விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
Published By: SETHU 17 JUL, 2023 | 10:24 AM விம்பிடள்டன் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பானிய வீரர் கார்லோஸ் அல்காரஸ் சம்பியனனார். ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற இறுதிப் போட்டியில் சேர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச்சை 1-6, 7-6 (8/6), 6-1, 3-6, 6-4 விகிதத்தில்அல்காரஸ் தோற்கடித்தார். 20 வயதேயான கார்லோஸ் அல்காரஸுக்கு இது இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டமாகும். 36 வயதான நோவாக் ஜோகோவிச் உலகின் 2 ஆம் நிலை வீரர். ஆண்களில் 23 கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டங்களை வென்று சாதனை படைத்தவர். இவ்வருடத்தின் அவுஸ்திரேலியஇ பிரெஞ்சு பகிரங்க சுற்றுப்போட்டிகளிலும் அவரே சம்பியனானார். …
-
- 10 replies
- 588 views
- 1 follower
-
-
மூன்றாவது முறையாக தங்கம் வென்றது வடக்கு அணி ! நேற்று (வெள்ளிக்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற தேசிய உதைபந்தாட்ட இறுதியாட்டத்தில் வடமாகாண தெரிவு அணி மற்றும் தென்மாகாண தெரிவு அணிகள் மோதின. ஆட்ட நேரமுடிவில் வடக்கு மாகாண அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று மீண்டும் தேசிய சம்பியனாகியகியதுடன் தேசிய பொது விளையாட்டு நிகழ்வில் உதைபந்தாட்டத்தில் மூன்றாவது தங்கத்தினை தனதாக்கியிருக்கிறது. வடக்கு அணி சார்பில் தேசிய வீரரும் குருநகர் பாடும்மீன் கழக வீரருமான கீதன் இரு கோலினையும் பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கதுடன் கீதன் இத் தொடரில் 4 கோல்களை வடக்கு மாகாண அணிசார்பில் அடித்ததுடன், அக் கோல்கள் அரைய…
-
- 0 replies
- 214 views
-
-
ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தைச் சேர்ந்தவரான ஷீதல் ஒரு பாரா மகளிர் வில்வித்தை வீராங்கனை. இவருக்கு இரண்டு கைகளும் இல்லை, ஆனால் கால்களைக் கொண்டு அம்பு எய்து சாதிக்கிறார். சிறுவயதிலிருந்தே அவருக்கு இரண்டு கைகளும் இல்லை. அவருடைய தந்தை ஒரு விவசாயி, தாய் இல்லத்தரசி. ஷீதல் 16 வயதிற்குள்ளாகவே பல பட்டங்களை வென்றுள்ளார். ஷீதலின் வெற்றிக்கு அவருடைய விடாமுயற்சியும், கடின உழைப்பும்தான் காரணம் என்று அவருடைய பயிற்சியாளர் கூறுகிறார். பாரா ஒலிம்பிக்கிலும் ஷீதல் பதக்கம் வெல்வார் என்று அவர் நம்புகிறார். https://www.bbc.com/ws/av-embeds/articles/cn015erel0vo/p0fqz9sj/ta https://www.bbc.com/tamil/articles/cn015erel0vo
-
- 1 reply
- 298 views
- 1 follower
-
-
Published By: NANTHINI 01 JUL, 2023 | 10:29 AM (நெவில் அன்தனி) யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கும் கொழும்பு இந்து கல்லூரிக்கும் இடையில் கொழும்பு சரவணமுத்து ஓவல் சர்வதேச விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (30) ஆரம்பமான 12ஆவது இந்துக்களின் பெருஞ்சமர் கிரிக்கெட் போட்டியில் யாழ். இந்து ஆதிக்கம் செலுத்தியுள்ளது. கே. பரேஷித் குவித்த அரைச் சதம், ரீ. கஜநாத், கே. தரணிசன், எஸ். பரத்வாசன் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சு என்பன முதல் நாள் ஆட்டத்தில் யாழ். இந்து ஆதிக்கம் செலுத்த உதவின. கொழும்பு இந்து முதல் இன்னிங்ஸில் பெற்ற 183 ஓட்டங்களுக்கு பதிலளித்த கொழும்பு இந்து 49 ஓட்டங்களுக்கு சுருண்டது. பலோ ஒன் முறையில் …
-
- 1 reply
- 665 views
- 1 follower
-
-
Published By: VISHNU 21 JUN, 2023 | 10:22 PM (நெவில் அன்தனி) இந்த மாணவி கொட்டிலில் வாழ்ந்துவருபவர். வீட்டுப் பாடங்களை, மீட்டல்களை வீதி விளக்கு வெளிச்சத்திலேயே நிறைவேற்றிவருகிறார். அல்லது வீட்டில் விளக்கு வெளிச்சத்தில் கற்றுவருறார். இத்தனை குறைகளுக்கு மத்தியிலும் கல்வியில் சிறந்து விளங்கும் இவர் மெய்வல்லுநர் விளையாட்டுத்துறையில் தங்கப் பதுமையாக வலம்வருகிறார். அண்மைக்காலமாக ஐபிஎல்லில் அசத்தியவர்கள் சிலரைப்பற்றி உள்நாட்டு ஊடகங்கள் கட்டுரைகளை வெளியிட்டுவந்த நிலையில், வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து விளையாட்டுத்துறையில் அசத்திவரும் நம் நாட்டின் அதுவும் நம் இனத்தவரின் சோகக் கதையை வெளிச்சத்திற்கு கொண்டுவருவது பொருத்த…
-
- 5 replies
- 733 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 04 JUN, 2023 | 11:16 AM இலங்கை ஆசிய கிண்ணப் போட்டிகளை நடத்துவதற்கு முன்வந்ததால் சீற்றமடைந்த பாக்கிஸ்தானின் கிரிக்கெட் சபை இலங்கையில் ஒருநாள் போட்டிகளில் விளையாட மறுத்துள்ளது. பாக்கிஸ்தானில் ஹைபர்மொடல் அடிப்படையில் நான்கு ஆசிய கிண்ணப்போட்டிகளை நடத்த வேண்டும் என பாக்கிஸ்தான் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் அனைத்து போட்டிகளையும் நடத்துவதற்கு இலங்கை முன்வந்துள்ளதை தொடர்ந்து பாக்கிஸ்தான் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைகளிற்கு இடையிலான உறவுகள் பாதிப்படைந்துள்ளன. இலங்கையில் அடுத்தமாதம் பாக்கிஸ்தான் சில ஒருநாள்போட்டிகளில் விளையாடுவதற்கான யோசனையை பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்ப…
-
- 4 replies
- 398 views
- 1 follower
-
-
Novak Djokovic ன் 23 ஆவது பிரான்ஸ் கிண்ணத்தை வென்றார்.
-
- 2 replies
- 380 views
-
-
Published By: VISHNU 26 MAY, 2023 | 03:50 PM (நெவில் அன்தனி) இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று சம்பியனாகும் அணிக்கு 48 கோடியே 37 இலட்சத்து 31,040 பணப்பரிசாக கிடைக்கவுள்ளது. அப் போட்டியில் தோல்வி அடையும் அணிக்கு இந்தந் தொகையில் சரிபாதி பணப்பரிசு (241,865,520 ரூபா) கிடைக்கும். உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் பங்குபற்றிய 9 அணிகளுக்கும் மொத்தமாக (3.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) 114 கோடியே 88 இலட்சத்து 61,220 ரூபா பணப்பரிசு பகிர்ந்தளிக்கப்படும். இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெறுவதற்காக நியூஸிலாந்துடன் 2…
-
- 20 replies
- 1.1k views
- 1 follower
-
-
ஆப்கானிஸ்தானிடம் 6 விக்கெட்களால் பணிந்தது இலங்கை 02 JUN, 2023 | 08:48 PM (நெவில் அன்தனி) ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுக்கு வலிமைமிக்க அணியை கட்டியெழுப்பும் நோக்கில் ஆப்கானிஸ்தானுடனான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரை எதிர்கொண்ட இலங்கை, ஆரம்பப் போட்டியில் 6 விக்கெட்களால் தோல்வியுற்று பெரும் ஏமாற்றம் அடைந்தது. ஹம்பாந்தோட்டை விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (02) நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியைவிட துடுப்பாட்டத்தில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் இந்த வெற்றியுடன் தொடரில் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. இலங்கையினால் நிர்ணயிக்…
-
- 5 replies
- 470 views
- 1 follower
-
-
Published By: VISHNU 06 JUN, 2023 | 03:15 PM (நெவில் அன்தனி) லோர்ட்ஸ் கிரிக்கெட் விளையாட்டரங்கில் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே அண்மையில் நடந்து முடிந்த ஒற்றை டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் தனித்துவமான சாதனை ஒன்றைப் படைத்தார். அந்தப் போட்டியில் இங்கிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புகழ்பெற்ற சகலதுறை ஆட்டக்காரராக இருந்தும், ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் இருக்கின்ற போதிலும், துடுப்பாட்டம், பந்துவீச்சில் ஈடுபடாமலும் விக்கெட் காப்பாளராக செயற்படாமலும் 146 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டி ஒன்றில் வெற்றியை ஈட்டிக்கொடுத்த முதலாவத…
-
- 0 replies
- 270 views
- 1 follower
-
-
ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரரானார் சாம் கரன்! டி20 உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருது பெற்ற இங்கிலாந்து வீரர் சாம் கரனை, இந்திய ரூபா மதிப்பில் 18.5 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் ஏலத்தில் எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ஜேசன் ஹோல்டரை இந்திய ரூபா மதிப்பில் 5.75 கோடிக்கு ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. https://thinakkural.lk/article/229868
-
- 177 replies
- 11.3k views
- 1 follower
-
-
சர்வதேச சிலம்பம் போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்ட வீர வீராங்கணைகளுக்கு பாராட்டு விழா! கடந்த வாரம் இந்தியாவின் பெங்களுரில் நடைபெற்ற முதலாவது சர்வதேச சிலம்பம் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்து இலங்கைக்கு பெருமை சேர்த்த வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை கொட்டகலையில் நடைபெற்றது. கொட்டகலை தனியார் விடுதி ஒன்றி இலங்கை சிலம்பம் சம்மேளனத்தின் தலைவர் எஸ்.எ.கந்தசாமி நாயுடு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது வீர வீராங்கனைகளின் சிலம்பம் நிகழ்வு ஒன்றும் இடம் பெற்றது. மேலும் இதில் பதக்கங்கங்களை பெற்றுக் கொண்ட பெற்றோர்களும் கலந்துக் கொண்டிருந்தனர். இலங்கை, இந்தியா, சுவிஸ்லாந்து, பெல்ஜியம், இத்தாலி, சிங்கப்பூர், மலேசி…
-
- 0 replies
- 502 views
-
-
Published By: DIGITAL DESK 3 18 MAY, 2023 | 11:07 AM (எம்.எம்.சில்வெஸ்டர்) சர்வதேச றக்பி சம்மேளனம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இலங்கை றக்பிக்கு சர்வதேச தடை விதித்துள்ளது. இலங்கையில் றக்பி விளையாட்டுக்கு அரசியல் அழுத்தம் காரணமாக சர்வதேச றக்பி விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து சர்வதேச றக்பி சம்மேளனம் இந்த தடையை விதித்துள்ளது. இதற்கு முன்னர் ஆசிய றக்பி சம்மேளனத்தினாலும் இலங்கை றக்பி விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. குறித்த தடை காலப்பகுதியில் இலங்கை ரக்பி வீரர்கள், சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும்போது பல்வேறு கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இந்நிலைய…
-
- 2 replies
- 393 views
- 1 follower
-
-
உலக சிலம்பம் சம்பியன்ஸிப் போட்டி இந்தியா பெங்களூரில் மே 12ஆம் திகதி முதல் 14 ஆம் திகதிவரை நடைபெற்றது. இதில் இந்தியா, இலங்கை, சுவீட்சர்லாந்து, இங்கிலாந்து, மலேசியா, பிரான்ஸ், சிங்கப்பூர், பெல்ஜியம், இத்தாலி, துபாய் ஆகிய பத்து நாடுகள் பங்குப்பற்றின. சிலம்பத்தின் பகுதிகளான நெடுகம்பு வீச்சு, இரட்டை நடுகம்பு வீச்சு, வேல்கம்பு ஆகிய போட்டிகளுக்காக மலையகத்திலிருந்து சென்ற 19 வீரர்கள் 69 பதக்கங்களை பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டனர். இவ்வீரர்களுக்கு பயிற்சியை திவாகரன்,ராம்குமார்,தினேஸ்குமார் ஆகியோர் வழங்கியமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/254363
-
- 0 replies
- 289 views
- 1 follower
-
-
Published By: SETHU 15 MAY, 2023 | 12:06 PM 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை ஜேர்மனியின் பேர்லின் நடத்துவது குறித்து கற்பனை செய்ய முடியும் என அந்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சர் நான்சி ஃபேசர் தெரிவித்துள்ளார். '1936 பேர்லின்' ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று 100 வருடங்கள் பூர்த்தியாகும் வேளையில் மீண்டும் அங்கு கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது குறித்து ஆராயப்படுகிறது. 1936 ஆம் ஆண்டின் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு விழா பேர்லின் நகரில் நடைபெற்றது. அவ்வருட குளிர்கால ஒலிம்பிக் விழாவும் ஜேர்மனியின்; ஜேர்மிஷ் பார்டேன்கேர்சென் நகரில் நடைபெற்றன. சர்வாதிகாரி அடோல்வ் ஹிட்லர் தல…
-
- 1 reply
- 281 views
- 1 follower
-
-
Published By: VISHNU 14 MAY, 2023 | 04:06 PM (நெவில் அன்தனி) இந்தியாவில் அண்மையில் நடைபெற்ற இரண்டாவது உலக கலவை குத்துச்சண்டை வல்லவர் (2nd World Mix Boxing Championship 2023) போட்டியில் இலங்கை சார்பாக பங்குபற்றிய 7 வீர, வீராங்கனைககளும் பதக்கங்கள் சுவீகரித்து வரலாறு படைத்தனர். காஷ்மீர், ஸ்ரீநகர் எஸ்.கே. உள்ளக விளையாட்டரங்கில் 5ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை நடைபெற்ற உலக கலவை குத்துச்சண்டை வல்லவர் போட்டியில் இலங்கை வீர, வீராங்கனைகள் 5 தங்கப் பதக்கங்களையும் 4 வெள்ளிப் பதக்கங்களையும் வென்றெடுத்தனர். உலக கலவை குத்துச்சண்டை சம்மேளனத்தின் அனுமதியுடன் இந்திய கலவை குத்துச்சண்டை சம்மேளனம் நடத்த…
-
- 0 replies
- 249 views
- 1 follower
-
-
Published By: NANTHINI 07 MAY, 2023 | 04:42 PM (நெவில் அன்தனி) தியகம விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (07) ஆரம்பமான 63ஆவது கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டியில் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியைச் சேர்ந்த துஷேன் சில்வா, 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் புதிய சாதனையை நிலைநாட்டினார். இதேவேளை, 23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல், 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தட்டெறிதல், 20 வயதுக்குட்பட்ட 5000 மீற்றர் ஓட்டம் ஆகியவற்றில் பிற மாவட்டங்களில் உள்ள தமிழ் பாடசாலை வீரர்கள் வெற்றிபெற்று வரலாறு படைத்தனர். உஸ்பெகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற 5ஆவது ஆசிய இளையோர் மெய்வல்லுநர் ச…
-
- 7 replies
- 703 views
- 1 follower
-
-
கிரிக்கெட் கௌன்சிலின் பிரதித் தலைவர் இலங்கை வருகிறார்.. சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலின் பிரதித் தலைவர் இம்ரான் க்வாஜா நாளை (09.05.2023) இலங்கை கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு பற்றிய குற்றச்சாட்டு குறித்த உண்மையைக் கண்டறிவதற்கு இலங்கை வரவிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதன்போது அவர் விளையாட்டுத் துறை அமைச்சர், இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் மற்றும் ஏனைய தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அரசியல் தலையீடு குறித்து இலங்கை கிரிக்கெட் சபையிடம் இருந்து வந்த தொடர்ச்சியான முறைப்பாட்டை அடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை செயலாளர் ஜெய் ஷா தலைமையிலான மூவர் கொண்ட குழுவை ஐ.சி.சி நியமித்ததாக கூறப்படுகிறது. …
-
- 1 reply
- 309 views
-
-
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி அங்கு நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 4-0 என்ற கணக்கில் தொடரை இழந்தது. இவ்விரு அணிகள் இடையிலான 5ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கராச்சியில் நாளை நடைபெறுகிறது. தற்போது வரை ஒருநாள் தொடரை 4-0 என முன்னிலையில் உள்ள பாகிஸ்தான் அணி ஐசிசி ஒருநாள் அணிகளின் தரவரிசையில் முதல் இடத்துக்கு முன்னேறி அசத்தி உள்ளது. ஐசிசி ஒருநாள் அணிகளின் தரவரிசையில் பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகள் 113 புள்ளிகளுடன் முதல் 3 இடங்களில் உள்ளன. இங்கிலாந்து அணி 111 புள்ளிகளுடன் 4ஆம் இடத்திலும், நியூசிலாந்து 107 புள்ளிகளுடன் 5ஆம் இடத்திலும் உள்ளன. 6 முதல் 10 இடங்களில் முறையே தென்னாபிரிக்கா (101 புள்ளி)…
-
- 2 replies
- 490 views
- 1 follower
-
-
Published By: SETHU 04 MAY, 2023 | 12:00 PM பரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) கால்பந்தாட்டக் கழகத்திலிருந்து ஆர்ஜென்டீன வீரர் லயனல் மெஸி 2 வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளார். கழகத்தின் அனுமதியின்றி சவூதி அரேபியாவுக்கு மெஸி சுற்றுலா சென்றமையே இதற்கான காரணம் என கழக வட்டாரங்கள் தெரஸ்ரீழிவித்துள்ளன. கத்தாரில் கடந்த டிசெம்பர் மாதம் உலகக் கிண்ணத்தை வென்ற ஆர்ஜென்டீன அணியின் தலைவரான லயனல் மெஸி, பிரான்ஸிலுள்ள பரிஸ் செயின்ட் ஜெர்மைன் கழகத்துக்காகவும் 2021 ஆகஸ்ட்டிலிருந்து விளையாடி வருகிறார். 7 தடவைகள் பெலோன் டி' ஓர் விருதை வென்ற மெஸி பிஎஸ்ஜி கழகத்தின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். …
-
- 2 replies
- 427 views
- 1 follower
-
-
Published By: SETHU 04 MAY, 2023 | 10:47 AM 2027 ஆம் ஆண்டில் ஆண்களுக்கான உலகக் கிண்ண கூடைப்பந்தாட்டப் போட்டிகளை நடத்தும் உரிமையை கத்தார் பெற்றுள்ளது. 2026 ஆம் ஆண்டின் பெண்களுக்கான உலகக் கிண்ண கூடைப்பந்தாட்டப் போட்டிகளை ஜேர்மனி நடத்தும் எனவும் சர்வதேச கூடைப்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் முதல் தடவையாக உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை நடத்திய கத்தார். 2027 முதல் முதல் தடவையாக கூடைப்பந்தாட்ட உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்தவுள்ளது. தலைநகர் தோஹாவில் தற்போதுள்ள அரங்குகளில் இப்போட்டிகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வருட உலகக் கிண்ண கூடைப்பந்தாட்டப் போட்டிகள் எ…
-
- 0 replies
- 534 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 5 29 APR, 2023 | 02:03 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) நியூஸிலாந்து அணிக்கெதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பெற்றுக்கொண்ட வெற்றியின் மூலமாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 500 ஆவது வெற்றியை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பதிவு செய்தது. பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணிக்கும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி ராவல்பிண்டியில் நேற்று முன்தினம் (27) பகலிரவுப் போட்டியாக நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து…
-
- 2 replies
- 657 views
- 1 follower
-
-
அயர்லாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், 4ஆவது நாளான இன்று தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 3 விக்கெட்டுக்களை இழந்து 704 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் இன்னிங்ஸை முடிவுக்கொண்டுவந்தது. இந்தநிலையில், இலங்கை அணி, அயர்லாந்தை விட 212 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது. இலங்கையின் முதல் இன்னிங்ஸில் மொத்தமாக நால்வர் சதங்களை பெற்றதுடன், அவர்களில் இருவர் இரட்டை சதங்களை பெற்றனர். அதன்படி, அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 115 ஓட்டங்களையும், நிஷான் மதுஷ்க 205 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 245 ஓட்டங்களையும், எஞ்சலோ மெத்யூஸ் ஆட்டமிழப்பின்றி 100 ஓட்டங்களையும் பெற்றனர். இந்த நிலையில், அயர்லாந்து அணி தமது இரண்டாவது இன்னிங்ஸை காலி மைதானத்தில் த…
-
- 3 replies
- 778 views
- 1 follower
-
-
விவேக் ஆனந்த் பிபிசி தமிழ் 24 ஏப்ரல் 2018 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NIKLAS HALLE'N (ஏப்ரல் 24, 2018 அன்று பிபிசி தமிழில் வெளியான இந்த சிறப்புக் கட்டுரை, சச்சின் பிறந்தநாளையொட்டி இன்று மறுபகிர்வு செய்யப்படுகிறது.) 1987ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பையோடு சுனில் கவாஸ்கர் தனது கிரிக்கெட் உலகுக்கு முழுக்குப் போட்டார். டெஸ்ட் போட்டிகளில் முதன் முதலாக பத்தாயிரம் ரன்களை கடந்தவர். டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் எடுத்திருந்தவர் என்ற டான் பிராட்மேனின் சாதனையை (29) முறியடித்து 34 சதங்களை குவித்தவர் என பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராய் விளங்கியவர்…
-
- 0 replies
- 309 views
- 1 follower
-
-
Published By: SETHU 23 APR, 2023 | 09:42 AM போர்த்துகல் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை கைது செய்து சவூதி அரேபியாவிவிலிருந்து வெளியேற்ற வேண்டும் என சவூதி அரேபிய சட்டத்தரணி ஒருவர் வலியுறுத்தியுள்ளார். மைதானத்தில் அநாகரிகமான முறையில் ரொனால்டோ நடந்துகொண்டாரென்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளா நிலையில் அச்சட்டத்தரணி இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். 38 வயதான ரொனால்டோ, சவூதி அரேபியாவின் அல் நாசர் கழகத்துக்காக விளையாடி வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அல் ஹிலால் கழகத்துடனான, சவூதி ப்ரோ லீக் போட்டியில் ரொனால்டோ தலைமையிலான அல் நாசர் அணி 2:0 கோல்களால் …
-
- 1 reply
- 643 views
- 1 follower
-