விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
"ராக்கெட்" கெய்லின் செம ரெக்கார்ட்... 500 சிக்ஸ் அடித்து உலக சாதனை! பெங்களூர்: டுவென்டி 20 போட்டிகளில் 500 சிக்ஸர்களை விளாசி புதிய உலக சாதனை படைத்துள்ளார் கிறிஸ் கெய்ல். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக தற்போது ஆடி வரும் கெய்ல், இதுவரை ஆடியுள்ள டுவென்டி 20 போட்டிகளில் மொத்தமாக 500 சிக்ஸர்களைக் குவித்து புதிய வரலாறு படைத்துள்ளார். நேற்று நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது தனது 500வது சிக்ஸரை விளாசினார் கெய்ல். இது கெய்லுக்கு 201வது டுவென்டி 20 போட்டியாகும். இவருக்கு அடுத்த இடத்தில் சக மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரரான கீரன் போலார்ட் உள்ளார். அவர் இதுவரை 348 சிக்ஸர்களை விளாசியுள்ளார். ஐபிஎல் வரலாற்றிலும் அதிக சிக்ஸர்களை விளாசியவர் கெய்ல்தான்.…
-
- 0 replies
- 442 views
-
-
சுல்தான் கான்: பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் சதுரங்க சாம்பியனான இந்திய பணியாள் அசோக் பாண்டே பிபிசி ஹிந்திக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,UNKNOWN CAMERAMAN OF 1932 படக்குறிப்பு, 1932 இல் பிரிட்டிஷ் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற பிறகு கோப்பையுடன் சுல்தான் கான் 1890 ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் பங்கேற்ற பத்தொன்பது வயது இளம் இந்திய வீரர் கோவிந்த் தீனாநாத் மட்காங்கர், தனது ஆட்டத்தால் ஆங்கிலேயர்களை திகைக்க வைத்தார். அவருக்குள்ளே ஒளிந்திருந்த திறமையை வல்லுநர்கள் கண்டனர். ஆனால் இரண்டு ஆண்டுகளில் மாட்காங்கர் சதுரங்கத்தை விட்டு…
-
- 0 replies
- 442 views
- 1 follower
-
-
ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டுக்கு இடமளிக்கப்படுமா? சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) தலைமை நிர்வாகி டேவிட் ரிச்சாட்சன் சமீபத்தில் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.சி.சி) தலைவரை சந்தித்து பேசினார். அப்போது ஒலிம்பிக் போட்டியில் 20 பேர் கிரிக்கெட் போட்டியை சேர்ப்பது பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தி இருந்தார். இதுபற்றி ‘‘ரிச்சாட்சன் கூறும்போது, ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பெறுவதற்காக சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யுமாறு ஐ.ஓ.சி. தலைவரிடம் கேட்டுக் கொண்டேன். 2024 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்தேன். கிரிக்கெட் இடம் பெறுவதற்கான வாய்ப்பு அவ்வளவு எளிது அல்ல’’ என்றார். …
-
- 0 replies
- 442 views
-
-
யாழில் மைலோ கிண்ண கால்பந்தாட்டம் ஆறு லீக்குகளிலிருந்து 160 கழகங்கள் யாழ். மாவட்டத்தில் கால்பந்தாட்டக் கழகங்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ். மாவட்ட செயலகமும் நெஸ்ட்லே லங்கா (பி எல் சி) நிறுவனமும் இணைந்து நடத்தும் ‘மைலோ கிண்ணம் யாழ்ப்பாணம்’ என்ற பெயரிலான கால்பந்தாட்டப் போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றது. 40 கழகங்களுடன் 2013இல் ஆரம்பிக்கப்பட்ட இப் போட்டியில் தொடர்ந்த வருடங்களில் முறைஙே 60 கழகங்களும் 100 கழகங்களும் பங்குபற்றின. இவ் வருடப் போட்டிகளில் தீவகம் (31 கழகங்கள்), யாழ்ப்பாணம் (28), வலிகாமம் (38), வடமராட்சி (17), பருத்தித்துறை (28),, மருதங்கேணி (18) ஆகிய லீக்குகளைச் சேர்ந்த 160 கழகங…
-
- 3 replies
- 442 views
-
-
சௌதி இல்லை: அக்மலுக்குத் தடை நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரில், நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் டிம் சௌதி பங்குபெற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறத்தில், பாகிஸ்தானின் துடுப்பாட்ட வீரரான உமர் அக்மல், இத்தொடரில் முதலாவது போட்டியில் பங்குபெறமாட்டார். டிம் சௌதியின் இடது காற்பாதத்தில் ஏற்பட்ட உபாதை காரணமாக, இலங்கைக்கெதிரான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரிலும் அவரால் பங்குபெற முடியாது போயிருந்த நிலையில், உலக இருபதுக்கு-20 தொடருக்கு முன்னதாக, பாகிஸ்தானுக்கெதிரான போட்டிகளில் பங்குபற்றுவார் என எதிர்பார்க்…
-
- 0 replies
- 442 views
-
-
’’முரளிதரன் போல் ஹேரத் ஊக்குவிக்கப்படவில்லை’’ சங்கா February 17, 2016 சுழற்பந்து வீச்சாளராக முரளிதரனுக்கு கிடைத்த அங்கீகாரம் ரங்கன ஹேரத்துக்கு கிடைக்கவில்லை என்று சங்கக்காரா வருத்தம் தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் எதிரணியை தனது மாயாஜால சுழற்பந்து வீச்சால் திணறடித்தவர். இதே போன்ற திறமையை தற்போது அணியில் இருக்கும் ரங்கன ஹேரத் கொண்டுள்ளார். ஆனால் அவருக்கு கிடைத்த அங்கீகாரம் ஹேரத்துக்கு கிடைக்கவில்லையே என்று சங்கக்காரா கூறியுள்ளார். அவர் கூறுகையில், “எனக்கு 15 வயது இருக்கும் போதில் இருந்தே ஹேரத்தை தெரியும். ஆனால் திறமை இருந்தும் அவரது கிரிக்கெட் பயணம் சற்று கடினமாகவே இருந்தது. 2009ம் ஆண்டு கா…
-
- 0 replies
- 442 views
-
-
ஒரே போட்டியில் இரண்டு உலக சாதனைப் படைத்து தல டோனி அசத்தல் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் விக்கெட் கீப்பர் தல டோனி இரண்டு உலக சாதனைப் படைத்து அசத்தியுள்ளார். #WorldCup2018 இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரிஸ்டோலின் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 8-வது ஓவரை தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரின் …
-
- 1 reply
- 442 views
-
-
'ஜீனியஸ்' மெஸ்ஸியின் மேஜிக் ஹாட்ரிக்: உலகக்கோப்பைக்கு அர்ஜெண்டினா அணியை அழைத்துச் சென்றார் ஈக்வடார் அணிக்கு எதிரான தகுதிச் சுற்று ஆட்டத்தில் லியோனல் மெஸ்ஸியின் நம்பமுடியாத, அதிசயிக்கத்தக்க ஹாட்ரிக் சாதனையுடன் 3-1 என்று வெற்றி பெற்று அர்ஜெண்டினா அணி உலகக்கோப்பைக்கு நேரடியாகத் தகுதி பெற்றது. பிரேசில், உருகுவே, கொலம்பியா அணிகளுடன் 6-ம் இடத்திலிருந்து நேரடியாக உலகக்கோப்பைக்கு அர்ஜெண்டினாவை அழைத்துச் சென்றார் மெஸ்ஸி. குவிட்டோவில் ஈக்வடாரை வெற்றி பெற்றால்தான் நேரடி தகுதி சாத்தியம் என்ற நெருக்கடியில் களமிறங்கியது அர்ஜெண்டினா. நிச்சயம் மெஸ்ஸிக்கு கூடுதல் பதற்றமே. காரணம் தகுதி பெறாமல…
-
- 1 reply
- 442 views
-
-
ஆஸ்திரியா பார்முலா1 கார்பந்தயம்: பின்லாந்து வீரர் போட்டாஸ் முதலிடம் ஆஸ்திரியா பார்முலா1 கார்பந்தயம் போட்டியில் பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் (மெர்சிடஸ் அணி) 1 மணி 21 நிமிடம் 48.523 வினாடிகளில் இலக்கை கடந்து வெற்றி பெற்று 25 புள்ளிகளை தட்டிச்சென்றார். ஸ்பைல்பெர்க் : இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 9-வது சுற்றான ஆஸ்திரியா கிராண்ட்பிரி அங்குள்ள ஸ்பைல்பெர்க் ஓடுதளத்தில் நேற்று நடந்…
-
- 0 replies
- 442 views
-
-
ராகுல் டிராவிட் குழந்தை முதல் கேப்டன் வரை...அவரே வெளியிட்ட வீடியோ! இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தனது கிரிக்கெட் வாழ்க்கையை பற்றி ஒரு வீடியோவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குழந்தையாக தவழ்வத்தில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டாக உயர்ந்தது வரை, அவரை பற்றிய சுவாரஸ்யங்கள் நிறைந்த வீடியோ இது. https://youtu.be/bbYxfBwMSUw My mother's scrapbook- என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவை ஃபேஸ்புக் பக்கத்தில் பார்க்க அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். http://www.vikatan.com/news/article.php?aid=49701
-
- 0 replies
- 442 views
-
-
இத்தாலியன் கிரான்ட் பிறிக்ஸ்: வென்றார் நிக்கோ இத்தாலியன் கிரான்ட் பிறிக்ஸில் வெற்றி பெற்ற மெர்சிடிஸ் அணியின் ஜேர்மனியச் சாரதியான நிக்கோ றொஸ்பேர்க் வெற்றி பெற்றார். இப்பந்தயத்தில் பெற்ற வெற்றி மூலம், தனக்கும், மெர்சிடிஸ் அணியின் பிரித்தானியச் சாரதியான லூயிஸ் ஹமில்டனுக்குமிடையிலான சம்பியன்ஷிப் புள்ளிகள் வித்தியாசத்தை இரண்டாகக் குறைத்துக் கொண்டார். இதுவரையில், இந்த வருடத்தில், ஆறு பந்தயங்களில் வென்றுள்ள ஹமில்டன் 250 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் இருக்கின்ற நிலையில், ஏழு பந்தயங்களில் வென்றுள்ள றொஸ்பேர்க், 248 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளார். ரெட் புல் அணியின் அவுஸ்திரேலியச் சாரதியான டானியல் றிக்கார்டோ, 161 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் காணப்படுகின்ற…
-
- 0 replies
- 442 views
-
-
ரியல் மாட்ரிட் அணிக்காக 400 கோல்கள் அடித்து ரொனால்டோ சாதனை செவிலா அணிக்கெதிராக இரண்டு கோல்கள் அடித்ததன் மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டா ரியல் மாட்ரிட் அணிக்காக 400 கோல்கள் அடித்து சாதனைப் படைத்தள்ளார். போர்ச்சுக்கல் நாட்டின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. மான்செஸ்டர் அணிக்காக விளையாடிய ரொனால்டோ, 2009-ம் ஆண்டு 94 மில்லியன் யூரோவிற்கு டிரான்ஸ்ஃபர் ஆனார். ரியல் மாட்ரிட் அணிக்காக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அந்த அணியின் நட்சத்திர ஸ்ட்ரைக்கராக விளங்கி வருகிறார். லா லிகாவில் நேற்று ரியல் மாட்ரிட் அணி செவிலாவை எதி…
-
- 1 reply
- 441 views
-
-
கோலி தலைமை டி20 அணியில் தினேஷ் கார்த்திக்; ஒருநாள் அணியில் ராயுடு, ஷ்ரேயஸ், ராகுல் ராகுல். | ஏ.எஃப்.பி. இங்கிலாந்தில் நடைபெறும் ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணி வலுவாக அமைந்துள்ளது, இதில் அஸ்வின், ஜடேஜா மீண்டும் தேர்வு செய்யப்படவில்லை. புதிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஐபில் தொடரில் ஆரஞ்சு தொப்பிக்குச் சொந்தக்காரரான அதிக ரன் குவிப்புப் பட்டியலில் முதலிடம் வகிக்கும் அம்பாத்தி ராயுடுவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஐபிஎல் பார்மைக் கொண்டு ஷ்ரேயஸ் அய்யருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது, ஆனால் தினேஷ்…
-
- 1 reply
- 441 views
-
-
5 மாத கர்ப்பம்... 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அசத்தினார் அலிசியா மொன்டானோ. அமெரிக்காவில் நடைபெற்ற 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 5 மாத கர்ப்பிணியாக இருந்த அலிசியா மொன்டானோ கலந்து கொண்டு அசத்தினார். சாதனை என்று வந்துவிட்டால் நம் உடல்நலன் குறித்து மறந்துவிடும். பிறந்தோம் , வளர்ந்தோம் என்றில்லாமல் எதையாவது சாதிக்க வேண்டும். அப்போதுதான் பிறந்ததில் அர்த்தம் உண்டு என்பது பெரும்பாலானோரின் கருத்தாகும். மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோர் பல்வேறு சாதனைகளை படைத்துவிட்டனர். மனம் உறுதி இருந்தால் போதும் வானத்தையே வில்லாக வளைக்கலாம் என்பதை நாம் எத்தனையோ விஷயங்களில் கண்கூடாக பார்த்துள்ளோம்.அமெரிக்காவில் கடந்த வியாழக்கிழமை யுஎஸ்ஏ டிரக் மற்றும் பீல்டு சாம்பியன்ஷிப் தடகள போ…
-
- 0 replies
- 441 views
-
-
St. John’s அணியின் வெற்றிக்கான காரணத்தை கூறும் சௌமியன் பிலியந்தலை மத்திய கல்லூரி அணிக்கு எதிரான சிங்கர் U19 பாடசாலை கிரிக்கெட் போட்டியின் வெற்றி, வீரர்களின் பங்களிப்பு மற்றும் அணியின் வெற்றிக்கான காரணம் என்பவற்றை விளக்கும் யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி அணித் தலைவர் நாகேந்திரராஜா சௌமியன்.
-
- 0 replies
- 441 views
-
-
பாராலிம்பிக்: குண்டு எறிதலில் இந்திய வீராங்கனை தீபா மாலிக் வெள்ளி பதக்கம் ரியோ டி ஜெனிரோ: ரியோவில் நடந்து வரும் மாற்று திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து பல்வேறு வீர வீராங்கனைகள் கலந்து கொண்டனர். ஏற்கனவே இந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீரர் உட்பட இந்தியாவை சேர்ந்த 2 பேர் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வெற்ற நிலையில் தற்போது இந்தியாவை சேர்ந்த மற்றொரு வீராங்கனை தீபா மாலிக் குண்டு எறிதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வெற்றுள்ளார். http://www.dinamalar.com/news_detail.as…
-
- 1 reply
- 441 views
-
-
யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான எல்லே போட்டியில் மயிலங்காடு ஞானமுருகன் இளைஞர்கழக அணி கிண்ணம் வென்றது. கடந்த வாரம் இடம் பெற்ற பெண்களுக்கான இறுதியாட்டத்தில் மயிலங்காடு ஞானமுருகன் இளைஞர்கழக அணியை எதிர்த்து மல்லாகம் சிறி முருகன் இளைஞர்கழக அணியும் மோதியது. முதலில் துடுப்பெடுத்து விளையாடிய மயில்காடு ஞானமுருகன் இளைஞர்கழக அணி 2 ஓட்டங்களைப் பெற்றது. 3 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றியென …
-
- 0 replies
- 441 views
-
-
மர்லன் சாமுவேல்ஸ் மரியாதை தெரியாதவர்: பென் ஸ்டோக்ஸ் சாடல் AP படம். | தி கார்டியன். இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், தனது சுயசரிதை நூலில் மே.இ.தீவுகள் வீரர் மர்லான் சாமுவேல்ஸ் குறித்து காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மர்லன் சாமுவேல்ஸ் தகராறுக்கு புகழ்பெற்றவர், பிக் பாஷ் லீகில் ஷேன் வார்னுக்கும் இவருக்கும் மோதல் ஏற்பட்டது, பிறகு 2015-ல் கிரெனடா டெஸ்ட் போட்டியில் ஸ்டோக்ஸ் அவுட் ஆன பிறகு அவரை கேலி செய்யும் விதமாக சல்யூட் அடித்து சர்ச்சையில் சிக்கினார் சாமுவேல்ஸ். அதன் பிறகு உலகக்கோப்பை டி20 இறுதிப் போட்டியில் பென்ஸ்டோக்ஸ், மர்லன் சாமுவேல்ஸ் மீண்டும் நேருக்கு நேர் தகராறில் ஈடுபட்டனர். சாமுவேல்ஸ் 85 ரன்கள் எடுத்து …
-
- 0 replies
- 441 views
-
-
10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட் வீழ்த்தி ஜார்கண்ட் வீரர் ஷபாஸ் நதீம் உலக சாதனை அ-அ+ விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டியில் ஜார்கண்ட் வீரர் ஷாபாஸ் நதீம் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றி புதிய உலக சாதனை நிகழ்த்தி உள்ளார். #VijayHazareTrophy #ShahbazNadeem சென்னை : விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை முருகப்பா மைதானத்தில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் ராஜஸ்தான்- ஜார்கண்ட் அணிகள் மோதின. …
-
- 0 replies
- 441 views
-
-
வடக்கின் மாபெரும் போர் ;ஒருநாள் போட்டியில் சென்.ஜோன்ஸ் கல்லூரி 34 ஓட்டங்களால் வெற்றி யாழ். மத்திய கல்லூரிக்கும் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிக்கும் இடையிலான வடக்கின் மாபெரும் போர் போட்டி, சென்.ஜோன்ஸ் அணியின் வெற்றியுடன் முடிவடைந்ததையடுத்து, இரு அணிகளுக்கும் இடையிலான 18 ஆவது வருட ஒருநாள் போட்டி நேற்று 14 ஆம் திகதி சனிக்கிழமை சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது, நாணயச் சுழற்சியில் வென்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்ய, முதலில் களமிறங்கிய சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி, 36.3 ஓவர்களில் 94 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் தனுஜன் 14, டினோசன் 13 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் யாழ்ப்…
-
- 0 replies
- 441 views
-
-
தெற்காசிய போட்டிகளில் புதிய சாதனை படைத்த இலங்கை வீரர் February 6, 2016 04:12 pm இந்தியாவில் நடைபெற்று வரும் 12 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் முதலாவது தங்கப் பதக்கத்தை இலங்கை வென்றுள்ளது. ஆண்களுக்கான 200 மீற்றர் தூர நீச்சல் போட்டியில் முதலாமிடத்தைப் பெற்ற மெத்தியுவ் அபேசிங்க இந்தப் பதக்கத்தை வென்றுள்ளார். குறித்த தூரத்தை அவர் 1 நிமிடமும் 59.28 செக்கன்களில் கடந்துள்ளார். இதன் மூலம் மூலம் தெற்காசிய போட்டியில் இலங்கை வீரர் மெத்தியுவ் அபேசிங்க புதிய சாதனை படைத்துள்ளார். 12 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிக நேற்று இந்தியாவின் குவாஹாட்டியில் இந்திரா காந்தி மைதானத்தில் நேற்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. 8 நாடுகளை சேர்ந்த 2500…
-
- 0 replies
- 441 views
-
-
சொந்த நாட்டில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த தென் ஆபிரிக்காவுக்கு அந்நாட்டு அரசு தடை! 2016-04-27 10:55:28 இன ஒடுக்கல் காரணமாக பல்லாண்டுகளுக்கு முன்னர் 21 வருடத் தடைக்கு உட்பட்டிருந்த தென் ஆபிரிக்காவுக்கு இப்போது மீண்டும் ஒரு சிக்கல் உருவாகியுள்ளது. கிரிக்கெட் நிருவாகத்தில் பின்பற்றவேண்டிய வழிமுறைகளுக்கு அமைய மாற்றங்களை செய்யத் தவறியதால் கிரிக்கெட் தென் ஆபிரிக்காவுக்கு (தென் ஆபிரிக்க கிரிக்கெட் நிறுவனம்) சொந்த மண்ணில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கு அந் நாட்டு அரசு தடை விதித்துள்ளது. உயர்மட்டக் குழுவினரால் அமைச்சர் மட்ட சுயாதீனக் …
-
- 0 replies
- 441 views
-
-
டி20: அப்ரீடி ஆட்ட நாயகன்; நியூஸிலாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான் நியூஸிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி முதல் டி20 போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று நியூஸிலாந்தை வீழ்த்தியது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்று முன்னிலை வகித்தது பாகிஸ்தான். ஆக்லந்தில் இன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற கேன் வில்லியம்சன் முதலில் பாகிஸ்தானை பேட் செய்ய அழைத்தார், அந்த அணி ஹபீஸின் அதிரடி அரைசதத்துடன் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணியில் 14 பந்து அரைசத நாயகன் கொலின் மன்ரோவும் கேப்டன் வில்லியம்சும் அபார அரைசதம் அடித்தும் அப்ரீடியின் பந்து வீச்சு நன்றாக அமைய 155 ரன்களு…
-
- 0 replies
- 441 views
-
-
யாசீர் ஷாவுக்கு 3 மாதத் தடை ஊக்கமருந்துப் பாவனை காரணமாக இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யாசீர் ஷாவுக்கு, 3 மாதத் தடை விதிக்கப்படுவதாக, சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இவருக்கான தண்டனைக் காலம், டிசெம்பர் 27ஆம் திகதி ஆரம்பித்து, இவ்வாண்டு மார்ச் 27ஆம் திகதியுடன் நிறைவடையுமென அறிவிக்கப்படுகிறது. இதனால், பாகிஸ்தான் சுப்பர் லீக், ஆசியக் கிண்ணப் போட்டிகள், உலக இருபதுக்கு-20 தொடர் ஆகியவற்றில் பங்குபற்ற முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட மருந்தைப் பயன்படுத்தியமை உறுதிப்படுத்தப் -பட்டிருந்தாலும், அதிக உயர் அழுத்தம் காரணமாக, மனைவிக்காக வழங்கப்பட்டிருந்த மாத்…
-
- 0 replies
- 441 views
-
-
ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஓவர்களை 40-ஆக குறைக்க ஐசிசி திட்டம்! அடுத்த உலக கோப்பையில் அமுல்? லண்டன்: அடுத்த உலக கோப்பை போட்டியை 40 ஓவர்கள் கொண்டதாக மாற்ற ஐசிசி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் முறையாக உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 1975ம் ஆண்டு நடைபெற்றது. அப்போது ஒருநாள் போட்டிகளுக்கு மொத்தம் 60 ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து 1979 மற்றும் 1983ம் ஆண்டுகளில் உலக கோப்பை போட்டிகள் 60 ஓவர்களாகவே நடத்தப்பட்டன. முதல் முறை 1987ம் ஆண்டுதான் உலக கோப்பையில் முதல்முறையாக 50 ஓவர் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பிறகு நடப்பு உலக கோப்பை வரையிலும் 50 ஓவர்களே நடைமுறையில் உள்ளது. டி20 பிரபலம் தற்போது டி20 கிரிக்கெட் போட்டிகள் பிரபலமடைந்துள்ள…
-
- 1 reply
- 441 views
-