower
-
-
இதன் பிறகு அஞ்செலோ மெதிவ்ஸ் பந்துவீச மாட்டார் இலங்கை கிரிக்கெட் அணியின் ஒரு நாள் மற்றும் T20 போட்டிகளுக்கான தலைவரான அஞ்செலோ மெதிவ்ஸ், இனிவரும் காலங்களில் பந்துவீச மாட்டார் எனவும், சிறப்பு துடுப்பாட்ட வீரராக மாத்திரம் விளையாடுவார் எனவும் இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் கிரஹம் லெப்ரோய் தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழான சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு கிரஹம் லெப்ரோய் வழங்கிய விசேட செவ்வியில், அனுபவமிக்க வீரர்கள் தொடர்ந்து உபாதைகளுக்கு உள்ளாவதை தடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. அதேநேரம், மெதிவ்ஸ் மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகிய வீரர்கள் அடிக்கடி உபாதைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அதிலும் க…
-
- 0 replies
- 539 views
-
-
‘பல சமயங்களில் அஷ்வின் என்னை மீட்டெடுத்துள்ளார்’ உலகின் முன்னணி சுழற்பந்துவீச்சாளரான இரவிச்சந்திரன் அஷ்வின், தான் இறுதியாக விளையாடிய மூன்று இருபதுக்கு-20 போட்டிகளில் ஐந்து ஓவர்களை மட்டுமே வீசியுள்ள நிலையில், இந்திய அணித்தலைவர் மகேந்திர சிங் டோணி, இன்னமும் இரவிச்சந்திரன் அஷ்வினை தனது துருப்புச்சீட்டாக கருதுகிறாரா என்று கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. இந்நிலையில், தற்போதும் இரவிச்சந்திரன் அஷ்வினே தனது துருப்புச்சீட்டு எனத் தெரிவித்துள்ள மகேந்திரச சிங் டோணி, இரவிச்சந்திரன் அஷ்வின் எந்த நேரத்திலும் சிறப்பாக செயற்பாடுவார் எனத் தெரிவித்துள்ளார். தான் கூறியது போன்று, முதல் ஆறு ஓவர்களிலோ அல்லது அதிக ஓட்டங்கள் பெறப்படும் இறு…
-
- 0 replies
- 539 views
-
-
ரியல் மெட்ரிட்டுக்கு இலகு வெற்றி: ஜுவன்டஸை மீட்டார் ரொனால்டோ By Mohamed Shibly - ஸ்பெயின் லா லிகா மற்றும் இத்தாலி சிரீ A தொடர்களில் முக்கிய போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று (31) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு ரியல் மெட்ரிட் எதிர் லெகெனஸ் லெகெனசுக்கு எதிரான போட்டியில் 5-0 என இலகு வெற்றியீட்டிய ரியல் மெட்ரிட் அணி லா லிகாவில் முதலிடத்தில் இருக்கும் பார்சிலோனாவை விடவும் ஒரு புள்ளி இடைவெளியில் இரண்டாவது இடத்திற்கு முன்னெற்றம் கண்டது. பிரேசில் பதின்ம வயது வீரர் ரொட்ரிகோ பெற்ற கோல் மூலம் 7ஆவது நிமிடத்தில் …
-
- 0 replies
- 539 views
-
-
ஒருநாள் போட்டியில் 350 ஓட்டங்கள் ! ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தின் நன்ட்விச் கழகத்திற்காக விளையாடிய லியாம் லிவிங்ஸ்டன் 350 ஓட்டங்களைப் பெற்று வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். இங்கிலாந்து கழக மட்டப் போட்டிகளில் விளையாடிய 21 வயதான லியாம் லிவிங்ஸ்டன் 138 பந்துகளில் 350 ஓட்டங்களைப் பெற்று வரலாற்றில் இடம்பெற்றுள்ளார். நன்ட்விச் மற்றும் கல்டி கழக அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற கழக மட்டத்திலான போட்டியின் போதே இச் சாதனை படைக்கப்பட்டுள்ளது. லியாம் லிவிங்ஸ்டனால் பெறப்பட்ட 350 ஓட்டங்களில் 34 நான்கு ஓட்டங்களும் 27 ஆறு ஓட்டங்களும் உள்ளடங்கும். இப்போட்டியில் நன்ட்விச் கழக அணி 45 ஓவர்களில் 579 ஓட்டங்களைப் பெற்று தனது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. பதிலுக்குத் துடுப்ப…
-
- 1 reply
- 538 views
-
-
சிஎஸ்கே-யால் ஒருபோதும் காவிரி நீரைக் கொண்டு வர முடியாது கோப்பையைக் கொண்டு வர முடியும்: வெற்றி விழாவில் தோனி பேசியது 2018 ஐபிஎல் டி20 சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் தங்கள் சாம்பியன்ஷிப் வெற்றியை சென்னையில் கொண்டாடினர். அதில் தோனி மிகவும் உற்சாகமாகப் பல விஷயங்களைப் பற்றி பேசினார். அப்போது “அடுத்த ஆண்டு சென்னையில் வென்ற கோப்பையை மீண்டும் தக்கவைப்போம் என்று நம்புகிறேன். விஷயம் என்னவெனில் சிஎஸ்கேவினால் ஒரு போதும் காவிரியை இங்கு கொண்டு வர முடியாது. ஆம் வழியேயில்லை. ஆனாலும் நாங்கள் குறிவைக்கப்பட்டோம், நியாயமானதுதான், இப்படி எப்போதும் நடக்கக் கூடியதுதான். ஆனால் நாங்கள் ஐபிஎல் போட்டிகளில் வெல்ல…
-
- 0 replies
- 538 views
-
-
கொரோனா பிடியில் ஒலிம்பிக்: அதிரடி தீர்மானத்துக்கு தயாராகும் ஜப்பான் By Mohammed Rishad கொரோனா எனும் கொவிட்-19 வைரஸ் தொற்று நோய் காரணமாக உலகளாவிய ரீதியில் பெரும்பாலான விளையாட்டுப் போட்டிகள் பிற்போடப்பட்டு வருகின்ற நிலையில், எதிர்லரும் ஜூலை மாதம் ஆரம்பமாகவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை பிற்போடுவதற்கு சர்வதேச ஒலிம்பிக் குழு தீர்மானித்துள்ளது. இதுதொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு ஜப்பான் ஒலிம்பிக் குழுவுடனான பேச்சுவார்த்தையின் பிறகு அறிவிக்கப்படும் என சர்வதேச ஒலிம்பிக் குழ…
-
- 0 replies
- 538 views
-
-
டோக்கியோ ஒலிம்பிக்; வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு பிற்போடப்பட்ட 2020 ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள வெளிநாட்டு பார்வையாளர்களை அனுமதிப்பதற்கு ஜப்பான் மறுத்துள்ளது. அதன்படி ஜப்பானுக்கு வெளியில் இருந்து வரும் பார்வையாளர்களை உள்வாங்காமல் இந்த கோடையில் ஒலிம்பிக் விளையாட்டுகளை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜப்பானிய செய்தித்தாளான மைனிச்சி புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விடயத்தை நன்கு அறிந்தவர்களின் கூற்றுப்படி, இந்த திட்டம் குறித்த இறுதி முடிவு இம் மாதத்திற்குள் எடுக்கப்படவுள்ளதுடன், இப் பிரச்சினை குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உள்ளிட்ட பிற தொடர்புடைய அமைப்புகளுடன் ஜப்பானிய அரசாங்கம் கலந்துரையாடி வருகிறது. கொரோனா வைரஸ்…
-
- 0 replies
- 538 views
-
-
26 அணிகள் பங்கேற்கும் உள்ளூர் முதல்தர கிரிக்கெட் போட்டிகள் இன்று ஆரம்பம் By Mohammed Rishad - இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்பருவகாலத்துக்கான (2019/20) உள்ளூர் முதல்தர கழகங்களுக்கிடையிலான Major A மற்றும் Major B கிரிக்கெட் போட்டித் தொடர்கள் இன்று (31) முதல் இடம்பெறவுள்ளன. நான்கு நாட்களைக் கொண்டதாக A மற்றும் B பிரிவுகளாக நடைபெறவுள்ள இம்முறை போட்டித் தொடரானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதன்படி, மேஜர் ஏ பிரிவுக்கான போட்டிகள் 2 குழுக்களாக நடைபெறவுள்ளதுடன், அதில் இடம்பிடித்துள்ள 14 அண…
-
- 0 replies
- 538 views
-
-
சச்சினை நினைவு படுத்தும் 5 வயது சிறுவன்!- வைரல் வீடியோ உள்ளூர் போட்டி ஒன்றில் பதினான்கு வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காக ஐந்து வயது சிறுவன், விளையாடிய வீடியோ தெறி வைரலாகி வருகிறது. சாதிக்கத் தடையில்லை எனச் சொல்வார்கள், பதினைந்து வயதில் சச்சின் டெண்டுல்கர் முதல் தர போட்டிகளில் ஆடிய போது, மைதானத்துக்குள் இருந்தவர்களும் சரி, எதிரணி வீரர்களும் சரி, ஏளனமாக பார்த்தார்கள், சிரித்தார்கள். மிகவும் குட்டையாக இருந்த சச்சின், அதன் பின்னர் ஆறரை அடி உயர பவுலர்களை, அவர்களின் யார்க்கர்களை கலங்கடித்தது தனி வரலாறு. 2002 ஆம் ஆண்டு, இங்கிலாந்து அணிக்கு, இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த சமயம் அது. பார்த்தீவ் படேல் விக்கெட் கீப்…
-
- 0 replies
- 538 views
-
-
11 Nov, 2025 | 02:20 PM (நெவில் அன்தனி) இந்திய உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் மேகாலயா கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சௌதரி 8 பந்துகளில் 8 சிக்ஸ்களை தொடர்ச்சியாக விளாசியதுடன் 11 பந்துகளில் அரைச் சதம் குவித்து முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் அதிவேக அரைச் சதம் குவித்து சாதனை நிலைநாட்டினார். இதன் மூலம் அனைத்துக் கால கிரிக்கெட் ஜாம்வான்கள் இருவரின் மைல்கல் சாதனைகளை முறியடித்தவர் என்ற பெருமையை 25 வயதான ஆகாஷ் சௌதரி பெற்றுக்கொண்டார். ஒரே ஓவரில் 6 சிக்ஸ்களை விளாசிய அவர் அடுத்து அவர் எதிர்கொண்ட ஓவரின் முதல் 2 பந்துகளில் மேலும் 2 சிக்ஸ்களை விளாசி இந்த அரிய சாதனையை நிலைநாட்டினார. மேகாலயா அணிக்கும் அருணாச்சல் பிரதேஷ் அணிக்கும் இடையில் குஜராத் மாநிலத்தின் சுராத் விளையாட்டரங்கில் வார இற…
-
-
- 5 replies
- 538 views
- 1 follower
-
-
ராணுவ சீருடையில் பத்மபூஷண் விருது பெற்ற மகேந்திர சிங் தோனி இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன் மற்றும் வீரர்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து உயரிய பத்மபூஷண் விருது பெற்றார். இந்திய அரசால் வழங்கப்படும் மிகப்பெரிய 3-ஆவது நிலை கௌரவமாக பத்மபூஷண் விருது உள்ளது. இதன்மூலம் இந்திய அளவில் பத்மபூஷன் பெறும் 11-ஆவது கிரிக்கெட் வீரர் எனும் பெருமையைப் பெற்றார். இந்த விழாவில் ராணுவ சீருடையில் வந்த மகேந்திர சிங் தோனி, ராணுவ அணிவகுப்பில் சென்று குடியரசுத் தலைவரிடம் இருந்து இவ்விருதை பெற்றார். புதுதில்லி குடியரசுத் தலைவர் மாளிகைய…
-
- 1 reply
- 538 views
-
-
இலங்கைக்கெதிரான 2வது இருபதுக்கு 20 – தென்னாபிரிக்கா வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது March 23, 2019 இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் இடம்பெற்ற இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியிலும் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி 2-0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது. தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 டெஸ்ட் தொடரிலும் 5 ஒருநாள் தொடரிலும் 3 இருபதுக்கு 20 தொடரிலும் பங்கேற்று விளையாடிய நிலையில் டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என வெற்றி பெற்றிருந்ததுடன் ஒருநாள் தொடரை 5-0 என தென்னாபிரிக்க அணி வெற்றிபெற்றிருந்தது. இந்நிலையில், இரு அணிகளுக்குமிடையில் முதலாவது போட்டியில் சுப்பர் ஓவர் மூலம் தென்னாபரிக்க அணி 14 ஓட்டங்களால் வெற்…
-
- 0 replies
- 538 views
-
-
ரோகித் சர்மா, மாரியப்பன் உள்பட 5 பேருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு மத்திய அரசு சார்பில், ஆண்டுதோறும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா’, ‘அர்ஜூனா’, ஆகிய விருதுகளும், சிறந்த வீரர்களை உருவாக்கும் பயிற்சியாளர்களுக்கு ‘துரோணாச்சார்யா’ விருதும், விளையாட்டு வளர்ச்சிக்கு பங்களிக்கும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு ‘தயான் சந்த்’ விருதும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது தமிழக வீரர் மாரியப்பனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016- ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் மாரியப்பன் தங்கம் வென்றார். அதேபோல், கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, டேபிள் டென்னிஸ் வீராங்க…
-
- 0 replies
- 538 views
-
-
தோனிக்கு ஜாமீனில் வெளி வர முடியாத கைது வாரண்ட்! வர்த்தக இதழ் ஒன்றில் , இந்து கடவுள் விஷ்ணு போல தோனி கையில் காலணி ஒன்றுடன் இருப்பது போன்ற அட்டைப்படம் கடந்த 2013-ம் ஆண்டு வெளியிடப்பட்டிருந்தது. ‘God of Big Deals’ என்ற பெயரில் கட்டுரையையும் அந்த வர்த்தக இதழ் வெளியிட்டிருந்தது. இந்த விளம்பரம் இந்து கடவுளை அவமதிப்பது போலவும் இந்து மக்களின் மதஉணர்வுகளை புண்படுத்துவது போலவும் இருப்பதாக கர்நாடகா, ஆந்திர மாநில நீதிமன்றங்களில் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.அந்த வகையில் இந்து அமைப்பை சேர்ந்த ஷ்யாம் சுந்தர் என்பவர் அனந்தப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனையடுத்து தோனிக்கு, ஆந்திர பிரதேச மாநிலம் அனந்தப்பூர் …
-
- 0 replies
- 538 views
-
-
இப்படியே இருந்தா, "செத்துப் போயிருவோம்".. "குண்டு" போடும் வக்கார் சிட்னி: சர்வதேச அணிகள் பாகிஸ்தானுக்கு வராமல் தொடர்ந்து புறக்கணித்துக் கொண்டிருந்தால், பாகிஸ்தானில் கிரிக்கெட் இறந்து போய் விடும் என்று பாகிஸ்தான் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் எச்சரித்துள்ளார். இப்படியே இருந்தா, கடந்த 2009ம் ஆண்டு முதல் சர்வதேச அணிகள் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் ஆட வருவதில்லை என்பது நினைவிருக்கலாம். தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தானுக்கு எந்த அணியும் போகாமல் உள்ளன. கடந்த 2009ம் ஆண்டு லாகூரில் சுற்றுப்பயணம் செய்திருந்த இலங்கை கிரிக்கெட் அணி மீது பயங்கர தீவிரவாதத் தாக்குதல் நடந்தது. அதில், 7 வீரர்கள் காயமடைந்தனர். பொதுமக்கள் தரப்பில் 8 பேர் கொல்லப்பட்டனர். அன்று முதல் எந்த அணியும…
-
- 0 replies
- 537 views
-
-
Published By: VISHNU 14 APR, 2024 | 10:18 PM (நெவில் அன்தனி) ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு தெரிவாளர்கள் பெயரிட்டுள்ள 32 வீரர்களைக் கொண்ட இலங்கை முன்னோடி குழாத்தில் யாழ். மத்திய கல்லூரியின் முன்னாள் தலைவர் விஜயகாந்த் வியாஸ்காந்த் பெயரிடப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் தெரிவாளர்கள் ஏற்கனவே அறிவித்தவாறு வனிந்து ஹசரங்க அணித் தலைவராகவும் சரித் அசலன்க உதவித் தலைவராகவும் பெயரிடப்பட்டுள்ளனர். அண்மைக்காலமாக சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்திவரும் சகலதுறை ஆட்டக்காரர்கள் உட்…
-
- 3 replies
- 537 views
- 1 follower
-