விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
சவூதி செஸ் போட்டியில் பங்குபற்ற மறுக்கும் அனா அனா முஸிசுக் , உலக சம்பியன் பட்டங்களை இழக்கிறார் : பெண்கள் இரண்டாந்தர உயிரினங்கள் போன்று நடத்தப்படுவதாக கூறுகிறார் பெண்களை இரண்டாந்தர உயிரினங்கள் போன்று சவூதி அரேபியா கருதுவதால் அங்கு நடைபெறவுள்ள செஸ் உலக சம்பியன் போட்டிகளில் பங்குபற்றப்போவதில்லை என இரண்டு தடவைகள் உலக செஸ் சம்பியனான யூக்ரெய்ன் வீராங்கனை அனா முஸிசுக் தெரிவித்துள்ளார். ‘எனது கொள்கைகளை நான் கடைப்பிடிக்கவுள்ளேன்” எனத் தெரிவித்த அவர், சவூதியில் பெண்கள் உரிமை மற்றும் பால் சமத்துவம் பேணப்படாததால் இரட்டை உலக சம்பியன் பட்டங்களைத் தக்கவைக்கப்போவதில்லை என்றார். வீதிகளில் தனியாகக்க…
-
- 0 replies
- 322 views
-
-
கிரிக்கெட் ஜாம்பவான் மஹேல வெள்ளிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2014 காலத்திற்கு காலம் புதிய வீரர்கள் பலரை கிரிக்கெட் பார்த்திருந்தாலும் இதுவரை காலமான டெஸ்ட் போட்டிகளின் முதுகெலும்புகள் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் தான். பொதுவாக டெஸ்ட் அந்தஸ்து பெற்ற சகல அணிகளையும் எடுத்து பார்க்கும் போது வீரர்கள் பலர் காணப்பட்டாலும் ஜாம்பவான்கள் என்று வர்ணிக்கக்கூடிய ஒரு சில வீரர்களே அணியின் வெற்றியில் பெரிதும் தாக்கம் செலுத்தியிருப்பார்கள். இலங்கை கிரிக்கெட்டை பொறுத்தவரையில் முரளிதரன், சமரவீர, சங்கக்கார, ஜெயவர்த்தன என்று அந்த பட்டியலில் முதல் நான்கு இடங்களை எழுமாறாக நிரப்பலாம். மேலே குறிப்பிடப்பட்ட வீரர்களில் இம்முறை பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் போட்டிகளின் பிறகு தனது ஓய்வை அறிவித்திருந…
-
- 0 replies
- 498 views
-
-
புதிரா? சவாலா? ஏ.பி.டிவில்லியர்ஸைக் கண்டு அலறும் ஆஸி. ஊடகங்கள் 2வது டெஸ்ட்டில் ஆஸி. பவுலர் கமின்சை விளாசும் டிவில்லியர்ஸ். - படம். | ராய்ட்டர்ஸ். ஏ.பி.டிவில்லியர்ஸ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நடப்புத் தொடரில் பவுலர்களுக்கு பெரும் சவாலாகத் திகழ்ந்து வருகிறார், மேலும் ஏபிடிவில்லியர்ஸுக்கு என்று ஒரு செல்வாக்கும் உள்ளது, அவரது சிறந்த இன்னிங்ஸ்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடப்பட்டுள்ளது. இதனையடுத்து ஏபி.டிவில்லியர்ஸை மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா எப்படி அடக்கி ஆளும் என்ற கவலை ஆஸ்திரேலிய கேப்டனை விட ஆஸி.ஊடகங்களுக்கு அதிகம் ஏற்பட்டுள்ளது. ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ்.காம்.ஏயு என்ற ஆஸ்திர…
-
- 0 replies
- 219 views
-
-
முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை வென்றது அவுஸ்திரேலியா By DIGITAL DESK 3 17 NOV, 2022 | 04:56 PM இங்கிலாந்துடனான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்களால் வெற்றியீட்டியது. அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் இன்று இப்போட்டி நடைபெற்றது. அவுஸ்திரேலியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த இருபது20 உலகக்கிண்ணத் தொடரில் இங்கிலாந்து அணி சம்பியனாகியது. அத் தொடரின் பின்னர் பட் கம்மின்ஸ் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும்; 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரில் விளையாடி வருகின்றன. இன்று நடைபெற்ற…
-
- 0 replies
- 548 views
- 1 follower
-
-
டெஸ்ட்டில் வெற்றி கேப்டன் யார்? ரிக்கி பாண்டிங்கா? கிரேம் ஸ்மித்தா? ரிக்கி பாண்டிங், கிரேம் ஸ்மித், ராபின் பீட்டர்சன், ஹஷிம் ஆம்லா. - படம். | ராய்ட்டர்ஸ். டெஸ்ட் போட்டிகளில் வெற்றிகளை அதிகம் குவித்த கேப்டன்கள் யார் என்பது கிரிக்கெட்டில் ஒரு சுவாரசியமான கேள்வி. கிரிக்கெட் ஆட்டத்தில் மிகச்சிறந்த கேப்டன்கள் இருந்துள்ளனர், இவர்களில் பலரை வெற்றிகளை வைத்து தீர்மானிக்க முடியாது. ஆனால் கிரிக்கெட் ஆகட்டும் எந்த ஒரு விளையாட்டாகட்டும் வெற்றிதானே பேசும். அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த கேப்டன் யார் என்று பார்த்தோமானால், புள்ளிவிவரங்கள் கூறுவது என்னவென்பதைப் பார்ப்போம்: தென் ஆப்பிரிக்காவின் கி…
-
- 0 replies
- 336 views
-
-
“தாதா” கங்குலிக்கு இன்று பிறந்தநாள்: தன்னுடைய ஸ்டைலில் வாழ்த்துக்கூறிய சேவாக் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி : கோப்புப்படம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு இன்று 46-வது பிறந்தநாளாகும். அவருக்கு முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், வி.வி.எஸ்.லட்சுமணி, டிராவிட் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். இந்திய அணியின் கேப்டன்கள் வரிசையில் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர் சவுரவ் கங்குலி என்பது மறுப்பதற்கில்லை. கடந்த 1990களில் இந்திய அணிக்கு அறிமுகமாகினார் சவுரவ் கங்குலி. தனது திறமையாலும், தலைமைப் பண்பாலும் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். …
-
- 0 replies
- 447 views
-
-
என் முதல் டெஸ்ட் சதத்தின் இனிய நினைவுகளை அழிக்கும் முயற்சி: ஸ்பாட் பிக்சிங் குற்றச்சாட்டை மறுக்கும் கிளென் மேக்ஸ்வெல் வேதனை கிளென் மேக்ஸ்வெல். | ஏ.எப்.பி. 2017-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளை ஆடிய போது ராஞ்சியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ‘ஸ்பாட் பிக்சிங்’கில் ஆஸி.வீரர்கள் ஈடுபட்டதாக அல்ஜசீரா புலனாய்வு ஆவண வீடியோ வெளியிட்டது. தற்போது கிளென் மேக்ஸ்வெலையும் இதில் இழுத்து விட்டது குறித்து அவர் கடுமையாக வருத்தமடைந்துள்ளதோடு குற்றச்சாட்டுகளை மேக்ஸ்வெல் தீவிரமாக மறுக்கவும் செய்துள்ளார். மேக்ஸ்வெல் பெயரைக் குறிப்பிடாவிட்டாலும் ஸ்பாட் பிக்சிங் நடைபெற்றதாக கூறப்படும் தருணம், காட்டப்பட…
-
- 0 replies
- 343 views
-
-
யாழ்ப்பாணம் வடமராட்சி கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயதுக்கு உட்பட்ட பெண்களிற்கான வலைப்பந்தாட்டத்தில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளது. இதன் இறுதியாட்டம் கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இறுதியாட்டத்தில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை அணியை எதிர்த்து வட இந்து மகளிர் கல்லூரி அணி மோதியது. ஆட்டம் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை அணி 28:13 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளது. …
-
- 0 replies
- 634 views
-
-
பிஃபா தேர்தல்: ஸிகோவுக்கு பிரேசில் ஆதரவு ஸிகோ சர்வதேச கால்பந்து சம்மேளன (பிஃபா) தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி நடக்கிறது. அதில் போட்டியிடுவதற்கு பிரேசிலைச் சேர்ந்த முன்னாள் கால்பந்து வீரரான ஸிகோவுக்கு அந்நாட்டு கால்பந்து சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது. 62 வயதான ஸிகோவுக்கு இதற்கு முன்னர் பிரேசில் கால்பந்து சங்கத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளின் ஆதரவு பெரிய அளவில் இருந்ததில்லை. ஆனால் இப்போது முழுமையான ஆதரவு கிடைத்திருப்பது ஸிகோவுக்கு பெரிய உத்வேகம் கொடுப்பதாக அமைந்துள்ளது. பிரேசில் ஆதரவு தெரிவித்திருந்தாலும், மேலும் 4 நாடுகளைச் சேர்ந்த கால்பந்து சங்கங்களின் ஆதரவைப் பெற்றால் மட்டுமே பிஃபா தேர்தலில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக ஸிகோ களமிறங்க …
-
- 0 replies
- 234 views
-
-
சாது மிரண்டால் காடு தாங்காது... எதிரணி வீரரின் கழுத்தை பிடித்து நெறிக்கும் மெஸ்சி! கால்பந்து களத்தில் பார்சிலோனா அணியின் துணை கேப்டன் லயனல் மெஸ்சி அமைதி போக்கையை கடைபிடிப்பவர். பெரும்பாலும் அவரது முகத்தில் கோபத்தை பார்க்க முடியாது. எதிரணி வீரர்கள் முன்கள வீரரான இவரிடம்தான் தங்களது முரட்டு ஆட்டத்தை காட்டுவார்கள். தடுப்பாட்ட வீரர்களுக்கு தண்ணி காட்டுவதில் மெஸ்சி சளைக்காதவர் என்றாலும் சில நேரங்களில் மெஸ்சிக்கே கோபத்தை வரவழைக்கும் வகையில் எதிரணி வீரர்களின் ஆட்டம் அமைந்து விடுகிறது. தற்போது பிரிசீசன் நட்புரீதியிலான ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று பார்சிலோனா அணியுடன் ஏ.எஸ். ரோமா அணி மோதியது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த ஆட்டத…
-
- 0 replies
- 586 views
-
-
1975 - முதலாவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்... கிரிக்கெட் அரங்கில் சர்வதேச ஒருநாள் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டு, நான்கு ஆண்டுகளின் பின்னர் ஐ.சி.சி.யின் ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரானது ஆரம்பமானது. இத் தொடரில் மேற்கிந்தியத்தீவுகள் அணி அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி முதலாவதாக உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது. * கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்தில் 8 மைதானங்களில் 1975 ஆம் ஆண்டு ஜூன் 07 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை நடைபெற்றது. * இப் போட்டியில் பங்கேற்ற அணி வீரர்கள் வெள்ளை நிற ஆடையுடன் டெஸ்ட் போட்டியை போன்று களமிறங்கினர். * 8 அணிகள் கலந்து கொண்டது (குழு 'A'யில் இங்கிலாந்து, நியூஸிலாந்து, கிழக்கு ஆப்பிரிக்கா, இந்தியவும், குழு 'B'யில் அவ…
-
- 4 replies
- 1.2k views
-
-
ஆறுதல் வெற்றியுடன் உலகக்கிண்ண தொடரிலிருந்து வெளியேறியது மேற்கிந்திய தீவுகள் அணி! உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 42ஆவது போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 23 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. நேற்று லீட்ஸ்- ஹெடிங்லீ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் மோதிக்கொண்டன. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 5.3ஆவது ஓவரின் போது தனது முதல் விக்கெட்டை இழந்தது. அணி 21 ஓட்டங்களை பெற்றிருந்த போது, அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெய்ல், 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற…
-
- 0 replies
- 531 views
-
-
97 ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டியின் 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப்போட்டியில் அட்டனைச் சேர்ந்த குமார் சண்முகேஸ்வரன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தினை சுவீகரித்தார். ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற இராணுவத்தைச் சேர்ந்த குமார் சண்முகேஸ்வரன், போட்டித் தூரத்தை 31.47 நிமிடங்களில் ஓடி முடித்து முதலிடம் பிடித்தார். இதன்மூலம் நேபாளத்தில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழாவுக்கு தகுதி பெற்றுள்ளார். தனது வெற்றி குறித்து ‘வீரகேசரி வாரவெளியீட்டு’ க்கு பிரத்தியேகமாக கருத்து தெரிவிக்கையில், “இந்த வெற்றி எனக்கு மிகுந்த உத்வேகத்தை தந்தது. தெற்காசியப் போட்டியில் பங்குகொண்டு இலங்கை…
-
- 1 reply
- 817 views
-
-
இலங்கை - அவுஸ்திரேலியா டெஸ்ட் தொடர் இரண்டு போட்டிகளும் காலியில் நடைபெறும் (நெவில் அன்தனி) இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இலங்கைக்கு ராசியான மைதானம் என நம்பப்படும் காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சம்பயின்ஷிப் 2023 - 2025 தொடரான இந்தத் தொடர் அடுத்த வருடம் ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் நடைபெறவுள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி 2025 ஜனவரி 29ஆம் திகதியிலிருந்த பெப்ரவரி 2ஆம் திகதிவரையும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பெப்ரவரி 6ஆம் திகதியிலிருந்து 10ஆம் திகதிவரையும் நடைபெறவுள்ளது. இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முடித்துக்க…
-
- 1 reply
- 469 views
- 1 follower
-
-
பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே சட்டோகிராமில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்த ஒற்றை டெஸ்ட்டை ஆப்கானிஸ்தான் இன்று வென்றது. இன்றைய ஐந்தாம் நாளை தமது இரண்டாவது இனிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த பங்களாதேஷ் 173 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 224 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: ஆப்கானிஸ்தான் ஆப்கானிஸ்தான்: 342/10 (துடுப்பாட்டம்: ரஹ்மட் ஷா 102, அஸ்கர் ஆப்கான் 92, ரஷீட் கான் 51, அஃப்ஸர் ஸஸாய் 41 ஓட்டங்கள். பந்துவீச்சு: தஜியுல் இஸ்லாம் 4/116, ஷகிப் அல் ஹஸன் 2/64, நயீம் ஹஸன் 2/43) பங்களாதேஷ்: 205/10 (துடுப்பாட்டம்: மொமினுல் ஹக் 52, மொஷாடெக் ஹொஸைன் ஆ.இ 48, லிட்டன் தாஸ் 33 ஓட்டங்கள…
-
- 2 replies
- 670 views
-
-
கிரிக்கெட் உலகில் பந்து பறித்த முதல் இந்திய உயிர்: ராமன் லம்பா பற்றிய சில தகவல்கள்! இந்திய கிரிக்கெட் உலகை அதிர வைத்த இந்த துர் சம்பவம் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி நிகழ்ந்தது. மிகச்சிறந்த பீல்டரான ராமன் லம்பாவிடம் ஒரு கெட்ட பழக்கமும் இருந்தது. அதாவது பேட்ஸ்மேனுக்கு வெகு அருகில், ஹெல்மெட் போடாமல் பீல்டிங் செய்யும் அந்த பழக்கம்தான் அவரது உயிரையும் பறித்தது. டாக்காவில், அபாகானி கிரிரா சக்ரா அணிக்காக ராமன் லம்பா விளையாடி வந்தார். வங்க தேச பிரீமியர் டிவிஷன் இறுதி ஆட்டத்தில், முகமதன் ஸ்போர்ட்டிங் அணியுடன் ராமன் லம்பாவின் அணி மோதியது. முகமதன் ஸ்போர்ட்டிங் பேட்ஸ்மேன், மெக்ராப் ஹொசைன் அடித்த பந்து, ஃபார்வட் லெக் திசையில் நின்றிருந்த ராமன் …
-
- 0 replies
- 608 views
-
-
வார்னர், மிட்செல் மார்ஷ் அபாரம்: நியூஸிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா 2016 Getty Images நியூஸிலாந்தை 2-வது போட்டியில் வீழ்த்திய பிறகு மார்ஷ்-ஹேஸ்டிங்ஸ். | கெட்டி இமேஜஸ். வெலிங்டனில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி முதல் ஒருநாள் போட்டியின் படுதோல்விக்கு பழி தீர்த்து தொடரில் 1-1 என்று சமனிலை எய்தியது. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா வார்னர் (98), கவாஜா (50), மிட்செல் மார்ஷ் (69) ஆகியோர் அதிரடியில் 46.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டாஸ் வென்ற பிரெண்டன் மெக்கல்லம் முத…
-
- 0 replies
- 409 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வைபவ் சூர்யவன்ஷி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வைபவ் சூர்யவன்ஷி என்ற பெயர் நேற்று முதல் விளையாட்டுச் செய்திகளில் தவறாமல் இடம் பிடித்து வருகிறது. 14 வயது 23 நாட்களில் ஐபிஎல் டி20 தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி, நேற்று (ஏப்ரல் 28) நடந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 38 பந்துகளில் 101 ரன்கள் (11 சிக்ஸர், 7 பவுண்டரிகள்) எடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குஜராத் அணியை வீழ்த்தக் காரணமாக இருந்தது சூர்யவன்ஷியின் மிரட்டலான சதம். இந்நிலையில், அவருக்கு கிரிக்கெட் உலகின் பிரபல ஜாம்பவான்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். 'அச…
-
- 3 replies
- 425 views
- 1 follower
-
-
லிவர்பூலை வீழ்த்தி கப்பிரல் கோப்பையை வென்றது மான்செஸ்டர் சிட்டி! கர்லிங் கோப்பை இறுதி ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி டைபிரேக்கரில் லிவர்பூல் அணியை வீழ்த்தி மான்செஸ்டர் சிட்டி சாம்பியன் ஆனது. பிரீமியர் லீக்கில் மான்செஸ்டர் யுனைடெட் ஆர்சனல் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. லண்டன் வெம்ப்ளி மைதானத்தில் நடந்த கர்லிங் கோப்பை இறுதி ஆட்டத்தில் லிவர்பூல் அணியை மான்செஸ்டர் சிட்டி சந்தித்தது. பிற்பாதியில் 49வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டியின் ஃபெர்னான்டின்ஹோ முதல் கோல் அடிக்க, அதற்கு 83வது நிமிடத்தில் லிவர்பூலின் ஹட்டின்ஹோ பதிலடி கொடுத்தார். 90 நிமிட ஆட்டமும் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோ…
-
- 0 replies
- 525 views
-
-
IND vs NZ: முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் பந்து வீச்சை தேர்வு செய்தது இந்தியா .det_ban_img img{width:100%;height:auto!important; max-height:400px;} நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இந்தப் பயணத்தின் முதல் ஆட்டத்தில் இன்று நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது. இந்த சுற்றுப் பயணத்தின்போது ஐந்து டி20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரு டெஸ்ட் போட்டிகள் ஆகியவற்றில் இரு அணிகளும் மோதுகின்றன. இவை மட்டுமல்லாது ஒரு மூன்று நாள் பயிற்சி ஆட்டத்திலும் இரு அணிகளும் மோதுகின்றன. …
-
- 0 replies
- 833 views
-
-
மைலோ பாடசாலைகள் வர்ண விருது விழா இன்று வட பகுதி மாணவர்கள் ஐவருக்கு விருதுகள் (நெவில் அன்தனி) கல்வி அமைச்சு, இலங்கை பாடசாலைகள், விளையாட்டுத்துறைப் பேரவை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள 24ஆவது இலங்கை பாடசாலைகள் மைலோ வர்ண விருது விழா பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணி முதல் நடைபெறவுள்ளது. நெஸ்ட்லே லங்கா லிமிட்டட் 24ஆவது வருடமாக பாடசாலைகள் மைலோ வர்ண விருது விழாவுக்கு அனுசரணை வழங்குகின்றது. இலங்கை சார்பாக சர்வதேச அரங்கில் கடந்த வருடம் பங்குபற்றியவர்கள், பதக்கங்கள் வென்ற பாடசாலை மாணவர்களுக்கு மைலோ வர்ண விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. …
-
- 1 reply
- 408 views
-
-
இலங்கை கிரிக்கட் அணியில் மற்றொரு புதுவரவு புதிய இளம் வீரர்களை அணிக்குள் உள்வாங்கும் பணியை, இலங்கை கிரிக்கெட் அணித் தேர்வுக் குழுவினர் தொடர்கிறார்கள். 19 வயதான வேகப் பந்து வீச்சாளர் லகிறு குமார என்ற இளம் கிரிக்கட் வீரரை 3ஆவது ஒருநாள் போட்டிக்கென தெரிவாகிய 16 பேரில் ஒருவராகத் தெரிந்தெடுத்துள்ளார்கள். கண்டி, ரினிற்றி கல்லூரி மாணவரான இவர் அண்மையில் இங்கிலாந்திற்கு விஜயம் செய்த 19 வயதுக்கு உட்பட்ட அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடிய ஒரு வீரராவார். தேசிய தெரிவுக்குழுவில் இரண்டாவது பதின்ம வயதினர் குமார என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 19வயதுக்கு உட்பட்ட அணியில் இங்கிலாந்திற்கு எதிராக விளையாடி அடுத்தடுத்து செஞ்சரிகள் அ…
-
- 0 replies
- 523 views
-
-
'அவரைப்போல ஃபினிஷிங்... சான்ஸே இல்ல..!’ அவரைத்தான் சொல்கிறார் லான்ஸ் குளூஸ்னர் தென்னாபிரிக்கா அணியை சேர்ந்த லான்ஸ குளூஸ்னரை அவ்வளவு எளிதில் கிரிக்கெட் ரசிகர்கள் மறந்து விட முடியாது. உலகக் கோப்பை அரையிறுதி போட்டிகளில் 'தி பெஸ்ட் திரில்லர்' என ரசிகர்கள் வர்ணிக்கும் 1999 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் விளையாடியவர். இந்தியாவுக்கு எதிராக 1996 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் கூட எடுக்க வில்லை ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் டெண்டுல்கர், டிராவிட் தவிர மற்ற அனைத்து இந்திய பேட்ஸ்மேன்கள் விக்கெட்டையும் வீழ்த்தினார். அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே ஒரு இன்னிங்ஸில் எட்டு விக…
-
- 0 replies
- 633 views
-
-
எவரெஸ்ற் கிண்ணத்தைக் கைப்பற்றியது குருநகர் பாடுமீன் எவரெஸ்ற் இன், பொன்விழா கிண்ணத்தைக் கைப்பற்றியது குருநகர் பாடுமீன். ஆவரங்கால் கிழக்கு லிங்கம் மத்திய சன சமூக நிலையம் மற்றும் எவரெஸ்ற் விளையாட்டுக் கழகம் ஆகியவற்றின் 50 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு வடமாகாணரீதியில் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியை நடாத்தி இருந்தது. இதன் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் இரவு எவரெஸ்ற் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது. இவ் இறுதிப் போட்டியினை அன்றையதினம் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் ஆரம்பித்து வைத்தார். இரவு 9 மணியளவில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களுடன் மின்னொளியில் இவ் இறுதிப் போ…
-
- 0 replies
- 345 views
-
-
இரண்டு ஆண்டுகள் சதமடிக்காதவரை எப்படி சேர்க்க முடியும்?- மேக்ஸ்வெலுக்கு லீ மேன் பதில் டேரன் லீ மேன். | படம்: ஏஎப்பி. உள்நாட்டு கிரிக்கெட்டில் மேத்யூ வேடிற்குப் பின் களமிறங்குவதால் தனது டெஸ்ட் வாய்ப்பு பறிபோவதாக கிளென் மேக்ஸ்வெல் கூறிய குற்றச்சாட்டுக்கு பயிற்சியாளர் டேரன் லீ மேன் பதில் அளித்துள்ளார். சிட்னியில் இது குறித்து டேரன் லீ மேன் கூறும்போது, “அடிலெய்ட் டெஸ்ட் திட்டத்திலேயே மேக்ஸ்வெல் இல்லை. கடந்த 2 ஆண்டுகளாக மேக்ஸ்வெல் சதம் அடிக்கவில்லை. சதமடித்தால்தான் தேர்வுக்கு பரிசீலிக்க முடியும். 2 ஆண்டுகளாக சதம் அடிக்காத வீரரை தேர்வு செய்ய முடியுமா என்ன? மேத்யூ வேடிற்கு பின்னால் களமிறங்குவது போன்ற விவகாரங்களை…
-
- 0 replies
- 313 views
-