விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக வருவாய் ஈட்டும் வீரர் கோலி விராட் கோலி. | கோப்புப் படம்: கே.ஆர்.தீபக். ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக வருவாய் ஈட்டும் வீரர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாக திகழும் இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி ஆவார். இதனை ஐபிஎல் லீக் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. ரூ.12.5 கோடிக்குத்தான் விராட் கோலியின் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது, ஆனால் ராயல் சாலஞ்சர்ஸ் அணி உரிமைதாரர் கோலிக்கு கொடுக்கும் தொகையோ ரூ.15 கோடி. அதே போல் கிறிஸ் கெய்லுக்காக செலவிடப்பட்ட ரூ.7 கோடியே 50 லட்சத்தைக் காட்டிலும் கூடுதலான தொகையாக அவருக்கு ரூ.8 கோடியே 40 லட்சம் கொடுக்கிறது. தோனிதான் ஐபிஎல் கிரிக்கெட்டில் செலவு மிக்க வீரர் என்று ந…
-
- 0 replies
- 525 views
-
-
ஐபிஎல் கிரிக்கெட்டில் மேற்கிந்திய வீர்ர்கள் பங்கேற்பை பிசிசிஐ மறு பரிசீலனை பணமழை ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மேற்கிந்திய வீர்ர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. காரணம் தொடரை பாதியிலேயே முடித்துக் கொண்டது பிசிசிஐ-யிடத்தில் கடும் கோபத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், ”ஐபிஎல் ஆட்சிக்குழு கூட்டத்தில் நிச்சயம் இந்த விவகாரம் எழுப்பப்படும். ஒரு சீசனுக்காவது வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து தடை செய்ய வேண்டும். கிறிஸ் கெய்ல், டிவைன் பிராவோ, கெய்ரன் பொலார்ட், டிவைன் ஸ்மித், சுனில் நரைன் ஆகியோருக்கு ஐபிஎல் மூலம்தான் பணம் குவிந்துள்ளது. நட்சத்திர அந்தஸ்தும் கிடைத்துள்ளது. இவர்கள் மீது இந்திய ர…
-
- 0 replies
- 349 views
-
-
ஐபிஎல் கிரிக்கெட்டை அகற்ற வேண்டும்: இயன் போத்தம் ஐபிஎல் கிரிக்கெட்டை அகற்ற வேண்டும், கிரிக்கெட்டின் நீண்ட கால ஆயுளுக்கு ஐபிஎல் கிரிக்கெட் பாதகம் விளைவித்து வருகிறது என்று இங்கிலாந்து முன்னாள் ஆல்ரவுண்டர் இயன் போத்தம் சாடியுள்ளார். லார்ட்ஸில் எம்.சி.சி. ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் கவுட்ரி சொற்பொழிவில் இயன் போத்தம் இவ்வாறு கூறியுள்ளார். "நான் ஐபிஎல் கிரிக்கெட் பற்றி மிகுந்த கவலையடைகிறேன், உண்மையில், அந்த கிரிக்கெட் வடிவம் இருக்கக் கூடாது என்றே நினைக்கிறேன், உலக கிரிக்கெட்டின் முன்னுரிமைகளை அது மாற்றிவிடுகிறது. வீரர்கள் ஐபிஎல் கிரிக்கெட்டிற்கு அடிமைகளாக இருக்கின்றனர். நிர்வாகிகள் அதற்குத் தலைவணங்குகின்றனர். 2 மாத காலங்களுக்கு உலகின் சிறந்த வீரர்களை தன்னகத்தே பிடித்துப…
-
- 3 replies
- 850 views
-
-
ஐபிஎல் சஸ்பென்ஸ் முடிந்தது.. சென்னை, ராஜஸ்தானுக்கு பதிலாக புனே, ராஜ்கோட் அணிகள் களமிறக்கம் மும்பை: 2 வருடம் சஸ்பெண்ட் தண்டனைக்கு உள்ளாகியுள்ள, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு மாற்றாக புனே மற்றும் ராஜ்கோட் என்ற பெயரில் இரு அணிகள் தேர்வாகியுள்ளன. 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின்போது மேட்ச் பிக்சிங் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி முத்கல், முன்னாள் நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் விசாரணைக் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டார். உறுதி நீதிபதி லோதா குழுவினர் தங்களது விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்கியது. இதில் சென்னை அணியின், குருநாத் மெய்யப்பனும்,…
-
- 0 replies
- 503 views
-
-
ஐபிஎல் சியர் லீடர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது? பகிர்க படத்தின் காப்புரிமைANDY LYONS ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் வண்ணமயமாக நடக்கிறது. ஐபிஎல் என்றவுடன் நமக்கு நினைவு வருவது என்ன? வெவ்வேறு ஜெர்ஸியில் அயல்நாட்டு வீரர்கள், இரைச்சல், இசை நிறைந்த கிரிக்கெட் விளையாட்டு அரங்கில் தங்களது அணியையும், அணியின் ரசிகர்களை உற்சாகமூட்டுவதற்காக சியர் லீடர்ஸ் என அழைக்கப்படும் நடனமாடுபவர்கள் மற்றும் இந்திய அணிக்குள் நுழைவதற்காக தங்களது முழுத்திறனை வெளிப்படுத்தி அணித் தேர்வாளராக்களை கவர முயற்சிக்கும் இளம் இந்திய வீரர்கள். ஐபிஎல் அணிகள் குறித்தும், இறுதிப் போட்டியில் எந்த அணி வெல்லக்கூடும் என்பது குறித்தும் இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கப்போவதில்லை. ஒவ்வொர…
-
- 3 replies
- 1.2k views
-
-
ஐபிஎல் சுற்றுப்போட்டிகள் 2017- ஏப்ரல்5 இல் ஆரம்பம் பத்தாவது தடவையாக இடம்பெறும் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் சுற்றுப் போட்டிகள் ஏப்ரல் 5 ஆரம்பமாகு மென இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை உறுதிப்படுத்தியுள்ளது. கட்டுப்பாட்டுச் சபை அதிகாரிகளும் குழு நிர்வாகிகளும் சந்திப்பு ஒன்றை நேற்று நிகழ்த்திய பின்னர் இந்தத் திகதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது .. வெளிநாட்டு வீரர்கள் உட்பட கிரிக்கெட் வீரர்களை கழகங்கள் ஏலத்தில் எடுப்பது இந்தமாதம் இடம்பெறலாம் என்று நம்பப்படுகிறது. இந்தநிலையில் இங்கிலாந்து அணி வீரர்களுக்கோ சோதனைமேல் சோதனை ! இங்கிலாந்து அணியின் வீரர்கள் இந்தியாவில் விளையாடினால் விளையாடும் ஒவ்வொரு நாளுக்கும் அவர்கள் தாயக ஊதியத்திலிருந்து…
-
- 2 replies
- 566 views
-
-
ஐபிஎல் சூதாட்ட வழக்கில் குருநாத் மெய்யப்பன் குற்றவாளி, சீனிவாசன் குற்றமற்றவர்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்ட நிலையில் ராஜ் குந்த்ரா மற்றும் குருநாத் மெய்யப்பனுக்கான தண்டனை குறித்து தீர்மானிக்க முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் 3 நபர் குழு அமைக்கப்படும். சூதாட்டத்தில் ஈடுபட்டு தவறிழைத்தவர்கள் மீதான நடவடிக்கை தனிநபர் சார்ந்ததல்ல அவர்கள் சார்ந்த அணியையும் கட்டுப்படுத்தும் என்று உச்ச நீதிமன்றம் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீதான நடவடிக்கை பற்றி சூசகமாகத் தெரிவித்துள்ளது. ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் குருநாத் மெய்யப்பன் குற்றவாளி என்றும், சீனிவாசன் குற்றமற்றவர் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து…
-
- 2 replies
- 479 views
-
-
ஐபிஎல் சூதாட்ட வழக்கில் விடுவிக்கப்பட்ட வீரர்களுக்கு எதிராக மேல்முறையீடு! புதுடெல்லி: ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் விடுவிக்கப்பட்ட 36 வீரர்களுக்கு எதிராக டெல்லி காவல்துறை மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடந்தது. இதில் குற்றஞ்சாட்டப்பட்ட ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கித் சவான் உள்ளிட்ட 36 விளையாட்டு வீரர்கள், குற்றம் செய்ததற்கான போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி, அவர்களை நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்நிலையில், பாட்டியாலா நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட 36 விளையாட்டு வீரர்களுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில், டெல்லி காவல்துறை மேல்முறை…
-
- 0 replies
- 183 views
-
-
ஐபிஎல் சூதாட்ட வழக்கு: ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 19 பேருக்கும் பிணை ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைதான இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூவர், மற்றும் இடைத்தரகர்கள், புக்கிகள் என்று மொத்தம் 19 பேருக்கு டெல்லி நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. பிணை வழங்காமல் இருக்கும்படியான போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் நீதிமன்றம் கூரியதாகத் தெறிய வருகிறது. நடந்து முடிந்த 6வது ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த வீரர்கள் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூன்று பேர், ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கான வீடியோ ஆதாரங்கள், மற்றும் தொலை பேசி உரையாடல்கள் கிடைத்துள்ளதாக கூறி, டெல்லி போலீசார் மூவரையும் அதிரடியாக கைது செய்து விசாரித்து வந்தனர். இவ…
-
- 0 replies
- 606 views
-
-
ஐபிஎல் சூதாட்ட விவகாரம் கிரிக்கெட் உலகில் பூதாகரமாக வெடிக்க துவங்கியுள்ளது. இதுவரை இந்த விவகாரத்தில் ஸ்ரீசாந்த் உள்பட கிரிக்கெட் வீரர்கள் மட்டும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் டெல்லி துவக்க வீரர் ஒருவர் மீது போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். அந்த வீரர் இந்த சீசனில் ஆடிய அனைத்து ஆட்டங்களிலும் சொதப்பலாக ஆடியுள்ளார். அவருக்கு சூதாட்டத்தரகர்களுடன் தொடர்பு இருக்கக்கூடும் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் பாகிஸ்தானை சேர்ந்த நடுவர் ஒருவர் மீதும் போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். போட்டிகளின் போது இல்லாமல் தனிப்பட்ட முறையில் அந்த நடுவர் சூதாட்டத்தரகர்களை தொடர்பு கொண்டிருக்கக்கூடும் என போலீசார் http://di…
-
- 0 replies
- 349 views
-
-
மும்பை: ஐபிஎல் போட்டிகள் தொடர்பான சூதாட்டத்தில் ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு பணம் புழங்குவதாக கூறப்படுகிறது. இதன் கிங்பின் இருப்பது துபாயில் என்பதும், ஒரு சில வீரர்களை வளைத்துவிட்டால், மொத்த போட்டியையும் மாற்றிவிடலாம் என்பதும் இந்த சூதாட்டத்தின் சூத்திரங்கள். ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு மவுசு கூடக்கூட, அதன்மீதான சூதாட்ட மதிப்பும் கூடிக்கொண்டுள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் ஐபிஎல் தொடர்பான சூதாட்டங்களில் ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு பணம் புழங்கியுள்ளதாக கூறுகின்றனர் அமலக்கப்பிரிவு அதிகாரிகள். பெயர் வெளியிடப்பட விரும்பாத சூதாட்டக்காரர் ஒருவர் 'ஒன்இந்தியாவிடம்' கூறுகையில், ஆண்டுக்கு ஆண்டு, சூதாட்டத்துக்கான பணம் மதிப்பு கூடிக்கொண்டே செல்கிறது. கிரிக்கெட் இருக்கும்வரை பெட்டிங்கும் இ…
-
- 0 replies
- 400 views
-
-
ஐபிஎல் சூதாட்டம்: 14-ல் தண்டனை அறிவிப்பு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் ஃபிக்ஸிங் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்ட குருநாத் மெய்யப்பன், ராஜ்குந்த்ரா உள்ளிட்டோருக்கான தண்டனை விவரம் வரும் 14-ம் தேதி வெளியாகிறது. உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான 3 பேர் அடங்கிய குழு, இந்த தண்டனை விவரத்தை அறிவிக்கிறது. குருநாத், குந்த்ராவுக்கு மட்டுமின்றி, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கான தண்டனை விவரமும் 14-ம் தேதி வெளியாகிறது. இது பிசிசிஐ மற்றும் ஐபிஎல்லில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2013-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் எழுந்த சூதாட்ட புகார் கிரிக்கெட் உலகையே உலுக்கியது. ஸ்ர…
-
- 0 replies
- 435 views
-
-
ஜடேஜாவுக்கு பதில் சஞ்சு சாம்சன் : சிஎஸ்கே முடிவால் யாருக்கு லாபம்? பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்த சஞ்சு சாம்சன் - ரவீந்திர ஜடேஜா 'ஐபிஎல் டிரேட்' உறுதியாகியிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய அங்கமாக விளங்கிய ஜடேஜாவையும், ஆல்ரவுண்டர் சாம் கரண் இருவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு டிரேட் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதற்குப் பதிலாக ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்திருக்கிறார். ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை ஏலத்தைத் தவிர்த்து 'டிரேட்' மூலமாகவும் வீரர்களை வாங்க முடியும். 2009ம் ஆண்டு முதலே ஐபிஎல் டிரேட்கள் நடந்துகொண்டுதான் இர…
-
- 10 replies
- 807 views
- 1 follower
-
-
ஐபிஎல் புதிய விதிகளால் தோனியின் ஊதியம் குறைய வாய்ப்பு - அடுத்த ஆண்டு விளையாடுவாரா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழ் 39 நிமிடங்களுக்கு முன்னர் 2025ஆம் ஆண்டு தொடங்க இருக்கும் ஐபிஎல் டி20 தொடரின் 18வது சீசனுக்கான புதிய விதிகளை ஐபிஎல் நிர்வாகக் குழு வெளியிட்டுள்ளது. இதன்படி ஒரு அணி எத்தனை வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம், சர்வதேச கிரிக்கெட் விளையாடாத வீரர்களின் நிலை, அவர்களின் ஊதியம், ஏலத்தில் பங்கேற்று தேர்வான பின் பங்கேற்காத வீரர்களுக்கு தண்டனை விவரம், வீரர்களுக்கான புதிய போனஸ், அணிகளின் கையிருப்பு தொகை அதிகரிப்பு, ஓய்வு பெற்ற வீரர்கள் மீண்ட…
-
-
- 114 replies
- 4.7k views
- 1 follower
-
-
ஐபிஎல் தொடருக்கு அதிக முக்கியத்துவம் – அப்ரீடியின் டுவிட்டர் பதிவினால் சர்ச்சை ஐபிஎல் தொடருக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாஹித் அப்ரிடி அதிருப்தி தெரிவித்துள்ளார் தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்இ 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. நேற்றுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்து முடிந்தது. இதில்இ முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் 1-1 என வெற்றிபெற்று சமநிலையில் இருந்ததால் கடைசி ஒருநாள் போட்டி மீது கூடுதல் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால்இ இரண்டாவது போட்டியில் பங்கேற்ற தென்னாப்பிர…
-
- 0 replies
- 371 views
-
-
ஐபிஎல் போட்டிகளில் ஆடி காயமடைய வேண்டாம்: ஆஸி. வீரர்களுக்கு மைக்கேல் கிளார்க் எச்சரிக்கை மைக்கேல் கிளார்க். | படம்: ஏ.எஃப்.பி. அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் ஆடுவதை ஆஸ்திரேலிய வீரர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் அறிவுரை வழங்கியுள்ளார். 2016 ஐபிஎல் போட்டிகளில் ஐபிஎல் போட்டிகளில் ஆடிய முக்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் காயமடைந்ததை அடுத்து மைக்கேல் கிளார்க் கூறும்போது, “வீரர்களின் பணிச்சுமையை அதிகரிக்கிறது ஐபிஎல். இதனால் ஓய்வு இன்றி கடுமையான களைப்பு ஏற்படுகிறது. சாதகமான அம்சம் பணம் வருகிறது என்பதுதான். ஆனால் அதற்கு கொடுக்கும் விலை அதிகமாக உள்ளது. களைப்பு, ஓய்வின்மை. நமக்கு சிறந்த…
-
- 0 replies
- 265 views
-
-
ஐபிஎல் போட்டிகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை ஐபிஎல் அணிகளிற்கு அறிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை இது குறித்த பகிரங்க அறிவிப்பை வெளியிடாத போதிலும் எட்டு அணிகளிற்கும் ஒலிபரப்பு உரிமம் பெற்றவர்களிற்கும் இதனை தெரிவித்துள்ளது. தற்போதைக்கு ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன, என பிசிசிஐ தெரிவித்துள்ளது,இயல்பு நிலை ஏற்பட்டவுடன் வருட இறுதியில் போட்டிகளை நடத்தலாம் என அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர் என அணியொன்றின் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்திய அரசாங்கத்தின் முடக்கல் தொடர்பான அறிவிப்பிற்காகவே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் தலைவர் காத்திருந்தார் முடக்கல் நிலை நீடிக்கப்பட்டது…
-
- 0 replies
- 780 views
-
-
ஐபிஎல் போட்டிக்கு அழைத்தால் கூட நான் விளையாட வரமாட்டேன்: அப்ரிடி ‘அந்தர் பல்டி’ பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி - படம் உதவி: ட்விட்டர் இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் விளையாட என்னை அழைத்தால் கூட நான் விளையாமாட்டேன் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி மீண்டும் வம்பிழுக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார். ஐபிஎல் முதன்முதலில் தொடங்கும் போது டெக்கான் சார்ஜர்க்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த அப்ரிடி அப்போது ஐபிஎல் போட்டியை புகழ்ந்து தள்ளினார். அப்போது அவர் கூறுகையில், ‘ஐபிஎல் தொடரில் நான் விளையாடிய அனுபவத்தை என்னால் மறக்க முடியாது. மிகச்சிறந்த அனுபவம். மிகச்சிற…
-
- 0 replies
- 353 views
-
-
ஐபிஎல் போட்டியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கமாட்டார்கள் November 16, 2018 1 Min Read 2019-ம் ஆண்டில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கமாட்டார்கள் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை விடுத் துள்ள செய்திக்குறிப்பில் உலகக் கோப்பை கிரிக் கெட் போட்டி இங்கிலாந்தில் அடுத்த வருடம் மே 30-ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே ஐபிஎல் போட்டிகளை முடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் ஐபிஎல் போட்டி யில் பங்கேற்கும் அவுஸ்திரேலிய வீரர்கள், உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள், பாகிஸ்தானுடனான ஒரு …
-
- 0 replies
- 429 views
-
-
ஐபிஎல் போட்டியில் பங்கேற்பது கடினம்... சர்வதேச ஆட்டங்கள் காரணமாக மீதமுள்ள ஐபிஎல் ஆட்டங்களில் இங்கிலாந்து வீரர்களால் விளையாட முடியாமல் போகலாம் என ராஜஸ்தான் ராயல்ஸ் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார். கொரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்பட்டது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, பெங்களூர் ஆகிய ஆறு நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சென்னை, மும்பையில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெற்றன. அடுத்ததாக ஆமதாபாத், தில்லியில் ஆட்டங்கள் நடைபெற்று வந்தன. கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தும் சில வீரா்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஐப…
-
- 0 replies
- 604 views
-
-
ஐபிஎல் போட்டியை தங்கள் நாட்டில் நடத்த கோரிக்கை! இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததையடுத்து மார்ச் 29 ஆம் திகதி நடைபெறவிருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் ஐபிஎல் போட்டிகள் செப்டம்பரில் நடத்தப்படலாம், வெளிநாடுகளில் நடக்கலாம் என்ற செய்திகள் வெளியாகின. இதனை அடுத்து அதிகாரப்பூர்வமாகச் செய்தி வெளியிட்ட பிசிசிஐ, ‘‘நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாலும், ஊரடங்கு உத்தரவு அரசால் செயல்படுத்தப்பட்டு வருவதாலும், அடுத்த அறிவிப்பு வரும் வரை 2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்படுகின்றன. கிரிக்கெட் போட்டியைவிட தேசத்தின் பாதுகாப்பும் நலனே முக்கியம் என்பதால் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணிகளின் …
-
- 0 replies
- 826 views
-
-
ஐபிஎல் போல கனடாவில் கிரிக்கெட் லீக்: தொழிலதிபர் முயற்சி கனடியன் ப்ரீமியர் லீக் தளத்திலிருந்து... இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகளிலிருந்து குடிபெயர்ந்து வருபவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருவதால், கனடா நாட்டில் ஐபிஎல் போன்ற டி20 கிரிக்கெட் லீக் போட்டியை நடத்த தொழிலதிபர் ஒருவர் திட்டமிட்டுள்ளார். ராய் சிங் என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் இம்முயற்சியை மேற்கொள்ளவிருக்கிறார். கனடிய ப்ரீமியர் லீகை தொடங்குவதே தனது லட்சியம் என்று தெரிவித்துள்ளார். இதற்காக கனடியன் ப்ரீமியர் லீக் டி20-ஐ தொடங்கியுள்ளார். இதற்கான சோதனை ஆட்டத்தை ஏற்கெனவே மாண்ட்ரியலில் நடத்தியும் காட…
-
- 0 replies
- 241 views
-
-
ஐபிஎல் மூலம் இந்திய அணிக்கு புது கேப்டன்? இதை யாரும் எதிர்பார்க்கலயே.. ரவி சாஸ்திரி பரபர தகவல்.. இந்திய அணிக்கு புதிய கேப்டனை நியமிப்பது குறித்து ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ உன்னிப்பாக கவனித்து வருவதாக ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட்கோலி சமீபத்தில் விலகினார். இதனை அடுத்து ரோகித் சர்மா இந்திய அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் நடந்த கிரிக்கெட் தொடர்களில் தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது. …
-
- 0 replies
- 400 views
-
-
ஐபிஎல் ரசிகர்களுக்கு மீண்டும் 360 டிகிரி அதிரடி காணக்கிடைக்குமா? மவுனம் கலைத்த ஏ.பி.டிவில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சமீபத்தில் ஓய்வு அறிவித்த தென் ஆப்பிரிக்க அதிரடி பேட்ஸ்மென் ஏ.பி.டிவில்லியர்ஸ் தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடுவாரா ஆடமாட்டாரா என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. இந்நிலையில் ஏ.பி.டிவில்லியர்ஸ் இது குறித்து மவுனம் கலைத்துள்ளார்: “ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்னும் சில ஆண்டுகளுக்கு ஆடுவேன், அதே போல் டைட்டன்ஸ் அணிக்கு ஆடி இளம் வீரர்களை ஊக்குவிக்க விரும்புகிறேன், என்னிடம் திட்டமிடல் எதுவுமில்லை. இதனை நீண்டநாட்களாக என்னால் தெரிவிக்க முடியாமல் இருந்தது அவ்வளவே. நிறைய இடத்தி…
-
- 0 replies
- 383 views
-
-
ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் வழக்கு: ஸ்ரீசாந்த் உட்பட 36 பேருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் கோப்புப் படம். ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் தொடர்பாக டெல்லி போலீஸ் தொடர்ந்த வழக்கில் கிரிக்கெட் வீர்ர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா, அங்கீட் சவான் உட்பட 36 பேருக்கு விளக்கம் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2013-ம் ஆண்டு நடந்த 6-வது ஐபிஎல் தொடரில் எழுந்த ஸ்பாட் பிக்சிங் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என ஸ்ரீசாந்த், சாண்டிலா, சவான் உட்பட 36 பேர் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டதாக உத்தரவிடப்பட்டது. அதாவது மகாராஷ்டிர ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டு…
-
- 0 replies
- 246 views
-