விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
என்னை மன்னித்து விடுங்கள் ; பாகிஸ்தானின் முன்னாள் வீரர் சூதாட்டப் புகாரை ஒத்துக்கொண்டார் Share கடந்த 6 ஆண்டுகளாகத் தான் எந்தவிதமான சூதாட்டத்திலும் தான் ஈடுபடவில்லை என தொடர்ந்து மறுத்து வந்த பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் டினேஷ் கனேரியா, திடீரென்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளமை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு இங்கிலாந்து கவுண்டி அணியில் இணைந்து பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் டினேஷ் கனேரியா விளையாடினார். அப்போது அனு பாட் என்ற சூதாட்ட தரகருடன் இணைந்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, சூதாட்டத்தில் ஈடுபட்ட எசெக்ஸ் அணி வீரர் மெர்வின் வெஸ்ட்பீல்ட், கனேரியாவும் அணி…
-
- 0 replies
- 444 views
-
-
பத்து ஆண்டுகளின் பின்னர் பாகிஸ்தான் புறப்பட தயாராகும் சங்கக்கார Published by J Anojan on 2019-10-23 11:41:01 லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய பத்து ஆண்டுகளின் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் தற்போதைய எம்.சி.சி.யின் தலைவருமான குமார் சங்கக்கார பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள தயாராகி வருகிறார். கடந்த 2009 ஆம் ஆண்டு லாகூர் தாக்குதலுக்குள்ளானவர்களில் ஒருவரான குமார் சங்கக்கார கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறும் வரை பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவில்லை. இந் நிலையில் எம்.சி.சி.யின் தலைமைப் பதவியை ஏற்றதையடுத்து, பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள தயாராகி வ…
-
- 0 replies
- 444 views
-
-
போர்ச்சுகல் அணியின் வெளியேற்றம் ரொனால்டோவின் கால்பந்து வாழ்க்கையின் முற்றுப்புள்ளியா? பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் போர்ச்சுக்கல்லின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உலகக் கோப்பை கனவு முடிவுக்கு வந்தது. கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் நேற்று நடந்த காலிறுதி போட்டியில் மொராக்கோ அணி போர்ச்சுகல் அணியை 1-0 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது. போட்டியிலிருந்து போர்ச்சுகல் அணி வெளியேறியவுடன் ரொனால்டோவின் கால்பந்து வாழ்க்கையும் முடிவுக்கு வந்துவிட்டதா? போர்ச்சுக்கல் அணி காலிறுதி போட்டியில் இருந்து வெளியேறியவுடன் ரொனால்…
-
- 4 replies
- 444 views
- 2 followers
-
-
''காலி மைதானத்தை இழக்க முடியாது ; பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கிரிக்கெட் நிர்வாகத்திற்குண்டு" உலக மரபுரிமை இடத்தை பாதுகாப்பது மட்டுமல்லாது காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை தொடர்ந்தும் பயன்படுத்த சரியான செயற்திட்டத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் கிரிக்கெட் நிர்வாகம் எடுக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவரும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவரும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய பிரச்ச…
-
- 1 reply
- 444 views
-
-
உலக சாம்பியனுக்கு உதை: ஜெர்மனியை வீழ்த்தியது அமெரிக்கா கொலாக்னே: ‘நட்பு’ கால்பந்து போட்டியில் உலக சாம்பியன் ஜெர்மனியை, 2–1 என்ற கணக்கில் வீழ்த்தியது அமெரிக்க அணி. உலக கோப்பை சாம்பியன் ஜெர்மனி, அமெரிக்க அணிகள் மோதிய ‘நட்பு’ கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடந்தது. கடந்த வாரம் ஆம்ஸ்டர்டாமில் நடந்த ‘நட்பு’ போட்டியில் நெதர்லாந்தை 4–3 என, வீழ்த்திய உற்சாகத்தில் களமிறங்கியது அமெரிக்கா. போட்டியின் 13வது நிமிடத்தில் மரியா கோட்சா, ஜெர்மனி அணிக்கு முதல் கோல் அடித்தார். 41வது நிமிடத்தில் அமெரிக்காவின் மிக்ஸ் டிஸ்கிரட் ஒரு கோல் அடிக்க, முதல் பாதி 1–1 என சமன் ஆனது. இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் முன்னிலை பெற எடுத்த முயற்சிகள் வீணாகின. போட்டி முடிய 3 நிமிடம் இருந்த …
-
- 0 replies
- 444 views
-
-
பிளிஸ்கோவாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் நவோமி அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று(வியாழக்கிழமை) பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதலில் நடைபெற்ற ஆட்டத்தில் பெட்ரா கிவிட்டோவா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். 2-வது அரையிறுதி ஆட்டத்தில் 4-ம் நிலை வீராங்கனையான நவோமி ஒசாகா (ஜப்பான்)- 7-ம் நிலை வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) மோதினர். முதல் செட்டை ஒசாகா 6-2 என எளிதில் கைப்பற்றினார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 2-வது செட்டை பிளிஸ்கோவா 6-4 என அதிரடியாக கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் ஒசாகா கை ஓங்கியது. அவர் 3-வது செட்டை 6-4 எனக்…
-
- 0 replies
- 444 views
-
-
முன்னேறினார் ரங்கண ஹேரத் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரங்கண ஹேரத் ஐ.சி.சி.யின் டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் தரப்படுத்தலில் 2 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஐ.சி.சி. இன்று வெளியிட்டுள்ள டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப்படி ரங்கண ஹேரத் 866 புள்ளிகளைப்பெற்று 2 ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். முதலாமிடத்தில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா உள்ளார். இவர் 898 புள்ளிகளைப்பெற்றுள்ளார். தொடர்ந்து 3 ஆவது இடத்தை இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் பிடித்துள்ளார். இவர் 865 புள்ளிகளைப்பெற்றுள்ளார். இந்நிலையில், நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் ரங்கண 8 முற…
-
- 0 replies
- 444 views
-
-
கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் 5 புதிய சாதனைகள் தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 55ஆவது தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளின் மூன்றாம் நாளான நேற்றைய தினம் பிற்பகல் 4.00 மணிவரை ஐந்து புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டதுடன் ஒரு சாதனை சமப்படுத்தப்பட்டது. இதேவேளை வட மாகாண பாடசாலை ஒன்றுக்கு நேற்றைய தினமும் ஒரு தங்கப் பதக்கம் சொந்தமானது. 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சாவகச்சேரி இந்து கல்லூரியின் அருந்தவராஜா புவிதரன் (4.20 மீற்றர்) முன்னைய சாதனையை சமப்படுத்தி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். இப் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூர…
-
- 1 reply
- 444 views
-
-
கடைசி நிமிடத்தில் கோல் அடித்து பார்சிலோனா வெற்றியை தடுத்த ரியல் மாட்ரிட் கேப்டன் ரியல் மாட்ரிட் அணியின் கேப்டன் செர்ஜியோ ரமோஸ் கடைசி நிமிடத்தில் கோல் அடித்து பார்சிலோனாவின் வெற்றியை தடுத்தார். ‘எல் கிளாசிகோ’ என்று அழைக்கப்படும் பரம எதிரிகளான பார்சிலோனா - ரியல் மாட்ரிட் அணிகள் நேற்று ஸ்பெயினில் உள்ள கேம்ப் நவு மைதானத்தில் ‘லா லிகா’ லீக் போட்டியில் மோதின. இந்த போட்டியை நேரில் பார்க்க 98 ஆயிரத்து 485 ரசிகர்கள் வந்திருந்தனர். சொந்த மைதானத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பார்சிலோனா அணி களம் இறங்கியது. அதே சமயத்தில் 6 புள்ளிகள் முன்னில…
-
- 0 replies
- 444 views
-
-
இலங்கையை வீழ்த்தத் திட்டமிடும் முரளி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கைக்குமிடையிலான கிரிக்கெட் தொடரின் தயார்படுத்தல்களில், அவுஸ்திரேலிய அணி ஈடுபட்டுவரும் நிலையில், அவ்வணிக்கான சுழற்பந்துவீச்சு ஆலோசகராகச் செயற்பட்டுவரும் இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், தனது பணியை நியாயப்படுத்தியுள்ளார். இலங்கை அணியின் முன்னாள் வீரர்கள் பலர், வெளிநாடுகளைச் சேர்ந்த அணிகளால் ஒப்பந்தம் செய்யப்படுவதொன்றும் புதிதன்று. குறிப்பாக, இலங்கை கிரிக்கெட் சபை மீது முன்னாள் வீரர்களுக்கு இன்னமும் காணப்படுவதாகக் கூறப்படும் எதிர்ப்பு அல்லது நம்பிக்கையின்மை காரணமாக, வெளிநாட்டு அணிகளோடு இணைந்து செயற்படுவதற்கு, அவ்வ…
-
- 1 reply
- 443 views
-
-
யு.எஸ் ஓபன்: கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா சாம்பியன் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, யு.எஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் வென்று தனது மூன்றாவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார். டை பிரேக் வரை சென்ற இந்த போட்டியில், 6—1 2—6 11—9 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் அமெரிக்காவின் அபிகெயில் ஸ்பியர்ஸ் மற்றும் மெக்சிகோவின் சாண்டியாகோ கொன்ஸாலஸ் ஜோடியை, பிரேசிலின் புருனோ சோர்ஸ், இந்தியாவின் சானியா ஜோடி வீழ்த்தியது. சோர்ஸ் மற்றும் சானியா கலப்பு இரட்டையர் பிரிவில் இணைந்திருப்பது இதுவே முதல்முறை. சோர்ஸ் உடன் ஆடியது மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறியுள்ள சானியா, ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியிலும் இந்த ஜோடி தொடரும் என…
-
- 1 reply
- 443 views
-
-
ஆஸி. வீரர்களின் சிக்ஸர் மழைக்கு மத்தியில் கில்லி போல பந்துவீசிய வாஷிங்டன் சுந்தர்! 11 சிக்ஸர்கள். 50 ஓவர்களில் 347 ரன்கள். இந்த ரன் மழைக்கு மத்தியில் வாஷிங்டன் சுந்தர் மட்டும் தன்னிரகற்ற பந்துவீச்சாளராக விளங்கினார். அட என்று அத்தனை பேரும் ஆச்சர்யப்படும் பந்துவீச்சு. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள், 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர், 3 போட்டிகள் டி20 தொடர் ஆகியவற்றில் மோதுகின்றன. ஒரு நாள் தொடரின் முதல் ஆட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறுகிறது. அதை முன்னிட்டு ஆஸ்திரேலியா-இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) தலைவர் லெவன்…
-
- 1 reply
- 443 views
-
-
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஆகிறார் டிராவிட் ? இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டு, தற்போதைய பயிற்சியாளர் அணில் கும்ளே அணியின் மேலாளராக பொறுப்பேற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முதுகெலும்பாக ஒரு காலத்தில் திகழ்ந்த ராகுல் டிராவிட் மற்றும் அணில் கும்ளே ஆகியோர் ஓய்வு பெற்ற பின்னர் கிரிக்கெட் அணியை முன்னேற்றுவதற்கான யோசனைகளை தெரிவித்து வந்தனர். கடந்த ஆண்டில் அணில் கும்ளே இந்திய அணியின் பயிற்சியாளராக ந…
-
- 0 replies
- 443 views
-
-
நார்வே செஸ்: உலக சாம்பியன் கார்ல்சனை பதம் பார்த்த ஆனந்த் அபார வெற்றி கார்ல்சனை வீழ்த்தினார் ஆனந்த். | படம்: ராய்ட்டர்ஸ். 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த், நடப்பு உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை 4-வது சுற்றில் வீழ்த்தி நார்வே செஸ் போட்டித் தொடரில் 3-வது இடம் பிடித்தார். இந்தத் தோல்வியினால் கார்ல்சன் கடைசி இடத்துக்குச் சென்றார். முதல் 3 போட்டிகளில் டிரா செய்த ஆனந்த், இந்த முறை வெற்றிக்காக முனைப்பு காட்டி ஆடினார். வெள்ளைக்காய்களில் தனது நகர்த்தலிலும் தடுப்பாட்டத்திலும் சாதுரியம் காட்டிய ஆனந்த் வெற்றியைச் சாதித்தார். வெள்ளைக்காய்களுடன் ஆடிய ஆனந்த் தொடக்கத்தில் பழைய கால தடுப்பு உத்தியை மேற்கொண்டர். அதாவது தொடக்கத்தில் ராஜாவுக்கு நேராக உள்ள சிப்பாயை 2 கட்டங்கள் நக…
-
- 3 replies
- 443 views
-
-
"பெங்களூரு சீட்டர்ஸ்... ப்ரீத்தி ஜிந்தா செம ஸ்வீட்!" - கெயிலின் புது சபதம் ''அணியில் மீண்டும் எடுத்துக்கொள்வோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, பெங்களூரு அணி ஏமாற்றியது'' - அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெயில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டி, கிரிக்கெட் உலகையே சற்று அதிரவைத்துள்ளது. மேற்கு இந்தியதீவுகள் சேர்ந்த கிறிஸ் கெயில், ஐ.பி.எல் தொடங்கப்பட்டபோது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக இரு ஆண்டுகள் ஆடினார். பிறகு, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இணைந்தார். 2010-ம் ஆண்டிலிருந்து ஏழு சீசன்களில் பெங்களூரு அணிக்காக விளையாடிய கெயில், ராயல் சேலஞ்சர்ஸ் அணி ரசிகர்களைக் குதூகலப்படுத்தும் வகையில் அதிரடி சிக்ஸர்களை விளாசினார். ஐ.பி.…
-
- 0 replies
- 443 views
-
-
பங்களாதேஷ் பந்து வீச்சாளர்களான தஸ்கின்,அரபாத் சன்னி ஆகியோருக்கு பந்து வீச ICC அனுமதி. பங்களாதேஷ் பந்து வீச்சாளர்களான தஸ்கின்,அரபாத் சன்னி ஆகியோருக்கு பந்து வீச ICC அனுமதி. பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அஹமெட் ,மற்றும் சூழல் பந்து வீச்சாளர் அரபாத் சன்னி ஆகியோருக்கு சர்வதேச போட்டிகளில் பந்து வீச சர்வதேச கிரிக்கெட் பேரவை அனுமதி வழங்கியது. T20 உலக கிண்ணப் போட்டிகளுக்கான பங்களாதேஷ் அணியில் இடம்பிடித்திருந்த இவ்விருவருக்கும் சர்வதேச கிரிக்கெட் பேரவை, முறையற்ற பந்து வீச்சு என்பதை காரணம் காட்டி தடை விதித்தது. நெதர்லாந்துக்ககெதிராக தரம்சாலாவில் இடம்பெற்ற உலக T20 கிண்ண போட்டியில் இருவரும் விளையாடிய போது இவர்களது பந்து வீ…
-
- 0 replies
- 443 views
-
-
ஆடுகளத்தில் மணீஷ் பாண்டேவைக் கடிந்துகொண்ட தோனி! ரசிகர்கள் ஆச்சர்யம்! (விடியோ) கேப்டன் கூல் என்று பெயர் வாங்கிய தோனி கோபமடைந்து, சக வீரர்களைக் கடிந்துகொண்ட காட்சியைப் பார்த்ததுண்டா? நேற்று அத்தகைய காட்சி ஒன்றைக் காண நேர்ந்த ரசிகர்கள், தோனியா இது என ஆச்சர்யப்பட்டார்கள். இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மொத்தம் 3 ஆட்டங்களைக் கொண்ட இந்த டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கியது இந்தியா. இந்நிலையில், சென்சுரியனில் 2-ஆவது டி20 ஆட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்…
-
- 0 replies
- 443 views
-
-
1500 மீற்றரில் வக்சனுக்கு தங்கம்; குண்டு எறிதலில் மிதுன்ராஜுக்கு வெள்ளி 26 JUN, 2024 | 04:13 PM (நெவில் அன்தனி) தியகம விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 102ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டியில் இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் விக்னராஜ் வக்சன் தங்கப் பதக்கத்தையும் எஸ். மீதுன்ராஜ் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர். ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியை 3 நிமிடங்கள் 51.61 செக்கன்களில் நிறைவுசெய்து விக்னராஜ் வக்சன் (2625) தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார். இவர் தலவாக்கொல்லை மிட்ல்டன் தோட்டத்தைச் சேர்ந்தவராவார். இதேவேளை ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் 14.94 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்த பருத்…
-
- 2 replies
- 443 views
- 1 follower
-
-
500வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரலாறு படைக்கும் வெஸ்ட் இண்டீஸ்: சில சுவையான தகவல்கள் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது 500வது டெஸ்ட் போட்டியில் இன்று விளையாடுகிறது. வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டிற்கு ஒரு வரலாற்று கணமாகும். ஆனால் இந்த வரலாற்றுக் கணத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிறிஸ் கெய்ல் விளையாட முடியாமல் போயுள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் 1928ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் விளையாடியது. இங்கிலாந்துக்கு எதிரான 1928ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் ஆடிய முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கார்ல் நூனெஸ். இந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. முதல் டெஸ்ட் வெற்றி: …
-
- 0 replies
- 443 views
-
-
இலங்கையின் சிறந்த விளையாட்டு நட்சத்திரமாக யாழ் பல்கலைக்கழக மாணவன் February 12, 2016 இலங்கையின் சிறந்த விளையாட்டு நட்டசத்திரமாக யாழ் பல்கலைக்கழக கால்ப்பந்தாட்ட வீரனும் தேசிய கால்ப்பந்தாட்ட அணியில் இடம்பிடித்துள்ளவருமான செபமாலைநாயகம் ஞானரூபன் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இலங்கை பல்கலைக்கழங்களிலுள்ள சிறந்த விளையாட்டு வீரரை தெரிவு செய்யும் வகையில் இடம்பெற்ற இணைய வாக்கெடுப்பிலேயே சிறந்த வீரராக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மொத்தம் 16 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களில் சிறந்த விளையாட்டு வீரனைத் தெரிவு செய்வதற்காக http://sports.moraspirit.com என்னும் இணையத்தளத்தில் இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பு ஆரம்பமான நாளிலிருந்து முதலிடம்…
-
- 0 replies
- 443 views
-
-
ஒலிம்பிக் தகுதிகாண் போட்டிகளிலிருந்து விலகினார் போல்ட் 100 மீற்றர் அரையிறுதிப் போட்டிகளைத் தொடர்ந்து, ஜமைக்கா தேசிய ஒலிம்பிக் தகுதிகாண் போட்டிகளிலிருந்து, பின் தொடைத் தசைநார் கிழிவு காரணமாக உசைன் போல்ட் விலகியுள்ளார். கிங்ஸ்டனிலுள்ள தேசிய அரங்கில் இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில், மெதுவான ஆரம்பத்தைப் பெற்றிருந்தாலும் 10.04 செக்கன்களில் போட்டித் தூரத்தை நிறைவு செய்து போல்ட் வென்றிருந்தார். முதல் சுற்று முடிவிலும் அரையிறுதிப் போட்டியிலும் பின் தொடைத் தசைநார் காயத்தை உணர்ந்ததாகவும், தேசிய சம்பியன்ஷிப் தலைமை மருத்துவரால் சோதிக்கப்பட்டதாகவும், தரம் ஒன்று வகையான காயத்தை கொண்டிருப்பதாகவும் டுவீட் பதிவொன்றில் போல்ட் தெரிவித்துள்ளார். …
-
- 1 reply
- 443 views
-
-
இங்கிலாந்தின் தலைவியாக ஹீதர் நைட் இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் மூன்று வகையான போட்டிகளுக்குமான தலைவியாக ஹீதர் நைட்டை, இங்கிலாந்து கிரிக்கெட் சபை நியமித்துள்ளது. கடந்த மே மாதம், சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த சார்லோட் எட்வேர்ட்ஸையே நைட் பிறையீடு செய்யவுள்ளார். எதிர்வரும் 20ஆம் திகதி, பாகிஸ்தான் அணிக்கெதிராக ஆரம்பிக்கவுள்ள ஒருநாள் சர்வதேசப் போட்டி, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரே, இங்கிலாந்து அணியின் தலைவியாக, நைட்டின் முதலாவது தொடராக அமையவுள்ளது. 2010ஆம் ஆண்டு சர்வதேச அறிமுகத்தை மேற்கொண்ட வலதுகைத் துடுப்பாட்டவீரரான நைட், சுழற்பந்துவீச்சையும் மேற்கொள்ளக் கூடியவருமாவார். இதுவரையில், ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் 55…
-
- 0 replies
- 443 views
-
-
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து குயின்டன் டிகொக் ஓய்வு தென்னாபிரிக்க அணியின் விக்கெட் காப்பாளர் குயின்டன் டிகொக் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். செஞ்சூரியனில் வியாழன் அன்று நடந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா 113 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்காவை வீழ்த்திய சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியானது. 29 வயதான டி கொக், தென்னாபிரிக்காவின் தற்காலிக டெஸ்ட் 2021 இல் நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் தென்னாபிரக்கா இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகளில் 50 சதவீத வெற்றியை பதிவுசெய்துள்ளது. தென்னாபிரிக்கா இலங்கையை சொந்த மண்ணில் 2-0 என்ற கணக்கில் …
-
- 2 replies
- 443 views
-
-
புறக்கணிக்கும் தேர்வாளர்கள்: ரஞ்சி தொடரில் இரட்டை சதமடித்து அசத்திய ஜடேஜா! ஜம்மு காஷ்மீர் அணிக்கெதிரான ரஞ்சிக் கோப்பை போட்டியில் சௌராஷ்ட்ரா அணி வீரர் ஜடேஜா இரட்டை சதமடித்து அசத்தினார். முன்னணி ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவுக்கு இலங்கை டெஸ்ட் தொடருக்குப் பின்னர் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இலங்கை ஒருநாள் மற்றும் டி20 தொடர், ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 தொடர் மற்றும் விரைவில் தொடங்க இருக்கும் நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடர் ஆகியவற்றில் ஜடேஜாவுடன், முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வினும் சேர்க்கப்படவில்லை. இதனால், அவர்கள் ரஞ்சிக் கோப்பை தொடரில் விளையாடி வருகின்றனர். அஷ்வின் தமிழக அணிக்காகவும், ஜடேஜா ச…
-
- 1 reply
- 443 views
-
-
கொத்மலை கிண்ண கால்பந்தாட்டத்தில் யாழ் ஹென்றியரசர் சம்பியன்; இறுதிப்போட்டியில் கொழும்பு ஸாஹிராவை வென்றது 2016-02-19 19:04:45 (நெவில் அன்தனி) 19 வயதுக்குட்பட்ட பாடசாலைகள் அணிகளுக்களுக்கிடையிலான கொத்மலை கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் யாழ். இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி சம்பியனாகியுள்ளது. யாழ். இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அணிக்கும் கொழும்பு ஸாஹிரா கல்லூரி அணிக்கும் இடையிலான கொத்மலை கிண்ண இறுதிப் போட்டி கொழும்பு, குதிரைப் பந்தயத் திடலில் இன்று மாலை நடைபெற்றது. இப்போட்டியில் புனித ஹென்றியரசர் அணி 3:1 கோல்களால் வென்றது. …
-
- 1 reply
- 442 views
-