விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7861 topics in this forum
-
சர்வதேச கிரிக்கெட்டில் முன்னணி வீரர் விராட் கோலி. இந்திய அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி பொலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், விராட் கோலி – அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு இரண்டாவதாக அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அத்தம்பதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அனுஷ்கா ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் பதிவிட்டுள்ளார். அதில், “பெப்ரவரி 15 ஆம் திகதி எங்கள் ஆண் குழந்தை அகாயையும், வமிகாவின் சிறிய சகோதரனையும் இந்த உலகிற்கு வரவேற்றோம் என்பதை மிகுந்த மகிழ்ச்சி மற்றும் மனம் முழுக்க அன்புடன், உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம். எங்கள் வாழ்க்கையில் மிகவும் அழகான இந்த நேரத்தில் உங்கள் அனைவர…
-
- 0 replies
- 312 views
- 1 follower
-
-
அப்துல் கலாம் மறைவுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மவுன அஞ்சலி! சென்னை:குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் மறைவை முன்னிட்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மவுனஅஞ்சலி செலுத்தினர். சென்னை சேப்பக்கம் மைதானத்தில் இந்திய -ஆஸ்திரேலிய 'ஏ ' அணிகளுக்கிடையேயான 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. முன்னதாக இந்த போட்டி தொடங்கும் முன், மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 2 நிமிடம் மவுனஅஞ்சலி கடைபிடிக்கப்பட்டது. அதோடு இரு அணி வீரர்களும் கறுப்பு பட்டையை கையில் அணிந்தவாறு விளையாடினர். இந்திய அணி 45 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து வ…
-
- 0 replies
- 345 views
-
-
சோபர்ஸ் இல்லையென்றால் ..... : மனம் திறந்த அர்ஜுன ரணதுங்க சேர் கார்பீல்ட் சோபர்ஸ் மட்டும் இல்லையென்றால் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை இவ்வளவு தூரம் வளர்ந்திருக்காது என்று, இலங்கைக்கு உலகக் கிண்ணத்தைப் பெற்றுத்தந்த இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். உலகின் தலைசிறந்த சகலதுறை ஆட்டக்காரராக கருதப்படும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் அணித் தலைவர் சேர் கார்பீல்ட் சோபர்ஸ் இலங்கை வந்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பார்வையாளராகப் பங்குபற்றிய சேர் கார்பீல்ட் சோபர்ஸுக்கு, துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சில், அமைச்சர் அர்ஜுன ரண…
-
- 0 replies
- 296 views
-
-
ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகும் இந்திய வீரர் December 18, 2015 ஆப்கானிஸ்தான் துடுப்பாட்ட அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரை அந்த அணி நிர்வாகம் நியமித்துள்ளது. இந்திய அணியில் பந்துவீச்சிலும் துடுப்பாட்டத்திலும் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி சிறப்பாக செயல்பட்டவர் மனோஜ் பிரபாகர். வேகப்பந்துவீச்சாளரான இவர், ஒருநாள் ஆட்டத்தில் 96 விக்கெட்டுகளும் டெஸ்டில் 157 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார், மேலும் முதல் தர கிரிக்கெட்டில் 385 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார். டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்துள்ள இவரை தற்போது ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளராக அந்த நாட்டின் கிரிக…
-
- 0 replies
- 607 views
-
-
இலங்கையின் முன்னாள் 19 வயதுக்குட்பட்ட வீரர் அக்ஷு பெர்னாண்டோ காலமானார் Published By: Digital Desk 3 30 Dec, 2025 | 01:16 PM (என்.வீ.ஏ.) South Asians & Diaspora இலங்கையின் முன்னாள் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர் அக்ஷு பெர்னாண்டோ இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) காலமானார். அவரது கிரிக்கெட் வாழ்க்கையும் உயிரும் துரதிர்ஷ்டவசமாக அகால முடிவுக்கு வந்ததை அடுத்து கிரிக்கெட் சமூகத்தினர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நியூஸிலாந்தில் 2010இல் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண் கிரிக்கெட் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அக்ஷு பெர்னாண்டோ, 2018 டிசம்பர் 28ஆம் திகதியன்று கல்கிஸ்ஸை கடற்கரைக்கு அருகிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில…
-
- 0 replies
- 140 views
- 1 follower
-
-
வீரர்களுக்கு மஹேல, சங்கா, முரளி ஆகியோரின் அனுபவம் தேவை ; அரவிந்த இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு மஹேல, சங்கா, முரளி, அசங்க குருசிங்க போன்ற முன்னாள் வீரர்களின் அனுவம் மற்றும் அவர்களின் அறிவுத்திறன் போன்றன தேவைப்படுவதாக இலங்கை கிரிக்கெட் குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வா தெரிவித்தார். “ எதிர்கால திட்டத்திற்கான பயிற்சி ” எனும் திட்டத்தின் கீழ் பயிற்றுவிப்பாளர்களுக்கான கருத்தரங்கு விளையாட்டுத்துறை அமைச்சின் டங்கன் வைட் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது. குறித்த கருத்தரங்கின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அ…
-
- 0 replies
- 355 views
-
-
ஆஸி.க்கு மகிழ்ச்சி! இந்தியாவுக்கு சோகம்! இது தான் பாக்ஸிங் டே வரலாறு! #BoxingDayTest ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஆஷஸ் தொடரை ஒரு யுத்தமாக பார்க்கிறது என்றால் அதற்கு இணையானது தான் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியும். அதாவது எல்லா வருடமும் எதாவது ஒரு அணியுடன் ஆஸ்திரேலிய அணி டிசம்பர் 26-ம் தேதி மெல்பெர்ன் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் ஆடும். அதனை வென்றே தீர வேண்டும் என்ற வெறியோடு ஒவ்வொரு முறையும் ஆக்ரோஷமாக ஆஸி அணி களமிறங்கும். பாக்ஸிங் டே வரலாறு! விக்டோரியா அணிக்கும், நியூ சவுத் வேல்ஸ் அணிக்கும் இடையே ஷெஃபீல்டு ஷீல்டு போட்டி கிறிஸ்துமஸ் சமயத்தில் மெல்பெர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. அதில் பாக்ஸிங் டேயும் அடக்கம். நியூ சவுத் வேல்ஸ் வீரர்கள் கி…
-
- 0 replies
- 346 views
-
-
4x100 மீட்டர் கலப்பு மெட்லி நீச்சல் போட்டியில் உலக சாதனையை முறியடித்தது அமெரிக்கா அமெரிக்காவைச் சேர்ந்த நீச்சல் அணி, 4x100 மீட்டர் கலப்பு மெட்லி நீச்சல் போட்டியில் அமெரிக்க அணி முந்தைய உலக சாதனையை முறியடித்துள்ளது. புடாபெஸ்ட்: ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் உலக சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், நான்கு வகையான நீச்சல் போட்டிகளை (பேக்ஸ்ட்ரோக், ப்ரெஸ்ட்ஸ்ட்ரோக், பட்டர்ஃப்ளை, ஃப்ரீஸ்டைல்) உள்ளடக்கிய மெட்லி போட்டிக்கான தகுதிச்சுற்று இன்று நடைபெற்றது. இதில் ஆடவருக்கான கலப்பு மெட்லி பிரிவில் அமெரிக்காவின் ரியான் மர்பி, கெவின் கார்டஸ், கெல்சி…
-
- 0 replies
- 315 views
-
-
ஜெய் ஸ்ரீராம் முழக்கம்: ஷமி, சிராஜூக்கு இதற்கு முன்பு என்ன நடந்தது? கோலி, ரஹானே என்ன செய்தார்கள்? பட மூலாதாரம்,GETTY IMAGES 9 மணி நேரங்களுக்கு முன்னர் "ஒருவர் சார்ந்த மதத்தின் அடிப்படையில் அவரை விமர்சிப்பது ஒரு மனிதன் செய்யக் கூடிய மிகவும் பரிதாபமான செயல். அவர்கள் முதுகெலும்பில்லாதவர்கள். அவர்கள் மீது கவனம் செலுத்தி வாழ்க்கையில் ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்க விரும்பவில்லை" - இவை 2021-ம் ஆண்டு இருபது ஓவர் உலகக்கோப்பைப் போட்டி ஒன்றில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியுற்ற போது, அணியில் இடம் பெற்றிருந்த முகமது ஷமியை சமூக ஊடகங்களில் ரசிகர்கள் விமர்சித்த போது அப்போதைய கேப்டன் விராட் கோலி உதிர்த்த வார்த்தை…
-
- 0 replies
- 746 views
- 1 follower
-
-
"மீசைக்கார" தவனுடன் சண்டை போட்ட "ரோஷக்கார" கோஹ்லி.. அமைதிப்படுத்திய "டைரக்டர்" ரவி சாஸ்திரி! பிரிஸ்பன்: ஆஸ்திரேலியா உடனான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோற்றதால் ரசிகர்கள் கடுப்பாக உள்ள நிலையில் இந்திய வீரர்களுக்குள் ஒரு குடுமி பிடி சண்டை நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சண்டையை ஆரம்பித்து வைத்தவர் துணை கேப்டனான விராத் கோஹ்லி. அவர் போய் சண்டை போட்டது தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவனுடன். காரணம் - 2வது இன்னிங்ஸில் 4வது நாள் ஆட்டத்தின்போது காயம் காரணமாக கடைசி நேரத்தில் தவன் ஆட முன்வராததால். தவன் காயத்தை கடைசி நேரம் வரை சொல்லாமல் இருந்து கடைசியில் சொன்னதால் ஏற்பட்ட குழப்பத்தால் கோஹ்லியை திடீரென களம் இறக்க நேரிட்டு விட்டதாக கேப்டன் டோணி கூறியிருந்தார். ஆனால் அ…
-
- 0 replies
- 298 views
-
-
கிரிக்கெட்டை கிராமத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் கிரிக்கெட்டை நாம் கிராமத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும். கிரிக்கெட்டை மட்டுமல்ல, நமது விளையாட்டையே கிராமத்திலிருந்து ஆரம்பித்தால் சிறந்ததொரு பெறுபேற்றை நாம் பெற்றுக்கொள்ளமுடியும் என தெரிவித்தார். இலங்கைக் கிரிக்கெட் இடைக்கால சபையின் தலைவர் சிதத் வெத்தமுனி. இலங்கைக் கிரிக்கெட் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்படி தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், கிராமத்திலிருந்துதான் சிறந்த வீரர்கள் வருகிறார்கள். ஆனால் நாங்களோ தலைநகரத்தில்தான் விளையாட்டுக்கான அனைத்து வளங்களையும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இது மாறவேண்டும். …
-
- 0 replies
- 288 views
-
-
எங்களுக்கு என்று தமிழீழம் கிடைச்சு , தமிழீழ கிரிகெட் அணி மற்ற நாடுகலுடன் விளையாடும் போது பார்க்க எப்படி இருக்கும் / எவளவு காலத்துக்கு மாற்றான் விளையாட பார்க்கிறது , இத வாசித்து விட்டு கற்பன கூட என்று நினைச்சு போடாதைங்கோ , கனவு ஒரு நாள் பலிக்கும் என்ர நம்பிக்கை எனக்கு இருக்கு 🙏/ பையன்26
-
- 0 replies
- 759 views
- 1 follower
-
-
புனேயின் பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங் December 18, 2015 ஐபிஎல் தொடரில் புனே அணியின் பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு நடந்த போட்டியில் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் றொயல்ஸ் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புனே மற்றும் ராஜ்கோட் அணிகள் தெரிவு செய்யப்பட்டன, இதில் புனே அணியில் டோனியுடம், ராஜ்கோட் அணியில் ரெய்னாவும் விளையாடவுள்ளனர். இந்நிலையில் புனே அணியின் பயிற்சியாளராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட ஸ்டீபன் பிளமிங் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து…
-
- 0 replies
- 560 views
-
-
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, பிசிசிஐ-யின் புதிய தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய கிரிக்கெட் வாரிய (பிசிசிஐ) நிர்வாகிகள் தேர்வு வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி, பிசிசியின் புதிய தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் கிரிக்கெட் வாரிய தலைவரான சீனிவாசன், தலைவர் பதவிக்கு பிரிஜேஷ் படேல் பெயரை முன்மொழிந்த போதிலும், அவருக்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது. தலைராக கங்குலியை, தேர்வு செய்ய பெரும்பான…
-
- 0 replies
- 389 views
-
-
நியூஸிலாந்து வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் பெயர் : ஸ்காட் ஃப்னார்ட் ஸ்டைரிஸ் பிறந்த தேதி : 1975 ஜூலை 10 பிறந்த இடம் : பிரிஸ்பேன், குயின்ஸ்லாண்ட், ஆஸ்ட்ரேலியா. வயது : 32 வலது கை ஆட்டக்காரர் வலது கை மிதமான பந்து வீச்சாளர் விளையாடிய முக்கிய அணிகள் : நியூஸிலாந்து, ஆக்லேண்ட், டர்கம், மிட்டல்க்ஸ், நார்தன் டிஸ்டிக். பேட்டிங் டெஸ்ட் போட்டி அறிமுகம் : 2002 ஜூன் 28 - மேற்கிந்தி தீவுகள், சென்ட் ஜார்ஜர்ஸ் போட்டி : 29 இன்னிங்ஸ் : 48 ரன் : 1,586 சதம் : 5 அரை சதம் : 6 அதிக எண்ணிக்கை : 170 சராசரி : 36.04 ஒரு நாள் போட்டி அறிமுகம்…
-
- 0 replies
- 912 views
-
-
நியூஸிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களை குவித்துள்ளது. நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது நியூஸிலாந்து அணியுடன் இருபதுக்கு - 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த இருபதுக்கு - 20 தொடரை இங்கிலாந்து அணி 2:3 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் இவ்விரு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி இன்று 'Mount Maunganui' யில் உள்ள பே ஓவல் மைதானத்தில் ஆரம்பானது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி இன்றைய முதலாம் நாள் ஆட்ட நேர நிறைவில் 90 ஓவர்களை எதிர்கொண்டு 4 வி…
-
- 0 replies
- 372 views
-
-
பராலிம்பிக்கில் 25 இற்கும் அதிகமான புதிய சாதனைகள்; சக்கர இருக்கை டென்னிஸ் 2 ஆம் சுற்றில் ராஜகருண 2016-09-12 09:48:49 ரியோ டி ஜெனெய்ரோவில் நடைபெற்றுவரும் 15ஆவது பராலிம்பிக் விளையாட்டு விழாவில் உலக சாதனைகளும் பராலிம்பிக் சாதனைகளும் தாராளமாக புதுப்பிக்கப்பட்ட வண்ணம் உள்ளன. இவ் விளையாட்டு விழாவில் முதல் மூன்று நாள் போட்டி நிகழ்ச்சிகளில் 25க்கும் மேற்பட்ட உலக சாதனைகளும் 40க்கும் மேற்பட்ட பராலிம்பிக் சாதனைகளும் நிலைநாட்டப்பட்டுள்ளன. சீன பராலிம்பிக் விளையாட்டு வீர, வீராங்கனைகள் பதக்கங்கள் குவிப்பதில் முன்னிலை வகிக்கின்றனர். இரண்டாம் சுற்றில் உபாலி ராஜ…
-
- 0 replies
- 341 views
-
-
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவுக்கிண்ணத்திற்கான சுற்றுப்போட்டி பிரான்சின் பாரீஸ் புறநகரில் நேற்று நடைபெற்றுள்ளது. தேசத்தின் குரலின் நினைவாக இந்த ஆண்டு மூன்றாவது ஆண்டாக நடத்தப்படும் விளையாட்டுப்போட்டியில் பாரிசில் உள்ள விளையாட்டு கழகத்தினை சேர்ந்த பல கழகங்கள் விளையாடி தங்கள் திறமைகளை வெளிக்கொணர்ந்துள்ளார்கள். தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் விளையாட்டுத்துறையினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த நிகழ்வு வீரர்களை மேலும் உற்சாக படுத்தியுள்ளது. http://www.sankathi24.com/news/29242/64//d,fullart.aspx
-
- 0 replies
- 330 views
-
-
பாகிஸ்தான் நடுவர் அலீம் தார் சாதனை பாகிஸ்தானின் நடுவர் அலீம் தார் அதிக டெஸ்ட் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றியவர் என்ற சாதனையை நிலைநாட்டியுள்ளார். தென் ஆபிரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் கேப் டவுனில் நடைபெறும் டெஸ்ட் போட்டியானது அவர் மத்தியஸ்தம் வகிக்கும் 332ஆவது போட்டியாகும். அலீம் தார் 2000ஆம் ஆண்டு முதன் முதலில் டெஸ்ட் போட்டி ஒன்றில் நடுவராகப் கடமையாற்றியிருந்தார். இதற்கு முன்னர் அதிக டெஸ்ட்களில் நடுவராகப் பணியாற்றியவர் தென் ஆபிரிக்காவின் ரூடி கேர்ட்சன் ஆவார். இவர் 331 டெஸ்ட் போட்டிகளில் நடுவராகப்பணியாற்றியதுடன் 2010 இல் ஓய்வு பெற்றார். - See more…
-
- 0 replies
- 363 views
-
-
'மன்கட் ரன்-அவுட் சரியானது; பந்துமீது எச்சில் தேய்க்க நிரந்தர தடை;' புதிய விதிமுறைகளை கொண்டுவரும் ஐசிசி சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் 1-ந்தேதி அமலுக்கு வரும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. தினத்தந்தி துபாய், சர்வதேச கிரிக்கெட் போட்டி விதிமுறைகளில் அதிரடியான சில மாற்றங்கள் வருகிற 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. சவுரவ் கங்குலி தலைமையிலான ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டி, தற்போதைய சர்வதேச கிரிக்கெட் போட்டி விதிமுறைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள பரிந்துரை செய்தது. இதை ஏற்றுக் கொண்டுள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) புதிய விதிமுறை 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. மாற்றம் செய்யப்பட்ட விதிமுற…
-
- 0 replies
- 387 views
-
-
சாம்பியன்ஸ் டூ சீட்டர்ஸ்... ஆஸ்திரேலியாவுக்கு இந்த அசிங்கம் தேவைதான்! #SAvAUS #Bancroft இது ஒரு போட்டியின் முடிவு மட்டும்தானா..? இல்லை ஒரு தொடரின் முடிவா...? இல்லை... இது ஒரு சகாப்தத்தின் முடிவாகவும் இருக்கலாம். கிரிக்கெட் உலகின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர்கள் ஆடிப்போயிருக்கிறார்கள். ஆஸ்திரேலியா... நேற்று வரை உலக சாம்பியன் பட்டத்தோடு வலம் வந்தவர்கள், இன்று ஏமாற்றுக்கார முத்திரையோடு முடங்கிக் கிடக்கிறார்கள். ஒரே ஒரு சம்பவம் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் ஆணிவேரை ஆட்டிவிட்டது. அவர்களுக்கு அவர்களே அசிங்கத்தைத் தேடிக்கொண்டார்கள். சொல்லப்போனால், இது அவர்களுக்குத் தேவையான ஒன்றுதான். டி காக் vs வார்னர், லயான் - டி வில்லியர்ஸ், ரபாட…
-
- 0 replies
- 430 views
-
-
விக்கெட் கீப்பிங்கில் புதிய சாதனை படைத்த தல டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான டோனி டி20 போட்டிகளில் அதிக விக்கெட்கள் விழ காரணமாக இருந்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். #VIVOIPL #IPL2018 #MSDhoni புனே: ஐபிஎல் தொடரின் 56-வது மற்றும் கடைசி லீக் புனேயில உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 19.4 ஓவரில் 153 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. தொடர்ந்து…
-
- 0 replies
- 359 views
-
-
எங்களிடம் இந்திய அணியைக் காட்டிலும் சிறந்த ஸ்பின்னர்கள் உள்ளனர்: ஆப்கான் கேப்டன் நம்பிக்கை YouTube வங்கதேசத்துக்கு டி20 ஒயிட் வாஷ் கொடுத்து கோப்பையை உயர்த்திப் பிடிக்கும் ஆப்கான் கேப்டன் ஸ்டானிக்சாய். - படம். | ஏ.எஃப்.பி. டெஸ்ட் கிரிக்கெட்டுக்குள் நுழையும் குழந்தையான ஆப்கான் உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியான இந்தியாவை வரலாற்று முதல் டெஸ்ட் போட்டியில் சந்திக்கிறது. குழந்தையைத்தான் அனைவரும் சீண்டிப்பார்த்திருக்கிறோம், ஆனால் குழந்தை பெரியவர்களைச் சீண்டுவதை இப்போது ஆப்கான் கேப்டன் அஸ்கர் ஸ்டானிக்சாய் மூலம் பார்க்கிறோம். டெஸ்ட் பவுலிங் தரவரிசையில் 4 மற்றும் 5ம் இடத்தில் உள்ள ஜடேஜா, அஸ்வினை விடவும் …
-
- 0 replies
- 417 views
-
-
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வீரர் எழுதிய 'இனவெறி' குறித்த கடிதத்தால் சர்ச்சை! ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய இயக்குநருமான அலெஸ்டர் கேம்பெல் என்னிடம் இனவெறியுடன் நடந்து கொள்வதாக ஜிம்பாப்வே அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிராஸ்பர் உத்சயா புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இது குறித்து ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத் தலைவர் தலைவர் வில்சன் மனசேவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் '' ஜிம்பாப்வே அணி வீரர்களில் என்னிடம் மட்டும் கேம்பெல் பாரபட்சமாக நடக்கிறார். தனிப்பட்ட பகைமை பாராட்டுகிறார். அண்மையில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் நான் அணியின் முதல் 11 வீரர்களில் ஒருவராக தேர்வு செய்யப்படாமல் போனதற்கு கேம்பெல்தான் காரணம். கடந்த 2010முதல் 2012 ஆம் ஆண்டு வரை அ…
-
- 0 replies
- 292 views
-
-
ஊக்கமருந்து: பாக். கிரிக்கெட் வீரர் யாஸிர் ஷா இடைநீக்கம் யாஸிர் ஷா ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யாஸிர் ஷாவை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளது. பந்துவீச்சாளர் யாஸிர் ஷாவின் உடலில் தடைசெய்யப்பட்ட குளோர்தாலிடோன் (chlorthalidone) எனப்படும் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து இருந்துள்ளது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊடக அறிக்கை கூறுகின்றது. முழுமையான விசாரணைகள் முடியும் வரை வேறு தகவல்கள் எதுவும் வெளியாகாது என்று கூறப்பட்டுள்ளது. யாஸிர் ஷாவிடமிருந்து இது தொடர்பில் விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. 29 வயதான யாஸிர் ஷா கடந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்…
-
- 0 replies
- 520 views
-